Wednesday, September 20, 2017

விரைவு ரயில்களில் இனி பயணிகளின் சார்ட் ஒட்டப்படாது: ஏன் தெரியுமா?

By DIN  |   Published on : 19th September 2017 02:45 PM  |     
train_chart


சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்பட உள்ளது.
இந்த நடவடிக்கை சென்னை சென்டிரல் உட்பட இதர 6 முக்கிய ரயில் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
புது தில்லி, நிஜாமுதீன், மும்பை சென்டிரல், மும்பை சத்ரபதி ஷிவாஜி டெர்மினஸ், ஹௌரா, சீல்தா மற்றும் சென்னை சென்டிரல் என 6 ரயில் நிலையங்களில், பயணிகளின் சார்ட் ஒட்டும் பணியை நிறுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
டிக்கெட் கடைசி நிமிடத்தில் உறுதி செய்யப்பட்டவர்களுக்கும், இருக்கையில் இருந்து படுக்கை வசதிக்கு விண்ணப்பித்திருந்த பயணிகளுக்கும், கடைசி நேரத்தில் ரயில் ஏற வருவோருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது இந்த பயணிகள் சார்ட்.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, பயணிகளின் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதால் மட்டும் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் செலவு குறையும். அதோடு, அதற்குத் தேவையான காகிதங்களின் அவசியமும் குறைகிறது. 
ஏற்கனவே பெங்களூர் மற்றும் யஷ்வந்த்புர் ரயில் நிலையங்களில், பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டுவிட்டது. அங்கு கிடைத்த அறிவுறுத்தலின்படியே, தெற்கு ரயில்வே, மேலும் 6 முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் சார்ட் ஒட்டும் பணியை நிறுத்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முடிவு செய்தது.
6 ரயில் நிலையங்களிலும் இந்த நடைமுறை முதல் 3 மாதங்களுக்கு பரிசோதனை முறையில் செய்யப்படும். அதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அதனை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.
சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி, அவுட்சோர்ஸிங் முறையில் செய்யப்பட்டு வருகிறது. இப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு ரயில்வே ஆண்டு தோறும் ரூ.30 லட்சம் வழங்கி வருகிறது. அதோடு, பயணிகள் சார்ட்டை ரயில்வே பிரிண்ட் எடுத்து சுமார் 4000 பக்கங்களைக் கொண்ட காகிதங்களை ஒப்பந்ததாரர்களிடம் கொடுக்கிறது. எனவே, பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டால் ரூ.30 லட்சம் செலவு மட்டுமல்லாமல் காகிதங்களும் மிச்சமாகும் என்று கூறுகிறார்.
ரயிலில் அந்தந்த பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சார்ட் ஒட்டும் பணி நிறுத்தப்படுவதற்கு மாற்றாக, பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலைய நுழைவாயிலில் ஒட்டுமொத்த பயணிகள் சார்ட்டும் ஒட்டப்படும். அதன் மூலம் காத்திருப்போர் பட்டிலியல் இருப்பவர்களும், ஆர்ஏசி பயணிகளும் தங்களது டிக்கெட்டின் நிலையை அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

மனைவிக்கு எம்பிபிஎஸ் அட்மிஷன் கிடைக்காததால் கோபத்தில் கெரோசின் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன்!

By RKV  |   Published on : 19th September 2017 01:27 PM  | 
hyderabad-woman-death


ஹைதராபாத்: நாகோல் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் ஞாயிறு அன்று மர்மமான முறையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது கணவரும், கணவரது குடும்பத்தாரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இறந்து போன இளம்பெண்ணின் பெயர் ஹாரிகா. அவருக்கும், கணவர் ருஷி குமாருக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
சம்பவ இடத்தில் ஹாரிகாவின் சடலத்தைப் பார்த்து விட்டு, இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை, ஹாரிகா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சந்தேகத்தை எழுப்பிய எல்.பி.நகர் உதவிக் கமிஷனர் வேனுகோபால ராவ், ஹாரிகாவை அவரது கணவரே கெரோசின் ஊற்றி எரித்துக் கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக ஏமாற்றுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பினார். ஏனெனில், மகள் இறந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஹாரிகாவின் அம்மாவும், அக்காவும் அவரது சந்தேகத்தை உறுதிப் படுத்தும் வகையில் சில தகவல்களைத் தெரிவித்தனர்.
ஹாரிகாவுக்கும், ருஷி குமாருக்கும் திருமணமாகி 2 வருடங்களான நிலையில், ருஷி குமார், தன் மனைவி ஹாரிகாவை, எம் பி பி எஸ் அட்மிஷன் பெற முடியாத காரணத்திற்காக தினமும் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார். இந்த ஆண்டு ஹாரிகாவுக்கு பி டி எஸ் படிக்க இடம் கிடைத்த போதும், அதில் திருப்தி அடையாத ருஷி குமார். எம் பி பி எஸ் அட்மிஷன் தான் கிடைக்கவில்லையே, அதனால் அதற்கு ஈடாக மேலும் வரதட்சிணையாவது பெற்றுத் தருமாறு ஹாரிகாவைத் தொடர்ந்து தொந்திரவு செய்து வந்துள்ளார். அதன் உச்சகட்டமாகத் தான், மகளை, அவளது கணவரே, கெரோசின் ஊற்றி எரித்துக் கொன்று விட்டு இப்போது தற்கொலை என்று நாடகமாடுகிறார். என் ஹாரிகாவின் தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ஞாயிறு அன்று ஹாரிகா இறந்த செய்தியை, ருஷி குமாரே தொலைபேசி வழியாக ஹாரிகாவின் தாயாருக்குத் தெரிவித்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறியதிலிருந்து தெரிய வருகிறது.
இந்நிலையில்... நடந்தது கொலை என்றாலும் கூட, ஹாரிகாவின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வெளிவந்த பிறகே; அவர் கொலை செய்யப்பட்டு கெரோசின் ஊற்றி எரிக்கப்பட்டாரா? அல்லது கெரோசின் ஊற்றி எரிக்கப்பட்டதால் தான் கொல்லப் பட்டாரா? என்ற சந்தேகம் தீரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சமூட்டும் சாலைப் பயணம்!


