Wednesday, December 10, 2014

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு அந்தஸ்து: நாக் கமிட்டி வழங்கியுள்ளது

Dinamani

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு (NAAC) என்ற நாக் கமிட்டி ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தரமதிப்பீடு (கிரேடு) வழங்குவதற்காக ஆய்வு மேற்கொள்ள 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு (NAAC) என்ற நாக் கமிட்டி கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து மூன்று தினங்கள் பல்கலைக்கழக அனைத்துபுலங்கள் மற்றும் துறைகளையும் ஆய்வு செய்தது.

பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ல் தொடங்கப்பட்டது.1920-ல் சிதம்பரத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் தனது தாயார் பெயரில் மீனாட்சி கல்லூரி ஒன்றை தொடங்கினார். பின்னர் 1927-ல் தமிழ் மொழி மற்றும் வடமொழி கல்லூரிகளையும் நிறுவினார். 1929-ல் இசைக்கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். பின்னர் அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து அப்போதைய சென்னை கவர்னர் அனுமதியோடு 4.3.1929-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

இவ்வாறு தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது 85 ஆண்டுகளை கடந்து ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 9 புலங்கள், 50 துறைகளுடன் இயங்கி வருகிறது. நேரடியாக மேலும் 1979-ம் ஆண்டு தொலைதூரக்கல்வி சேவையை இப் பல்கலைக்கழகம் தொடங்கி நடத்தி வருகிறது. தற்போது நிதிநெருக்கடி மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழகஅரசு கடந்த ஆண்டு சட்டதிருத்தம் கொண்டு தனது முழுக் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து நடத்தி வருகிறது. அதன் நிர்வாகியாக தமிழகஅரசு முதன்மை செயலாளரான ஷிவ்தாஸ்மீனா நியமிக்கப்பட்டு பல்வேறு நிதி, நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு முறைகேடுகள் இன்றி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நன்கொடை இன்றி, தகுதி அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் அனுமதி சேர்க்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கு தரமதிப்பீடு வழங்குவதற்காக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் ஷெட்டி தலைமையிலான 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு கடந்த நவம்பர் மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கு வருகை தந்தது. இக்குழுவில் முன்னாள் துணைவேந்தர் பி.ஏ.பிரஜாபதி, பேராசிரியர் பி.பசுல்ரஹ்மான், பேராசிரியர் சைலேஷ்லேலி, பேராசிரியர் பி.கீதா,, பேராசிரியர் அனுபம் மஹாஜம், டாக்டர் சுபேத்குமார்பட்நாகர், ராம.ராமநாத், டாக்டர் என்.எஸ்.டோங்கா, டாக்டர் ஜேக்கப்ஜான் கட்டாகாயம், பேராரிசிரியர், பி.என்.ராய், பேராசிரியர் என்.அழகுமூர்த்தி, நாக் துணை ஆலோசர் எம்.எஸ்.ஷியாம்சுந்தர் ஆகிய 13 பேர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு அனைத்து துறைகளையும் ஆய்வு செய்துவிட்டு சென்றது. இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட நாக் கமிட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு (3.09) அந்தஸ்து வழங்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது பல்வேறு துறைகளில் குறிப்பாக கடல்வாழ் உயராய்வு மையம், மொழிப்புல உயராய்வு மையம் மற்றும் மருத்துவம், பொறியியல், வேளாண், கல்வி, உடற்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெருமளவு மாற்றமும், வளர்ச்சியும் அடைந்துள்ளது.

ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளியிடுவதில் தேசிய அளவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில், அண்ணாமலைப் பல்கலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் 10 இடங்களுக்குள் அண்ணாமலைப் பல்கலை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

THE PROMOTION IS ONLY APPLICABLE ON SELECTED TIGER AIR FLIGHTS BOOKED ONLINE BY 13TH DECEMBER 2014


முடிவு எடு! கொண்டாடு!

Return to frontpage

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் என்பது வள்ளுவர் வாக்கு.

பள்ளியானாலும் கல்லூரியானாலும் அலுவலகமானாலும் விளையாட்டானாலும் குடும்பமானாலும் நாம் தக்க நேரத்தில் எடுக்கும் சரியான முடிவுகள் முக்கியமானவை. முடிவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். எதிர் கால முடிவுகள். உடனடி முடிவுகள்.

