Wednesday, September 20, 2017

HC grants relief to medical students

Stays directive issued by MCI to discharge those admitted to PIMS in violation of admission norms

The Madras High Court has stayed the operation of proceedings issued by the Medical Council of India on September 7 and consequential action initiated by the Health Secretary in Puducherry to discharge students who had been admitted to Pondicherry Institute of Medical Sciences in the academic year 2016-17 in violation of the admission norms.
Justice B. Ravichandra Baabu granted the interim stay on writ petitions filed by a batch of 91 affected students. The judge ordered that the interim order would be in operation till October 23 and directed the MCI as well as the Government of Puducherry to file their counter affidavits by then. The petitioners were also ordered to file their rejoinder, if any. “Discharging these students from their course is undoubtedly a major penal action having drastic consequences on their academics. Certainly, such drastic action cannot be taken without following the principles of natural justice. Needless to say that having allowed the students to continue in their cases for one year... it would certainly cause prejudice in the event of their success in these writ petitions later. “On the other hand, if these students are permitted to continue the course by grant of an interim order and later, if they fail to succeed in these writ petitions, certainly, they have to leave the college without seeking for any equity,” the judge observed.
துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் துவக்கம்

பதிவு செய்த நாள்19செப்
2017
21:33

சென்னை: துணை மருத்துவப் படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 18 இடங்கள் நிரம்பின. இன்று, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று துவங்கியது. இந்த படிப்புகளுக்கு, 16 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 538 இடங்களும், 159 தனியார் கல்லுாரிகளில், 5,726 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. முதல் நாளான நேற்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில், மூன்று; மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 15 என, 18 இடங்கள் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மீதமுள்ள எட்டு இடங்கள், பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. பொது பிரிவிற்கான கவுன்சிலிங், இன்று துவங்கி, அக்., 7 வரை நடைபெறுகிறது.
பாலியல் வழக்கு: ஆசிரியருக்கு 55 'ஆண்டு'

பதிவு செய்த நாள்19செப்
2017
22:13

மதுரை: மதுரை மாவட்டம், பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமிக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பொதும்பு உயர்நிலை பள்ளியில், 2011ல், தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி, 56. இவர், 51 மாணவியர், 14 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 2011 மார்ச், 13ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆரோக்கியசாமி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று அளித்த தீர்ப்பு:

ஆரோக்கியசாமிக்கு, ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், 25 ஆண்டுகள், மானபங்கப்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்துதல் பிரிவில், 30 ஆண்டுகள் சிறை தண்டனை, 12 லட்சத்து, 32 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட மாணவியருக்கு வழங்க வேண்டும். சிறை தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.
குடும்ப தலைவராக, 'தேசியக் கொடி' : தொடரும், 'ஸ்மார்ட் கார்டு' குழப்பம்

பதிவு செய்த நாள்19செப்
2017
21:27



பழநி: பழநி, ஆயக்குடியைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்ட, 'ஸ்மார்ட் கார்டில்' குடும்பத் தலைவர் படத்திற்கு பதில், தேசியக் கொடி இடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில், ரேஷன் கார்டுகளுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிறது. 

இந்த கார்டுகளில், குடும்ப தலைவர் படத்திற்கு பதில், விநாயகர், சினிமா நடிகையின் படங்கள் இடம் பெற்றதால், சர்ச்சை கிளம்பியது. அந்த வரிசையில் தற்போது, தேசியக்கொடி படமும் வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, புதுஆயக்குடி ஓபுளாபுரத்தைச் சேர்ந்தவர், தயா சுல்தான் காதர்சா ராவுத்தர், 53, இவருக்கு நேற்று முன்தினம், ஸ்மார்ட் கார்டு வந்தது. 

அதில், குடும்பத் தலைவர் படம் இருக்க வேண்டிய இடத்தில், தேசியக்கொடி இடம் பெற்றிருந்தது.

தயா சுல்தான் கூறியதாவது: இது, அதிகாரிகள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் களின் அலட்சியத்தையே காட்டுகிறது. நம் தேசிய கொடியை அவமதிப்பு செய்வது போலவும் உள்ளது. 

அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இ----சேவை மையத்தில், 30 ரூபாய் கட்டி, திருத்தம் செய்து கொள்ளலாம்' என்கின்றனர். என் பெயரையும், 'தயால் சுல்தான்' எனவும், மகள், 'பெனாசிர் சுரேகாபானு' என்பதை, 'பெனாசிர் பேகம்' எனவும் தவறாக பதிவு செய்துள்ளனர். 

ஸ்மார்ட் ரேஷன் கார்டு களை பிழையில்லாமல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
வரதட்சணையாக டாக்டர், 'சீட்' கேட்டு மனைவியை கொன்ற கணவன் கைது
திவு செய்த நாள்19செப்
2017
20:11

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், வரதட்சணையாக, மருத்துவ படிப்புக்கான, எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைக்காததால், ஆத்திரமடைந்து மனைவியை எரித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஐதராபாத் நகரில் வசித்து வந்தவர், ஹரிகா, 25; இவரது கணவர் ருஷி குமார். இருவருக்கும் இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.சமீபகாலமாக, வரதட்சணை கேட்டு, மனைவியை, ருஷி குமார் துன்புறுத்தி வந்துள்ளார். 

வரதட்சணையாக, எம்.பி.பி.எஸ்., சீட் பெற வேண்டும் என, நிர்ப்பந்தித்துள்ளார்; ஹரிகாவின் பெற்றோர், இந்த ஆண்டு, தங்கள் மகளுக்கு, தனியார் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சீட்டுக்கு பதில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில் இடம் பெற்று தந்துள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த ருஷி குமார், மனைவி ஹரிகாவின் பெற்றோருடன், தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், மர்மமான முறையில், உடல் எரிந்த நிலையில், ஹரிகாவின் சடலம் மீட்கப்பட்டது.எம்.பி.பி.எஸ்., இடம் கிடைக்காத வேதனையில் மனைவி ஹரிகா, தற்கொலை செய்ததாக, ருஷி குமார் தெரிவித்தார். ஹரிகாவை, ருஷி குமார் எரித்துக் கொன்று விட்டதாக, அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ருஷி குமாரை, போலீசார் கைது செய்தனர்.
மகாளய அமாவாசை தர்ப்பணம் : ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்19செப்
2017
22:08




ராமேஸ்வரம்: புரட்டாசி மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் ஆடி, தை அமாவாசை அன்று, முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திதி பூஜை செய்து, பக்தர்கள் புனித நீராடுவர். 

இந்த அமாவாசையில் திதி செய்ய முடியாதவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை வரும், புரட்டாசி மகாளய அமாவாசையில், திதி செய்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நேற்று மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் திதி செய்து, கடலில் புனித நீராடினர். பின், சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு திதியில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் : திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், நேற்று அதிகாலை முதல், 1,000த்துக்கும் மேற்பட்டோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, காவிரியில் புனித நீராடினர். சமயபுரத்தில் உள்ள மாரியம்மனுக்கு, நேற்று, 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி, அம்மனை வழிபட்டனர்.

