Wednesday, December 3, 2014

CME: Medical council makes 30-min ethics sessions mandatory

Continuing medical education (CME) programmes to upgrade professional skills now comes with a rider. Every CME programme will include a half-hour session on ethical conduct. Not only that, the Maharashtra Medical Council (MMC) on Wednesday gave
a strong push to introduce ethics as a subject in MBBS curriculum.

“Students are taught to diagnose and treat patients as part of the MBBS curriculum. We want to reinforce that he/she has several roles to play in the world of medicine,” Dr Kishore Taori, President of MMC told The Indian Express.

“As per the code of medical ethics of the Medical Council of India (MCI) — reward or financial gain is a subordinate consideration and we want to stress professional conduct, etiquette and ethics by doctors,” he said.

The code has been in existence for some years but there is a need to reinforce it and MMC at its executive committee meeting on Wednesday decided to make it compulsory for CMEs to set aside a half-hour session on ethical conduct. It may be recalled that it was mandatory for doctors and medical associations to participate and organize CMEs to gain credit points for renewal of registrations after every five years.

“Apart from learning about new modalities of treatment and getting exposure to recent advances in various branches of medicine, doctors will have to undergo sessions on ethical conduct as part of the CMEs,” Taori added. “The aim is to revert to our original objective outlined in the code of ethics to render services with full respect for the dignity of the profession.”

Physicians should command confidence of patients and for that, a course in communication skills has been introduced in the MBBS curriculum, Dr Arun Jhamkar, Vice-Chancellor of the Maharashtra University of Health Sciences told The Indian Express. “We floated the concept of reinforcing values in medical education by organising a four-day course on yogic practice and meditation.”

While the University of Sydney has decided to emulate this concept, Jhamkar was surprised at objections raised by some groups.
“However, we will continue efforts to introduce modules on professional ethics and conduct in MBBS curriculum,” Jhamkar said.
A meeting of the academic council on November 25 will decide, he added.

- See more at: http://indianexpress.com/article/cities/pune/cme-medical-council-makes-30-min-ethics-sessions-mandatory/#sthash.wM8GKnHc.dpuf

போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள் காலையில் தினசரிகளைப் படித்த, வானொலி செய்தியைக் கேட்ட, தொலைக்காட்சியில் பார்த்த உலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சோகப் பொழுது அது. ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, உலகமே அதிர்ந்த துயரம் முப்பதாண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் நிகழ்ந்தது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி நள்ளிரவு நேரம். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சிமருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. துருப் பிடித்த குழாய்கள், கசிந்து கொண்டிருந்த அடைப்புத் தடுக்குகள் (வால்வ்) ஆகியவை காரணமா என்று தெரியவில்லை. குழாய் உடைந்து தண்ணீர் அங்கிருந்த ரசாயனம் தேக்கி வைத்திருந்த தொட்டி ஒன்றில் பாயத் தொடங்கியது.

இ - 610 (E-610) எண்ணுள்ள அந்தத் தொட்டியில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி) என்கிற உயிர்க்கொல்லி ரசாயனம் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு விஷத்தன்மையுடையது என்றால், அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளி, தினந்தோறும் பத்து லட்சத்தில் 0.002 பங்குக்கு அதிகமாக அந்த ரசாயனக் கலவையின் நெடிகூடப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு அதி ஆபத்தான ரசாயனம்.

இந்த மீதைல் ஐசோ சயனேட்டில் தண்ணீர் கலந்ததும், அதனால் உருவான வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் எம்.ஐ.சி., ஹைட்ரஜன் சயனைட், மோனோமீதைல் அமைன், கார்பன் மோனோ ஆக்சைட் தொடங்கிய 16 ரசாயன வாயுக்கள் புகைமண்டலமாக எழுந்தன. ஏறத்தாழ 40 டன் விஷவாயு உற்பத்தியாகி அடுத்த சில வினாடிகளில் சுற்றிலும் புகைமண்டலமாகப் பரவத் தொடங்கியது.

