Monday, November 10, 2014

Aadhaar Number to be included in the Service Book of the Central Government Employees – DOPT Order


SETC bus timings at CMBT (Chennai Moffusil Bus Terminus)





The Tamil Hindu.....நீங்க பண்றது ரொமான்ஸா, ப்ரொமான்ஸா?



“எனக்கு உள்ள கடமைகளை எல்லாம் என் காதலியிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பட்டியலிட்டேன். “Don’t make an ass of yourself’’ என்று கூறினாள். நான் மிகவும் பாரம் சுமப்பதால் அப்படிச் சொன்னாளா?’’ என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.

மன்னிக்கவும் வாசகரே. “Don’t make an ass of yourself’’ என்றால் “பிறர் சிரிக்கும்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே’’ என்றுதான் அர்த்தம்.

மிரளாதீர்கள்

விலங்குகளுக்கு நம் பேச்சு மொழியில் தனி இடம் உண்டு. சிவ பூஜையில் கரடி, பசுத்தோல் போர்த்திய புலி, தரையில் விழுந்த மீன் இப்படிப் பல உதாரணங்கள்.

ஆங்கிலத்திலும் அப்படித்தான்.

கழுதைதான் என்றில்லை வேறு பல விலங்கினங்களும் சில சமயம் நேரடி அர்த்தத்திலும் சில சமயம் வித்தியாசமான அர்த்தத்திலும் ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படுகின்றன.

சிலவற்றைப் படித்தவுடனேயே அவற்றின் பொருளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

Kill two birds with one stone என்றால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

Birds of a feather flock together என்றால்? ‘Birds of a feather’ என்றால் ஒரே தன்மை கொண்டவர்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள் என்பதுதான் அந்த வாக்கியத்தின் பொருள். “Like a red flag to a bull’’ என்றால் மிரள வைப்பது என்று அர்த்தம். “Social butterfly’’ என்றால் நிறைய நண்பர்கள் கொண்ட ஒருவரைக் குறிக்கும்.

ஆனால் வேறு சிலவற்றுக்கு அர்த்தம் கொஞ்சம் வித்தியாசமானவை.

உள்ளுணர்வு - எலி

“Chicken feed’’ என்றால் மிகக் குறைவான அல்லது மிக அற்பமான என்று பொருள். This amount is chicken feed for me.

“Dog in the manger’’ (மேனேஜர் என்று படித்து விடாதீர்கள்) நம் ஊரில் ‘வைக்கோல்போர் நாய்’ என்பார்களே அதேதான். நாய் தானும் வைக்கோலைத் தின்னாது. வைக்கோலைத் தின்ன வரும் பசுவையும் தின்னவிடாமல் குரைக்கும். இதுபோன்ற குணம் உள்ளவர்களை மேலே குறிப்பிட்டதுபோல அழைப்பார்கள்.

“I smell a rat’’ என்றால் “something fishy’’ என்று அர்த்தம். அதாவது எல்லாமே நன்றாக நடப்பதுபோலத் தோன்றினாலும், தவறான ஏதோ ஒரு விஷயம் நடப்பதாக நீங்கள் யூகித்தாலோ அல்லது உங்கள் உள்ளுணர்வு அப்படிக் குரல் கொடுத்தாலோ you smell a rat.

‘Going to the dogs’ என்று ஒரு நிறுவனத்தைக் குறித்தால், அது நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் என்று அர்த்தமில்லை. அதன் பொருளாதாரம் சரிந்து கொண்டே வருகிறது என்றுதான் அர்த்தம்.

She turned out to be a snake in the grass என்றால் அது துரோகத்தைக் குறிக்கிறது. அதாவது புல்வெளியில் உள்ள பாம்பு சட்டென்று புலப்படாது. அதுபோல நட்பாகப் பழகிய ஒருத்தி சட்டெனத் துரோகம் செய்தால் அவளை இப்படிக் குறிப்பிடலாம். (‘அவனுக்கும்’ இது பொருந்தும்).

தண்டல்காரன்

ஆனால் வேறு சிலவற்றுக்கு இப்படியெல்லாம் தர்க்கரீதியாக வியாக்கியானம் கொடுக்க முடியாது.

எடுத்துக்காட்டு: “It is raining cats and dogs’’. என்றால் மழை கடுமையாகப் பெய்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

“Keeping the wolf from the door’’ என்றால் போதிய பணம் (மட்டுமே) இருக்கிறது என்று பொருள்.

Kangaroo court என்றால் ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்பதுபோல் ஆளாளுக்குச் சட்டத்தை எடுத்துக் கொண்டு ‘நீதி’ வழங்குவது.

“I got it straight from the horse’s mouth’’ என்றால், நேரடியாகச் சம்பந்தப்பட்டவரிடமிருந்தே இதை நான் கேள்விப்பட்டேன் என்று பொருள்.

BROMANCE

“Bromance என்று ஒரு வார்த்தை கேள்விப்பட்டேன். அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Brother, Romance ஆகிய இரு வார்த்தைகளின் சேர்க்கைதான் Bromance.

