
Wednesday, December 17, 2014
தொட்டால் மனம் மலரும்!

ஆகவே, ஓர் அறிவு உயிர்களான மரம் செடி கொடிகளோடு உரையாட வேண்டுமெனில் அவற்றைத் தொட்டுத்தான் பேச வேண்டும். மரங்களைத் தொட்டுத் தழுவி நோய் நீக்குவதை ஒரு சிகிச்சை முறையாகவே சித்த மருத்துவம் கூறுகிறது.
மேலை நாடுகளில் தொடு சிகிச்சை (ற்ர்ன்ஸ்ரீட் ற்ட்ங்ழ்ஹல்ஹ்) உடல் மற்றும் மனச் சிக்கல்களுக்கான மருத்துவ முறையாக வளர்ந்துள்ளது. மியாமி பல்கலைக்கழகத்தில் தொடுகை ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
கேட்கும் திறனும் கண் பார்வையும் பிறவியிலேயே இல்லாத ஹெலன் கெல்லர் தொட்டுத் தொட்டுத்தான் எழுத்துக்களை வாசித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தொட்டால் மலரும் பூக்களாக சொற்கள் இருந்திருக்கின்றன.
சின்னஞ்சிறு இலைகளை விரித்தபடி நிற்கும் செடி ஒன்று - நம் விரல்கள் தொட்டமாத்திரத்தில் அதன் இலைகள் மடங்கி மூடிக் கொள்கின்றன. இந்தச் செடிக்கு "தொட்டாற்சிணுங்கி' என்று பெயர் வைத்தவன் ஒரு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.
தூரத்தில் தரையைத் தொடுவதுபோல் தோற்றம் தரும் தொடவே முடியாத வானத்தின் பெயர் "தொடுவானம்'! இதுவும் அழகான சொல்லாட்சிதானே?
நமது இரண்டு கன்னங்களையும் தொட்டுத் தடவி திருஷ்டி கழிக்கும் அம்மாவின் தொடுகைக்கு இணையான ஆசீர்வாதத்தை எந்த மகானால் தந்துவிட முடியும்?
மகாபாரதத்தில் திருதிராட்டிரன் மனைவி காந்தாரி துரியோதனின் உடம்பெல்லாம் தொட்டுத் தடவினால் அவனை யாராலும் கொல்ல முடியாது. கண்ணிரண்டையும் கறுப்புத் துணியால் கட்டியிருக்கும் காந்தாரிக்கு மகன் இடுப்பின் கீழ் அணிந்திருந்த ஆடை தெரியவில்லை. அவளால் தொடமுடியாத அந்த தொடைப் பகுதியை கிருஷ்ணன் சைகை காட்ட பீமன் அடித்து வீழ்த்தியதாக கதை உண்டு. அன்னையின் தொடுகை எத்துணை ஆற்றல் மிக்கது என்பதை இது உணர்த்துகிறது.
இராமாயணத்தில் இராமபிரான் இலங்கைக்கு பாலம் அமைப்பதில் உதவிய அணிலின் கதை நாம் அறிந்ததுதான். இராமபிரான் அணிலை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்ததுதான் அதன் முதுகில் உள்ள மூன்று கோடுகள் என்று சொல்வது உண்டு.
அநுமன் கடலைத் தாண்டி இருக்கலாம். ஆனால் அன்பு தலைமுறைகளைத் தாண்டக் கூடியது என்பதே இக்கதையின் செய்தி.
கணவன் மீது கோபம் கொண்டபோது, "என்னைத் தொடக்கூடாது' என்று கட்டளையிட்டாள் திருநீலகண்டரின் மனைவி என்பது ஒரு கதை.
ஏழைத் தாய் குழந்தைக்குச் சோறூட்டுகிறாள். தொட்டுக் கொள்ள காக்கையும் குருவியும்! இதில் உள்ள கவித்துவச் சிந்தனை ஒருபுறமிருக்க சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள துணைக் கறியாக உள்ள பதார்த்தங்களை "தொட்டுக்கை' என்று குறிப்பிடும் சொல் மரபு உண்டு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் நண்பரும் சேர்ந்தே அலுவலகம் செல்வோம். தினமும் புறப்படும்போது உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் அப்பாவின் தோளைத் தொட்டு "போயிட்டு வரேம்ப்பா' என்று சொல்லிவிட்டு வருவார். எவ்வளவு அவசரமானாலும் அப்பாவைத் தொடாமல் வரமாட்டார்.
