
Monday, November 24, 2014
Begin MBBS admission on Sept 20 every year: Court
Begin MBBS admission on Sept 20 every year: Court
Chennai
TIMES NEWS NETWORK
|
Ushering in a great deal of transparency in MBBS admissions and fee structure levied by private institutions, the Madras high court has issued a set of guidelines to be followed by them from next year onwards.Most importantly , the fee and other charges payable at the time of admission should be mentioned in the prospectus of private colleges, said the first bench comprising Chief Justice Sanjay Kishan Kaul and Justice M Sathyanarayanan.
The bench was passing orders on a PIL filed by G Vijayakumar who wanted the authorities, including the Medical Council of India and the director of medical education in Tamil Nadu, to prevent the colleges from admitting students under management quota for MBBS courses without issuing a fresh prospectus.
He said the prospectus should specify all relevant details and ensure that admissions were done only on the basis of merit, transparency and fairness. MBBS admissions should be done by adopting a centralized procedure, Vijaya kumar said.
The judges, on their part, said that MBBS students and aspirants should have sufficient time to shift their admissions from one college to another. Therefore, every year, MBBS admission should commence on September 20 and the last date of admission should be September 27, “so that one week's time is available for a candidate to shift admission,' the bench said.
The rank list should be hosted at 11am on September 20, and it should remain on the website throughout the entire period of its currency till 5pm on the closing date, the judges said, adding that the list should be available both on the official website and the notice board of private colleges. “The arrange ment should be made applicable from next year,“ the bench said.
As per the Supreme Courtset admission schedule for MBBS courses, September 30 is the last date for completing the admission process, while September 17 is the last date for concluding admissions after three counselling sessions. In rare cases, the apex court, however, had permitted deviation from the schedule.
Even last week, some MBBS aspirants had unsuccessfully moved a single judge bench to permit their admission by two medical colleges which together have 84 vacant seats to fill.Justice V Ramasubramanian, citing the apex court schedule, has asked them to move the Supreme Court for remedy .
The bench was passing orders on a PIL filed by G Vijayakumar who wanted the authorities, including the Medical Council of India and the director of medical education in Tamil Nadu, to prevent the colleges from admitting students under management quota for MBBS courses without issuing a fresh prospectus.
He said the prospectus should specify all relevant details and ensure that admissions were done only on the basis of merit, transparency and fairness. MBBS admissions should be done by adopting a centralized procedure, Vijaya kumar said.
The judges, on their part, said that MBBS students and aspirants should have sufficient time to shift their admissions from one college to another. Therefore, every year, MBBS admission should commence on September 20 and the last date of admission should be September 27, “so that one week's time is available for a candidate to shift admission,' the bench said.
The rank list should be hosted at 11am on September 20, and it should remain on the website throughout the entire period of its currency till 5pm on the closing date, the judges said, adding that the list should be available both on the official website and the notice board of private colleges. “The arrange ment should be made applicable from next year,“ the bench said.
As per the Supreme Courtset admission schedule for MBBS courses, September 30 is the last date for completing the admission process, while September 17 is the last date for concluding admissions after three counselling sessions. In rare cases, the apex court, however, had permitted deviation from the schedule.
Even last week, some MBBS aspirants had unsuccessfully moved a single judge bench to permit their admission by two medical colleges which together have 84 vacant seats to fill.Justice V Ramasubramanian, citing the apex court schedule, has asked them to move the Supreme Court for remedy .
