Friday, December 12, 2014

ரேஷன் பொருள் விநியோகத்தில் உள்ள குறைகளை தீர்க்க முகாம் சென்னையில் நாளை நடக்கிறது



ரேஷன் அட்டை மற்றும் பொருள் விநியோகத்தில் உள்ள குறைகளை தீர்க்க சென்னையில் நாளை முகாம் நடத்தப்படுகிறது.

குறைதீர்வு முகாம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் 13.12.14 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் இந்த முகாமில் தெரிவிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடக்கும் இடங்கள்

சிதம்பரனார் மியாசி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. 113, அங்கப்பன் தெரு, மண்ணடி; ராயபுரம் ராஜகோபால் மேல்நிலைப்பள்ளி, ஜி.எம். பேட்டை; பெரம்பூர் சென்னை நடுநிலைப்பள்ளி, கோபாலபுரம், திரு.வி.க. நகர்;

அண்ணாநகர் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு நெடுஞ்சாலை; அம்பத்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சாவடி தெரு, கொரட்டூர்; வில்லிவாக்கம் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சாந்தி காலணி, அண்ணா நகர் மேற்கு;

பரங்கிமலை

திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி; ஆவடி அண்ணா சமுதாயக்கூடம், மேல்பாக்கம், வெள்ளச்சேரி, கதவூர்; தியாகராயநகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம், (புதூர்) 3–வது அவன்யூ, அசோக்நகர்; மைலாப்பூர் புனித ரபேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 18/2, கச்சேரிசாலை;

பரங்கிமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர திருமண மண்டபம், பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலை, ஆதம்பாக்கம்; தாம்பரம் லிடியா மெட்ரிகுலேசன் பள்ளி, கஸ்பாபுரம், அகரம்;

ஆயிரம் விளக்கு

சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 112 கோடம்பாக்கம் நெடுஞ்சாலை; ஆயிரம் விளக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நந்தனம் விரிவு, 5–வது மெயின் ரோடு, நந்தனம்; சேப்பாக்கம் சென்னை மாநகராட்சி சமுதாய கல்லூரி, அருணாச்சலம் தெரு, சேப்பாக்கம்;

சோழங்கநல்லூர் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம், (195–வது வார்டு) கண்ணகி நகர் ஆகிய இடங்களில் முகாம்கள் நடக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் புதிய ஆவின் மாதாந்திர பால் அட்டைகள் வழங்க ஏற்பாடு



ஆவின் நிறுவனம் நுகர்வோர் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, புதிய மாதாந்திர பால் அட்டைகள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பால் அட்டை வழங்குவதற்கு நுகர்வோர் ஆவின் வழங்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இருப்பிட சான்றிதழ், அடையாள சான்றிதழ் நகலை இணைத்து கொடுக்க வேண்டும்.

இதனடிப்படையில் புதிய மாதாந்திர பால் அட்டைகள் உடனடியாக வழங்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கங்கள் தங்கள் குடியிருப்பில் வசிப்போர்களுக்கு ஆவின் மாதாந்திர அட்டை தேவைப்பட்டால் ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் நந்தனம் விற்பனை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நுகர்வோர் சேவை மற்றும் உதவி பிரிவையும், 1800–425–3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் ஆவின் மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கூடுதல் கட்டணத்தை அரசே செலுத்தும் தமிழ்நாட்டில் அனைத்துவகை மின்நுகர்வோருக்கும் மின்கட்டணம் 15 சதவீதம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது


தமிழ்நாட்டில் அனைத்துவகை மின்நுகர்வோருக்கும் மின்சார கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை,

மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வந்தது.

மின்கட்டணம் உயர்வு

இந்த நிலையில், மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் எஸ்.குணசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தானாக முன்வந்து மின் கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பான பொது அறிவிப்பினை 23.9.2014 மற்றும் 24.9.2014 அன்று செய்தித்தாள்களிலும், ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிட்டு பொதுமக்கள், சம்மந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள், ஆலோசனைகள் கோரப்பட்டன.

ஆட்சேபனைகள் ஆலோசனைகள் அனுப்புவதற்கான கடைசிநாள் 31.10.2014 என நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆணையத்தின் மின் கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை மாற்றிமைப்பதற்கான செயற்குறிப்பு 13.10.2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மாநில ஆலோசனை குழுவின் 28-வது கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.

