Saturday, December 13, 2014

COMPARATIVE CHART ON NRI/PIO/OCI CARD HOLDERS







SOURCE: MHA..Foreigners division Government of India

A PIO CARD ISSUED TO AN APPLICANT SHALL BE VALID FOR HIS LIFE TIME FROM THE DATE OF ISSUE PROVIDED THAT SUCH APPLICANT SHALL HAVE A VALID PASSPORT from 30 th September 2014 



AWARENESS AMONG INDIAN CITIZENS ABROAD REGARDING FACILITY OF E-IPO FOR PAYMENT OF RTI FEE IN FE FROM ABROAD UNDER RTI ACT 2005


Consumers run from pillar-to-post to open bank account



Pushpam (name changed) has been going to a bank branch, where her husband has an account, for three days. She needs to open an account to get the LPG cylinder subsidy directly.

However, when she went to submit the filled-in form, she was told that the branch will accept the forms only at a specific time and only from consumers from specific areas.

It took her three days to finally talk to the banker and open an account.

Many like Pushpam, who do not have a bank account, have been rushing to the banks during the last two weeks to open an account so that they can link their Aadhaar number to the bank account and get the subsidy directly.

Some of them have to take permission from work to open an account, get Aadhaar enrolment or submit the forms to the banks and the LPG distributors. They are asked to come again if the required documents are not there, there are shortage of forms, there are spelling discrepancies, difference in address, etc.

In some cases, the beneficiary has a joint account with one of the family members. There are requests for a separate account. There are many who have not operated the account for the last two or three years and want to activate it now. Some banks ask them to open another account.

“They are making us run from pillar-to-post,” laments another consumer, who has come to the bank branch twice with his aged mother.

A couple of bankers whom The Hindu spoke to explained that there is a rush, especially in the morning hours.

“We have limited staff strength and they have the day-to-day banking activities. Our regular work is affected to some extent because of the rush. We get at least 50 to 60 customers every day and at least 50 per cent of them want to open a new account,” says a bank manager in the city.

In some branches, there are no clear instructions on what should be done with form 3. “We collect the form with know your customer document. But, we do not know what to do with it as we are unable to upload in our system,” they say. The branch has about 40,000 customers. There are requests for address change, making corrections in name or address of the account holder, opening of new account, or just linking the Aadhaar number to the account. The branch as designated a couple of staff to upload the data. “We upload 500 to 1,000 numbers a day,” they say.

Official sources say that as of now 56 banks in the district have been added to the scheme for disbursement of subsidy to those who have not enrolled for Aadhaar. And, it includes private sector banks. If there are requests from more banks, it could be done. Banks will have to upload the data to the system so that consumers, those who have Aadhaar and those who do not, get the subsidy directly. It is not mandatory that branches should open accounts only for consumers from the wards suggested to the banks.

இவர் இருக்கும் படப்பிடிப்பு தளம் மட்டுமல்ல, திரைவிழாக்களும் கலகலப்பால் ஹிட் அடிக்கும்.



வெள்ளிவிழா இயக்குநர்

425 நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த 'கரகாட்டக்காரன்’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன.. அந்தப் படத்தை, எழுதி இயக்கிய கங்கை அமரன் வெள்ளி விழா இயக்குநராகக் கொண்டாடப்பட்டார். டிசம்பர் 8-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய கங்கை அமரன் கடைசியாக இயக்கிய படம் ’தெம்மாங்கு பாட்டுக்காரன்’. படம் இயக்கவில்லை என்ற வருத்தமில்லை அவருக்கு. எனக்கும் சேர்த்து என் மகன் வெங்கட் பிரபு கலக்குகிறான் என்கிறார் அமரன். இங்கே கரகாட்டக்காரன் படப்பிடிப்பில் நாயகி கனகாவுக்கு நடித்துக் காட்டும்போது க்ளிக்கியவர் ஸ்டில்ஸ் ரவி.