By சுப. உதயகுமாரன்  |   Published on : 20th September 2017 01:01 AM  |
udayakumar
Ads by Kiosked
கடந்த மாதத்தில் ஒருநாள் இரவு நேரத்தில் நானும் நண்பர்களும் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் பகுதியை நாங்கள் கடந்து சென்றபோது, போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருந்தது. 
மெதுவாக நகர்ந்து அந்த நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதிக்கு வந்தபோது, வேன் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது. சாலையின் நடுவில் உள்ளபகுதியில் ஆங்காங்கே மரணித்தவர்கள், அடிபட்டவர்களின் உடல்கள் கிடத்தப்பட்டிருந்தன.
கவிழ்ந்துகிடந்த வாகனத்திற்குள்ளேயிருந்து உடல்களையும், காயம்பட்டவர்களையும் வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்கள். இருள் கவ்விய அந்தப் பகுதியிலிருந்து எழுந்த மரண ஓலம், அழுகைக் குரல்கள், பீதி, பயங்கரம் - எதிர்கொள்ள முடியாத கொடூரமாக இருந்தது.
அந்தப் பகுதியில் போய்க்கொண்டிருந்த 'ஹைவே பட்ரோல்' வாகனம் ஒன்றை முந்திச்சென்று, வழிமறித்து நாங்கள் நிறுத்தினோம். 
'இந்தப் பகுதியில் ஒரு பெரும் விபத்து நடந்திருக்கிறது, உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டோம். அந்த அதிகாரிகள், 'தெரியும், ஆனால் அது எங்கள் ஆளுகைக்குட்பட்டப் பகுதியல்ல, அந்தப் பகுதிக்கு உரியவர்கள் வருவார்கள்' என்று மிகவும் சாதாரணமாக பதில் சொன்னார்கள்.
அடுத்த நாள் செய்தித்தாளில் அந்த விபத்து குறித்த செய்தி வெளியாகி இருந்தது. அந்த வேனில் பயணித்தவர்கள் அனைவரும் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த பக்தர்கள். 
ஏறத்தாழ 20 பேருடன் அந்த வேன் வந்து கொண்டிருந்ததாகவும், ராமநத்தம் பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காகச் சென்ற சரக்குப் பெட்டக லாரி ஒன்று அங்கு டீசல் இல்லாததால் பின்னோக்கி வந்ததாகவும், அதைக் கடந்து செல்ல முயன்ற வேன் எதிர்பாராதவிதமாக சரக்குப் பெட்டக லாரியின்மீது மோதியதாகவும், அதனால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி வேன் குப்புறக் கவிழ்ந்ததாகவும் அறிந்தோம்.
ஒரு நடுத்தர வயது தம்பதி நிகழ்விடத்திலேயே மரணமடைந்தனர். பலத்த காயமடைந்த பதினெட்டு பேர் பெரம்பலூர் மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே இரண்டு வயதுக் குழந்தை உட்பட மூன்று பேர் இறந்தனர். எஞ்சியுள்ள பதினைந்து பேரில் ஏழு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களின் தற்போதைய நிலைமை நமக்குத் தெரியாது. இவர்களுக்கு என்னென்ன காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன? அவை இவர்களின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் பாதிக்கப் போகின்றன? இவர்களின் வாழ்க்கைத் தரம் எப்படிப்பட்டதாக இருக்கும்? 
இவை போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரியாது. இவற்றையெல்லாம் அடிபட்டவர்களின் சொந்தப் பிரச்சினைகளாகவே நமது சமூகம் பார்க்கிறது.
நாகர்கோவில் - சென்னை சாலையில் ஒவ்வொருமுறை பயணம் செய்யும்போதும், இப்படிப்பட்ட விபத்துகளைத் தொடர்ந்து காண வேண்டியிருக்கிறது. இதுபோன்ற விபத்துகளுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை என்பது தெரிந்ததுதான். இருந்தாலும், இவற்றைக் குறைப்பதற்குக்கூட எவரும் முயற்சி செய்வதில்லை.
சாலைப் பாதுகாப்பு பிரச்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து (ஆர்.டி.ஓ.) தொடங்குகிறது. நாடு முழுக்க தலைவிரித்தாடும் லஞ்சமும், ஊழலும் நடுநாயகமாக வீற்றிருக்கும் அலுவலகங்களில் இது மிக முக்கியமான ஒன்று. சில அலுவலகங்களில் வாகனங்களை ஓட்டத் தெரியாமலே ஓட்டுநர் உரிமம் வாங்க முடியும் என்கிறார்கள். தகுதியில்லா வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் வாங்க முடியும் என்பது தெரிந்ததே.
இதனால் நம் நாட்டு ஓட்டுனர்களுக்கு நான்கு வழிச்சாலையில் வேகப் பாதை எது, மெதுவானப் பாதை எது என்கிற விபரமோ, வலது புறமிருக்கும் வேகப் பாதையில் நுழைந்து, முன்னே சென்று கொண்டிருக்கும் வாகனத்தைக் கடந்து, மீண்டும் இடதுபுறமிருக்கும் மெதுவானப் பாதைக்கு வந்துவிட வேண்டும் என்கிற அடிப்படை விதியோகூடத் தெரிவதில்லை.
இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும்கூட வேகப் பாதையில் பயணம் செய்வதைப் பார்க்கலாம். பல நேரங்களில் இரண்டு லாரிகள் இரண்டு பாதைகளையும் அடைத்துக்கொண்டு சாவகாசமாகச் செல்வதை நம் ஊர் சாலைகளில் மட்டும்தான் பார்க்க முடியும்.
ஒரு வாகனம் பழுதுபட்டுவிட்டால், அதை அங்கேயே அப்படியே நிறுத்துவது நம் நாட்டில் நடக்கும் இன்னொரு வினோதமான செயல். நெடுஞ்சாலையின் அருகேயிருக்கும் சேவை சாலைக்குள் (சர்வீஸ் ரோடு) நுழைவோம் என்றோ, அல்லது சாலையில் பாதுகாப்பாக இருக்கும் பகுதிக்குப் போவோம் என்றோ யாரும் நினைப்பதில்லை. 
வாகனத்தை நகர்த்த முடியாத அளவு பழுதுபட்டு நின்றுவிட்டால், உடனேயே உரிய அதிகாரிகளுக்கு, அல்லது சாலையோர பழுது நீக்கும் நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்து, வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் நிலையை நாம் உருவாக்கவில்லை. 
நமது சாலைகளில் நடக்கும் பல விபத்துகள் இரவில் நின்றுகொண்டிருக்கும் வாகனங்களின் மீது மற்றொரு வாகனம் மோதுவதாகவே அமைகின்றன. இந்த அவலத்தை யாருமே கண்டுகொள்ளவில்லையே, ஏன்?
நமது சாலைகளில் பயணம் செய்யும் கணிசமான வாகனங்களின் பின்புறம் பிரதிபலிப்பான்களோ (ரிஃப்ளக்டர்), நிறுத்த விளக்குகளோ (பிரேக் லைட்), குறிப்பிடு விளக்குகளோ (இன்டிகேட்டர்) இருப்பதே இல்லை. 
இந்த வாகனங்களுக்கு எப்படி தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன? இவற்றை வழங்குவது யார்? இவை போன்ற பல கேள்விகள் நம் மனத்தில் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வார்தான் யாருமில்லை.
வட்டாரப் போக்குவரத்து (ஆர்.டி.ஓ.) அலுவலகத்திலிருந்து துவங்கும் அவலம் நெடுஞ்சாலைகள் எங்கும் நிறைந்திருக்கும் சுங்கச் சாவடிகளில் தொடர்கிறது. நூறு ரூபாய் முதல் நூற்றைம்பது ரூபாய் வரை சுங்க வரி ஈட்டும் வட இந்திய நிறுவனங்கள் மேற்குறிப்பிட்டப் பிரச்னைகளைக் கையாள வேண்டாமா? 
ஒரு முறை போடப்பட்ட சாலைக்கு ஆண்டாண்டு காலமாக காசு பிரிக்கிறார்களே? இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சாலைகளை மேம்படுத்தும், பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை, பொறுப்பு இவர்களுக்கு இல்லையா? 
ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஊழியர்களாக வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் விதிமீறல்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளே அண்மையில் கண்டித்திருக்கிறார்கள்.
தமிழகச் சாலைகள் சமமற்றுஅலைபாய்ந்து கிடக்கின்றன. சாலையில் பயணம் செய்யும்போது, ஏதோ கடலில் படகு விடுவது போன்ற உணர்வே எழுகிறது. மழை நேரத்தில் அதிகமான தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பகுதிக்குள் தெரியாமல் நுழைந்தால் விபத்து நடப்பது உறுதி.
வளைந்து செல்லும் சாலைகளில் தெருவிளக்குகளை இவர்கள் அமைப்பதில்லை. 'வளைவான சாலை' என்கிற முன்னெச்சரிக்கை அறிவிப்பையும் எங்கேயும் பார்க்க முடிவதில்லை. வளைந்தும், நெளிந்தும் செல்லும் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் பிரதிபலிப்பான்கள்கூட இருப்பதில்லை.
எதிரே வரும் வாகனங்களின் விளக்கு வெளிச்சம் நமது கண்களில் படாமல் இருப்பதற்காக சாலையின் நடுவே செடிகள், மரங்கள் வளர்க்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் எதுவும் வளர்க்கப்படவில்லை. இதுவும் பல விபத்துக்களுக்கு காரணமாகிறது.
நெடுஞ்சாலைகளில் குறுக்கிடும் சந்திப்புக்களில் காவல்துறையினர் இரும்புத் தடுப்புக்களை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான தடுப்புக்களில் பிரதிபலிப்பான்கள் இருப்பதில்லை. 
வேகமாக வரும் வாகனங்கள், வெளியூர் ஓட்டுனர்கள் இந்த திடீர் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன்னரே பெரும் விபத்துக்கள் நடந்துவிடுகின்றன.
நெடுஞ்சாலைகளிலிருந்து சிறிய ஊர்களுக்குப் பிரிந்து செல்லும் பாதைகள் எளிதாகத் திரும்பும்படி இருப்பதில்லை. திடீரென வெட்டித்தான் திரும்ப வேண்டியிருக்கிறது. 
சாலைகள் எங்கும் அரசியல் கட்சிகளும், வியாபார நிறுவனங்களும் விளம்பரங்களை வைத்து வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகிறார்கள். சாலைகளில் மாடுகள் நடமாடுவது, படுத்துக்கிடப்பது போன்ற ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. 
பல சுங்கச் சாவடிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட செய்யப்படவில்லை. பணம் ஈட்டும் உரிமம் பெற்றவர்கள் இவை எதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. அவர்களுக்கு பணம், நமக்கு பயம் என்னும் நிலைதான் நீடித்துக் கொண்டிருக்கிறது.
தனியார்மயமாக்கப்பட்டுவிட்ட நெடுஞ்சாலைகள் பக்கம் அரசுத் துறைகள் மறந்தும் வருவதில்லை. நெடுஞ்சாலைகளில் எந்தப் பகுதியிலும் வேக வரம்பு (ஸ்பீடு லிமிட்) குறிப்பிடப்படவில்லை. வேக வரம்பை மீறுபவர்களை காவல்துறை கண்டுகொள்வதில்லை. குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களைப் பெரும்பாலும் பிடிப்பதில்லை.
மொத்தத்தில் நமது நெடுஞ்சாலைகள் திறந்தவெளி மரணக்கிடங்குகளாக காட்சியளிக்கின்றன. வலுத்தவர்கள் பணம் பண்ணுகிறார்கள், இளைத்தவர்கள் இறந்து போகிறார்கள் எனும் நிலை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
தமிழக அரசியல் கட்சிகள் மேற்கூறிய ஏற்பாடுகளை செய்வதற்கு அழுத்தம்கொடுக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் சுங்கச் சாவடி உரிமம் எடுத்திருக்கும் நிறுவனங்களை கேள்வி கேட்டாக வேண்டும்; இவர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்தாக வேண்டும்.
அவை மட்டும் போதாது, விபத்துகள் நடக்கும்போது அந்த வாகன ஓட்டுநருக்கு உரிமமும், அந்த வாகனத்திற்குத் தகுதிச் சான்றிதழும் கொடுத்த அதிகாரியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும். 
சாலைப் போக்குவரத்துத் துறையில் தலைவிரித்தாடும் லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும். ஒவ்வோர் உயிரும் விலைமதிக்க முடியாதது 
என்பதை அரசும் அதிகாரிகளும் உணர வேண்டும்.

