Saturday, December 6, 2014

சிலிண்டருக்கான மானியம் வேண்டுமா?

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே பல மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டாலும், ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது.

பாமர மக்களுக்கு மானியம் என்றாலோ, வங்கிக் கணக்கில் மத்திய அரசு பணத்தை செலுத்துகிறது என்றாலோ புரியவில்லை.

அதாவது, ஒவ்வொரு சிலிண்டரின் முழு விலையும் (சமீபத்தில் ரூ.113 குறைக்கப்பட்ட பிறகு) ரூ.752 ஆகும். இதில், ரூ.410ஐ நாம் சிலிண்டருக்கு செலுத்தி வாங்குகிறோம். மீதத் தொகையை மத்திய அரசு நாம் அளிக்கும் வரிப்பணத்தில் இருந்து நமக்காக மானியமாக செலுத்துகிறது. அந்த மானியத் தொகையை மத்திய அரசு கேஸ் நிறுவனங்களுக்குக் கொடுத்துவிடும். இதனால் வாடிக்கையாளர்கள் வாங்காத சிலிண்டர்களுக்கும் கேஸ் நிறுவனங்கள் கணக்கு காட்டி மானியத் தொகையை பெறும் வாய்ப்பு உள்ளது.

எனவே இனி ஒவ்வொரு காஸ் சிலிண்டருக்கும் உரிய மானியத் தொகையை நேரடியாகவே வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட்டால், அந்த தொகையை எடுத்து அவர்கள் சிலிண்டர் வாங்கிக் கொள்ளலாம். இதனால், மானியத் தொகையில் முறைகேடு நடப்பது தவிர்க்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவித்திருப்பதே நேரடி மானிய திட்டமாகும்.

இந்த திட்டத்தின்படி, காஸ் ஏஜென்சியிடம் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது வங்கிக் கணக்கு எண்ணையும், வங்கியிடம் காஸ் ஏஜென்சி அளிக்கும் விண்ணப்பத்தையும் கொடுத்து பதிவு செய்துவிட வேண்டும். பிறகு, சிலிண்டர் வீட்டுக்கு வரும் போது அதற்கான முழுத் தொகையையும் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய 3வது நாள், வீட்டு சிலிண்டருக்கான மானியம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் அனைவரும் மார்ச் 31–ந் தேதிக்குள் உரிய ஆவணங்களை ஏஜென்சிகளிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சிலிண்டருக்கான மானியம் பெற தங்கள் ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண்களை அவரவருக்கான காஸ் ஏஜென்சியிடம் பதிவு செய்ய வேண்டும். முன்பு, இந்த மானியம் பெற ஆதார் அட்டை அவசியம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது ஆதார் அட்டை அவசியமில்லை என்றும், வங்கி கணக்கு எண் மட்டுமே முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.டி.பி.ஐ., எஸ்பிஐ என 40 வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் அல்லது புதிதாக கணக்குத் துவங்கி தங்களது வங்கி கணக்கு எண்களை கேஸ் ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சரிங்க.. வெறும் கேஸ் ஏஜென்சியிடம் கொண்டு போய் கொடுங்கள் என்று சொன்னால் போதுமா.. என்னவெல்லாம் கொடுக்க வேண்டும் என்று தெரிய வேண்டாமா..

அதையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.. வாருங்கள் தொடர்ந்து படிக்கலாம்...

அதாவது, காஸ் ஏஜென்சிகளிடம் வாடிக்கையாளர்களின் காஸ் இணைப்பு பாஸ் புத்தகம் அசல் மற்றும் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதில் உண்மையான ஆவணங்களைக் காண்பித்து அவற்றுக்கான நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அதன் நகல், குடும்ப அட்டை மற்றும் நகல் (குடும்ப அட்டையின் வெளிப்பக்கம் மற்றும் காஸ் ஏஜென்சி சீல் உள்ள உள்பக்கத்தின் நகல்) இதோடு, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி. (வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இருக்கும்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

காஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் நேரில் சென்று காஸ் ஏஜென்சியில் கொடுக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால், வாடிக்கையாளரே நேரடியாக செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதார் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர் என்றால் விண்ணப்பம் 1 மற்றும் 2–ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டைக்கான நகல், வங்கி கணக்குப் புத்தகம், சிலிண்டருக்கான புத்தகத்தின் நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து காஸ் ஏஜென்சியிடமும், விண்ணப்பம் 2ஐ பூர்த்தி செய்து கணக்கு வைத்திருக்கும் வங்கியிடமும் அளிக்க வேண்டும்.

