Thursday, December 11, 2014

வாடகை தாய்கள்

உலகிலேயே பெரிய செல்வம் குழந்தை செல்வம்தான். இல்லற வாழ்க்கையின் இனிய பரிசான அரிய பேறு குழந்தைகள்தான். அத்தகைய குழந்தை பாக்கியம் சில தம்பதிகளுக்கு இயற்கை கொடுக்காமல் இருக்கலாம். அத்தகையவர்கள் தங்களுக்காக ஒரு குழந்தையை தத்து எடுப்பது வழக்கம். அவர்களுக்கு பிறக்கவில்லையென்றாலும், தத்து எடுத்த நாளில் இருந்து அந்த குழந்தை அவர்கள் குழந்தைதான். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பெயரை மறக்கமுடியாத திட்டம் அவர் கொண்டுவந்த ‘தொட்டில் குழந்தை திட்டம்’. இந்த திட்டத்தின்கீழ் ‘பெண் குழந்தை வேண்டாம்’ என்று நினைப்பவர்கள் அதற்காக அந்த குழந்தையை கொன்றுவிடவேண்டாம், அரசிடம் தாருங்கள், அதை அரசின் செல்ல குழந்தைகளாக வளர்க்கிறோம் என்று உருவாக்கிய திட்டத்தின்கீழ், இதுவரையில் 4,500–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளனர். இந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் தத்து எடுக்கப்பட்டு, பாசமான பெற்றோரின் அரவணைப்பில் சுகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். 

சில தம்பதிகள் தங்கள் கருவில் உருவான குழந்தைவேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால், இயற்கையாக கருத்தரிக்க அந்த பெண்ணின் உடலில் சில குறைபாடுகள் இருக்கலாம். சில பெண்களுக்கு பிறப்பிலேயே கருப்பை இல்லாமல் இருக்கும், சிலருக்கு கருவை தாங்கும் அளவில் கருப்பை வலுவில்லாமல் இருக்கலாம், சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் கோளாறு இருக்கலாம், சிலருக்கு கருத்தரித்த பிறகு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படலாம், சிலருக்கு கருத்தரிக்கக்கூடாது என்ற அளவில் இதயநோய், சிறுநீரக கோளாறு இருக்கலாம். இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் கருவில், தங்கள் கணவனின் உயிர் அணுவில் பிறக்கும் குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்களின் ஆசையை பூர்த்திசெய்யும் வகையில், ‘வாடகை தாய்’ மூலம் தங்கள் சொந்த குழந்தையைப் பெறும் மருத்துவமுறை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வழியாக இந்தியாவுக்குள் எட்டிப்பார்த்தது. ஆணின் விந்தணுவையும், பெண்ணின் சினை முட்டையையும் வெளியே எடுத்து, சோதனை கூடத்தில் கருவாக உருவாக்கி, அதை குழந்தைபெறும் அளவுக்கு அனைத்து உடல்நலமும் பெற்றுள்ள மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி, வழக்கமாக ஒருபெண் கருத்தரிக்கும் காலம்போல வயிற்றில் சுமந்து பிரசவமாகும் முறைதான் இது. இவ்வாறு நடக்கும் கருவூட்டலைத்தான் ‘செயற்கை தாய்’ மூலம் பிரசவிக்க வைப்பதால், அப்படி அடுத்தவர்களின் கருவை, தன் வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்துக்கொடுக்கும் பெண்களைத்தான் ‘வாடகை தாய்’ என்று கூறுகிறார்கள்.