கன்னியாகுமரி : முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், நேற்று அதிகாலையே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் திருவேணி கடற்கரையில், வேதவிற்பன்னர்கள் மூலம் பலி கர்மம் நடத்தி, கடலில் நீராடினர்.



அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு
பதிவு செய்த நாள்19செப்
2017
20:54

சென்னை: 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
சிறைகளில் கைதிகளுக்கு ஞாயிறுதோறும் நடைபயிற்சி

பதிவு செய்த நாள்19செப்
2017
20:05

தமிழக சிறைகளில், ஞாயிற்றுக் கிழமைதோறும், விசாரணை கைதி களுக்கு நடைபயிற்சி வழங்க, சிறைத் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, ஒன்பது மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், கிளை சிறைகளில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர், போதிய உடற்பயிற்சி இல்லாததால், நோயின் பிடியில் சிக்கி, இறப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. கைதிகள் நலனை பேணும் வகையில், தற்போது, கைதிகளுக்கு நடை பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஒன்பது மத்திய சிறையில் உள்ள, விசாரணை கைதிகளுக்கு பயிற்சிகள் துவங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை, 7:00 முதல், 8:00 மணி வரை நடைபயிற்சி, மெது ஓட்டம் ஆகியன வழங்கப்படுகின்றன. பயிற்சியின் போது, கைதிகளுடன், வார்டன்கள், ஜெயிலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வர்.

சிறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் உட்பட, ஒன்பது மத்திய சிறைகளில், முதல் கட்டமாக துவங்கும் பயிற்சிகள், பின் அனைத்து சிறைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில், விசாரணை கைதிகளுக்கு ஞாயிற்றுக் கிழமையும், தண்டனை கைதிகளுக்கு, வேறொரு நாளிலும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
ஓய்வூதியர்களுக்கு மொபைல் ஆப்: மத்திய அரசு புதுமை
பதிவு செய்த நாள்19செப்
2017
22:48




புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தங்கள் ஓய்வு கால பலன்கள் குறித்து அறியும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்' இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் குறித்து அறிவதில், சிரமம் இருந்தது. இந்த குறைகளை போக்கும் வகையில், ஓய்வூதிய பலன்கள் குறித்து, இணையதளத்திலேயே அறியும் வசதி, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள் மற்றும் ஏற்கனவே ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் ஓய்வு கால பலன்களை, 'மொபைல் ஆப்' மூலம் அறியும் வசதி, இன்று முதல் துவங்கப்பட உள்ளது.மத்திய அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த, 'மொபைல் ஆப்' இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது; இதை, மத்திய இணையமைச்சர், ஜிதேந்திர சிங் இன்று துவக்கி வைக்கிறார்.

'ஓய்வூதியம் குறித்த தகவல்களுடன், அது குறித்த தங்கள் விண்ணப்பங்கள், கோப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும், இதில் அறியலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2ஜி வழக்கில் தீர்ப்பு எப்போது? இன்று கோர்ட் அறிவிப்பு

பதிவு செய்த நாள்20செப்
2017
06:41




புதுடில்லி: 2ஜி ஸ்பெக்டரம் வழக்கின் தீர்ப்பு தேதியை டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று(செப்.,20) அறிவிக்க உள்ளது.

2ஜி ஊழல்

காங்., தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது.

குற்றச்சாட்டு

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை தொடர்ந்த ஒரு வழக்கையும், நீதிபதி, ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி, சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா,அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி., கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

குற்றப்பத்திரிகை

மேலும், ராஜாவின் முன்னாள் தனிச்செயலர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யுனிடெக் கட்டுமான நிறுவன தலைவர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானி தலைமையிலான, ஆர்.ஏ.டி.ஏ.ஜி., நிறுவனத்தின் மூன்று மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிராக, 2011ல், சி.பி.ஐ., முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

தீர்ப்பு

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று(செப்.,20) தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
தேசிய செய்திகள்

அரசு இலவச புடவைகளை சண்டை போட்டு வாங்கிய பெண்கள்! தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது என கோபம்


அரசு வழங்கிய இலவச புடவைகளை பெண்கள் சண்டை போட்டு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 18, 2017, 09:49 PM
ஐதராபாத்,

தெலுங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக அரசு தரப்பில் சூரத் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலே புடவைகள் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் அரசு இலவச வேட்டி - புடவை வழங்குவது போன்று தெலுங்கானாவிலும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் புடவைகளை வழங்கினர். சில பகுதிகளில் பெரும் சண்டை வெடித்தது.

தெலுங்கானாவில் பெண்களுக்கு வழங்குவதற்கு என்று 500 வகையான புடவைகள் கொண்டுவரப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

சில இடங்களில் புடவைகளை வாங்க வரிசையில் நின்ற பெண்கள் ஆக்ரோஷமாக சண்டை போட்ட காட்சியும் உள்ளூர் மீடியாக்களில் ஒளிபரப்பானது. பெண்கள் மொத்தமாக முடியை பிடித்து இழுப்பதும், அடித்துக் கொள்வதுமாக காணப்பட்டது. ஐதராபாத்தில் அரசின் திட்டம் கடைசியில் பெரும் அடிதடியில் முடிந்தது. போலீசார் பெரும் பாடுபட்டு அவர்களுடைய சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் பெண்கள் குழுவாக அரசு வழங்கிய புடவைகளை எரிக்கும் வீடியோவும் வெளியாகிஉள்ளது.

புடவைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது எனவும் அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. முதல் மந்திரி சந்திரசேகர ராவை விமர்சனம் செய்யும் விதமாகவும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

இதுபோன்ற புடவையை கட்டிக்கொண்டு சந்திரசேகர ராவின் மகள் கவிதா தசரா விழாவில் நடனம் ஆடுவாரா? என கேள்வியும் எழுப்பி உள்ளார்கள் இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சந்திரசேகர ராவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர். மக்களின் வரிப்பணம் தான் தேவையில்லாமல் செலவு செய்யப்பட்டு உள்ளது என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. புடவைகளை சாலையில் வைத்து எரிக்கும் சம்பவமும் அரங்கேறிஉள்ளது. இச்சம்பவங்கள் ஆளும் கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும் விவசாய பெண்களுக்கு வழங்க திட்டம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு மோசமான புடவையை கொடுத்து எங்களை அவமதிக்கிறார்கள் என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பெண் ஒருவர் பேசுகையில், இன்றைய வேலையை விட்டுவிட்டு வந்தோம். எங்களுக்கு ரூ. 400 நஷ்டம். நாங்கள் கடைக்கு சென்றுயிருந்தால் கூட நல்ல புடவையை எடுத்து இருப்போம். இவ்வளவு நேரம் வரிசையில் இன்று மோசமான புடவையை கொடுத்து உள்ளனர். மிகவும் மோசமான புடவைகள். ரூ. 50க்கு கூட புடவைகள் தேறாது. தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது. எங்களை அவமதிப்பதற்கு பதிலாக இந்த திட்டத்தை செயல்படுத்தாமலே இருந்து இருக்கலாம், என கோபமாக கூறிஉள்ளார்.
தேசிய செய்திகள்

நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீதும் உள்ளூர் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகின்றன



நீக்கப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் மீதும் உள்ளூர் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் 19, 2017, 11:12 AM
பெங்களூரு,

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் கர்நாடக மாநிலம் குடகு மலையில் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.