எந்தவொரு ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமல்லவா? ஆபத்து நிறைந்த யூனியன் கார்பைடின் போபால் பூச்சிமருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்புக் கருவிகள் இந்த அளவிலான வெப்பத்தையும், அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் அளவில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அங்கே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களும் செயல்பாட்டில் இருக்கவில்லை அல்லது சரியாக வேலை செய்யவில்லை அல்லது பராமரிப்பில் இருந்தன.

பிறகென்ன? புகைமண்டலம் மேலெழுந்து அந்தத் தொழிற்சாலையை அப்படியே சூழ்ந்து கொண்டுவிட்டது. இரவு நேரக் காற்றின் துணையுடன் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த போபால் நகரப் பகுதிகளையும் தனது மரணப் பிடியில் சிக்க வைக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது விஷவாயு. சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களின் நுரையீரல்களில் நுழைந்து மரண தாண்டவமாடத் தொடங்கிவிட்டிருந்தது அந்த உயிர்க்கொல்லி ரசாயன வாயு.

இருபது, முப்பது அடிகளுக்கு ஒன்றும் தெரியாத அளவுக்குப் புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. அதிகாலை ஒரு மணி அளவில் போபால் நகரின் பல பகுதிகள் ஒரு விஷவாயுக் கொலைக்களனாகக் (Gas chamber) காட்சி அளித்தன.

அந்தத் தொழிற்சாலையே புகைமண்டலத்தால் சூழப்பட்டிருக்கிறது. உடனடியாக, எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்திருக்க வேண்டுமா இல்லையா? ஒலிக்கவில்லை என்பதல்ல உண்மை. அது அணைக்கப்பட்டுக் கிடந்தது என்பதுதான் கொடுமை. அதனால் விஷவாயு போபால் நகர மக்களின் நுரையீரல்களில் நுழைந்து, கண்கள் எரியத் தொடங்கியபோதுதான் எங்கேயோ விஷவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது என்பதே மக்களுக்குத் தெரியத் தொடங்கியது.

அதிகாலை ஒரு மணி அளவில், மூச்சுத் திணறலுடனும், இருமலுடனும் போபால் நகர மக்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் எங்கும் புகைமண்டலம். அருகில் இருப்பவர்களைக்கூடச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. கண்களில் எரியும் கொள்ளியைச் சொருகியதுபோல எரிச்சல். அங்குமிங்கும் மக்கள் ஓடத் தொடங்கினார்கள். புகைமண்டலத்திலிருந்து விடுபட்டால் போதும் என்கிற பயத்திலும், பீதியிலும் அலறி அடித்துக்கொண்டு ஓடியவர்களில் பலர் தடுக்கி விழுந்து இறந்துபோன சோகக் கதைகள் ஏராளம்.

அதற்குப் பிறகு அங்கே ஏற்பட்ட கலவரச் சூழலில் பெற்றோரிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் பலர். அங்குமிங்கும் பரபரப்பில் ஓடுபவர்களால் மிதிபட்டு இறந்த குழந்தைகளும், முதியவர்களும் கணக்கிலடங்கார்.

விஷவாயுவைச் சுவாசித்த அடுத்த சில வினாடிகளில் பலருக்கும் அவர்களது கழிவு உறுப்புகள் மீதிருந்த கட்டுப்பாடு தளர்ந்தது. அவர்களையறியாமலே சிறுநீரும், மலமும் போகத் தொடங்கின. புகைமண்டலத்தில் கழிவறையைத் தேடிச் செல்லும் நிலையிலும் அவர்கள் இல்லை. இன்னும் பலர் கட்டுப்படுத்தவே முடியாமல் வாந்தியெடுக்கத் தொடங்கி விட்டிருந்தனர். விஷவாயுவின் குமட்டல் நெடியால் இருமலும் வாந்தியுமாக அவஸ்தைப்பட்டவர்கள் ஏராளம்.