அதாவது இரு ஆண்கள் ஒருவரோடொருவர் அதிக நேரம் செலவழிக்க விருப்பப்பட்டால் அதை bromance எனலாம். மனம் விட்டுப் பேச முடிகிறது, இன்னொருவரைப் புரிந்து கொண்டு ஆதரவாக இருப்பது என்பது இதில் அடக்கம். மற்றபடி இதில் செக்ஸ் கோணம் எதுவும் கிடையாது.

TORTUROUS - TORTUOUS

இரண்டுமே ‘Torquere’ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானவை. இந்த வார்த்தைக்கு ‘வளைத்தல்’ என்று பொருள்.

Tortuous என்ற வார்த்தை இந்த நேரடி அர்த்தத்தைத் தருகிறது. அதாவது பேச்சில் நேரடியாக இல்லாமல் வளைத்து வளைத்துப் பேசும்போதோ, மறைமுகமாகக் குத்திக் காட்டும்போதோ அதை Tortuous speech என்று சொல்வார்கள். மிக நீளமான ஒரு சாலை. எக்கச்சக்கமான சிறுசிறு வளைவுகளையும் கொண்டிருந்தால், அதை Tortuous road என்று கூறுவதுண்டு.

Torturous எனும்போது அது பாதிப்பை உண்டாக்குதல், கொடுமைக்கு உள்ளாக்குதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது torture.

போதாக்குறைக்கு Tortious என்றும் ஒரு வார்த்தை உண்டு. இது சட்டம் தொடர்பானது. அதாவது Tort எனப்படும் குற்றம் தொடர்பானது (Tort என்பதற்கும் Crime என்பதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இதுதான். Crime என்பது தண்டனையை அளிக்கக்கூடிய ஒரு செயல். நிஜமாகவே வேறு ஒருவருக்குப் பாதிப்பை உண்டாக்கி இருக்கக் கூடியது. ஆனால் tort என்ற அத்துமீறலைப் புரிந்தால், அபராதம் செலுத்தினால் போதுமானது. இன்னொருவரின் நிலத்தில் நீங்கள் நுழைவதும், நடப்பதும் tort. சம்பந்தப்பட்டவருக்கு இதில் ஒரு பாதிப்பும் இல்லையே என்று நீங்கள் கூறித் தப்பித்துவிட முடியாது).

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

என்னை யாரென்று எண்ணி எண்ணி – பாலும் பழமும்



காதலித்து மணந்த முதல் மனைவியைப் விபத்தில் பறிகொடுத்து விட்டு (சந்தர்ப்ப சூழ்நிலையால் அவள் இறந்துவிட்டதாக நினைத்து) பற்றற்ற வாழ்க்கை வாழும் ஒரு புற்று நோய் டாக்டர். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக (விருப்பமில்லாமல்) செய்து கொண்ட இரண்டாவது திருமணத்தில் மனம் ஈடுபடாத வாழ்க்கை. அவளோடு ஏற்ப்பட்ட வாக்குவாதத்தால் விபத்து நேர்ந்து கண்களையும் இழந்து தவிக்க, அசந்தர்ப்பமாக முதல் மனைவியே அவருக்கு நர்ஸாக வர, இரண்டாவது மனைவியோடு தன் கணவர் விரும்பாத வாழ்க்கை வாழ்வது அறிந்து அவரை அவள் பால் திருப்ப எடுக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக, உடல் நலமில்லாத அவரை வாக்கிங் அழைத்துப்போகும்போது அவர் மனம் மாற்றம் ஏற்பட பாட, அதற்கு மறுப்பு தெரிவித்து கணவர் பாடும் பாடல்… இதுதான் சிச்சுவேஷன் இதற்கு பாடல் எழுதுங்கள்’ – இயக்குநர் பீம்சிங்ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். பல்லவிக்காக மெல்லிசை மன்னரும் மூன்று ட்யூன்கள் போட்டு காண்பித்தார். அதில் ஒன்று பிடித்துப் போக, பல்லவிக்காக வரிகளை யோசித்துக்கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துகிட்டு வா” என்றார்.

பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார். அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர் “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை அவள் என்று மாற்றிப் பாருங்கள். விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிச்சுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங் பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.


என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா

இதில் அவன் என்று வந்த இடங்களை அவள் என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார் “எப்படி கவிஞரய்யா இது…?” என்று.

சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப் போனது. கடவுளைப் பற்றி கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி நர்சாக வந்த முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.


என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் ‘அவள்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா
என்பாடல் ‘அவள்’ தந்த மொழியல்லவா

தொடர்ந்து கவிஞர்


என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா

என்று வரிகளை அடுக்கினார்.

பாடல் தயார். மறூநாள் ரிக்கார்டிங். விஸ்வநாதன்-ராமமூர்த்தி குழுவினர் தயார் நிலையில் இருந்தார்கள், சுசீலாவும் வந்து தன் போர்ஷன்களை பாடிப் பார்க்க துவங்கிவிட்டார். ஆனால்டிஎம்எஸ் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வர, பீம்சிங் தான் பேசினார்.

“என்ன் சௌந்தர்ராஜன்… குரல் ஒரு மாதிரியாக இருக்கு?”

