Monday, December 15, 2014

மாணவர்களின் கல்வி சுற்றுலா

logo

வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான காலம் என்றால், அது மாணவ பருவகாலம்தான். ஒவ்வொருவரின் எதிர்காலத்துக்கும் பாதை அமைப்பதும் இந்த நாட்கள்தான். பள்ளிக்கூட கல்விதான் இதில் முக்கியமானதாகும். அதனால்தான் பள்ளிக்கூட கல்விக்கு மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆண்டு முழுவதும் பாடம், படிப்பு, பள்ளிக்கூடம் என்று இயந்திரகதியில் உழன்று கொண்டிருக்கும் மாணவபருவத்தில், ஆண்டுக்கு ஒருமுறை பக்கத்திலேயோ, தூரத்திலேயோ உள்ள இடங்களுக்கு கல்வி சுற்றுலா செல்லும் நிகழ்வுதான் மகிழ்ச்சியையும், பலனையும் தருவதாகும். பொதுவாக பிள்ளைகளை கல்வி சுற்றுலாவுக்காக வெளியூர்களுக்கு அனுப்பிட்டு அவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் பயந்துகொண்டு இருப்பார்கள். ஆனால், பாதுகாப்பான சுற்றுலா பயணத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஒரு சுற்றறிக்கை சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 11 அறிவுரைகள் அடங்கியுள்ளன. முதல் அம்சமே இனி பள்ளிக்கூடங்களில் பாடத்திட்டத்துக்கு தொடர்புள்ளதும், கண்டிப்பாக தேவை என்ற நிலையிலும் மட்டுமே சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வடமாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், அங்குள்ள ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் குளித்துக்கொண்டிருப்பது தெரியாமல் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 24 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்தான் இந்த முடிவுக்கு காரணமாகும். இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க அணைக்கட்டு பகுதிகள், மின்சார உற்பத்தி நிலையங்கள், கடற்கரை பகுதிகள் போன்ற பகுதிகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச்சென்றால், முதலிலேயே மாவட்ட கலெக்டருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும். மாணவர்களுடன் ஒரு மூத்த ஆசிரியர் கண்டிப்பாக செல்லவேண்டும். மாணவிகள் சென்றால் கண்டிப்பாக ஆசிரியைகள் செல்லவேண்டும். எந்த இடத்துக்கு போனாலும் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவரை தங்களுடன் அழைத்துச்செல்ல வேண்டும் என்பதுபோல பல நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான இத்தகைய நடவடிக்கைகள் நிச்சயமாக தேவைதான்.