கலகல மனோபாலா

பாரதிராஜாவின் பட்டறை வழியே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி சுமார் 40 படங்களையும் 15 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கிய மனோபாலா டிசம்பர் 8-ம் தேதி தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இம்முறை மனோபாலாவை தேடிவந்து வாழ்த்திச் சென்றவர் விஜய். ரஜினியை வைத்து ‘ஊர்க்காவலன்’, ராதிகாவை வைத்து ‘தென்றல் சுடும்’, விஜயகாந்தை வைத்து ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’, சத்யராஜை வைத்து ‘மல்லு வேட்டி மைனர்’ என்று வரிசையாக வெற்றிப்படங்களைக் கொடுத்த மனோபாலா கடைசியாக ஜெயராம் நடித்த ‘நைனா’ என்ற படத்தை இயக்கினார்.

தயாரிப்பாளரின் பணத்தைக் காப்பாற்றும் இயக்குநர் என்று பெயரெடுத்த இவரை தனது ‘நட்புக்காக’ படத்தின் மூலம் நடிகராக்கினார் கே.எஸ். ரவிக்குமார். அன்றுமுதல் இயக்கத்தை நிறுத்திவிட்டு முழுநேர நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் மனோபாலா, இந்த ஆண்டு ‘சதுரங்க வேட்டை’ என்ற வெற்றிப்படத்தைத் தயாரித்துக் கவனம் பெற்றார். இங்கே ‘ஆம்பள’ படத்தின் படப்பிடிப்பில் கதாநாயகி ஹன்சிகாவுடன் போஸ் கொடுக்கிறார். இவர் இருக்கும் படப்பிடிப்பு தளம் மட்டுமல்ல, திரைவிழாக்களும் கலகலப்பால் ஹிட் அடிக்கும்.

திரைவாழ்வில், எந்த நடிகரும் எட்டாத புதிய உயரத்தை அடைந்துகாட்டியவர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த்| கோப்புப் படம்.

ரஜினிகாந்த் பிறந்தநாள்: 12.12.1950

1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படம் வெளியானபோது, படத்தின் இறுதிக் காட்சியில் நின்ற நிலையிலேயே உயிரைவிட்டு, ஸ்ரீவித்யா தொட்டதும் சரிந்துவிழும் அந்த அறிமுக நடிகர், உச்ச நட்சத்திரமாக உயர்ந்து, 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் கதாநாயகனாக நடிப்பார் என்று அந்தக் கால ரசிகர்கள் கணித்திருப்பார்களா தெரியவில்லை. ஆனால், அலட்சியமான வேகத்துடன் கைகளால் மேல் கோட்டைப் பின்னோக்கித் தள்ளிவிட்டபடிநடக்கும் ‘லிங்கா’ படத்தின் ஸ்டில்களை இப்போது பார்க்கும் அந்த ரசிகர்கள், கண்முன்னே பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் கால மரத்தின் குன்றாத பசுமையை நிச்சயம் உணர்வார்கள்.

திரைவாழ்வில், எந்த நடிகரும் எட்டாத புதிய உயரத்தை அடைந்துகாட்டியவர் ரஜினிகாந்த். இவரது படம் வெளியாகும்போதுதான், நட்சத்திர நடிகர்கள் கூடப் பாமர ரசிகர்களாகி, திரையரங்குக்குப் படையெடுக்கும் அதிசயம் நிகழும். மிகச் சில தோல்விகளின் வடுக்களும், பிரம்மாண்டமான பல வெற்றி மகுடங்களும் கொண்ட 40 ஆண்டுகாலப் பயணம் அவருடையது.

கவர்ச்சியான போக்கிரி

70-களின் இறுதியில் இளையராஜா பாரதிராஜா - மகேந்திரன் - ரஜினி - கமல் என்று புதிய திறமைகளின் அலை ரசிகர்களை ஈர்த்தது. அப்போது வெற்றிப் படங்களுக்கு உத்தரவாதம் தரும் கலைஞராகவும், ரசிகர்களின் பெரும் விருப்பத்துக்குரியவராகவும், மளமளவென உயர்ந்தார் ரஜினி. வித்தியாசமான உச்சரிப்பு, உற்சாகமான வேகம், அலைபாயும் தலைமுடி என்று ரசிகர்களைக் கட்டிப்போடத் தொடங்கியிருந்தார். கவர்ச்சியான போக்கிரித் தோற்றம் அவரது பலங்களில் ஒன்றாக அமைந்தது.

