Sunday, December 7, 2014

நேரடி காஸ் மானிய விவகாரத்தில் சிக்கல்: மக்களை குழப்பும் எண்ணெய் நிறுவனங்கள்

சமையல் காஸ் சிலிண்டருக்கு, நேரடியாக மானியம் பெறும் திட்டத்தில், இணைவதற்கான விண்ணப்பம் வழங்குவதில், பல்வேறு குளறுபடிகள் காணப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள், மக்களை குழப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசு, ஜன., முதல் சமையல் காஸ் சிலிண்டருக்கு, வாடிக்கையாளர், வங்கி கணக்கில், நேரடியாக மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும்:

இத்திட்டத்தை, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த, அரசு, தீவிரம் காட்டி வருகிறது.அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவங்கள், நாடு முழுவதும் உள்ள, காஸ் ஏஜன்சிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.தமிழகத்தில் உள்ள, காஸ் ஏஜன்சிகள், நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்காக, ஆதார் அட்டை இருந்தால், ஒரு விண்ணப்பம்; ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, மற்றொரு விண்ணப்பம் என, இரண்டு வகை விண்ணப்பங்களை வழங்கி வருகின்றன.ஆனால், விண்ணப்ப படிவங்களை பெற, சம்பந்தப்பட்ட, காஸ் ஏஜன்சிகளுக்கு சென்றால், அங்கு, ஒரு விண்ணப்ப படிவத்தை மக்களிடம் கொடுத்து, அதை நகல் எடுத்துக் கொண்டு திருப்பித் தருமாறு, ஏஜன்சி ஊழியர்கள் கூறுகின்றனர்.இல்லையென்றால், அருகில் உள்ள, ஜெராக்ஸ் கடை முகவரியை கொடுத்து, அங்கு, ஐந்து முதல், 10 ரூபாய் கொடுத்து, படிவத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர். இதனால், மக்கள், வீணாக அலைகின்றனர்.
அவ்வாறு, பெறப்படும், விண்ணப்பம், ஆங்கிலத்தில் இருப்பதால், அதை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என, தெரியாமல் பலரும் தவிக்கின்றனர்.மேலும், விண்ணப்பங்களில், ஆதார் அட்டையின், நகலை ஒட்ட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அதை எப்படி ஒட்டுவது என, புரியாமல், பலரும் தடுமாறி வருகின்றனர்.விண்ணப்பங்களில், 17 இலக்க சமையல் எரிவாயு இணைப்பிற்கான, கன்ஸ்யூமர் ஐ.டி.,யை பூர்த்தி செய்ய, இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐ.டி., பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லாததால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.அதுகுறித்து, ஏஜன்சி ஊழியர்களிடம் கேட்டால், '17 இலக்க கன்ஸ்யூமர் ஐ.டி.,யை ஏற்கனவே, எண்ணெய் நிறுவனங்கள், மொபைல்போன் மூலம், எஸ்.எம்.எஸ்., தகவலாக, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிவிட்டன' என்கின்றனர். ஆனால், அந்த, எஸ்.எம்.எஸ்., பலருக்கும் வந்து சேரவில்லை. இதுதவிர, காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் போது அளிக்கப்படும் ரசீதிலும், இந்த எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவலும் வாடிக்கையாளர்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை.இதனால், கன்ஸ்யூமர் ஐ.டி.,யை பூர்த்தி செய்யாமல், விண்ணப்பத்தை முழுமையாக்கி கொடுக்க முடியாமல், பலர் தடுமாறுகின்றனர்.ஒவ்வொரு வாடிக்கையாளரும், ஆதார் அட்டை இணைத்த விண்ணப்பத்தை, காஸ் ஏஜன்சிகளிடமும், வங்கி கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட வங்கியிலும் கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வங்கியில், விண்ணப்பம் கொண்டு போய் கொடுத்தால், 'நீங்கள் கடைசியாக, வாங்கிய சிலிண்டர் ரசீது நகலை யும், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்; இல்லையென்றால், விண்ணப்பம் பெற மாட்டோம்' என, வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.கஸ்டமர் ஐ.டி., என்ற, 17 இலக்க எண்ணை அறிந்து கொள்ள தான், வங்கிகளில் இப்படி கேட்கப்படுகிறது என, கூறினாலும், அதற்காக எதற்கு, சிலிண்டர் வாங்கிய ரசீது கேட்க வேண்டும் என, புரியவில்லை.
இந்த குழப்பங்களால், பலரும், சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைய முடியாமல் தடுமாறுகின்றனர்; அலைகின்றனர்.ஜன., முதல், நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசால், அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மானியம் இல்லாமல், சந்தை விலை கொடுத்து, சிலிண்டர் வாங்கிய பின், மானிய தொகை, நேரடியாக வங்கி கணக்குக்கு வரவில்லை என்றால், யாரிடம் சென்று முறையிடுவது?

