Tuesday, December 16, 2014

SYDNEY HOSTAGE CRISIS ENDS, GUNMAN, 2 OTHERS KILLED


A 17-hour-long hostage drama in which a lone heavily-armed man of Iranian-origin held 17 people hostage at a cafe here ended late tonight with the police storming it, resulting in three deaths but two Indians who were among the captives escaped safely.

Police fired stun grenades and shots as they stormed the Lindt Chocolate Cafe in Sydney’s commercial district after 2:30 AM local time Tuesday (9 PM IST Monday) and later declared that the siege was over.

The 50-year-old gunman Man Haron Monis and two hostages were killed and four other people were injured, Commissioner Andrew P Scipione of the New South Wales(NSW) police said at a joint news conferencewith the state Premier Mike Baird at 5.45 AM local time.

The gunman was shot and pronounced dead after being taken to hospital, NSW police said in a statement.

Two hostages -- a 34-year-old man and a 38-year-old woman -- were also pronounced dead after being taken to hospital, it said.

A police officer was among the four injured, police said.

The gunman, a self-styled Muslim cleric, was described by his former lawyer as an isolated figure, who was acting alone.

Two Indian nationals -- Vishwakant Ankit Reddy and Pushpendu Ghosh -- were among the hostages involved when Monis began his siege. However, Reddy, an Infosys employee in his mid-30s, and Ghosh, whose details were not known, escaped safely.

Reddy has been working in Australia for the past seven years and is a native of Guntur in Andhra Pradesh.

Both are undergoing medical check-ups, External Affairs Minister Sushma Swaraj said in New Delhi.

Monis, who arrived in Australia as a refugee in 1996, notoriously sent letters to the families of Australian soldiers who lost their lives in Afghanistan, accusing them of being murderers.

In November last year, he was charged with being an accessory before and after the murder of his ex—wife, who was allegedly stabbed and set alight in her apartment complex. In March, he was charged with sexually and indecently assaulting a young woman in 2002.

Baird called the attack “horrendous and vicious”.

Five to six hostages, including the Indian techie, were seen running out of the eatery before the police raided the cafe. Earlier in the day, just over five hours into the siege, five people, including a woman, had escaped from the cafe.

“It was the act of an individual. This should never destroy or change the way of our life,” Scipione said.

The gunman, a “selfstyled sheikh”, was described by his former lawyer as an isolated figure.

A “critical incident investigation” into the operation that ended the siege has been launched, police said.

“About 2:10am (Tuesday), a confrontation occurred between police and a man who had taken a number of people hostage inside a cafe on Martin Place,” the police statement said.

“Shots were fired during the confrontation. As a result, the 50-year-old man was pronounced dead after being taken to hospital,” it said.

Two women were taken to hospital with non-life threatening injuries and a third woman was taken to hospital with a gunshot wound to her shoulder.

A male police officer suffered a non-life threatening wound to his face from gunshot pellets and was in hospital.

A 35-year-old woman was also taken to hospital as a precaution, the statement said.

Police confirmed no explosives were found at the cafe.

Police raided the cafe after they heard a number of gunshots from inside, Scipione said.

“They made the call because they believed that at that time, if they didn’t enter, there would have been many more lives lost,” he said.

“Until we were involved in this emergency action, we believe that no one had been injured. That changed. We changed our tactic,” Scipione said, adding that all 17 hostages had been accounted for.

“Sydney siege is over,” New South Wales police tweeted minutes after loud bangs and gunshots were heard as police stormed the cafe in Martin Place here, close to the Indian Consulate which was closed as result of the siege.

The siege began after 9 AM local time as Monis, who was granted political asylum in Australia, took the people captive.

Although the Indian cricket team is currently in Brisbane, some 700 kms away from Sydney, security around them was also significantly beefed up in the wake of the hostage crisis.

Australian authorities conveyed to the Indian government that the team’s security has been enhanced.

The gunman was reportedly armed with a shotgun and made a series of demands through Australian media like the delivery of an Islamic State flag and a conversation with Australian Prime Minister Tony Abbott.

During the siege, television footage showed people inside the cafe with their hands pressed against the window holding the black flag with Arabic script known as Shahadah, a prayer spoken in mosques daily. The flag displayed was not one specific to the Islamic State terror group, reports said.

“There is no God but Allah; Mohammed is his messenger” was written on the black flag.

HARROWING HOURS AS SYDNEY HELD ITS BREATH

An account of the Sydney hostage crisis from the vicinity of the Lindt Cafe

Monday morning started off as a normal, bright summer day at Martin Place, the gently sloping civic centre of Sydney which is a pedestrian plaza, with the Reserve Bank of Australia (RBA) at the upper (east) end and the erstwhile GPO and WWI Cenotaph at the bottom (west) end. The Lindt Café is a popular meeting place close to the RBA and just opposite the city studio of Channel 7 TV.

