Thursday, November 20, 2014

சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளை தடுக்க ஜனவரி 1–ந் தேதி முதல் சமையல் கியாசுக்கு வங்கிகள் மூலம் நேரடி மானியம் ஆதார், வங்கி கணக்கு எண் வழங்க கியாஸ் நிறுவனங்கள் வேண்டுகோள்



சமையல் சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளை தடுக்க ஜனவரி 1–ந் தேதி முதல் சமையல் கியாசுக்கு வங்கிகள் மூலம் நேரடி மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் வழங்க வேண்டும் என்று கியாஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சமையல் சிலிண்டர்கள்

வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதை தடுக்கவும், அதிக விலைக்கு விற்பனை உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இதன்படி சிலிண்டர்களுக்கான மானிய தொகையை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஆதார் அடையாள அட்டை இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2013–ம் ஆண்டு நேரடி மானிய திட்டத்தை மன்மோகன்சிங் அரசு அறிமுகப்படுத்தியது.

மோடி தலைமையிலான புதிய அரசு இத்திட்டத்தில் சிறிய மாற்றம் கொண்டு வந்தது. ஆதார் அட்டை கட்டாயம் அல்ல. ஆதார் அட்டை அல்லது வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதன்படி புதிய திட்டம் கடந்த 15–ந் தேதி முதல் மேலும் 54 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தபட்டது.

ஜனவரி 1–ந் தேதி

வரும் 2015–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக சமையல் கியாஸ் இணைப்பு வைத்து இருப்பவர்களின் செல்போனுக்கு கியாஸ் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறது. அதில், ‘‘சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை சமையல் சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி வெற்றி செல்வகுமார் கூறியதாவது:–

அவகாசம்

சமையல் கியாஸ் மானிய தொகையை கியாஸ் இணைப்பு உள்ளவர்களின் பெயர்களிலேயே நேரடியாக மானியத்தை வங்கிகளில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்கள் கருணை காலமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் அட்டை எண் இருந்தால் அதனையும் வினியோகஸ்தர்களிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அந்த 3 மாத காலத்தில் கியாஸ் வாங்குபவர்கள் மானியத்தை கழித்து வழக்கமான முறையில் ரூ.404 செலுத்தி சிலிண்டர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்பிறகு ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும். அந்த காலத்தில் சமையல் கியாஸ் மானியம் தொகை கழிக்காமல் முழு தொகையான ரூ.950 செலுத்தி தான் பெற முடியும். ஆனால் அதற்கான மானியம் பின்னர் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்பவர்களுக்கு அரசின் மானியம் கிடைக்காது. மாறாக முழு தொகை கொடுத்து தான் சிலிண்டர் வாங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2½ லட்சம் போலி இணைப்புகள்

தமிழகத்தில் 1 கோடியே 62 லட்சம் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இதில் ஒருவர் பெயரிலேயே பல இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு 2½ லட்சம் போலி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நேரடி மானிய திட்டம் அமலுக்கு வரும் போது மேலும் 1½ லட்சம் போலி இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளது.

அதற்கு பிறகு நியாயமான முறையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையின்றி சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்க வாய்ப்பு உள்ளது என்று ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 அதிகாரிகள் குறித்த வழக்கு; தேர்வு எழுதிய 83 பேரின் விடைத்தாள்களையும் தாக்கல் செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு



டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 83 பேரின் விடைத்தாள்களையும் மத்திய பொதுப்பணித் தேர்வு ஆணையத்தின் ஆய்வுக்காக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு

கடந்த 2001–2002 ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் வெவ்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி நடராஜன் என்பவர் கடந்த 2005–ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 83 பேர் தேர்ச்சி பெற்றது செல்லாது என்றும் உடனடியாக அவர்கள் வகித்து வரும் அரசு பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்த 83 அதிகாரிகளும் பதவியில் நீடிக்கலாம் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

மேல்முறையீட்டு மனு விசாரணை

இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார்.

