Saturday, December 6, 2014

எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?

Photo: எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?
http://bit.ly/1vTQzSq

சிகரெட்டை பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்று அரசு சொல்வதன் நோக்கமே அதை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும்; அதன்மூலம் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதுதான். ஆனால் இந்த நிறுவனங்களோ இதற்கும் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்துவிடுகின்றன..

சிறப்பு பகிர்வை முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/1vTQzSq

புகையிலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து சாட்டையை சுழற்றி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பொருட்கள் விற்பனை மூலம் அரசுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றபோதிலும், அரசு அதனை பொருட்படுத்தவில்லை. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த உடனேயே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிகரெட் மீது 72 சதவிகித வரியும், பான்பராக் போன்ற போதை பாக்குகள் மீது 70 சதவிகித வரியும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் புகையிலைப் பயன்படுத்துவோரின் வயதுவரம்பை 18ல் இருந்து 25 ஆக உயர்த்தி இருப்பதுடன் பொது இடங்களில் புகைத்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையையும் பல மடங்கு உயர்த்த திட்டமிட்டிருக்கிறது அரசு. மேலும், சிகரெட்டை ஒன்றிரண்டாக விற்பனை செய்யாமல் பாக்கெட், பாக்கெட்டாக மட்டுமே விற்க வேண்டும் எனவும் விதிமுறை கொண்டு வருவதற்கு ஆலோசனை நடந்து வருகிறது.

அரசு விடாக்கண்டன் என்றால் சிகரெட் கம்பெனிகள் கொடாக்கண்டன்களாக இருக்கின்றன. சிகரெட் விற்பனை என்பதே ஒன்றிரண்டாக விற்பதுதான். பாக்கெட் கணக்கில்தான் வாங்க முடியும் என்றால் பலரும் சிகரெட் வாங்க மாட்டார்கள். வியாபாரம் படுத்துவிடும். இதனால், இப்போது சிகரெட் கம்பெனிகள் வெறும் 2 சிகரெட்டுகளை மட்டும் வைத்து சிறிய பாக்கெட்டுகளை தயாரித்துவிட்டன. பரிசோதனை முறையில் சில நகரங்களில் விற்கப்படும் இந்த 2 சிகரெட்டுகளை கொண்ட பாக்கெட், விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

சிகரெட்டை பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்று அரசு சொல்வதன் நோக்கமே அதை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும்; அதன்மூலம் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதுதான். ஆனால் இந்த நிறுவனங்களோ இதற்கும் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்துவிடுகின்றன. சிகரெட் விற்பனையை தடை செய்யாமல் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும், அச்சுறுத்தும் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலமும் புகைப்பதை கட்டுப்படுத்திவிட முடியாது.

எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?

- சிபி

MANAV RACHNA INTERNATIONAL UNIVERSITY DOES NOT WANT DEEMED UNIVERSITY TAG

NEW DELHI: A peculiar situation has arisen in the deemed university case as Manav Rachna International University, one of the seven deemed universities that pleaded before the Supreme Court for inspection of its campus, has written to HRD ministry seeking withdrawal of deemed university status.

Sources said, Faridabad-based Manav Rachna is likely to seek state university status which many private universities are opting for now. Becoming a state university will keep Manav Rachna in the business. In case, UGC-appointed committee gives an adverse report, seven of these universities will find it difficult to continue.

However, it is not going to be easy for Manav Rachna to get rid of the deemed university status. Sources said, "Since the matter is sub-judice the decision can be taken only by the Supreme Court. After all, Manav Rachna was in favour of inspection of its campus."

Meanwhile, the UGC-appointed committee headed by its secretary J S Sandhu and also consisting of S P Goyal, joint secretary, HRD ministry has finished inspecting three of the seven deemed universities. Goyal has sent a note recusing himself from the committee on the ground that it is a conflict of interest.

He looks after UGC in the ministry and the report of the committee will be handled by him. "It will become difficult for the ministry to question UGC committee report since its senior official will be a part of it," one official said.

Already, many deemed universities have pointed out that the formation of the committee is against UGC regulation of 2009 that clearly states how to form them. The present committee is a complete violation of the UGC norms.

The regulation says the committee should consist of two serving or retired vice-chancellors of any central or state university; not less than three and not more than five members, at least one being woman, from amongst professors having special knowledge of the courses being conducted in the university; one member from each of the councils with jurisdiction over the courses in the university and one member from National Academic and Accreditation Council. Regulation also says that the committee should be headed by one of the two VCs.

Meanwhile, sources said, others in the list of seven are also seeking legal advice of getting out of the deemed university status. Apart from Manav Rachna, others being inspected are Vinayaka Mission's Research Foundation, Academy of Maritime Education & Training, Bharath Institute of Higher Education & Research, Ponnaiyah Ramajayam Institute of Technology & Science, Maharshi Markandeshwar University, and Institute of Advanced Studies in Education.

