Monday, December 8, 2014

DELHI UNIVERSITY SIGNS MOU WITH UGC FOR PLOADING THESIS ON DIGITAL DATABASE

Delhi University will now be able to update thesis and dissertations of its research scholars on the UGC's digital database -'Shodhganga repository'.

DU has recently signed a MoU with the University Grants Commission (UGC) in this regard.

'Shodhganga', a digital repository of thesis and dissertations of research being conducted by scholars in Indian universities, is a project of the UGC-Infonet Digital Library Consortium.

It is aimed at promoting the use of electronic databases and full text access to journals by the research and academic community in the country. It also facilitates keeping a check on plagiarism in research.

"We have signed an MoU with the UGC in this regard according to which all the thesis and dissertations submitted at DU after December 2, 2014 will be added to the repository," Ajay Kumar, Dean Research, DU told PTI.

"We are setting up an Electronic Thesis and Dissertation (ETD) lab in the Central Library where all the thesis and dissertations will be digitised and their bibliographic records will be created for inclusion in UGC's Information and Library Network (INFLIBNET) catalogue," he said.

According to the MoU, the students will be submitting their thesis to their respective departments with a 'certificate of originality' and 'student approval form'.

"The departments will then check the documents for originality using a plagiarism detection software. The report of the originality check will then be forwarded to the examination branch which in turn will send it to the ETD lab," Kumar said.

"Online availability of thesis through centrally-maintained digital repositories does not only ensure easy access and archiving of Indian doctoral thesis but will also help raise the standard and quality of research," he added.

The 'Shodhganga repository', launched by UGC in 2010 also offers grants to the universities for infrastructural development for the project's implementation.

ADMISSION NOTIFICATION....SRI SIDDHARTHA ACADEMY OF HIGHER EDUCATION TUMKUR KARNATAKA


Ride to heart of city fast, cheap with new services


Ride to heart of city fast, cheap with new services
Chennai:


Railways Extends Suburban Trains To Velachery MRTS
Travelling from the western and northern suburbs to the heart of the city has become faster and cheaper, with the railways extending suburban services to MRTS at Velachery. Commuters who would take more than one hour while commuting by bus to the city can now cut down their travel time to less than 40 minutes by train — and at a fraction of the cost.

Commuters can travel from any suburb on the western or northern line to the city for ` `10 as compared with the ` `30 that a ride by bus costs.

For commuters who live in far-flung places like Ennore, Pattabhiram Tiruninravur, a ride to the city by bus takes more than three hours in the peak morning traffic. A train takes between an hour and two hours.

“People have been demanding that railways extend the trains to MRTS because train travel is cheaper and faster,” said T Sadagopan, who frequently uses suburban trains. “Buses go through several neighbourhoods on any given route. This increases travel time.” Metro rail work in Anna Nagar also affected the punctuality of buses from western suburbs into the city, he said.

Most of the buses take commuters to Parry’s Corner though there are a few direct buses from Avadi, Perambur and Nemilichery to Anna Salai and other parts of the city.

These buses are crowded during peak hours, making the journey unpleasant. Commu ters say extension of the ladies’ special train from Arakonam to Velachery will be beneficial for women because commuting by bus is a hassle for them.

The 29C bus from Perambur to Besant Nagar takes 1 hour and 30 minutes to reach Mylapore though the sched uled travel time for the route is only 70 minutes. “Traffic is slow and it takes time for the bus to reach Mylapore. Women commuters can now board the ladies’ special at Perambur and alight at Mylapore MRTS station in 40 minutes,” Sadagopan said.

Rajagopal S, a commuter who travels from Ennore to Beach, said bus services are poor from areas beyond Ennore. “This is why trains are popular,” he said. “As services have been extended to Velachery, a large number of people will switch to trains. The railways should extend more services on the Gummidipoondi-Velachery line.” It takes 1 hour and 20 minutes to travel by train from Ennore to Kotturpuram.

Commuters also want suburban trains from Arakkonam to Tambaram via Beach because there is a huge demand on the route. Many people alight at Moore Market suburban station and cross over to Park station to board trains to Tambaram.

Commuter P Alexy said commuters from Ennore, Minjur and other points on Gummidipoondi line prefer trains because bus fares are high. “It’s best for them to use trains with season tickets,” he said.