பலர் விஷவாயுவின் தாக்குதலைத் தாங்கும் சக்தி இல்லாமல் விட்டில் பூச்சிகள்போல செத்து விழுந்தனர். ஏதோ நுரையீரல் தீப்பிடித்து எரிவதுபோலவும், வெடித்துவிடும் போன்றதுமான உணர்வுடன் மடிந்து விழுந்தவர்கள் ஏராளம். விஷவாயுவின் தாக்கத்தால் நுரையீரலில் நீர் நிறைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தவர்கள் பலர். பலருடைய மரண வாக்குமூலங்களும், பிரேதப் பரிசோதனைகளும் தெரிவிக்கும் தகவல்கள் இவை.

நூற்றுக்கணக்கில் தொடங்கி, ஆயிரக்கணக்கானோர் உயிருடன் போராடிக்கொண்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டபோது அவர்களுக்கு என்ன சிகிச்சை தருவது என்றுகூடத் தெரியாமல் விழித்தனர் அரசு மருத்துவர்கள். எந்தவிதமான விஷவாயு தாக்கியிருக்கிறது என்பது தெரியாததால், அதற்கு மாற்று மருந்து என்ன என்பதை அவர்களால் கண்டறியவோ, ஊகிக்கவோ முடியவில்லை. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்டால், அவர் சொன்ன விசித்திரமான பதில் என்ன தெரியுமா?

""கண்ணீர்ப் புகைக் குண்டு வெளிப்படுத்தும் புகை போன்றதுதான் இதுவும். அதனால் கண்களைத் தண்ணீர் விட்டுக் கழுவினாலே போதும். எரிச்சல் நின்றுவிடும்!'' என்பதுதான் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி அவர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குச் சொன்ன பதில். போபால் நகரில் பணக்காரர்கள் குடியிருக்கும் பகுதியில் பத்திரமாக வசித்து வந்த தொழிற்சாலை மருத்துவர் சம்பவம் நடந்த இடத்துப் பக்கம் தலைகாட்டக்கூட இல்லை.

மருத்துவமனைகளின் பிண அறைகள் இறந்தவர்களின் சடலத்தால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு ஆங்காங்கே மனிதச் சடலங்கள். அடுத்த மூன்று நாள்களும், மூன்று இரவுகளும் தொடர்ச்சியாக சடலங்கள் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வந்தன. போபாலின் பல்வேறு இடங்களில் இதுபோல கூட்டாக எரியூட்டு நடந்தவண்ணம் இருந்தது.

விஷவாயு தாக்கியதால் உடனடியாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்கிற நிஜமான கணக்கு கிடைக்கவே போவதில்லை. முதல் நாளில் மட்டுமே விஷவாயுவால் தாக்கப்பட்டு ஏறத்தாழ 8,000 பேர் உடனடியாக மரணத்தைத் தழுவியிருக்கக் கூடும் என்பது சில தன்னார்வ அமைப்புகளின் கருத்து.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) என்கிற அரசு ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த முதல் நாள் இரவில் மட்டும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையைச் சுற்றிலும் வசிக்கும் ஏறத்தாழ 5.20 லட்சம் பேர்களின் ரத்தக்குழாய்களில் விஷவாயு நச்சு கலந்து அவர்களது அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு மானியம் ரத்து: ஜன., மாதம் தமிழகத்தில் அமலாக வாய்ப்பு?

