Saturday, December 13, 2014

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.4,479 கோடி கருப்பு பண பட்டியல்: முதல்முறையாக மத்திய அரசு வெளியீடு


சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பலரும் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை பதுக்கி உள்ளனர்.

கருப்பு பண மீட்பு நடவடிக்கை

இந்த கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், மற்றொரு முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும், 11 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு தனது பணிகளை தொடங்கி உள்ளது.

628 பேர் பட்டியல்

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரை கொண்ட பட்டியலை மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி தாக்கல் செய்தது. பிரான்சு அரசிடமிருந்து பெற்ற அந்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அப்படியே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் இந்த கணக்குகளில் 289 கணக்குகளில் பணம் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்து, சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்தது.

427 பேர் மீது நடவடிக்கை

இந்த நிலையில் கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரில் (இவர்களின் பெயர் விவரங்களை அரசு தெரிவிக்கவில்லை) 201 பேர் இந்தியாவில் வாழ்கிறவர்கள் அல்ல அல்லது அவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள். 427 பேர் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

மொத்த தொகை

இந்த 628 கணக்குகளில் தொடர்புடைய தொகை சுமார் ரூ.4 ஆயிரத்து 479 கோடி. (இந்த தகவல் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.)

இதில் 79 பேரின் கணக்கு களை வருமான வரித்துறை அளவிட்டுள்ளது. இவர்களின் தெரிவிக்கப்படாத கணக்கு இருப்பு தொகையின் மீது ரூ.2 ஆயிரத்து 926 கோடி வரியாக வட்டியுடன் பெறப்பட்டுள்ளது.

அபராத நடவடிக்கை

46 கணக்குகள் தொடர்பாக அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் 3 கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வரி ஏய்க்கும் நோக்கத்தில் செயல்பட்ட 6 கணக்குகளில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 கணக்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

மற்றவைகளில், தேவையான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுகின்றன. வரும் மாதங்களில் அவற்றில் கூடுதலான முன்னேற்றம் ஏற்படும்.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பை பொறுத்தமட்டில், ஒரு இரும்பு தாது ஏற்றுமதி நிறுவனம் உள்பட 31 கணக்குகளில் உண்மையான மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சேகரித்துள்ளது.

அவர்களில் 11 பேர் மதிப்பை குறைத்து காட்டியதை ஒப்புக்கொண்டு, ரூ116.73 கோடி அபராதம் செலுத்தி விட்டனர். மற்றவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

சொத்துகள் முடக்கம்

ஒடிசாவில் சுரங்க தொழில் அதிபர்கள் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ரூ.400 கோடி சொத்துகளை மத்திய அமலாக் கப்பிரிவு முடக்கி வருகிறது.

கர்நாடகத்தில் 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, ரூ.995.97 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

ஜார்கண்டில் ரூ.452.43 கோடி சொத்துகளை முடக்க தற்காலிக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கர்நாடகத்தில் ரூ.884.13 கோடி சொத்துகளும், ஆந்திராவில் ரூ.1,093.10 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லி தகவல்

இதற்கிடையே டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், “எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் மார்ச் 31-ந் தேதிக்குள் முடியும்” என குறிப்பிட்டார்.

உள்நாட்டில் உள்ள கருப்பு பணம்

சுப்ரீம் கோர்ட்டில், சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையில், உள்நாட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.14 ஆயிரத்து 958 கோடி கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கருப்பு பண விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு 13 சிபாரிசுகளை செய்துள்ளது. அவை வருமாறு:-

வெளிநாடுகளில் யாராவது சட்டவிரோத சொத்துகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு ஈடான அவர்களின் உள்நாட்டு சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக ‘பெமா’ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ரூ.50 லட்சத்துக்கு மேல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது ‘சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பான் நம்பர்

கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக, கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கும் பணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். அந்த உச்சவரம்புக்கு மேல், பணத்தை எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது.