Supreme Court setback for INC

The Indian Nursing Council (INC) has again been restrained from publishing the list of nursing institutes recognised by it as the Supreme Court has set aside an interim order passed by the High Court of Karnataka’s Division Bench, which on August 21 permitted the INC to publish the list of recognised institutes on the council’s website.
A Bench of Justice Rohinton Fali Nariman and Justice Sanjay Kishan Kaul passed the order on September 11, while allowing an appeal filed by the Karnataka State Association of the Management of Nursing and Allied Health Science Institutions and others.
The HC Division Bench had passed the interim order by partly staying a portion of the July 24, 2017 verdict of a single judge, who declared that the Indian Nursing Council has no authority to grant recognition to institutions imparting nursing courses.
The single judgement had also restrained the INC from publishing on its website any material indicating that the institutions imparting nursing courses have to obtain recognition from the council, and had held all such materials from which it could infer recognition was to be obtained from the INC stand withdrawn from its website forthwith.
Some individual nursing institutes and the INC had filed an appeal before the Division Bench against the single judge order. The Division Bench, though permitted the INC to publish list of recognised institutes, had refused to stay the declaration made by the single judge that INC has no authority to grant recognition to institutions imparting nursing courses.
The Supreme Court has said that two parts of the single judge’s order — declaring INC has no authority to grant recognition, and restraining INC from publishing list of recognised institutes and claiming that recognition from it is compulsory — are inextricably inter-connected. Hence, the apex court set aside the August 22 interim order and restored the single judge’s order.
Now, the appeals filed by some nursing colleges and INC will have to be heard on merits before the High Court’s Division Bench.

