Saturday, November 15, 2014

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலை தமிழக அரசின் ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு



தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நர்சுகள் பணி நியமனம்

கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி மாதம் 18–ம் தேதியன்று, தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசு ஆணையை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், எம்.சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2012–ம் ஆண்டு ஜனவரி 18–ந் தேதி அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என்றும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களையும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தலாம் என்றும் தீர்ப்பு கூறியது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவ–மாணவியர்கள் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் குரியன் ஜோசப் அரசு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு நர்சிங் கல்லூரிகளில் பயின்ற நர்சுகள் சார்பாக வக்கீல்கள் என்.ஜி.பிரசாத் மற்றும் சிவபாலமுருகன் ஆகியோர் ஆஜரானார்கள்.

வக்கீல் என்.ஜி.பிரசாத் தன்னுடைய வாதத்தின் போது, அரசு நர்சிங் கல்லூரிகளில் பயின்ற நர்சுகள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக அரசின் அரசாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு கூட அரசு செவிலியர் கல்லூரிகளில் பயின்றவர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நியமனம் செய்யும் நடைமுறை இருந்தது. எனவே அரசு செவிலியர் கல்லூரிகளில் பயின்றவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசாணை செல்லும்

தனியார் நர்சிங் கல்லூரிகளில் பயின்ற நர்சுகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், அரசு நர்சிங் கல்லூரிகளில் பயின்றவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயின்றவர்கள் இருவரையும் தமிழக அரசு ஒரே நிலையில் கருதி இருக்கிறது. இதனை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்து உள்ளது. இப்படி இந்தப் பணியில் அரசு கல்லூரிகளில் பயின்றவர்கள் மட்டுமே நியமிக்கப்படும் நிலை ஏற்பட்டால் மற்ற எல்லா பணிகளிலும் இதே அளவுகோல்கள் கடைப்பிடிக்க வேண்டி இருக்கும். இது இரு நிலைகளில் உள்ள உரிமைகளில் சமநிலையை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டது.,

இதற்கு நீதிபதிகள், எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களை பொருத்தவரையில் அவர்கள் அரசு கல்லூரிகளில் படித்தார்களா? அல்லது தனியார் கல்லூரிகளில் படித்தார்களா? என்று பார்ப்பது கிடையாது. அனைவரையும் நாம் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். இருவருக்கும் சமமான வாய்ப்புக்கள் அளிப்பது தான் சரி. இதில் யாருக்கு முக்கியத்துவம் என்பது சரியல்ல. எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசு ஆணை சரியானது. அதேபோல் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பும் சரியானதே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Friday, November 14, 2014

ஜெமினி கணேசன் பிறந்தநாள்: நவம்பர் 17 - காதல் மன்னன் பிறந்த கதை




திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் நாயகர்கள் ஜம்மென்று தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது உருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’.

கேஸ்டிங் உதவியாளர்

சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந்த 40களில் மதுரையும் தஞ்சையும் நூற்றுக்கணக்கான கலைஞர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுக்க, ஜெமினி கணேசன் வந்ததோ, தஞ்சை – மதுரை கலாச்சாரங்கள் சங்கமித்த புதுக்கோட்டையிலிருந்து. ஜெமினியின் இயற்பெயர் ராமசாமி கணேசன். நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஜெமினி கணேசன் சொந்த ஊரில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுப் பட்டப் படிப்புக்காக மதராஸப் பட்டணம் வந்தார். சென்னையில் உள்ள தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் இடம் கிடைத்தபோது அவருக்குப் பதினாறு வயது. விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட மாணவராக இருந்ததால், அங்கே பாதிரியார்களின் கவனதுக்குரிய செல்லப்பிள்ளையாக இருந்தார் ஜெமினி. படிப்பு முடிந்ததும் அங்கேயே சில மாதங்கள் பயிற்சி ஆசிரியராக வேலை செய்தார். ஏனோ ஆசிரியர் பணி அவருக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனைச் சென்று சந்திக்கும்படி சிபாரிசுக் கடுதாசு ஒன்று வீட்டிலிருந்து தபாலில் வந்து சேர்கிறது. கடுதாசியை வாங்கிப் பார்த்த வாசன் வாஞ்சையுடன் அவரை கேஸ்டிங் உதவியாளராக நியமிக்கிறார். 1940-ல் ஜெமினியில் பணியில் சேர்ந்த ஜெமினி கணேசன் அதன் பிறகு ஸ்டூடியோவின் எல்லாத் தளங்களிலும் சுதந்திரமாக உலா வந்தார்.