இத்தகைய வாடகை தாய்கள், திருமணமாகி ஒரு குழந்தையாவது உள்ள 25 வயது முதல் 34 வயது வரையுள்ள பெண்களாக இருக்கவேண்டும், கணவனின் சம்மதம் இருக்கவேண்டும் என்று விதி இருக்கிறது. இவ்வாறு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண்களுக்கு, ரூ.4 லட்சம் வரை கிடைப்பதால் பலர் முன்வருகிறார்கள். சென்னையில்தான் இந்த மருத்துவம் முதலில் தொடங்கியது. இப்போது வாடகை தாய்மூலம் குழந்தை பெறுவதற்கான மையமாகிவிட்டது. மேலை நாடுகளில் இதற்காக ரூ.70 லட்சம்வரை செலவாகும் நிலையில், சென்னையில் ரூ.13 லட்சம்தான் ஆவதால், இந்தியா முழுவதிலும் இருந்து, ஏன் வெளிநாடுகளில் இருந்தும் படையெடுத்து வருகிறார்கள். பாராளுமன்றத்தில் இந்த மருத்துவமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் வாடகை தாய் மூலம் தங்களுக்கு குழந்தைபெற விரும்பும் பெற்றோர்கள் 50 வயதைத்தாண்டிய நிலையில் இருக்கவேண்டும் என்று ஒருபிரிவு இருக்கிறது. அதை அரசாங்கம் மறு பரிசீலனை செய்து, இந்த வயதுவரம்பை குறைக்கவேண்டும். ஏனெனில், தங்களுக்கு இயற்கையாக குழந்தைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடனேயே, இவ்வாறு குழந்தையை பெற்றுக்கொள்வதில் எதற்கு தாமதம்வேண்டும்?. மேலும், தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்காகும் கட்டணம் சாதாரண ஏழை–எளிய, நடுத்தர மக்களால் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பதால், அரசாங்கத்தின் மருத்துவ கல்லூரிகளின் மருத்துவமனைகளில் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் நல்லது. ஏனெனில், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல நவீன சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவமனைகளில் இது நிச்சயமாக இயலாத ஒன்று இல்லை.

Wednesday, December 10, 2014

ஹலோ, 'மன்னார் அண்ட் கம்பெனி'யில இருந்து பேசுறோம்.. உங்க ஏடிஎம் பின் நம்பர் சொல்லுங்க!

Oneindia Tamil

வங்கி ஏ.டி.எம் கார்டில் உள்ள எண்களையும், ரகசிய எண்களையும் (பின் நம்பர்) தெரிவிக்குமாறு செல்போனில் வங்கி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு கேட்கும் மர்ம அழைப்புகளால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. ஏ.டி.எம் தொடர்பான எந்தத் தகவலையும் வங்கியிலிருந்து கேட்பதில்லை. ஏ.டி.எம் குறித்த விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏ.டி.எம் கார்ட், கிரெடிட் கார்ட் வசதியை அளித்துள்ளன. வங்கிச் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வங்கிக்குச் சென்று காத்திருப்பதைத் தவிர்க்க ஏ.டி.எம் சேவை பெரிதும் பயன்படுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு மர்ம அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் நபர் தான் வங்கி அதிகாரி என்றும் உங்களின் ஏ.டி.எம் கார்டு சேவையை நீடிக்க வேண்டும். ஆகவே ஏ.டி.எம் கார்டில் உள்ள எண்களையும், ரகசிய எண்களையும் தெரிவியுங்கள் என்றும் கேட்கிறார். அவரது பேச்சில் சந்தேகமடைந்து அவரது பெயர், விவரங்களைக் கேட்டால் அந்த மர்ம நபர் அழைப்பை துண்டித்து விடுகிறார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டின் எண்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண்களை தொலைபேசியில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு அந்தஸ்து: நாக் கமிட்டி வழங்கியுள்ளது

Dinamani

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு (NAAC) என்ற நாக் கமிட்டி ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தரமதிப்பீடு (கிரேடு) வழங்குவதற்காக ஆய்வு மேற்கொள்ள 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு (NAAC) என்ற நாக் கமிட்டி கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து மூன்று தினங்கள் பல்கலைக்கழக அனைத்துபுலங்கள் மற்றும் துறைகளையும் ஆய்வு செய்தது.

பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ல் தொடங்கப்பட்டது.1920-ல் சிதம்பரத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் தனது தாயார் பெயரில் மீனாட்சி கல்லூரி ஒன்றை தொடங்கினார். பின்னர் 1927-ல் தமிழ் மொழி மற்றும் வடமொழி கல்லூரிகளையும் நிறுவினார். 1929-ல் இசைக்கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். பின்னர் அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து அப்போதைய சென்னை கவர்னர் அனுமதியோடு 4.3.1929-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

இவ்வாறு தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது 85 ஆண்டுகளை கடந்து ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 9 புலங்கள், 50 துறைகளுடன் இயங்கி வருகிறது. நேரடியாக மேலும் 1979-ம் ஆண்டு தொலைதூரக்கல்வி சேவையை இப் பல்கலைக்கழகம் தொடங்கி நடத்தி வருகிறது. தற்போது நிதிநெருக்கடி மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழகஅரசு கடந்த ஆண்டு சட்டதிருத்தம் கொண்டு தனது முழுக் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து நடத்தி வருகிறது. அதன் நிர்வாகியாக தமிழகஅரசு முதன்மை செயலாளரான ஷிவ்தாஸ்மீனா நியமிக்கப்பட்டு பல்வேறு நிதி, நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு முறைகேடுகள் இன்றி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நன்கொடை இன்றி, தகுதி அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் அனுமதி சேர்க்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கு தரமதிப்பீடு வழங்குவதற்காக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் ஷெட்டி தலைமையிலான 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு கடந்த நவம்பர் மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கு வருகை தந்தது. இக்குழுவில் முன்னாள் துணைவேந்தர் பி.ஏ.பிரஜாபதி, பேராசிரியர் பி.பசுல்ரஹ்மான், பேராசிரியர் சைலேஷ்லேலி, பேராசிரியர் பி.கீதா,, பேராசிரியர் அனுபம் மஹாஜம், டாக்டர் சுபேத்குமார்பட்நாகர், ராம.ராமநாத், டாக்டர் என்.எஸ்.டோங்கா, டாக்டர் ஜேக்கப்ஜான் கட்டாகாயம், பேராரிசிரியர், பி.என்.ராய், பேராசிரியர் என்.அழகுமூர்த்தி, நாக் துணை ஆலோசர் எம்.எஸ்.ஷியாம்சுந்தர் ஆகிய 13 பேர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு அனைத்து துறைகளையும் ஆய்வு செய்துவிட்டு சென்றது. இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட நாக் கமிட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு (3.09) அந்தஸ்து வழங்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது பல்வேறு துறைகளில் குறிப்பாக கடல்வாழ் உயராய்வு மையம், மொழிப்புல உயராய்வு மையம் மற்றும் மருத்துவம், பொறியியல், வேளாண், கல்வி, உடற்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெருமளவு மாற்றமும், வளர்ச்சியும் அடைந்துள்ளது.

ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளியிடுவதில் தேசிய அளவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில், அண்ணாமலைப் பல்கலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் 10 இடங்களுக்குள் அண்ணாமலைப் பல்கலை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

THE PROMOTION IS ONLY APPLICABLE ON SELECTED TIGER AIR FLIGHTS BOOKED ONLINE BY 13TH DECEMBER 2014


முடிவு எடு! கொண்டாடு!

Return to frontpage

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் என்பது வள்ளுவர் வாக்கு.

பள்ளியானாலும் கல்லூரியானாலும் அலுவலகமானாலும் விளையாட்டானாலும் குடும்பமானாலும் நாம் தக்க நேரத்தில் எடுக்கும் சரியான முடிவுகள் முக்கியமானவை. முடிவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். எதிர் கால முடிவுகள். உடனடி முடிவுகள்.