My colleague Ben Robinson was caught up in the events that unfolded.

“Just as my bus was approaching Martin Place, a police car went past at speed with the sirens on. This was just as the gunman was first engaged by police at about 9:50 a.m.,” he said.

“When I got off 30 seconds later, 50 metres from Lindt Café, the police had blocked the intersection, and were stopping pedestrians from crossing the street. At that stage there was no blockage of Martin Place and police had only just arrived on scene. I saw a small huddle of police standing outside Chambers Bar across the street from me, which they were using as a safe vantage point. Several police were closer to the café, but they then withdrew back to Chambers Bar with guns drawn.

“An officer in black police gear then told me and other onlookers, ‘You’d better move away. You’re in danger right now just standing here. You could be shot at any moment’.”

“I was in one of the last buses to get through; they started locking down Martin Place straight away. By the time I got to the office, about five blocks away, the city was in lockdown,” Mr. Robinson said.

For me, the first indication that anything was wrong was when office administration rushed in and told us that they had been advised that the Central Business District (CBD) was in lockdown, and that none of us was to leave the office until further notice. There was stunned silence.

We were told that the after-hours building access control had been activated, so only those with valid electronic passes could get in to the building.

Across the office, disbelief was quickly followed by dismay that this was happening in Sydney as the news came in of the hostage situation at the Lindt Café and images of the black flag with Arabic script and employees pressed against the glass appeared on Internet news and the TV.

We heard other reports — of possible bomb threats in other parts of the city; of an arrest the Australian Federal Police had made in Beecroft, a Sydney suburb, that morning of someone suspected of being involved in a terror attack on Sydney; and there having been an evacuation at the Sydney Opera House as a suspicious package had been found.

Then came the news of the iconic Harbour Bridge being shut and flights being diverted from overflying the city. The normally busy roads around the office had little or no traffic and only pedestrians could be seen. Toward midday, more details emerged with broadcasts by the State Premier and the police chief respectively on the events so far and the measures being taken, and the Prime Minister describing the incident as ‘profoundly shocking’.

By 1:30 p.m. the lockdown was lifted and the Harbour Bridge had reopened, but there were major traffic disruptions as several roads in and around Martin Place had been cordoned off.

We left under police escort. I was not sure I could get my car from the parking lot at Martin Place, and close to the spot under siege, until I went there and found police were letting cars already in the area to leave.

The trains were running but Martin Place station was shut and buses were being rerouted with long queues at some bus stops. There were police blocks and barricades around the city centre.

It was no illusion.

(Meghnad Krishnaswamy is an associate director with Cognizant Technology Solutions Australia)

PRESS NOTE BY MHRD...


Source: CBSE website 

இப்படியும் ஒரு கலைஞன்' - ரகுவரன்

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில்

சென்னையின் தரமணியை இன்று ஐடி காரிடார் என்று அழைக்கிறார்கள். ஆனால் அதன் அழுத்தமான அடையாளம் அரசுத் திரைப்படக் கல்லூரி. அது அபூர்வமாகக் காணக் கிடைக்கிற பல கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகத்துக்குக் கொடுத்திருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் ரகுவரன்.

அந்தத் திரைப்படக் கல்லூரிக்கு வருகை தரும் பேராசிரியராக இருந்தவர் கே. ஹரிஹரன் புனே திரைப்படக் கல்லூரியில் இயக்கம் பயின்றவர், ஆற்றல் மிக்க திரை விமர்சகர், எழுத்தாளர், பல இந்திய மொழிகளில் அழுத்தமான படைப்புகளைத் தந்த இயக்குநர் என அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட ஆளுமை. இலக்கியத்தையும் தமிழ் சினிமாவையும் இணைக்க முயன்ற இவர் தனது இரண்டாவது தமிழ்ப் படமாக ‘ஏழாவது மனித’னை இயக்கினார். கதையின் நாயகனை அவர் தேடியபோது திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிலும் மாணவர்களில் ஒருவருக்கே அந்த வாய்ப்பைக் கொடுக்க விரும்பினார்.

அதனால் தரமணிக்கு வரும்போதெல்லாம். நடிப்பு பயிற்சி வகுப்புகள் முடிந்து போய்க்கொண்டிருந்த மாணவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார். ஏழடி உயரத்தில், ஒல்லி உடலோடும், தீர்க்கமான கண்களோடும் போய்க்கொண்டிருந்த ரகுவரன் அவரது கண்களில் பட அவரை அழைத்தார் ஹரிஹரன். அவரை ஏற்கனவே அறிந்திருந்த ரகுவரன் அருகே சென்று வணக்கம் சொன்னார். இவன்தான் நமது நாயகன் என்று அந்த நிமிடத்தில் முடிவு செய்த ஹரிஹரன் ‘ ஏழாவது மனிதன்’ படத்தில் நடிக்க உனக்கு விருப்பமா என்று கேட்டார்.

“நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு நடனமும் தெரியாது, சண்டை போடவும் வராது. கண்டிப்பாக இவை இரண்டுமே உங்கள் படத்தில் இருக்காது என்று தெரியும்” என்றார். அந்தக் கணமே ரகுவரனின் நேர்மை ஹரிஹரனுக்குப் பிடித்துப் போய்விட்டது. ரகுவரனைப் பற்றி அதே கல்லூரியில் படித்த இயக்குநர் ராஜேஷ்வரும், அருள்மொழியும் ஏற்கனவே ஹரிஹரனிடம் சொல்லியிருந்தார்கள்.

சரியான ஆளைத்தான் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டார் ஹரிஹரன். நடிப்பு பயிற்சியில் சேர்ந்து ஆறு மாதங்களே முடிந்திருந்த நிலையில் அறிமுகப் படத்திலேயே பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் அமைந்தது ரகுவரனுக்கு. தனது கிராமத்தைச் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாக்கும் சிமெண்ட் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடும் கோபக்கார இளைஞன் கதாபாத்திரம்.

அந்தத் தொழிற்சாலையில் மேலதிகாரியாக இருந்துகொண்டே, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகப் போராடும் மனசாட்சியுள்ள இளைஞன்; ஒரு கண்ணியமான காதலன். அந்தக் கிராமத்தின் ஆற்றில் தவழ்ந்து செல்லும் பரிசலில் காதலி அமர்ந்திருக்க அவரைவிட்டு சற்றுத் தள்ளி அமர்ந்தபடி, பாரதியின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தாலா’ எனப் பாடியபடி செல்லும்போது அவரது உடல்மொழி ஈரம் காயாத களிமண் தன்மையோடு பார்வையாளர்கள் மனதில் பசுமையாக ஒட்டிக்கொண்டது.

ஆனால் உலகப்பட விழாக்களில் கவுரவிக்கப்பட்ட ‘ஏழாவது மனித’னுக்கு (1982) தேசிய, மாநில விருதுகள் கிடைத்தது மட்டுமல்ல, ரகுவரன் எனும் உயர்ந்த கலைஞனைத் தமிழ் சினிமாவுக்குத் தனித்து அடையாளம் காட்டியது. இதன் பிறகு ‘ஆர்ட் பிலிம் ஆக்டர்’ என்ற முத்திரை ரகுவரன் மீது விழுந்தாலும், கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்தும் கதாநாயகனாக அவரது கலைப் பயணம் தொடங்கியது.

திரைப்படக் கல்லூரி சினிமா பற்றி அள்ளிக் கொடுத்த அறிவும் அங்கே கிடைத்த நண்பர்களின் அன்பும் ரகுவரனை மாறுபட்ட வசன உச்சரிப்பும், தேர்ந்த உடல்மொழியும் கொண்ட ரசனையான கலைஞனாக உருவாக்கியிருந்தன. கதாநாயகனாக அறிமுகமான அடுத்த ஆண்டே ‘சில்க் சில்க் சில்க்’ என்ற படத்தில் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்தார். இது கிட்டத்தட்ட வில்லன் வேடத்துக்கு நெருக்கமானது என்று சொல்லிவிடலாம். இதனால் ரகுவரனை வில்லனாகவும் தேர்ந்துகொள்ளத் தொடங்கியது தமிழ் சினிமா.

நாயகன், வில்லன் என்று தொடக்கத்தில் மாறி மாறிப் பயணித்த ரகுவரன் நடித்து 1986-ல் வெளியான படம் மந்திரப் புன்னகை. வில்லனாக நடித்து நாயகன் அந்தஸ்து பெற்ற சத்யராஜ் நடித்த இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார் ரகுவரன். இப்படி ஆச்சரியகரமான பல முரண்களைக் கொண்டது ரகுவரனின் திரைப்பயணம். அதுவரை தமிழ் சினிமாவில் வில்லன் வேடங்கள் என்றாலே பெரும்பாலும் தன் புஜபலம் காட்டும். காது கிழியும் அளவுக்குக் கத்திப் பேசி, கூலிப்படை திரளாகக் கையில் மிரட்டும் ஆயுதங்களோடு திரையைக் கிழித்துக்கொண்டு மிரட்டும்.