இந்த 18 பேரில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பழனியப்பன் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில் போலீஸ் தேடுவதால் விடுதியில் இருந்து வெளியேறி தலைமறைவாக உள்ளார்.

அவரை பிடிக்க நாமக்கல் சி.பி. சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டு உள்ளனர். இன்று காலை வரை அவரை கைது செய்ய முடியவில்லை. அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் செல்போன் எண்ணில் பழனியப்பன் பேசுவார் என்று நினைத்து அவர்களது செல்போன் எண்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பணம் மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இதனால் அவரும் குடகு விடுதியை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டு தலைமறைவாக உள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் குடகு மலையில் முகாம் இட்டுள்ளனர்.

ஏற்கனவே தலை காவிரிக்கு புனித நீராட தங்க தமிழ்செல்வன் தலைமையில் சென்றவர்களை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். அதில் செந்தில் பாலாஜி இல்லை. இதைத்தொடர்ந்து போலீசார் தினகரன் ஆதரவாளர்களை அங்கிருந்து செல்ல அனு மதித்தனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ. 4 கோடியே 25 லட்சம் வாங்கி செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை தேடி வருகிறார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் குடகுமலையிலும், இன்னொரு பிரிவினர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரிலும் முகாமிட்டுள்ளனர்.

இது தவிர தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் மீதும் அந்தந்த உள்ளூர் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகின்றன. வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகவும், அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும் புகார்கள் வந்துள்ளன. இது தவிர சில போலீஸ் நிலையங்களில் அ.தி.மு.க.வினரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்கள் குவிகின்றன.

தற்போது குடகு விடுதியில் இருந்து செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த விடுதியில் 10 பேர் மட்டுமே தங்கி இருப்பதாக தெரிகிறது.
தேசிய செய்திகள்

மொபைல் போன்களுக்கான அழைப்பு கட்டணம் குறைப்பு:டிராய் அறிவிப்பு


மொபைல் போன்களுக்கான அழைப்பு கட்டணத்தை டிராய் குறைத்துள்ளது.
செப்டம்பர் 19, 2017, 09:21 PM

புதுடெல்லி,

இந்தியா முழுக்க ஒவ்வொரு வட்டாரங்களில் உள்ள குறிப்பிட்ட நெட்வொர்க்களை பயன்படுத்திக் கொள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி வருகின்றன. இண்டர்கனெக்ட் கட்டணம் என அழைக்கப்படும் இந்த தொகை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் வாய்ஸ் கால்களுக்கான கட்டணத்தில் வாடிக்கையாளர்களுடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மொபைல் போன்களுக்கான அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை டிராய் குறைத்துள்ளது. மொபைல் அழைப்பிற்கான கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் வரும் 2020-ம் ஆண்டு முதல் அழைப்பு துண்டிப்பிற்கு கட்டணம் இல்லை என டிராய் அறிவித்துள்ளது.
தேசிய செய்திகள்

திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள, வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

செப்டம்பர் 20, 2017, 04:00 AM

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள, வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதனால், 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை, அதாவது தெலுங்கு யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கிய திருவிழாக்களை முன்னிட்டு, முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடப்பது வழக்கம்.

இந்தநிலையில் 23-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. அதையொட்டி ஏழுமலையான் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. காலை 6 மணியளவில் பிரதான நுழைவு வாயில் கதவு சாத்தப்பட்டது. கோவிலை சுத்தம் செய்யும் முன்பே, மூலவர் வெங்கடாஜலபதி மீது அசுத்த தண்ணீர் படாமல் இருப்பதற்காக, அவர் மீது விலை உயர்ந்த பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு, மூலவர் சன்னதியில் இருந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்துச் சன்னதிகள், தரை தளம், மேற்கூரை, சுவர்கள், தூண்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல், கோவிலுக்கு வெளியே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் தூண்கள், சுவர்கள், மாடங்கள் ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம் மற்றும் சுகந்த திரவியம் ஆகியவை பூசப்பட்டது.

இதையடுத்து மூலவர் மீது போர்த்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு, பகல் 11 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை அர்ச்சகர்கள் மூலவருக்கு சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் செய்து, தீபாராதனை காண்பித்தனர். நண்பகல் 12 மணிக்குமேல் பிரதான நுழைவு வாயில் கதவு திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கோவிலில் நேற்று காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை 6 மணிநேர தரிசனமும், அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டது.
மாநில செய்திகள்

புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் 778 பேர் நீக்கத்துக்கு இடைக்கால தடை சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் 778 பேர் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 20, 2017, 03:15 AM
சென்னை,

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியிலும், நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2016-2017-ம் கல்வி ஆண்டில் 778 மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு புறம்பாக சேர்க்கப்பட்டதாக கூறி அந்த மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கி புதுச்சேரி அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவ மாணவர்களான திவ்யா, விவேக், விக்னேஷ் உள்பட 108 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரையை ஏற்று புதுச்சேரி அரசு எங்களை கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு பின்பு திடீரென்று எங்களை கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருப்பதால் எங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து விட்டு எங்களை மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 778 மருத்துவ மாணவர்களையும் நீக்கி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம்(அக்டோபர்) 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மாவட்ட செய்திகள்

போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு



போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

செப்டம்பர் 20, 2017, 04:30 AM
ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை ஊராட்சி பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15.4.2010 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, டேனிஸ்பேட்டையில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றார்.

அப்போது சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என சந்தேகம் அடைந்த பழனிசாமி, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் சோதனை நடத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அங்கு மருத்துவம் பார்த்து வந்த காடையாம்பட்டி கோட்டேரி கரை பகுதியைச் சேர்ந்த முருகேசன்(வயது 47) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டர் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஓமலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு ரமேஷ் தீர்ப்பு கூறினார்.
தலையங்கம்  அவிழ்க்க சிரமப்படும் சட்டசிக்கல்


தமிழ்நாட்டில் 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன், தி.மு.க.வில் யார் முதல்–அமைச்சராக வருவது குறித்து தொடக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை.