அப்போது அந்த முதியவர் முகத்தில் பரவும் திருப்தியையும் ஆனந்தத்தையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஒரு தொடுகைக்காக முதியவர்கள் ஏங்குகிறார்கள் என்பதை நாம் அறிவோமா?
உடம்பெல்லாம் புண்ணும் சீழுமாய், சாலையோரம் விடப்பட்ட தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி அவர்கள் உடம்பைத் துடைத்து பணிவிடை செய்து பாதுகாத்ததால் அன்னை தெரசாவை புனிதர் நிலைக்கு உயர்த்தி வணங்க வைத்தது வாட்டிகன்!
குழந்தைகள் நம்மைத் தொடும்போது ஏற்படும் பரவச உணர்வை "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் மெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும் மயக்குறு மக்கள் இல்லோர்க்கு பயக்குறைவில்லை தாம் வாழும் நாளே...' என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. "மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்' என்கிறார் திருவள்ளுவர்.
குழந்தைகளை தாய்மார்கள் அடிக்கடி தொடுவதால் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் கூடுதலாக சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நோயாளிகளைத் தொட்டு உரையாடும்போது அவர்களுக்கு நோயின் தாக்கம் பெரிதும் குறைவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
பாரதி கடவுளை கண்களால் காண மட்டும் விரும்பவில்லை. விரலால் தீண்டவும் விரும்பினான். அதனால்தான் "தீக்குள் விரலை வைத்தால், உனைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடினான்.
சிறுவயதில் வீடுகளில் ஏற்றப்படும் குத்துவிளக்கின் சுடருக்குள் விரல் நீட்டும் விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? அந்தச் சுடருக்குள் நுழையும் விரலை தீ செல்லமாகச் சுடும். அதுதான் கடவுள் என்று குதூகலித்து கைகொட்டிச் சிரிக்கிறான் பாரதி குழந்தை போலே!
அண்மையில் ஒரு பிரம்மாண்ட அணுவெடிப்புச் சோதனை முடிவில் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்டதாக (எர்க்ள் ல்ஹழ்ற்ண்ஸ்ரீப்ங்) விஞ்ஞானிகள் அறிவித்தபோது கடவுளை ஏறத்தாழ தொட்டுவிட்டதாகவே அறிவுலகம் பெருமைப்பட்டுக் கொண்டது.
வானத்தில் கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் விண்கல விரல்களால் பிரபஞ்சம் எங்கும் கடவுளைத் தேடித் துழாவ ஆரம்பித்து விட்டான் மனிதன். பாவம் அவன் படுத்திருப்பது கடவுளின் மடி என்று அறிந்தானில்லை.
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று ஆசைப்பட மைதாஸின் கதையை மறக்க முடியுமா? உண்ணும் உணவும் ஆசை மகளும் கூட தான் தொட்டதனால் பொன்னாகிப் போனதும்தான் அவனுக்குப் புத்தி வந்தது!
பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்திய ஆன்மிக குரு ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகையில் தங்கத்தாலோ பிற உலோகங்களாலோ ஆன நாணயங்களையோ ஆபரணங்களையோ தொட்டாலே அவர் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று குறிப்பிடுகிறார். அந்த ஆன்மிக குருதான் ராமகிருஷ்ண பரமஹம்சர்!
விரல் என்பது மனதின் பெளதிக வடிவம். மனத்தின் நீட்சி. விரல் தொடும் முன்னதாகவே மனம் தொட்டு விடுகிறது. "இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்' என்கிறான் கம்பனின் ராமன்.
ஏதோ காரணத்தால் உறவினர் ஒருவருடன் பல வருடங்கள் பேசாமலே இருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஒருவித பகைமை உணர்வாகவே அது வளர்ந்துவிட்டதாக ஒரு நண்பர் சொன்னார்.
பிறகு ஏதோ சந்தர்ப்பத்தில் அந்த நண்பரின் கையைப் பிடித்து எப்படி இருக்கீங்க என்று நண்பர் கேட்ட மாத்திரத்தில் அவர் நெகிழ்ந்து விட்டாராம். கை தொட்ட ஒரு நொடியில் பகைமைச் சுவர் சுக்குநூறாகி இதயங்களை இணைத்துவிட்டது.