நம்முடைய லட்சியங்களை அடையப் பாதையை வகுக்கும்போதும் அதை நோக்கிய பயணத்தில் தவறு ஏதும் நடக்காமலிருக்கவும் நாம் முடிவுகளை எடுக்கிறோம்.

2௦:2௦ முதல் உலகக்கோப்பை மேட்சை யாரும் மறக்க முடியாது. குறிப்பாக அந்த கடைசி ஓவர். இந்தியா ஜெயித்து விட்டது என்று சந்தோஷப்படுவதற்குள் மிஸ்பா உல் ஹக் நம் பவுலர்களை விரட்டியடிப்பார். கடைசி ஓவரை ஹர்பஜன் போடப்போகிறார் என்று நாம் யோசிப்பதற்குள் தோணி அந்த ஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுப்பார். மிஸ்பா, இந்தப் பவுலர் சொதப்பல் தானே என்று நினைத்து வித்தியாசமான ஷாட்டை விளையாடலாம் என்று எடுத்த முடிவின் விளைவு லட்டு மாதிரி  சாந்த் கையில் காட்ச் ஆகிவிடும். மிஸ்பா எடுத்த தவறான முடிவு ஒரு கோப்பைக்கான வெற்றியைத் தீர்மானித்தது.

முடிவெடுப்பதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் பலவகையான வாய்ப்புகள் கண்முன்னே நிற்கும்போது எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில்தான்.

கல்லூரியைத் தேர்ந்தேடுக்கும் நேர்முகக் கலந்தாய்வில் நான்கு கல்லூரிகளில் நீங்கள் கேட்கும் துறை உள்ளது. உங்களுக்குப் பிடித்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னால் நமக்குக் குழப்பம் வரும். யோசிப்போம். இத்தகைய சூழ்நிலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

# எதை எடுப்பது எதை விடுவது?

# அதை எடுத்தால் நமக்கு நன்மை தருமா தீமை தருமா?

# அந்த முடிவு என்னை மட்டும் பாதிக்குமா, மற்றவர்களையுமா?

# யாரையாவது உதவிக்கு அணுகலாமா அவர்கள் நம்மை இயலாதவன் என்று நினைத்துக் கொள்வார்களா?

நமக்கு ஆலோசனை தேவைப்பட்டால் கண்டிப்பாக எல்லோரும் உதவுவார்கள். ஆகையால் சரியான நபரைத் தேர்ந்தெடுங்கள். எப்போதும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கோபத்திலோ, மற்றவரைத் திருப்திபடுத்தவோ நாம் எடுக்கும் முடிவுகள் பயனற்றவை.

எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கும் முன் எப்படி அதன் காரண காரியங்களை ஆராய்கிறோமோ அதே அளவு அந்த முடிவால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளையும் பட்டியலிட வேண்டும். அப்போது நாம் எடுக்க வேண்டிய முடிவு பற்றிய தெளிவு கிடைக்கும்.

தொடர்புக்கு: sriramva@goripe.com

எதிர்க்கப் பழகுங்கள்!



பொது இடங்களில் பாலியல் கேலி, சீண்டல், தொல்லை தரும் ஆண்களை அடக்குவதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்வது பற்றியும், அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் பெண்களுக்கு வழிகாட்டுகிறார் தமிழ்நாடு கடலோர காவல்படையின் கூடுதல் டிஜிபி டாக்டர் சி.சைலேந்திர பாபு.

எதிர்க்கப் பழகுங்கள்!


பொதுவாக, பேருந்து, ரயில், தியேட்டர், கூட்ட நெரிசல்கள் போன்ற பொது இடங்களில் ஈவ்டீஸிங் செய்யும் கயவர்கள், தைரியமான பெண்களைவிட, பயந்த சுபாவம் கொண்ட பெண்களைத்தான் இலக்காக்குவார்கள். காரணம், தங்களுக்கு ஆண்கள் தொல்லை தந்தாலும், அதை எதிர்க்கத் தயங்கி அந்தப் பெண்கள் சகித்துக்கொள்வது அல்லது பிரச்னை எதுவும் இன்றி ஒதுங்கிவிடுவதுதான். இதுதான் தவறு செய்வதற்கான பலத்தை அந்த ஆண்களுக்குத் தருகிறது. எனவே, ஒரு ஆண் தன்னை பாலியல் சீண்டல் செய்கிறான் என்றால், அது எந்த இடமாக இருந்தாலும், முறைப்பதில் தொடங்கி, சத்தம் போட்டு அவனை எச்சரிப்பது, திட்டுவது, அந்தக் கூட்டத்திடம் சொல்லிக் கேவலப்படுத்துவது என்று அந்தப் பெண் தன் எதிர்ப்பை வெளிப்படையாக, அவன் வெலவெலத்துப் போகும்படி காட்ட வேண்டும்.