சென்னை: காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' அட்டையை உடனடியாக பதிவு செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளதால், வீட்டு உபயோக, காஸ் சிலிண்டருக்கான மானியம், ஜன., மாதத்தில் ரத்து செய்யப்படும் என, தெரிகிறது.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையில், மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது, மானியத்துடன் கூடிய, வீட்டு சிலிண்டர், 404.50 ரூபாய்; மானியம் அல்லாதது, 749.50 ரூபாய்; வர்த்தக பயன்பாடு, 1,465 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், 'வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள், தங்கள், 'ஆதார்' அட்டை எண்; வங்கி கணக்கு எண்களை, தங்கள் காஸ் ஏஜன்சியிடம் பதிவு செய்ய வேண்டும். 'ஆதார்' அட்டை இல்லாதவர், வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். 'ஆதார்' இல்லாமல், வங்கி கணக்கு எண் தருபவர்கள், மூன்று மாதங்களில், 'ஆதார்' அட்டை பெற்று, அந்த எண்ணை, காஸ் ஏஜன்சிகளுக்கு தர வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் காஸ் ஏஜன்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண் பதிவுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஏஜன்சியிடம் வழங்க வேண்டும்.பின், ஏஜன்சி வழங்கும் விண்ணப்பத்தை, வங்கியில், கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, பதிவு செய்யப்பட்ட பின், வீட்டு சிலிண்டருக்கான மானியம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட இருக்கிறது.பின், வாடிக்கையாளர்கள், சிலிண்டருக்கான முழு பணத்தை கொடுத்து, ஏஜன்சிகளிடம், சிலிண்டர் பெற வேண்டும். காஸ் ஏஜன்சிகள், வாடிக்கையாளரின், 'ஆதார்' அல்லது வங்கி கணக்கு எண் பதிவை, உடனடியாக துவக்கி, இம்மாதத்திற்குள் முடிக்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து, 'ஆதார்' எண் பதிவு செய்யும் பணியை, காஸ் ஏஜன்சிகள், நேற்று, முதல் துவக்கின. இதனால், வரும் ஜன., முதல், வீட்டு சிலிண்டருக்கான மானியத்தை, அரசு, ரத்து செய்து, வாடிக்கையாளர் வங்கி கணக்கில், வரவு வைக்க வாய்ப்புள்ளதாக, காஸ் ஏஜன்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

05.12.2014 TAMIL NADU TEACHERS EDUCATION UNIVERSITY CONVOCATION


Tuesday, December 2, 2014

மிரட்டும் 'லிங்கா' டிக்கெட் விலை!



தமிழகத்தின் ஹாட் டாக் இப்போது 'லிங்கா' தான். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் 'லிங்கா' திரைப்படத்தின் ஆடியோவின் உரிமை இத்தனை கோடி.. வெளிநாட்டு உரிமை இத்தனை கோடி... தொலைக்காட்சி உரிமை இத்தனை என கோடி...என இந்த படத்தின் வியாபாரங்கள் மக்களிடம் முக்கிய விவாதப் பொருளாகி உள்ளது.

வரலாறு காணாத அளவுக்கு 'லிங்கா' படம் விற்றுவிட்டதாக சுவாரஸ்யத்துடன் பேசிவருகின்றோம். ஆனால் அது கடைசியில் படம் பார்க்க செல்பவர்களின் தலையில்தான் விடியும் என்பதை வசதியாய் மறந்து விட்டோம்.

'லிங்கா' படத்தின் இந்த விற்பனை நம்மை எப்படி பாதிக்கும்? என்பதை பார்க்கலாம்.

வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டாலே விறுவிறுப்பு தானாக தொற்றிக்கொள்ளும். டிசம்பர் 12-ம் தேதி ‘லிங்கா' படத்தின் வெளியீடு உறுதியாகிவிட்டதால் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு’ சான்றிதழும் கிடைத்துவிட்டது. பின்னணி இசை, கிராபிக்ஸ் என பல்வேறு இடங்களில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் ‘லிங்கா' குறித்து சேகரித்த சிறப்புத் தகவல் துளிகள் இவை...

விற்பனையில் இதுவரை இல்லாத சாதனை

ஒரு படத்தின் வணிக ரீதியிலான வெற்றி, தோல்வி என்பது, இப்போதெல்லாம் ரசிகர்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது அந்தக்காலம். படம் வெளியாவதற்கு முன்னரே வேறு பல வழிகளில் முழு செலவையும் தாண்டி லாபம் பார்த்து விடலாம் என்பதுதான் இன்றைய நிலை. இதன் உச்சம் தான் 'லிங்கா'. படத்தின் ஆடியோ உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டுக்கான உரிமைகள், சாட்டிலைட் உரிமை என படத்தின் உரிமைகள் கிட்டத்தட்ட 200 கோடி வரை விற்பனையாகிவிட்டதாக வெளிப்படையாகவே பேசத்துவங்கிவிட்டனர் திரைத்துறையினர். கூட்டி கழித்து பார்த்தால் எப்படியும் சில நூறு கோடிகளை எட்டிவிடும் என்பது தான் 'லிங்கா' வின் கணக்கு.



