Wednesday, December 10, 2014

RGUHS All Set to Check Hi-tech Exam Cheating


BENGALURU: The Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) has decided to tackle hi-tech exam malpractices with stiff punishment and penalty.

Debarring students wearing customized T-shirts for two exams is among the stringent measures. The authorities have been flummoxed by the innovative cheating ways of students like having hi-tech copying devices fitted into the T-shirt. These proposals have been approved by the syndicate at its recent meeting.

According to the revised penalty clause, the copy of which is available with Express, the highest punishment fixed is for tampering of answer scripts — fine of `25,000 and debarring from taking three examinations, including the one in which the student is involved in malpractice.

Speaking to Express, Dr S Sachidanand, Registrar, Evaluation, said, “Following the recent cases of tampering of answer scripts, we have introduced it as one of the malpractices and fixed stringent punishment.”

As per the existing rules, those indulging in whatever crime/malpractice related to examinations had to appear before a committee which used to finalise the penalty amount.

The committee has no role to play under the revised norms and the university will follow the fixed punishment.

“The revised penalty/punishments will also cover the examinations concluded recently,” he said.

அரபு நாடுகளோடு பரஸ்பர வர்த்தகம்

தினத்தந்தி’ தனது முதல் சர்வதேச பதிப்பாக 17–வது பதிப்பை துபாயில் இன்று தொடங்குகிறது. அமீரகம் என்று அழைக்கப்படும் அரபு ஐக்கிய குடியரசு நாடுகளில் தொடங்கப்படும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ‘தினத்தந்தி’ பெற்றுள்ளது.

வளைகுடா கடலோரம் உள்ள அரபு நாடுகள், இந்தியாவைப்போல நீண்டநெடிய சரித்திரம் படைத்தது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு எப்போதும் உண்டு. சுதந்திரம்பெற்ற பிறகுதான் 1971–ம் ஆண்டில் துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், பஜைரா போன்ற நாடுகள் ஒன்றாக இணைந்து, ஐக்கிய அரபு குடியரசாக உருவெடுத்தது. பின்பு ரஸ் அல் கைமா நாடும் இணைந்துகொண்டது. 1962–ம் ஆண்டுதான் முதலில் அபுதாபியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டது. அதில் இருந்து அரபு நாடுகளின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. துபாய் ஆட்சியாளராக இருந்த ஷேக் ரஷீது பின் சைது அல் மக்தும் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் உடையவர். மறைந்த ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தார். அப்போது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் கபடி விளையாட்டை, 1990–ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்க்க வேண்டும் என்று முயற்சித்தபோது, அதற்கு முழுமையாக ஆதரவாக இருந்தவர் அவர்தான். ஆனால், பெய்ஜிங்கில் ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்த போது அவர் உயிரோடு இல்லை. அவரது மகன் ஷேக் மக்தும் பின் ரஷித் அல் மக்தும் துபாய் ஆட்சியாளராக இருந்த நிலையில் பெய்ஜிங் வந்தார். அவரை, பா.சிவந்தி ஆதித்தனார் கபடி போட்டி நடந்த இடத்துக்கு அழைத்துச்சென்று கபடி விளையாட்டை விளக்கினார். அவரும் 2006–ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற நேரத்தில் காலமானதும், அவருடைய சகோதரரான இப்போது துபாய் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு குடியரசின் துணை ஜனாதிபதியாக இருக்கும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் பதவியேற்றார்.

இன்றைய சூழ்நிலையில், அடுத்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக வர இருக்கிறார். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை மேம்படுத்துவதுடன், பரஸ்பர வர்த்தக உறவையும் நிச்சயமாக வளர்க்கும். இந்தியாவில் இருந்து பல அறிவுசார் தொழில் முதலீட்டாளர்கள் அரபு நாடுகளில் தொழில் தொடங்க முனைப்புடன் இருக்கிறார்கள். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் இந்திய தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுபோல, அரபு நாட்டில் உள்ள தொழில் அதிபர்கள், இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய பணிகள் நடந்துவருகின்றன. இதுதொடர்பாக இந்திய, அரபு கூட்டு மாநாடு கடந்த மாதம் 26, 27–ந் தேதிகளில் டெல்லியில் நடந்தது. ஏற்கனவே இந்த ஆண்டு இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் உள்பட உயர்நிலை கூட்டங்கள் நடந்துள்ளன. அவையெல்லாம் நல்ல உறவு பாலங்களை வலுவடைய செய்து, தொழில் முதலீடுகளுக்கும் வழிகாட்டியுள்ளன.