‘முதலாளியின் உறவுக்காரப் பையன்’ என்ற அடைமொழியோடு வலம் வந்தவரைத் தன் கேமரா கண்களால் பார்த்தவர் ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பு நிர்வாகிகளுள் ஒருவராக இருந்த ஆர். ராம்நாத்.

தயாரிப்பு நிர்வாகியாக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் எனப் புகழ்பெற்ற ராம்நாத், மிஸ் மாலினி என்னும் படத்தில் கதாநாயகனின் உதவியாளராக ஜெமினி கணேசனை அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் கதை, பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனுடையது. இப்படத்தைக் கொத்தமங்கலம் சுப்பு இயக்கிக் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சுதந்திர இந்தியாவில் வெளியான முதல் சமூகப் படமான மிஸ் மாலினி 1947 செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகி, தரமான படம் என்ற பாராட்டைப் பெற்று வெற்றிபெற்றது. ஜெமினி நிறுவனத்துக்காக ராம்நாத் தயாரித்த ஜெமினி கணேசனின் அறிமுகப் படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர்களோடு ஜெமினியின் இயற்பெயரான ராமசாமி கணேசன் என்பதன் சுருக்கமாக ‘ஆர்.ஜி’என்று டைட்டிலில் போடப்பட்டது.

காதல் மன்னன் பிறந்தார்

இதன் பிறகு ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தவருக்கு, 1952-ம் ஆண்டு கே. ராம்நாத் மறுபடியும் முக்கியத்துவம் கொடுக்கிறார். ராம்நாத் இயக்கத்தில் 1952-ல் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, அழகான இளம் வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். அது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர், பிற்காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் புகழ்பெற்றார். இதற்கு நேர்மாறாக வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் காதல் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.

ஜெமினியின் தொடக்க காலத் திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை அமைத்துக் கொடுத்த படம், அடுத்த ஆண்டே வெளியான ‘மனம்போல மாங்கல்யம்’. முப்பத்து மூன்று வயதே நிரம்பியிருந்த ஜெமினி கணேசன் கவனம்பெறத் தொடங்கிய நான்காவது படத்திலேயே அவருக்கு இரட்டை வேடம் கிடைத்தது ஓர் அசாதாரணமான வாய்ப்பு. அந்நாள் தெலுங்குத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட ‘வேம்பட்டி’ சதாசிவ பிரம்மம் எழுதிய முழுநீள சமூக நகைச்சுவை திரைக்கதையைத் தமிழில் எழுதியவர் உமாசந்திரன். ஒரே தோற்றம் கொண்ட இருவரில் தன் காதலன் யார் எனத் தெரியாமல் பழகுகிறார் கதாநாயகி. அந்த இருவரில் ஒருவர் மனநலக் காப்பகத்திலிருந்து தப்பித்து வந்தவர். கதை எத்தனை கலாட்டாவாக இருந்திருக்கும் என்று யோசிக்க முடிகிறது அல்லவா? இந்தப் படத்தில் நடிப்பில் மட்டுமல்ல, காதல் காட்சிகளிலும் தன் தனித்த மென்னுணர்ச்சி முத்திரையை அழுத்தமாகப் பதித்தார் ஜெமினி கணேசன். இந்தப் படத்தில்தான் ஜெமினி கணேசன் என்று முதன்முதலாக டைட்டில் போடப்பட்டது. படம் மிகப் பெரிய வெற்றிபெற்று ஜெமினியைக் காதல் மன்னனாக உயர்த்தியது. ஜெமினியின் சொந்த வாழ்க்கையிலும் மிகப் பெரிய பங்காற்றியது. இந்தப் படத்தில் சாவித்திரியுடன் நடித்தபோது ஏற்பட்ட நட்பே பின்னர் மெல்ல மெல்ல காதலாகக் கனிந்து திருமணம் வரை வந்து நின்றது. பாசமலரில் இந்த ஜோடி காதலித்தபோது அது நிஜமென்றே ரசிகர்கள் நம்பினார்கள்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் எனத் தான் ஏற்று மிளிராத கதாபாத்திரம் இல்லை என்று சாதித்துக் காட்டினார். ஜெமினியைக் காதல் மன்னனாகப் பார்க்கும் ரசிகர்கள் சிவபெருமான் வேடம் ஏற்ற அந்நாளின் கதாநாயர்களில் ஜெமினிக்கே அது கச்சிதமாகப் பொருந்தியதாகச் சொல்கிறார்கள். ஜெமினி இறுதிவரை இயக்குநர்கள் விரும்பும் நடிகராக இருந்தார். காரணம் தனது நடிப்புப் பொறுப்பை இயக்குநர்களிடம் விட்டுவிடுவார். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த ‘வெள்ளி விழா’படத்தில் முதுமை பற்றி ‘வந்தால் வரட்டும் முதுமை உனக்கென்ன குறைச்சல்,’ என்ற பாடலை எழுதியிருப்பார் வாலி. ஆனால் பழுத்த முதுமையில் இயற்கையுடன் கலந்த ஜெமினி கணேசன் இன்றும் இளமையான ‘ காதல் மன்னனாகவே’ ரசிகர்களின் மனதில் படிந்திருக்கிறார். அதற்கு அவரது நடிப்பாளுமையை மீறிய மற்றொரு காரணமும் உண்டு. தமிழ்த் திரையிசையின் மறக்க முடியாத கலைஞர்களாக இருக்கும் ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகிய இருவரது குரலும் ஜெமினியின் குரலாகவே தமிழ் ரசிர்கள் மனதில் பதிந்துவிட்டதுதான் அந்தக் காரணம்.

