Friday, December 12, 2014

ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி


ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்றும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், காலம் காலமாக தமிழ்நாட்டில் கூறப்படுகிறது. அந்த வகையில், ஆசிரியர் பணி என்பது, ஒரு தெய்வீகமான பணியாகத்தான் எல்லோராலும் போற்றப்படுகிறது. ஒரு மனிதனை அனைத்து குணநலன்களோடு, பொருளாதார ரீதியாக எதிர்காலத்தில் அவன் சிறந்து விளங்குவதற்கான வழியையும் காட்டி, அதற்கேற்ற வகையில் அவனை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். ஆக, அவர்கள் பணி என்பது அதை சுற்றித்தான் இருக்கவேண்டும். மாணவர்கள் பள்ளிக்கூட பருவத்தில் சிறந்து விளங்கி கல்வியில் மேம்பட்டு இருந்தால்தான், உயர்கல்வியில் சிறந்து விளங்கமுடியும். அதனால்தான், அரசும் தொடக்கக்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்சிப்பள்ளிக்கூட, கல்விக்கான பட்டப்படிப்பில், பட்டமேற்படிப்பில் தேறினாலும், அந்த மதிப்பெண்களை மட்டும் கருத்தில்கொள்ளாமல், ஆசிரியர் தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண்களை வைத்துத்தான் ஆசிரியர் பணியில் சேரமுடியும் என்ற நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களும் பணியில் சேர்ந்தபிறகும், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்முன்பு, மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த வகையில், ஆசிரியர்களும் ‘ஹோம் ஒர்க்’ அதாவது ‘வீட்டுப்பாடம்’ தயார் செய்யவேண்டும். மேலும், மாணவர்களுக்கு என்ன பாடத்தை, எப்படி கற்றுக்கொடுக்கப்போகிறோம்? என்பதை அந்தந்த வாரத்துக்கு ‘நோட்ஸ் ஆப் லெசன்’ என்று சொல்லப்படும் பாடத்திட்டத்தை எழுதி, தலைமை ஆசிரியர்களிடம் தாக்கல் செய்யவேன்டும். மாணவர்களுக்கு அவ்வப்போது நடத்தும் தேர்வு தாள்களை திருத்தும் பணி, வீட்டுப்பாடத்தை திருத்தும் பணி ஆகியவற்றையும் வீட்டுக்கு கொண்டுவந்துதான் மேற்கொள்ள வேண்டும். ஆக, பள்ளிக்கூடத்தில் மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் நேரத்திலும் ஒரு ஆசிரியரின் சிந்தையில் மாணவர்களின் நலன் மட்டும் இருந்தால்தான், அவர்கள் பணி சிறக்கும்.