ஆனால் அளவாகவும் தேவைப்படும் இடங்களில் மிகையாகவும், கூர்மையான பார்வையை முன்னிறுத்தி வசன உச்சரிப்பிலும் சிரிப்பிலும் எதிர்மறைப் பாத்திரத்தின் நோக்கத்தைப் புதிய வடிவத்துக்குள் வார்த்துக் கொடுத்தார் ரகுவரன். கிழிந்து தொங்கும் கிளிஷேவாகிவிட்ட வில்லன் கதாபாத்திரங்களுக்குப் புதிய அடையாளம் கிடைத்தது. இப்படி இளம் கிளாசிக் வில்லனாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் கதையின் நாயகனாகப் பொருந்திக் காட்டிய நடிகராகவும் இருந்த ரகுவரனைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இயக்குநர் ஆர்.சி சக்தியின் ‘கூட்டுப் புழுக்கள்’ படத்தில் வேலையில்லா ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் இயலாமை, கோபம், ஏக்கம், கையறுநிலை, காதல் ஆகிய நுண்ணுணர்வுகளை ரகுவரன் தனது உடல்மொழியின் வழியாக வெளிப்படுத்திய விதம் கதாபாத்திரத்துக்கு மிகவும் நேர்மையாகவும் நெருக்கமாகவும் இருக்கும். ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களிலிருந்து விலகியும் விலகாமலும் முழுநீளக் குணசித்திரக் கதாபாத்திரங்களில் அதிக ஆர்வம் காட்டியபோது அவருக்குப் போதும் போதும் என்கிற அளவுக்கு வாய்ப்புகள் குவிந்தன.

வில்லன் கதாபாத்திரங்கள் வழியே எத்தகைய வெறுப்பையும் தமிழ் ரசிகர்களிடம் சம்பாதித்துக்கொள்ளாத ரகுவரன், தான் ஏற்ற குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கு அழுத்தமான பரிமாணத்தை வழங்கினார். இப்படியும் ஒரு கலைஞன் என்று பாராட்டும் விதமாக இயல்பும் எளிமையுமாக அத்தகைய கதாபாத்திரங்களைக் கண்முன் நிறுத்தினார். அவரது கதாபாத்திரங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் இங்கே இடம் போதாது.

சம்சாரம் அது மின்சாரம், லவ் டுடே, முதல்வன் என்று இடைவெளியின்றி தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்த ரகுவரன், தென்னிந்திய மொழிகளைத் தாண்டி இந்திப்பட உலகிலும் கால் பதித்தார். ராஜீவ்மேனன் இயக்கத்தில் வெளியான ‘கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்’ திரைப்படத்தில் ஒரு ஐடி நிறுவனத்தில் உயரதிகாரியாக வருவார்.

கறாரும் கனிவும் கலந்த ஒரு சித்திரத்தை அந்தப் பாத்திரத்துக்கு வழங்கியிருப்பார் ரகுவரன். மொத்தப் படத்திலும் பத்து நிமிடங்கள்கூட இல்லாத அந்தக் கதாபாத்திரம் முதன்மைப் பாத்திரங்களை மீறி நினைவில் நிற்க ரகுவரன் எனும் கலைஞனின் ஆகிருதியே காரணம். திரைநடிப்புக்கு வெளியே கவிதை வாசிப்பு, இசையமைப்பு இரண்டிலும் ஆர்வம் கொண்டிருந்த ரகுவரன், தலைமுறைகளைத் தாண்டியும் ஆகர்சிக்கும் அபூர்வக் கலைஞன். டிசம்பர் 11 அவரது 56 வது பிறந்த தினம்.

வாழ்க்கையை அழகாக்கும் முதுமை



துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது.

“வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார்.

உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன.

20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களிடம் தம்மைப் பற்றிய உயர்வான எண்ணமும் அந்த வயதுக்கே உரிய கர்வமும் நிறைந்திருக்கின்றன.

30 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களிடம் அத்தகைய தற்பெருமை படிப்படியாக மறைந்து, கலக்கமும் கவலைகளும் லேசாக இடம்பெறத் தொடங்குகின்றன.

50 வயதுக்கு மேல் மூளையின் செல்கள் சிதையத் தொடங்குகின்றன. மூளையின் செயல்பாடுகள் மந்தமாகின்றன. தீவிரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சுரப்புகளின் உற்பத்தி குறைகிறது. மனதில் அமைதியும் நிறைவும் ஆசையின்மையும் நிறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 80 வயதை எட்டியவர்களின் மனதில் சுய மதிப்பீடும் சுயாபிமானமும் உச்சத்தை எட்டுகின்றன. ‘இவ்வளவு நாள் வாழ்ந்ததே சாதனை’என்ற பெருமிதம் உண்டாகிறது. அதன் பிரதிபலிப்பு முகத்தில் மகிழ்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் வெளிப்படுகிறது. கடுமையான வியாதிகளும் வலி - வேதனைகளும்கூட அவர்களுடைய மனநிலையைக் குறைந்த அளவே குலைக்கின்றன.

