Saturday, December 6, 2014

ABOUT THE DIRECT BENEFIT TRANSFER OF LPG SCHEME


  • Consumers will need a bank account to join the scheme and receive LPG subsidy
  • Consumers will also get one time permanent advance in their bank account prior to buying the first market priced LPG cylinder
  • Consumers will receive subsidy in their bank account as per their entitlement of subsidized cylinders
  • Till consumers join the scheme they will get cylinders at:
    • Subsidized price for 3 months w.e.f 15.11.2014 till 14.02.2015
    • Market price for next 3 months, but the subsidy due will be given to them if they join the scheme within these 3 months i,e till 14.05.2015
  • W.e.f 15.05.2015 all LPG consumers will get cylinders at market price and only those who join the scheme will receive one time permanent advance & subsidy from the date of joining
  • To join the scheme and receive subsidy, consumers should use, Option 1 if they have Adhaar andOption 2 if they don't have Aadhaar:
SOURCE: MINISTRY OF PETROLIUM AND NATURALGAS WEBSITE 

நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர ஆதார் எண் அவசியமில்லை: வங்கி கணக்கு கட்டாயம் தேவை

மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டம் அடுத்த மாதம் அமல்படுத்தப் பட உள்ளது. இதன்படி நேரடி காஸ் மானியம் பெற ஆதார் எண் அவசியம் இல்லை. ஆனால் வங்கி கணக்கு வைத்து இருப்பது கட்டாயம் ஆகும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடி காஸ் மானியம் பெற, காஸ் ஏஜென்சியிடம் படிவம் 3,4 பெற்றுக் கொள்ள வேண்டும். படிவம் மூன்றில் தனிநபர் விவரங்கள் மற்றும் காஸ் நிறுவனம் எஸ்.எம். எஸ் மூலம் அனுப்பும் 17 இலக்கு கொண்ட காஸ் எண்ணை பூர்த்தி செய்து வங்கியில் கொடுக்க வேண்டும். படிவம் நான்கில் தனிநபர் விவரம், 17 இலக்கு கொண்ட நுகர்வோர் காஸ் எண்ணை பூர்த்தி செய்து ஏஜென்சியில் ஒப்படைக்க வேண்டும். அவற்றுக்கு ரசீது வழங்கப்படும். ஆதார் எண் உள்ள வர்கள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் கொண்டு ஏஜென்சி யில் விநியோகம் செய்யப்படும் மானிய திட்டத்துக்கான படிவம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். படிவம் ஒன்றில் தனிநபர் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை பூர்த்தி செய்து அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதனை பெற்றுக் கொண்டு வங்கி அதிகாரிகள் ஒப்புகை ரசீதை வழங்குவார்கள்.

படிவம் இரண்டில் தனிநபர் விவரத்தைக் குறிப்பிட வேண்டும். அதே படிவத்தில் ஆதார் அட்டை நகல் எடுப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மட்டும்தான் ஆதார் அட்டை நகல் எடுத்து தரவேண்டும். இந்த இரண்டாவது படிவத்தை காஸ் ஏஜென்சியில் கொடுத்த பின்பு அவர்களும் ஒப்புகை ரசீது வழங்குவார்கள்.

இது குறித்து காஸ் ஏஜென்சி வைத்துள்ள சப்தரிஷி என்பவர் கூறும்போது, “நுகர்வோரின் காஸ் முகவரி மற்றும் ஆதார் எண் முகவரி ஒரே இடத்தில் இருக்க வேண்டும். முகவரி மாறி இருந்தால் தற்போது உள்ள முகவரியின் ரேஷன் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அரசு அத்தாட்சி அல்லது வீட்டின் வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற் றின் நகலை ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். வங்கி கணக்கு எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆதார் எண் அவசியம் இல்லை” என்றார்.

படிவம் வாங்க செல்லும் நுகர்வோர்கள் காஸ் பில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். புகைப்படம், காஸ் பாஸ் புக் போன்றவை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. நுகர்வோர்கள் படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். காஸ் நிறுவனங்க ளின் ஆன்லைன் முகவரியிலும் படிவங்களைப் பூர்த்தி செய்து ஏஜென்சியிடம் ஒப்படைக்கலாம். இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள இண்டேன், இந்துஸ்தான், பாரத் ஆகிய பொதுத்துறை நிறு வனங்களின் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு பொருந்தும்.

நுகர்வோர் மானிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கான தகவல், திட்டத்தை அரசு அமல்படுத்தியதும் காஸ் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்தும். காஸ் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர்கள் நேரடி காஸ் மானிய திட்டத்தில் ஜூன் மாதத்துக்குள் சேர வேண்டும்.