6.12.2014 BIG PUSH FOR INCLUSION...TIMES OF INDIA CHENNAI EDITION

imggallery

DINAMALAR NEWS

கேந்திரிய வித்யாலயா: தமிழும் ஜெர்மனும்


கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் அல்லது ஜெர்மன் என்று இருந்த மொழிப் பாடத்தில் ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு சம்ஸ்கிருத மொழியை மட்டும் கற்றுத் தர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியை உச்சநீதிமன்றம் தடுத்திருக்கிறது.

சம்ஸ்கிருத மொழியைச் சொல்லித் தரக் கூடாது என்றோ ஜெர்மன் மொழியை எடுக்கக் கூடாது என்றோ உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. கல்வி ஆண்டின் நடுவில் இப்படிப் பாடத் திட்டத்தை மாற்றுவதற்குத் தடை விதித்திருக்கிறது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜெ. ஹெலன் டேவிட்சன் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் தமிழ் மொழி சொல்லித் தரப்பட வேண்டும் என்று 8-5-2013 அன்று நாடாளுமன்ற விதி 377-இன்கீழ் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

இராணுவத்தில் பணியாற்றுகிறவர்களின் பணியிட மாற்றங்களால் குழந்தைகளின் படிப்புக்கு இடையூறு வரக் கூடாது என்பதற்காக 1962-இல் தொடங்கப்பட்ட மத்திய அரசுப் பள்ளிகள் (Central schools) பின்னர் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளாகப் பெயர் மாற்றம் பெற்றன.

பின்னர், இராணுவத்தினரின் குழந்தைகளுக்காக இராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்டதும் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மற்றவர்களுக்கும் இடம் கிடைத்து வருகின்றன.

இந்தியாவில் 1,090 பள்ளிகளும் காத்மண்டு, மாஸ்கோ, தெஹ்ரான் (ஈரான்) என்று வெளிநாடுகளில் மூன்றுமாக 1,093 கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றின் தலைநகரம் புது தில்லி. மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையின் கீழ் இப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

2012-இல் இப்பள்ளிகளில் 11,21,012 மாணவர்கள் படித்துள்ளனர். ஆசிரியர்களும் பணியாளர்களுமாக 56,445 பேர் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 44 பள்ளிகள் உள்ளன.

2012-13 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2454.34 கோடி (திட்டம் சாராப் பணிகளுக்கு ரூ.2104.34 கோடி, திட்டம் சார்ந்த பணிகளுக்கு ரூ.350 கோடி). முதல் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை இப்பள்ளிகளில் மாணவர்கள் இருபாலரும் சேர்ந்து படித்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தொடக்க நிலையில் நடைமுறையில் உள்ளது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குழந்தைகளுக்கும் கேந்திரிய வித்யாலயாவில் பணிபுரிவோர் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக உள்ள பெண் குழந்தைகளுக்கும் கட்டணம் இல்லை.

கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் இந்தியா முழுதும் ஒரே மாதிரியான பொதுப்பாடத் திட்டம்தான் உள்ளது. கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலமும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலமும் இந்தியும் பயிற்றுமொழிகளாக உள்ளன.

முதல் ஐந்து வகுப்புகளுக்குப் பாடமொழிகளாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம், இந்தி, சம்ஸ்

கிருதம் அல்லது ஜெர்மன் என்று மூன்று மொழிகளும் பாடமொழிகளாக உள்ளன.

ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் ஆங்கிலம், இந்தி அல்லது சம்ஸ்கிருதம் என்று இரண்டு மொழிகள் பாடமொழிகளாக உள்ளன. 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் கணிதப் பிரிவு எடுப்போர்க்கு ஆங்கிலம் மட்டுமே பாடமொழி. பிற பிரிவுகளில் படிப்போர்க்கு ஆங்கிலமும் இந்தியும் பாடமொழிகள்.

இந்தியாவில் சம்ஸ்கிருதம் அல்லது ஜெர்மன் மொழியும் மாஸ்கோவில் பிரெஞ்சு அல்லது ருஷ்ய மொழியும் பாடமொழிகளாக இருந்து வருகின்றன. வேலை

வாய்ப்பினைக் கருதி இந்தியாவில் சம்ஸ்கிருதத்தைப் படிக்காமல் ஜெர்மன் மொழியைப் படிக்க மாணவர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு சம்ஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்த எண்ணியது.

ஜெர்மனி அரசு, இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் ஜெர்மன் மொழியை நீக்கக் கூடாது என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி இருக்கிறது.

ஹெலன் டேவிட்சன், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளுக்கு 26-6-13 அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கேந்திரிய வித்யாலயாவின் கல்வி விதியின் 112-ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மாநில மொழி அல்லது தாய்மொழியைக் கற்க 20 அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் கூடுதல் ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும் என்றும் இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களைத் துணை ஆணையரின் அனுமதி பெற்று நியமித்துக் கொள்ளலாம் என்றும் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரையிலும் தேவைப்பட்டால்

ஒன்பது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்கூட கற்றுத் தரலாம் என்றும் பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் 2013 - 14-ஆம் கல்வி ஆண்டிலிருந்தே தமிழகக் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்றும் இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை 1-7-2013-க்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளன.