இந்தியாவில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரபு நாடுகளில் பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள். இதில் கணிசமான அளவில் தமிழ்நாட்டில் இருந்தும், தென்மாநிலங்களில் இருந்தும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சின்னஞ்சிறு குக்கிராமங்களில்கூட இன்னார் குடும்பத்தில் இருந்து ஒருவர் அரபு நாடுகளில் பணியாற்றுகிறார் என்றால் தனி மவுசு உண்டு. தற்போது உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை துபாயில் கட்ட திட்டம் உள்ளது. விரைவில் ரூ.2 லட்சம் கோடி செலவிலான 5 ரன்வேக்கள் ஒரே நேரத்தில் இயங்கும் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்க இருக்கிறது. இன்னும் நிறையபேர் தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு செல்வார்கள். கடும் உழைப்புக்கு இந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை, அரபு நாடுகள் ஏற்க வேண்டும்.

Tuesday, December 9, 2014

No more forms for season tickets

Taking a hint from the angry responses of commuters, Southern Railway has decided to scrap the procedure of filling up of forms while applying for or renewing season tickets.

“We have stopped issuing the forms which we introduced in August. Commuters no longer need to provide their personal details and address while renewing their monthly, quarterly, half-yearly and annual season tickets,” officials of the commercial department of Southern Railway said.

The new arrangement is much simpler and commuters only have to produce a copy of an identity proof at the time of applying for a season ticket for the first time. The proof is returned and the commuter has to carry it along with the season ticket. There is no need to produce a photo ID proof while renewing the season ticket, a staff at one of the MRTS stations said. However, while applying for renewal at a station other than the one from where the original season ticket was bought, commuters need to show their photo to ticketing staff at the counter.

Citing a court order, Southern Railway in August had made it mandatory for people applying for season tickets to fill up a form with the complete details of the commuter. Applicants also had to write the “purpose of their travel” and their full address, including their ‘taluk’ (revenue division), a process many commuters found difficult.

Applicants for season tickets were also asked to furnish a photocopy of a valid proof – Voters’ identity card, PAN card or driving licence among other documents.

“This time-consuming process was not only a waste of time, but we were unhappy with sharing our personal details,” P. Viswanathan, activist, said.

NEW FORM OF TROUBLE FOR CONSUMERS


Monday, December 8, 2014

Agencies Go Extra Mile; Sundays open


CHENNAI: Oil companies have directed gas agencies to remain open on Sundays to enable office-goers to leisurely complete the registration formalities for the Direct Benefit of Transfer for LPG (DBTL) Scheme that would roll out from the New Year. The move has been welcomed by those eager to get their LPG subsidies credited in their bank accounts.

However, while Bharatgas outlets were open here on Sunday, four Indane outlets were found with shutters down. Indian Oil officials said they have directed dealers to function on holidays and grant compensatory leave for staff later.

“My neighbour informed me that the gas agency was open on Sunday. I am happy that I was able to complete my DBTL formalities,” said R Ravi of Bharathi Nagar, who is a government office clerk.

However, dealers said only around 50 customers turned up on Sunday compared to 400 to 500 on weekdays. “This was because many were not aware that the agencies were open on Sunday,” said E Mohan of Mylapore.

Bharatgas outlets were open till 1 pm. “We are keen on completing maximum seedings by the year-end. So we will function without holidays,” said a Bharatgas official. The manager of an Indane outlet that was shut claimed he had kept it open in the morning but closed as customers did not turn up.

மிருகங்களே மிகப்பெரிய மருத்துவர்கள்



நோய் ஏற்படும்போது, பெரும்பாலான மிருகங்களும் பறவைகளும் தங்களுக்குத் தாங்களே சிகிச்சை செய்து அந்த நோயைக் குணப்படுத்தும் அறிவு பெற்றிருக்கின்றன.

காட்டில் உள்ள மருத்துவக் குணமுள்ள தாவரங்களைப் பற்றி முதலில் மனிதன், நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் நடவடிக்கையைப் பார்த்துதான் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். தங்களுக்குத் தாங்களே சிகிச்சையளித்துக் கொள்ளும் பறவைகளையும் மிருகங்களையும் உற்றுக் கவனித்து புதிய புதிய மூலிகைத் தாவரங்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன.