ரூ.1 லட்சத்துக்கு மேல், ரொக்கமாகவோ, காசோலை மூலமாகவோ பணம் செலுத்தினால், அதற்கு ‘பான்’ நம்பரை குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். குஜராத்திலும், மராட்டியத்திலும், பணம் எடுத்துச் செல்லும் கூரியர்களாக அங்காடியாக்கள் என்பவர்கள் செயல்படுகிறார்கள். கருப்பு பண பரிவர்த்தனையில் அவர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

விரைவில் அமல்

மேலும், சுரங்கம், நிதி திட்டங்கள், இரும்பு தாது ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்கள், கருப்பு பண பரிவர்த்தனை அதிகமாக நடக்கும் தொழில்களாக உள்ளன. நாங்கள் கூறிய நடவடிக்கைகள் மூலம், கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருப்பதையும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதையும் பெருமளவில¢ தடுக்கலாம். இந்த யோசனைகள் தற்போது பரிசீலனையில் உள்ளன. விரைவில் இவை அமல்படுத்தப்படலாம்.

நிலுவையில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமானவரி வழக்குகளை விசாரிக்க மும்பையில் கூடுதலாக ஐந்து தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Friday, December 12, 2014

தற்கொலை முயற்சிகள் கண்டிக்கத்தக்கது... தண்டிக்கத்தக்கதல்ல!


தற்கொலை சுற்றுலா என ஒன்றை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சுவிட்சர்லாந்து நாட்டில்தான் தற்கொலை சுற்றுலா எனும் முறை உள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகருக்கு சென்று தற்கொலை செய்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். அங்கு தற்கொலை கிளினிக் என ஒன்று உண்டு. அங்கு சென்று நீங்கள் தற்கொலை செய்து கொள்ளலாம். இதுபோன்ற தற்கொலைகளை அந்நாட்டின் சட்டம் தடுப்பதில்லை. இதைத்தான் தற்கொலை சுற்றுலா என அழைக்கிறார்கள்.

ஆனால் இந்தியா அப்படியல்ல. தற்கொலைகள் இங்கு சட்ட ரீதியாகவும், சமுதாய கண்ணோட்டத்திலும் அனுமதிக்கப்படுவதில்லை. தற்கொலை முயற்சிகளும் கூட இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. சட்டரீதியாக நீங்கள் தற்கொலைக்கு முயன்றாலோ அல்லது யாரையாவது தற்கொலைக்கு தூண்டினாலோ நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதுதான் நம் நாட்டின் தற்போதைய நிலை. ஆனால் தற்கொலைகளின் எண்ணிக்கை இங்கே குறைந்தபாடில்லை. சாதாரண வயிற்று வலியில் துவங்கி உடல் உபாதைகள், பணப்பிரச்னை, உறவு பிரச்னை, பயம், குற்ற உணர்ச்சி என தற்கொலைகளுக்கு ஏகப்பட்ட காரணங்கள் இங்கு குவிந்து கிடக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் 25 வயது வாலிபர் ஒருவர் வேலையின்மையால் தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்ட அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு முயன்ற குற்றத்துக்காக அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309ன் படி அவர் மீது வழக்கு தொடர்ந்தனர் காவல்துறையினர். "எனக்கு வேலை கிடைக்கலை. என்னால வாழ முடியலை. அதுக்காக சாகறேன். என் மேல எதுக்கு சார் கேஸ் போடறீங்க?" என காவல்துறையினரை பார்த்து அவர் கேட்ட கேள்விக்கு அவர்களால் சரியா விளக்க முடியவில்லை.

'இந்திய தண்டனை சட்டத்தின் படி (309) தற்கொலை முயற்சி என்பது தண்டனைக்குரிய குற்றம்' இதை மட்டும் தான் காவல்துறையினர் திரும்ப திரும்ப சொன்னார்கள். ஆனால் அந்த சட்டத்தை மக்களுக்கு புரியும் வகையில், காவல்துறையினரால் சொல்ல முடியவில்லை. சொல்லவும் முடியாது. ஏனென்றால் இந்த சட்டம் ஒரு பொருந்தாத சட்டம்.