இவ்வளவு பெரிய தொகைகளுக்கு படத்தின் உரிமைகள் விலைபோனது 'லிங்கா'வுக்குத்தான். ரஜினியின் முந்தைய படங்கள் கூட ரிலீசுக்கு முன் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகவில்லை.

படத்தின் விற்பனைத் தொகை ஒரு சாதனை என்றால், மற்றொரு சாதனை படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை. கிட்டத்தட்ட 5 ஆயிரம் திரையரங்குகளில் 'லிங்கா' வின் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த அளவை யாரும் நெருங்கியது கூட இல்லை.

தமிழகத்தில் '700 தியேட்டர்கள் லட்சியம். 600 தியேட்டர்கள் நிச்சயம்' என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளது படத்தரப்பு. வெளிநாடுகளில் 200 தியேட்டர்களிலும் வெளியாகிறதாம் 'லிங்கா'.



அள்ளிக் கொடுக்கப்படும் ஊதியம்

தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஜனரஞ்சக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் என உச்சத்தில் உள்ளவர்களை கொண்டு தயாராகியுள்ளது 'லிங்கா'. இப்படி உச்சத்தில் உள்ளவர்களுக்கு அள்ளித்தரும் ஊதியம்தான் 'லிங்கா'வின் படத்தின் தயாரிப்பு செலவை கடுமையாக உயர்த்தியுள்ளதாம். எனவே அதில் இருந்து லாபம் வைத்து படத்தின் உரிமைகள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே சில நூறு கோடியில் இந்த படத்தை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டு உரிமை நூறு கோடியை கடக்கும் போது, அதற்கேற்ப ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட வேண்டிய நிர்பந்தம் வினியோகஸ்தர்களுக்கு ஏற்படுகிறது. அப்படித்தான் 'லிங்கா' படம் 5 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாக ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி எனும் மூன்றெழுத்து மந்திரம் இந்த இமாலய விற்பனைக்கும், இத்தனை ஆயிரம் திரையரங்குகளில் 'லிங்கா' வெளியாகவும் காரணமாய் அமைந்து விட்டது.

வினியோகஸ்தர்களிடம் இருந்து தியேட்டர்களுக்கு

தமிழகம் முழுவதும் 2 நிறுவனங்கள் 'லிங்கா' படத்தை வெளியிடுகின்றன. கோவை ஏரியாவில் ஒரு நிறுவனமும், கோவையைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு நிறுவனமும் 'லிங்கா' படத்தை வெளியிடுகிறது. ஒவ்வொரு ஏரியாவும் கோடிகளில் விற்பனையாகியுள்ளது. இதில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் லாபம் வைக்கப்பட்டு, தியேட்டர்களுக்கு விற்கப்படுகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில், ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் லட்சங்களில் இந்த படம் விற்பனை செய்யப்படுகிறது.



அதிக தியேட்டர்களில் வெளியானால்தான் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்பதால், தியேட்டர்களின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. அப்படித்தான் தமிழகத்தில் 650 தியேட்டர்களில் 'லிங்கா' வெளியாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருக்கும் மொத்த திரையரங்குகளே 950 தான். இதில் புதிய படங்கள் வெளியிடும் திரையரங்குகள் 800க்கும் குறைவு. இதில் 650 தியேட்டர்களில் 'லிங்கா' வெளியாக வாய்ப்புகள் உள்ளன. அப்படியானால் 80 சதவீதத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் 'லிங்கா' தான் ஓடும்.