15 சதவீதம் அதிகரிப்பு

ஆணையத்தின் இந்த செயற்குறிப்பு மீது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள் ஆலோசனைகளை பெறுவதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் 24.10.2014 அன்று சென்னையிலும், 28.10.2014 அன்று நெல்லையிலும் மற்றும் 31.10.2014 அன்று ஈரோட்டிலும் நடத்தப்பட்டன.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள், ஆலோசனைகளை கருத்தில்கொண்டு பல்வேறு மின்நுகர்வோர் வகையினருக்கான மின் கட்டணம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கான மின் செலுத்துதல் கட்டணங்களை பின்னிணைப்பில் கண்டுள்ளவாறு வெள்ளிக்கிழமை (இன்று) முதல் நடைமுறைக்கு வருமாறு ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு அனைத்து நுகர்வோர் வகையினருக்கும் 15 சதவீதம் அளவு இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வீடுகளுக்கு எவ்வளவு?

புதிய கட்டண விகிதம் பற்றிய விவரம் வருமாறு:-

* வீடுகள் 2 மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் ரூ.2.60 லிருந்து ரூ.3 ஆக உயர்ந்துள்ளது.

* 200 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.80 லிருந்து ரூ.3.25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

* 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3 லிருந்து ரூ.3.50 ஆகவும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான 300 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.4 லிருந்து ரூ.4.60 ஆகவும், 501 யூனிட் மற்றும் அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.5.75 லிருந்து ரூ.6.60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

வழிபாட்டு தலங்கள்

* வழிபாட்டு தலங்களை பொறுத்தமட்டில் 120 யூனிட் வரை பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5 லிருந்து ரூ.5.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.

* குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ3.50 லிருந்து ரூ.4 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.4 லிருந்து ரூ.4.60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

* விசைத்தறிகளை பொறுத்த மட்டில் 2 மாதம் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.4.50 லிருந்து ரூ.5.20 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகள்-கல்விநிறுவனங்கள்

* தொழிற்சாலைகளை பொருத்தமட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து யூனிட்டுகளும் மின் கட்டணம் ரூ.5.50லிருந்து ரூ.6.35 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

* வணிக நிறுவனங்களுக்கு 2 மாதத்திற்கு 100 யூனிட் வரை ரூ.4.30லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது. 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.7லிருந்து ரூ.8.05 ஆக உயர்த்தப்படுகிறது.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5-லிருந்து ரூ.5.75 ஆகவும், தனியார் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.50-லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

* தற்காலிக செயல்பாடுகளுக்கான தற்காலிக மின்சாரம் வழங்கல் மற்றும் கட்டுமானம் மற்றும் ஆடம்பர மின்னொளியூட்டலுக்கு ரூ.10.50-லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்படுகிறது.

நிலைகட்டணம்

* நிலைகட்டணமாக வீடுகளுக்கு 2 மாதம் 100 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.20 லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

* 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.30-லிருந்து ரூ.40 ஆகவும், 500-க்கு மேல் பயன்படுத்தினால் ரூ.40 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகளுக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும், இருப்பு பாதைகளுக்கு 250 ரூபாயில் இருந்து ரூ.300 ஆகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும், வணிக நிறுவனங்கள், தற்காலிக விநியோகத்துக்கும் 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த மின்சார கட்டண உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழக அரசே ஏற்கும்

2 மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர் எவருக்கும் எந்தவித கூடுதல் சுமையும் இல்லாத வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

அதாவது 2 மாதங்களில் 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின்கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும் என்றும், மின்கட்டணத்தில் அவர்களுக்கு எந்தவித உயர்வும் இல்லை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி


ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்றும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், காலம் காலமாக தமிழ்நாட்டில் கூறப்படுகிறது. அந்த வகையில், ஆசிரியர் பணி என்பது, ஒரு தெய்வீகமான பணியாகத்தான் எல்லோராலும் போற்றப்படுகிறது. ஒரு மனிதனை அனைத்து குணநலன்களோடு, பொருளாதார ரீதியாக எதிர்காலத்தில் அவன் சிறந்து விளங்குவதற்கான வழியையும் காட்டி, அதற்கேற்ற வகையில் அவனை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆக, அவர்கள் பணி என்பது அதை சுற்றித்தான் இருக்கவேண்டும். மாணவர்கள் பள்ளிக்கூட பருவத்தில் சிறந்து விளங்கி கல்வியில் மேம்பட்டு இருந்தால்தான், உயர்கல்வியில் சிறந்து விளங்கமுடியும். அதனால்தான், அரசும் தொடக்கக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கூட, கல்விக்கான பட்டப்படிப்பில், பட்டமேற்படிப்பில் தேறினாலும், அந்த மதிப்பெண்களை மட்டும் கருத்தில்கொள்ளாமல், ஆசிரியர் தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண்களை வைத்துத்தான் ஆசிரியர் பணியில் சேரமுடியும் என்ற நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களும் பணியில் சேர்ந்தபிறகும், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்முன்பு, மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த வகையில், ஆசிரியர்களும் ‘ஹோம் ஒர்க்’ அதாவது ‘வீட்டுப்பாடம்’ தயார் செய்யவேண்டும். மேலும், மாணவர்களுக்கு என்ன பாடத்தை, எப்படி கற்றுக்கொடுக்கப்போகிறோம்? என்பதை அந்தந்த வாரத்துக்கு ‘நோட்ஸ் ஆப் லெசன்’ என்று சொல்லப்படும் பாடத்திட்டத்தை எழுதி, தலைமை ஆசிரியர்களிடம் தாக்கல் செய்யவேன்டும். மாணவர்களுக்கு அவ்வப்போது நடத்தும் தேர்வு தாள்களை திருத்தும் பணி, வீட்டுப்பாடத்தை திருத்தும் பணி ஆகியவற்றையும் வீட்டுக்கு கொண்டுவந்துதான் மேற்கொள்ள வேண்டும். ஆக, பள்ளிக்கூடத்தில் மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் நேரத்திலும் ஒரு ஆசிரியரின் சிந்தையில் மாணவர்களின் நலன் மட்டும் இருந்தால்தான், அவர்கள் பணி சிறக்கும்.

ஆனால், பள்ளிக்கூட ஆசிரியர்களை மற்ற பணிகளுக்கும் பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகமாக இருக்கிறது. வீடு வீடாகப்போய் மக்கள் கணக்கெடுப்பு பணி என்றாலும் சரி, ரேஷன் கார்டு சரிபார்ப்பு என்றாலும் சரி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் பணி என்று அவர்கள் தலையில் ஏராளமான பணிகள் சுமத்தப்படுகின்றன. இந்த வேலைகளையெல்லாம் அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்தபிறகும், விடுமுறை நாட்களிலும்தான் செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாமல், தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிகள், ஓட்டு எண்ணும் இடங்களிலும் அவர்கள்தான் வேலை செய்யவேண்டும். தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வேலைகள் ஒப்படைக்கப்படும்போது, எங்கள் முழுகவனமும் அதில்தான் இருக்கிறது என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களில் இருந்து சற்று தூரத்தில் உள்ள வீடுகளிலிருந்தே தினமும் பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்கள். ஆசிரியர்களுக்கு பள்ளிக்கூடங்களுக்கு அருகே குடியிருப்பு கிடையாது. அவர்கள் பள்ளிக்கூட நேரம் முடிந்தபிறகு, அநேகமாக மாலை 5 மணிக்குப்பிறகு உடனடியாக புறப்பட்டால்தான் வீடுபோய் சேரமுடியும்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை எப்படி செய்யமுடியும் என்பது அவர்களுக்கு உள்ள பெரிய மனக்குறை. அதிலும், ஆசிரியைகளான பெண்கள் இப்படி தனியாக வீடு வீடாகப்போய் சரிபார்ப்பது, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறைசொல்கிறார்கள். இப்படி தனியாக போகும்போது சொல்லவொண்ணா பல இன்னல்களை சந்திக்கவேண்டியது இருக்கிறது. சில வீடுகளில் தனியாக ஆண்கள் இருக்கிறார்கள், சில இடங்களில் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள், நாய்கள் விரட்டுகின்றன என்பதில் ஆரம்பித்து, பல துன்பங்களை எதிர்நோக்குகிறோம் என்று ஆசிரியைகள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. வீடு வீடாகப்போகும் இதுபோன்ற பணிகளுக்கு யாரையும் கட்டாயப்படுத்தாமல், ஏற்கனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வேலைஇல்லா பட்டதாரிகள், இளைஞர்களை பகுதிநேர வேலைக்காக பயன்படுத்தினால், அவர்களுக்கும் வருமானம் கிடைத்ததுபோல இருக்கும். மேலும், ஒட்டுமொத்த அரசுபணிகளிலும், ஆசிரியர் பணிகளிலும் உள்ளவர்களிடம் யார்–யார்? இதுபோன்ற பணிகளுக்கு வரத்தயாராக இருக்கிறார்கள் என்பதைக்கேட்டு, யார்–யார்? இத்தகைய பணிக்கு வரத்தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் ஒதுக்கலாம்.