NOTIFICATION...KIIT UNIVERSITY BHUBANESWAR ODISHA


தரமான ஆரம்பக் கல்வி தேவை

தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. தற்போது 9-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி செய்திட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

இங்கேதான் கோளாறு உள்ளது எனக் கல்வி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்ச்சி நிச்சயம் உண்டு. அவர்கள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன என நினைக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர் என கல்வித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து கையெழுத்து இட்டுவிட்டு தங்களது சொந்த வேலையைப் பார்க்கச் சென்று விடுகிறார்கள். சில ஆசிரியர்கள் பல தனியார் நிறுவனங்களில் பகுதிநேரப் பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

இவர்களை ஒன்றும் செய்ய இயலாது. சஸ்பெண்டு போன்ற நடவடிக்கை எடுத்தால் சங்கம் போராட்டத்தில் இறங்குகிறது என வேதனையுடன் கூறினார் ஓர் அதிகாரி.

ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியுடனும், சேவை மனப்பான்மையுடனும் வேலை செய்தால்தான் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்க இயலும்.

அடுத்து பாடத் திட்டங்களை எடுத்துக் கொள்வோம். அப்போதெல்லாம் தேர்வில் சாய்ஸ் என்பது மிகமிக குறைவாகவே இருக்கும்.

மேலும் ஒரு கேள்விக்கு 4 பதிலைக் கூறி, இதில் எது சரி எனக் கூறு என்ற கேள்விகள் இருக்காது. தற்போது உள்ள இந்த இரு முறைகளினால் மாணவர்கள் படிக்கும் திறன் குறைந்து விடுகிறது. அவர்களின் ஞாபகத் திறன் மழுங்கடிக்கப்படுகிறது.

மேலும், தற்போது மனக்கணக்கு என்கிற பாடம் இல்லை. இந்த மனக் கணக்கு ஞாபக சக்தியை வளர்ப்பதோடு, பிற்காலத்தில் பல வேலைகளை சுலபமாகச் செய்ய வழி செய்யும்.

தற்போது கால்குலேட்டர் வந்துவிட்டது. அந்த காலத்தில் பின்னல் கணக்கு, அல்ஜீப்ரா கணக்கு என எதையும் எழுதி பார்த்து தான் விடையளிக்க முடியும். இதனால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்தது. தற்போது கால்குலேட்டர் பயன்படுத்தப்படுவதால், இந்தத் திறன் வளர்க்கப்படுவதில்லை.

மேலும், நோட்ஸ் புத்தகம் வாங்கி அக் காலத்தில் யாரும் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும்போதே கேள்வி பதிலைக் கூறிவிடுவார். அதனை நோட்டுப் புத்தகத்தில் எழுதி படிக்க வேண்டும்.

தற்போது எங்கும் நோட்ஸ். எதற்கும் நோட்ஸ் என மாணவர்களின் கற்கும் திறனை மிகவும் குறைத்து விடுகிறது.

அடுத்து அந்தக் காலத்தில் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது. தற்போது அது இல்லை. காரணம் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க இயலாது. அப்படி கண்டித்தால் ஆசிரியர் அடித்து விட்டார் என புகார் எழும்.

மாணவர்களை அடிக்கக் கூடாது என அரசு கூறியுள்ளதை மாணவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளைக் கண்டும் காணாதது போல இருந்து விடுகிறார்கள்.

தற்போது பள்ளியில் வகுப்பறையை மாணவர்கள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தால் சிலர் மாணவர்களின் நிலை பாரீர் எனக் கூக்குரலிடுகின்றனர். இதுபோன்ற பல காரணங்களால் மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் பயமும், மரியாதையும் இல்லாமல் போய் விட்டது.

இப்படிப் படிப்பவர்கள் பின்னாளில் ஆசிரியர்களாக பணிபுரிய நேர்ந்தால் எப்படி இருக்கும்? இது போன்ற காரணங்களால்தான் ஆரம்பக் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.

நம் பிள்ளைகள் நம்மைவிட பல மடங்கு புத்திசாலி எனக் கூறி வருகிறோம். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி அளித்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைவதோடு, வருங்கால சமுதாயமும் மேம்படும்.