நம் அரசியல் அமைப்பு சாசனத்தின் படி, ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையும், அதிகாரமும் அவருக்கு வழங்கப்படுவதில்லை. அதனால் தற்கொலை முயற்சி என்பது நம் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றம். அதன்படி ஓராண்டு வரை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்கிறது சட்டம். 'அட தற்கொலைக்கு முயற்சி செய்யுறதே பெரிய தண்டனைதான். இதுக்கு ஜெயில் வேறயா?'னு கேக்கறீங்களா? ஆமாம். அப்படித்தான் சட்டம் சொல்கிறது. ஆனால் இந்த தற்கொலை முயற்சி வழக்குகள் பெரும்பாலும் போடப்படுவதில்லை. ஒரு அரசு மருத்துவமனையில் தினமும் சராசரியாக தினமும் 5 பேர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்குகள் போடப்படுவதில்லை.

இந்தியாவை பொறுத்தவரை தென்னிந்திய பகுதிகளில்தான் தற்கொலைகள் அதிகம். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்கள் தற்கொலைகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளதாக சொல்கின்றன புள்ளி விவரங்கள். ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், 5 முதல் 10 பேர் தற்கொலைக்கு முயன்று, பின்னர் உயிர் பிழைக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனால் இத்தனை பேர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடுவது என்பது சாத்தியமில்லைதான்.

அரசு அலுவலகங்களில் வேலை நடக்கவில்லை என்றோ அல்லது அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தியோ, பொது இடங்களிலோ நடக்கும் தற்கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே பதியப்படுகின்றன.

இதனை நீதிமன்றங்களும் சில நேரங்களில் உணர்ந்து கொண்டன. பஞ்சாப்பில் தற்கொலை முயற்சி வழக்கு ஒன்றில், ‘தற்கொலை முயற்சிக்கு தண்டனை என்பது கட்டாயமல்ல. அதை நீதிமன்றமே முடிவு செய்து கொள்ளும்' என நீதிமன்றம் தெரிவித்திருப்பது இதைத்தான் காட்டுகிறது. இன்னொரு வழக்கில் 'தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கச் சொல்லும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 நம் அரசியலமைப்புக்கு எதிரானது' என சொன்னது நீதிமன்றம். இது உச்ச நீதிமன்றத்தால் ஏற்கபடவில்லை என்றாலும் கூட, தற்கொலை முயற்சிப்பவர்களுக்கு தண்டனை அவசியமல்ல. அதனால் எந்த பலனும் இல்லை என்பதை உணர்த்தவே செய்தது.

இதன் அடுத்தக்கட்டம்தான், 'தற்கொலை முயற்சி இனி குற்றமாக கருதப்படமாட்டாது'என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருப்பது. தற்கொலை முயற்சிக்கு சிறைத் தண்டனை விதிக்கும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 309 இயற்கைக்கு பொருந்தாத சட்டம். அந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

"பொதுவாக மன வேதனையில் தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு மேலும் தண்டனை விதிப்பது என்பது சரியாகாது. அவர்களின் துயரை துடைக்க வேண்டுமே தவிர, தண்டனை தரக்கூடாது. எனவே இது பொருந்தாத சட்டம். இதை நீக்க வேண்டும்" என தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக சட்ட கமிஷனே கடந்த 2008ம் ஆண்டில் இந்த சட்டப்பிரிவை நீக்க பரிந்துரைத்தது. இந்த கோரிக்கைகளும், பரிந்துரைகளும்தான் இப்போது சட்டப்பிரிவு 309 நீக்கப்பட உள்ளதற்கு முக்கிய காரணம்.