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பலருக்கு, ‘இனிமேல் அதிகாலையில் எழுந்து, அரக்கப்பரக்கக் காலக்கடன்களை முடித்துக்கொண்டு, பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க அவசர அவசரமாக ஓட வேண்டிய அவசியமில்லை’என்ற எண்ணமே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஊட்டுகிறது. வருமானம் குறைந்துவிட்டதே என்ற கவலைகூட ஓரளவுக்கு மேல் வருத்துவதில்லை.

புகைப்பட ஆய்வு

ஒரு கூட்டத்தின் ஒளிப்படத்தை இளைஞர்களிடம் காட்டியபோது, அவர்களின் முகங்கள் ஆர்வமில்லாமல் சற்றே சுருங்கின. அதே படத்தை முதியோர்களிடம் காட்டியபோது மலர்ந்த முகத்தோடு மகிழ்ச்சியாக அதை உற்றுப்பார்த்தனர். வயதானவர்களுக்கு துக்கங்களும் கவலைகளும் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வாழ்க்கைத் துணையை இழக்கும் இளவயதினரைப் போல முதிய வயதினர் துயரத்தில் மூழ்கி நிலைகுலைந்துபோவதில்லை.

தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அச்சமும் முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை. வறுமையும் தனிமையும்கூட அவர்களை அச்சுறுத்துவதில்லை. வாழ்க்கை இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர். முயன்றாலும் முடியாது என்ற இயலாமைகுறித்த முழுமையான புரிதலாலும், இனி கவலைப்பட்டு ஏதும் சரியாகிவிடாது என்ற பக்குவத்தாலும் அவர்கள் எளிதில் இயல்புநிலைக்கு வந்துவிடுகிறார்கள். கவலைகள் குறைகின்றன. மகன், மகள் ஆகியோருக்கு இனி தங்களுடைய ஆதரவும் அரவணைப்பும் அவசியமில்லை என்ற யதார்த்தமும் பலருக்குக் கவலைகளைக் குறைத்துவிடுகின்றன. தங்களுடைய குழந்தைகளில் சிலரின் வாழ்க்கை சரியாக இல்லாவிட்டால், ஆரம்பத்தில் கவலைப்படும் முதியவர்கள் காலப்போக்கில், அது அவர்களுடைய தலையெழுத்து என்று கவலையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர்.

மன இறுக்கம் இல்லை

ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும், பெரும்பான்மையான முதியவர்கள் மன இறுக்கத்தில் வாழ்வதில்லை. இன்றைய பொழுது நல்ல பொழுதாகக் கழிந்தால் போதும் என்று நினைக்கும் முதியவர்கள், ‘நாளைய பொழுது நம்மிடம் இல்லை’என்று விட்டுவிடுகிறார்கள். பேரக் குழந்தைகளின் முத்தம், கொள்ளுப்பேரன், பேத்திகளின் ஸ்பரிசம் போன்றவை மூளையில் ஆக்சிடோசின் என்ற ரசாயனத்தின் சுரப்பை அதிகப்படுத்துவதால் மெய்ம்மறந்து ரசித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

உடலுக்கு ஏற்படும் மூப்பு வேறு, உணர்வுகளுக்கு ஏற்படும் மூப்பு வேறு. அவை இரண்டும் ஒன்றல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். வயதாக வயதாக உடல் வலுவிழப்பதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே சமயம், சிறிய செயல்கள்கூட அவர்களுக்கு அதிகமாக மகிழ்ச்சியை அளிக்கின்றன. “நான் இளைஞனாக இருந்தபோது வரைந்த ஓவியத்தைவிட 70 வயதான பிறகு படைத்த ஓவியங்கள்தான் பன்மடங்குச் சிறப்பாக அமைந்தன” என்றார் ஒரு பிரபல ஓவியர். அதற்கு அவருடைய அனுபவமும் நீண்டகாலப் பயிற்சியும்கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.

துயரக் கணைகள் துளைப்பதில்லை

அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர், தம்மை நோக்கி வரும் வேகப் பந்துகளை வெகு சாமர்த்தியமாகத் திருப்பிவிடுவதைப் போல முதியவர்கள் தங்களை நோக்கி வரும் துயரக் கணைகளை எளிதாகத் திருப்பிவிடும் வல்லமை பெற்றுவிடுகிறார்கள். பெற்றோருக்கு நடுத்தர வயதாக இருக்கும்போது பதின்ம வயதுள்ள குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள் சிறிது காலம் கழித்துக் குறைந்துவிடுகிறது. பெற்றோர், குழந்தைகள் என்று இரு தரப்பாருக்குமே வயது அதிகமாவதால் முதிர்ச்சியும் மனப் பக்குவமும் அதிகமாகிறது. முதுமைக் காலத்தில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் நண்பராகவும் இருப்பது எளிதாகிவிடுகிறது.