பொதுவாக மத்திய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை, மாநில அரசுகளும் பின்பற்றுவது வழக்கம். தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் இப்போது கல்வி சுற்றுலா பெருமளவில் குறைந்துவிட்டது. இதுபோன்ற அறிவுரைகளை தமிழக பள்ளிக்கூடங்களும் பின்பற்றவேண்டும் என்பதுதான் கல்வியாளர்களின் கோரிக்கையாகும். தமிழக கல்வித்துறையில் முதல் வகுப்பு முதல் 8–வது வகுப்பு வரைக்கும் உள்ள பாடத்திட்டத்தில் 60 மதிப்பெண்கள் அவர்களின் பாடத்தில் உள்ள கேள்விகளுக்கும், 40 மதிப்பெண்கள் அவர்கள் பார்த்து, நேரடியாக அறிந்து, உணர்ந்து எழுதும் கேள்விகளுக்கும் வழங்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சரித்திர பாடத்துக்கு சரித்திரம் சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்த்து எழுதவேண்டும். தபால் அனுப்பப்படுவது பற்றி எழுத தபால் நிலையத்தின் பணிகளை நேரில் பார்த்து எழுதவேண்டும். ஆனால், பல பள்ளிக்கூடங்களில் இதுபோல இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதில்லை. ‘புராஜக்ட் ஒர்க்’ அதாவது திட்ட வேலை என்று சொல்லி ‘சார்ட்டு’ செய்துவிட்டு வா என்று சொல்லிவிடுகிறார்கள். மாணவர்களும் பெற்றோரை செய்ய சொல்லி வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். அல்லது கடையிலேயே இப்போதெல்லாம் வைத்திருக்கிறார்கள். அங்கு போய் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இதெல்லாம் பயனளிக்காது. எதையும் நேரில் சென்று பார்ப்பதால் அறிவு விசாலம் அடையும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலவச கல்வி, இலவச பாடப்புத்தகம், இலவச சைக்கிள், இலவச லேப்–டாப், இலவச சீருடை என்று எத்தனையோ பொருட்களை இலவசமாகவே அனைத்தையும் தமிழக அரசு வழங்குவதுபோல, மாணவர்களின் நேரடி பட்டறிவுக்கும், அனுபவத்துக்கும் பயனளிக்கும் கல்வித்திட்டம் தொடர்பான இலவச சுற்றுலா பயணங்களையும் ஆண்டுக்கு ஒருமுறை தூர இடங்களுக்கும், அவ்வப்போது அதே ஊரில் உள்ள இடங்களுக்கும் அழைத்துச்செல்வதற்காக ஓரளவு மானியங்களையும், உதவிகளையும் வழங்கவேண்டும். பெற்றோரும், பெற்றோர்–ஆசிரியர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதுபோல மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்வதற்கு பணம் செலவழிக்க தயங்கக்கூடாது. பாடத்திட்டத்திலும் இதை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.

நடப்பது நன்மைக்கே

Dinamani

ஆட்டோ ஒன்றின் பின்புறத்தில், "யாமிருக்க நடை ஏன்?' என எழுதப்பட்ட வாக்கியம் கண்ணில்பட்டது. பக்தி மணம் கமழும் வாசகம் ஒன்றை அடியொற்றி, ஆட்டோ பயணத்துக்கேற்ப வாசகம் எழுதிக்கொண்ட அந்த ஓட்டுநரின் வார்த்தை ஜாலம் ரசிக்கவைத்தது.

சில மாதங்களுக்கு முன்புவரை ஆட்டோக்களில் எவ்வளவு பணம் கேட்பார்களோ என்ற பயத்துடனேதான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் கொஞ்சம் நிம்மதியுடன் ஏற முடிகிறது.

மேலும், ஏறக்குறைய ஆட்டோ கட்டணத்துக்கே அழைத்துச் செல்ல கால் டாக்ஸிகளும் வந்துவிட்டன. இதனால், இப்போதெல்லாம் அடிக்கடி கால் டாக்ஸியில், அதுவும் சில நேரங்களில் ஏசி கால் டாக்ஸியில் பயணம் செய்ய முடிகிறது.

எல்லோருமே நடக்கத் தொடங்கிவிட்டால் ஆட்டோ, கார், கால் டாக்ஸி என தங்கள் வாகனங்களை நம்பி வாழ்க்கை நடத்துவோரின் நிலை திண்டாட்டம்தான்.

இருந்தபோதிலும், ஆட்டோ, கார்களை மட்டுமல்லாமல், இருசக்கர வாகனங்களையும் அவசரத்துக்கோ, அத்தியாவசியத்துக்கோ மட்டும் பயன்படுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் முடிந்தவரை நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதே சாமானிய மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு (பர்ஸூக்கும்) நல்லது.

பொதுவாக, உடல் நலத்துக்குத் தேவையானவற்றை நம்மைவிட்டுத் தள்ளிவைப்பதே பேஷன் என்றாகிவிட்டது. "ஊருடன் ஒத்துவாழ்' என்பதைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், நாமும் சமுதாய ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து நடக்க வேண்டியதாகிவிடுகிறது.

உணவு, உடை, உடல் ஆரோக்கியம் போன்றவற்றில் நன்மை தருபவற்றைவிட, எது பாதகமானதோ அவற்றையே விரைந்து பின்பற்றி நடக்கப் பழகி விடுகிறோம்.