மத்திய அரசின் இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "ஏற்கனவே தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலை முயற்சிகளுக்கு தண்டனை இல்லை என்றால் அது தற்கொலைகளை அதிகரிக்குமே என்று சிலர் கேட்கக்கூடும். நிச்சயம் இல்லை. ஏனென்றால் தண்டனை ஒருவரை தற்கொலை முயற்சியில் இருந்து நிச்சயம் தடுக்காது. ஒருவர் மனரீதியாக சிக்கலுக்கு உள்ளாவது தான் தற்கொலை முயற்சிகளுக்கு காரணம். தன் உயிரையே இழக்க துணிந்து விட்டவர், நிச்சயம் தண்டனைக்கு பயந்து தற்கொலை முயற்சியை தள்ளிப்போட வாய்ப்பில்லை. எனவே இந்த சட்டம் நீக்கப்படுவது வரவேற்கத்தக்கது," என்கின்றனர் சட்ட வல்லுனர்கள்.

அதே நேரத்தில் தற்கொலைகள் தடுப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். தற்கொலைகள் ஏன்? எதற்கு நடக்கிறது என்பதை ஆய்வு செய்து, அதனடிப்படையில் தற்கொலை செய்து கொள்ள முயலுபவர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் தற்கொலைகளை தடுக்கும். தற்கொலைக்கு முயல்பவர்களையும், தற்கொலைக்கு முயல ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் அது எதுவும் தற்கொலை முயற்சியை நியாயமாக்கி விடாது.

தற்கொலை முயற்சிகள் கண்டிக்கத்தக்கது. ஆனால் தண்டிக்கத்தக்கதல்ல!

- ச.ஜெ.ரவி

RGUHS All Set to Check Hi-tech Exam Cheating



BENGALURU: The Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) has decided to tackle hi-tech exam malpractices with stiff punishment and penalty.

Debarring students wearing customized T-shirts for two exams is among the stringent measures. The authorities have been flummoxed by the innovative cheating ways of students like having hi-tech copying devices fitted into the T-shirt. These proposals have been approved by the syndicate at its recent meeting.

According to the revised penalty clause, the copy of which is available with Express, the highest punishment fixed is for tampering of answer scripts — fine of `25,000 and debarring from taking three examinations, including the one in which the student is involved in malpractice.

Speaking to Express, Dr S Sachidanand, Registrar, Evaluation, said, “Following the recent cases of tampering of answer scripts, we have introduced it as one of the malpractices and fixed stringent punishment.”

As per the existing rules, those indulging in whatever crime/malpractice related to examinations had to appear before a committee which used to finalise the penalty amount.

The committee has no role to play under the revised norms and the university will follow the fixed punishment.

“The revised penalty/punishments will also cover the examinations concluded recently,” he said.

தற்கொலையும் தண்டனையும்!

Dinamani
தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமல்ல என்று விரைவிலேயே அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தியத் தண்டனையியல் சட்டப் பிரிவு 309-இன்படி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைத்தவர் மீது சட்டப்படி வழக்குத் தொடரலாம். அவருக்கு அதிகபட்சத் தண்டனையாக ஒரு வருட சிறையும், அபராதமும் அல்லது இரண்டுமே வழங்கப்படலாம் என்கிறது இந்தச் சட்டப் பிரிவு. இந்த சட்டப் பிரிவு விரைவில் அகற்றப்படப் போவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

கிறிஸ்தவ மதப்படி, இறைவனால் தரப்பட்ட உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை மனிதர்களுக்கு கிடையாது. அதனால், விக்டோரியா மகாராணி காலத்தில் பிரிட்டனில் தற்கொலை முயற்சி ஒரு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதே அடிப்படையில், இந்தியாவில் தண்டனைச் சட்டம் அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டு வரப்பட்டபோது, இங்கேயும் தற்கொலை முயற்சி தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய சட்ட ஆணையம் 1971 ஜூன் மாதம் தாக்கல் செய்த தனது 42-ஆவது அறிக்கையில், தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் என்கிற சட்டப் பிரிவை அகற்றப் பரிந்துரைத்திருந்தது. 1985-இல் தில்லி உயர்நீதிமன்றமும், 1987-இல் மும்பை உயர்நீதிமன்றமும், 1994-இல் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டபோது, சட்டப் பிரிவு 309 அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கருத்துத் தெரிவித்தன.