நம்முடைய லட்சியங்களை அடையப் பாதையை வகுக்கும்போதும் அதை நோக்கிய பயணத்தில் தவறு ஏதும் நடக்காமலிருக்கவும் நாம் முடிவுகளை எடுக்கிறோம்.

2௦:2௦ முதல் உலகக்கோப்பை மேட்சை யாரும் மறக்க முடியாது. குறிப்பாக அந்த கடைசி ஓவர். இந்தியா ஜெயித்து விட்டது என்று சந்தோஷப்படுவதற்குள் மிஸ்பா உல் ஹக் நம் பவுலர்களை விரட்டியடிப்பார். கடைசி ஓவரை ஹர்பஜன் போடப்போகிறார் என்று நாம் யோசிப்பதற்குள் தோணி அந்த ஓவரை ஜோகிந்தர் சர்மாவிடம் கொடுப்பார். மிஸ்பா, இந்தப் பவுலர் சொதப்பல் தானே என்று நினைத்து வித்தியாசமான ஷாட்டை விளையாடலாம் என்று எடுத்த முடிவின் விளைவு லட்டு மாதிரி  சாந்த் கையில் காட்ச் ஆகிவிடும். மிஸ்பா எடுத்த தவறான முடிவு ஒரு கோப்பைக்கான வெற்றியைத் தீர்மானித்தது.

முடிவெடுப்பதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் பலவகையான வாய்ப்புகள் கண்முன்னே நிற்கும்போது எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில்தான்.

கல்லூரியைத் தேர்ந்தேடுக்கும் நேர்முகக் கலந்தாய்வில் நான்கு கல்லூரிகளில் நீங்கள் கேட்கும் துறை உள்ளது. உங்களுக்குப் பிடித்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னால் நமக்குக் குழப்பம் வரும். யோசிப்போம். இத்தகைய சூழ்நிலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

# எதை எடுப்பது எதை விடுவது?

# அதை எடுத்தால் நமக்கு நன்மை தருமா தீமை தருமா?

# அந்த முடிவு என்னை மட்டும் பாதிக்குமா, மற்றவர்களையுமா?

# யாரையாவது உதவிக்கு அணுகலாமா அவர்கள் நம்மை இயலாதவன் என்று நினைத்துக் கொள்வார்களா?

நமக்கு ஆலோசனை தேவைப்பட்டால் கண்டிப்பாக எல்லோரும் உதவுவார்கள். ஆகையால் சரியான நபரைத் தேர்ந்தெடுங்கள். எப்போதும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கோபத்திலோ, மற்றவரைத் திருப்திபடுத்தவோ நாம் எடுக்கும் முடிவுகள் பயனற்றவை.

எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கும் முன் எப்படி அதன் காரண காரியங்களை ஆராய்கிறோமோ அதே அளவு அந்த முடிவால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளையும் பட்டியலிட வேண்டும். அப்போது நாம் எடுக்க வேண்டிய முடிவு பற்றிய தெளிவு கிடைக்கும்.

தொடர்புக்கு: sriramva@goripe.com

எதிர்க்கப் பழகுங்கள்!



பொது இடங்களில் பாலியல் கேலி, சீண்டல், தொல்லை தரும் ஆண்களை அடக்குவதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்வது பற்றியும், அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் பெண்களுக்கு வழிகாட்டுகிறார் தமிழ்நாடு கடலோர காவல்படையின் கூடுதல் டிஜிபி டாக்டர் சி.சைலேந்திர பாபு.

எதிர்க்கப் பழகுங்கள்!