பகையல்ல, நட்புதான் கைகொடுக்கும்
நரேந்திர மோடி பதவியேற்கும் முன்பு அவருக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு கசப்பான உணர்வுதான் இருந்தது. அவர் அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்ற வகையில், அவருக்கு அமெரிக்கா விசா ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏறத்தாழ 10 ஆண்டுகள் இந்த விசா மறுக்கப்பட்டிருந்தது. அப்போதும் நரேந்திர மோடி சாதாரண குடிமகன் அல்ல. குஜராத் மாநில முதல்–மந்திரி. இந்த நிலையில், தேர்தல் நேரத்தின்போது, மோடிதான் பிரதமர் என்று ஒரு நிச்சயமான நம்பிக்கை நாட்டு மக்களுக்கு இருந்த நேரத்திலும், அப்படி மோடி பிரதமரானால், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் நல்லுறவு இருக்காதோ? என்ற எண்ணமும் மக்களுக்கு இருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பே அமெரிக்கா அவருடைய விசா ரத்து என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இதுவே உறவு மாற்றத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.
சமீபத்தில் மியான்மர் நாட்டில் நடந்த ‘ஜி 20’ நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கலந்துகொண்டனர். அந்த நேரத்தில், ஒபாமாவிடம், மோடி ஜனவரி 26–ந்தேதி டெல்லியில் நடக்கும் இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெறும் வார்த்தையிலான அழைப்போடு விட்டுவிடாமல், இந்தியா திரும்பியதும் அரசு ரீதியான கடிதத்தையும் அனுப்பி அழைப்பு விடுத்தார். ஒபாமாவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். இந்த தகவலை சமூக வலைதளத்தை அதிகமாக தன் அனைத்து பணிகளுக்கும் பயன்படுத்தும் மோடி, தனது டுவிட்டரில் நாட்டு மக்கள் அனைவருக்கும் செய்தியாக அனுப்பினார். குடியரசு தினவிழாவில் ஒரு நண்பர் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாக தலைமை விருந்தினராக வந்து சிறப்பிக்கவேண்டும் என்று அழைத்து இருக்கிறோம் என்று டுவிட்டரில் செய்தி அனுப்பிய அடுத்த சில நிமிடங்களில், வெள்ளை மாளிகை டுவிட்டர் செய்தி ஒபாமாவின் வருகையை உறுதிப்படுத்தி, இந்திய–அமெரிக்க உறவை வலுப்படுத்தவும், விரிவாக்கவும் ஒபாமா, இந்திய பிரதமர், அதிகாரிகளை சந்திப்பார் என்றும் தெரிவித்திருந்தது.
1959 முதல் இன்றுவரை 5 அமெரிக்க ஜனாதிபதிகள் இந்தியாவுக்கு வந்திருந்தாலும், குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாதான். எப்படி ராஜபக்சே, மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவரும் முன்பு சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டாரோ, அதுபோல ஒபாமா குடியரசு தினவிழவில் கலந்துகொள்ளும் செய்தியை அறிவிக்கும் முன்பு, நீண்டகாலமாக அமெரிக்காவில் குடியுரிமை இல்லாமல் இருக்கும் 5 லட்சம் இந்திய மக்கள் குடியுரிமை பெறும் வகையிலான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உறவில் இவர்கள்தான் என்று இல்லாமல், அனைத்து நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துவரும் நரேந்திர மோடி, ராஜதந்திரத்துடன் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு காண்பார் என்று நம்பிக்கை இருக்கிறது. ஒபாமாவை, இந்தியா வரவேற்கிறது. புதியதோர் உலகம் படைப்போம்.
Sunday, November 23, 2014
எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான்.

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!
* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!
* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!
* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!
* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!
* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!
* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!
* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!
* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!
* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!
* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!
* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!
* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!
* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'
* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'
* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!
* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!
* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!
- மானா பாஸ்கரன்
(ஆனந்த விகடன் 07-07-2010)
தமிழில் என் முதல் படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது பெருமையாக உள்ளது”

‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதில் உற்சாகமாக இருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. “இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மணிபாரதி என்ற கிராமத்துப் பெண்ணின் பாத்திரத்தில் நடிக்கிறேன். 1940-களில் ரஜினிகாந்த், கிராமத்துக்காக செய்யும் நல்ல காரியங்களுக்கு தோள் கொடுக்கும் கேரக்டர் என்னுடையது. தமிழில் என் முதல் படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது பெருமையாக உள்ளது” என்று சந்தோஷம் பொங்கப் பேசிக்கொண்டே இருக்கிறார் நடிகை சோனாஷி சின்ஹா.