எண்ணெய்ப் பலகாரங்கள், துரித உணவு, எப்போதும் நொறுக்குத் தீனி, எதற்கெடுத்தாலும் குளிர்பானம் என, பெரியவர்கள் உண்பதைப் பார்த்து குழந்தைகளும் அதற்குப் பழகிவிடுகின்றனர். "அடிக்கடி நொறுக்குத் தீனி; ஆரோக்கியத்தை நொறுக்கும் தீனி' என்பதை நாம் எண்ணிப்பார்த்து நடப்பதில்லை.

இளமை முதலே சுறுசுறுப்பாக நடக்காமல், ஒரே இடத்தில் இருந்தே பழகிவிட்டால், முதுமையில் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருத்துவமனையாய் தேடித்தேடி நடக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

அதற்காக, அசை போட்டுக் கொண்டோ, வயிறு புடைக்க உண்டு விட்டோ, காலைக் கடன்களைக் கழிக்காமலோ "கடனே' என நடைப் பயிற்சி மேற்கொள்வது தவறு. முறையான நடைப் பயிற்சியே நல்லது.

நடைப் பயிற்சிக்குச் செல்லும் பலர் தங்களது நாயைத் தங்களுடன் அழைத்துச் செல்வர். சிலர் தங்கள் மனைவியையோ அல்லது நண்பரையோ அழைத்துச் செல்வதுண்டு.

சில தனிமை விரும்பிகளோ தங்களது தொப்பையை மட்டுமே துணைக்கு அழைத்துச் செல்வதுண்டு. நாயும் நண்பர்களும் நாம் அழைத்தால்தான் வருவார்கள். தொப்பையோ அழைக்காமலே கூடவரும்; எது எப்படியாயினும் நடப்பது நல்லது.

நாள்தோறும் நடைப் பயிற்சியில் ஈடுபட்டால் உடல் வலிமை பெறுவதுடன் மனதுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது.

நாள்தோறும் இப்பயிற்சியில் ஈடுபட முடியாதவர்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் நடந்தால்கூட போதுமானது. ரத்த ஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும். நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்வடையும். அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. முதுகு நரம்புகள், எலும்புகள் உறுதிப்படுகின்றன. வயிற்றுத் தொப்பை குறைகிறது.

மாரடைப்பு வரும் அபாயமும், கெட்ட கொழுப்புத்திறனும் சர்க்கரையின் அளவும் குறையும். ஆழ்ந்த தூக்கம் வரும். நல்ல கண் பார்வை கிடைக்கும். எல்லாருமே நாள்தோறும் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் நடக்கலாம்.

காலாற நடப்பதில் இத்தனை நன்மைகள் கிடைக்கின்றன. இத்தனை விஷயங்களையும் பட்டியலிட்டு, நிபுணர்கள் உத்தரவாதம் அளித்த பிறகும் நடைப் பயிற்சியை தொடங்காமலிருக்கலாமா?

ஆனாலும், "நடப்பது நடக்கட்டும், நாம் ஏன் வீணாக நடக்க வேண்டும்' என எண்ணுவோரும் இல்லாமலில்லை. எதுவும் நடந்தபின்னர் நினைத்துத் தவிப்பதைவிட, முன்னெச்சரிக்கையுடன் நடக்கும் முன்பே உணர்ந்து "நடப்பதுதானே' நல்லது?

Sunday, December 14, 2014

பாசமலர், படிக்காதமேதை, பாலும் பழமும் சிவாஜியின் சிறந்த படங்களை இயக்கிய ஏ.பீம்சிங்


சிவாஜிகணேசனின் மிகச்சிறந்த படங்கள் பலவற்றை டைரக்ட் செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர் ஏ.பீம்சிங்.