தியேட்டர்களுக்கு நெருக்கடி தரும் 'எம்.ஜி.'

தியேட்டர்களில் திரைப்படங்கள், 'டேர்ம்ஸ்' அடிப்படையில்தான் திரையிடப்பட்டு வருகின்றன. திரைப்படங்களை திரையிடுவதால் கிடைக்கும் வசூலை, சதவீத அடிப்படையில் தயாரிப்பு தரப்பும், தியேட்டர் உரிமையாளரும் பிரித்துக்கொள்வதுதான் டேர்ம்ஸ் முறை.

ஆனால் 'லிங்கா' இந்த முறையில் வெளியாகவில்லை. 'லிங்கா' படம் தியேட்டர்களுக்கு எம்.ஜி. முறையில், அதாவது மினிமம் கியாரண்டி அடிப்படையில் விற்கப்படுகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் வெளியாவதுதான் தியேட்டர்களுக்கு சிக்கல். அப்படி என்ன சிக்கல் என்கிறீர்களா?

மினிமம் கியாரண்டி அடிப்படையில் வெளியாகும் படங்களுக்கு, அந்த படத்துக்கு வினியோகஸ்தர்கள் நிர்ணயிக்கும் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். உதாரணத்துக்கு 'லிங்கா' படம் ஒரு தியேட்டருக்கு 20 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டால், படம் வெளியாவதற்கு முன்னர் பணத் தை செலுத்தி, படத்தை பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர் அந்த தொகையை வசூல் செய்து கொள்ள வேண்டியது தியேட்டர்களின் பொறுப்பு.

மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கும் இந்த படம், வாங்கிய விலை அளவுக்கு வசூலாகாவிட்டால், அதற்கு தயாரிப்பு நிறுவனங்களோ, வினியோகஸ்தர்களோ பொறுப்பாக மாட்டார்கள். அதனால் விற்ற தொகையை வசூலிக்க வேண்டியது தியேட்டர்களின் பொறுப்பாக மாறுகிறது.

கடைசியில் நமது தலையில்

80 சதவீதத்தும் அதிகமான தியேட்டர்களில் 'லிங்கா' தான் ஓடும் என்பதால், லட்சங்களில் வாங்கப்படும் படத்தை, தியேட்டர்களில் போட்ட சில தினங்களில் முழு வசூலையும் எடுக்க வேண்டிய கட்டாயம் தியேட்டர்களுக்கு. அதிக பட்சம் திரையிடப்பட்ட ஒரு வாரத்தில் இந்த பணத்தை எடுக்க வேண்டியது அந்த தியேட்டரின் பொறுப்பு. மிக பெரும்பாலான தியேட்டர்களில் 'லிங்கா' தான் ஓடும் என்பதால், எவ்வளவு சீக்கிரம் பணத்தை எடுக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்லது. இதனால் படத்தின் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தினால் மட்டுமே லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் தியேட்டர்களுக்கு நஷ்டம் தான்.

குறிப்பாக 20 லட்சத்துக்கு கொடுத்து 'லிங்கா' திரைப்படத்தை வாங்கினால், குறைந்த பட்சம் ரூ.200 முதல் ரூ.300 வரை டிக்கெட் விலையை நிர்ணயிக்க வேண்டும். 600 பேர் அமரக்கூடிய தியேட்டரில் சராசரியாக டிக்கெட் விலை ரூ.200 என்றால், ஒரு நாளில் 4 காட்சிகளில் 4.80 லட்சத்தை எடுக்க முடியும். படம் வெளியாகி முதல் நான்கு நாட்கள் ஹவுஸ்புல்லாக ஓட்டி விட்டால், போட்ட தொகையை எடுத்து விடலாம் என்பதுதான் நிலைமை.

எனவே கடைசியில் பார்வையாளர்களாகிய நம்மிடம்தான் அடித்து பிடுங்குகின்றனர். ஹீரோ சம்பளத்தில் துவங்கி, தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் என எல்லோருடையா லாபமும் ஒட்டுமொத்த சுமையாய் மாறி, டிக்கெட் விலையாக நமது தலையில்தான் விடிகிறது.