ஆதார் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பம் 3 மற்றும் 4–ஐ பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பம் 3ல் வாடிக்கையாளர் விவரம் மற்றும் எரிவாயு உருளைக்கான வாடிக்கையாளர் பதிவு எண் ஒன்று காஸ் ஏஜென்சி அளிக்கும். அதனை பதிவு செய்து வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பம் 4ஐ பூர்த்தி செய்து கேஸ் ஏஜென்சியிடம் தர வேண்டும். இதற்கு உரிய ரசீதை வாடிக்கையாளர்கள் கேட்டுப் பெற வேண்டும். அதனுடன் குடும்ப அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தகம், சிலிண்டருக்கான புத்தகத்தின் நகல்களை இணைக்க வேண்டும்.

படிவம் வாங்கச் செல்லும் போது நுகர்வோர் காஸ் பில்லை எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எதையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பங்கள் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. ஆன்லைனிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வங்கி கணக்கு எண்ணைப் பதிவு செய்ய மார்ச் 31ம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கிக் கணக்கைத் துவக்கி காஸ் ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும்.

இல்லாவிடில் நேரடி மானிய திட்டம் கிடைக்காமல் போய்விடும். மானியமில்லாமல் முழுத் தொகையையும் வாடிக்கையாளரே செலுத்தி சிலிண்டரை பெறும் நிலை ஏற்படலாம்.

Join Direct Benefit Transfer of LPG(DBTL) Scheme ... Link your Aadhaar Number to your bank Account by Form 1 and depositing at bank branch....Submit Form 2 to the LPG distributor






அல்வா கொடுக்காத ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை அல்வா!



எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஊரும் உறவோடும் கொண்டாடி மகிழ்வது தமிழர்களின் பண்பாடு. அத்தனை விஷயங்களிலும் தவறாது மகிழ்ச்சியின் அடையாளமாக நாம் முன்னிறுத்துவது இனிப்பு.

பழங்காலம் தொட்டே ஒவ்வொரு நல்ல காரியங்களையும் இனிப்புடனே தொடங்கி உள்ளனர் நம் தமிழ் மக்கள்.

இதனால்தான் தமிழர்களின் கலாச்சாரத்தில் எத்தனை எத்தனை இனிப்பு பட்சணங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அதில் ஒரு இனிப்பின் பெயரைச் சொன்னால், முகத்தில் புன்னைகையும் நாவில் கரைந்து செல்கிற உணர்வும் உடனே வெளிப்படும். அது அல்வா...

யாரிடமாவது நாம் ஏமாற்றப்பட்டால் 'அவன் எனக்கு அல்வா கொடுத்துட்டான் பா 'என்போம். ஆனால் தன் சுவையில் அல்வா என்றுமே ஏமாற்றுவதில்லை. முத்தாய்ப்பாக நாம சாப்பிடும் அல்வாவிற்கு மூன்று மாதம் வரை கியாரண்டி தருகிறது , மதுரை கீழ ஆவணி மூல வீதியில் இருக்கும் ''ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை''



என்னங்க முழிக்கறீங்க....இது நாம கொடுக்கிற பாராட்டு அல்ல, கடையின் பெயரே அதுதான்.

மதுரையில் நான்கு தலைமுறையினராக நடத்திவரப்படுகிறது என்பதும் ஆச்சர்யமான தகவல். கடைவழியாக செல்வோர் மிதந்துவரும் அல்வாவின் நெய்வாசத்தில் ஒரு கணம் நின்று செல்லவைக்கிறது. மற்றபடி இந்த கடைக்கு எந்த விளம்பரங்களும் கிடையாது. சிறிய கடைதான் ஆனால் நிறைய வாடிக்கையாளர்கள், சுத்தமான நெய்மட்டுமே கொண்டு தயாரிப்பதுதான் இவர்களது ஸ்பெஷல்.



ஒரு முறை குறிப்பிட்ட அளவு அல்வா தயாரிக்க குறைந்தபட்சம் 6 நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர். முதல்நாள் கோதுமையை ஊற வைப்பது, பால் எடுப்பது, புளிக்கவைப்பது, பின் செயல்முறைகள் என்று ஒவ்வொரு நாளும் பக்குவமாக தயாரிக்கின்றனர்.