திருப்பதியை அடுத்த ராயலசெருவு என்ற கிராமத்தில் பிறந்தவர் பீம்சிங். சிறு வயதிலேயே அவர் பெற்றோர்கள் சென்னையில் குடியேறினார்கள். சென்னை புரசைவாக்கம் எம்.சி.டி. முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.

படிப்பை முடித்ததும், "ஆந்திரபிரபா" என்ற தெலுங்குப் பத்திரிகையில் சிறிது காலம் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது, சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது. டைரக்டர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவிடம் உதவியாளராகச் சேர்ந்தார். "எடிட்டிங்" துறையில் பயிற்சி பெற்றார்.

கிருஷ்ணனின் சகோதரி சோனாபாயை பீம்சிங் மணந்தார். பீம்சிங்கின் தங்கையை கிருஷ்ணனின் தம்பி திருமலை திருமணம் செய்து கொண்டார். பிற்காலத்தில் பஞ்சுவின் மகள் சவுமித்ராவை பீம்சிங்கின் மூத்த மகன் நரேன் மணந்தார்.

அம்மையப்பன்

மு.கருணாநிதி வசனம் எழுதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன்-ஜி.சகுந்தலா நடித்த "அம்மையப்பன்"தான் ஏ.பீம்சிங் இயக்கிய முதல் படம். 1954-ல் வெளிவந்த இப்படம், வெற்றி பெறவில்லை. இதற்குப்பிறகு, பீம்சிங் டைரக்ட் செய்த படம் "ராஜா ராணி." இதற்கும் கதை-வசனம் எழுதியவர் மு.கருணாநிதி.

சிவாஜியும், பத்மினியும் ஜோடியாக நடித்தனர். இதில் சிவாஜி நடித்த "சாக்ரடீஸ்", "சேரன் செங்குட்டுவன்" ஆகிய ஓரங்க நாடகங்கள் மிகச்சிறப்பாக அமைந்தபோதிலும், படம் வெற்றிகரமாக ஓடவில்லை. எனவே, பீம்சிங்குக்கு புதிய வாய்ப்பு வரவில்லை.

இந்நிலையில் பீம்சிங், எம்.எஸ்.விசுவநாதன், கதாசிரியர் சோலைமலை, அப்போது தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஜி.என்.வேலுமணி ஆகிய நால்வரும் சேர்ந்து, 1958-ல் புத்தா பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனியை தொடங்கி, "பதிபக்தி" என்ற படத்தை தயாரித்தார்கள்.

சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, சந்திரபாபு, விஜயகுமாரி ஆகியோர் நடித்த இந்தப்படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, பீம்சிங்கின் அதிர்ஷ்ட சக்கரம் வேகமாகச் சுழன்றது. சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் பாகப்பிரிவினை, படிக்காதமேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் என்று "ப" வரிசைப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றன.

இந்திப் படங்கள்

இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களையும் பீம்சிங் டைரக்ட் செய்தார். "களத்தூர் கண்ணம்மா"வை, ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் இந்தியில் எடுத்தனர். பீம்சிங் டைரக்ட் செய்தார். படம் வெற்றி பெற்றது. ஜி.என்.வேலுமணி தமிழில் தயாரித்த "பாகப்பிரிவினை" படத்தின் கதையை வாசுமேனன் வாங்கி, "கான்தான்" என்ற பெயரில் இந்தியில் தயாரித்தார்.

தமிழில் சிவாஜிகணேசன் நடித்த வேடத்தில் சுனில்தத் நடித்தார். பீம்சிங் டைரக்ஷனில் உருவான இந்தப்படம், "சூப்பர் ஹிட்"டாக அமைந்தது. வட நாட்டில் 60 வாரம் ஓடி வசூலைக்குவித்தது. இந்தப்படத்தின் லாபத்தைக் கொண்டு பிலிம் சென்டர் ஸ்டூடியோவை வாசுமேனன் வாங்கி "வாசு ஸ்டூடியோ" என்ற பெயரில் நடத்தினார். (இதே காலக்கட்டத்தில் ஜி.என்.வேலுமணி தயாரித்த "ராஜ்குமார்" என்ற இந்திப் படம் தோல்வியைத் தழுவியது.)