குப்பை மேடுகளும் குளிர் சோலைகளும் By ஆர்.எஸ். நாராயணன்..Dinamani 8.12.2014

மனிதனுக்கு உடலும் தூய்மையாக இல்லை. உள்ளமும் தூய்மையாக இல்லை. கேஜரிவால் துடைப்பத்தை அடையாளப்படுத்தி தில்லித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டினார். வென்ற வேகத்திலேயே துடைப்பத்தைத் தொலைத்துவிட்டார். இப்போது அந்தத் துடைப்பம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கையில் "ஸ்வச்ச பாரதம்' என்ற பெயரில்.

ஸ்வேதா என்றால் தூய்மை. ஆகவே, தூய்மையைக் குறிக்கும் வெள்ளை உடையுடன் வெள்ளைக் குல்லாய் அணிந்து அழுக்கைக் கூட்டுகிறார்கள். கூட்டுவது சரி. கொட்டுவது எங்கே? கொள்வதற்கு இடமில்லாமல் கூட்டுவதில் பயன் உண்டா?

ஒவ்வொரு ஊரிலும் வண்ண மயமான பிளாஸ்டிக் பைகள் சல சலக்க மலை போல் குவிந்துள்ள குப்பைகளை அழிக்காமல் தூய பாரதத்தை உருவாக்க முடியுமா? இது ஒரு பக்கம்.

இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடிக்கும் மேல். இந்தியாவின் உணவு உற்பத்தி (தானியம், பழம், காய்கறிகள், பால், இறைச்சி எல்லாம் சேர்த்து) 60 கோடி டன். ஆண்டுக்கு ஒரு இந்தியன் 600 கிலோ உணவு உட்கொண்டு அதில் சுமார் 50 கிலோ அளவில் சீரணித்து ரத்தம், எலும்பு, சதையாக மாற்றிக்கொண்டு 550 கிலோ அளவில் சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றுகிறான்.

இவற்றில் 70 சதவீதம் திறந்தவெளியிலும், மற்றவை வீட்டில் உள்ள டாய்லட்டிலும் கழிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் நதிகள் எவ்வளவு புனிதமானவை என்பதற்குச் சாட்சியாக அக்காலத்து இந்தியர்கள் தினமும் குளிக்கும்போது, ஒரு சுலோகத்தை உரக்கச் சொல்லியவாறு நாலு சொம்புக் கிணற்று நீரைத் தலையில் ஊற்றிக் கொண்ட மரபும் தொலைந்து விட்டது.

புனித நதிகளும் அசுத்தமாகிவிட்டன. ஏனெனில் சுத்தம் என்று சொல்லி டாய்லட்டில் கழிப்பதும் கழிவுநீர்க் குழாய்கள் வழியே புனித நதிகளில்தான் சங்கமம் ஆகின்றன.

கிராமப் பகுதிகளில் ஒதுங்குமிடம் கட்டி ஒதுக்குவதை உரமாக்கினால் விவசாயம் வளம் பெறும். பாரத நாட்டுப் பெண்மணிகள் இரவை எதிர்பார்த்து ஒதுங்கும் நேரத்தில் அவர்களின் கற்புக்கும் சோதனைகள் ஏற்படுவது உண்டு.

வழிப்பறிக் கொள்ளையர்களும், காமாந்தகர்களும் இருட்டில் பதுங்கி இத்தகைய பாதகங்களைச் செய்வதுண்டு. இப்படிப்பட்ட இருட்டுகளை வெளிச்சமாக்கி நிழல்களை நிஜமாக்க வேண்டும். எப்படி?

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிப்பிடம் என்ற திட்டத்தை மாற்றி பழக்கதோஷம் காரணமாக கிராம மக்கள் பயன்படுத்தும் அதே திறந்த வெளியில் 20 அல்லது 30 கழிவறைகளுடன் குளியலறைகள் கொண்ட சமுதாயக் கழிப்பிட வளாகங்களை அமைக்கலாம்.

எவ்வாறு பேருந்து நிலையங்களில் கட்டணக் கழிப்பிடம் செயல்படுகிறதோ அதேபோல், ஆனால், கட்டணம் வாங்காமல் சமுதாயக் கழிப்பிடங்கள் செயல்பட வேண்டும். சுத்தம் பராமரிக்க அங்கு ஆட்களை நியமிக்கலாம்.

வீட்டில் கழிப்பிடம் கட்டிவிட்டுத் தண்ணீர் வசதி இல்லாவிட்டால் பயன்படுத்த முடியாது. இப்படிப்பட்ட சமுதாயக் கழிப்பிடங்களின் செப்டிக் டேங்கில் சேரும் கழிவுநீரிலிருந்து மீத்தேன் மின்சாரம் எடுத்து சுயதேவைப் பூர்த்தி முறையில் இருட்டையும் செலவில்லாமல் வெளிச்சமாக்கலாம்.