பொதுவாக, பேருந்து, ரயில், தியேட்டர், கூட்ட நெரிசல்கள் போன்ற பொது இடங்களில் ஈவ்டீஸிங் செய்யும் கயவர்கள், தைரியமான பெண்களைவிட, பயந்த சுபாவம் கொண்ட பெண்களைத்தான் இலக்காக்குவார்கள். காரணம், தங்களுக்கு ஆண்கள் தொல்லை தந்தாலும், அதை எதிர்க்கத் தயங்கி அந்தப் பெண்கள் சகித்துக்கொள்வது அல்லது பிரச்னை எதுவும் இன்றி ஒதுங்கிவிடுவதுதான். இதுதான் தவறு செய்வதற்கான பலத்தை அந்த ஆண்களுக்குத் தருகிறது. எனவே, ஒரு ஆண் தன்னை பாலியல் சீண்டல் செய்கிறான் என்றால், அது எந்த இடமாக இருந்தாலும், முறைப்பதில் தொடங்கி, சத்தம் போட்டு அவனை எச்சரிப்பது, திட்டுவது, அந்தக் கூட்டத்திடம் சொல்லிக் கேவலப்படுத்துவது என்று அந்தப் பெண் தன் எதிர்ப்பை வெளிப்படையாக, அவன் வெலவெலத்துப் போகும்படி காட்ட வேண்டும்.

பெண்களுக்கு முக்கியம் ஃபிட்னஸ்!

‘இரண்டு, மூன்று பேர் சேர்ந்த கும்பலிடம் மாட்டிக்கொள்ளும்போது, நாங்கள் எப்படி எதிர்ப்பது?’ என்று பெண்கள் கேட்கலாம். நீங்கள் ஃபிட்னஸுடன் இருந்தால், அது சாத்தியமே. ஈவ்டீஸிங் செய்பவர்கள் எல்லாம் ஸ்போர்ட்ஸ் மேன்கள் அல்ல. எனவே, ஒரு பெண் ஃபிட்டாக இருந்து, ஈவ் டீஸிங் கும்பலிடம் இருந்து தப்பித்து ஒரு கிலோ மீட்டர் வேகமாக ஓடினால், அவர் வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அவர் சுலபமாகத் தப்பித்துவிடலாம். எனவே, பெண்கள் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதுடன், காரத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதும் சிறந்தது.

‘பெப்பர் ஸ்பிரே’ வைத்துக்கொள்ளுங்கள்!

பெண்கள் தங்கள் ஹேண்ட் பேகில் பெப்பர் ஸ்பிரே வைத்துக்கொள்ளப் பழகினால், ஆபத்து நேரங்களில் குற்றவாளியின் முகத்தில் அதை ஸ்பிரே செய்துவிட, அவனால் ஒரு அடி கூட நகர முடியாது. இந்த ஸ்பிரேயை பயன்படுத்துவது குறித்து ஒரு சின்ன பயிற்சி எடுத்துவிட்டால், பாதுகாப்பு உங்கள் கைப்பைக்குள்!

ஆபத்து நேர அழைப்பு எண்கள்!

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின் எந்த இடத்தில், எந்த நேரத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை அனுபவிக்க நேர்ந்தாலும் 100 அல்லது பெண்களுக்கான ஹெல்ப் லைன் நம்பரான 1091 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இடம், அந்த ஆணின் அடையாளம் ஆகியவற்றைச் சொல்லுங்கள். நிச்சயமாக உதவி கிடைக்கும், நடவடிக்கை பாயும். மேலும், ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் உதவியையும் நாடுங்கள்.

தண்டனைகள் என்னென்ன?

இந்திய சட்டத்தின்படி ஈவ்டீஸிங்  என்ற சொல் கிடையாது. பெண்களைத் துன்புறுத்துதல் அல்லது ஒரு பெண்ணின் கௌரவத்தை சீர்குலைத்தல் என்று அது குறிப்பிடப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் படி, ஒரு பெண்னை மானபங்கம் செய்தாலோ, அவர் மீது தாக்குதல் நடத்தினாலோ, பலவந்தப்படுத்தினாலோ 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனை உண்டு. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு, ‘பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்’ மூலம் ஆயுள் தண்டனை மற்றும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும் சாத்தியம் இருக்கிறது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவும் இதில் அடங்கும்.

தைரியமாகப் புகார் கொடுங்கள்!