இத்தனை திரையரங்குகளில் வெளியாவது ஏன்?

இவ்வளவு சிரமத்துகிடையே 'லிங்கா' படத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது ஏன்? என நீங்கள் கேட்கலாம். அதற்கும் காரணம் இருக்கிறது. ரஜினியின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்ந்து வருகிறது. ஓரிரு படங்களை தவிர படத்தைப் பற்றிய எந்த விமர்சனமும் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைத்ததில்லை.

'லிங்கா'வுக்கு இதையெல்லாம் கடந்து ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எனவே படத்தை வெளியிட்டால் அதிகபட்சம் முதல் ஒரு வாரத்தில் பணத்தை எடுத்து விடலாம். அதன் பின்னர் வருவதெல்லாம் லாபம் என்பது தியேட்டர் உரிமையாளர்களின் கணக்கு.

அடுத்து 'லிங்கா' வெளியாகும் டிசம்பர் 12 முதல் கிட்டத்தட்ட பொங்கல் பண்டிகை வரை வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. அப்படி வெளியானால் அதை வினியோகிக்கவும், திரையிடவும் யாரும் இல்லை. எனவே லிங்காவை வெளியிட்டு லாபம் பார்ப்பது ஒன்றுதான் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வழி.

டிசம்பர் 12 முதல் ஜனவரி இரண்டாவது வாரம் வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் நீங்கள் விரும்பினாலும் 'லிங்கா'வை தவிர வேறு படங்களை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தில் மட்டும் 650 முதல் 700 தியேட்டர்களில் 'லிங்கா'தான் ஓடுமாம். வார வாரம் படத்துக்கு போகிறவர்கள், வார வாரம் 'லிங்கா'வை தான் தரிசிக்க முடியும். வேறு எந்த படங்களுக்கும் ஜனவரி வரை இடமில்லை.

ரூ.300க்கு விற்றாலும் ஆச்சரியமில்லை

'லிங்கா' திரைப்படத்தின் டிக்கெட் விலை குறைந்த பட்சம் ரூ.150ல் துவங்கி ரூ.300 வரை விற்கப்படும் என்கிறார்கள் திரைத்துறையினர். தமிழகத்தை பொறுத்தவரை சாதாரண தியேட்டரில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் குறைந்த பட்சமாக வகுப்பு வாரியாக ரூ10, ரூ.30, ரூ.50 என டிக்கெட் விலையை நிர்ணயிக்கலாம் என்பது விதி. ஆனால் லிங்கா வெளியாகி ஒரு சில தினங்களுக்கு எல்லா வகுப்புகளுக்கும் ரூ.150 முதல் ரூ.200 வரை டிக்கெட் விலை இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே எந்திரன் பட வெளியீட்டின் போது இதுதான் நடந்தது. ரூ.150, ரூ.200க்கு டிக்கெட் விற்கப்பட்டாலும் கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் ரூ.50 என்று தான் இருக்கும். இல்லாவிட்டால் டிக்கெட்டில் விலையே இருக்காது.

பல தியேட்டர்களை கொண்ட மல்டி பிளக்ஸ்கள் டிக்கெட் விலை யை உயர்த்த செய்யும் வித்தைகள் புது விதம். மல்டிபிளக்ஸ்களில் ஒரு டிக்கெட் விலை ரூ.85 முதல் ரூ.120 வரை விற்கலாம் என்கி றது சட்ட விதி. ஆனால் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய் வதன் மூலம் ரூ.200 வரை விற்க முடியும். கூடுதலாக பெறும் பணத்துக்கு, சிறிய குளிர்பான பாட்டிலோ அல்லது சிறிய பாப்கார்ன் பொட்டலமோ வழங்கப்படும். இது 100 ரூபாயா? என நீங்கள் கேட்க முடியாது. இந்த குளிர்பானத்தையோ, பாப்கார்னையோ மறுக்கும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படாது.