கருத்தடையிலும் மனத்தடை!



சத்தீஸ்கர் மாநிலத்தில், ஒரு கிராமத்தில் அரசு நடத்திய கருத்தடை அறுவைச் சிகிச்சை முகாமில் 15 பெண்கள் இறந்திருக்கும் சம்பவம் வேதனைக்குரியது. இத்தகைய சம்பவங்கள் நாடு முழுவதிலும் பெண்கள் மனதில் அச்சத்தை விதைக்கும். கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்துவதோடு குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையும் உருவாகும்.

இந்தியாவில் அரசு அறுவைச் சிகிச்சை முகாம்கள், கண்புரை அறுவைச் சிகிச்சை என்றாலும் கருத்தடை என்றாலும், எவ்வளவு அலட்சியமாக நடத்தப்படுகின்றன என்பதற்கு இது மற்றுமொரு சான்று. இரு ஆண்டுகளுக்கு முன்பு, கருத்தடை செய்யப்பட்ட பெண்கள் மயக்கம் தெளியாத நிலையில், திறந்தவெளியில் கிடத்தப்பட்ட விடியோ காட்சிகள் வெளியாகி, பெரும் கண்டனங்கள் எழுந்தன. இப்போது அதே விதத்திலான அலட்சியம்தான் இந்த உயிரிழப்புக்கும் காரணம்.

சிகிச்சை அளித்த மருத்துவர் ஆர்.கே. குப்தா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், ஆர்.கே. குப்தா 50,000-க்கும் மேற்பட்ட கருத்தடை சிகிச்சைகளைச் செய்திருப்பவர். தவறாக அறுவைச் சிகிச்சை அளித்தார் என்று சொல்லிவிட முடியாது.

இந்தப் பெண்களுக்கு அளிக்கப்பட்ட மருந்து மாத்திரைகள்தான் இறப்புக்குக் காரணமாக இருக்க முடியும் என்று இத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர் தவறான சிகிச்சை அளித்திருந்தால், தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் மட்டுமே மரணமடைவார். மருத்துவமனையின் சுகாதாரக் குறைவால் நோய்த்தொற்று ஏற்பட்டு

மரணமடைந்ததாகக் கருதினாலும், இத்தகைய உடனடி மரணங்கள் நோய்த்தொற்றில் ஏற்படுவது மிகமிக அரிது. வாந்தி, தலைச்சுற்றல் ஆகிய விளைவுகளைப் பார்க்கும்போது, இந்த மரணங்கள் காலாவதியான அல்லது தரமற்ற மருந்துகளால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தா அல்லது சிகிச்சைக்குப் பிறகு எடுத்துக்கொண்ட மாத்திரைகளா என்பது கண்டறியப்பட வேண்டும். இச்சம்பவம் நடந்த மறு நாளே வேறொரு கருத்தடை முகாமிலும் ஒரு பெண் இதே பின்விளைவுகளுடன் இறந்திருக்கிறார்.