உள்ளுர் வாடிக்கையாளரான எஸ்.சேர்மக்கனி, “ பாரம்பரிய கடை இது. எட்டு வருடமா நான் இங்க அல்வா வாங்கிட்டு வர்றேன். என் பிள்ளைகளுக்கு இந்தஅல்வாவை ரொம்ப பிடிக்கும்.

நல்ல முறையில் இங்கு செய்துதருகிறார்கள். தரமானதா இருக்கும். பெரிய கடைகள்ல கூட இப்படி ஒரு சுவையை நான் கண்டதில்லை. உண்மையை சொல்லனும்னா எங்க குடும்பம் இந்த கடையின் அல்வாவிற்கு அடிமை" என்றார்.

நான்காவது தலைமுறையாக இந்தக் கடையை நடத்திவரும் கி.ரமேஷிடம் பேசினோம்.

“ எங்க கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, இப்போ நான்னு நாலாவது தலைமுறையா இந்தக் கடையை நடத்திவர்றோம். நாங்க தயாரிக்கிற அல்வாவிற்கு கியாரண்டி மூன்று மாதம் வரை தர்றோம். ஆனாலும் 100%. சதவீதம் அல்வாவின் நிறம், சுவை, மணம் எதுவும் மாறாது“ என்றார் மென்மையான புன்னகையோடு.

“தரம் தான் எங்க கடையோட பலமா கருதுகிறோம். என்னதான் எங்க கடையின் அல்வா பிரபலம்னாலும் கடைக்கு வர்றவங்ககிட்ட எடுத்ததும் ஆர்டர் எடுப்பதில்லை. காரம், அல்வா இதில் எதை கேட்கறாங்களோ இதில் கொஞ்சம் ருசி பார்க்கிறதுக்கு கொடுப்போம். அவங்க சாப்பிட்டு திருப்தியாக தலையசைத்தபின் பின் அவங்க கேட்டதை கட்டித் தருவதை இன்றளவும் வழக்கமாக வெச்சிருக்கோம்.

இதற்காகவே ஒரு நாளைக்கு தினம் 5 கிலோ காரம், இனிப்பு செலவிடுகிறோம். இதுதான் எங்கள் கடைக்கான விளம்பரம்“ என்றபடி வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தார்.

''ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்கடையில்'' பல்வேறு திருமணம், சினிமா, அரசியல் பிரமுகர்கள் வீடுகளுக்கு ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்.

மதுரையின் முக்கியப் புள்ளி ஒருவர் இந்த கடைக்கு தீவிர ரசிகர் என்கிறார்கள். “அண்ணனை பார்க்கப் போறியா, மிட்டாய்க் கடையில கொஞ்சம் அல்வா கட்டிக்கிட்டுப் போ. போன காரியம் முடியும் “ என்ற வார்த்தை அவரின் வட்டாரத்தில் பிரசித்தமாம்.



கடையின் பிரபல்யமும் அல்வாவின் வாசமும் மக்களிடையே பரவி இருந்தாலும் பல வருடங்கள் ஆகியும் கடை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதுபற்றிக் கேட்டால், “ பெயருக்கேத்த கடை, கடைக்கேத்த பெயர் என்கிறார், இந்த ஆதிகாலத்து ஒரிஜினல் கடைக்காரர்.

அல்வா மட்டுமின்றி காரமான காராசேவும், தாமரை இலையில் சுற்றிய உருளைக்கிழங்கு மசாலாவும் இந்தக் கடையில் பிரசித்தம்.

ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடையினை விட்டு நாம் வெளியேறி சில மணி நேரங்கள் கழித்தும் அதன் வாசம் மனதிலேயே தவழ்கிறது. மதுரை மல்லியின் வாசத்திற்கு சரியான போட்டி இந்த அல்வாதான். பழமை என்றாலே நினைத்தாலும், ருசித்தாலும் சுவைதானே....

-சி.சந்திரசேகரன்

படங்கள்: ராஜமுருகன்

ABOUT THE DIRECT BENEFIT TRANSFER OF LPG SCHEME


  • Consumers will need a bank account to join the scheme and receive LPG subsidy
  • Consumers will also get one time permanent advance in their bank account prior to buying the first market priced LPG cylinder
  • Consumers will receive subsidy in their bank account as per their entitlement of subsidized cylinders
  • Till consumers join the scheme they will get cylinders at:
    • Subsidized price for 3 months w.e.f 15.11.2014 till 14.02.2015
    • Market price for next 3 months, but the subsidy due will be given to them if they join the scheme within these 3 months i,e till 14.05.2015
  • W.e.f 15.05.2015 all LPG consumers will get cylinders at market price and only those who join the scheme will receive one time permanent advance & subsidy from the date of joining
  • To join the scheme and receive subsidy, consumers should use, Option 1 if they have Adhaar andOption 2 if they don't have Aadhaar:
SOURCE: MINISTRY OF PETROLIUM AND NATURALGAS WEBSITE 

நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர ஆதார் எண் அவசியமில்லை: வங்கி கணக்கு கட்டாயம் தேவை

மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டம் அடுத்த மாதம் அமல்படுத்தப் பட உள்ளது. இதன்படி நேரடி காஸ் மானியம் பெற ஆதார் எண் அவசியம் இல்லை. ஆனால் வங்கி கணக்கு வைத்து இருப்பது கட்டாயம் ஆகும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடி காஸ் மானியம் பெற, காஸ் ஏஜென்சியிடம் படிவம் 3,4 பெற்றுக் கொள்ள வேண்டும். படிவம் மூன்றில் தனிநபர் விவரங்கள் மற்றும் காஸ் நிறுவனம் எஸ்.எம். எஸ் மூலம் அனுப்பும் 17 இலக்கு கொண்ட காஸ் எண்ணை பூர்த்தி செய்து வங்கியில் கொடுக்க வேண்டும். படிவம் நான்கில் தனிநபர் விவரம், 17 இலக்கு கொண்ட நுகர்வோர் காஸ் எண்ணை பூர்த்தி செய்து ஏஜென்சியில் ஒப்படைக்க வேண்டும். அவற்றுக்கு ரசீது வழங்கப்படும். ஆதார் எண் உள்ள வர்கள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் கொண்டு ஏஜென்சி யில் விநியோகம் செய்யப்படும் மானிய திட்டத்துக்கான படிவம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். படிவம் ஒன்றில் தனிநபர் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை பூர்த்தி செய்து அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஒப்படைக்க வேண்டும். அதனை பெற்றுக் கொண்டு வங்கி அதிகாரிகள் ஒப்புகை ரசீதை வழங்குவார்கள்.

படிவம் இரண்டில் தனிநபர் விவரத்தைக் குறிப்பிட வேண்டும். அதே படிவத்தில் ஆதார் அட்டை நகல் எடுப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மட்டும்தான் ஆதார் அட்டை நகல் எடுத்து தரவேண்டும். இந்த இரண்டாவது படிவத்தை காஸ் ஏஜென்சியில் கொடுத்த பின்பு அவர்களும் ஒப்புகை ரசீது வழங்குவார்கள்.

இது குறித்து காஸ் ஏஜென்சி வைத்துள்ள சப்தரிஷி என்பவர் கூறும்போது, “நுகர்வோரின் காஸ் முகவரி மற்றும் ஆதார் எண் முகவரி ஒரே இடத்தில் இருக்க வேண்டும். முகவரி மாறி இருந்தால் தற்போது உள்ள முகவரியின் ரேஷன் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அரசு அத்தாட்சி அல்லது வீட்டின் வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற் றின் நகலை ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். வங்கி கணக்கு எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆதார் எண் அவசியம் இல்லை” என்றார்.

படிவம் வாங்க செல்லும் நுகர்வோர்கள் காஸ் பில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். புகைப்படம், காஸ் பாஸ் புக் போன்றவை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. நுகர்வோர்கள் படிவத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். காஸ் நிறுவனங்க ளின் ஆன்லைன் முகவரியிலும் படிவங்களைப் பூர்த்தி செய்து ஏஜென்சியிடம் ஒப்படைக்கலாம். இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள இண்டேன், இந்துஸ்தான், பாரத் ஆகிய பொதுத்துறை நிறு வனங்களின் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு பொருந்தும்.

நுகர்வோர் மானிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கான தகவல், திட்டத்தை அரசு அமல்படுத்தியதும் காஸ் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்தும். காஸ் இணைப்பு வைத்துள்ள நுகர்வோர்கள் நேரடி காஸ் மானிய திட்டத்தில் ஜூன் மாதத்துக்குள் சேர வேண்டும்.

ஃபேஸ்புக்கில் மத உணர்வைத் தூண்டும் கருத்துக்கள்: நடவடிக்கை கோரி மனு!