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனசுக்குள் தமது அன்புக்குரியவர் தன்னைத் தொட வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.
தொடுங்கள். தழுவிக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களோடு உடலளவில் நெருங்கி இருங்கள். அங்கே புரிதல் இயல்பாகி விடும். வார்த்தைகளே தேவை இல்லாத வாத்சல்யம் உறவுகளுக்கு உயிர் தருகிறது.
பாலியல் சீண்டல்கள் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் எதிர்பாலினத்தவர் ஒருவருக்கு ஒருவர் சாதாரணமாகத் தொடவே அஞ்சும் நிலைதான் உள்ளது.
அந்தக் காலத்து திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். காதலன் காதலியைத் தொடுவது அபூர்வமாகவே இருக்கும். அப்படித் தொட்டாலும் அதில் விரசம் இருக்காது.
"அப்பா என்னை சம்பூர்ண ராமாயணம் படத்துக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்' என்று என் மனைவி பரிதாபமாகச் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
திரைப்படங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒழுக்கம் சமூக உணர்வுகளிலும் வேரோடி இருந்தது. அந்தக் காலத்தில் பொது இடங்களில் ஆண்கள் - கணவனாகவே இருந்தாலும் - தங்களைத் தொட்டுப் பேசுவதை பெண்கள் அனுமதிப்பது கிடையாது. அது ஒருவித பண்பாட்டுச் சீர்மை. படித்தவர்களைவிட பாமரர்களே இதனைத் தீவிரமாகப் பின்பற்றினர்.
ஆனால், இன்று மெத்தப் படித்த மேதாவிகள் கேரளாவிலும், தமிழக ஐ.ஐ.டி. வளாகத்திலும் "இளமைத் திருவிழா' என்ற பெயரில் அரங்கேற்றிய வக்கிரக் காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் காண்பிக்கப்பட்டபோது அது விரசத்தின் உச்சமாக இருந்தது.
தொடுதலும், தழுவுதலும், முத்தமிடுதலும் பொது இடத்தில் இளமையின் சுதந்திரமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இளைஞர்களில் ஒரு சாரார் முழக்கமிடுகின்றனர்.
தொடுதலின் வண்ணங்கள் திசைமாறுகின்றன.
மண்ணின் மணம் காப்போம்; மானத்தையும்தான்!
கட்டுரையாளர்: எழுத்தாளர். தஞ்சாவூர்க்கவிராயர்
இணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்
புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் தான், இணையதளங்களில், திருமண பதிவு களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம், மோசடி நபர்களின் மாய வலையில், பெண்கள் சிக்காமல் பார்த்துக் கொள்ள, மத்திய அரசு முயன்று உள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த, அமைச்சர் மேனகா தலைமையிலான, மத்திய, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, 'திருமணத்திற்கான வரன் தேடி, திருமண இணைய தளங்களில் பதிவு செய்யும் ஆண்களின் முகவரி, தொழில் போன்ற விவரங்களை, இணையதள நிர்வாகிகள் சரிபார்க்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. மொபைல் போன் எண்ணை மட்டும் தெரிவித்து, போலியான பெயர், மோசடியான முகவரி போன்ற விவரங்களை தெரிவித்து, பெண்களை ஏமாற்றும் போக்கு, திருமண இணையதளங்களில் அதிக அளவில் நடைபெறுவதை அடுத்து, இந்த கிடுக்கிப்பிடி உத்தரவை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்து உள்ளது.
அதன்படி, ஆதார் அடையாள அட்டை இருக்கும் ஆண்கள் அல்லது பிற, போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களின் பதிவுகளை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, திருமண பதிவு இணைய தளங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆதாரங்களை இணையதளத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் எனவும், மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இதன் மூலம், ஒரே நபர், பல இணையதளங்களில், பல மோசடியான பெயர்களில், திருமணத்திற்கு வரன் தேடி, பெண்களை ஏமாற்றும் போக்கு தடுக்கப்படும் என்பது, மத்திய அரசின் நம்பிக்கை. மேலும், தவறான எண்ணத்தில் பெண்களை பின்தொடர்பவர்கள், அவர் களின் முகவரி, ஆதாரங்கள் போன்ற விவரங்களை தேடுவோருக்கு சிக்கல் தான். எனினும், இந்த புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு முதல் தான் நடைமுறைக்கு வருகிறது.