2008-இல் சட்ட ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தற்கொலை முயற்சியை கிரிமினல் குற்றமாகக் கருதுவது கூடாது என்று மீண்டும் பரிந்துரைத்தது. தற்கொலை முயற்சி என்பது பரிவுடனும், மனோதத்துவ சிகிச்சையுடனும் அணுக வேண்டிய ஒன்றே தவிர, தண்டனைக்குரியதாகக் கருதுவது மனிதநேயமாகாது என்று சட்ட ஆணையம் கருதியது.

சட்ட ஆணையத்தின் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் மாநில அரசுகளின் கருத்தைக் கோரியது. தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களும், நான்கு யூனியன் பிரதேசங்களும் தண்டனையியல் சட்டப் பிரிவு 309 அகற்றப்படுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மத்திய அரசு தற்கொலையை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவிக்க இருக்கிறது.

அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரப்படி 2012-ஆம் ஆண்டில் 1,35,445 பேரும், 2013-ஆம் ஆண்டில் 1,34,799 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 24% பேர் குடும்பப் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்றும், தற்கொலை செய்து கொண்டவர்களில் 39.8% பேர் தூக்குப் போட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தேசிய அளவில், 2013-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நாளொன்றுக்கு 369 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தெரிகிறது. மகாராஷ்டிரத்தை (16,622) தொடர்ந்து தற்கொலையில் அதிகமாக ஈடுபடுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (16,601) என்கிறது புள்ளிவிவரம். மேலே குறிப்பிட்டதெல்லாம், தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் இதைப்போல பல மடங்கு அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மும்பை உயர்நீதிமன்றம் கூறியதுபோல வாழ வழியில்லாமல் அல்லது பிடிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு விரக்தியின் விளிம்பில் இருக்கும் ஒருவரை, தற்கொலை முயற்சி என்கிற பெயரில் தண்டிப்பது மனிதாபிமானமாகாது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், தற்கொலை சட்டப்படி குற்றமில்லை என்றாகிவிட்டால், இன்றைய சமூக, பொருளாதாரச் சூழலில் சாதாரணமான பிரச்னைகளுக்குக்கூட மனிதர்கள், குறிப்பாக மாணவ - மாணவியரும், இளைஞர்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபட மாட்டார்களா என்கிற கேள்வி எழுகிறது.

அரசியல் தலைமையின் பார்வை படுவதற்காக அல்லது அரசியல் காரணங்களால் உணர்ச்சி மேலெழுந்து தீக்குளிப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற நடவடிக்கைகள் சட்டப்படி பாதுகாப்புடன் நடக்கத் தொடங்குமே, அப்போது என்ன செய்யப் போகிறோம்?

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டவர்கள் மிகமிகக் குறைவு. பொதுவாக நீதிமன்றங்கள் அப்படிப்பட்டவர் களைக் கண்டித்து விடுதலை செய்வதுதான் வழக்கமாக இருக்கிறது.

தற்கொலை முயற்சிக்குத் தண்டனை என்பது மனிதாபிமானமற்றதுதான். ஆனால், தண்டனையே இல்லாமல் இருப்பது, தற்கொலை முயற்சிகளுக்கு ஊக்கமளிக்குமே, அதுதான் பயமாக இருக்கிறது.

ரேஷன் பொருள் விநியோகத்தில் உள்ள குறைகளை தீர்க்க முகாம் சென்னையில் நாளை நடக்கிறது



ரேஷன் அட்டை மற்றும் பொருள் விநியோகத்தில் உள்ள குறைகளை தீர்க்க சென்னையில் நாளை முகாம் நடத்தப்படுகிறது.