முன்கோபம் கொண்ட முரட்டு இளைஞன் பாத்திரத்தில் அவர் நடித்த ‘பைரவி’, ‘தப்புத்தாளங்கள்’ போன்ற படங்கள் அவர் மீதான அனுதாபத்தை வளர்த்தன. மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ படத்தில் சுயஇரக்கமும், தன்மானமும் மிக்க முரடனாக அவர் நடித்த காளி பாத்திரம் இவற்றின் உச்சமாக அமைந்தது. முழுமையான நாயகனாக அவர் உருக்கொள்வதற்கு முன் வெளியான இந்தப் படம், அவரது நடிப்பின் நுட்பங்களைச் சாத்தியப் படுத்தியது. தான் முற்றிலும் வெறுக்கும் சரத்பாபு, தன் தங்கையைப் பெண் கேட்டு வந்த பின்னர் அவர் ஆடும் ருத்ரதாண்டவம் ரசிகர்களை மட்டுமல்ல, திரையில் இருக்கும் சக நடிகர்களையே உலுக்கி யெடுத்துவிடும்.

வில்லத்தனம் நிறைந்த நாயகன்

வில்லன்களின் உலகிலிருந்து நல்லவர்களின் பக்கம் வந்த நடிகர் ரஜினி, வில்லன்களுக்கு உரிய பலம், ஆக்ரோஷம், சூழ்ச்சி என்று அனைத்தையும் கைக்கொண்டிருக்கும் ஒருவர் நாயகனானபோது ரசிகர்களுக்குக் கிடைத்த பாதுகாப்பு உணர்ச்சி அவரது வெற்றிக்கு அடித் தளமாக அமைந்தது எனலாம். எனவேதான், பிரம் மாண்டமான மொட்டைத் தலை வில்லனைப் ‘பறந்து பறந்து’ ரஜினி அடித்தபோது, திரையரங்கில் விசில் பறந்தது. ரவுடிகளால் தள்ளிவிடப்படும் பெரியவர், தன் காலில் விழும்போது தூக்கிவிடும் ரஜினியைப் பார்த்துக் கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. குழந்தைகள், பெண்களின் மதிப்பையும், அபிமானத்தையும் பெற்ற நடிகராக ரஜினி உயர்ந்ததன் ரகசியம் இதுதான்.

அந்தக் காலகட்டத்தில் அமிதாப் நடித்த ‘கோபக் கார இளைஞன்’ வேடத்தின் தமிழ் நகல்தான் என்றாலும், தனக்கே உரிய பிரத்யேக பாணியில் அதை மிளிரச் செய்தார் ரஜினி. வில்லனை வீழ்த்தும் அசுர பலம் கொண்டிருந்தாலும் சற்று நேரம் அவனிடம் அமைதியாகவும், போலியான பயத் துடனும் ரஜினி உரையாடும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தன. காற்றில் கலைந்து புரளும் முடியைக் கைகளால் ஒதுக்கிக்கொண்டே புன்னகையுடன் வில்லன்களை எச்சரிக்கும் ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது?

‘பாட்ஷா’வுக்குப் பிறகு

90-களின் மத்தியில் தமிழ்த் திரையுலகின் இசை, தொழில்நுட்பம் போன்ற தளங்களில் ஏற்பட்ட மாறுதலின் பின்னணியில் வெளியான ‘பாட்ஷா’, அவரது பிம்பத்தைப் பல மடங்கு பெருக்கியது. தமிழக அரசியலில் நிலவிய கொந்தளிப்பான சூழலைத் திரையில் பிரதிபலிக்கும் படங்களில் ரஜினி தொடர்ந்து நடித்தார். அது அரசியல் களத்தில் அவரை நிறுத்தாவிட்டாலும், ‘திரை அரசிய’லில் கோலோச்ச அவருக்கு உதவியது. ‘முத்து’ படம் ஜப்பானில் பிரபலமானதும், ‘படையப்பா’ அமெரிக் காவில் வெளியானபோது ‘வண்டி கட்டிக்கொண்டு’ திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுத்ததும், ரஜினியின் நட்சத்திர மதிப்பின் வீச்சை உணர்த்தியது.