மருந்துகளின் காலாவதி தேதியையும் அவை தரமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மருந்துகள்தானா என்பதையும் உறுதிப்படுத்தாமல் எப்படி இந்த நோயாளிகளுக்கு அவற்றை அளிக்க மருத்துவர்கள் சம்மதித்தனர்? சத்தீஸ்கர் மாநிலத்தில் போலி மருந்துகள்

விற்பனை மிக அதிகம் என்று தெரிவிக்கப்பட்டாலும், அரசு கொள்முதல் செய்யும் மருந்துகளில் போலியைவிட, தரம் குறைவான மாத்திரை மருந்துகளுக்கே வாய்ப்பு அதிகம். தற்போது ஆறு மருந்துகளின் விற்பனையை சத்தீஸ்கர் மாநில அரசு தடை செய்துள்ளது. அவை தரப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் இத்தகைய மரணங்கள் நேரிடும்போது மட்டுமே மருந்துகளின் தரம் குறித்துப் பேசப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் மருந்து மாத்திரைகள் தரமானவைதானா என்பதை அந்தந்த மாவட்ட மருத்துவமனைகள், தாங்களே சோதனை செய்து உறுதிப்படுத்தும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தரம் குறைந்த மாத்திரைகளை விநியோகிக்கும் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர், தரம் சரிபார்ப்பு அலுவலர் ஆகியோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு கருத்தடை செய்யும் போது சினைக்குழாயைத் துண்டிக்கும் (டியூபெக்டமி) சிகிச்சைக்குப் பதிலாக, எளிமையானதாகக் கருதப்படும், பெண் உறுப்பு வழியாக கருப்பைக்குள் சினைத் தடுப்புக் கருவியைப் பொருத்தி, சினைமுட்டைகளைத் தடுக்கும் முறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ஆனால், அவை இன்னும் அரசு முகாம்களில் பயன்பாட்டுக்கு வரவில்லை.

ஆண்களுக்கான கருத்தடை (வாசெக்டமி) மிகவும் எளிதானது. விதைப் பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்து, குறைந்த நேரத்தில் கருத்தடை சிகிச்சையைச் செய்துவிடமுடியும். இயல்பான தாம்பத்தியத்துக்கு இச்சிகிச்சை எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதபோதும், கருத்தடை (டியுபெக்டமி) செய்து கொள்ளும்படி பெண்களையே ஆண்கள் நிர்பந்திக்கிறார்கள். இந்த ஆணாதிக்க மனநிலையும் இத்தகைய மரணங்களுக்கு ஒரு காரணம்.

பயனாளிகளை அடையாளம் காண்பதற்கு ஊரகப் பகுதியில் முகாம்கள் நடத்துவதும், அறுவைச் சிகிச்சையை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்களுடன் நடத்துவதும், மருந்துகளைச் சரிபார்க்கும் பொறுப்பை அதே மருத்துவர்களை ஏற்கச் செய்வதும்தான் இத்தகைய துயரச் சம்பவங்களைத் தவிர்க்க உதவும்.

Source: Dinamani

Singaporeans, Chinese travel most to India

Source:
Deccan chronicle

Special trains for Modi event Melbourne to Sydney


சகதிக்காடான கோயம்பேடு மார்க்கெட்: சென்னையில் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது



சென்னையில், தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்பேடு மார்க்கெட் சகதிக் காடாக மாறியது.

வடகிழக்கு பருவமழை

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் 2 நாட்களாக இரவு, பகலாக விட்டு,விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

தொடர் மழை காரணமாக கோயம்பேடு 100 அடி சாலை, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை, அண்ணா சாலை, அண்ணாநகர் சிந்தாமணி சாலை, தரமணி சர்வீஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, புழல் பைபாஸ் சாலை, கே.கே.நகர் ராஜாமன்னார் சாலை, வேளச்சேரி பிரதான சாலை உள்பட நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது.

சேதமடைந்த சாலைகள்

இந்த சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. சில வாகனங்கள் மழைநீரில் சிக்கி பழுதடைந்தன. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது. இதில், சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

சென்னை அம்பத்தூர், புளியந்தோப்பு, வேளச்சேரி, மூலக்கடை, எருக்கஞ்சேரி, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் கரடு, முரடாகவும், குண்டும், குழியுமாகவும் மாறியது. இந்த குழிகளில் மழைநீரும் தேங்கி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி, சகதிக் காடாக மாறி உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடியது. பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 200 படகுகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி உள்ளது. விருகம்பாக்கம் காவிரி நகர், அண்ணாமலை காலனி, லோகையா தெரு, வேளச்சேரி ராம் நகர், தாசில்தார் அலுவலகம் உள்பட நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் பழமையான ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

ஏரிகளின் நீர்மட்டம்

சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது.