செப்டம்பர் 20 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன், தி.மு.க.வில் யார் முதல்–அமைச்சராக வருவது குறித்து தொடக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை. ஒன்றாகவே செயல்பட்டனர். 1972–ல்தான் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க. என்ற தனிக்கட்சியை உருவாக்கினார். 1987–ல் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன், ஜா–அணி, ஜெ–அணி என்று பிளவு ஏற்பட்டாலும், சிறிது காலத்தில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து ஜெயலலிதா தலைமையில் கட்சி வலுவுடன் செயல்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன், முதலில் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று உருவெடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பு நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அப்போது, அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி.தினகரன் அணி என மூன்று அணிகளாக பிளவுப்பட்டிருந்தது. அதன்பிறகு ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தது. டி.டி.வி.தினகரன் அணி தனியாகவே இருந்தது.

தினகரன் ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏ.க்கள், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சராக செயல்பட ஆதரவு அளிக்கவில்லை என்று கடிதம் கொடுத்தனர். இந்த 19 பேரில், ஒருவரான ஜக்கையன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்து, தான் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக சபாநாயகருக்கும், கவர்னருக்கும் தெரிவித்துவிட்டார். ‘கவர்னரிடம் போய் இவ்வாறு கடிதம் கொடுத்தது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாங்களாகவே முன்வந்து வெளிவந்ததாக கருதப்படுகிறது’ என்ற அடிப்படையில், இந்திய அரசியல் சட்டம் 10–வது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மை ஆக்குதல்) விதியின்கீழ் மீதமுள்ள 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை தகுதியிழக்க செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இப்போது சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடமுடியும் என்றநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது சட்டப்படி செல்லுமா? என்பதில்தான் கடுமையான சட்டசிக்கல் ஏற்பட்டுவிட்டது.

எதிர்கட்சிகள் எல்லாம், இது ஜனநாயக படுகொலை என்று கூறுகிறார்கள். அரசியல் சட்டத்தில் 102, (2) (ஏ) பிரிவின்கீழ் ஒருவர் அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே தகுதி இழக்கும் நிலையை அடைகிறார் என்றும், 102(2) (பி)–ன் கீழ் தன்கட்சி பிறப்பித்த கட்டளையை மீறி சட்டமன்றத்தில் ஓட்டுப்போட்டாலோ, ஓட்டுப்போடாமல் இருக்கும் வகையில் அவைக்கு வராமல் இருந்தாலோ தன்பதவியை இழக்கும்நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், உத்தரகாண்டில் இதேபோல் 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்–மந்திரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி கவர்னரை சந்தித்ததையொட்டி அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுத்தது சரியே என்று உறுதிசெய்தது. ஆனால், உத்தரகாண்டில் இந்த 9 எம்.எல்.ஏ.க்களும், 27 எதிர்கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து கவர்னரை சந்தித்தனர். இதனால் அதுவும், இதுவும் ஒன்றாக வராது என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில், தகுதிநீக்கம் செல்லுமா?, செல்லாதா? என்பது இனி நீதிமன்றங்களின் தீர்ப்புகளில்தான் இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக இன்றுவரும் வழக்கில் நிச்சயமாக ஒரு பதில் கிடைக்கும் என்றாலும், இந்தப்பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை இழுத்துக்கொண்டேதான் போகும். இந்த சிக்கலுக்கான முடிவை நீதிமன்றங்கள்தான் தரும்.
எம்.எல்.ஏ.,க்கள்,தகுதி நீக்கத்திற்கு,எதிரான,வழக்கு,விசாரணை, இன்று

சென்னை:கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ௧௮ பேரை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள், இன்று நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வருகின்றன.



இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம், என்ன தீர்ப்பு கூறுமோ என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னரை சந்தித்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,19 பேர், கடிதங்கள் அளித்தனர். இதையடுத்து, அரசு கொறடா அளித்த புகாரில், 19 எம்.எல்.ஏ.,க்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார்; நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்; பின், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். அதே நேரத்தில், சபாநாயகர் முன், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், வழக்கறிஞர், என்.ராஜா செந்துார் பாண்டியன் ஆஜராகி, சில ஆவணங்களை கோரினர்.

மனு தாக்கல்

இந்நிலையில், பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் உத்தர விடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.இம் மனுவை,நீதிபதி எம்.துரைசாமி விசாரித்தார். விசாரணையின் போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், 'நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் விதத்தில், தகுதி நீக்கம் செய்யக் கூடும்; எனவே, அதுகுறித்து நாங்கள் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டும்' என்றார்.

இவ்வழக்கு விசாரணையை, ௨௦ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி துரைசாமி, 'அதுவரை, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது' என, உத்தரவிட்டார். ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவும், வெற்றிவேல் மனுவும், நீதிபதி துரைசாமி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளன.

இதற்கிடையில், 18 எம்.எல்.ஏ.,க்களையும்
தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தர விட்டுள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18

எம்.எல்.ஏ.,க்களும் மனு தாக்கல் செய்கின்றனர். நேற்று மாலை வரை, வெற்றிவேல் உள்ளிட்ட எட்டு, எம்.எல்.ஏ.,க்கள், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

உத்தரவு செல்லாது

மனுக்களில், 'எங்களுக்கு பதில் அளிக்க, உரிய சந்தர்ப்பம் தரப்படவில்லை; கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வில்லை. சபாநாயகரின் உத்தரவு செல்லாது. 'விசாரணை முடியும் வரை, சபாநாயகரின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிபதி எம்.துரைசாமி முன், வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி, ''எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்படும் மனுக்களை, அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என்றார். அதற்கு, நீதிபதி துரைசாமி, ''வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில், நாளை விசாரணைக்கு எடுக்கிறேன்,'' என்றார்.

சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜர் ஆகின்றனர். எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்புக்கு முழுமையான தடை விதிக்கப்படுமா; நிபந்தனைகளுடன் கூடிய தடை இருக்குமா அல்லது எதிர் தரப்பில் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்பப்படுமா என்பது, இன்று தெரிய வரும்.


2க்கு மேல் பெற்றால் வேலையில்லை :சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
கவுஹாத்தி: 'இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு, அரசு வேலை, சலுகை கிடையாது' என்ற புதிய சட்டத்திற்கு, அசாம் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.





அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2001ல், மாநிலத்தில், 2.66 கோடியாக

இருந்த மக்கள் தொகை, 2011ல், 3.12 கோடியாக உயர்ந்தது. பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு அரசு பணி, சலுகைகளை பெறுவதில் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கான புதிய சட்டம், மாநில சட்டசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த, சட்டசபைகூட்டத்தில், நீண்ட விவாதத்திற்கு பின், புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளோர், அரசு பணி, சலுகைகளை பெற முடியாது.

பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற, எம்.எல்.ஏ.,க்களின் பதவியை ரத்து செய்யவும், எதிர்காலத்தில், இவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் அனுமதி கோரும் மசோதா, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Tuesday, September 19, 2017

மாணவர்கள் உடல் பருமன் கூடுகிறது; சீருடை அளவு பெரிதாகிறது

சிங்கப்பூர் மாணவர்களிடையே உடல் பருமன் கூடிவருவதன் காரணமாக பள்ளிக்கூடச் சீருடை அளவு பெரிதாகி வருகிறது. இந்தத் தொழில்துறையில் 50 ஆண்டு காலமாக இருந்து வரும் ஷங்காய் ஸ்கூல் யுனிஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி டோரிஸ் இயோ, “நம்முடைய மாணவர்கள் அளவில் பெருத்து வருகிறார்கள். இப்போது அவர்களுக்குத் தோதாக உடைகளைப் பெரிதாக தைக்க வேண்டியிருக்கிறது,” என்று கூறினார். குறிப்பாக கால்சட்டைகளைப் பெரிதாகத் தைக்க வேண்டியிருக்கிறது என்றார் அவர். சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களிடையே உடல்பருமன் விகிதம் அதிகமாகி வருகிறது. 2000ஆம் ஆண்டில் 10% ஆக இருந்த அந்த விகிதம், 2014ல் 12% ஆகியது.

‘Retirement benefits under CPS to be disbursed shortly’


By Express News Service  |   Published: 19th September 2017 02:03 AM  |    

CHENNAI: The State government has submitted that orders were issued as early as in February 2016 to the effect that the Contributory Pension Scheme (CPS) accumulation i.e. the employee’s contribution along with government contribution and interest thereon up to the date of final authorisation in respect of retired, resigned, died employees and whose services are terminated due to various reasons be settled immediately, subject to obtaining an undertaking from them and the legal heirs of the deceased that they would not make any further claims under the CPS.
The secretary (Expenditure) said this in his counter-affidavit filed before Justice N Kirubakaran in response to writ petitions from Sri Venkateswara Aided Middle School in Namakkal district and others, on Monday.On September 15, the judge had directed the State government to furnish certain information with regard to the contributory pension scheme (CPS) introduced by it recently.As per the report of the Commissioner of Treasuries and Accounts, 7,409 applications requesting CPS final settlement have been received up to August 31 last. Of this, final authorisation was issued in respect of 3,288 retired/resigned employees/deceased employees for `125,24,24,317 and remaining applications would be authorised on receipt of processed requisite documents, the counter said.
Denying the charge, the counter said the government has been contributing its share regularly after the deduction of the employees’ contribution. There is no failure in making the government contribution.

The total amount of employee and government contribution with interest is being deposited in the public account every year. A sum of `18,016 crore has been accumulated, including interest up to March 31 last. Account slips for 2016-17 had already been issued to the individuals concerned and the same had been uploaded in the website, the counter added.
The matter has been adjourned till September 22.

No extra lock for rented house without owner nod


By C Shivakumar  |  Express News Service  |   Published: 19th September 2017 02:12 AM  |  

CHENNAI: In an effort to streamline dispute-ridden rent agreements, the rules drafted under the Tamil Nadu Regulation of Right and Responsibilities of Landlords and Tenants Rules - 2017  propose to put in place stipulations, including barring tenants from making any alterations. This will cover even installation of an additional lock in any door without prior consent.The tenant will have to pay the rent in advance if the premises is left unoccupied for 15 days or more, failing which the landlord has the right to take immediate possession of the property and to bar the tenant from returning.
On the other hand, if the landlord defaults in returning the advance paid, he is liable to pay 18 per cent annual interest on the sum, from the date of recovery of possession of the tenant’s  premises, under the proposed rules.If a landlord recovers the possession of premises, he will have to take the permission of a rent court to re-let part or the entire premises within three years from the date of obtaining such possession. If he re-lets it without permission, he is liable to pay a penalty of ` 10,000.
Under the rules, such rent courts will play a significant role in settling disputes between tenants and landlords. Across the State, 36 courts will be set up, including three in Chennai Corporation limits alone —one each in Chennai North, Chennai Central and Chennai South.Similarly, the government has constituted a principal rent tribunal in Chennai having the jurisdiction of Madras High Court, and a rent tribunal at Madurai having the rent jurisdiction of Madurai Bench of Madras High Court.
As per the new rent Act, the courts and tribunals will not be bound by the procedure in the Code of Civil Procedure,  but shall be guided by principles of natural justice and shall have the power to regulate their own procedure.The draft rules exempt buildings owned by cooperative society, government companies registered under Companies Act, monuments or any building for five years from the date on which the construction is completed and notified to local authority concerned.
Factfile

A tenant can’t make any alteration without landlord’s prior consent
No additional lock should be installed on any door without permission of landlord

If the tenant leaves the premises unoccupied for 15 days without paying rent in advance, the landlord has the right to take possession of the property and to bar the tenant from returning
 

Soon, no reservation charts on trains leaving Chennai Central


By Venkatesan Parthasarathy  |  Express News Service  |   Published: 19th September 2017 02:15 AM  |  

In a bid to save money and paper, the Railway Board is planning to do away with reservation charts stuck outside coaches in six stations across India
CHENNAI: Soon, reservation charts will not be pasted on trains leaving Chennai Central and six other select major stations across the country. The Railway Board has decided to do away with the charts on coaches of trains that start from New Delhi, Nizamuddin, Mumbai Central, Mumbai Chatrapathi Shivaji Terminus, Howrah, Sealdah and Chennai Central. The board also has sent a circular to all the zones concerned. The charts contain the list of passengers and their reserved seat numbers. It especially helps those with tickets that get confirmed in the last minute and passengers who had applied for upgradation.
A senior Southern Railway official told Express that the proposal will most likely be implemented within this month. He also said the initiative will save about ` 30 lakh per year, besides reducing paper requirement.The railway board had taken the decision a few days ago based on the feedback from South Western Railway, which had stopped using reservation charts since last year for trains leaving Bengaluru and Yeshwantpur stations. According to the circular, the measure will be implemented on an experimental basis for three months. A final decision on continuation will be taken after receiving feedback.
The pasting of charts at Central and Egmore is outsourced, with the contract costing the public exchequer around `30 lakh every year. Railways also prints and supplies around 4000 sheets of paper to the contractors, with Central station alone requiring about 75 percent of the quantity. “By ending the practice at Central, we will be able to save some money,” the official said.
Another senior official said they will implement the decision after adequate publicity (on alternate measures) is given. Presently, there is a centralised chart for the benefit of wait-listed and RAC passengers at the entrance of the station.