'ஆதார்' - சில சந்தேகங்கள்
* ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், நேர்மையானவர்களாகவும், நியாய மானவர்களாகவும் இருப் பார்கள் என்ற மத்திய அரசின் எண்ணம் நியாயம் தானா?
* ஆதார் அடையாள அட்டை பெற அளிக்கப்பட்ட சான்றுகள் எந்த விதத்தில் சரியானவை என, முறையாக உறுதி செய்யப்படவில்லை.
* இந்த அடையாள அட்டை யில் உள்ள புகைப்படத்தை எளிதில் மாற்றி விட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை.
* ஆதார் அடையாள அட்டை யில், அட்டைதாரரின் முகம் மட்டும் தான் தெரியும். அவரின் உயரம், எடை, நோய் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை.
* இதனால், ஆதார் அடையாள அட்டை இருந்தால் போதும், அந்த நபர் நியாயமானவர் என, பொத்தாம் பொதுவாக கருத முடியாது.
அதன்படி, ஆதார் அடையாள அட்டை இருக்கும் ஆண்கள் அல்லது பிற, போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களின் பதிவுகளை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, திருமண பதிவு இணைய தளங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆதாரங்களை இணையதளத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் எனவும், மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.
இதன் மூலம், ஒரே நபர், பல இணையதளங்களில், பல மோசடியான பெயர்களில், திருமணத்திற்கு வரன் தேடி, பெண்களை ஏமாற்றும் போக்கு தடுக்கப்படும் என்பது, மத்திய அரசின் நம்பிக்கை. மேலும், தவறான எண்ணத்தில் பெண்களை பின்தொடர்பவர்கள், அவர் களின் முகவரி, ஆதாரங்கள் போன்ற விவரங்களை தேடுவோருக்கு சிக்கல் தான். எனினும், இந்த புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு முதல் தான் நடைமுறைக்கு வருகிறது.
'ஆதார்' - சில சந்தேகங்கள்
* ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், நேர்மையானவர்களாகவும், நியாய மானவர்களாகவும் இருப் பார்கள் என்ற மத்திய அரசின் எண்ணம் நியாயம் தானா?
* ஆதார் அடையாள அட்டை பெற அளிக்கப்பட்ட சான்றுகள் எந்த விதத்தில் சரியானவை என, முறையாக உறுதி செய்யப்படவில்லை.
* இந்த அடையாள அட்டை யில் உள்ள புகைப்படத்தை எளிதில் மாற்றி விட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை.
* ஆதார் அடையாள அட்டை யில், அட்டைதாரரின் முகம் மட்டும் தான் தெரியும். அவரின் உயரம், எடை, நோய் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை.
* இதனால், ஆதார் அடையாள அட்டை இருந்தால் போதும், அந்த நபர் நியாயமானவர் என, பொத்தாம் பொதுவாக கருத முடியாது.
வாஜ்பாய்க்கு ‘பாரத ரத்னா’ விருது
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, முதல் ஜனாதிபதியாக டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் பதவியேற்று, அந்த பதவிக்கு பெருமை சேர்த்தார். அவர் நாட்டில் பல்வேறு துறைகளில் ஒப்பற்ற சேவை செய்தவர்களுக்கு ‘பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா’ விருதுகளை அறிவித்தார். இதில், பாரத ரத்னா விருதுதான் மிக உயரிய விருதாகும். 1954–ம் ஆண்டு ஜனவரி மாதம் 2–ந்தேதி இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். 1954–ல் முதலாவதாக டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, சர்.சி.வி.ராமன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்த ஆண்டு ஜவகர்லால் நேருவுக்கு அளிக்கப்பட்டது. டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜாகிர் உசேன், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் என்று பலருக்கு உயிரோடு இருக்கும்போதே வழங்கப்பட்டது. காமராஜர், ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுக்கு அவர்கள் மறைவுக்குபிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, கான் அப்துல் கபார் கான் ஆகியோர் வெளிநாட்டினராக இருந்தாலும் அவர்களுக்கும் விருதை வழங்கி, இந்தியா பெருமைபடுத்தியது. கடந்த ஆண்டு இந்த விருது விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டது. இதுவரையில் 43 பேர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு இந்த விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க பா.ஜ.க. அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வருகிற 25–ந்தேதி அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தநாள் நல்லாட்சிதினமாக கொண்டாடப்படுகிறது. வாஜ்பாய் இப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எங்கேயும் வெளியே வரமுடியாத நிலையில் அவதிப்படுகிறார். தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வாஜ்பாய்க்கு வழங்கி அவரை பெருமைப்படுத்துவோம் என்று பிரகடனப்படுத்தியது. கடந்த வாரம் நடந்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், எல்லோரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சச்சின் தெண்டுல்கருக்கும், சி.என்.ஆர்.ராவுக்கும் பாரத ரத்னா விருதை அறிவித்தபோதே, வாஜ்பாய்க்கும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அப்போது அரசியல் காரணங்களை மனதில் வைத்து வேண்டுமென்றே அவர் பெயரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அறிவிக்கவில்லை என்பதே பா.ஜ.க.வின் ஆதங்கம். ஆனால், வாஜ்பாய் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர். அரசியல் நாகரீகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கியவர். எதிர்கட்சியினர்கூட, குறிப்பாக பா.ஜ.க. மீது மாற்றுக் கருத்து கொண்டவர்கள்கூட வாஜ்பாய் என்றால் தனி மரியாதை கொண்டவர்கள். பா.ஜ.க.வை எதிர்த்து நிற்கும் நேரத்தில்கூட, தி.மு.க. தலைவர் கருணாநிதி வாஜ்பாய் பற்றி குறிப்பிடும்போது, அவர் தவறான கட்சியில் இருக்கும் நல்ல தலைவர் என்று பாராட்டியிருக்கிறார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தை இந்தியாவில் யாரும் மறந்துவிடமுடியாது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள தங்க நாற்கர சாலை அவர் செயல்படுத்திய அற்புதமான திட்டமாகும். இன்றைய காலகட்டத்தில் அருமையான சாலைகளில் தரைவழி போக்குவரத்தில் மக்கள் விரைவாக பயணம் செய்யும்போது நிச்சயமாக அவர் பெயரைச் சொல்லாமல் இருக்கமுடியாது. இதுபோல, பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி உலகம் முழுவதையும் இந்தியாவை ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்க்க வைத்தார். இந்தியா முழுவதிலும் உள்ள நதிநீர் இணைப்பில் அதிக அக்கறையோடு இருந்தார். தமிழ்நாடு மீதும், தமிழர்கள், தமிழக அரசியல்வாதிகள் மீதும் அதிக அன்பு கொண்டவர். 1974–ல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டபோது, பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தவர். சுதந்திர போராட்ட தியாகி, பாராளுமன்ற உறுப்பினர், வெளிவிவகாரத்துறை மந்திரி, பிரதமர் என்ற அவருடைய எந்த முகத்திலும் ஒளிவிட்டு மிளிர்ந்த வாஜ்பாய்க்கு, இந்த ஆண்டு ‘பாரத ரத்னா’ விருது வழங்க அரசியல் வேறுபாடு இல்லாமல், ஒட்டுமொத்த நாடே முன்மொழியவேண்டும்.
Tuesday, December 16, 2014
ரேஷன் அட்டையில் உள்தாள் ஒட்ட சிரமமா?- வழிகாட்டுகிறார்கள் அதிகாரிகள்

கிழிந்த நிலைமையில் உள்ள பழைய ரேஷன் அட்டைகளில் 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2005-ம் ஆண்டில் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளில் 4 முறை உள்தாள் ஒட்டப்பட்டு இதே ரேஷன் அட்டைகளைத்தான் நுகர்வோர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலரது ரேஷன் அட்டைகள் கிழிந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
பழைய முறையில் ரேஷன் அட்டைகளை வழங்குவதற்கு பதிலாக நவீன பயோமெட்ரிக் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்று 2011-ம் ஆண்டில் அரசு அறிவித்தது. இதன் மூலம் போலி ரேஷன் அட்டைகளை தடுக்க முடியும் என்று அரசு கருதுகிறது. பயோமெட்ரிக் ரேஷன் அட்டை குறித்து உணவு பொருள் வழங்கல் துறை சார்பாக அரசுக்கு 5 அம்ச பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே
2015-ம் ஆண்டில் நுகர்வோர் களுக்கு நவீன பயோமெட்ரிக் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்டும் பணி மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கியது. மொத்தம் 23,355 முழுநேர ரேஷன் கடைகளில் இந்த பணி நடைபெற்று வருகிறது. 1.96 கோடி கார்டுகளுக்கு உள்தாள் ஒட்டப்படவுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதால் பலரது ரேஷன் அட்டைகள் கிழிந்துள்ளன. இதனால் பலரால் உள்தாளை ஒட்டிக்கொள்ள முடியவில்லை.