நடிகரின் சம்பளத்தால் தயாரிப்பு செலவு கூடுகிறது. தயாரிப்பு செலவு அதிகரிப்பதால், கூடுதல் விலைக்கு விற்க வேண்டியுள் ளது. கூடுதல் விலைக்கு பெறுவதால் தியேட்டர்களுக்கு அதிக விலைக்கு விற்க வேண்டியது கட்டாயமாகிறது. அதிக விலைக்கு படத்தை பெறுவதால் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எல்லோரும் லாபம் பார்க்க கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ஆனால் இதில் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு 3 மணிநேரம் நமது பொழுதை போக்க தியேட்டருக்குள் நுழையும் நாம் மட்டும், ஏன் வழக்கத்துக்கு மாறாக இது போன்ற சில படங்களுக்கு மட்டும் அநியாய விலை கொடுக்க வேண்டும். ரசிகர்கள் இதில் எல்லாம் கணக்கா பார்க்கிறார்கள் என்ற குருட்டு தைரியம்தான் இத்தனை பேரையும் இப்படி கூடுதல் விலைக்கு விற்க வைக்கிறது?.

ஆனால் இதைப்பற்றி எல்லாம் நமக்கென்ன கவலை?

"அட 'லிங்கா' படத்துக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சாப்பா? எவ்வளவா இருந்தாலும் பரவாயில்லை. ரெண்டு டிக்கெட் புக் பண்ணிரு. தலைவர் படத்த முதல் நாள் முதல் ஷோ பார்க்கனும்ல! "

-ச.ஜெ.ரவி

ALL INDIA PRE-MEDICAL / PRE-DENTAL ENTRANCE TEST AIPMT - 2015 CENTRAL BOARD OF SECONDARY EDUCATION

DATE OF ENTRANCE TEST

AIPMT - 2015 
03-05-2015 (SUNDAY) 10:00 am (IST)


In compliance with the directives of the Hon'ble Supreme Court of India, the Central Board of Secondary Education, Delhi would be conducting the All India Pre-Medical/Pre-Dental Entrance Test, for the academic session 2015-16. This entrance test is being conducted for the 15% merit positions in the Medical/Dental Colleges of India as specified in the directives of the Supreme Court and will be governed by the rules and regulations specified for the same by the Ministry of Health and Family Welfare, Government of India from time to time.

There are also State Governments/Universities/Institutions voluntarily participating in the All India Pre-Medical/Pre-Dental Entrance Test - 2015 for using its merit list for admission in the Medical Colleges/Dental Colleges against seats under their control.

The responsibility of the CBSE is limited to the conduct of the entrance test, declaration of result and providing merit list to the DGHS and participating States/Universities/Institutions.

The counselling for successful candidates under 15% All India Quota seats is conducted by the DGHS and the Counselling for admission in seats under the control of other participating States/Universities/Institutions shall be conducted by their respective Authorities.

UGC hikes basic fellowship amount, scholarships

Return to frontpage


The University Grants Commission late on Monday revised fellowship and scholarship amounts for scholars of various schemes under the Ministry of Human Resource Development.

“The Expert Committee for bringing parity among all existing Fellowship and Scholarship Schemes of UGC, in its meeting held on November 17, has recommended revised rates of fellowships/scholarships amount for scholars under various schemes,” it said in a notice on its website.

The revised rates for 15 such schemes are applicable with effect from December 1.

Emeritus Fellowship has been hiked from ₹20,000 to ₹31,000 per month. Similarly, BSR-Faculty fellowship has been raised from ₹30,000 to ₹46,500 per month. Also, Swami Vivekananda Single Girl Child Scholarship for Research in Social Science has been brought up from ₹8,000 in first two years and ₹10,000 for third and fourth year to ₹12,400 and ₹15,500 respectively.

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW

THINGS INDIVIDUAL TAXPAYERS SHOULD KNOW  TIMES OF INDIA 02.02.2026 The slab rates for individuals under both the old and new tax regimes rem...