தேர்ச்சி பெறுவதற்குத் தமிழ்ப் பாடத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் தமிழகக் கேந்திரியப் பள்ளிகள் பலவற்றில் தமிழ்மொழியைக் கற்றுத் தர போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம் (சென்னை), துணை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் மொழி இருக்க வேண்டும் என்று ஜெர்மனி அரசு வற்புறுத்துகிறது. நாமும் ஜெர்மன் மொழி இருக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம்.

முன்னரே ஆணையிட்டும் தமிழைத் தொடங்காமல் உள்ள தமிழகக் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளிலும் தமிழைக் கற்றுத் தர வேண்டுமென்று குரல் வந்ததாகத் தெரியவில்லை.

மாஸ்கோவில் உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் பிரெஞ்சு அல்லது ருஷ்யன் என்றிருப்பதைப் போல, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் அல்லது சம்ஸ்கிருதம் என்று வைக்கலாம்.

முடிந்தால் கேந்திரியப் பள்ளிகளில் இந்தியா முழுதும் தமிழ் அல்லது சம்ஸ்கிருதம் என்று பாடமொழியை மாற்றலாம். அல்லது விருப்பப் பாட மொழியில் தேர்வு இல்லை என்பதால் இரண்டு மொழிகளையும் விருப்பப் பாடமாகச் சேர்க்கலாம்.

உலகச் செம்மொழிகளில் தமிழும் சம்ஸ்கிருதமும் இடம்பெற்றிருப்பதைப் போல கேந்திரியப் பள்ளிகளிலும் இடம்பெறுவது பண்பாட்டு இந்தியாவைப் பார்க்கத் துணை செய்யும்.

கேந்திரியப் பள்ளிகளின் நோக்கங்களில் இந்திய ஒருமைப்பாட்டை மாணவர்கள் மனதில் வளர்த்தல் வளரும் தலைமுறையை இந்தியராக உணரச் செய்தல் ஆகியவை குறிப்பிட்த் தக்கவையாக உள்ளன.

இந்தியப் பண்பாட்டு வரலாறு தமிழைத் தவிர்த்து எழுத முடியாது.

கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளின் நோக்கங்கள் பண்பாட்டின் அடித்தளத்தில் நிறைவேற்றப்பட வேண்டியவை. அவை நிறைவேற, தமிழ்மொழி

தொல்லையாக இருக்காது. மாறாக வேறு எந்த மொழியை விடவும் துணையாக இருக்கும்.



கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு கிடையாது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி,

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் 3-வது மொழியாக பயிற்றுவிக்கப்படும் என்றும், ஆனால் இந்த கல்வியாண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

சமஸ்கிருத பாடம்

கடந்த அக்டோபர் 27-ந் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில், மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடத்தை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஏற்கனவே படித்து வரும் ஜெர்மன் மொழிக்கு பதிலாக புதிதாக சமஸ்கிருத மொழியை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வி.எஸ்.ராமநாதன் உள்ளிட்ட பெற்றோர் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

தேர்வு கிடையாது

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, நடப்பு கல்வியாண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ-மாணவியர் ஜெர்மன் மொழி பாடத்தை கூடுதல் பாடமாக தொடரலாம் என்றும், சமஸ்கிருத பாடத்தில் இந்த நடப்பு கல்வியாண்டில் தேர்வு எதுவும் இருக்காது என்றும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த முடிவு மத்திய அரசின் உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறி, இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணைச்செயலாளர் எழுதியுள்ள கடிதத்தின் நகலையும் கோர்ட்டில் அப்போது அவர் தாக்கல் செய்தார்.

கோர்ட்டு வழிகாட்டுதலின் படியும், மாணவ-மாணவியருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையிலும் மூன்றாவது மொழியாக ஜெர்மன் பயிலும் மாணவ-மாணவியருக்கு சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிகளில் இந்த நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு எதுவும் நடத்தப்படமாட்டாது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதி கருத்து

இது நல்ல தீர்வு என்றும், புதிதாக அறிமுகப்படுத்தும் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு எதுவும் நடக்காது என்றும் உறுதியளித்து இருப்பதால் மாணவர்களுக்கு அழுத்தம் எதுவும் இருக்காது. ஒரு தந்தையாகவும் இதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி அனில் ஆர்.தவே கருத்து தெரிவித்தார்.

அப்போது, மனுதாரர்களான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரின் பெற்றோர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ரீனா சிங், மத்திய அரசாங்கம் தற்போது முன் வைத்திருக்கும் இந்த முடிவு குறித்து தன்னுடைய கட்சிக்காரர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தங்கள் தரப்பு பதிலை முன்வைக்க சிறிது அவகாசம் தேவை என்று கூறினார்.

ஒத்திவைப்பு

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அறிமுகம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் பொதுவாக அறிவுறுத்தினர்.

சமையல் எரிவாயு மானியம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறைகள் என்ன? எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்



சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதுபற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஜனவரியில் அமல்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

வங்கியில் மானியம்

மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.

அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும்.

எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் இதில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான்.

யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.

ஆதார் இல்லாவிட்டால்

ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும்.

வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...