குறைதீர்வு முகாம்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் 13.12.14 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் இந்த முகாமில் தெரிவிக்கலாம். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நடக்கும் இடங்கள்

சிதம்பரனார் மியாசி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. 113, அங்கப்பன் தெரு, மண்ணடி; ராயபுரம் ராஜகோபால் மேல்நிலைப்பள்ளி, ஜி.எம். பேட்டை; பெரம்பூர் சென்னை நடுநிலைப்பள்ளி, கோபாலபுரம், திரு.வி.க. நகர்;

அண்ணாநகர் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு நெடுஞ்சாலை; அம்பத்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சாவடி தெரு, கொரட்டூர்; வில்லிவாக்கம் நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சாந்தி காலணி, அண்ணா நகர் மேற்கு;

பரங்கிமலை

திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி; ஆவடி அண்ணா சமுதாயக்கூடம், மேல்பாக்கம், வெள்ளச்சேரி, கதவூர்; தியாகராயநகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம், (புதூர்) 3–வது அவன்யூ, அசோக்நகர்; மைலாப்பூர் புனித ரபேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 18/2, கச்சேரிசாலை;

பரங்கிமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர திருமண மண்டபம், பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலை, ஆதம்பாக்கம்; தாம்பரம் லிடியா மெட்ரிகுலேசன் பள்ளி, கஸ்பாபுரம், அகரம்;

ஆயிரம் விளக்கு

சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 112 கோடம்பாக்கம் நெடுஞ்சாலை; ஆயிரம் விளக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நந்தனம் விரிவு, 5–வது மெயின் ரோடு, நந்தனம்; சேப்பாக்கம் சென்னை மாநகராட்சி சமுதாய கல்லூரி, அருணாச்சலம் தெரு, சேப்பாக்கம்;

சோழங்கநல்லூர் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம், (195–வது வார்டு) கண்ணகி நகர் ஆகிய இடங்களில் முகாம்கள் நடக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் புதிய ஆவின் மாதாந்திர பால் அட்டைகள் வழங்க ஏற்பாடு



ஆவின் நிறுவனம் நுகர்வோர் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, புதிய மாதாந்திர பால் அட்டைகள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பால் அட்டை வழங்குவதற்கு நுகர்வோர் ஆவின் வழங்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இருப்பிட சான்றிதழ், அடையாள சான்றிதழ் நகலை இணைத்து கொடுக்க வேண்டும்.

இதனடிப்படையில் புதிய மாதாந்திர பால் அட்டைகள் உடனடியாக வழங்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கங்கள் தங்கள் குடியிருப்பில் வசிப்போர்களுக்கு ஆவின் மாதாந்திர அட்டை தேவைப்பட்டால் ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும் நந்தனம் விற்பனை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நுகர்வோர் சேவை மற்றும் உதவி பிரிவையும், 1800–425–3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் ஆவின் மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கூடுதல் கட்டணத்தை அரசே செலுத்தும் தமிழ்நாட்டில் அனைத்துவகை மின்நுகர்வோருக்கும் மின்கட்டணம் 15 சதவீதம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது


தமிழ்நாட்டில் அனைத்துவகை மின்நுகர்வோருக்கும் மின்சார கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை,

மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வந்தது.

மின்கட்டணம் உயர்வு

இந்த நிலையில், மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் எஸ்.குணசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தானாக முன்வந்து மின் கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பான பொது அறிவிப்பினை 23.9.2014 மற்றும் 24.9.2014 அன்று செய்தித்தாள்களிலும், ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிட்டு பொதுமக்கள், சம்மந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள், ஆலோசனைகள் கோரப்பட்டன.

ஆட்சேபனைகள் ஆலோசனைகள் அனுப்புவதற்கான கடைசிநாள் 31.10.2014 என நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆணையத்தின் மின் கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை மாற்றிமைப்பதற்கான செயற்குறிப்பு 13.10.2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மாநில ஆலோசனை குழுவின் 28-வது கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.