ஆனால், பள்ளிக்கூட ஆசிரியர்களை மற்ற பணிகளுக்கும் பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகமாக இருக்கிறது. வீடு வீடாகப்போய் மக்கள் கணக்கெடுப்பு பணி என்றாலும் சரி, ரேஷன் கார்டு சரிபார்ப்பு என்றாலும் சரி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் பணி என்று அவர்கள் தலையில் ஏராளமான பணிகள் சுமத்தப்படுகின்றன. இந்த வேலைகளையெல்லாம் அவர்கள் பள்ளிக்கூடம் முடிந்தபிறகும், விடுமுறை நாட்களிலும்தான் செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாமல், தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிகள், ஓட்டு எண்ணும் இடங்களிலும் அவர்கள்தான் வேலை செய்யவேண்டும். தற்போது வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்தகைய வேலைகள் ஒப்படைக்கப்படும்போது, எங்கள் முழுகவனமும் அதில்தான் இருக்கிறது என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களில் இருந்து சற்று தூரத்தில் உள்ள வீடுகளிலிருந்தே தினமும் பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்கள். ஆசிரியர்களுக்கு பள்ளிக்கூடங்களுக்கு அருகே குடியிருப்பு கிடையாது. அவர்கள் பள்ளிக்கூட நேரம் முடிந்தபிறகு, அநேகமாக மாலை 5 மணிக்குப்பிறகு உடனடியாக புறப்பட்டால்தான் வீடுபோய் சேரமுடியும்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை எப்படி செய்யமுடியும் என்பது அவர்களுக்கு உள்ள பெரிய மனக்குறை. அதிலும், ஆசிரியைகளான பெண்கள் இப்படி தனியாக வீடு வீடாகப்போய் சரிபார்ப்பது, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறைசொல்கிறார்கள். இப்படி தனியாக போகும்போது சொல்லவொண்ணா பல இன்னல்களை சந்திக்கவேண்டியது இருக்கிறது. சில வீடுகளில் தனியாக ஆண்கள் இருக்கிறார்கள், சில இடங்களில் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள், நாய்கள் விரட்டுகின்றன என்பதில் ஆரம்பித்து, பல துன்பங்களை எதிர்நோக்குகிறோம் என்று ஆசிரியைகள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. வீடு வீடாகப்போகும் இதுபோன்ற பணிகளுக்கு யாரையும் கட்டாயப்படுத்தாமல், ஏற்கனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வேலைஇல்லா பட்டதாரிகள், இளைஞர்களை பகுதிநேர வேலைக்காக பயன்படுத்தினால், அவர்களுக்கும் வருமானம் கிடைத்ததுபோல இருக்கும். மேலும், ஒட்டுமொத்த அரசுபணிகளிலும், ஆசிரியர் பணிகளிலும் உள்ளவர்களிடம் யார்–யார்? இதுபோன்ற பணிகளுக்கு வரத்தயாராக இருக்கிறார்கள் என்பதைக்கேட்டு, யார்–யார்? இத்தகைய பணிக்கு வரத்தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் ஒதுக்கலாம்.

Thursday, December 11, 2014

SEEDING SENDS ELDERS TO BANK FOR FIRST TIME


சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்: டிசம்பர் 14-இல் சிறப்பு முகாம்



சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர நுகர்வோருக்கு உள்ள குழப்பங்களைத் தீர்க்கவும், படிவங்களை நிறைவு செய்து அளிக்கவும் சிறப்பு முகாமுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, அரும்பாக்கம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.14) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அரும்பாக்கம், திருவள்ளூரைப் பொருத்தவரை சிறப்பு முகாமுக்கான இடங்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 11) அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 இலக்க எண்தான் அடிப்படை:

நேரடி மானியத் திட்டத்தில் பலன் பெற சமையல் எரிவாயு விநியோகஸ்தரையும் வங்கிக் கணக்கு எண்ணையும் இணைப்பது நுகர்வோர் சமையல் எரிவாயு எண்ணுடன் தொடர்புடைய 17 இலக்க குறியீட்டு எண்தான். ஐ.ஓ.சி. நுகர்வோருக்கு "3' என்ற எண்ணுடன் தொடங்கும் இந்த 17 இலக்க எண் ஏற்கெனவே எஸ்எம்எஸ் மூலம் நுகர்வோரின் கைப்பேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்www.indane.co.in என்ற இந்தியன் ஆயில் நிறுவன இணையதளம் மூலமும் இந்த 17 இலக்க குறியீட்டு எண்ணை நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும்.

படிவங்கள் என்ன? சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர ஆதார் அட்டை அவசியமில்லை. ஆதார் அட்டை இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில் இந்தத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இருந்தால் படிவம் 2-ஐ நிறைவு செய்து சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமும், படிவம்-1-ஐ நிறைவு செய்து நுகர்வோர் தங்களது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3-ஐ நிறைவு செய்து வங்கியிலும் படிவம் 4-ஐ நிறைவு செய்து சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமும் அளிக்க வேண்டும். சில சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களிடம் ஆலோசனையின்படி, ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3-ஐ மட்டும் நிறைவு செய்து வங்கியில் அளித்தால் மட்டும் போதுமானது. இந்தத் தகவல் தொடர்ந்து எஸ்எம்எஸ் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு மானியம் தேவையில்லை எனக் கருதும் நுகர்வோர் படிவம் 5-ஐ நிறைவு செய்து அளிக்கலாம்.