இதுபோல் பேருந்து நிலையங்களில் உள்ள செப்டிக் டேங்குகளிலிருந்தும் மீத்தேன் மின்சாரம் தயாரித்து மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை உயர்த்தலாம்.

புனித நதிகள் மனிதக்கழிவுகளால் அசுத்தமாகின்றன. ஏரிகளும் குளங்களும் பிளாஸ்டிக் கலந்த இதரக் குப்பைகளால் அசுத்தமாகின்றன. வானத்தில் உள்ள வருணதேவன், தான் வழங்கும் கொடையை மனிதன் மாசுபடுத்தி வருவதைக் கண்டு மனம் வருந்துவானே.

குப்பை கொட்ட உகந்த இடம் இல்லாமல் ஏரி, குளங்களைக் குப்பைகளால் நிரப்பினால் நன்னீருக்கு என் செய்வது? மனைக்கட்டுகளின் தேவையும் உயர்வதால் தூர்ந்த நிலையில் உள்ள ஏரி, குளங்களுக்கு ஏக டிமாண்ட்.

வருவாய்த் துறையை ஏமாற்றிப் பட்டா வாங்கி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அடுக்குமாடிக் கட்டடம் கட்டுகிறது. நகராட்சிகளும் பேரூராட்சிகளும் ஏரி, குளங்களில் குப்பை கொட்டுகிறது.

கோவில்களெல்லாம் திருத்தலங்கள். திருத்தலங்கள் எல்லாம் திருக்குளங்கள். திருக்குளங்கள் எல்லாம் பிளாஸ்டிக் குப்பை மேடுகள். இதுவே நாம் காணும் காட்சி.

நகராட்சியா, நரகாட்சியா?

இறைவா, நீயே சாட்சி.

பிளாஸ்டிக் குப்பை மேடுகளுக்குத் தீர்வு காணாமல் தூய பாரதத்தை எவ்வாறு நிர்மாணிப்போம்!

பிளாஸ்டிக் குப்பைகள் சேராமல் பாரத மண்ணைக் காப்பாற்றுவது எப்படி?

அன்றைய கிராமங்கள் இன்றைய நகரங்கள். அன்றைய மனிதன் (1970-80 வரை) கடை கண்ணிக்குச் செல்லும்போது கூடவே பெரிய பை எடுத்துச் செல்வான். பால், எண்ணெய் வாங்கப் பாத்திரம் எடுத்துச் செல்வான்.

இன்றோ கை வீசியபடி செல்கிறான். மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி எல்லாமே பிளாஸ்டிக் பைகளில் வழங்குகிறார்கள். ஓட்டல்களிலும் சாம்பார், சட்னி, இட்லி, தோசை, சாப்பாடு எல்லாமே பிளாஸ்டிக் பைகளில் பார்சல் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் கப்புகளில் காபி, டீ. பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர்.

ஆனால் இத்தகைய பிளாஸ்டிக்குகள் பயனான பின்னர் ஆங்காங்கே வீசி எறியப்படுகிறது. மக்கக் கூடிய குப்பைகளில் கலந்து விடுகிறது. இப்படிப்பட்ட சூழலை மாற்றுவது எப்படி?

குப்பைகளைக் கூட்டி எடுத்துச் செல்லும் போதே மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் பிரித்துச் செல்வது நலம். அவ்வாறு செய்யாமல் மொத்தமாகக் கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

சில பேரூராட்சிகள் கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தி பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்து ரூ.2,000 வரை அபராதம் போடுகிறார்கள். ஒரு வாரத்திற்குப் பின் பழையபடி சாமான்களைப் பிளாஸ்டிக் பைகளில் கடைக்காரர்கள் வழங்குகிறார்கள். காரணம் நுகர்வோர்கள்.

கட்டிய அபராதத்தைப் பொருள்களில் விலையைக் கூட்டி கடைக்காரர்கள் ஈடு செய்து விடுவார்கள். ஆகவே, பிளாஸ்டிக் பைகளில் சாமான்கள் வாங்க மாட்டோம் என்று பொதுமக்கள் சபதம் செய்தால்தான் விடிவு.