பிள்ளைகளின் சிந்தனைகளையும் செயல்களையும் பற்றற்ற கண்ணோட்டத்திலும், பற்றுள்ள பார்வையுடனும் ஒரே நேரத்தில் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. தன்னிடம் ஆலோசனை கேட்டால் மகிழ்ச்சியடைகிறார்கள். கேட்காவிட்டால் கோபமோ வருத்தமோ படுவதில்லை.

அப்பா, அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வோம் என்று பிள்ளை தன் மனைவியிடம் சொல்வது காதில் விழுந்தாலே பெற்றோர் மனம் பூரித்துவிடுகிறது. குடும்ப விவகாரங்களில் முழுமையாகப் பங்கேற்பது அல்லது வெறும் பார்வையாளராக இருப்பது ஆகிய இரண்டுமே சாத்தியமாகிறது. நிதானம் சார்ந்த கிட்டப்பார்வையும் அனுபவம் சார்ந்த தொலைநோக்குப் பார்வையும் முதியவர்களுக்கு ஏக காலத்தில் வாய்க்கின்றன.

வயது முதிர முதிர தோல்விகள் மற்றும் இழப்புகளின் வெம்மை பெரியவர்களிடத்தில் கூர் இழந்துவிடுகிறது. அற்ப விஷயத்துக்கெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற நிதானம் வந்துவிடுகிறது. பலனை எதிர்பாராதே, கடமையைச் செய் என்றில்லாமல் - பலன் அதிகமா குறைவா என்று பார்த்துச் செய் என்கிற பக்குவம் வந்துவிடுகிறது. தனித்திறமைகளின் தரம் கூடுகிறது. கவிஞர்களுக்குச் சொல் வளமும் ஆளுமையும் மெருகேறுகின்றன. எழுத்தாளர்களின் படைப்புகளில் தீவிரத்தன்மை குறைந்து கருத்தாழமும் சொற்சிக்கனமும் கைவசப்படுகின்றன.

வயதால் கனியும் மருத்துவர்கள்

டாக்டர்கள் வயதாக வயதாக அதிக சோதனைகளுக்கு அவசியமில்லாமல் நோயின் தன்மை, தீவிரம் போன்றவற்றைக் கணித்துவிடுகிறார்கள். நோயாளியிடம் பரிவும் கனிவும் அதிகமாகிறது. ஆசிரியர்களும் பேராசிரியர்களும் வயது அதிகமானால் கண்டிப்பைக் குறைத்துக்கொண்டு, மாணவர்களின் குறும்பை ரசிக்கும் பக்குவத்தை அதிகம் பெற்றுவிடுகிறார்கள். மேலதிகாரிகளில் பலர், மிடுக்கையும் அதிகார தோரணையையும் குறைத்துக்கொண்டு, சகாக்களின் சிறிய தவறுகளை மன்னித்து, தக்க ஆலோசனைகளைக் கூறத் தொடங்குகிறார்கள். பழைய விரோதங்கள் மறக்கப்படுகின்றன, பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன.

வாழ்க்கைப் பயணம் நீள நீள ஆங்காங்கே சுமைகள் கழிக்கப்பட்டுப் பயணிப்பது எளிதாகிறது. வயதாக வயதாகப் பல விஷயங்கள் மறந்துபோவது பெரிய பிரச்சினையாகத் தெரிவதில்லை. வயதாகிவிடுகிறபோது எது, எப்படி, எந்த வகையில் நடக்கும் என்கிற புரிந்துணர்வு ஏற்படுகிறது. சின்ன வயதில் நாமும் அப்படித்தானே இருந்தோம் என்னும் நினைவு இளையவர்களிடம் பரிவுகாட்ட வைக்கிறது. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அவசரம் குறைந்து நிதானம் கூடுகிறது.

தமது எதிர்காலத்தைப் பற்றி முதியவர்கள் சிந்தனைகூடச் செய்வதில்லை. அவர்களுக்குத் தற்காலம்தான் நிதர்சனம். உடம்பு முடியவில்லையா, ஓய்வு எடு. நடக்க முடியவில்லையா, உட்காரு. உட்காரக்கூட முடியவில்லையா, படுத்துக்கொள். இதுதான் அவர்களுடைய கொள்கை. உற்றார் உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அந்தக் கடமைகளையெல்லாம் இளைய தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.