பெண்களுக்கு முக்கியம் ஃபிட்னஸ்!

‘இரண்டு, மூன்று பேர் சேர்ந்த கும்பலிடம் மாட்டிக்கொள்ளும்போது, நாங்கள் எப்படி எதிர்ப்பது?’ என்று பெண்கள் கேட்கலாம். நீங்கள் ஃபிட்னஸுடன் இருந்தால், அது சாத்தியமே. ஈவ்டீஸிங் செய்பவர்கள் எல்லாம் ஸ்போர்ட்ஸ் மேன்கள் அல்ல. எனவே, ஒரு பெண் ஃபிட்டாக இருந்து, ஈவ் டீஸிங் கும்பலிடம் இருந்து தப்பித்து ஒரு கிலோ மீட்டர் வேகமாக ஓடினால், அவர் வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அவர் சுலபமாகத் தப்பித்துவிடலாம். எனவே, பெண்கள் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதுடன், காரத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதும் சிறந்தது.

‘பெப்பர் ஸ்பிரே’ வைத்துக்கொள்ளுங்கள்!

பெண்கள் தங்கள் ஹேண்ட் பேகில் பெப்பர் ஸ்பிரே வைத்துக்கொள்ளப் பழகினால், ஆபத்து நேரங்களில் குற்றவாளியின் முகத்தில் அதை ஸ்பிரே செய்துவிட, அவனால் ஒரு அடி கூட நகர முடியாது. இந்த ஸ்பிரேயை பயன்படுத்துவது குறித்து ஒரு சின்ன பயிற்சி எடுத்துவிட்டால், பாதுகாப்பு உங்கள் கைப்பைக்குள்!

ஆபத்து நேர அழைப்பு எண்கள்!

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின் எந்த இடத்தில், எந்த நேரத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை அனுபவிக்க நேர்ந்தாலும் 100 அல்லது பெண்களுக்கான ஹெல்ப் லைன் நம்பரான 1091 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இடம், அந்த ஆணின் அடையாளம் ஆகியவற்றைச் சொல்லுங்கள். நிச்சயமாக உதவி கிடைக்கும், நடவடிக்கை பாயும். மேலும், ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் உதவியையும் நாடுங்கள்.

தண்டனைகள் என்னென்ன?

இந்திய சட்டத்தின்படி ஈவ்டீஸிங்  என்ற சொல் கிடையாது. பெண்களைத் துன்புறுத்துதல் அல்லது ஒரு பெண்ணின் கௌரவத்தை சீர்குலைத்தல் என்று அது குறிப்பிடப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் படி, ஒரு பெண்னை மானபங்கம் செய்தாலோ, அவர் மீது தாக்குதல் நடத்தினாலோ, பலவந்தப்படுத்தினாலோ 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனை உண்டு. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு, ‘பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ மூலம் ஆயுள் தண்டனை மற்றும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும் சாத்தியம் இருக்கிறது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவும் இதில் அடங்கும்.

தைரியமாகப் புகார் கொடுங்கள்!

பெரும்பாலும் பெண்கள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்பது வருத்தமான விஷயம். இதுதான் ஆண்களுக்குத் தைரியத்தைக் கொடுத்து, தொடர்ந்து குற்றங்கள் நடைபெற காரணமாகிறது. குற்றவாளிகளே தைரியமாக இருக்கும்போது, பெண்கள் ஏன் தயங்க வேண்டும்? தைரியமாக காவல் நிலையம் வாருங்கள். உங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவனுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கச் செய்யலாம். காவல் நிலையத்தில் நீங்கள் புகாரை சமர்பித்த காவலரிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லுங்கள். அரசு தரப்பு பிரதிநிதியாக அவர் உங்களுக்காக வாதாடுவார். அவரே அந்த வழக்கையும் நடத்துவார்.

ஆண்களுக்கான எச்சரிக்கை!