“அதைச் சொல்லத்தான் ஃபோன் செய்தேன். நேற்று இரவு முதல் ஜலதோஷம். அதனால் இன்னைக்கு ரிக்கார்டிங்கை கேன்ஸல் செஞ்சுடுங்க. இரண்டு நாள் கழித்து வச்சுக்கலாம்”.

(இப்போ மாதிரி ட்ராக் சிஸ்டம் எல்லாம் அப்போது கிடையாது. பாடகர்கள், இசைக் குழுவினர் எல்லோரும் ஒரே நேரத்தில் அமர்ந்து பாடலை ரிக்கார்டிங் செய்து முடிக்க வேண்டும். ஒருவர் தவறு செய்தாலும் அத்தனை பேரும் மீண்டும் வாசிக்க பீம்சிங் கேட்டார்…. “உங்களுக்கு ஜலதோஷம் மட்டும் தானா? அல்லது ஜுரம் ஏதாவது அடிக்கிறதா?”

“இல்லீங்க வெறும் ஜலதோஷம் மட்டும்தான்”

“அப்படீன்னா உடனே புறப்பட்டு ரிக்கார்டிங் தியேட்டருக்கு வாங்க. நீங்க இப்போ பேசுகிற குரல்தான் இந்தப் பாடலுக்கு வேண்டும்” என்றார் பீம்சிங்.

டிஎம்எஸ்ஸும் வந்து விட்டார். “அப்படி என்னென்னே இன்று என்னுடைய குரலில் விசேஷம்?” என்று கேட்க, இயக்குநர் சொன்னார் “இந்தக் காட்சியில் சிவாஜி உடல்நிலை சரியில்லாதவராக இருக்கிறார். அதோடு வாக்கிங் போகும்போது மழையிலும் நனைந்து விடுகிறார். அதனால் இந்தக் காட்சிக்கு இப்போதுள்ள் உங்கள் ஜலதோஷக்குரல் கச்சிதமாக பொருந்தும்” என்றார்.

டிஎம்எஸ் ஒத்திகை பார்த்து விட்டு ரிக்கார்டிங்குக்கு தயாரானார். அப்போது விஸ்வநாதன் அவர்கள் ” அண்ணே…, மூக்கை உறிஞ்சுவது, தும்மல் போடுவது எல்லாத்தையும் ரிக்கார்டிங் துவங்கும் முன்னர் பண்ணிக்குங்க. இடையில் பண்ணிடாதீங்க.” என்றார்.

அதற்கு பீம்சிங் “பரவாயில்லை, அப்படியே தும்மல் வந்தாலும் போடுங்க. படத்தில் சிவாஜி சாரையும் தும்ம வைத்து எடுக்கிறேன்” என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

நல்லவேளையாக பாடல் முடியும் வரை டிஎம்எஸ் அவர்கள் தும்மல் எதுவும் போடவில்லை. இப்போதும் கூட அப்பாடலைக் கேட்கும்போது, டி.எம்.எஸ்ஸின் ஜலதோஷக்குரல் நமக்கு நன்றாக தெரியும்.

AWARDING OF SPECIFIED DEGREES...UGC


UGC LATEST CIRCULAR ON SELF ATTESTATION


BJP may have Delhi plan in shifting Harsh Vardhan


When Dr Harsh Vardhan shared the stage with PM Narendra Modi at the valedictory session of the 6th World Ayurveda Congress at Pragati Maidan, he outlined his grand plans for an Ayurveda Mission. Seven hours later, he was stripped of the Health Ministry — that he is passionate about — and shunted to the low key Ministry of Science and Technology and Earth Sciences. H e was replaced by J P Nadda

.
Nadda’s name, incidentally, is inextricably linked to Harsh Vardhan’s first controversy in the Health Ministry — removing AIIMS CVO Sanjeev Chaturvedi. Nadda had written a letter, seeking Chaturvedi’s removal though Harsh Vardhan had downplayed it

.
The unexpected removal of one of the most visible ministers had the rumours mills working overtime, more so because the corridors of the Health Ministry had for a brief while been agog with speculation about how Harsh Vardhan’s almost activist-like zeal against tobacco was not going down well with the upper echelons of the government.
It was always a tough task to survive in the ministry by taking on the tobacco lobby. Similar rumours had surfaced when health secretary Keshav Desiraju was removed by the then UPA government in February this year.


In Harsh Vardhan’s case, the matter is complicated by the fact that vast swathes of land in Gujarat districts of Anand and Kheda are under tobacco cultivation. Although his quote-a-week crusade against tobacco had ebbed a bit over the past few weeks, it may not be sufficient to kill the speculation about tobacco link to his removal.


The other possibility is the Delhi polls. Last time, the BJP banked on Harsh Vardhan’s clean image and emerged as the single largest party. There is possibility of a repeat, with BJP eyeing majority. The switch to a low-profile ministry may give Harsh Vardhan more time to spare for the state and keep him ready for bigger responsibilities — if they come.
- See more at: http://indianexpress.com/article/india/politics/bjp-may-have-delhi-plan-in-shifting-harsh-vardhan/#sthash.qPkerILK.dpuf

NEWS TODAY 01,02.2026