எல்லையைக் குறுக்கிக்கொண்டவர்

சமகால நடிகரும் நண்பருமான கமல், பரிசோதனை முயற்சிகளில் இறங்கிவிட்ட பின்னர், வணிகப் படங்களே தனது பிரதேசம் என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டார். இத்தனைக்கும் தமிழின் தரமான படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ரஜினி நடித்த படங்களும் அடங்கும். ஒருகட்டத்தில் வணிக உலகின் திரையிலிருந்து மீளமுடியாமல் அதிலேயே தேங்கிவிட்டார் என்ற விமர்சனம் ரஜினி மீது உண்டு. ஆனால், உண்மையில், அமிதாப் நடித்த ‘சீனி கம்’ போன்ற, அசல் வயதுக்குரிய வேடங்களில் நடிக்கும் ஆர்வம் ரஜினிக்கு இருக்கிறது.

சமீபத்தில் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க இளையராஜாவுடன் சென்றபோது, இதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘சந்திரமுகி’ வேட்டையன், ‘எந்திரன்’ சிட்டி எல்லாம்கூட அதன் வெளிப்பாடுதான் என்று கொள்ளலாம். தமிழில் இப்போது உருவாகியிருக்கும் ‘புதிய அலை’ இயக்குநர்களால் நிச்சயம் ரஜினியின் இந்த ஆசைக்குத் தீனிபோட முடியும். ரஜினி மீண்டும் அப்படியொரு படத்தில் நடிப்பதுதான் அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய வாழ்நாள் சவாலாக இருக்கும். ஆனால், அப்படி யான ஒரு சவாலை எதிர்கொள்வதில்தான் ஒரு அசலான கலைஞனின் ஆத்மார்த்த வெற்றி அடங்கியிருக்கிறது. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது... நல்வரவு ரஜினி!

- வெ. சந்திரமோகன்

உண்மையில் ஒரு தவறு நடக்கும்போதுதான் தெரிகிறது, நம்முடைய அமைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் நிறைந்து கிடக்கும் தவறுகள்.

வேரை விட்டுவிட்டுக் கிளையை வெட்டுவதேன்?


டெல்லியில் டாக்ஸி ஓட்டுநரால் பெண்ணொருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான சில கேள்விகளை எழுப்புகிறது.

தேசத்தின் உச்சபட்சப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தலைநகரிலேயே இப்படியென்றால், மற்ற நகரங்களைப் பற்றி என்ன சொல்வது? அந்த டாக்ஸி ஓட்டுநர் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று வந்திருக்கிறார் என்ற தகவலும், பாலியல் அத்துமீறல்களில் வழக்கமாக ஈடுபடக் கூடியவர்தான் அவர் என்பதும் மேலும் அதிர வைக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு நபர், எப்படி இவ்வளவு சுதந்திரமாகத் திரிய முடிந்தது என்பது புதிர். அவருக்கு வேலை அளித்த உபேர் நிறுவனம், இது போன்ற பின்னணித் தகவல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. வேலைக்குச் சேர அந்த ஓட்டுநர் போலியாக நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல, உபேர் நிறுவனத்தில் ஓட்டுநர்களாக இருக்கும் 4,000 பேரின் பின்னணித் தகவல்கள் பற்றியும் முறையான ஆவணங்கள் அந்த நிறுவனத்திடம் இல்லை என்பதுதான் விசித்திரம். யார் வேண்டு மானாலும் எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அது பற்றித் தெரிவிக்காமல் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர முடியும் என்ற நிலை எதன் அடையாளம்?