பெரும்பாலும் பெண்கள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்பது வருத்தமான விஷயம். இதுதான் ஆண்களுக்குத் தைரியத்தைக் கொடுத்து, தொடர்ந்து குற்றங்கள் நடைபெற காரணமாகிறது. குற்றவாளிகளே தைரியமாக இருக்கும்போது, பெண்கள் ஏன் தயங்க வேண்டும்? தைரியமாக காவல் நிலையம் வாருங்கள். உங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவனுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கச் செய்யலாம். காவல் நிலையத்தில் நீங்கள் புகாரை சமர்பித்த காவலரிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லுங்கள். அரசு தரப்பு பிரதிநிதியாக அவர் உங்களுக்காக வாதாடுவார். அவரே அந்த வழக்கையும் நடத்துவார்.

ஆண்களுக்கான எச்சரிக்கை!


இது என் அறிவுரை. பெண்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பெண்ணுக்கு பாலியல் தொல்லை தருவது தண்டனைக்குரிய குற்றம். சம்பந்தப்பட்ட பெண் புகார் கொடுத்தால்தானே என்ற உங்களின் அசட்டு தைரியத்தை, இன்று காவல் நிலையங்களில் தைரியமாகப் புகார்களைப் பதிவு செய்து வரும் சகோதரிகள் சுக்குநூறாக உடைக்கத் தொடங்கிவிட்டனர். இதில் அவர்களுக்கு எந்த அவமானமும் இல்லை என்பதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பாலியல் குற்றத்துக்காக உங்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது உங்களுக்கும், இப்படி ஒரு பிள்ளையை வளர்த்த உங்கள் குடும்பத்துக்குமான அவமானமே. நாகரிகம் பழகுங்கள் ஆண்களே!’’

- கே. அபிநயா

2 கி.மீ-க்கு 25 ரூபாய்: வந்துவிட்டது நானோ டாக்ஸி!



உலகின் விலை குறைந்த கார்’ என்று ஆறு வருடங்களுக்கு முன்பு பரபரப்பைக் கிளப்பியது டாடாவின் நானோ கார். இப்போது ‘உலகின் விலை குறைந்த டாக்ஸி’ என்று பரபரப்பைக் கிளப்பத் தயாராக நிற்கிறது அதே நானோ.

பெங்களூரில் உள்ள பிரபல 'Taxi for Sure' என்னும் கால் டாக்ஸி நிறுவனம், குறைந்த விலையில் பயணிக்க, தடதடவென ஆயிரக்கணக்கில் நானோ டாக்ஸிகளைக் களமிறக்கி இறக்கிறது.



இப்போது டெல்லியில் முக்கியமான சில டாக்ஸி நிறுவனங்கள் தடை செய்யப்பட்டு வரும் நிலையில், பெங்களூருவில் மொபைல் ஆப் மூலம் புக் செய்யக்கூடிய இந்த நானோ டாக்ஸி அறிமுகமாகி இருக்கிறது.

கர்நாடகாவில் 26 நகரங்களில் இப்போது டாக்ஸி நானோக்கள் ஜிவ்வெனப் பறந்து கொண்டிருக்கின்றன. முதல் இரண்டு கி.மீ.க்கு 25 ரூபாய்; பின்பு ஒவ்வொரு கி.மீ.க்கும் 10 ரூபாய் என்ற மலிவான கட்டணத்தில் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன நானோ டாக்ஸிகள்.

‘‘ஆட்டோவிலேயே 1.5 கி.மீ.க்கு 25 ரூபாயும், அடுத்து ஒவ்வொரு கி.மீ.க்கும் 13 ரூபாயும் வாங்குகிறார்கள். நானோ வந்ததில் ரொம்ப சீப்பாகப் பயணம் செய்ய முடிகிறது!’’ என்று கன்னடத்தில் மகிழ்கிறார்கள் பெங்களூருவாசிகள்.

-தமிழ்

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...