சென்னை: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மத உணர்வைத்துண்டும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடுவோர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நிர்வாகிகள், சென்னை காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் யூசுப் மற்றும் நிர்வாகிகள்இன்று சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனரைச் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர்.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யூசுப், "இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியால் சோஷியல் மீடியாக்கள் எல்லாமே, மக்களுக்கு மத்தியில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு நல்ல காரியங்களுக்கும், நல்ல செய்திகளை உலகமெல்லாம் பரப்புவதற்கும் பயன்படுகின்றன.

ஆனாலும், மத உணர்வுகளைத் தூண்டும் செய்திகளையும் பேஸ்புக் போன்று பல்வேறு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். சமீபகாலமாக மறைந்த தலைவர்களைப் பற்றியும், மதநம்பிக்கையினால் புனிதமாகக் கருதப்படக்கூடியவர்களின் கண்ணியத்தை சிதைக்கும் விதமாகவும் முகநூலில் விஷமக் கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் வாழக்கூடிய அனைத்து மக்களும் அமைதியோடு வாழவே விரும்புகிறோம். அனைத்து சமூக மக்களும் இந்த நாட்டில் அமைதியுடன் இருக்கவே விரும்புகிறோம். மத்திய அரசு தனது கொள்கைகளைப் பேசும்போது இந்த நாட்டின் அமைதிதான் வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்கிறது. ஆனால் இந்த நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக சமூகவலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெகுஜன ஊடகங்களும், பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளும் இதனைக் கண்டறிந்து அப்படிப்பட்டவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும். நாம் மறந்தவர்களை, தொடர்பு விட்டுப்போனவர்களை கண்டறியப் பயன்படும் முகநூலை இதுபோல் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் விதமாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

அவரவர் மதம் அவரவருக்குப் புனிதமானது. யாரும் யாரையும் சீண்டக்கூடாது, காயப்படுத்தக்கூடாது என்பது எங்களின் நம்பிக்கை. முஸ்லிம்களில் அப்படியான காரியங்களைச் செய்வார்கள் என்றால் அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்தான். இந்த நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதி நிலவினால் மட்டும்தான் வளமும், வளர்ச்சியும் உறுதிசெய்யப்படும். அதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்திருக்கிறார்கள்" என்றார்.

- எம்.செய்யது

அலைபேசி... அப்புறம் பேசி அலை!


எந்த ஒரு டெக்னாலஜிக்கும் கிடைக்காத பெருத்த வரவேற்பு செல்பேசிக்குக் கிடைச்சிருக்கு. கையில வாட்ச் கட்டியிருக்கோமோ இல்லையோ செல்பேசி இல்லாத மனிதர்களைப் பார்க்கிறது அபூர்வம்னு ஆயிடுச்சு. எப்படியெல்லாம் செல்போன்ல சிக்கி சின்னாபின்னமாகுறாங்கனு பார்ப்போமா.

பேருந்துகளில் டிராவல் பண்றப்போ, மூன்று பேராவது மாறி, மாறி போன்ல பேசிட்டுதான் இருப்பாங்க. அந்த மூன்று பேரிலும் யாராவது ஒருத்தர்தான் உண்மையைப் பேசுறவரா இருப்பார். லோக்கலில் இருந்துகிட்டே "நான் சிங்கப்பூர்ல இருக்கேன்"னு சொல்ற மாதிரி, அமிஞ்சிக்கரையில இருந்துகிட்டு, அடையாறு வந்துட்டேன்னு பொய் சொல்ற மக்கள்தான் அதிகம். அதுவுமில்லாம ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். வண்டி ப்ரேக் டவுன் ஆயிடுச்சு. எங்க ஏரியாவுல பயங்கர கலாட்டானு விதவிதமா ரீல் விடுறதுக்கும் செல்பேசியைத்தான் பயன்படுத்துறாங்க. ஆக, பொய் விரும்பிகளின் பேராதரவோடதான் செல்பேசிகள் இந்த அளவு சேல்ஸ் ஆகிட்டு இருக்கு.

பஸ் ஸ்பீடா போய்க்கிட்டிருக்கறப்போ அந்த பஸ்ஸுக்குள்ளேயே பல பேர் டெம்பிள் ரன்னில் தலைதெறிக்க ஓடிக்கிட்டு இருக்காங்க. இன்னும் சிலர் ப்ரூட் கிரஷ், மான் வேட்டைனு செல்போன் கேம்ஸ்தான். இதில் செக்கிங் வந்து உலுக்கு உலுக்குனு உலுக்கின பிறகுதான் டிக்கெட் எடுக்காத மேட்டரே பலருக்கும் தெரிய வருது. விளையாட்டு வினையாகிறது இதுதானோ.