However, V Rama Rao, director of Traffic and Transportation forum, said he was disappointed with the decision as it would cause hardship to passengers. “Senior citizens and women especially depend on the charts.” Those rushing to the station at the last moment may not find time to go to the enquiry counter or see the centralised chart, he added.
‘தைரியமாக இருங்கள்... நான் இருக்கிறேன்!’ - எம்.எல்.ஏ-க்களுக்கு தினகரனின் ஆறுதல் #VikatanExclusive
எஸ்.மகேஷ்






தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த எம்.எல்.ஏ-க்களிடம் போனில் பேசிய தினகரன், 'தைரியமாக இருங்கள்.. நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தினகரன் தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. தினகரனை ஆதரித்த 22 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள், இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்குத் தகவல் தெரிந்ததும், சில எம்.எல்.ஏ-க்கள் சோகத்தில் மூழ்கினர். சொகுசு விடுதியில் இல்லாத எம்.எல்.ஏ-க்கள், தங்களுடைய ஆதரவாளர்களிடம் மனவருத்தத்தைப் பகிர்ந்துகொண்டனர். நடவடிக்கை எடுக்கப்படாத எம்.எல்.ஏ-க்களும் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தினகரனை ஆதரித்த ஜக்கையன் எம்.எல்.ஏ., மனம் மாறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தகுதிநீக்க அறிவிப்பு வெளியானதும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான வெற்றிவேல், ‘இந்தத் தகுதி நீக்கம் செல்லாது’ என்று ஆவேசமாகக் கூறினார். அடுத்து, 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்திலும் சபாநாயகரின் நடவடிக்கைக்குத் தடை பெற மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம்குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். தகுதிநீக்கத்துக்குக் கண்டனமும் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் தினகரன் போனில் பேசியுள்ளார். அப்போது அவர், 'தைரியமாக இருங்கள்... நான் இருக்கிறேன்' என்று எம்.எல்.ஏ-க்களுக்கு ஆறுதல் கூறியதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், “எங்களைத் தகுதிநீக்கம் செய்த தகவல் கிடைத்ததும் தினகரன் போனில் தொடர்புகொண்டார். எங்களிடம் ஆறுதலாக அவர் பேசினார். திருச்சி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு சசிகலாவைச் சந்தித்துவிட்டு, அடுத்த நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். நிச்சயம், சபாநாயகரின் தகுதிநீக்க நடவடிக்கைக்குத் தடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.



இதற்கிடையில், நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடகவிலிருந்து இன்று இரவு புறப்படுகிறோம். திருச்சியில், தினகரனை நேரில் சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம்வந்துவிட்டது. சட்டசபையில் நாங்கள் இருந்தால், அவரால் நிச்சயம் பெருபான்மையை நிரூபிக்க முடியாது என்று கருதியே, எங்களைத் தகுதி நீக்கம் செய்துள்ளார். தைரியமிருந்தால், எங்களைத் தகுதிநீக்கம் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் செயல்பட்டுள்ளார். கட்சி தாவியதாக எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும், இந்த ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகத்தான் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால், அரசியல் காழ்பு உணர்ச்சியால் நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம். நீதிமன்றத்தில் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்” என்றனர்.

தொடர்ந்து, தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்துள்ளார் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்குகுறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வழக்கில், செப்டம்பர் 20-ம் தேதி வரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடத் தடை உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றமோ அல்லது ஆளுநர் தரப்பிலோ உத்தரவிடப்பட்டால், அதைச் சமாளிக்கவே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் என்று சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கும் நடவடிக்கையும் தலைமைச்செயலகத்தில் தீவிரமாக நடந்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நடக்கும் அரசியல் பரபரப்புக்கிடையே, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வருகிறார். அவரது வருகையும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “குறுக்குவழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற முடியாது. தகுதிநீக்கம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.
Posted Date : 00:25 (19/09/2017)

சென்னையில் கனமழை: பல பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

பிரேம் குமார் எஸ்.கே.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதே போன்று தமிழகம் முழுவதும் இன்று பரவலாக மழை பெய்தது.

சென்னையில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரம் முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. பலர் அலுவலகம் முடித்து வீடு செல்லும் நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது.

கூடவே மாலை முதல் பெய்த்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டது. எழும்பூர், கிண்டி, கோடம்பாக்கம், கோயம்பேடு, திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட பல இடங்களில் நல்ல மழை பெய்தது. தமிழகத்தின் பிற மாநிலங்களை பொருத்தவரை தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இன்னும் மூன்று நாள்கள் மழை தொடரும் என அறிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: வி. நாகமணி
தகுதி நீக்க விவகாரம்: உத்தரகாண்ட் தீர்ப்பும், தமிழக நிலவரமும்

Published : 18 Sep 2017 18:10 IST

மு.அப்துல் முத்தலீஃப்சென்னை





18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் பலரும் எடியூரப்பா வழக்கு தீர்ப்பை உதாரணம் காட்டி வந்தாலும், இதே போன்ற விவகாரத்தில் உத்தரகாண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அது குறித்து ஒரு அலசல்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக செயல்பட்ட 18 பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற தீர்ப்புகளை பலரும் காரணம் காட்டி பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனேகம் பேர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்தது செல்லாது என்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் தனபாலின் முடிவைப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

சிலர் உத்தரகாண்ட் மாநில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சிலர் உதாரணம் காட்டுகின்றனர். கர்நாடக மாநில விவகாரம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் சபாநாயகர் தீர்ப்பு சரி, உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்ற வாதம் வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதே போன்றதொரு நிகழ்வு நடந்த பொழுது சபாநாயகர் 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்தை மாற்ற வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் 9 எம்.எல்.ஏக்களும் வழக்குத் தொடர்ந்தனர்.

தாங்கள் காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவதாகவும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற தங்களது கோரிக்கை ஜனநாயக மரபுதான் என்றும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு ஆதரவாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதே நேரத்தில் முதல்வர் மீது ஆளுநரிடம் முறையிடச் சென்ற பாஜக எம்எல்ஏக்களுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சென்றது கட்சித் தாவல்தான் என காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி யூ.சி.தியானி தீர்ப்பளித்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவை ஏற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

ஆனால் இதில் சிறிய வித்தியாசம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக எம்.எல்.ஏக்களுடன் சென்று மனு அளித்தனர் ஆனால் தினகரன் தரப்பில் அவர்கள் தனி அணியாக இயங்கி வருகின்றனர் என்பது தமிழகத்தில் உள்ளதால் இதை வேறு கோணத்தில் பார்க்கும் நிலையும் வரலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Alagappa University earns another honour for maintaining cleanliness

174 out of 3,500 institutions were short-listed for Swachhta ranking

Alagappa University, Karaikudi, has won the third place in Swachhta ranking 2017 among the institutions of higher education in the country.
Union Human Resource Development Minister Prakash Javedekar presented the awards to 25 institutions, including Alagappa University, at a function in New Delhi recently, said a release from the university.
Alagappa University was among the 3,500 institutions of higher education that responded to an online invitation from the Ministry of Human Resource Development (HRD) and submitted details on the prescribed format.
After the HRD Ministry shortlisted 174 institutions that scored 95% and above, officials from the University Grants Commission and the All India Council for Technical Education inspected the university premises to get first-hand information, the release said.
Later, the top 25 institutions across various categories such as universities, colleges, technical institutions and government institutions were selected.
The exercise was aimed at generating peer pressure among institutions to focus on cleanliness.
University Vice-Chancellor Prof. S. Subbiah told reporters on Monday that the officials visited the university premises on August 22 and 23 and checked the garbage disposal system in hostels and academic buildings, the disposal techniques, water supply systems and student-toilet ratio, the parameters for the award.
The team also inspected the kitchen, availability of running water, modernity of toilet and kitchen equipment and campus green cover, he said.
The Swachhta ranking was another feather in the cap of the university, the VC said adding the A plus Grade university had already won the World Clean and Green University Campus Award.
The Alagappa alumni garden, scientific waste management systems, hygienic ambience and societal linkages through village placement programmes spoke about the thrust given by the university on sustainable development.
In the process, the university had sensitised the student community about the importance of tree planting, he added.