ஓவியர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் முதுகிழவர்களையும் தொண்டு கிழவிகளையும் தேடிப் பிடித்துப் படமாக்குவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும். அந்த முகங்களில் அமைதியையும் கருணையையும் அழகையும் அவர்களால் எளிதில் அடையாளம் காண முடிந்திருக்கிறது.

- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

கோபுர அதிர்வுகள்!



எந்தவோர் அறிவியல் கண்டுபிடிப்பிலும் ஏதாவது ஒரு பின்விளைவு இருக்கத்தான் செய்யும். அந்தப் பின்விளைவு ஏற்படுத்தும் பாதிப்பு மிகப்பெரிய ஆபத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் என்றால், அந்த அறிவியல் கண்டுபிடிப்பைத் தவிர்ப்பது அல்லது அதன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது என்பதுதான் விவேகம்.

அந்தப் பட்டியலில் சேர வேண்டிய கண்டுபிடிப்பு, தற்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள செல்பேசியும், அதற்காக நிறுவப்படும் செல்பேசி கோபுரங்களும்!

உலகிலேயே அதிகமான செல்பேசி பயன்படுத்தும் இரண்டாவது நாடு இந்தியாதான். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கடந்த பிப்ரவரி 2013 புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 86.16 கோடி செல்பேசி பயனாளிகள் இருக்கிறார்கள். இப்போது இந்த எண்ணிக்கை 100 கோடியை எட்டியிருந்தால் வியப்படையத் தேவையில்லை. இந்திய அளவில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் செல்பேசி பயன்படுத்துவோர் உள்ள மாநிலம் தமிழகம்தான்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சென்னையின் மக்கள்தொகை 46 லட்சம். ஆனால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2013-இல் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, சென்னையில் மட்டும் 1.15 கோடி செல்பேசி இணைப்புகள் செயல்படுகின்றன. தில்லிக்கு அடுத்தபடியாக அதிக செல்பேசி இணைப்புகள் உள்ள பெருநகரம் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பேசி இணைப்புகளும் பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்றாற்போல செல்பேசி கோபுரங்களும் அதிகரிப்பது என்பது தவிர்க்க இயலாதது. சென்னை மாநகர எல்லைக்குள் ஏறத்தாழ 6,650 செல்பேசி கோபுரங்கள் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும், முறையான கணக்கெடுப்பு எதுவும் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தொலைத்தொடர்புத் துறையில், செல்பேசி கோபுரங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க "டெர்ம்' என்கிற தனிப் பிரிவு இயங்குகிறது. செல்பேசி கோபுரங்கள் முறையாக அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அவற்றிலிருந்து வெளியாகும் மின்காந்த அலை

களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு உள்பட்டு இருக்கிறதா என்பதை எல்லாம் கண்காணிக்க வேண்டிய கடமை இந்தப் பிரிவுக்கு உண்டு. ஆயிரக்கணக்கான செல்பேசி கோபுரங்கள் இருக்கும் சென்னை மாநகரில், "டெர்ம்' பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 11 மட்டுமே. இவர்களால் எப்படி அத்தனை கோபுரங்களையும் கண்காணிக்கவோ, தவறுகளைக் கண்டறியவோ முடியும்?

மும்பையில் செல்பேசி கோபுரங்களைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு வீடுகள் இருக்கக் கூடாது என்கிற விதிமுறை இருக்கிறது. தொடர்ந்து இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் செல்பேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வுகளால் தாக்கப்படுபவர்கள் பல்வேறு மருத்துவப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதால்தான், மும்பை மாநகராட்சி இப்படி ஒரு நிபந்தனை விதித்தது.

செல்பேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வுகளால் சிட்டுக்குருவி போன்ற பறவை இனங்கள் அழிந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

செல்பேசியிலிருந்தும், செல்பேசி கோபுரங்களிலிருந்தும் வெளிப்படும் மின்காந்த அதிர்வு மூளையைப் பாதிக்கிறது என்றும், தலைவலி, நினைவாற்றல் இழப்பு, மரபணு பாதிப்பு ஆகியவை இதனால் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

செல்பேசி நிறுவனங்கள் தரும் வாடகைக்கு ஆசைப்பட்டு பலரும் தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மீது செல்பேசி கோபுரங்கள் அமைப்பதை அனுமதிக்கிறார்கள். செல்பேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதோ, செல்பேசி கோபுரங்கள் அமைப்பதை முற்றிலுமாகத் தவிர்ப்பதோ இனி சாத்தியமில்லை.