கோரிக்கை:

மானிய தொகை பயன்படுத்திய சிலிண்டருக்கு மட்டும் கிடைக்குமா அல்லது ஆண்டுக்கு இத்தனை முறை மானியம் வழங்கப்படுமா என்பது போன்ற பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.ஆனால், அந்த குழப்பங்களுக்கு, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உட்பட, யாரிடமும் சரியான பதிலை பெற முடியவில்லை.இதனால், நேரடி மானிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய முறைப்படியே காஸ் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
வலுத்துள்ளது.

எத்தனை பேர்?


தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.75 கோடி சமையல் காஸ் வாடிக்கையாளர்கள்; 1,200 காஸ் ஏஜன்சிகள் உள்ளன

ஆதார் அட்டை அவலம்:


தற்போது, காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்காக, ஆதார் அட்டை வாங்க, அதற்கான மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால், ஆதார் அட்டை பெற வருவோரிடம், '2010ல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு இருந்தால் மட்டுமே, ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்' என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதனால், ஒப்புகை சீட்டு இல்லாத பலர், ஆதார் அட்டை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

CHECK STATUS OF YOUR SEEDING APPLICATION ONLINE


Saturday, December 6, 2014

சொல்லதிகாரம்



'கொல்' 'கொள்ளையடி'
சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'''ஆராரோ'' ''சனியனே''
தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''உனக்கெப்போது கல்யாணம்?''
விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''
வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்''
பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''
மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'
மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'பாலாறு - தேனாறு'
பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''மறக்காமல் கடிதம் போடு''
ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''அய்யா குளிக்கிறார்''
தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்

'அப்பா கோபமாயிருக்கிறார்'
குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'
ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்

''நேற்றே வந்திருக்கக் கூடாதா''
கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'
மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

* * * * *
போதுமடா சாமி!
போதும்! போதும்!

ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

இனி ஒவ்வொரு சொல்லையும்
ஒட்டடை தட்டுவோம்


இனிமேல் வார்த்தைகளை
இடம் மாற்றிப் போடுவோம்

அத்தனை சொல்லிலும்
ஆக்சிஜன் ஏற்றுவோம்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்

* * * * *
முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

மரித்தான் என்ற சொல்லை யெறிந்து
வாழ்வை வென்றான் என்று புகல்வோம்

தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து
விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்

எதிரி என்ற வார்த்தை எதற்கு?
தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்

சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்
முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்

இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்
அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்

நொந்த தேகம் நோயில் விழுந்தால்
உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்

வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்
மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்

நிலவைத் தொலைத்த வானம் என்பதை
விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்

DEALERS CONFUSION ADDS TO DBTL CHAOS

CHENNAI: Ignorant Indane gas distributors in some areas in Chennai and elsewhere are compounding the confusion of the Liquefied Petroleum Gas (LPG) consumers who are queuing up to register for the Direct Benefit Transfer for LPG (DBTL) Scheme by asking those who do not have an Aadhaar card to submit both Forms 3 and 4.

“The manager at my Indane gas agency asked me to fill both Forms 3 and 4 and submit the former to the bank and the latter to the agency. Later, when I checked the website www.mylpg.in I found that this is duplicity. But when I asked the agency staff again, he reprimanded me,” lamented 56-year-old A S Kitchulu of Purasawalkam.However, as per official procedure for the DBTL Scheme gas consumers who do not have an Aadhaar card have to submit either Form 3 (to the banks where they have their account) or Form 4 (to the gas agency).

This is an unwarranted procedure as consumers have to separately visit the gas agency and banks to submit the forms.

Justifying the action, a staff at an Indane outlet in Mandaveli said, “If consumers submit only Form 3 to the bank, how will we know the details?”

“Many LPG dealers themselves are still unaware of the intricacies of the procedure. We had identified this problem on a recent inspection trip to Chengalpattu and educated the dealers,” admitted a senior official.

When Express contacted Indian Oil Corporation Limited General Manager D Chandran, he acknowledged that some of the Indane distributors were ignorant to the procedure. “Both Forms 3 and 4 will have the 17 digit LPG ID of the consumers. This will ensure seeding of accounts even if one form is submitted,” he said.