SC setback for Indian Nursing Council

The Indian Nursing Council has again been restrained from publishing the list of nursing institutes recognised by it as the Supreme Court has set aside an interim order passed by the High Court’s Division Bench.

City doctor hurt in acid attack

Special teams formed to nab culprits

A doctor working in a corporate hospital suffered burns in an acid attack late on Tuesday night.
Dr. Balaji Bushan Patnaik, a paediatrician, was returning home after duty in his car when a bike hit his vehicle from behind. When he got down from the car to find out whether there was any damage to the vehicle, one of the three youths riding the motorcycle allegedly threw acid on his face. The youths immediately sped away after the incident.
He was admitted to a corporate hospital where he is undergoing treatment. The 35-year-old doctor is a native of Cuttack. Senior police officials were shaken as this is the first such incident in the recent past. Meanwhile, the police formed teams to check all exit routes in the city to nab the culprits.
DCP-rank officers are going through the CCTV footages for clues. Investigation is on.

Nod for construction of Karur medical college

Land formally handed over to DME by municipality



With the Supreme Court clearing the decks for construction of Karur Medical College, the municipality, which owns 17.49 acre at Sanapiratti, formally handed over the land to the Directorate of Medical Education (DME).
The land was handed over on Tuesday soon after receipt of the Supreme Court order that dismissed the appeal against construction of the medical college at Sanapiratti instead of Kuppuchipalayam.
The Sanapirati site was measured by surveyors in the presence of Collector K. Govindaraj and senior officials of Local Administration and Revenue departments and the DME, among others. The documents pertaining to transfer of the site from Karur Municipality to DME were also exchanged. In order to identify the boundary, stones were laid along the site.
Speaking to The Hindu , S. Revathi, Dean, Karur Medical College, said the Sanapirati site had been officially brought under the control of the DME. The construction would gain momentum as all hurdles had been cleared. The site would be handed over to the Public Works Department for carrying out the construction works.
Dr. Revathi said there was a need to alter the original site plan prepared in March 2016. It was prepared by taking into account the availability of 30.27 acre at Sanapiratti. However, the DME had taken control of only 17.49 acre.
The take over of the remaining land had been deferred for the time being as the proposed plan of setting up a park at the site was in the court. Hence, a new plan had to be prepared.
She said the Chief Architect of the Public Works Department had been asked to revise the plan. There was probability for construction of six storied buildings, as it would reduce the cost estimate to an extent.
The revised plan would be received within a week, she added.

HC grants relief to medical students

Stays directive issued by MCI to discharge those admitted to PIMS in violation of admission norms

The Madras High Court has stayed the operation of proceedings issued by the Medical Council of India on September 7 and consequential action initiated by the Health Secretary in Puducherry to discharge students who had been admitted to Pondicherry Institute of Medical Sciences in the academic year 2016-17 in violation of the admission norms.
Justice B. Ravichandra Baabu granted the interim stay on writ petitions filed by a batch of 91 affected students. The judge ordered that the interim order would be in operation till October 23 and directed the MCI as well as the Government of Puducherry to file their counter affidavits by then. The petitioners were also ordered to file their rejoinder, if any. “Discharging these students from their course is undoubtedly a major penal action having drastic consequences on their academics. Certainly, such drastic action cannot be taken without following the principles of natural justice. Needless to say that having allowed the students to continue in their cases for one year... it would certainly cause prejudice in the event of their success in these writ petitions later. “On the other hand, if these students are permitted to continue the course by grant of an interim order and later, if they fail to succeed in these writ petitions, certainly, they have to leave the college without seeking for any equity,” the judge observed.
துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் துவக்கம்

பதிவு செய்த நாள்19செப்
2017
21:33

சென்னை: துணை மருத்துவப் படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 18 இடங்கள் நிரம்பின. இன்று, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று துவங்கியது. இந்த படிப்புகளுக்கு, 16 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 538 இடங்களும், 159 தனியார் கல்லுாரிகளில், 5,726 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. முதல் நாளான நேற்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் பிரிவில், மூன்று; மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 15 என, 18 இடங்கள் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மீதமுள்ள எட்டு இடங்கள், பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. பொது பிரிவிற்கான கவுன்சிலிங், இன்று துவங்கி, அக்., 7 வரை நடைபெறுகிறது.
பாலியல் வழக்கு: ஆசிரியருக்கு 55 'ஆண்டு'

பதிவு செய்த நாள்19செப்
2017
22:13

மதுரை: மதுரை மாவட்டம், பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவ - மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமிக்கு, 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பொதும்பு உயர்நிலை பள்ளியில், 2011ல், தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி, 56. இவர், 51 மாணவியர், 14 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 2011 மார்ச், 13ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆரோக்கியசாமி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்கு, மதுரை வன்கொடுமை தடுப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று அளித்த தீர்ப்பு:

ஆரோக்கியசாமிக்கு, ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், 25 ஆண்டுகள், மானபங்கப்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்துதல் பிரிவில், 30 ஆண்டுகள் சிறை தண்டனை, 12 லட்சத்து, 32 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட மாணவியருக்கு வழங்க வேண்டும். சிறை தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.
குடும்ப தலைவராக, 'தேசியக் கொடி' : தொடரும், 'ஸ்மார்ட் கார்டு' குழப்பம்

பதிவு செய்த நாள்19செப்
2017
21:27



பழநி: பழநி, ஆயக்குடியைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்ட, 'ஸ்மார்ட் கார்டில்' குடும்பத் தலைவர் படத்திற்கு பதில், தேசியக் கொடி இடம் பெற்றுள்ளது. தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில், ரேஷன் கார்டுகளுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிறது. 