பாலியல் வன்முறைச் சம்பவம் வெளியில் தெரிந்தவுடன், உபேர் டாக்ஸியை டெல்லியில் தடைசெய்திருக்கிறார்கள். 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் உபேர் டாக்ஸியின் செயல்பாடுகள் பல முறை கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. மற்ற டாக்ஸிகளை விட குறைந்த கட்டணம் என்பதால், அந்தத் துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி ஏகபோகமாகத் தொழில் நடத்து வதாகவும் இந்தியா உட்படப் பல நாடுகளில் அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

அது மட்டுமல்லாமல், இந்த நிறுவனம் ஒரு கைபேசி ‘ஆப்’ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. டாக்ஸியை வரவழைப்பதிலிருந்து பயணக் கட்டணத்தைச் செலுத்துவது வரை அவர்கள் செயல்படுத்தும் ‘ஆப்’ மூலமாகச் செய்ய முடியும். ஒருவர் இதில் கணக்கு தொடங்கி விட்டால், இந்த ‘ஆப்’ மூலமாக அமெரிக்க டாலராகத்தான் கட்டணம் செலுத்த முடியும். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒருவர், இந்தியப் பணத்தைக் கட்டணமாகச் செலுத்துவதுதானே முறையாக இருக்க முடியும்.

பிரச்சினையின் வேரைக் களையாமல் அதன் கிளையை மட்டும் வெட்டுவது எந்த விதத்தில் பலன் கொடுக்கும்? அந்த நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை தவறு என்பதல்ல இங்கே பிரச்சினை. அந்த நிறுவனம் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதை இவ்வளவு நாட்கள் கழித்துதான், அதுவும் ஒரு பெண் மீது கொடுமையாகப் பாலியல் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பிறகுதான், கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது என்பதுதான் பிரச்சினை. உண்மையில் ஒரு தவறு நடக்கும்போதுதான் தெரிகிறது, நம்முடைய அமைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் நிறைந்து கிடக்கும் தவறுகள். அரசு தவறுகளை மறைப்பதை விட்டுவிட்டு, அமைப்பைத் திருத்த முயற்சிக்க வேண்டும்!

அடுத்த நூற்றாண்டில், காளை மாடுகள் அருங்காட்சியகங்களில் பார்க்கும் விலங்காக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கடந்து போகும் காளைகள்


நிகழாண்டில் பழனியில் முடிவடைந்த காளை மாடுகளுக்கான சந்தையில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பங்கேற்கவில்லை.

இயந்திரப் பயன்பாடு அதிகரித்து வருவதால் மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சந்தைகளும் களை இழந்து விட்டன.

காளை மாடுகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. டெல்டா பகுதிகளின் உயிர்நாடியான விவசாய வேலைகளுக்கு தோள் கொடுத்தவை இக்காளைகளே. 100 குழி அளவுள்ள நிலத்தை உழுவதற்கு அரை நாள் தேவைப்படும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு நாள் ஆகும்.

அந்த நேரத்தில், வெயிலையும் பொருள்படுத்தாமல் உழைக்கும் வல்லமை பெற்றவை காளைகள். விவசாயப் பகுதிகளில் செய்யப்படும் உழவு, அறுவடை, மூட்டைகளை சுமத்தல், நீண்ட தூரப் பயணம் உள்ளிட்ட வேலைகளைச் சலிக்காமல் செய்யக்கூடிய திறன் பெற்றவை.

எனவேதான், மாடுகளை கவுரவிக்க கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் டெல்டா மாவட்டங்களில் விமரிசையாக இருக்கும். பசு மாடுகளை பொருத்தவரை வீடுகளிலேயே மாலை அணிவித்து பொங்கல் கொண்டாடி விடுவர்.

ஆனால், காளை மாடுகளுக்கு கிராமத்தின் பொதுவான இடத்தில் வைத்து பொங்கல் கொண்டாடப்படும். அதாவது, ஊரில் காளை வைத்துள்ள அனைவரும் தங்களது மாடுகளை கோயிலுக்கு கூட்டி வருவர்.