ஆனால், செல்பேசி கோபுரங்களை மும்பையில் இருப்பதுபோல, குடியிருப்புகள் இல்லாத பகுதியில் அமைப்பதையும், அவற்றிலிருந்து வெளிப்படும் மின்காந்த அதிர்வின் அளவு வரம்புக்கு உள்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தவும், கண்காணிக்கவும் முடியும்.

செல்பேசி கோபுரங்கள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பது சென்னை மாநகராட்சியே தவிர, தொலைத்தொடர்புத் துறை அல்ல. சென்னை மாநகராட்சியும், தகவல் தொலைத்தொடர்புத் துறையும் இணைந்து செயல்பட்டு செல்பேசி கோபுரங்களை முறைப்படுத்திக் கண்காணிக்க முன்வர வேண்டும். பொதுமக்களும் செல்பேசி பயன்பாட்டால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்து, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வங்கி கணக்கு இருந்தாலே போதும் கியாஸ் மானியம் பெற ‘ஆதார்’ அட்டை கட்டாயம் அல்ல பெட்ரோலிய மந்திரி விளக்கம்



கியாஸ் மானியம் பெறுவதற்கு ‘ஆதார்’ அட்டை கட்டாயம் அல்ல, வங்கி கணக்கு இருந்தாலே போதும் என்று பெட்ரோலிய மந்திரி தெரிவித்தார்.

விளக்கம்

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, நேரடி எரிவாயு மானிய திட்டம் குறித்த கேள்விக்கு பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நேரடி எரிவாயு மானிய திட்டத்தின் கீழ், எரிவாயு மானியம் பெறுவதற்கு ‘ஆதார்’ அட்டை கட்டாயம் அல்ல. வங்கி கணக்கு இருந்தாலே போதுமானது.

கியாஸ் மானியம் பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ‘ஆதார்’ அட்டை வைத்திருப்பவர்கள், தங்கள் ‘ஆதார்’ எண்ணை தங்களது வங்கி கணக்குடன் இணைத்துக் கொண்டு, அதன் மூலமாக கியாஸ் மானியத்தை பெறலாம்.

‘ஆதார்’ அட்டை இல்லாதவர்கள், தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக மானியத்தை பெறலாம். ‘ஆதார்’ அட்டை இல்லாததால், மானியம் மறுக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்பணம்

நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வீட்டுத்தேவைக்கான சிலிண்டர்கள் சந்தை விலையில் வழங்கப்படும். பிறகு மானியத்தொகை, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் முன்பணத்தொகை, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் முதலில் வரவு வைக்கப்படும். முதலாவது சிலிண்டரை சந்தை விலையில் வாங்குவதற்கு வசதியாக, இத்தொகை வழங்கப்படும். முதலாவது சிலிண்டர் வாங்கிய பிறகு, அதற்கு தனியாக மானியத்தொகை வழங்கப்படும்.

பிறகு ஒவ்வொரு சிலிண்டர் வாங்கிய பிறகும், விதிமுறைகளுக்கு உட்பட்டு, அதற்கான மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

3 மாத காலஅவகாசம்

வாடிக்கையாளர் குடியிருக்கும் மாவட்டத்தில் எப்போது நேரடி எரிவாயு மானிய திட்டம் அமலுக்கு வருகிறதோ, அதிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இந்த திட்டத்தில் சேர கால அவகாசம் அளிக்கப்படும். திட்டத்தில் சேர்ந்தாலும், சேராவிட்டாலும், இந்த மூன்று மாத காலமும் மானிய விலை சிலிண்டர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும்.

மூன்று மாத கால அவகாசம் முடிந்த பிறகும், நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேராதவர்களுக்கு, கூடுதலாக மூன்று மாத கால ‘பார்க்கிங் பீரியட்’ என்ற அவகாசம் அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில், அந்த வாடிக்கையாளர்களுக்கான மானியத்தொகை, தனியாக ஒதுக்கி வைக்கப்படும். அவர்கள் திட்டத்தில் சேர்ந்தவுடன், அந்த மானியத்தொகை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

மானியத்தை இழப்பர்

ஒருவேளை, மேற்கண்ட மூன்று மாத கால கூடுதல் அவகாசத்துக்கு பிறகும், நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேராவிட்டால், அவர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட மானியத்தொகை காலாவதி ஆகிவிடும். அவர்கள் அத்தொகையை பெறுவதற்கான தகுதியை இழந்து விடுவார்கள்.

பின்னர், நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேரும்வரை, அவர்கள் சந்தை விலையில்தான் சிலிண்டர் வாங்க வேண்டி இருக்கும். அவர்கள் திட்டத்தில் சேர்ந்த பிறகு, மற்றவர்களைப் போலவே, முதலில் முன்பணமும், அடுத்தடுத்து மானியமும் பெறுவார்கள்.

இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...