அவர் தனது வாதத்தில் கூறியதாவது:–

பழிவாங்க கூடாது

தேர்வு செய்யப்பட்ட இந்த அதிகாரிகள் தேர்வின் போது விடைகளை குறிக்க வண்ணப்பென்சில்களை உபயோகப்படுத்தினார்கள் என்று கூறுவது தவறு. அவர்கள் தங்களின் விடைகளைக் குறிக்க விடைத்தாள்களில் சாதாரண பென்சில்களைத்தான் பயன்படுத்தினார்கள். உயர்நீதிமன்றம் அமைத்த இருவர் குழுவின் அறிக்கையை வைத்துக் கொண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

தேர்வில் விடையை எழுதும் போது பொதுவாக அடிக்கோடிட்டு காட்டுவார்கள். சொல்லப்போனால் இந்தத் தேர்வை எதிர்த்து இருக்கும் மனுதாரரும் தன்னுடைய விடைத்தாளில் அப்படியேதான் செய்திருக்கிறார்.

இந்த தேர்வின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருக்கின்றனர். அவர்களில் பலரும் 45 வயதைக் கடந்ததால் அவர்களுக்கு வேறு இடங்களில் அரசு பணிகளில் வேலை வாய்ப்பும் கிடைக்காது. இவை போன்ற சாதாரண குறைபாடுகளைக் காரணம் காட்டி இந்த அதிகாரிகளை பழிவாங்குவது தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே நீதிமன்றம் தங்கள் முந்தைய உத்தரவை திருத்தி அமைக்க கோருகிறோம். இந்த வழக்கு முடியும் வரை இந்த அதிகாரிகளை நீக்கம் செய்த முந்தைய உத்தரவின் மீது இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தவறான வழிமுறைகள்

மனுதாரர்களின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் தன்னுடைய வாதத்தில் ‘டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களில் பலரும் விதிமுறைகளுக்கு மாறாக வண்ணப் பென்சில்களை உபயோகித்தும் சில இடங்களில் அடிக்கோடிட்டும் தவறான வழிமுறைகளில் தங்கள் விடைத்தாளில் முயற்சித்துள்ளனர். இது மிகவும் தவறானது. எனவே விடைத்தாள்கள் அனைத்தையும் கட்டாயமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்யும்போது பலவிதமான விதிமீறல்கள் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்’ என்றும் வாதாடினார்.

விடைத்தாள்களை ஒப்படைக்க உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குறிப்பிட்ட இந்த தேர்வு தொடர்பான அனைத்து விடைத்தாள்களையும் ( 83 பேரின் 800 விடைத்தாள்கள்) உடனடியாக ‘சீல்’ வைத்த உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விடைத்தாள்களை மத்திய பணித் தேர்வு ஆணையம் தீர ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பான விசாரணையில் யூபிஎஸ்சி ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு உடனடியாக நோட்டீஸ் அனுப்பவேண்டும். இந்த வழக்கு அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 22–ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.A