அங்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்படும். பின்னர் மாடுகள் அவிழ்த்து விடப்படும்.

தை மாதம் என்பதால் பயிர்கள் அனைத்தும் அறுவடை நிலையில் இருக்கும். யாரும் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்ற விதிமுறை கிராமங்களில் இருக்கும். என்றாலும் அன்றைய தினம் மட்டும் கட்டுப்பாடு தளர்த்தப்படும்.

ஏனெனில், சில ஊர்களில் கோயில்கள் வயல்களின் ஓரத்தில் இருக்கும். மாடுகள் கொஞ்சம் திரும்பினாலே வயல்களுக்கு செல்லும் நிலையில் இருக்கும். ஆகவே, அன்று யாரும் மாடுகளை அடிக்காமல் பத்திரமாக வயல்களை விட்டு வெளியேற்ற வேண்டும்.

காளைகள் பாய்ந்துச் சென்று தங்களின் முதலாளியின் வீட்டு வாசலில் சரியாக நிற்கும். அங்கே வீட்டுப் பெண்களால் ஆரத்தி எடுக்கப்பட்டு, திலகமிடப்பட்டு அதற்குரிய இடத்தில் கட்டப்படும். காலம் காலமாக நடந்து வந்த நிகழ்வு இது.

அப்போதெல்லாம் மாட்டுப் பொங்கல் நாளில் மாலையில் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களிலோ அல்லது பெரும் திடலிலோ காளை மாடுகள் அணிவகுத்து நிற்கும்.

தங்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக விளங்கிய காளைகளை கவுரவிப்பதில் விவசாயிகள் அதிக அக்கறை காட்டினர்.

அதன்பிறகு காளைகளின் பயன்பாடு குறைய ஆரம்பித்து, இயந்திரப் பயன்பாடு தலை தூக்க ஆரம்பித்தது. மாட்டுப் பொங்கலுக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கையும் மெல்ல குறைய ஆரம்பித்தது.

தற்போது மக்கள் மட்டுமே கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு வீடுகளுக்கு வெறுமையாக செல்கின்றனர்.

தற்போது உள்ள சிறுவர்கள் இந்த நிகழ்வுகளை பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே.

தற்போது இனவிருத்திக்காக கிடை போடுவோர் சிலர் காளை மாடுகளை வளர்த்து வருகின்றனர். உழவுக்காக காளைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது.

தனக்கு உதவிய தோழனை கடைசி வரை வைத்து பராமரிக்கும் எண்ணமும் மக்களிடையே குறைந்து விட்டது. அதனாலேயே பல இடங்களில் காளைகள் அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தாய் - தந்தையரே முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் காலத்தில் வாழுகின்ற நாம், மாடுகளின் மீது கருணை காட்டுவோரை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

கட்டை வண்டி, டயர் வண்டி, கூண்டு வண்டி இவையெல்லாம் மாடுகள் இழுத்த வாகனங்கள். வசதியானவர்கள் வைத்திருந்த கூண்டு வண்டிகள் ஏறக்குறைய மறைந்துவிட்டது.

கிராமிய திரைப்படங்களில் மட்டுமே காண முடிகிறது. கட்டை வண்டிகளும், டயர் வண்டிகளும் ஒரு சில இடங்களில் பயன்பாட்டில் உள்ளன.

இனி வரும் தலைமுறையினர் உழவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காளைகளை ஆச்சர்யத்தோடு பார்க்கும் நிலைமை வரலாம். காளைகளின் குளம்படி ஓசைகளும் கழுத்து மணி ஓசைகளும் கிராமப்புறங்களிலிருந்து மெல்ல மறைந்து வருகின்றன.

அடுத்த நூற்றாண்டில், காளை மாடுகள் அருங்காட்சியகங்களில் பார்க்கும் விலங்காக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நடுப்பக்கக் கட்டுரைகள் Union Budget: At a Glance The pace of revenue growth has slowed down, according to the Budget Report. Union Budget தி...