Kumbakonam railway station gets free Wi-Fi

The Railways has extended free WiFi facility for passengers and public accessing the Kumbakonam railway station. The facility, that was tested for about a week, was launched on Monday. The Railways had decided two years back to extend the facility to stations and junctions that were categorised as “A Grade’’ with a commendable revenue. As per that decision, the Thanjavur District Train Travellers’ Welfare Association had petitioned the Railways for the facility and reiterated their demand through the Mayiladuthurai MP R. K. Bharathi Mohan again some time back.
Every day around 38 trains pass through the Kumbakonam station that witnesses a footfall of at least 5,000 people daily.
“We thank the Railways and those who made it happen”, said members of the association.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்ட வட்டம்

By DIN | Published on : 19th September 2017 01:13 AM |

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த திருமா மங்கள், மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 'இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருத்தல் ஆகாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் உள்ளதால் மருத்துவக் கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் 2017-18 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவின் கீழ் சேர்ந்து படிக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம். விஜயன், சிவபால முருகன் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள், 'மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தை அணுகவில்லை. இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகு ஏன் நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள். இவ்வளவு தாமதம் ஏன்? தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு தேதியை நீட்டிப்பதாக இல்லை' என்றனர்.

இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் கே.எம். விஜயன், ' நீட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நிலவிய பிரத்யேக சூழல் காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீடித்தது. மனுதாரருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதிதான் அழைப்புக் கடிதம் கிடைத்தது. அதன் பிறகு காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது' என்றார். அவரது வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மஹாளய அமாவாசை தர்ப்பணம் குறித்த சந்தேகங்களும், பதில்களும்...
Published on : 18th September 2017 02:53 PM


மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு கொடுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த பொதுவான சந்தேகங்களுக்கு தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் பதிலளித்துள்ளார்.

• சரி, முன்னோர்களை வழிபட என்னென்ன முறைகள் உள்ளன?
அவர்கள் இறந்த திதி, வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை
சொல்லிச் செய்ய வேண்டும்.

தாய் வழி
உங்கள் தாயாரின் தகப்பனார் - தாயார்
உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

தந்தை வழி
உங்கள் தகப்பனாரின் தகப்பனார் - தாயார்
உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

• கேள்வி: பெண்கள் செய்யலாமா?

பதில்: தங்களுடன் சகோதரர்கள் பிறக்காத நிலையில் கட்டாயம் செய்யலாம்.

• கேள்வி: இதை ஆற்றங்கரையில்தான் செய்ய வேண்டுமா?

பதில்: எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மனம் சுத்தமாயிருக்க வேண்டும்.

• கேள்வி: வெளிநாடுகளில் இருப்போர் என்ன செய்யலாம்?

பதில்: வீட்டில் செய்வது நல்லது.

• கேள்வி: தர்ப்பணத்திற்கு தனியாக ஆட்களை வைத்துத்தான் செய்ய வேண்டுமா?

பதில்: அவசியம் இல்லை. தங்களுக்கு முறைகள் தெரிந்திருக்கும் பக்ஷத்தில் தாங்களே செய்து கொள்ளலாம். எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

• கேள்வி: தர்ப்பணம் செய்யும் முறைகளைச் சொல்லுங்களேன்?

பதில்: முதலில் அவரவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு உண்டான திதி கண்டுபிடித்திருப்பீர்கள். அந்தத் திதி ஒவ்வொரு வருஷமும் வரும் போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாரம் கிடையாது. தாயோ தந்தையோ இல்லாதவர்கள், அல்லது இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.

தர்ப்பணம் அன்று விரதம்

முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல்
கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். புரிகிறதா? பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.

தர்ப்பணம் செய்யும் முறைகள்

முதலில் யாருக்கு திதியோ அவருக்குத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழி உள்ளவர்களுக்கு, பின் தாய் வழியில் உள்ளவர்களுக்குச் செய்யலாம்.

கேள்வி: என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்:

பதில்: ஒரு வருடத்தில் தாய் தந்தையர் இறந்த திதிகளை தவிர, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், ஒவ்வொரு கிரஹணத்தன்றும், சூரிய சந்திர கிரஹண காலங்களில், ஒவ்வொரு மாத அமாவாஸ்யையின் போதும் செய்யலாம்.

வரலாறு திரும்புகிறது அன்று பி.எச்.பாண்டியன்-இன்று தனபால்
By DIN | Published on : 19th September 2017 01:31 AM |




சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த பிறகு, பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறை 29 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-இல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு யார் முதல்வர் என்ற சர்ச்சை அதிமுகவில் வெடித்தது. ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார்.
இதனை கட்சியின் மற்றொரு தலைவராக விளங்கிய ஜெயலலிதா ஏற்கவில்லை. அப்போது தமிழக சட்டப் பேரவையில் அதிமுகவுக்கு 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். மற்றவர்கள் ஜானகி அணியை ஆதரித்தனர். அப்போது பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் ஜானகி அணியை ஆதரித்தார்.
பேரவையில் நடந்தது என்ன? பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையில் இருந்து நீக்கினார். இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1986-இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியலமைப்புச் சட்ட நகலை எதிர்த்தனர். இதற்காக அவர்கள் அவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

எனவே, சட்டப் பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 191-ஆகக் குறைந்தது. இந்த குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஜானகி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 1988-ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை, அவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பேரவை கூடியதும் திடீரென அறிவிப்பை ஒன்றை அவர் வெளியிட்டார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களது பதவியில் இருந்து விலகுவதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த கூச்சல்-குழப்பத்தைத் தவிர்க்க பேரவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். மீண்டும் பேரவை கூடியதும், ஜெயலலிதா தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில், ஜானகி ராமச்சந்திரன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போதைய நிகழ்வு: இப்போது அதிமுக உறுப்பினர்களில் தினகரன் அணியைச் சேர்ந்த 18 பேரை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 108-ஆகக் குறைந்துள்ளது. அப்போது பி.எச்.பாண்டியன் எடுத்த அஸ்திரத்தை, இப்போது பி.தனபால் எடுத்துள்ளார்.