சிறப்பு முகாம் ஏன்? நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கான படிவங்கள் குறித்து நுகர்வோருக்கு உள்ள சந்தேகங்களைப் போக்கவும் படிவத்தை உடனடியாக நிறைவு செய்து தரும் வகையிலும் இந்த சிறப்பு முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாமுக்கு வரும் நுகர்வோர் தங்களது சமையல் எரிவாயு புத்தகம், 17 இலக்க எண் (எஸ்எம்எஸ் தகவல்) ஆகியவற்றுடன் வந்தால் போதுமானது.

சிறப்பு முகாமிலேயே பூர்த்தி செய்த படிவம் பெறப்பட்டு, நேரடி மானியத் திட்டத்தில் சேர்ந்ததற்கான ஒப்புகைச் சீட்டு உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவலை வேண்டாம்:

நேரடி மானியத் திட்டத்தில் சேர வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே இதுவரை திட்டத்தில் சேராதவர்கள் அவசரப்படத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

HOW-TO'S OF STARTING A BLOG

வாடகை தாய்கள்

உலகிலேயே பெரிய செல்வம் குழந்தை செல்வம்தான். இல்லற வாழ்க்கையின் இனிய பரிசான அரிய பேறு குழந்தைகள்தான். அத்தகைய குழந்தை பாக்கியம் சில தம்பதிகளுக்கு இயற்கை கொடுக்காமல் இருக்கலாம். அத்தகையவர்கள் தங்களுக்காக ஒரு குழந்தையை தத்து எடுப்பது வழக்கம். அவர்களுக்கு பிறக்கவில்லையென்றாலும், தத்து எடுத்த நாளில் இருந்து அந்த குழந்தை அவர்கள் குழந்தைதான். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பெயரை மறக்கமுடியாத திட்டம் அவர் கொண்டுவந்த ‘தொட்டில் குழந்தை திட்டம்’. இந்த திட்டத்தின்கீழ் ‘பெண் குழந்தை வேண்டாம்’ என்று நினைப்பவர்கள் அதற்காக அந்த குழந்தையை கொன்றுவிடவேண்டாம், அரசிடம் தாருங்கள், அதை அரசின் செல்ல குழந்தைகளாக வளர்க்கிறோம் என்று உருவாக்கிய திட்டத்தின்கீழ், இதுவரையில் 4,500–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளனர். இந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் தத்து எடுக்கப்பட்டு, பாசமான பெற்றோரின் அரவணைப்பில் சுகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். 

சில தம்பதிகள் தங்கள் கருவில் உருவான குழந்தைவேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால், இயற்கையாக கருத்தரிக்க அந்த பெண்ணின் உடலில் சில குறைபாடுகள் இருக்கலாம். சில பெண்களுக்கு பிறப்பிலேயே கருப்பை இல்லாமல் இருக்கும், சிலருக்கு கருவை தாங்கும் அளவில் கருப்பை வலுவில்லாமல் இருக்கலாம், சில பெண்களுக்கு கர்ப்பப்பையில் கோளாறு இருக்கலாம், சிலருக்கு கருத்தரித்த பிறகு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படலாம், சிலருக்கு கருத்தரிக்கக்கூடாது என்ற அளவில் இதயநோய், சிறுநீரக கோளாறு இருக்கலாம். இப்படிப்பட்ட பெண்கள் தங்கள் கருவில், தங்கள் கணவனின் உயிர் அணுவில் பிறக்கும் குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்களின் ஆசையை பூர்த்திசெய்யும் வகையில், ‘வாடகை தாய்’ மூலம் தங்கள் சொந்த குழந்தையைப் பெறும் மருத்துவமுறை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வழியாக இந்தியாவுக்குள் எட்டிப்பார்த்தது. ஆணின் விந்தணுவையும், பெண்ணின் சினை முட்டையையும் வெளியே எடுத்து, சோதனை கூடத்தில் கருவாக உருவாக்கி, அதை குழந்தைபெறும் அளவுக்கு அனைத்து உடல்நலமும் பெற்றுள்ள மற்றொரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி, வழக்கமாக ஒருபெண் கருத்தரிக்கும் காலம்போல வயிற்றில் சுமந்து பிரசவமாகும் முறைதான் இது. இவ்வாறு நடக்கும் கருவூட்டலைத்தான் ‘செயற்கை தாய்’ மூலம் பிரசவிக்க வைப்பதால், அப்படி அடுத்தவர்களின் கருவை, தன் வயிற்றில் சுமந்து குழந்தை பெற்றெடுத்துக்கொடுக்கும் பெண்களைத்தான் ‘வாடகை தாய்’ என்று கூறுகிறார்கள்.