கல்யாணத்துக்கு முன் லவ் பண்றதுக்கு தில்லு இல்லாத தில்லுதுரைகள்தான் கல்யாணம் நிச்சயமான மறுநொடியிலிருந்து லவ் பண்ணத் தொடங்குறாங்க. கத்து வெச்ச மொத்த வித்தையையும் இறக்குற மாதிரி, ராத்திரி பகல்னு வித்தியாசம் இல்லாமல், சோறு தண்ணியப்பத்திக்கூட கவலைப்படாமல், விடிய விடிய பேசிப் பேசியே செல்பேசி வழியா காதல் வளர்ப்பாங்க. இந்த மாதிரி திடீர் காதலர்களை நம்பித்தான் பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க ஆஃபரை கொண்டு வந்திருக்காங்க. கல்யாணம் நிச்சயமானப்போ, கோடீஸ்வரனா இருந்துட்டு, கல்யாணத்தன்னைக்கு லட்சாதிபதியா மாறிப்போன விபரீதமெல்லாம் இதுல சகஜம்.

இப்போ பஞ்சாயத்து ஆலமரம், மேடை, சொம்பெல்லாம் மலையேறிப் போயிடுச்சு. 'ஆன் தி வே'ல, செல்பேசி வழியா பெரும்பாலான பஞ்சாயத்து நடக்குது. பஞ்சாயத்து பண்றேன் பேர்வழினு, சுற்றி இருக்கிறவங்களையும் மறந்துட்டு, தப்பு பண்றவனை நாராசமா திட்டுறதுக்கும் தயங்குவதில்லை. மொத்தக் குடும்பத்தையும் திட்டித் தீர்த்த பிறகுதான், காசெல்லாம் கரைஞ்சிடுச்சேன்னு 'வடை போச்சே' ஃபீலிங்கே வரும். ஆக நாம நாட்டாமைத்தனம் பண்றதால தீர்ப்பென்னவோ செல்பேசி கனெக்‌ஷன் கொடுக்கிற முதலாளிகளுக்குத்தான் சாதகமா இருக்கு.

கூட்டுக் குடும்பமாவோ அல்லது ஒரே ஊருக்குள்ளயோ வாழ்ந்துகிட்டிருந்த காலத்துல கிசுகிசு பேசுறதெல்லாம் தண்ணிபட்ட பாடு. ஒரு எட்டு போனோமா, பேசி பத்த வெச்சோமா, வந்தோமான்னு இருந்தாங்க. இப்போதான் ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு போக ஆரம்பிச்சாச்சே. கிசுகிசுவெல்லாம் செல்பேசியில்தான் பெரும்பாலும்.

குளிர்காலம்னா நாம போர்வையைப் போர்த்திகிட்டு தூங்குறதுல ஒரு நியாயம் இருக்கு. போர்வைக்குள்ள செல்போனை வெச்சுகிட்டு விடிய விடிய வாட்ஸ் அப் சாட்டிங்னு தானும் தூங்காம, தள்ளியும் படுக்காம இருக்கிறது பேஷனாப் போயிடுச்சு. இதுல இந்த மெஸேஜை பத்து பேருக்கு ஃபார்வர்ட் பண்ணினால் நல்லது நடக்கும்னு அட்வைஸோட மெஸேஜ் வேற.

இவ்வளவும் போதாதுனு, சும்மா வர்ற கஸ்டமர் கேர் போனையும் விட்டு வைக்காமல் அதுல பேசுற பொண்ணுங்க கூடவும் கடலை போடுறதுக்கு தனி கூட்டமே திரியுது. ரியல் எஸ்டேட் விளம்பரத்திலிருந்து ரிசார்ட் விளம்பரம் வரைக்கும் ஒண்ணைக்கூட விட்டுவைக்காம கால் பண்ற பெண்களிடம் என்னவோ அம்பானி ரேஞ்சுல டீடெயிலெல்லாம் கேட்டுட்டு கடைசியில இப்போதான் நல்ல வேலை தேடிக்கிட்டிருக்கேன். வேலை கிடைச்சதும் முதல் மாச சம்பளத்துல நீங்க சொல்ற இடத்துக்கு அட்வான்ஸ் கட்டிடுறேன்னு சத்தியம் பண்ணி பந்தாவா பல் இளிக்கிறதே பழக்கமா வெச்சிக்கிறாங்க. இப்படியெல்லாம் இருக்குறப்போ செல்போன் கம்பெனி வளராம எப்பூடி!

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...