A circular detailing the exact procedure would be sent out once again to all Indane distributors to ensure clarity, he pointed out.

Meanwhile, at an Indane outlet in Purasawalkam consumers like 73-year-old B S Kamalasekaran discovered that they were handing out only Form 1 for consumers who had Aadhaar cards. “The staff insisted that the procedure for Form 2 can be completed through IVRS or SMS,” he complained.

சிலிண்டருக்கான மானியம் வேண்டுமா?

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே பல மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டாலும், ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது.

பாமர மக்களுக்கு மானியம் என்றாலோ, வங்கிக் கணக்கில் மத்திய அரசு பணத்தை செலுத்துகிறது என்றாலோ புரியவில்லை.

அதாவது, ஒவ்வொரு சிலிண்டரின் முழு விலையும் (சமீபத்தில் ரூ.113 குறைக்கப்பட்ட பிறகு) ரூ.752 ஆகும். இதில், ரூ.410ஐ நாம் சிலிண்டருக்கு செலுத்தி வாங்குகிறோம். மீதத் தொகையை மத்திய அரசு நாம் அளிக்கும் வரிப்பணத்தில் இருந்து நமக்காக மானியமாக செலுத்துகிறது. அந்த மானியத் தொகையை மத்திய அரசு கேஸ் நிறுவனங்களுக்குக் கொடுத்துவிடும். இதனால் வாடிக்கையாளர்கள் வாங்காத சிலிண்டர்களுக்கும் கேஸ் நிறுவனங்கள் கணக்கு காட்டி மானியத் தொகையை பெறும் வாய்ப்பு உள்ளது.

எனவே இனி ஒவ்வொரு காஸ் சிலிண்டருக்கும் உரிய மானியத் தொகையை நேரடியாகவே வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட்டால், அந்த தொகையை எடுத்து அவர்கள் சிலிண்டர் வாங்கிக் கொள்ளலாம். இதனால், மானியத் தொகையில் முறைகேடு நடப்பது தவிர்க்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவித்திருப்பதே நேரடி மானிய திட்டமாகும்.

இந்த திட்டத்தின்படி, காஸ் ஏஜென்சியிடம் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது வங்கிக் கணக்கு எண்ணையும், வங்கியிடம் காஸ் ஏஜென்சி அளிக்கும் விண்ணப்பத்தையும் கொடுத்து பதிவு செய்துவிட வேண்டும். பிறகு, சிலிண்டர் வீட்டுக்கு வரும் போது அதற்கான முழுத் தொகையையும் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய 3வது நாள், வீட்டு சிலிண்டருக்கான மானியம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் அனைவரும் மார்ச் 31–ந் தேதிக்குள் உரிய ஆவணங்களை ஏஜென்சிகளிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

சிலிண்டருக்கான மானியம் பெற தங்கள் ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு எண்களை அவரவருக்கான காஸ் ஏஜென்சியிடம் பதிவு செய்ய வேண்டும். முன்பு, இந்த மானியம் பெற ஆதார் அட்டை அவசியம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது ஆதார் அட்டை அவசியமில்லை என்றும், வங்கி கணக்கு எண் மட்டுமே முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.டி.பி.ஐ., எஸ்பிஐ என 40 வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் அல்லது புதிதாக கணக்குத் துவங்கி தங்களது வங்கி கணக்கு எண்களை கேஸ் ஏஜென்சியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சரிங்க.. வெறும் கேஸ் ஏஜென்சியிடம் கொண்டு போய் கொடுங்கள் என்று சொன்னால் போதுமா.. என்னவெல்லாம் கொடுக்க வேண்டும் என்று தெரிய வேண்டாமா..

அதையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.. வாருங்கள் தொடர்ந்து படிக்கலாம்...