Wednesday, November 19, 2014

Modi woos NRIs in Australia promising merger of OCI and PIO in 2 months

Sydney: Prime Minister Narendra Modi on Monday assured a visa on arrival facility for Australian tourists and announced a two-month deadline for the long-pending merger of OCI and PIO status to woo the Indian diaspora from whom he sought support for his ambitious Clean India campaign.
Addressing a frenzied crowd of around 20,000 in the packed Allphones Arena here, Modi took a dig at the previous governments saying while they were happy to make laws he was "happier to remove" them.
Touched by the grand reception, Modi said he was honoured and humbled and will never forget this day. "I know that behind this affection lies expectations. Yes. We want to create the India you are dreaming of.""Let's open the windows let fresh air come in," Modi said referring to his government's efforts to weed out obsolete laws.
"This welcome, this respect, this enthusiasm I dedicate it to the people of India," said Modi, the first Indian Prime Minister to visit Australia in 28 years.
Modi announced that his government was working on to facilitate visa on arrival for Australian tourists and said the PIO (Persons of Indian Origin) and OCI (Overseas Citizen of India) status will be merged ahead of the Pravasi Bhartiya Divas to be held from 7 January in Ahmedabad.
Modi had announced merger of PIO and OCI during his visit to the US in September but had not given a timeline then.
The Prime Minister also referred to economic reforms unveiled by his government and said India has become an attractive destination for investment.
He also said FDI in Railways has been hiked to 100 per cent and hoped that Australian companies will invest in creating rail infrastructure in the country.
The Prime Minister called upon Indians across the world to convert the atmosphere of hope and optimism into a reality of meeting the expectations and aspirations of people in India.
Modi said on the basis of his experience of the last six months, he could see no reason why the aspirations of millions of Indians could not be fulfilled.
He referred to Swami Vivekananda's dream of seeing Mother India as a 'Vishva Guru' once again, and said he believed that dream would be a reality.
"Do you share the dream", he asked the cheering crowd.
The Prime Minister said that he feels a greater sense of responsibility as he is the first Prime Minister born in independent India.
"We did not have the fortune to fight for the country's independence. We could not die for India. But we can live for India. So we will live and struggle for India. Today 125 crore Indians share that dream," he said.
"It took 28 years for an Indian PM to make the few hours journey to Australia. Now you will not have to wait 28 years," the Prime Minister said.
He also highlighted the values of democracy and the love for cricket that India and Australia share.
The Prime Minister exhorted people to recognise the strength of India's democracy. "Let us now do all we can for India's benefit. And then India will work for the benefit of mankind," he said.
"Governments cannot make a country. People make a country," he said.
The Prime Minister also stressed on the Clean India campaign saying that more tourists would come if the country was cleaner.
He also asked the Indian diaspora to extend their support to the campaign and said they can contribute significantly in developing the villages they come from. "I request you to contribute. God has given you so much."
Modi said while "some people" dream of doing only big things he was interested in doing "small things" like building toilets and ensuring cleanliness.
"Illness is a big burden on the poor. There is no greater service to the poor than focussing on cleanliness," he said adding "I see no reason why India should stay behind. It is decided we will move ahead."
Modi congratulated and complimented the Indian Australian community for working hard and making their "karmbhoomi" proud. He named prominent Indian-Australians who had excelled for Australia in sports and academics.
Talking about the strength of democracy, he said "Look at the strength of democracy. Would I have been here if it weren't for democracy? The power of this democracy brought me here."
The Prime Minister mentioned the work his Government was doing and the new policies and schemes his Government had launched including the Pradhan Mantri Jan Dhan Yojana and the Make in India initiative.
Speaking about Jan Dhan scheme, he said 70 million bank accounts have been opened in the last 10 weeks under the scheme and a total of Rs 5,000 crore has been deposited by the account holders.
He also spoke of the need to improve access to clean water, electricity and invited the Indian-Australian community to give back to the Motherland in whatever way they could. He spoke of his vision for skill development, and India meeting the skilled manpower requirement of the whole world.
Modi also complimented Australia for its concept of dignity of labour. "I have always admired the concept of dignity of labour in Australia. Here, a research scientist can also drive a cab."
"Cleaning up or removing litter. This is not a job that lacks dignity...this is a job that must be respected," he said.
He also announced a Sydney Cultural Center would be established by India and it will be made functional by February 2015.

HC seeks Delhi stand on unrecognised nursing institutes

Nov.3  2014
The Delhi High Court Monday asked the city government, and the Indian and Delhi Nursing Councils to respond to a plea seeking closure of nursing councils and institutes not recognised by the authorities, to save the future of students enrolled in nursing courses there.
Justice Vibhu Bakhru asked the Delhi government's health and family welfare department, Indian Nursing Council (INC), Delhi Nursing Council (DNC), Rajasthan Nursing Council (RNC) and the Rajiv Gandhi General Institute in Alwar, Rajasthan, to respond to the plea and posted the matter for March 8 next year.
The court was hearing a plea by Sushma Chauhan who obtained a diploma in nursing from the Rajiv Gandhi General Institute in 2006 and got it registered with the RNC.
However, she recently came to know that the institute and the council were not recognised by the INC and was denied a job.
Filing her petition through advocate Sugriva Dubey, Chauhan said institutes giving training to students to become nurses do not disclose that the nursing council was not recognised. After the degree is obtained from that unrecognised nursing council, the students find it hard to get jobs in both government and private hospitals.
The plea said the DNC also does not recognise the RNC and has refused employment to some nurses who passed out from that institute.
Dubey informed the court that a large number of students do not know that the RNC is not recognised by the INC.
The plea said students after completing their diploma course from the RNC applied to the Delhi government hospitals and also those managed by the Centre. But special treatment was "arbitrarily" given to some students and they were employed.
"But a number of other students who got their diploma from the same unrecognised nursing council are not given employment only on the ground that unrecognised nursing councils cannot grant degree or diploma and those students are not competent to get employment," the plea said.
The plea said the government does not treat the students "equally" as some of them were given employment and those who do not have any influence are being deprived jobs.
"As many as 400 nurses, after completing training from the RNC, have been appointed in different hospitals owned by the Delhi government and also in hospitals managed by the Centre, which is violative of Articles 14 and 21 of the Constitution," it said.
The plea said the RNC was managed by the Rajasthan government and hence those getting degrees and diplomas from it were given employment by the state.
But if a student wants to get jobs outside the state, the degrees and diplomas were not valid.
The plea asked the court that the INC be directed to give wide publicity about the names of those nursing councils and hospitals whose diplomas are not recognised and "students be alarmed not to get diploma from these institutes".
It also prayed that the INC stop any grant either directly or indirectly to unrecognised councils.