ஒரு குரங்கு இருந்தது. ஒரு நாள் திடீரென்று அதற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. பிறகு அது விளையாடவில்லை. சிரிக்கவும்கூட இல்லை. சோர்ந்துபோய் அது ஒரு மூலையில் அமர்ந்து தூங்கி விழுந்துகொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோதுதான் விஷயம் என்னவென்று புரிந்தது. அது, ஈரமான சேற்றுக் கட்டியைக் கன்னத்தோடு வைத்து சேர்த்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது. எதற்காக அது அப்படிச் செய்கிறது தெரியுமா? தனக்கு ஏற்பட்ட பல் வலியைப் போக்குவதற்காகத்தான்.

நமக்கு உடல் நிலை சீர் கெட்டால் நாம் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்ப்போம். அவர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை உண்போம். ஆனால் நோய் வந்த மிருகங்கள் என்ன செய்யும்? அவை தனக்குத் தானே சிகிச்சையளித்துக்கொள்ளும். இதுபோன்ற திறமை பெரும்பாலான மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

அந்தக் குரங்கு தனக்குக் குளிர்ச்சி கிடைப்பதற்காக ஈர மண் கட்டியைக் கன்னத்தோடு சேர்த்துவைத்துப் பிடித்திருப்பது என்பது, தனக்குச் செய்துகொள்ளும் சிகிச்சையின் ஒரு பகுதிதான். மலேஷியாவில் உள்ள ஒரு மனிதக் குரங்குதான் இப்படிச் செய்தது. சில நாட்களுக்குப் பிறகு, பல் வலிக்குக் காரணமான அந்தக் கெட்டுப்போன பல்லை, அது தானே பிடுங்கி எடுத்துவிட்டது. அதோடு நில்லாமல் தான் பிடுங்கி எடுத்த தன் பல்லை எடுத்துக்கொண்டு வந்து மிகவும் பெருமையுடன் மிருகக் காட்சி சாலையின் பாதுகாவலரிடம் காட்டவும் செய்தது.

ஒரு காட்டு விலங்கிற்கு காய்ச்சல் வந்தால் அது முதலில் என்ன செய்யும்? மிகத் தனிமையான ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும். காய்ச்சல் வந்தால், முதலில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று அதற்குத் தெரியும். அதற்காக அது காற்றும் வெளிச்சமும், தாராளமாகத் தண்ணீரும் கிடைக்கின்ற ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும். அங்கே மிகக் கொஞ்சமாக உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நன்றாக ஓய்வெடுக்கும். அப்போது சிறுகச் சிறுக அதன் காய்ச்சல் குணமடைந்துவிடும்.

சில நேரங்களில் நாயும் பூனையும் புற்களுக்கிடையில் மோப்பம் பிடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில சமயம் அவை சில வகையான புற்களைப் பறித்துத் தின்பதும் உண்டு. தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வயிற்று வலியையோ, மற்ற உடல் நலப் பிரச்சினைகளையோ குணப்படுத்துவதற்காகத்தான் அவை இவ்வாறு செய்கின்றன. பூனையும் நாயும் மாடும் மட்டுமல்ல, முற்றிலும் அசைவ உணவையே விரும்பி உண்ணும் மிருகங்கள்கூட, தங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது இதுபோன்று மூலிகைப் புற்களைத் தேடித் தின்பதுண்டு. எந்த நோய்க்கு எந்தப் புற்களைத் தின்ன வேண்டும், அல்லது எந்த மூலிகை இலைகளைத் தின்ன வேண்டும் என்று அவற்றிற்கு நன்றாகத் தெரியும்.

நெடுநாட்கள் குளிர்கால உறக்கத்தில் இருக்கின்ற கரடியும் மற்ற மிருகங்களும், தாங்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த உடனே முதலில், வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்காக சில வகைக் காய்களையும் கனிகளையும் சாப்பிடும்.

பல நாட்களாக வயிற்றில் தங்கியிருந்த அழுக்கெல்லாம் அகற்றப்பட்டு வயிறு சுத்தமாகும் அல்லவா?