அதாவது, காஸ் ஏஜென்சிகளிடம் வாடிக்கையாளர்களின் காஸ் இணைப்பு பாஸ் புத்தகம் அசல் மற்றும் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதில் உண்மையான ஆவணங்களைக் காண்பித்து அவற்றுக்கான நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அதன் நகல், குடும்ப அட்டை மற்றும் நகல் (குடும்ப அட்டையின் வெளிப்பக்கம் மற்றும் காஸ் ஏஜென்சி சீல் உள்ள உள்பக்கத்தின் நகல்) இதோடு, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி. (வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இருக்கும்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

காஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் நேரில் சென்று காஸ் ஏஜென்சியில் கொடுக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால், வாடிக்கையாளரே நேரடியாக செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதார் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர் என்றால் விண்ணப்பம் 1 மற்றும் 2–ஐ பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டைக்கான நகல், வங்கி கணக்குப் புத்தகம், சிலிண்டருக்கான புத்தகத்தின் நகலை இணைக்க வேண்டும். விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்து காஸ் ஏஜென்சியிடமும், விண்ணப்பம் 2ஐ பூர்த்தி செய்து கணக்கு வைத்திருக்கும் வங்கியிடமும் அளிக்க வேண்டும்.

ஆதார் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பம் 3 மற்றும் 4–ஐ பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பம் 3ல் வாடிக்கையாளர் விவரம் மற்றும் எரிவாயு உருளைக்கான வாடிக்கையாளர் பதிவு எண் ஒன்று காஸ் ஏஜென்சி அளிக்கும். அதனை பதிவு செய்து வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பம் 4ஐ பூர்த்தி செய்து கேஸ் ஏஜென்சியிடம் தர வேண்டும். இதற்கு உரிய ரசீதை வாடிக்கையாளர்கள் கேட்டுப் பெற வேண்டும். அதனுடன் குடும்ப அட்டை நகல், வங்கி கணக்குப் புத்தகம், சிலிண்டருக்கான புத்தகத்தின் நகல்களை இணைக்க வேண்டும்.

படிவம் வாங்கச் செல்லும் போது நுகர்வோர் காஸ் பில்லை எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எதையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பங்கள் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. ஆன்லைனிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வங்கி கணக்கு எண்ணைப் பதிவு செய்ய மார்ச் 31ம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கிக் கணக்கைத் துவக்கி காஸ் ஏஜென்சியிடம் கொடுக்க வேண்டும்.

இல்லாவிடில் நேரடி மானிய திட்டம் கிடைக்காமல் போய்விடும். மானியமில்லாமல் முழுத் தொகையையும் வாடிக்கையாளரே செலுத்தி சிலிண்டரை பெறும் நிலை ஏற்படலாம்.

Join Direct Benefit Transfer of LPG(DBTL) Scheme ... Link your Aadhaar Number to your bank Account by Form 1 and depositing at bank branch....Submit Form 2 to the LPG distributor






அல்வா கொடுக்காத ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை அல்வா!



எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஊரும் உறவோடும் கொண்டாடி மகிழ்வது தமிழர்களின் பண்பாடு. அத்தனை விஷயங்களிலும் தவறாது மகிழ்ச்சியின் அடையாளமாக நாம் முன்னிறுத்துவது இனிப்பு.

பழங்காலம் தொட்டே ஒவ்வொரு நல்ல காரியங்களையும் இனிப்புடனே தொடங்கி உள்ளனர் நம் தமிழ் மக்கள்.

இதனால்தான் தமிழர்களின் கலாச்சாரத்தில் எத்தனை எத்தனை இனிப்பு பட்சணங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அதில் ஒரு இனிப்பின் பெயரைச் சொன்னால், முகத்தில் புன்னைகையும் நாவில் கரைந்து செல்கிற உணர்வும் உடனே வெளிப்படும். அது அல்வா...

யாரிடமாவது நாம் ஏமாற்றப்பட்டால் 'அவன் எனக்கு அல்வா கொடுத்துட்டான் பா 'என்போம். ஆனால் தன் சுவையில் அல்வா என்றுமே ஏமாற்றுவதில்லை. முத்தாய்ப்பாக நாம சாப்பிடும் அல்வாவிற்கு மூன்று மாதம் வரை கியாரண்டி தருகிறது , மதுரை கீழ ஆவணி மூல வீதியில் இருக்கும் ''ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை''



என்னங்க முழிக்கறீங்க....இது நாம கொடுக்கிற பாராட்டு அல்ல, கடையின் பெயரே அதுதான்.

மதுரையில் நான்கு தலைமுறையினராக நடத்திவரப்படுகிறது என்பதும் ஆச்சர்யமான தகவல். கடைவழியாக செல்வோர் மிதந்துவரும் அல்வாவின் நெய்வாசத்தில் ஒரு கணம் நின்று செல்லவைக்கிறது. மற்றபடி இந்த கடைக்கு எந்த விளம்பரங்களும் கிடையாது. சிறிய கடைதான் ஆனால் நிறைய வாடிக்கையாளர்கள், சுத்தமான நெய்மட்டுமே கொண்டு தயாரிப்பதுதான் இவர்களது ஸ்பெஷல்.