கடந்த 10–ந்தேதி, 274 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்த பூண்டி ஏரியில், கடந்த 2 நாட்களில் 60 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்தது. சோழவரம் ஏரியில் 58 மில்லியன் கன அடி தண்ணீரும், புழல் ஏரியில் 90 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்து, 1,116 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 52 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்து, 1,214 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

புழல் அடுத்த லட்சுமிபுரம் ஆசிரியர்கள் காலனி, வெங்கடேஸ்வரா நகர், சாரதி நகர், ஆதிலட்சுமி நகர், முகாம்பிகை நகர், பிரகாஷ் நகர், பொன்னியம்மன்மேடு ஆகிய பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தேங்கி இருக்கும் மழைநீரை ஜே.சி.பி. மூலம் வெட்டி வெளியேற்றினார்கள்.

திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கார்கில்நகர், ராஜாஜிநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பலர் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். எர்ணாவூர் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

3 மரங்கள் விழுந்தது

விருகம்பாக்கம் பாலாஜி நகரில் மரம் ஒன்று முறிந்து மின்சார வயர்கள் மீது விழுந்தது. இதனால் மின்சார வயர்கள் அறுந்து சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. விருகம்பாக்கம், அபுசாலி சாலையில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

பரங்கிமலை, பழவந்தாங்கல், தில்லைகங்கா நகர் ஆகிய சுரங்கப்பாதைகளில் தேங்கி இருந்த மழைநீர் உடனுக்குடன் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. நங்கநல்லூரில் 4 மரங்கள் விழுந்தன. கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Does new Right to Information circular endanger activists?

MUMBAI: A recent department of personnel and training (DoPT) memorandum, directing all ministries and government departments to upload applications received under the Right to Information (RTI) Act and replies given on their websites, has opened a Pandora's box. 

Owing to lack of clarity in this circular, several RTI activists and legal experts fear the process may result in disclosure of applicants' names and endanger them. Some others, though, say such a disclosure is in the interest of transparency. 

Uploading RTI applications and replies (including appeals) is expected to bring in transparency. Further, it will avoid queries on information already available in public domain. However, the DoPT memorandum dated October 21 makes no specific mention of whether information seekers' personal details will be revealed while uploading their queries, thus sparking off fears. 

If names are revealed, there are fears that RTI activists could face attacks. Till date, around 42 RTI activists have been murdered and over 300 assaulted, says Venkatesh Nayak, RTI activist and programme coordinator at the Commonwealth Human Rights Initiative. 

"India doesn't have overarching privacy laws like the UK's Data Protection Act," says Nayak. In the UK, replies to queries given to applicants under the Freedom of Information Act (akin to our RTI Act) are uploaded with applicants' names blanked out. However, RTI applicants' identity could possibly be protected by an earlier DoPT memorandum issued on January 6, based on a Calcutta high court order. 
This order held that applicants need not disclose any personal details while filing RTI queries, other than their post office (PO) box numbers. Government bodies could insist on personal details, only if they are faced any difficulty with the PO box number. In this scenario, though, the court stated: "It would be the solemn duty of the authorities to hide such information, particularly from their websites so that people at large would not know of the applicant's personal details." 

However, a high court order, unlike that of the Supreme Court is not the law of the land. "DoPT's memorandum based on the Calcutta high court order and its recent memorandum are only binding on the DoPT. It would only have 'persuasive powers' on other government departments and ministries. Thus, a ministry can choose to upload RTI queries with or without applicants' names or choose not to upload any RTI query, because DoPT's OMs strictly speaking are only guidelines and not law," says Nayak. 

TOI spoke with a few officials from various ministries who agree that a clarification regarding disclosure of the applicant's name would be helpful. 

"If India wants to protect RTI activists' identity, it must amend the RTI Act or pass a government-notified rule on the matter," adds Nayak. 

Opinion is divided on the need to do so. "Responses to RTI queries are public documents. Information should be denied only as per exemptions in the Act and no general exemption can be sought for the names of RTI applicants," says Shailesh Gandhi, RTI activist and former Central Information Commissioner. 

"Everyone who takes on powerful interests, whether or not they use RTI, put themselves in danger. Why should RTI activists have separate protection? We are trying to create better systems for all and not create a new class of VIPs," says Gandhi. 

"If very sensitive information is asked for we are aware of the fact that it is usually not provided by the PIO and during the process of appeals the applicant's name is leaked to the affected party. Unfortunately, this will continue irrespective of whether peoples' names are on government websites. A very few (probably less than 1% to 2%) do use RTI to harass officers or get a favour. Displaying the RTIs would deter them," he says.

Source:  The Economic Times

NEWS TODAY 01,02.2026