அடிபட்டு ரத்தக் காயம் ஏற்பட்டால் "கிப்பன்' எனும் மனிதக் குரங்குகள், மருத்துவக் குணமுள்ள ஒரு வகைச் செடிகளைத் தேடிப்பிடிக்கும். பிறகு அந்தச் செடிகளின் இலைகளை வாயிலிட்டு நன்றாக மெல்லும்.

மென்ற இலைச் சக்கையை அப்படியே பந்துபோல சுருட்டி அடிபட்ட இடத்தில் அழுத்தி வைக்கும். சில தினங்களுக்குள் காயம் ஆறிவிடும்."கொரில்லா'க் குரங்குகளும், பிரத்தியேக வாசனை உள்ள சில பச்சிலைகளைத் தங்களின் காயங்களில் அழுத்தமாகப் பதித்து வைக்கும்.

நம் கைகால்களில் ஏதாவது முறிவு ஏற்பட்டால் நாம் சில காலம் மாவுக் கட்டுப்போட்டுக்கொண்டிருப்போம் அல்லவா? மிருகங்களுக்கிடையிலும் இதுபோன்ற ஒரு சிகிச்சை முறை உண்டு. ஒரு முறை "மூர்ஹென்' எனும் இனத்தைச் சேர்ந்த காட்டுக் கோழி இதுபோன்று செய்தது. நாம் செய்வதுபோன்று அது மாவுக் கட்டுப் போட்டுக்கொள்ளவில்லை. அது, முறிவு ஏற்பட்ட காலில் கொஞ்சம் சேற்றைப் பூசி பற்று போட்டுக் கொண்டது, அவ்வளவு தான். "வுட் கோக்' எனும் பறவையும் இது போன்று செய்யும். தன் காலில் அடிபட்டால் இந்தப் பறவை, சேற்றையும் ஒரு வகைப் புற்களையும், ஒருவகை வேர்களையும் சேர்த்து பற்று போட்டுக் கொள்ளும்.

தங்களுக்குள் மருத்துவ உதவி செய்து கொள்வதில் எறும்புகள் மிகவும் திறமையானவை. எறும்புக் குடியிருப்பில் உள்ள எந்த எறும்பிற்காவது கால் ஒடிந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே மற்ற எறும்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட எறும்பின் காலைத் துண்டித்துவிடும். பிறகு அந்த எறும்பை ஒரு பிரத்தியேக அறையில் வைத்து காயம் ஆறும் வரை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்.

தங்கள் காயங்களில் சிலந்தி வலைகளை வைத்து சிகிச்சை செய்து கொள்கின்ற சில மிருகங்களும் இருக்கின்றன. ரத்தக் குழாய்களைச் சுருக்கி, ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கான குணம் சிலந்தி வலைகளுக்கு உண்டு என்பது தான் அதற்குக் காரணம். சில பிராணிகள், சில வகையான ஈக்களின் லார்வாக்களை நூற்றுக் கணக்கில் அள்ளிப் பூசி தங்கள் காயங்களை ஆற்றிக் கொள்ளும். இந்த லார்வாக்கள், காயத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

சில பறவைகள் எறும்புப் புற்றிற்கு மேலே இறக்கை விரித்துப் படுத்துக் கிடக்கும். எறும்புகளில் உள்ள "போர்மிக் ஆஸிட்' என்பதைப் பயன்படுத்தி தங்கள் இறக்கைகளை வலுப்படுத்திக் கொள்வதற்காகத் தான் இது போன்று செய்கின்றன என்று சில விஞ் ஞானிகள் கருதுகிறார்கள். காக்கைகள், வீடுகளில் உள்ள புகைக் குழாய்களின் அருகே அமர்ந்து "புகைக் குளியல்" நடத்தும். யானைகளுக்கு "புழுதிக் குளியல்' நடத்துவது தான் பிடிக்கும். உட லைத் தாக்குகின்ற சிறு பூச்சிகளைத் துரத்துவது தான் இது போன்ற குளியல்களுக்குக் காரணம்.

சில வகை மான்கள் சுண்ணாம் புச்சத்து உள்ள தண்ணீர் குடிப்பதற்காக பல கிலோ மீட்டர் பயணம் செய்யும். அவற்றின் கொம்புகள் சீக்கிரம் வளர சுண்ணாம்புச் சத்து மிகவும் ஏற்றது. பெண் கோவேறு கழுதைகள் கர்ப்ப காலத்தில் குறிப்பாக ஒரு வகை உணவை மட்டுமே உண்ணும். ஆரோக்கியமான குட்டிகள் பிறப்பதற்காகத்தான் அது இது போன்று செய்கிறது.