சென்னையில் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக வந்திருந்த அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர். தென்னிந்திய கிராமத்துப் பெண்ணாக நடிப்பது கஷ்டமாக இருந்ததா?
இல்லை. கே.எஸ். ரவிகுமார் ஒரு சிறந்த இயக்குநர். காட்சிகள் அனைத்தையும் எனக்கு தெளிவாக விளக்கினார். மொழி தெரியவில்லை என்றாலும் தமிழ் வசனங்களை எனக்குப் புரியுமாறு ஆங்கிலத்தில் எழுதித் தந்தார்கள். அந்த வசனங்கள் எனக்காக எளிமையாக்கப்பட்டது. கிட்டத்தட்ட என்னை ஒரு மகாராணியைப் போல நடத்தினார்கள். அதனால் எனக்கு எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.
உங்கள் தந்தை சத்ருகன் சின்ஹாவை தனது ஆதர்ச நாயகனாக ரஜினி கருதுகிறார். அவருடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
அற்புதமான மனிதர் அவர். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. திரையுலகில் பல வெற்றிகளைக் குவித்த பிறகும் எந்த ஈகோவும் இல்லாமல் எளிமையாக பழகுகிறார். மொழி தெரியாததால் எந்த வார்த்தைக்கு எந்த முகபாவம் காட்டுவது என்பதில் எனக்கு சிக்கல் இருந்தது. அப்படிப்பட்ட நேரங்களில் ரஜினிதான் எனக்கு உதவி செய்தார்.
பாலிவுட்டில் படங்களை மெதுவாக எடுப்பார்கள். ஆனால், தமிழில் வேகமாக படங்களை எடுத்து முடிப்பார்கள். அதிலும் கே.எஸ்.ரவிகுமார் மிக வேகமாக படங்களை எடுக்கக் கூடியவர். அவருடைய வேகத்துக்கு உங்களால் ஈடுகொடுக்க முடிந்ததா?
தென்னிந்திய இயக்குநர்களான பிரபுதேவா, ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் இயக்கங்களில் நான் ஏற்கெனவே நடித்துள்ளேன். அதனால் வேகமாக எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கான பயிற்சி எனக்கு ஏற்கெனவே கிடைத்திருந்தது. எனக்கு மொழிப் பிரச்சினை இருப்பதால் படப்பிடிப்பு தாமதமாகலாம் என்று ரவிகுமார் முதலில் நினைத்துள்ளார். ஆனால், நான் வெகு சீக்கிரத்தில் தமிழ் உச்சரிப்புகளைப் பழகிவிட்டேன். அதனால் படம் தாமதமாகவில்லை. இவ்வளவு பிரம்மாண்டமாக தயாராகியும் படம் மின்னல் வேகத்தில் முடிந்துவிட்டது.
ரஜினியின் நாயகியாக நடிப்பதுகுறித்து உங்கள் தந்தை என்ன சொன்னார்?
அவருக்கு இதில் மிகவும் சந்தோஷம். இதைவிட தமிழில் ஒரு சிறந்த தொடக்கம் எனக்குக் கிடைக்காது என்று அவர் நினைத்தார். மேலும் ரஜினியும் அப்பாவும் நீண்ட நாட்களாக நண்பர்கள் என்பதால் இதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. இப்படத்தின் காதல் காட்சிகளும் 1940 காலகட்டத்தைப் போல கண்களை மட்டுமே வைத்து காட்சிப்படுத்தியிருந்ததால் இதை ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை.
இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பீர்களா?
சிறந்த கதையம்சத்தோடு, எனக்கான நல்ல பாத்திரத் தோடு வரும் தமிழ் படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். மேலும் வாய்ப்பு கிடைத்தால் ஏ.ஆர். முருகதாஸ் சார் இயக்கத்தில் தமிழில் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்.