படிக்காத மேதை, முரடன் முத்து ஆகிய படங்களும், பீம்சிங் டைரக்ஷனில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றன.

பழநி

பீம்சிங் சிவாஜிகணேசனை வைத்து, சொந்தமாக "பழநி" என்ற படத்தை எடுத்தார். அவருக்கு ராசியான "ப" எழுத்தில் பெயர் வைத்தும் படம் ஓடவில்லை. இதேபோல், "பாதுகாப்பு" என்ற படமும் வெற்றி பெறவில்லை. இத்துடன், "ப" வரிசைப் படங்களின் பவனி முடிவுற்றது.

சில நேரங்களில் சில மனிதர்கள்

பீம்சிங்கின் பிற்காலப் படங்களில் வெற்றிகரமாக ஓடியது "சில நேரங்களில் சில மனிதர்கள்". இது பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவல். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அகில இந்திய சிறந்த நடிகைக்கான "ஊர்வசி" விருதை லட்சுமி பெற்றார்.

மாரடைப்பில் மரணம்

1977-ம் ஆண்டுக் கடைசியில் பீம்சிங் உடல் நலம் இல்லாமல் இருந்தார். டிசம்பர் 30-ந்தேதி மைலாப்பூர் இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 16-1-1978 அன்று பிற்பகல் 2-30 மணி அளவில் பீம்சிங்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டைக்கு சென்றிருந்த சிவாஜி கணேசனுக்கு, டைரக்டர் பீம்சிங் மரணச் செய்தி, டெலிபோன் மூலம் தெரிவிக்கப்பட்டது. உடனே சிவாஜிகணேசன் சென்னைக்கு விரைந்து வந்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

நடிகைகள் பத்மினி, கே.ஆர்.விஜயா, லட்சுமி, சுமித்ரா, மனோரமா, ஜெயபாரதி, எம்.வி.ராஜம்மா, நடிகர்கள் நாகேஷ், சோ, டைரக்டர்கள் மாதவன், பஞ்சு, இசை அமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ், பட அதிபர்கள் ஜி.என்.வேலுமணி, பெருமாள், அரங்கண்ணல், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஐ.ஜி. ஆபீசுக்கு பின்புறம் உள்ள மயானத்தில் பீம்சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.

குடும்பம்

பீம்சிங்குக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் சோனா பாய். இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்கள். இப்போது புகழ் பெற்ற எடிட்டராக விளங்கும் லெனின், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், பட அதிபர் பி.இருதயநாத், டெலிவிஷன் தொடர்களின் டைரக்டர் கோபி ஆகியோர் பீம்சிங்கின் மகன்கள்.

பீம்சிங்கின் இரண்டாவது மனைவி நடிகை சுகுமாரி. இவருக்கு ஒரே மகன். இவர் டாக்டர்.

போலீஸாருக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் கொடுத்து கொலை கைதி வெளிநாடு தப்பி ஓட்டம்

திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பத்ராக் கோட்டையைச் சேர்ந்த 29 வயதே ஆன சிறைக் கைதி தவமணி, நீதிமன்ற விசாரணைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது போலீஸாருக்கு ரூ.40 லட்சம் கொடுத்துவிட்டு மனைவியுடன் வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டார்.

டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர் பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தவமணி அங்கே சிறைத் துறை அதிகாரிகளின் செல்லப் பிள்ளையாக நல்ல கவனிப் புடன் நாட்களைக் கடத்தி வந்துள்ளார். விசாரணைக்காக நீதிமன்றங் களுக்குச் செல்லும்போது உடன் வரும் போலீஸாருக்கு நல்ல சன்மானம் தவமணி தரப்பி னரால் வழங்கப்படும் என்பதால் இவரை எஸ்கார்ட் எடுக்க போலீஸாரிடையே பலத்தபோட்டி இருக்குமாம்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தவமணி முக்கியக் குற்றவாளி. இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சியில் இருந்து புனே நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது கடந்த நவம்பர் 27-ம் தேதி கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே ரயிலிலிருந்து குதித்து தப்பியோடியதாக அவருக்கு பாதுகாப்புக்காக உடன் சென்ற ஆயுதப்படை எஸ்ஐ இளங்கோவன் உட்பட 5 பேர் திருச்சி போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

5 போலீஸார் பணியிடை நீக்கம்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் நடத்திய விசாரணையில், தவமணியின் மனைவியிடம் ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு அவரை ஆயுதப்படை போலீஸார் தப்பிக்கச் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 5 போலீஸாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காவல்துறை அதிர்ச்சி

இதற்கிடையே தவமணி தப்பிக்க உதவிய ரவுடிகள் 2 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிடித்து திருச்சி மாநகர போலீஸார் விசாரித்தபோது, தவமணி தனது மனைவியுடன் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவல் தெரியவந்ததால் காவல்துறை வட்டாரம் அதிர்ச்சிய டைந்துள்ளது.

டிசம்பர் 7-ம் தேதி மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்று அங்கிருந்து வெளிநாடு சென்றிருக் கலாம் என்று தெரியவந்துள்ள தகவலை மறுப்பதற்கில்லை என்கிறது காவல்துறை வட்டாரம்.

புனே சிறைக்குச் சென்றால், திருச்சியில் கிடைப்பது போன்ற கவனிப்பு கிடைப்பது சந்தேகம் என்ற அச்சத்தாலேயே தவமணி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

வாய்ப்புண் வருவது ஏன்?

Cold sores (also called fever blisters).

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.

யாருக்கு வரும்?

குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.

தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் - மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.

வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.

கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

கிருமிகளின் தாக்குதல்!

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் வருவது வழக்கம்.‘கான்டிடா ஆல்பிகன்ஸ்' (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும். அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.

என்ன சிகிச்சை?

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.

தடுப்பது எப்படி?

வாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்சினை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது. ‘சோடியம் லாரில் சல்பேட்’(Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.

எந்த உணவு முக்கியம்?

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

தொடர்புக்கு: gganesan95@gmail.com

Indian Railways passenger fares likely to go up early next year



The next Rail Budget to be presented early next year could contain a proposal for raising fares to pass on the burden of rising power cost to passengers.

The fuel adjustment component-linked tariff revision due in December will be effected in the Rail Budget in February and there is a need for upward revision as energy cost has gone up by over 4 per cent in the recent months, said a senior Railway Ministry official.

According to Railways’ announced policy, fare and freight revision linked to fuel and energy cost are being done twice a year. The last revision was done in June wherein passenger fares were revised by 4.2 per cent and freight rates by 1.4 per cent.

Hinting at a possible fare hike, new Railway Minister Suresh Prabhu had said at a recent event that “some burden has to be shared by people.”

Asked about the possibility of raising train fares to meet the growing expenses in Railways, Prabhu, known for his pro-reform approach, did not rule out the possibility saying “passenger service should be improved before increasing the fares. Safety cannot be compromised. There is a need for big investment. Some burden has to be shared by people.”

Expressing serious concern over the Railways’ financial health, Prabhu had said it is “too close for comfort” and highlighted the urgent need for massive investment to meet the safety requirement and upgrading in the rail infrastructure.

“Railways requires a big investment. There is no fund for investment. There is a requirement of Rs 6 lakh crore to Rs 8 lakh crore for completion of announced projects,” he had said.

The minister, who is also meeting MPs in batches to make himself aware of their demands and aspirations before the Rail Budget, said to meet these demands, the requirement is about Rs 20,000 crore.

Prabhu, after assuming charge, is learnt to have taken a series of steps to bring the national transporter reeling under massive fund crunch back on the track.