கொரில்லாக் குரங்குகள் வழக்கமாக மாலை நேரங்களில் தங்கள் பற்களைச் சுத்தப் படுத்திக் கொள்ளும். "சிம்பன்ஸி' குரங்குகள் தங்கள் பற்களை சுத்தப்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் குட்டிகளின் பற்களையும் சுத்தம் செய்யும். சில சமயம் கொரில்லாக் குரங்குகள், தங்கள் இனத்தில் எந்தக் குரங்கிற்காவது பல் வலி வந்தால், அந்தக் குரங்கை தரையில் மல்லாந்து படுக்க வைக்கும். பிறகு சிறு கம்புகளைக் கொண்டு அதன் கெட்டுப் போன பல்லைப் பிடுங்கி எடுக்கும். ஏறத்தாழ இது ஒரு அறுவை சிகிச்சை தான்.

சில முதலைகள் தங்கள் பற்களின் இடையில் சிக்கிக் கொண்ட உணவுத் துணுக்குகளை அகற்றுவதற்காக சிறிய பறவைகளைச் சார்ந்திருக்கும். தங்கள் பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துணுக்குகளை பறவைகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது, எவ்வளவு தான் பசியாக இருந்தாலும் இந்த முதலைகள் அந்தப் பறவைகளை உண்பதில்லை.

வளர்ப்பு யானைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் அப்போது யானைப் பாகன்கள் அவற்றைக் காட் டிற்குக் கொண்டு செல்வார் கள். காட்டிற்குச் சென்றவுடன் அந்த யானைகள் மூலிகைச் செடிகளைத் தேடிப் பிடித்துத் தின்னும்.

காட்டில் உள்ள சில மூலிகைச் செடிகள் மிருகங்களின் பெயரில் அறியப்படுகின்றன. வடக்கு அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர்கள், கரடிகள் நோய் வாய்ப்படும் போது வழக்கமாகத் தின்கிற ஒரு செடிக்கு "கரடி மருந்து' என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள் என்பது குறிப்பிடத்தக்து.

SOURCE:
Dinamani

நூடுல்ஸ் சொல்லும் ரகசியத்தைக் கேளுங்க..

Dinamani

நூடுல்ஸ்... என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது குழந்தைகளின் குதூகலம்தான். அதிலும் துரித நூடுல்ஸ் என்றால் பெரும்பாலான அம்மாக்களுக்கும் மகிழ்ச்சிதான்.

எடுத்தோமா 5 நொடியில் செய்தோமா.. குழந்தையிடம் கொடுத்தால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டுவிடும். வாயிறு நிரம்பிய திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும் என்று நினைப்போம்.

ஆனால் நூடுல்ஸ் அவ்வளவு எளிதான உணவு பொருளும் அல்ல, அதனை நினைத்து மகிழ்ச்சி கொள்ளவும் ஏற்றது அல்ல.

நூடுல்ஸ் சாப்பிடாதீங்கன்னு நிறைய பேர் சொல்றாங்க தாங்க.. ஆனா, எங்க புள்ளைங்க அதத்தானே விரும்பி சாப்பிடுறாங்கன்னு சொல்வது புரிகிறது. ஆனா, அவங்களுக்குப் பிடிக்கும்னு கல்லையோ மண்ணையோ நீங்க சாப்பிடக் கொடுப்பீங்களா.. அப்படியே கல்லையோ மண்ணையோ கொடுத்தால் கூட அது நூடுல்ஸை விட அதிகக் கெடுதியை செய்து விடாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஏன் எனில் நூடுல்ஸை வேண்டவே வேண்டாம் என்று சொல்வதற்கு எங்களிடம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றை சொல்ல நேரமில்லாததால் ஒரு முக்கியமான பத்து காரணங்களை இங்கே சொல்கிறோம்.

இதில் எல்லாமே மிகவும் யோசிக்க வேண்டிய விஷயங்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

முதலில்,

சத்துக்களை உட்கிரகிக்கும் தன்மை

நூடுல்ஸ் சாப்பிடும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உணவில் இருக்கும் சத்துக்களை உட்கிரகிக்கும் ஆற்றல் குறைந்து போய்விடும். இதனால் வேறு எந்த சத்தாண உணவைக் கொடுத்தாலும் அதனால் குழந்தைகளுக்கு எந்த பலனும் இல்லாமல் போய்விடுகிறது.