இந்த கார்டுகளில், குடும்ப தலைவர் படத்திற்கு பதில், விநாயகர், சினிமா நடிகையின் படங்கள் இடம் பெற்றதால், சர்ச்சை கிளம்பியது. அந்த வரிசையில் தற்போது, தேசியக்கொடி படமும் வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே, புதுஆயக்குடி ஓபுளாபுரத்தைச் சேர்ந்தவர், தயா சுல்தான் காதர்சா ராவுத்தர், 53, இவருக்கு நேற்று முன்தினம், ஸ்மார்ட் கார்டு வந்தது. 

அதில், குடும்பத் தலைவர் படம் இருக்க வேண்டிய இடத்தில், தேசியக்கொடி இடம் பெற்றிருந்தது.

தயா சுல்தான் கூறியதாவது: இது, அதிகாரிகள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் களின் அலட்சியத்தையே காட்டுகிறது. நம் தேசிய கொடியை அவமதிப்பு செய்வது போலவும் உள்ளது. 

அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இ----சேவை மையத்தில், 30 ரூபாய் கட்டி, திருத்தம் செய்து கொள்ளலாம்' என்கின்றனர். என் பெயரையும், 'தயால் சுல்தான்' எனவும், மகள், 'பெனாசிர் சுரேகாபானு' என்பதை, 'பெனாசிர் பேகம்' எனவும் தவறாக பதிவு செய்துள்ளனர். 

ஸ்மார்ட் ரேஷன் கார்டு களை பிழையில்லாமல் வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
வரதட்சணையாக டாக்டர், 'சீட்' கேட்டு மனைவியை கொன்ற கணவன் கைது
திவு செய்த நாள்19செப்
2017
20:11

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், வரதட்சணையாக, மருத்துவ படிப்புக்கான, எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைக்காததால், ஆத்திரமடைந்து மனைவியை எரித்துக் கொன்ற கணவன், கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஐதராபாத் நகரில் வசித்து வந்தவர், ஹரிகா, 25; இவரது கணவர் ருஷி குமார். இருவருக்கும் இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.சமீபகாலமாக, வரதட்சணை கேட்டு, மனைவியை, ருஷி குமார் துன்புறுத்தி வந்துள்ளார். 

வரதட்சணையாக, எம்.பி.பி.எஸ்., சீட் பெற வேண்டும் என, நிர்ப்பந்தித்துள்ளார்; ஹரிகாவின் பெற்றோர், இந்த ஆண்டு, தங்கள் மகளுக்கு, தனியார் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சீட்டுக்கு பதில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில் இடம் பெற்று தந்துள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த ருஷி குமார், மனைவி ஹரிகாவின் பெற்றோருடன், தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், மர்மமான முறையில், உடல் எரிந்த நிலையில், ஹரிகாவின் சடலம் மீட்கப்பட்டது.எம்.பி.பி.எஸ்., இடம் கிடைக்காத வேதனையில் மனைவி ஹரிகா, தற்கொலை செய்ததாக, ருஷி குமார் தெரிவித்தார். ஹரிகாவை, ருஷி குமார் எரித்துக் கொன்று விட்டதாக, அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ருஷி குமாரை, போலீசார் கைது செய்தனர்.
மகாளய அமாவாசை தர்ப்பணம் : ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்19செப்
2017
22:08




ராமேஸ்வரம்: புரட்டாசி மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் ஆடி, தை அமாவாசை அன்று, முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி, திதி பூஜை செய்து, பக்தர்கள் புனித நீராடுவர். 

இந்த அமாவாசையில் திதி செய்ய முடியாதவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை வரும், புரட்டாசி மகாளய அமாவாசையில், திதி செய்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நேற்று மகாளய அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் திதி செய்து, கடலில் புனித நீராடினர். பின், சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு திதியில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் : திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், நேற்று அதிகாலை முதல், 1,000த்துக்கும் மேற்பட்டோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, காவிரியில் புனித நீராடினர். சமயபுரத்தில் உள்ள மாரியம்மனுக்கு, நேற்று, 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தங்களில் பக்தர்கள் நீராடி, அம்மனை வழிபட்டனர்.

கன்னியாகுமரி : முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், நேற்று அதிகாலையே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் திருவேணி கடற்கரையில், வேதவிற்பன்னர்கள் மூலம் பலி கர்மம் நடத்தி, கடலில் நீராடினர்.



அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு
பதிவு செய்த நாள்19செப்
2017
20:54

சென்னை: 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த, 2004 டிச., 1ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அரசு பணியாளர்கள் அனைவரும், அலுவலக நேரத்தில், அவர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, தவறாமல் அணிய வேண்டும் என, 2013ல் அறிவுறுத்தப்பட்டது. எனினும், அரசு பணியாளர்கள், அலுவலக நேரங்களில், அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. எனவே, அரசு ஊழியர்கள் அனைவரும், அரசாணையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். துறையின் செயலர்கள், கலெக்டர்கள், இது தொடர்பாக தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதே போல, ஆசிரியர்களும், பள்ளிகளில் அடையாள அட்டை அணிந்து பணிபுரியும்படி, கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
சிறைகளில் கைதிகளுக்கு ஞாயிறுதோறும் நடைபயிற்சி

பதிவு செய்த நாள்19செப்
2017
20:05

தமிழக சிறைகளில், ஞாயிற்றுக் கிழமைதோறும், விசாரணை கைதி களுக்கு நடைபயிற்சி வழங்க, சிறைத் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, ஒன்பது மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், கிளை சிறைகளில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர், போதிய உடற்பயிற்சி இல்லாததால், நோயின் பிடியில் சிக்கி, இறப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. கைதிகள் நலனை பேணும் வகையில், தற்போது, கைதிகளுக்கு நடை பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஒன்பது மத்திய சிறையில் உள்ள, விசாரணை கைதிகளுக்கு பயிற்சிகள் துவங்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை, 7:00 முதல், 8:00 மணி வரை நடைபயிற்சி, மெது ஓட்டம் ஆகியன வழங்கப்படுகின்றன. பயிற்சியின் போது, கைதிகளுடன், வார்டன்கள், ஜெயிலர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வர்.

சிறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் உட்பட, ஒன்பது மத்திய சிறைகளில், முதல் கட்டமாக துவங்கும் பயிற்சிகள், பின் அனைத்து சிறைகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில், விசாரணை கைதிகளுக்கு ஞாயிற்றுக் கிழமையும், தண்டனை கைதிகளுக்கு, வேறொரு நாளிலும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
ஓய்வூதியர்களுக்கு மொபைல் ஆப்: மத்திய அரசு புதுமை
பதிவு செய்த நாள்19செப்
2017
22:48




புதுடில்லி:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், தங்கள் ஓய்வு கால பலன்கள் குறித்து அறியும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்' இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் குறித்து அறிவதில், சிரமம் இருந்தது. இந்த குறைகளை போக்கும் வகையில், ஓய்வூதிய பலன்கள் குறித்து, இணையதளத்திலேயே அறியும் வசதி, சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள் மற்றும் ஏற்கனவே ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் ஓய்வு கால பலன்களை, 'மொபைல் ஆப்' மூலம் அறியும் வசதி, இன்று முதல் துவங்கப்பட உள்ளது.மத்திய அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த, 'மொபைல் ஆப்' இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது; இதை, மத்திய இணையமைச்சர், ஜிதேந்திர சிங் இன்று துவக்கி வைக்கிறார்.

'ஓய்வூதியம் குறித்த தகவல்களுடன், அது குறித்த தங்கள் விண்ணப்பங்கள், கோப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும், இதில் அறியலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2ஜி வழக்கில் தீர்ப்பு எப்போது? இன்று கோர்ட் அறிவிப்பு

பதிவு செய்த நாள்20செப்
2017
06:41




புதுடில்லி: 2ஜி ஸ்பெக்டரம் வழக்கின் தீர்ப்பு தேதியை டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் இன்று(செப்.,20) அறிவிக்க உள்ளது.

2ஜி ஊழல்

காங்., தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது.

குற்றச்சாட்டு

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை தொடர்ந்த ஒரு வழக்கையும், நீதிபதி, ஓ.பி.ஷைனி தலைமையிலான, டில்லி, சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளில், ஒன்றில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா,அந்த கட்சியைச் சேர்ந்த எம்.பி., கனிமொழி, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

குற்றப்பத்திரிகை

மேலும், ராஜாவின் முன்னாள் தனிச்செயலர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யுனிடெக் கட்டுமான நிறுவன தலைவர் சஞ்சய் சந்திரா, அனில் அம்பானி தலைமையிலான, ஆர்.ஏ.டி.ஏ.ஜி., நிறுவனத்தின் மூன்று மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிராக, 2011ல், சி.பி.ஐ., முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

தீர்ப்பு

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று(செப்.,20) தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
தேசிய செய்திகள்

அரசு இலவச புடவைகளை சண்டை போட்டு வாங்கிய பெண்கள்! தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது என கோபம்


அரசு வழங்கிய இலவச புடவைகளை பெண்கள் சண்டை போட்டு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 18, 2017, 09:49 PM
ஐதராபாத்,

தெலுங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக அரசு தரப்பில் சூரத் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலே புடவைகள் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் அரசு இலவச வேட்டி - புடவை வழங்குவது போன்று தெலுங்கானாவிலும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் புடவைகளை வழங்கினர். சில பகுதிகளில் பெரும் சண்டை வெடித்தது.

தெலுங்கானாவில் பெண்களுக்கு வழங்குவதற்கு என்று 500 வகையான புடவைகள் கொண்டுவரப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

சில இடங்களில் புடவைகளை வாங்க வரிசையில் நின்ற பெண்கள் ஆக்ரோஷமாக சண்டை போட்ட காட்சியும் உள்ளூர் மீடியாக்களில் ஒளிபரப்பானது. பெண்கள் மொத்தமாக முடியை பிடித்து இழுப்பதும், அடித்துக் கொள்வதுமாக காணப்பட்டது. ஐதராபாத்தில் அரசின் திட்டம் கடைசியில் பெரும் அடிதடியில் முடிந்தது. போலீசார் பெரும் பாடுபட்டு அவர்களுடைய சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் பெண்கள் குழுவாக அரசு வழங்கிய புடவைகளை எரிக்கும் வீடியோவும் வெளியாகிஉள்ளது.

புடவைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது எனவும் அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. முதல் மந்திரி சந்திரசேகர ராவை விமர்சனம் செய்யும் விதமாகவும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

இதுபோன்ற புடவையை கட்டிக்கொண்டு சந்திரசேகர ராவின் மகள் கவிதா தசரா விழாவில் நடனம் ஆடுவாரா? என கேள்வியும் எழுப்பி உள்ளார்கள் இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சந்திரசேகர ராவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர். மக்களின் வரிப்பணம் தான் தேவையில்லாமல் செலவு செய்யப்பட்டு உள்ளது என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. புடவைகளை சாலையில் வைத்து எரிக்கும் சம்பவமும் அரங்கேறிஉள்ளது. இச்சம்பவங்கள் ஆளும் கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும் விவசாய பெண்களுக்கு வழங்க திட்டம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு மோசமான புடவையை கொடுத்து எங்களை அவமதிக்கிறார்கள் என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பெண் ஒருவர் பேசுகையில், இன்றைய வேலையை விட்டுவிட்டு வந்தோம். எங்களுக்கு ரூ. 400 நஷ்டம். நாங்கள் கடைக்கு சென்றுயிருந்தால் கூட நல்ல புடவையை எடுத்து இருப்போம். இவ்வளவு நேரம் வரிசையில் இன்று மோசமான புடவையை கொடுத்து உள்ளனர். மிகவும் மோசமான புடவைகள். ரூ. 50க்கு கூட புடவைகள் தேறாது. தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது. எங்களை அவமதிப்பதற்கு பதிலாக இந்த திட்டத்தை செயல்படுத்தாமலே இருந்து இருக்கலாம், என கோபமாக கூறிஉள்ளார்.
தேசிய செய்திகள்

நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீதும் உள்ளூர் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகின்றன



நீக்கப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் மீதும் உள்ளூர் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

செப்டம்பர் 19, 2017, 11:12 AM
பெங்களூரு,

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் கர்நாடக மாநிலம் குடகு மலையில் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.

இந்த 18 பேரில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பழனியப்பன் காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை வழக்கில் போலீஸ் தேடுவதால் விடுதியில் இருந்து வெளியேறி தலைமறைவாக உள்ளார்.