பொதுமக்கள் கடைக்குப் போகும் முன்பு பை, பாட்டில், பாத்திரங்களை எடுத்துச் செல்லவேண்டும். பால், சமையல் எண்ணெய், நெய் நீங்கலாக மற்றவை பிளாஸ்டிக் பைகளில் பேக் (Pack) செய்யத் தடை உத்தரவு வேண்டும். மீண்டும் பயன்படும் வழியில் பிளாஸ்டிக் கண்டைனர்களை அனுமதிக்கலாம்.

இப்படி ஒரு தடை உத்தரவு பிறப்பிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளில் கலப்பதைத் தவிர்க்கலாம். கொட்டும்போதே நுகர்வோர் மக்கும் குப்பைகளான காய்கறி, பழம், சோறு, இறைச்சிக் கழிவுகளைத் தனியாகவும், பிளாஸ்டிக்குகளைத் தனியாகவும் பிரித்து வழங்கலாம்.

அவ்வாறு இயலாத சூழ்நிலையில் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லாரி, டிராக்டர்களில் உடன் செல்வோர் அப்பணியில் ஈடுபடலாம். இதன்மூலம் மக்கும் தன்மையுள்ள குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் பணி எளிதாகும்.

பிரிக்க இயலாதவாறு இதுவரை கொட்டப்பட்ட குப்பை மலைகளை என்ன செய்யலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஜே.சி.பி. உதவி கொண்டு மூட்டமாயுள்ள குப்பைகளை அழுத்திச் சமனாக்க வேண்டும். குப்பைகள் குவிந்த இடத்திலேயே மண்ணைத் தோண்டி அரை அடி கனத்திற்குப் பரப்பிவிட வேண்டும்.

இவ்வாறு ஓரளவுக்கு சமன் செய்யப்பட்ட அம் மண் மீது ஆல், அரசு, கொன்றை, வாகை, வேம்பு, நாவல், கொடுக்காப்புளி, புளி போன்ற மர விதைகளை நெருக்கமாக நட வேண்டும்.

ஆழத்தில் நீர் தேடும் இம் மரத்தின் வேர்கள் பிளாஸ்டிக்குகளைத் துளைத்துக் கொண்டு குவியலின் கீழுள்ள சமன் நிலத்தில் கால் பதிக்கும்.

மூன்றே மாதங்களில் புல் வளர்ந்து பசுமை தட்டும். மூன்றே ஆண்டுகளில் மரங்கள் வளர்ந்து குளிர்சோலையாகும்.

இவ்வாறு ஒவ்வொரு ஊராட்சி / பேரூராட்சிகளிலும் குப்பை மேடுகள் பசுமை நிறைந்த சோலைகளாக மாற வேண்டும்.

அப்போதுதான் தூய பாரதம் என்கிற கனவு நனவாகும்.



கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

பிரீமியம் ரயில்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிரீமியம் தத்கல், பிரீமியம் ரயில் திட்டங்களுக்கு தமிழகத்தில் போதிய வரவேற்பு இல்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரீமியம் தத்கல் முறை அறிமுகப்படுத்தி இரண்டு மாதங்களில் 56.7 சதவீதப் பயணிகள் மட்டுமே இதனைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பல பிரீமியம் ரயில்கள், போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சில நாள்களுக்கு முன் சபரிமலைக்கு அறிவிக்கப்பட்ட பிரீமியம் ரயில்கள், பயணிகளிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் அதிவிரைவு சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டன. இதில் குறிப்பாக, மதுரை- ஜெய்பூர் இடையே பிரீமியம் விரைவு சிறப்பு ரயில், ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஆனால், சில வாரங்களிலேயே அந்த ரயில் ரத்து செய்யப்பட்டது.

வட மாநிலங்களில் வர்த்தக நகரங்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்ற பிரீமியம் ரயில், பிரீமியம் தட்கல் முறை தமிழகத்தில் வெற்றி பெறவில்லை. முதன் முதலில் தில்லி- மும்பை இடையே பிரீமியம் விரைவு ரயில் கடந்தாண்டு இயக்கப்பட்டது. அதன் வரவேற்பை பொருத்தே பட்ஜெட்டில் பிரீமியம் விரைவு ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பிரீமியம் தத்கல்: பிரீமியம் தத்கல் முறையில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் தத்கல் ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இடங்கள் பிரீமியம் தத்கலுக்கு ஒதுக்கப்படும். இது சாதாரண தத்கல் டிக்கெட் முன்பதிவுக் கட்டணத்தில் இருந்து முதலில் பத்து சதவீத கட்டணம் உயர்த்தப்படும்.