ஃபேஸ்புக்கில் மத உணர்வைத் தூண்டும் கருத்துக்கள்: நடவடிக்கை கோரி மனு!

சென்னை: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மத உணர்வைத்துண்டும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடுவோர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நிர்வாகிகள், சென்னை காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் யூசுப் மற்றும் நிர்வாகிகள்இன்று சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனரைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யூசுப், "இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியால் சோஷியல் மீடியாக்கள் எல்லாமே, மக்களுக்கு மத்தியில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு நல்ல காரியங்களுக்கும், நல்ல செய்திகளை உலகமெல்லாம் பரப்புவதற்கும் பயன்படுகின்றன.

ஆனாலும், மத உணர்வுகளைத் தூண்டும் செய்திகளையும் பேஸ்புக் போன்று பல்வேறு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். சமீபகாலமாக மறைந்த தலைவர்களைப் பற்றியும், மதநம்பிக்கையினால் புனிதமாகக் கருதப்படக்கூடியவர்களின் கண்ணியத்தை சிதைக்கும் விதமாகவும் முகநூலில் விஷமக் கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் வாழக்கூடிய அனைத்து மக்களும் அமைதியோடு வாழவே விரும்புகிறோம். அனைத்து சமூக மக்களும் இந்த நாட்டில் அமைதியுடன் இருக்கவே விரும்புகிறோம். மத்திய அரசு தனது கொள்கைகளைப் பேசும்போது இந்த நாட்டின் அமைதிதான் வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்கிறது. ஆனால் இந்த நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக சமூகவலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெகுஜன ஊடகங்களும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இதனைக் கண்டறிந்து அப்படிப்பட்டவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும். நாம் மறந்தவர்களை, தொடர்பு விட்டுப்போனவர்களை கண்டறியப் பயன்படும் முகநூலை இதுபோல் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் விதமாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

அவரவர் மதம் அவரவருக்குப் புனிதமானது. யாரும் யாரையும் சீண்டக்கூடாது, காயப்படுத்தக்கூடாது என்பது எங்களின் நம்பிக்கை. முஸ்லிம்களில் அப்படியான காரியங்களைச் செய்வார்கள் என்றால் அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்தான். இந்த நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதி நிலவினால் மட்டும்தான் வளமும், வளர்ச்சியும் உறுதிசெய்யப்படும். அதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்திருக்கிறார்கள்" என்றார்.

- எம்.செய்யது

அலைபேசி... அப்புறம் பேசி அலை!


எந்த ஒரு டெக்னாலஜிக்கும் கிடைக்காத பெருத்த வரவேற்பு செல்பேசிக்குக் கிடைச்சிருக்கு. கையில வாட்ச் கட்டியிருக்கோமோ இல்லையோ செல்பேசி இல்லாத மனிதர்களைப் பார்க்கிறது அபூர்வம்னு ஆயிடுச்சு. எப்படியெல்லாம் செல்போன்ல சிக்கி சின்னாபின்னமாகுறாங்கனு பார்ப்போமா.

பேருந்துகளில் டிராவல் பண்றப்போ, மூன்று பேராவது மாறி, மாறி போன்ல பேசிட்டுதான் இருப்பாங்க. அந்த மூன்று பேரிலும் யாராவது ஒருத்தர்தான் உண்மையைப் பேசுறவரா இருப்பார். லோக்கலில் இருந்துகிட்டே "நான் சிங்கப்பூர்ல இருக்கேன்"னு சொல்ற மாதிரி, அமிஞ்சிக்கரையில இருந்துகிட்டு, அடையாறு வந்துட்டேன்னு பொய் சொல்ற மக்கள்தான் அதிகம். அதுவுமில்லாம ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். வண்டி ப்ரேக் டவுன் ஆயிடுச்சு. எங்க ஏரியாவுல பயங்கர கலாட்டானு விதவிதமா ரீல் விடுறதுக்கும் செல்பேசியைத்தான் பயன்படுத்துறாங்க. ஆக, பொய் விரும்பிகளின் பேராதரவோடதான் செல்பேசிகள் இந்த அளவு சேல்ஸ் ஆகிட்டு இருக்கு.

பஸ் ஸ்பீடா போய்க்கிட்டிருக்கறப்போ அந்த பஸ்ஸுக்குள்ளேயே பல பேர் டெம்பிள் ரன்னில் தலைதெறிக்க ஓடிக்கிட்டு இருக்காங்க. இன்னும் சிலர் ப்ரூட் கிரஷ், மான் வேட்டைனு செல்போன் கேம்ஸ்தான். இதில் செக்கிங் வந்து உலுக்கு உலுக்குனு உலுக்கின பிறகுதான் டிக்கெட் எடுக்காத மேட்டரே பலருக்கும் தெரிய வருது. விளையாட்டு வினையாகிறது இதுதானோ.