இத்தகைய வாடகை தாய்கள், திருமணமாகி ஒரு குழந்தையாவது உள்ள 25 வயது முதல் 34 வயது வரையுள்ள பெண்களாக இருக்கவேண்டும், கணவனின் சம்மதம் இருக்கவேண்டும் என்று விதி இருக்கிறது. இவ்வாறு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண்களுக்கு, ரூ.4 லட்சம் வரை கிடைப்பதால் பலர் முன்வருகிறார்கள். சென்னையில்தான் இந்த மருத்துவம் முதலில் தொடங்கியது. இப்போது வாடகை தாய்மூலம் குழந்தை பெறுவதற்கான மையமாகிவிட்டது. மேலை நாடுகளில் இதற்காக ரூ.70 லட்சம்வரை செலவாகும் நிலையில், சென்னையில் ரூ.13 லட்சம்தான் ஆவதால், இந்தியா முழுவதிலும் இருந்து, ஏன் வெளிநாடுகளில் இருந்தும் படையெடுத்து வருகிறார்கள். பாராளுமன்றத்தில் இந்த மருத்துவமுறையை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் வாடகை தாய் மூலம் தங்களுக்கு குழந்தைபெற விரும்பும் பெற்றோர்கள் 50 வயதைத்தாண்டிய நிலையில் இருக்கவேண்டும் என்று ஒருபிரிவு இருக்கிறது. அதை அரசாங்கம் மறு பரிசீலனை செய்து, இந்த வயதுவரம்பை குறைக்கவேண்டும். ஏனெனில், தங்களுக்கு இயற்கையாக குழந்தைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடனேயே, இவ்வாறு குழந்தையை பெற்றுக்கொள்வதில் எதற்கு தாமதம்வேண்டும்?. மேலும், தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்காகும் கட்டணம் சாதாரண ஏழை–எளிய, நடுத்தர மக்களால் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பதால், அரசாங்கத்தின் மருத்துவ கல்லூரிகளின் மருத்துவமனைகளில் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் நல்லது. ஏனெனில், இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல நவீன சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவமனைகளில் இது நிச்சயமாக இயலாத ஒன்று இல்லை.

Wednesday, December 10, 2014

ஹலோ, 'மன்னார் அண்ட் கம்பெனி'யில இருந்து பேசுறோம்.. உங்க ஏடிஎம் பின் நம்பர் சொல்லுங்க!

Oneindia Tamil

வங்கி ஏ.டி.எம் கார்டில் உள்ள எண்களையும், ரகசிய எண்களையும் (பின் நம்பர்) தெரிவிக்குமாறு செல்போனில் வங்கி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு கேட்கும் மர்ம அழைப்புகளால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. ஏ.டி.எம் தொடர்பான எந்தத் தகவலையும் வங்கியிலிருந்து கேட்பதில்லை. ஏ.டி.எம் குறித்த விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏ.டி.எம் கார்ட், கிரெடிட் கார்ட் வசதியை அளித்துள்ளன. வங்கிச் சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வங்கிக்குச் சென்று காத்திருப்பதைத் தவிர்க்க ஏ.டி.எம் சேவை பெரிதும் பயன்படுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு மர்ம அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் நபர் தான் வங்கி அதிகாரி என்றும் உங்களின் ஏ.டி.எம் கார்டு சேவையை நீடிக்க வேண்டும். ஆகவே ஏ.டி.எம் கார்டில் உள்ள எண்களையும், ரகசிய எண்களையும் தெரிவியுங்கள் என்றும் கேட்கிறார். அவரது பேச்சில் சந்தேகமடைந்து அவரது பெயர், விவரங்களைக் கேட்டால் அந்த மர்ம நபர் அழைப்பை துண்டித்து விடுகிறார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டின் எண்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண்களை தொலைபேசியில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு அந்தஸ்து: நாக் கமிட்டி வழங்கியுள்ளது