பின்னர் அது 20 சதவீதமாகி அதற்கு மேலும் பயணிகள் இருந்தால் 40 சதவீதம் முதல் ஐம்பது சதவீகிதம் வரை இக்கட்டணம் உயர்த்தப்படும். இதனை இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும்.

காத்திருப்பு பயணச் சீட்டு கிடையாது. படுக்கை, இருக்கை வசதி கொண்ட பயணச் சீட்டை மட்டுமே பிரீமியம் தத்கல் வழங்கும். உதாரணத்துக்கு ரூ.250 க்கான தத்கல் பயணச் சீட்டு, பிரீமியம் தத்கலில் ரூ.500-க்கு கிடைக்கும்.

பிரீமியம் விரைவு ரயில்: பிரீமியம் விரைவு ரயில்களில் டைனாமிக் பிரைசிங் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது பயணிகளின் தேவைக்கு ஏற்ப முன்பதிவு நிலவரத்தைப் பொருத்து ரயில் பயணச் சீட்டு கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கும். சென்னையில் இருந்து திருச்சிக்குப் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் ரூ.225 மதிப்புள்ள பயணச் சீட்டு, தேவை அதிகமாகும் பட்சத்தில் ரூ.800 வரை பிரீமியம் ரயில்களில் கட்டணம் இருக்கும்.

இதுபோன்ற பிரீமியம் ரயில்களில் ஏசி வகுப்புகளின் பயணச் சீட்டு விமானப் பயணச் சீட்டுக்கு நிகராக இருக்கும். மேலும், பிரீமியம் ரயில்களின் பயணச் சீட்டு விற்பனை ரயில் புறப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன்பாக இணையதளத்தில் முன்பதிவு தொடங்கப்படும். ஒரு முறை முன்பதிவு செய்துவிட்டால், ரத்து செய்ய முடியாது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி கூறியது:

வட மாநிலங்களில் பிரீமியம் ரயில் அதிக வரவேற்பை பெற்றது. இதற்குக் காரணம் அவர்கள் செய்யும் வணிகம். தில்லி- மும்பை- ஆமதாபாத் ஆகியவை வர்த்தக நகரங்கள்.

அவர்களுக்கு இந்தப் பிரீமியம் தத்கல், பிரீமியம் ரயில்களின் கட்டணம் பெரிதில்லை. ஆனால், தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை வேறு. இந்த நடைமுறை தமிழகத்தில் பயணிகளிடம் போதிய வரவேற்பு பெறவில்லை என்றார் அவர்.



பாதி இடங்கள்கூட முன்பதிவாகவில்லை (அக்.1 முதல் நவ.30 வரை)



சென்னை சென்ட்ரல்- ஆமதாபாத்- நவஜீவன் விரைவு ரயிலில் 2 மாதங்களில் பிரீமியம் தத்கலுக்கு முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 8,164 இடங்களில் 3,882 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன.

சென்னை எழும்பூர்- செங்கோட்டை- பொதிகை விரைவு ரயிலில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 6,786 இடங்களில் 3,327 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன.

கோவை- ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கென ஒதுக்கப்பட்ட 225 இடங்களில் 51 இடங்களே முன்பதிவு செய்யப்பட்டன. இதில், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மட்டுமே 30 சதவீதம் நிரம்பியது. இரண்டாம் ஏசி, மூன்றாம் ஏசி வகுப்புகளில் பிரீமியம் தத்கல் முன்பதிவுக்கு வரவேற்பு இல்லை.

முன்பதிவு உள்ள தத்கல் ரயில்கள்



சென்னை சென்ட்ரல்- ஆமதாபாத் நவஜீவன் விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெளரா கோரமண்டல் விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெளரா மெயில்

சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை விரைவு ரயில்

திருவனந்தபுரம்- ஷாலிமார் விரைவு ரயில்



ரத்து செய்யப்பட்டவை

மதுரை- ஜெய்ப்பூர் பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- ஹெüரா பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- கொச்சுவேளி பிரீமியம் ரயில்

சென்னை சென்ட்ரல்- திருநெல்வேலி பிரீமியம் ரயில்

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...