அவரை பிடிக்க நாமக்கல் சி.பி. சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் கர்நாடக மாநிலத்தில் முகாமிட்டு உள்ளனர். இன்று காலை வரை அவரை கைது செய்ய முடியவில்லை. அவரது உதவியாளர் மற்றும் உறவினர்கள் செல்போன் எண்ணில் பழனியப்பன் பேசுவார் என்று நினைத்து அவர்களது செல்போன் எண்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பணம் மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இதனால் அவரும் குடகு விடுதியை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டு தலைமறைவாக உள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் குடகு மலையில் முகாம் இட்டுள்ளனர்.

ஏற்கனவே தலை காவிரிக்கு புனித நீராட தங்க தமிழ்செல்வன் தலைமையில் சென்றவர்களை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். அதில் செந்தில் பாலாஜி இல்லை. இதைத்தொடர்ந்து போலீசார் தினகரன் ஆதரவாளர்களை அங்கிருந்து செல்ல அனு மதித்தனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ. 4 கோடியே 25 லட்சம் வாங்கி செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக போலீசில் புகார் கூறப்பட்டது.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை தேடி வருகிறார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் குடகுமலையிலும், இன்னொரு பிரிவினர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரிலும் முகாமிட்டுள்ளனர்.

இது தவிர தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் மீதும் அந்தந்த உள்ளூர் போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிகின்றன. வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகவும், அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாகவும் புகார்கள் வந்துள்ளன. இது தவிர சில போலீஸ் நிலையங்களில் அ.தி.மு.க.வினரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்கள் குவிகின்றன.

தற்போது குடகு விடுதியில் இருந்து செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த விடுதியில் 10 பேர் மட்டுமே தங்கி இருப்பதாக தெரிகிறது.
தேசிய செய்திகள்

மொபைல் போன்களுக்கான அழைப்பு கட்டணம் குறைப்பு:டிராய் அறிவிப்பு


மொபைல் போன்களுக்கான அழைப்பு கட்டணத்தை டிராய் குறைத்துள்ளது.
செப்டம்பர் 19, 2017, 09:21 PM

புதுடெல்லி,

இந்தியா முழுக்க ஒவ்வொரு வட்டாரங்களில் உள்ள குறிப்பிட்ட நெட்வொர்க்களை பயன்படுத்திக் கொள்ள மற்ற டெலிகாம் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி வருகின்றன. இண்டர்கனெக்ட் கட்டணம் என அழைக்கப்படும் இந்த தொகை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் வாய்ஸ் கால்களுக்கான கட்டணத்தில் வாடிக்கையாளர்களுடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மொபைல் போன்களுக்கான அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை டிராய் குறைத்துள்ளது. மொபைல் அழைப்பிற்கான கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் வரும் 2020-ம் ஆண்டு முதல் அழைப்பு துண்டிப்பிற்கு கட்டணம் இல்லை என டிராய் அறிவித்துள்ளது.
தேசிய செய்திகள்

திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள, வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

செப்டம்பர் 20, 2017, 04:00 AM

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள, வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதனால், 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை, அதாவது தெலுங்கு யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கிய திருவிழாக்களை முன்னிட்டு, முன்கூட்டியே வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடப்பது வழக்கம்.

இந்தநிலையில் 23-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. அதையொட்டி ஏழுமலையான் கோவிலில் நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. காலை 6 மணியளவில் பிரதான நுழைவு வாயில் கதவு சாத்தப்பட்டது. கோவிலை சுத்தம் செய்யும் முன்பே, மூலவர் வெங்கடாஜலபதி மீது அசுத்த தண்ணீர் படாமல் இருப்பதற்காக, அவர் மீது விலை உயர்ந்த பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு, மூலவர் சன்னதியில் இருந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்துச் சன்னதிகள், தரை தளம், மேற்கூரை, சுவர்கள், தூண்கள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல், கோவிலுக்கு வெளியே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் தூண்கள், சுவர்கள், மாடங்கள் ஆகியவற்றின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம் மற்றும் சுகந்த திரவியம் ஆகியவை பூசப்பட்டது.

இதையடுத்து மூலவர் மீது போர்த்தப்பட்ட பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு, பகல் 11 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை அர்ச்சகர்கள் மூலவருக்கு சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் செய்து, தீபாராதனை காண்பித்தனர். நண்பகல் 12 மணிக்குமேல் பிரதான நுழைவு வாயில் கதவு திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், கோவிலில் நேற்று காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை 6 மணிநேர தரிசனமும், அஷ்டதல பாத பத்மாராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டது.
மாநில செய்திகள்

புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் 778 பேர் நீக்கத்துக்கு இடைக்கால தடை சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் 778 பேர் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 20, 2017, 03:15 AM
சென்னை,

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியிலும், நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2016-2017-ம் கல்வி ஆண்டில் 778 மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு புறம்பாக சேர்க்கப்பட்டதாக கூறி அந்த மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கி புதுச்சேரி அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவ மாணவர்களான திவ்யா, விவேக், விக்னேஷ் உள்பட 108 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரையை ஏற்று புதுச்சேரி அரசு எங்களை கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு பின்பு திடீரென்று எங்களை கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருப்பதால் எங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து விட்டு எங்களை மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 778 மருத்துவ மாணவர்களையும் நீக்கி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம்(அக்டோபர்) 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மாவட்ட செய்திகள்

போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு



போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

செப்டம்பர் 20, 2017, 04:30 AM
ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை ஊராட்சி பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15.4.2010 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, டேனிஸ்பேட்டையில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றார்.

அப்போது சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என சந்தேகம் அடைந்த பழனிசாமி, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் சோதனை நடத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அங்கு மருத்துவம் பார்த்து வந்த காடையாம்பட்டி கோட்டேரி கரை பகுதியைச் சேர்ந்த முருகேசன்(வயது 47) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டர் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஓமலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு ரமேஷ் தீர்ப்பு கூறினார்.
தலையங்கம்  அவிழ்க்க சிரமப்படும் சட்டசிக்கல்


தமிழ்நாட்டில் 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன், தி.மு.க.வில் யார் முதல்–அமைச்சராக வருவது குறித்து தொடக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை.

செப்டம்பர் 20 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன், தி.மு.க.வில் யார் முதல்–அமைச்சராக வருவது குறித்து தொடக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை. ஒன்றாகவே செயல்பட்டனர். 1972–ல்தான் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க. என்ற தனிக்கட்சியை உருவாக்கினார். 1987–ல் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன், ஜா–அணி, ஜெ–அணி என்று பிளவு ஏற்பட்டாலும், சிறிது காலத்தில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து ஜெயலலிதா தலைமையில் கட்சி வலுவுடன் செயல்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன், முதலில் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று உருவெடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பு நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அப்போது, அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி.தினகரன் அணி என மூன்று அணிகளாக பிளவுப்பட்டிருந்தது. அதன்பிறகு ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தது. டி.டி.வி.தினகரன் அணி தனியாகவே இருந்தது.