ஒரு முறை குறிப்பிட்ட அளவு அல்வா தயாரிக்க குறைந்தபட்சம் 6 நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர். முதல்நாள் கோதுமையை ஊற வைப்பது, பால் எடுப்பது, புளிக்கவைப்பது, பின் செயல்முறைகள் என்று ஒவ்வொரு நாளும் பக்குவமாக தயாரிக்கின்றனர்.

உள்ளுர் வாடிக்கையாளரான எஸ்.சேர்மக்கனி, “ பாரம்பரிய கடை இது. எட்டு வருடமா நான் இங்க அல்வா வாங்கிட்டு வர்றேன். என் பிள்ளைகளுக்கு இந்தஅல்வாவை ரொம்ப பிடிக்கும்.

நல்ல முறையில் இங்கு செய்துதருகிறார்கள். தரமானதா இருக்கும். பெரிய கடைகள்ல கூட இப்படி ஒரு சுவையை நான் கண்டதில்லை. உண்மையை சொல்லனும்னா எங்க குடும்பம் இந்த கடையின் அல்வாவிற்கு அடிமை" என்றார்.

நான்காவது தலைமுறையாக இந்தக் கடையை நடத்திவரும் கி.ரமேஷிடம் பேசினோம்.

“ எங்க கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, இப்போ நான்னு நாலாவது தலைமுறையா இந்தக் கடையை நடத்திவர்றோம். நாங்க தயாரிக்கிற அல்வாவிற்கு கியாரண்டி மூன்று மாதம் வரை தர்றோம். ஆனாலும் 100%. சதவீதம் அல்வாவின் நிறம், சுவை, மணம் எதுவும் மாறாது“ என்றார் மென்மையான புன்னகையோடு.

“தரம் தான் எங்க கடையோட பலமா கருதுகிறோம். என்னதான் எங்க கடையின் அல்வா பிரபலம்னாலும் கடைக்கு வர்றவங்ககிட்ட எடுத்ததும் ஆர்டர் எடுப்பதில்லை. காரம், அல்வா இதில் எதை கேட்கறாங்களோ இதில் கொஞ்சம் ருசி பார்க்கிறதுக்கு கொடுப்போம். அவங்க சாப்பிட்டு திருப்தியாக தலையசைத்தபின் பின் அவங்க கேட்டதை கட்டித் தருவதை இன்றளவும் வழக்கமாக வெச்சிருக்கோம்.

இதற்காகவே ஒரு நாளைக்கு தினம் 5 கிலோ காரம், இனிப்பு செலவிடுகிறோம். இதுதான் எங்கள் கடைக்கான விளம்பரம்“ என்றபடி வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தார்.

''ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்கடையில்'' பல்வேறு திருமணம், சினிமா, அரசியல் பிரமுகர்கள் வீடுகளுக்கு ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர்.

மதுரையின் முக்கியப் புள்ளி ஒருவர் இந்த கடைக்கு தீவிர ரசிகர் என்கிறார்கள். “அண்ணனை பார்க்கப் போறியா, மிட்டாய்க் கடையில கொஞ்சம் அல்வா கட்டிக்கிட்டுப் போ. போன காரியம் முடியும் “ என்ற வார்த்தை அவரின் வட்டாரத்தில் பிரசித்தமாம்.



கடையின் பிரபல்யமும் அல்வாவின் வாசமும் மக்களிடையே பரவி இருந்தாலும் பல வருடங்கள் ஆகியும் கடை புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதுபற்றிக் கேட்டால், “ பெயருக்கேத்த கடை, கடைக்கேத்த பெயர் என்கிறார், இந்த ஆதிகாலத்து ஒரிஜினல் கடைக்காரர்.

அல்வா மட்டுமின்றி காரமான காராசேவும், தாமரை இலையில் சுற்றிய உருளைக்கிழங்கு மசாலாவும் இந்தக் கடையில் பிரசித்தம்.

ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடையினை விட்டு நாம் வெளியேறி சில மணி நேரங்கள் கழித்தும் அதன் வாசம் மனதிலேயே தவழ்கிறது. மதுரை மல்லியின் வாசத்திற்கு சரியான போட்டி இந்த அல்வாதான். பழமை என்றாலே நினைத்தாலும், ருசித்தாலும் சுவைதானே....

-சி.சந்திரசேகரன்

படங்கள்: ராஜமுருகன்

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...