கடைசி நாளில் கவுன்சிலிங் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு



சென்னை ஐகோர்ட்டில், ஏ.இ.துர்கா என்ற மாணவி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

2014–15–ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (பல்மருத்துவம்) படிப்புக்கு விண்ணப்பம் செய்தேன். எனக்கு, 30–9–2014 அன்று சென்னையில் நடைபெறும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும்படி, 2 நாட்களுக்கு முன்பு (செப்டம்பர் 28–ந் தேதி) மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யும் தேர்வு குழு எஸ்.எம்.எஸ். அனுப்பியது.

இதன்படி, செப்டம்பர் 30–ந் தேதி பகல் 1.30 மணிக்கு கவுன்சிலிங்கில் கலந்துகொண்டேன். மதுரையில் உள்ள பெஸ்ட் பல் மருத்துவ கல்லூரியில் ஒரு இடம் ஒதுக்கி பகல் 3 மணிக்கு எனக்கு ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணையின் அடிப்படையில், அன்று மாலை 4.30 மணிக்குள் மதுரை போய் கல்லூரியில் சேர்ந்துவிடும்படியும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். நான் உடனடியாக செல்ல முடியாமல் மறுநாள் சென்ற போது, மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியது. எனவே, என்னை பல்மருத்துவ படிப்பில் சேர்த்துக்கொள்ளும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்த வழக்கில், மருத்துவ கல்வி தேர்வுக்குழு தவறு செய்துள்ளது. கடைசி நாளான செப்டம்பர் 30–ந் தேதி கவுன்சிலிங் நடத்தி, அன்றே இடம் ஒதுக்கி, அன்றைய தினமே மதுரை போய் கல்லூரியில் சேர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இருந்து சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரைக்கு ஒரு மணி நேரத்தில் மனுதாரரால் எப்படி செல்ல முடியும்? இது சாத்தியமாகும்? மனுதாரர் துர்காவுக்கு சொந்தமாக ஒரு ஜெட் விமானம் இருந்தால்கூட ஒரு மணி நேரத்துக்குள் மதுரைக்கு செல்ல முடியாது.

சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த ‘கட்–ஆப்’ தேதிக்கு பிறகு கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் இடஒதுக்கீடு செய்து மருத்துவ கல்வி தேர்வுக்குழு உத்தரவு பிறப்பித்தது தவறு. எனவே, மருத்துவ கல்வி தேர்வுக்குழுவின் தவறினால், மனுதாரர் துர்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த மாணவியின் டாக்டராக வேண்டும் என்ற கனவு சில மணி நேரத்தில் கலைந்துவிட்டது. எனவே, மனுதாரருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மருத்துவ கல்வி தேர்வுக்குழு பணமாக வழங்கி சரி செய்யவேண்டும். மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். அவருக்கு, மருத்துவ கல்வி இயக்குனரகம், மருத்துவ கல்வி தேர்வுக்குழு சேர்ந்து 4 வாரத்துக்குள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, November 18, 2014

உயிரோடு இருக்கும் தந்தைக்கு இறப்பு சான்றிதழ் பெற்ற மகன்

தேனி: உயிருடன் உள்ள தந்தைக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி, வீட்டை தன் பெயருக்கு மாற்ற முயன்ற மகன் மற்றும் சான்றிதழ் வழங்கிய பேரூராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து, ஊர்மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கண்டிப்பு:

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 69; ஓய்வு பெற்ற பள்ளி டிரைவர். இவரது ஒரே மகன் கண்ணன், 38, அதே பள்ளியில் தற்போது ஆசிரியராக உள்ளார். கடந்த, 10 ஆண்டு களுக்கு முன் மகன் கண்ணனின் செயல்பாடுகளை நாகராஜ் கண்டித்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் ஊரை விட்டு சென்ற நாகராஜ், தற்போது புட்டபர்த்தியில் இருப்பதாக, உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தந்தை பெயரில் உள்ள வீட்டை விற்க, ஆசிரியர் கண்ணன் முடிவு செய்தார். இதற்காக, நெஞ்சு வலியால், தந்தை, வீட்டில் இறந்து விட்டதாகவும், அவரை ஊர் மயானத்தில் அடக்கம் செய்து விட்டதாகவும், இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அதற்கு பேரூராட்சி பெண் ஊழியர் மறுத்துவிட்டார். லஞ்சம் பெற்று, அங்கிருந்த மற்றொரு ஊழியர், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்று தந்துள்ளார். அதில், கடந்த ஆண்டு ஆக., 8ல் காமயவுண்டன்பட்டியில், நாகராஜ் இறந்து விட்டதாக, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்து அவரது மகன், வீட்டின் உரிமையை மாற்ற ஏற்பாடு செய்தார். இந்த விவரம் ஊர் மக்கள் சிலருக்கு தெரிய வந்தது.

ஆவணங்கள்:

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆவணங்களை பெற்று, ஆதாரபூர்வமாக தேனி மாவட்ட நுகர்வோர் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு அமைப்பின் செயலர் முத்துவீரப்பன், கலெக்டர் பழனிசாமியிடம் மனு கொடுத்துள்ளார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்த, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு ஆஸ்திரேலியாவில் 20 ஆயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் பேச்சு


ஆஸ்திரேலியாவில் 20 ஆயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுஉரையாற்றினார்.

சிட்னியில் வரவேற்பு

மேலும் பிரிஸ்பேன் நகரில் உள்ள சிட்டி ஹாலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நகரில் மகாத்மா காந்தியின் உருவச்சிலையையும் அவர் திறந்துவைத்தார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக பிரிஸ்பேன் நகரில் இருந்து பிரதமர் மோடி நேற்று சிட்னி நகருக்கு சென்றார்.

சிட்னியில் ஒலிம்பிக் பார்க்கில் உள்ள அல்போன்ஸ் அரங்கில் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 20 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. அங்கு கூடி இருந்தவர்களில் கணிசமான பேர் மோடியின் உருவம் பொறித்த ‘டி சர்ட்’ அணிந்து இருந்தனர்.

வாழ்த்து கோஷம்

பிரதமர் மோடி அரங்கத்துக்குள் நுழைந்ததும், அங்கு கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எழுந்து நின்று ‘மோடி’, ‘மோடி’ என்று கூறி வாழ்த்துக்கோஷம் எழுப்பினார்கள். அவர்களை நோக்கி கை அசைத்து வணக்கம் தெரிவித்தபடியே மோடி உள்ளே வந்தார். மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தால் அரங்கம் முழுவதும் உற்சாகம் நிரம்பி வழிந்தது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபல இந்தியரான கார்ட்டூனிஸ்ட் ரமேஷ் சந்திரா, கிரிக்கெட் வீரர் பிரெட் லீ மற்றும் தலைவர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

மோடிக்கு வரவேற்பு அளிக் கும் வகையில் தொடக்கத்தில் சிறிது நேரம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிரிக்கெட்

ஆஸ்திரேலியா அழகான தேசம். அழகான சிட்னி உலகின் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இழுக்கக்கூடிய நகரம் ஆகும். நீங்கள் அளித்து இருக்கும் இந்த சிறப்பான வரவேற்பும், மரியாதையும் எனக்கானது அல்ல. இவை அனைத்தும் எனக்கு வாக்களித்த மக்களைப் போய் சேரவேண்டியது ஆகும்.