இது என் அறிவுரை. பெண்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பெண்ணுக்கு பாலியல் தொல்லை தருவது தண்டனைக்குரிய குற்றம். சம்பந்தப்பட்ட பெண் புகார் கொடுத்தால்தானே என்ற உங்களின் அசட்டு தைரியத்தை, இன்று காவல் நிலையங்களில் தைரியமாகப் புகார்களைப் பதிவு செய்து வரும் சகோதரிகள் சுக்குநூறாக உடைக்கத் தொடங்கிவிட்டனர். இதில் அவர்களுக்கு எந்த அவமானமும் இல்லை என்பதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பாலியல் குற்றத்துக்காக உங்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது உங்களுக்கும், இப்படி ஒரு பிள்ளையை வளர்த்த உங்கள் குடும்பத்துக்குமான அவமானமே. நாகரிகம் பழகுங்கள் ஆண்களே!’’

- கே. அபிநயா

2 கி.மீ-க்கு 25 ரூபாய்: வந்துவிட்டது நானோ டாக்ஸி!



உலகின் விலை குறைந்த கார்’ என்று ஆறு வருடங்களுக்கு முன்பு பரபரப்பைக் கிளப்பியது டாடாவின் நானோ கார். இப்போது ‘உலகின் விலை குறைந்த டாக்ஸி’ என்று பரபரப்பைக் கிளப்பத் தயாராக நிற்கிறது அதே நானோ.

பெங்களூரில் உள்ள பிரபல 'Taxi for Sure' என்னும் கால் டாக்ஸி நிறுவனம், குறைந்த விலையில் பயணிக்க, தடதடவென ஆயிரக்கணக்கில் நானோ டாக்ஸிகளைக் களமிறக்கி இறக்கிறது.



இப்போது டெல்லியில் முக்கியமான சில டாக்ஸி நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு வரும் நிலையில், பெங்களூருவில் மொபைல் ஆப் மூலம் புக் செய்யக்கூடிய இந்த நானோ டாக்ஸி அறிமுகமாகி இருக்கிறது.

கர்நாடகாவில் 26 நகரங்களில் இப்போது டாக்ஸி நானோக்கள் ஜிவ்வெனப் பறந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு கி.மீ.க்கு 25 ரூபாய்; பின்பு ஒவ்வொரு கி.மீ.க்கும் 10 ரூபாய் என்ற மலிவான கட்டணத்தில் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன நானோ டாக்ஸிகள்.

‘‘ஆட்டோவிலேயே 1.5 கி.மீ.க்கு 25 ரூபாயும், அடுத்து ஒவ்வொரு கி.மீ.க்கும் 13 ரூபாயும் வாங்குகிறார்கள். நானோ வந்ததில் ரொம்ப சீப்பாகப் பயணம் செய்ய முடிகிறது!’’ என்று கன்னடத்தில் மகிழ்கிறார்கள் பெங்களூருவாசிகள்.

-தமிழ்

சத்தமில்லாமல் நடந்த நடிகர் வடிவேலு மகன் திருமணம்!



மதுரை: நடிகர் வடிவேலு, தனது மகன் சுப்ரமணியனின் திருமணத்தை உறவினர்களை மட்டும் அழைத்து சிம்பிளாக நடத்தி முடித்திருக்கிறார்.

நடிகர் வடிவேலு, தன் மனைவி வழி சொந்தத்தில் தனது மகன் சுப்பிரமணியனுக்கு பெண் பேசி முடித்திருந்தார்.

பெண் வீட்டில் வரதட்சணை எதையும் வாங்காமல், மணமகள் புவனேஸ்வரிக்கு அனைத்து செலவுகளையும் செய்து, திருமண ஏற்பாட்டுகளையும் வடிவேலுவே பார்த்துக்கொண்டார்.

இந்நிலையில், வடிவேலு மகன் சுப்பிரமணியன்-புவனேஸ்வரி திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று காலை நடந்தது. இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பிரைவேட் செக்யூரிட்டி மூலமாக எல்லோரும் விசாரிக்கப்பட்ட பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.



வடிவேலுவின் சொந்த ஊரான ஐராவதநல்லூர் மக்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்தார். மேலும், இந்த விழாவில் தெனாலிராமன் பட இயக்குனர் யுவராஜும், அமீரின் உறவினரும், இயக்குனருமான ஆதம்பாவாவும் கலந்து கொண்டார்கள்.



அதேபோல், மணமக்களுக்கு வைத்த வாழ்த்து பேனரிலும் தனது பெயரை தவிர்த்திருக்கிறார் வடிவேலு. மேலும், மணமக்களுக்கு அருகில்கூட செல்லாமல், ஒரு அறைக்குள்ளேயே இருந்து கொண்டாராம் வடிவேலு.