கல்யாணத்துக்கு முன் லவ் பண்றதுக்கு தில்லு இல்லாத தில்லுதுரைகள்தான் கல்யாணம் நிச்சயமான மறுநொடியிலிருந்து லவ் பண்ணத் தொடங்குறாங்க. கத்து வெச்ச மொத்த வித்தையையும் இறக்குற மாதிரி, ராத்திரி பகல்னு வித்தியாசம் இல்லாமல், சோறு தண்ணியப்பத்திக்கூட கவலைப்படாமல், விடிய விடிய பேசிப் பேசியே செல்பேசி வழியா காதல் வளர்ப்பாங்க. இந்த மாதிரி திடீர் காதலர்களை நம்பித்தான் பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க ஆஃபரை கொண்டு வந்திருக்காங்க. கல்யாணம் நிச்சயமானப்போ, கோடீஸ்வரனா இருந்துட்டு, கல்யாணத்தன்னைக்கு லட்சாதிபதியா மாறிப்போன விபரீதமெல்லாம் இதுல சகஜம்.

இப்போ பஞ்சாயத்து ஆலமரம், மேடை, சொம்பெல்லாம் மலையேறிப் போயிடுச்சு. 'ஆன் தி வே'ல, செல்பேசி வழியா பெரும்பாலான பஞ்சாயத்து நடக்குது. பஞ்சாயத்து பண்றேன் பேர்வழினு, சுற்றி இருக்கிறவங்களையும் மறந்துட்டு, தப்பு பண்றவனை நாராசமா திட்டுறதுக்கும் தயங்குவதில்லை. மொத்தக் குடும்பத்தையும் திட்டித் தீர்த்த பிறகுதான், காசெல்லாம் கரைஞ்சிடுச்சேன்னு 'வடை போச்சே' ஃபீலிங்கே வரும். ஆக நாம நாட்டாமைத்தனம் பண்றதால தீர்ப்பென்னவோ செல்பேசி கனெக்‌ஷன் கொடுக்கிற முதலாளிகளுக்குத்தான் சாதகமா இருக்கு.

கூட்டுக் குடும்பமாவோ அல்லது ஒரே ஊருக்குள்ளயோ வாழ்ந்துகிட்டிருந்த காலத்துல கிசுகிசு பேசுறதெல்லாம் தண்ணிபட்ட பாடு. ஒரு எட்டு போனோமா, பேசி பத்த வெச்சோமா, வந்தோமான்னு இருந்தாங்க. இப்போதான் ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு போக ஆரம்பிச்சாச்சே. கிசுகிசுவெல்லாம் செல்பேசியில்தான் பெரும்பாலும்.

குளிர்காலம்னா நாம போர்வையைப் போர்த்திகிட்டு தூங்குறதுல ஒரு நியாயம் இருக்கு. போர்வைக்குள்ள செல்போனை வெச்சுகிட்டு விடிய விடிய வாட்ஸ் அப் சாட்டிங்னு தானும் தூங்காம, தள்ளியும் படுக்காம இருக்கிறது பேஷனாப் போயிடுச்சு. இதுல இந்த மெஸேஜை பத்து பேருக்கு ஃபார்வர்ட் பண்ணினால் நல்லது நடக்கும்னு அட்வைஸோட மெஸேஜ் வேற.

இவ்வளவும் போதாதுனு, சும்மா வர்ற கஸ்டமர் கேர் போனையும் விட்டு வைக்காமல் அதுல பேசுற பொண்ணுங்க கூடவும் கடலை போடுறதுக்கு தனி கூட்டமே திரியுது. ரியல் எஸ்டேட் விளம்பரத்திலிருந்து ரிசார்ட் விளம்பரம் வரைக்கும் ஒண்ணைக்கூட விட்டுவைக்காம கால் பண்ற பெண்களிடம் என்னவோ அம்பானி ரேஞ்சுல டீடெயிலெல்லாம் கேட்டுட்டு கடைசியில இப்போதான் நல்ல வேலை தேடிக்கிட்டிருக்கேன். வேலை கிடைச்சதும் முதல் மாச சம்பளத்துல நீங்க சொல்ற இடத்துக்கு அட்வான்ஸ் கட்டிடுறேன்னு சத்தியம் பண்ணி பந்தாவா பல் இளிக்கிறதே பழக்கமா வெச்சிக்கிறாங்க. இப்படியெல்லாம் இருக்குறப்போ செல்போன் கம்பெனி வளராம எப்பூடி!

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?

Photo: எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?
http://bit.ly/1vTQzSq

சிகரெட்டை பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்று அரசு சொல்வதன் நோக்கமே அதை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும்; அதன்மூலம் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதுதான். ஆனால் இந்த நிறுவனங்களோ இதற்கும் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்துவிடுகின்றன..