பாரதத்தை வணங்குமாறு சுவாமி விவேகானந்தர் கூறினார். தேசத்தின் விடுதலைக் காக போராடி சிறைக்கு செல்லும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. நாம் இந்தியாவுக்காக உயிரை விட வேண்டாம், இந்தியாவுக்காக வாழ்ந்தாலே போதும். 125 கோடி இந்தியர்கள் அனைவரின் மனதிலும் இந்த எண்ணம் இடம்பெற வேண்டும்.

இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை இந்தியர்களாலும் ஆஸ்திரேலியர்களாலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. கிரிக்கெட் நம்மை இணைக்கிறது. ஜனநாயகத்திலும் இரு நாடுகளும் சிறப்புடன் விளங்குகின்றன. ஜனநாயகம்தான் நமது பலம் ஆகும்.

ஜனநாயகத்தின் வலிமை

இந்திய ஜனநாயகத்தின் வலிமையை எல்லோரும் உணர்ந்து இருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக இந்தியா பாடுபடும். இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு. நாட்டுக்கான உழைக்க எந்த நேரமும் நாம் தயாராக இருக்க வேண்டும். அரசாங்கங்கள் தேசத்தை உருவாக்குவது இல்லை. மக்கள்தான் தேசத்தை உருவாக்குகிறார்கள்.

125 கோடி மக்களை கொண்ட இந்தியா எதற்காக பின்தங்கி இருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அனைத்து விஷயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏழை, எளிய மக்களுக்காக உழைத்து மிகப்பெரிய சாதனைகளை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை ஆகும்.

நாடு சுதந்திரம் அடைந்த பின் பிறந்தவர்களில் முதல் பிரதமர் நான் என்பதில் பெருமிதம் அடைகிறேன். இனி ஓர் இந்திய பிரதமர் ஆஸ்திரேலியா வருவதற்காக நீங்கள் 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

தூய்மை இந்தியா திட்டம்

நாங்கள் கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்கு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உதவ வேண்டும். நாடு தூய்மையாக இருந்தால் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நோய்தான் ஏழைகளுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்வதை விட ஏழைகளுக்கு வேறு பெரிய அளவில் நன்மை செய்துவிட முடியாது.

சிலர் பெரிய அளவில் கனவு காண்கிறார்கள். ஆனால் நான், கழிவறைகள் கட்டுவது, நாட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்றவற்றில் மிகுந்த அக்கறை காட்டுகிறேன். இந்தியாவில் ஏழைகளுக்கு கழிவறைகள் கட்டுவதற்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும்.

முதலீடு செய்யுங்கள்

கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று உரையாற்றிய போது வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கும் திட்டத்தை அறிவித்தேன். அதைத் தொடர்ந்து, 10 வாரங்களில் 7 கோடி பேருக்கு வங்கி கணக்கு கள் தொடங்கப்பட்டு ரூ.5 ஆயிரம் கோடி அந்த கணக்குகளில் செலுத்தப்பட்டு இருக்கிறது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த உலகுக்கு தேவையானவற்றை இந்தியாவில் தயாரிக்க முடியும். இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்படும்.

எனது அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக முதலீடு செய்வதற்கு உகந்த நாடாக இந்தியா மாறி இருக்கிறது. ரெயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீடு நூறு சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்தியாவில் ரெயில்வே கட்டுமான துறையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்று நம்புகிறேன்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பழைய அனுபவங்களை நினைத்து தயங்க வேண்டாம். புதிய அரசு வெளிநாட்டவர்களுக்காக சிறப்பான வழிகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்.

இந்திய இளைஞர்களுக்கு இப்போது தேவையானது திறன் மேம்பாடு. நீங்கள் கனவு காணும் இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும். சட்டங்கள் மக்களின் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். இதற்காக சில பழைய சட்டங்களை நீக்கவும் தயாராக இருக்கிறோம். கதவுகளை திறக்கும்போதுதான் புதிய காற்று உள்ளே வரும்.

விசா வழங்கும் திட்டம்

இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்களால் பங்குகொள்ள முடியவில்லை என்பதை நான் அறிவேன். அவர்களை பொறுத்தவரை தேர்தல் ஒரு போட்டி அல்ல. பாரத மாதாவுக்கு ஜே! என்பதுதான் அவர்கள் மனதில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் ‘விசா’ வழங்கும் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் சிட்னி கலாசார மையம் அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

NEWS TODAY 01,02.2026