While the cross-subsidisation in passenger sector is hovering around Rs 26,000 crore, there is a fall in passenger bookings too. Passenger bookings have come down during April-November by 1.43 per cent as compared to the corresponding period last year.

The total number of passenger tickets booked during this period were 5581.33 million compared to 5662.54 million in the same period last year, according to Railway Ministry data.

- See more at: http://indianexpress.com/article/india/india-others/indian-railways-passenger-fares-likely-to-go-up-early-next-year/?SocialMedia#sthash.5z4fGZnD.dpuf

தமிழ் சினிமாவின் பெருமிதங்கள்



இந்திய சினிமா என்றால், அது இந்தி சினிமா என்றே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்திப் படங்களைப் பற்றித்தான் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன என்பது அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. தமிழ்ப் படங்களைப் பற்றிய நம்பகமான தகவல் திரட்டுகள் ஆங்கிலத்தில் அதிகம் இல்லை. ராண்டார் கை மட்டுமே தொடர்ந்து ஆங்கிலத்தில் தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதிவருகிறார். தமிழ் சினிமா சரித்திரம்பற்றி தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். சினிமா தயாரிப்பு நிறுவனமொன்றின் தலைவர் ஜி. தனஞ்செயன் சமீப வருடங்களில் அந்தப் பணியைத் தனக்கேயுரிய பாணியில் மேற்கொண்டுள்ளார்.

‘பெஸ்ட் ஆஃப் தமிழ் சினிமா (1931 - 2010)’ என்கிற ஆங்கிலப் புத்தகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார். இப்போது ‘ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா’ (1931 - 2013). தமிழ் சினிமாவின் பெருமிதங்கள். மொத்தமாக 202 திரைப்படங்கள். இதில் அவர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். மத்திய அரசு ஆண்டுதோறும் இரு வகையான படங்களை அங்கீகரித்துவருகிறது: விருதுப் படங்கள், பனோரமா படங்கள். அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் ஒவ்வொரு ஆண்டிலும் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பனோரமா படங்கள் என்பன இந்திய மொழிகளில் தயாரான சிறந்த பரிசோதனை முயற்சிகளும் கலைப் படங்களும் ஆகும். இவ்விரண்டு பிரிவுகளிலும் தேர்வான மொத்தத் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை இதுநாள்வரை 163.

விருதுகள் வழங்கப்படுவதற்கு முன்பாக வெளிவந்த படங்களை விட்டுவிடக் கூடாது என்கிற கவனத்துடன், 1931-லிருந்து 1953 வரையிலான படங்களில் தகுதிக்குரிய 39 படங்களையும் இணைத்திருக்கிறார். புத்தகத்தின் தோற்றுவாயிலில் தமிழ் சினிமா முன்னோடிகளை நினைவுகூர்கிறார். தனிமனித ஆவணக் காப்பகமாகச் செயல்பட்டுவரும் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனையும் இணைத்திருப்பதற்காக அவரைத் தனியாகப் பாராட்டலாம்.

படங்களைப் பற்றிய அனைத்துத் தரப்புத் தரவுகளையும் ஒருங்கிணைத்துத் தருகிறார். படம் பற்றிய அறிமுகம், கதைச் சுருக்கம் அதன் தனிப்பெரும் சிறப்புகள், அது ஏற்படுத்திய பாதிப்புகள், நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் முக்கிய பாடல்கள், இயக்குநர் பற்றிய குறிப்பு, சுவாரசியமான கொசுறுத் தகவல்கள் ஆகிய உப தலைப்புகளைக் கொண்ட கட்டுரையாக ஒவ்வொரு படமும் முன்னிறுத்தப்படுகிறது. படத்தின் ஸ்டில்களுடன் போஸ்டரும் தரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் போஸ்டர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபடுபவர் களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம்.