சிறப்பு பகிர்வை முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/1vTQzSq

புகையிலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து சாட்டையை சுழற்றி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பொருட்கள் விற்பனை மூலம் அரசுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றபோதிலும், அரசு அதனை பொருட்படுத்தவில்லை. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த உடனேயே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிகரெட் மீது 72 சதவிகித வரியும், பான்பராக் போன்ற போதை பாக்குகள் மீது 70 சதவிகித வரியும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் புகையிலைப் பயன்படுத்துவோரின் வயதுவரம்பை 18ல் இருந்து 25 ஆக உயர்த்தி இருப்பதுடன் பொது இடங்களில் புகைத்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையையும் பல மடங்கு உயர்த்த திட்டமிட்டிருக்கிறது அரசு. மேலும், சிகரெட்டை ஒன்றிரண்டாக விற்பனை செய்யாமல் பாக்கெட், பாக்கெட்டாக மட்டுமே விற்க வேண்டும் எனவும் விதிமுறை கொண்டு வருவதற்கு ஆலோசனை நடந்து வருகிறது.

அரசு விடாக்கண்டன் என்றால் சிகரெட் கம்பெனிகள் கொடாக்கண்டன்களாக இருக்கின்றன. சிகரெட் விற்பனை என்பதே ஒன்றிரண்டாக விற்பதுதான். பாக்கெட் கணக்கில்தான் வாங்க முடியும் என்றால் பலரும் சிகரெட் வாங்க மாட்டார்கள். வியாபாரம் படுத்துவிடும். இதனால், இப்போது சிகரெட் கம்பெனிகள் வெறும் 2 சிகரெட்டுகளை மட்டும் வைத்து சிறிய பாக்கெட்டுகளை தயாரித்துவிட்டன. பரிசோதனை முறையில் சில நகரங்களில் விற்கப்படும் இந்த 2 சிகரெட்டுகளை கொண்ட பாக்கெட், விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

சிகரெட்டை பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்று அரசு சொல்வதன் நோக்கமே அதை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும்; அதன்மூலம் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதுதான். ஆனால் இந்த நிறுவனங்களோ இதற்கும் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்துவிடுகின்றன. சிகரெட் விற்பனையை தடை செய்யாமல் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும், அச்சுறுத்தும் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலமும் புகைப்பதை கட்டுப்படுத்திவிட முடியாது.

எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?

- சிபி

MANAV RACHNA INTERNATIONAL UNIVERSITY DOES NOT WANT DEEMED UNIVERSITY TAG

NEW DELHI: A peculiar situation has arisen in the deemed university case as Manav Rachna International University, one of the seven deemed universities that pleaded before the Supreme Court for inspection of its campus, has written to HRD ministry seeking withdrawal of deemed university status.

Sources said, Faridabad-based Manav Rachna is likely to seek state university status which many private universities are opting for now. Becoming a state university will keep Manav Rachna in the business. In case, UGC-appointed committee gives an adverse report, seven of these universities will find it difficult to continue.

However, it is not going to be easy for Manav Rachna to get rid of the deemed university status. Sources said, "Since the matter is sub-judice the decision can be taken only by the Supreme Court. After all, Manav Rachna was in favour of inspection of its campus."

Meanwhile, the UGC-appointed committee headed by its secretary J S Sandhu and also consisting of S P Goyal, joint secretary, HRD ministry has finished inspecting three of the seven deemed universities. Goyal has sent a note recusing himself from the committee on the ground that it is a conflict of interest.

He looks after UGC in the ministry and the report of the committee will be handled by him. "It will become difficult for the ministry to question UGC committee report since its senior official will be a part of it," one official said.

Already, many deemed universities have pointed out that the formation of the committee is against UGC regulation of 2009 that clearly states how to form them. The present committee is a complete violation of the UGC norms.

The regulation says the committee should consist of two serving or retired vice-chancellors of any central or state university; not less than three and not more than five members, at least one being woman, from amongst professors having special knowledge of the courses being conducted in the university; one member from each of the councils with jurisdiction over the courses in the university and one member from National Academic and Accreditation Council. Regulation also says that the committee should be headed by one of the two VCs.

Meanwhile, sources said, others in the list of seven are also seeking legal advice of getting out of the deemed university status. Apart from Manav Rachna, others being inspected are Vinayaka Mission's Research Foundation, Academy of Maritime Education & Training, Bharath Institute of Higher Education & Research, Ponnaiyah Ramajayam Institute of Technology & Science, Maharshi Markandeshwar University, and Institute of Advanced Studies in Education.

6.12.2014 BIG PUSH FOR INCLUSION...TIMES OF INDIA CHENNAI EDITION

imggallery

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...