பாலிவுட்டில் பல நாயகிகள் இருந்தும், தமிழ் இயக்குநர்களுக்கு சோனாக்ஷி சின்ஹாவைப் பிடித்துப் போவதன் ரகசியம் என்ன?
எனக்கும் தெரியவில்லை.. நான் இந்தியப் படங்களின் நாயகியாகத்தான் என்னைப் பார்க்கிறேன். ‘தபாங்க்’ படம் அனைத்து தரப்பினரிடமும் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தது. சல்மானின் ரசிகர்களுக்கு என்னையும் பிடித்துப் போனது. அதைப் போல ஒரு தொடக்கம் முக்கியம் என நினைக்கிறேன். தொடக்கம் நன்றாக இருந்தால் அனைத்து வகையான மக்களுக்கும் உங்களைப் பிடித்துவிடும்.
ரஜினி 60 வயதைத் தாண்டியவர், நீங்கள் இளம் நடிகை. படப்பிடிப்பில் உங்கள் இடையிலான கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது? சல்மான், அக்ஷய் குமாருடன் நடித்தது போலத்தான் இருந்ததா?
ரஜினியிடம் நிறைய மரியாதை உள்ளது. ஒவ்வொரு நாயகர்களுடன் நடிக்கும் விதமும் மாறுபடும். நான் அக்ஷய் குமாருடன் நடிப்பது போல சல்மானுடன் நடிக்க முடியாது. அதேபோல சல்மானுடன் நடித்தது போல ரஜினியுடன் முடியாது. ஓவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். ரஜினி சீனியர் என்பதால் படப்பிடிப்பில் ஒரு மரியாதையான சூழலே நிலவியது.
தமிழ் படத்தில் நடிப்பதற்கும், இந்திப் படங்களில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
தமிழில் அனைத்தும் வேகமாக, நேரத்துக்கு நடக்கிறது. நேரத்தைக் கடைப்பிடிப்பதில் தமிழ் சினிமாவுக்கு நிகரில்லை!
Delhi-Chennai Bullet Train Project: Railway Officials to Visit China
In line with Prime Minister Narendra Modi's vision to introduce bullet trains in the country, a team of Railway officials will visit Beijing on November 24 to take forward the Delhi-Chennai high-speed corridor project, the longest in India.
A high-level team of officials from Rail Vikas Nigam (RVNL) will make the visit to complete formalities with Chinese counterparts for the project's feasibility study, a senior Railway official said.
The 1,754 km-long Delhi-Chennai route is being given to China for conducting feasibility study and is proposed to be developed jointly with China, which is home to the world's longest high-speed rail line between Beijing and Guangzhou.
RELATED
Officials of the Rail Vikas Nigam on Thursday made a detailed presentation of proposed high speed train projects, including the Delhi-Chennai route before the Railway Minister Suresh Prabhu, the official said.
Besides, the Minister was also briefed about the progress of the 534-km-long Mumbai-Ahmedabad high speed corridor project, estimated to cost Rs. 63,180 crore, for which the Japan International Cooperation Agency (JICA) is currently conducting a feasibility study.
The Delhi-Chennai route, part of the proposed Diamond Quadrilateral project, which aims to build a high-speed train network between different cities, including Delhi-Mumbai, Mumbai-Chennai, Chennai-Kolkata, Kolkata-Delhi and Mumbai-Kolkata, is likely to cost Rs. 2 lakh crore.
Currently Rajdhani covers the distance between the two cities in 28 hours and as per the plan, the proposed bullet train at 300 kilometre per hour speed will reduce the travelling time to six hours.
While the cost of construction of a normal railway route is Rs. 5 crore per kilometre, the estimated expenditure on the high speed railway line will be Rs. 120-126 crore.
Subscribe to:
Comments (Atom)
THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW
THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...