புற்றுநோய்க்கு வாய்ப்பு

துரித நூடுல்ஸ்களில் சேர்க்கப்படும் ஸ்டைரோபோம் எனப்படும் ரசாயனம் புற்றுநோயை உருவாக்கவல்லது. எனவே, அடிக்கடி துரித நூடுல்ஸ் சாப்பிடுவோருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கருக்கலைப்பு

கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் துரித நூடுல்ஸை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. ஏன் எனில், நூடுல்ஸில் இருக்கும் ரசாயனங்கள் கருவின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது அறிவியல் பூர்வ உண்மையாகும்.

செரிமான மண்டலம் பாதிப்பு

நூடுல்ஸ் விளம்பரங்களில் போடப்படுவதை போல, அதில் எந்த விட்டமின்களும், மினரல்களும் இல்லவே இல்லை. அது வெறும் கார்போஹைட்ரேட் மட்டும்தான். நூடுல்ஸ் என்பது வயிற்றைப் பொருத்தவரை ஒரு ஜங்க் புட். அவ்வளவுதான்.

இந்த ஜங்க் புட் வயிற்றுக்குள் போனதும் செரிமான இயக்கத்தையே சேதப்படுத்திவிடுகிறது. அதனை செரிமானம் செய்ய வயிற்றுக்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இது உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு. இருந்த இடத்திலேயே இருந்தால் இந்த நேரம் இரு மடங்காகும் வாய்ப்புள்ளது.

அதிக சோடியம்

பேக் செய்து விற்கப்படும் நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான சோடியம் கலந்துள்ளது. உடலில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான சோடியம் கலப்பதால் இதய நோய், பக்கவாதம், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதுவே இந்த நோய்களில் ஏதேனும் ஒன்று ஏற்கனவே இருப்பவர்கள் நூடுல்ஸ் சாப்பிட்டால் அவர்களது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகும்.

மோனோசோடியம் க்ளுடாமேட்

நூடுல்ஸின் வாசத்துக்காக அதில் மோனோசோடியம் க்ளுடாமேட் சேர்க்கப்படுகிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டதும் தலைவலி, முகத்தில் வீக்கம், வலி, வயிற்றில் எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அவருக்கு மோனோசோடியம் க்ளுடாமேட் ஒத்துக் கொள்ளாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

உடல் பருமன்

உடல் பருமனுக்கும் நூடுல்சுக்கும் என்னங்க சம்பந்தம் இருக்கு என்று கேட்காதீர்கள். நிறையவே இருக்கு. நூடுல்ஸில் எக்கச்சக்க கொழுப்பு இருக்கிறது. மேலும், நூடுல்ஸில் சோடியம் அதிகமாக சேர்க்கப்படுவதால், அது உடலில் நீர் சக்தி குறையக் காரணமாகிவிடும். இதனால் அதிகப்படியான கொழுப்பு உடம்பில் தங்க வாய்ப்பு ஏற்படுகிறது.

உடல் பருமன் பல வியாதிகளுக்கு தாய் வீடு என்பது பலருக்கும் தெரியும். ஆனால் நூடுஸ்ஸ் உடல் பருமனுக்கே சொந்த வீடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வயிறு மந்தம்

நூடுல்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு மந்தமாகி அதன் இயல்பு நிலையை இழந்து விடுகிறது. இதனால் பலருக்கும் உணவு செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நூடுல்ஸ் அதன் தளர்த்தியான நிலையை பெற ப்ரோபைலைன் க்ளைகோல் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடும் ஆற்றல் பெற்றது. நூடுல்ஸ் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் பாகங்களை இந்த ரசாயனம் தாக்கி அதனை சேதப்படுத்திவிடும் ஆபத்தும் உள்ளது.

உடலின் இயக்கத் தன்மை

நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலின் சாதாரண இயக்கத் தன்மையே கெட்டு விடுவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன. அதில் உள்ள ரசாயனங்கள் மனித உடலில் அடிக்கடி சேர்வதால், மனித உடலின் இயக்கம் மாறுபட்டு உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

இவ்வளவையும் நாங்க சொல்லிட்டோம்... நீங்க என்ன செய்யப் போறீங்க?

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...