விருது மற்றும் பனோரமா படங்களை மட்டுமே இதில் எடுத்துக்கொண்டுள்ளதால் அந்த வரை யறைக்குள் வராத படங்களைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இந்தத் தேர்வில் வேறு பல அனுகூலங்கள் நிகழ்ந்துள்ளன. சினிமா விமர்சகர் களும் ஆய்வாளர்கள் பலரும் மாற்றுப் படங்களை அலட்சியப்படுத்திவிடுவதால் மல்லி, உச்சிவெயில், ஜமீலா, ஊருக்கு நூறு பேர், நண்பா நண்பா, ஒருத்தி, செங்கடல் போன்ற படங்கள் மக்களின் கவனத்துக்கு வருவதில்லை. தனஞ்செயன் முழு நீள மாற்றுப் படங்களை மட்டுமின்றி விருது பெற்ற குறும்படங்களையும் சினிமா புத்தகங்களையும் ஆய்ந்து எழுதியுள்ளது முன்னுதாரணச் செயலாகும். தமிழ்ப் படங்களைப் பற்றி மட்டுமின்றி, பிற மொழிப் படங்களைப் பற்றியும்கூட ஆங்கிலத்தில் இவ்வளவு விரிவான தளத்தில் ஒரு புத்தகம் வெளிவந்ததில்லை. அச்சாக்கமும் வடிவமைப்பும் சிறந்த தரத்துடன் விளங்குகின்றன.

தாஷ்கண்டு பட விழாவுக்கு ‘பராசக்தி’ படத்தை அனுப்பக் கூடாது என்று அதன் வசனகர்த்தா மு. கருணாநிதி தடுத்தது, தடை உத்தரவு பெற்றிருந்த ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படத்துக்குக் குடியரசுத் தலைவரின் விருதைப் பெறுவதற்காக நீதிமன்றத் திலிருந்து அதற்கான உத்தரவு நீக்கம் பெற்று, சிரிபோர்ட் ஆடிட்டோரியத்துக்குத் தயாரிப்பாளர் எஸ். ரங்கராஜன் விரைந்தது போன்ற பல அறிந்தும் அறியாததுமான தகவல்களைக் ‘கொசுறு’ தலைப்பின் கீழ் தனஞ்செயன் தருகிறார். இப்புத்தகத்தின் சிறப்பான பகுதிகளில் ஒன்று இது.

ஆங்காங்கே பிழைகள் தென்படுகின்றன. இயக்குநர் நிமாய் கோஷுக்குப் பதிலாக யாரோ ஒருவரின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1936-ல் ‘தியாக பூமி’ வெளிவந்தவுடன் அது தடை செய்யப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், படம்

1944-ல்தான் தடை செய்யப்பட்டது. ‘அக்கிரகாரத்தில் கழுதை’ படம் தடை செய்யப்பட்டது என்பதும் தவறு. தூர்தர்ஷனில் ஒளிபரப்பத்தான் தடை ஏற்பட்டது. படம் தடை செய்யப்படவில்லை. இப்புத்தகம் தமிழிலும் விரைவில் வெளிவர விருக்கிறது. சிறப்புக் கவனம் பெற்ற தமிழ்ப் படங்களை தமிழர்கள் அல்லாதவர் மத்தியில் ஆங்கிலத்தின் வழியாக இத்தனை விமரிசையுடன் கொண்டுசென்றது மிக முக்கியமானது.

- அம்ஷன் குமார்
திரைப்பட ஆவணப்பட இயக்குநர்,
எழுத்தாளர்
தொடர்புக்கு: amshankumar@gmail.com

அலைப்பேசி எண்: 8754506060

ப்ரைடு ஆஃப் தமிழ் சினிமா (1931 - 2013)
(ஆங்கிலம்) ஜி. தனஞ்செயன்.
ப்ளு ஓஷன் பப்ளிஷர்ஸ்,
நியூ செகரடேரியட் காலனி மெயின் தெரு,
கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010.
பக்கங்கள் 594, A4 தாள், கெட்டி அட்டைக் கட்டு,
விலை ரூ. 1,500

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...