15 சதவீதம் அதிகரிப்பு

ஆணையத்தின் இந்த செயற்குறிப்பு மீது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள் ஆலோசனைகளை பெறுவதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் 24.10.2014 அன்று சென்னையிலும், 28.10.2014 அன்று நெல்லையிலும் மற்றும் 31.10.2014 அன்று ஈரோட்டிலும் நடத்தப்பட்டன.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள், ஆலோசனைகளை கருத்தில்கொண்டு பல்வேறு மின்நுகர்வோர் வகையினருக்கான மின் கட்டணம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கான மின் செலுத்துதல் கட்டணங்களை பின்னிணைப்பில் கண்டுள்ளவாறு வெள்ளிக்கிழமை (இன்று) முதல் நடைமுறைக்கு வருமாறு ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு அனைத்து நுகர்வோர் வகையினருக்கும் 15 சதவீதம் அளவு இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

வீடுகளுக்கு எவ்வளவு?

புதிய கட்டண விகிதம் பற்றிய விவரம் வருமாறு:-

* வீடுகள் 2 மாதங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் ரூ.2.60 லிருந்து ரூ.3 ஆக உயர்ந்துள்ளது.

* 200 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.80 லிருந்து ரூ.3.25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

* 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3 லிருந்து ரூ.3.50 ஆகவும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான 300 யூனிட்டுகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.4 லிருந்து ரூ.4.60 ஆகவும், 501 யூனிட் மற்றும் அதற்கு மேல் பயன்படுத்தினால் ரூ.5.75 லிருந்து ரூ.6.60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

வழிபாட்டு தலங்கள்

* வழிபாட்டு தலங்களை பொறுத்தமட்டில் 120 யூனிட் வரை பயன்படுத்தும் வழிபாட்டு தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5 லிருந்து ரூ.5.75 கட்டணமாக வசூலிக்கப்படும்.

* குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ3.50 லிருந்து ரூ.4 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.4 லிருந்து ரூ.4.60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

* விசைத்தறிகளை பொறுத்த மட்டில் 2 மாதம் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.4.50 லிருந்து ரூ.5.20 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகள்-கல்விநிறுவனங்கள்

* தொழிற்சாலைகளை பொருத்தமட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து யூனிட்டுகளும் மின் கட்டணம் ரூ.5.50லிருந்து ரூ.6.35 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

* வணிக நிறுவனங்களுக்கு 2 மாதத்திற்கு 100 யூனிட் வரை ரூ.4.30லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது. 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.7லிருந்து ரூ.8.05 ஆக உயர்த்தப்படுகிறது.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5-லிருந்து ரூ.5.75 ஆகவும், தனியார் கல்வி நிலையங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.50-லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

* தற்காலிக செயல்பாடுகளுக்கான தற்காலிக மின்சாரம் வழங்கல் மற்றும் கட்டுமானம் மற்றும் ஆடம்பர மின்னொளியூட்டலுக்கு ரூ.10.50-லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்படுகிறது.

நிலைகட்டணம்

* நிலைகட்டணமாக வீடுகளுக்கு 2 மாதம் 100 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.20 லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

* 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.30-லிருந்து ரூ.40 ஆகவும், 500-க்கு மேல் பயன்படுத்தினால் ரூ.40 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகளுக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும், இருப்பு பாதைகளுக்கு 250 ரூபாயில் இருந்து ரூ.300 ஆகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும், வணிக நிறுவனங்கள், தற்காலிக விநியோகத்துக்கும் 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த மின்சார கட்டண உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழக அரசே ஏற்கும்

2 மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர் எவருக்கும் எந்தவித கூடுதல் சுமையும் இல்லாத வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.

அதாவது 2 மாதங்களில் 500 யூனிட் வரை பயன்படுத்துவோர் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின்கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும் என்றும், மின்கட்டணத்தில் அவர்களுக்கு எந்தவித உயர்வும் இல்லை என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...