இரண்டு வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அரசுக்கு பயந்து தனது மகள் திருமணத்தை பிரபலப்படுத்தாமல் எளிமையாக நடத்தினார் வடிவேலு. அதேபோல், தற்போது தனது மகன் திருமணத்தையும் எளிமையாக நடத்தியதன் மூலம் இன்னும் அவருக்குள்ள அரசியல் நெருக்கடிகள் நீங்கவில்லை என்றே தெரிகிறது.

செ.சல்மான்

சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டை பெறுவது எப்படி? - மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் விளக்கம்



சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் விளக்கியுள்ளார்.

ஆதார் அட்டைக்காக பதிவு செய் வதில் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரு கின்றன. இது குறித்த தெளிவான விவரங்களை மாநகராட்சி தெரி விக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டை பெறு வது எப்படி என்பது குறித்து தமிழ் நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் “தி இந்து”விடம் கூறியதாவது:

சென்னையில் எத்தனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன?

சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் 15 மண்டல அலு வலகங்கள் மற்றும் அதன் பகுதி அலுவலகங்கள் என மொத்தம் 51 இடங்களில் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இம்மையங் களுக்கான ஆபரேட்டர்களை, பி.இ.எல். நிறுவனம் அனுப்புகிறது. சில மையங்களுக்கான ஆபரேட்டர் கள் இன்னும் அனுப்பப்படவில்லை. ஆபரேட்டர்கள் வந்தவுடன் அந்த மையங்களிலும் பணிகள் தொடங்கப்படும்.

மையங்கள் இயங்கும் நேரம் மற்றும் விடுமுறை நாள் எது?

இந்த மையங்கள் ஒவ்வொரு நாளும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை இயங்கும். ஒரு ஆப ரேட்டர் ஒரு நாளில் 60 பேரின் விவ ரங்களை பதிவு செய்ய முடியும். பணிக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் மையங்கள் திறக்கப்படும். செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும்.

இந்த நிரந்தர மையங்கள் எத்தனை மாதங்கள் இயங்கும்?

தமிழக அரசு உத்தரவுப்படி இந்த நிரந்தர மையங்கள் ஓராண்டு, அதா வது அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை இயங்கும்.

ஆதார் அட்டையைப் பெற பொது மக்கள் என்ன செய்ய வேண்டும்?

கடந்த 2010-ம் ஆண்டு அரசு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப் பட்ட அத்தாட்சி சீட்டை கொண்டு வர வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யாத வர்கள், அதற்கான விண்ணப்பங் களை பெற்று பூர்த்தி செய்து, மையங்களில் வழங்கி, ஆபரேட் டர்கள் தெரிவிக்கும் தேதியில் வந்து தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.

என்னென்ன ஆவணங்களை பொது மக்கள் கொண்டுவர வேண்டும்?

பொதுமக்கள் தங்கள் புகைப்படம் இடம்பெற்ற, அரசு அறிவித்துள்ள அடையாள ஆவணங்களான குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ளலாம். ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.

எந்த மையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்துகொள்ளலாமா?

பொதுமக்கள் எந்த மையத் தில் வேண்டுமானாலும் ஆதார் அட்டைக்கு பதிவு செய்துகொள்ள லாம். ஆனால் அந்த மையம், அவர்கள் குடியிருக்கும் மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

புகார் தெரிவிக்க யாரை தொடர்பு கொள்ளலாம்?

மாநகராட்சி புகார் எண்ணான 1913-ல் புகார் தெரிவிக்கலாம்.

இதுவரை எத்தனை பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது?

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் இதுவரை 25 லட்சத்து 94 ஆயிரத்து 5 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இதில் 24 லட்சத்து 4 ஆயிரத்து 17 பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 89 ஆயிரத்து 988 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்படவில்லை.

விவரங்கள் பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆதார் அட்டைக்கு விவரங்களை பதிவு செய்து அட்டை கிடைக்காதவர்கள், அட்டையின் நிலை குறித்து http://uidai.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அதில் ரத்து செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டபோது வழங்கப்பட்ட அத்தாட்சி சான்றுடன் வந்து, எந்த ஆவணத்தையும் வழங்காமல், மீண்டும் விரல் ரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மையத்தில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...