தினகரன் ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏ.க்கள், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சராக செயல்பட ஆதரவு அளிக்கவில்லை என்று கடிதம் கொடுத்தனர். இந்த 19 பேரில், ஒருவரான ஜக்கையன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்து, தான் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக சபாநாயகருக்கும், கவர்னருக்கும் தெரிவித்துவிட்டார். ‘கவர்னரிடம் போய் இவ்வாறு கடிதம் கொடுத்தது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாங்களாகவே முன்வந்து வெளிவந்ததாக கருதப்படுகிறது’ என்ற அடிப்படையில், இந்திய அரசியல் சட்டம் 10–வது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மை ஆக்குதல்) விதியின்கீழ் மீதமுள்ள 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை தகுதியிழக்க செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இப்போது சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடமுடியும் என்றநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது சட்டப்படி செல்லுமா? என்பதில்தான் கடுமையான சட்டசிக்கல் ஏற்பட்டுவிட்டது.

எதிர்கட்சிகள் எல்லாம், இது ஜனநாயக படுகொலை என்று கூறுகிறார்கள். அரசியல் சட்டத்தில் 102, (2) (ஏ) பிரிவின்கீழ் ஒருவர் அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே தகுதி இழக்கும் நிலையை அடைகிறார் என்றும், 102(2) (பி)–ன் கீழ் தன்கட்சி பிறப்பித்த கட்டளையை மீறி சட்டமன்றத்தில் ஓட்டுப்போட்டாலோ, ஓட்டுப்போடாமல் இருக்கும் வகையில் அவைக்கு வராமல் இருந்தாலோ தன்பதவியை இழக்கும்நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், உத்தரகாண்டில் இதேபோல் 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்–மந்திரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி கவர்னரை சந்தித்ததையொட்டி அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுத்தது சரியே என்று உறுதிசெய்தது. ஆனால், உத்தரகாண்டில் இந்த 9 எம்.எல்.ஏ.க்களும், 27 எதிர்கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து கவர்னரை சந்தித்தனர். இதனால் அதுவும், இதுவும் ஒன்றாக வராது என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில், தகுதிநீக்கம் செல்லுமா?, செல்லாதா? என்பது இனி நீதிமன்றங்களின் தீர்ப்புகளில்தான் இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக இன்றுவரும் வழக்கில் நிச்சயமாக ஒரு பதில் கிடைக்கும் என்றாலும், இந்தப்பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை இழுத்துக்கொண்டேதான் போகும். இந்த சிக்கலுக்கான முடிவை நீதிமன்றங்கள்தான் தரும்.
எம்.எல்.ஏ.,க்கள்,தகுதி நீக்கத்திற்கு,எதிரான,வழக்கு,விசாரணை, இன்று

சென்னை:கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ௧௮ பேரை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள், இன்று நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வருகின்றன.



இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம், என்ன தீர்ப்பு கூறுமோ என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னரை சந்தித்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,19 பேர், கடிதங்கள் அளித்தனர். இதையடுத்து, அரசு கொறடா அளித்த புகாரில், 19 எம்.எல்.ஏ.,க்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார்; நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்; பின், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். அதே நேரத்தில், சபாநாயகர் முன், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், வழக்கறிஞர், என்.ராஜா செந்துார் பாண்டியன் ஆஜராகி, சில ஆவணங்களை கோரினர்.

மனு தாக்கல்

இந்நிலையில், பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் உத்தர விடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.இம் மனுவை,நீதிபதி எம்.துரைசாமி விசாரித்தார். விசாரணையின் போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், 'நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் விதத்தில், தகுதி நீக்கம் செய்யக் கூடும்; எனவே, அதுகுறித்து நாங்கள் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டும்' என்றார்.

இவ்வழக்கு விசாரணையை, ௨௦ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி துரைசாமி, 'அதுவரை, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது' என, உத்தரவிட்டார். ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவும், வெற்றிவேல் மனுவும், நீதிபதி துரைசாமி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளன.

இதற்கிடையில், 18 எம்.எல்.ஏ.,க்களையும்
தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தர விட்டுள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18

எம்.எல்.ஏ.,க்களும் மனு தாக்கல் செய்கின்றனர். நேற்று மாலை வரை, வெற்றிவேல் உள்ளிட்ட எட்டு, எம்.எல்.ஏ.,க்கள், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

உத்தரவு செல்லாது

மனுக்களில், 'எங்களுக்கு பதில் அளிக்க, உரிய சந்தர்ப்பம் தரப்படவில்லை; கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வில்லை. சபாநாயகரின் உத்தரவு செல்லாது. 'விசாரணை முடியும் வரை, சபாநாயகரின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிபதி எம்.துரைசாமி முன், வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி, ''எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்படும் மனுக்களை, அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என்றார். அதற்கு, நீதிபதி துரைசாமி, ''வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில், நாளை விசாரணைக்கு எடுக்கிறேன்,'' என்றார்.

சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜர் ஆகின்றனர். எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்புக்கு முழுமையான தடை விதிக்கப்படுமா; நிபந்தனைகளுடன் கூடிய தடை இருக்குமா அல்லது எதிர் தரப்பில் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்பப்படுமா என்பது, இன்று தெரிய வரும்.


2க்கு மேல் பெற்றால் வேலையில்லை :சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
கவுஹாத்தி: 'இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு, அரசு வேலை, சலுகை கிடையாது' என்ற புதிய சட்டத்திற்கு, அசாம் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.





அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2001ல், மாநிலத்தில், 2.66 கோடியாக

இருந்த மக்கள் தொகை, 2011ல், 3.12 கோடியாக உயர்ந்தது. பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு அரசு பணி, சலுகைகளை பெறுவதில் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கான புதிய சட்டம், மாநில சட்டசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த, சட்டசபைகூட்டத்தில், நீண்ட விவாதத்திற்கு பின், புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளோர், அரசு பணி, சலுகைகளை பெற முடியாது.

பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற, எம்.எல்.ஏ.,க்களின் பதவியை ரத்து செய்யவும், எதிர்காலத்தில், இவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் அனுமதி கோரும் மசோதா, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

NEWS TODAY 30.12.2025