Dinamani

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு (NAAC) என்ற நாக் கமிட்டி ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தரமதிப்பீடு (கிரேடு) வழங்குவதற்காக ஆய்வு மேற்கொள்ள 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு (NAAC) என்ற நாக் கமிட்டி கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து மூன்று தினங்கள் பல்கலைக்கழக அனைத்துபுலங்கள் மற்றும் துறைகளையும் ஆய்வு செய்தது.

பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ல் தொடங்கப்பட்டது.1920-ல் சிதம்பரத்தில் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் தனது தாயார் பெயரில் மீனாட்சி கல்லூரி ஒன்றை தொடங்கினார். பின்னர் 1927-ல் தமிழ் மொழி மற்றும் வடமொழி கல்லூரிகளையும் நிறுவினார். 1929-ல் இசைக்கல்லூரி ஒன்றையும் உருவாக்கினார். பின்னர் அனைத்து கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து அப்போதைய சென்னை கவர்னர் அனுமதியோடு 4.3.1929-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

இவ்வாறு தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது 85 ஆண்டுகளை கடந்து ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 9 புலங்கள், 50 துறைகளுடன் இயங்கி வருகிறது. நேரடியாக மேலும் 1979-ம் ஆண்டு தொலைதூரக்கல்வி சேவையை இப் பல்கலைக்கழகம் தொடங்கி நடத்தி வருகிறது. தற்போது நிதிநெருக்கடி மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழகஅரசு கடந்த ஆண்டு சட்டதிருத்தம் கொண்டு தனது முழுக் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து நடத்தி வருகிறது. அதன் நிர்வாகியாக தமிழகஅரசு முதன்மை செயலாளரான ஷிவ்தாஸ்மீனா நியமிக்கப்பட்டு பல்வேறு நிதி, நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு முறைகேடுகள் இன்றி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நன்கொடை இன்றி, தகுதி அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் அனுமதி சேர்க்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்கு தரமதிப்பீடு வழங்குவதற்காக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் ஷெட்டி தலைமையிலான 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு கடந்த நவம்பர் மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கு வருகை தந்தது. இக்குழுவில் முன்னாள் துணைவேந்தர் பி.ஏ.பிரஜாபதி, பேராசிரியர் பி.பசுல்ரஹ்மான், பேராசிரியர் சைலேஷ்லேலி, பேராசிரியர் பி.கீதா,, பேராசிரியர் அனுபம் மஹாஜம், டாக்டர் சுபேத்குமார்பட்நாகர், ராம.ராமநாத், டாக்டர் என்.எஸ்.டோங்கா, டாக்டர் ஜேக்கப்ஜான் கட்டாகாயம், பேராரிசிரியர், பி.என்.ராய், பேராசிரியர் என்.அழகுமூர்த்தி, நாக் துணை ஆலோசர் எம்.எஸ்.ஷியாம்சுந்தர் ஆகிய 13 பேர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு அனைத்து துறைகளையும் ஆய்வு செய்துவிட்டு சென்றது. இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட நாக் கமிட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு (3.09) அந்தஸ்து வழங்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது பல்வேறு துறைகளில் குறிப்பாக கடல்வாழ் உயராய்வு மையம், மொழிப்புல உயராய்வு மையம் மற்றும் மருத்துவம், பொறியியல், வேளாண், கல்வி, உடற்கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெருமளவு மாற்றமும், வளர்ச்சியும் அடைந்துள்ளது.

ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளியிடுவதில் தேசிய அளவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில், அண்ணாமலைப் பல்கலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் 10 இடங்களுக்குள் அண்ணாமலைப் பல்கலை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...