Thursday, December 11, 2014

SEEDING SENDS ELDERS TO BANK FOR FIRST TIME


சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்: டிசம்பர் 14-இல் சிறப்பு முகாம்



சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர நுகர்வோருக்கு உள்ள குழப்பங்களைத் தீர்க்கவும், படிவங்களை நிறைவு செய்து அளிக்கவும் சிறப்பு முகாமுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, அரும்பாக்கம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.14) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அரும்பாக்கம், திருவள்ளூரைப் பொருத்தவரை சிறப்பு முகாமுக்கான இடங்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 11) அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 இலக்க எண்தான் அடிப்படை:

நேரடி மானியத் திட்டத்தில் பலன் பெற சமையல் எரிவாயு விநியோகஸ்தரையும் வங்கிக் கணக்கு எண்ணையும் இணைப்பது நுகர்வோர் சமையல் எரிவாயு எண்ணுடன் தொடர்புடைய 17 இலக்க குறியீட்டு எண்தான். ஐ.ஓ.சி. நுகர்வோருக்கு "3' என்ற எண்ணுடன் தொடங்கும் இந்த 17 இலக்க எண் ஏற்கெனவே எஸ்எம்எஸ் மூலம் நுகர்வோரின் கைப்பேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்www.indane.co.in என்ற இந்தியன் ஆயில் நிறுவன இணையதளம் மூலமும் இந்த 17 இலக்க குறியீட்டு எண்ணை நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும்.

படிவங்கள் என்ன? சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர ஆதார் அட்டை அவசியமில்லை. ஆதார் அட்டை இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில் இந்தத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இருந்தால் படிவம் 2-ஐ நிறைவு செய்து சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமும், படிவம்-1-ஐ நிறைவு செய்து நுகர்வோர் தங்களது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3-ஐ நிறைவு செய்து வங்கியிலும் படிவம் 4-ஐ நிறைவு செய்து சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமும் அளிக்க வேண்டும். சில சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களிடம் ஆலோசனையின்படி, ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3-ஐ மட்டும் நிறைவு செய்து வங்கியில் அளித்தால் மட்டும் போதுமானது. இந்தத் தகவல் தொடர்ந்து எஸ்எம்எஸ் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு மானியம் தேவையில்லை எனக் கருதும் நுகர்வோர் படிவம் 5-ஐ நிறைவு செய்து அளிக்கலாம்.

சிறப்பு முகாம் ஏன்? நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கான படிவங்கள் குறித்து நுகர்வோருக்கு உள்ள சந்தேகங்களைப் போக்கவும் படிவத்தை உடனடியாக நிறைவு செய்து தரும் வகையிலும் இந்த சிறப்பு முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாமுக்கு வரும் நுகர்வோர் தங்களது சமையல் எரிவாயு புத்தகம், 17 இலக்க எண் (எஸ்எம்எஸ் தகவல்) ஆகியவற்றுடன் வந்தால் போதுமானது.

சிறப்பு முகாமிலேயே பூர்த்தி செய்த படிவம் பெறப்பட்டு, நேரடி மானியத் திட்டத்தில் சேர்ந்ததற்கான ஒப்புகைச் சீட்டு உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவலை வேண்டாம்:

நேரடி மானியத் திட்டத்தில் சேர வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே இதுவரை திட்டத்தில் சேராதவர்கள் அவசரப்படத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

HOW-TO'S OF STARTING A BLOG

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...