முதுமை போற்றுவோம்


By கே.ஜி. இராஜேந்திரபாபு  |   Published on : 19th September 2017 01:23 AM  |   
மற்ற பருவங்களைப் போலவே முதுமைப் பருவமும் மகிழ்ச்சிக்குரிய பருவம்தான் என்பதை ஏனோ பலரும் ஏற்றுக் கொள்வதில்லை.
முதுமைப் பருவம் எய்திவிட்டாலே வெந்ததைச் சாப்பிட்டுவிட்டு விதிவழியே போகவேண்டியதுதான் என்று விரக்தியாய் பேசிக்கொண்டு, வந்து போகிறவர்களிடமெல்லாம் தன் துயரத்தைப் புலம்பி, கண்ணீரால் முகத்தை அலம்பி, மூலையிலே குந்தத்தான் தனக்குத் தகுதி, கூடத்திலே அமர அருகதையில்லை என்று தனக்குத்தானே கோடிட்டுக் கொண்டு, இனியென்ன வாழ்க்கை இருக்கிறது என்றும் என்னை யார் மதிக்கிறார்கள் என்ற சுயபச்சாதாபத்தோடும் காலம் தள்ளும் பருவம் என்று பலரும் எண்ணுகிறார்கள்.
முதுமை என்பது கலங்கும் பருவமல்ல; கம்பீரமான பருவம்.
முதியவர்கள் தங்கள் மனத்தில் தாழ்வு மனப்பான்மை அனுமதிக்க வேண்டாம். வயதை இழந்துவிட்டோம் அதனால் வாழ்க்கையில் ஒதுக்கப்படுவோமோ என்று வதங்க வேண்டாம்.
முதியவர்கள் இளைஞர்கள் போல் இயல்பாக இருக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம். வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். கம்ப்யூட்டரிலோ, லேப்-டாப்பிலோ இணையத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தினமும் புதிய புதிய நூல்கள் படிக்கலாம். இனி படித்து என்ன செய்யப்போகிறோம் என்ற விரக்தி மனப்பான்மை கூடாது. விரக்தி மனப்பான்மை வயதைக் கூட்டிவிடும்.
புதிய புதிய செய்திகளைப் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லலாம். அவர்கள் வயதுக்குத் தக்கவாறு கதைகளையோ, தகவல்களையோ சொன்னால் பேரப்பிள்ளைகள் தாத்தாவை விரும்பி தினமும் எதிர்பார்ப்பார்கள்.
தனது வயது நபர்களுடன் நட்பு பாராட்டி ஒரு குழுவாக அமர்ந்து பேசலாம். குடும்பத்தில் உள்ள குறைகளையோ, மனக்குறைகளையோ சொல்லி அதிலேயே ஒரு சுகம் காணுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியான செய்திகளையே பேசலாம். 
ஏதாவது ஒன்றின் சார்பாக வாதிட்டுக் கொண்டு மனதிற்குள்ளேயே எதிர்ப்பலையை ஏற்படுத்திக் கொண்டு நிம்மதியை இழந்து விட வேண்டாம். குழுவாய் அமர்ந்து பேசுவதே மனத்தை மென்மைபடுத்தத்தானே!
வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் மகனோ மருமகளோ கொஞ்சம் கவனக் குறைவாக நடந்தால், உதாரணத்திற்கு, சாப்பிடும்போது கூப்பிட மறந்தால் - தான் அலட்சியம் செய்யப்பட்டுவிட்டோம், ஓய்வுபெற்ற உடனேயே ஒதுக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ண வேண்டாம்.
சொந்த வீட்டில் எப்போதும் ஒருவரை ஒருவர் மதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
முதியவர்கள், ஒவ்வொன்றுக்கும் மரியாதையை எதிர்பார்ப்பதற்குக் காரணம் ஓய்வு பெற்றவுடன் தான் ஓரங்கட்டப்பட்டுவிட்டோம் என்ற எண்ணத்தை ஏற்கெனவே மனத்தில் ஏற்படுத்திக் கொண்டதால்தான். அந்தக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்க்கும்போது அவர்களுக்கு அப்படித்தான் தெரியும். 
இன்னும் சிலர் தாங்கள் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலகத்திற்குச் சென்றால் அங்கு தங்களை மதிக்கவில்லை என்று புலம்புவார்கள். ஒரு வாடிக்கையாளருக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை தங்களுக்குக் கொடுத்தால் போதும் என்று நினைத்தால் இந்த மன உளைச்சல் இருக்காது.
முதியவர்களில் இரண்டு வகையினர் உண்டு. ஒன்று இயன்றவர்கள் (ஓய்வு ஊதியமாகவோ பிற வடிவிலே வருமானம் உள்ளவர்). இன்னொரு வகையினர் இயலாதவர்கள்.
இயலாதவர்கள் வாரிசுகளை நம்பி வாழ்கிறவர்கள்.
இயலாத பெற்றோரைப் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும். கெளரவத்தோடு நடத்த வேண்டும். சோறுபோட்டு துணி எடுத்துக் கொடுத்தால் மட்டும் போதாது. 
அவர்களின் தேவையை அறிந்து சேவை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது பெற்றோருடன் அளவளாவ வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அவர்கள் இயலாமையைச் சுட்டிக்காட்டி வேதனைப்படுத்தக்கூடாது. எந்தச் சூழலிலும் பெற்றோரை அலட்சியப்படுத்தக்கூடாது. 
பெற்றோர் கேள்வி கேட்டால் அதை காதிலே வாங்காத மாதிரி அலட்சியப்படுத்தக்கூடாது. அவர்களை மதித்து பதில் சொல்ல வேண்டும்.
குடும்பத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளை தங்களைக் கலந்தாலோசிக்கிறான் என்பதே பெற்றோர்க்குப் பூரிப்புத் தரும். 
வீட்டில் தாங்கள் உரிமையுள்ளவர்கள் என்ற உணர்வைப் பெற்றோர்களுக்கு ஊட்ட வேண்டும்.
குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி முதலிய பெரியவர்கள் என்ற அடுக்குள்ள குடும்பம் அழகாக இருக்கும். பிள்ளைகளைப் பெற்றோர் கண்டிப்பர். தாத்தாவும், பாட்டியும் செல்லம் கொஞ்சுவர். 
பிள்ளைகளுக்கு இரண்டுமே வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தாத எண்ணங்களை தாத்தா பாட்டியிடம் கொட்டுவர். கூடுதலான சுதந்திரத்தோடு விளையாடுவர்.
பெற்றோர் சுமையென பிள்ளைகள் நினைத்தல் கூடாது. சிறு சிறு குறைகள் முதியவர்களிடம் இருந்தாலும் பொறுக்க வேண்டும். இளம் வயதில் தன்னுடைய குறைகளை பொறுத்தவர்கள்தான் என்பதை நினைவுகூர வேண்டும்.
பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது பிள்ளைகளுக்குப் பெருமை மட்டுமல்ல; பாதுகாப்புமாகும்.

NEWS TODAY 21.12.2025