இது குறித்து தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''பழைய ரேஷன் கார்டு மிகவும் கிழிந்து அத்தியாவசியமாக மாற்று ரேஷன் அட்டை தேவைப்பட்டால் நுகர்வோர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்துள்ள கிழிந்த ரேஷன் அட்டையை சம்பந்தப்பட்ட கடையில் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் மாதிரி ரேஷன் அட்டை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் யாராது மாதிரி ரேஷன் அட்டை வழங்க பணம் கேட்டால் உணவு பொருள் வழங்கல் துறையில் புகார் தெரிவிக்கலாம்“ என்றார்.
சென்னையில் உள்ள ஆதார் நிரந்தர மையங்கள்
சென்னை மாநகரப் பகுதியில் ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:
1-வது மண்டலம்: திருவொற்றியூர் (மண்டல அலுவலகம்), எண்ணூர் (கோட்ட அலுவலகம்), எர்ணாவூர் (கோட்ட அலுவலகம்)
2-வது மண்டலம்: மணலி (பழைய மண்டல அலுவலகம்), ஆண்டார் குப்பம் (கோட்ட அலுவலகம்), மாத்தூர் (கோட்ட அலுவலகம்)
3-வது மண்டலம்: மாதவரம் (மண்டல அலுவலகம்), புழல் (கோட்ட அலுவலகம்), லட்சுமிபுரம் (கோட்ட அலுவலகம்)
4-வது மண்டலம்: தண்டையார்பேட்டை (மண்டல அலுவலகம்), எருக்கஞ்சேரி (கோட்ட அலுவலகம்), பழைய வண்ணாரப்பேட்டை (அரசு பல் மருத்துவமனை)
5-வது மண்டலம்: ஏழு கிணறு (மண்டல அலுவலகம்), பழைய வண்ணாரப்பேட்டை (கோட்ட அலுவலகம்), ராயபுரம் (பகுதி அலுவலகம்)
6-வது மண்டலம்: அயனாவரம் (மண்டல அலுவலகம்), அகரம் (கோட்ட அலுவலகம்), அயனாவரம் (கோட்ட அலுவலகம்), ஜவகர் நகர் (கோட்ட அலுவலகம்), கொசப்பேட்டை (கோட்ட அலுவலகம்), புளியந்தோப்பு (கோட்ட அலுவலகம்)
7-வது மண்டலம்: அம்பத்தூர் (மண்டல அலுவலகம்), கொரட்டூர் (கோட்ட அலுவலகம்), ஜெ.ஜெ.நகர் (கோட்ட அலுவலகம்)
8-வது மண்டலம்: ஷெனாய் நகர் (மண்டல அலுவலகம்), அண்ணாநகர் (கோட்ட அலுவலகம்), ஷெனாய் நகர் (கோட்ட அலுவலகம்)
9-வது மண்டலம்: வள்ளுவர் கோட்டம் (மண்டல அலுவலகம்), ஐஸ் அவுஸ் (கோட்ட அலுவலகம்), தேனாம்பேட்டை (கோட்ட அலுவலகம்), ஆழ்வார்பேட்டை (கோட்ட அலுவலகம்)
10-வது மண்டலம்: கோடம்பாக்கம் (மண்டல அலுவலகம்), ரங்கராஜபுரம் (கோட்ட அலுவலகம்), வடபழனி (கோட்ட அலுவலகம்)
11-வது மண்டலம்: வளசரவாக்கம் (மண்டல அலுவலகம்), மதுரவாயல் (கோட்ட அலுவலகம்), போரூர் (கோட்ட அலுவலகம்)
12-வது மண்டலம்: ஆலந்தூர் (மண்டல அலுவலகம்), பழவந்தாங்கல் (கோட்ட அலுவலகம்), முகலிவாக்கம் (கோட்ட அலுவலகம்)
13-வது மண்டலம்: அடையார் (மண்டல அலுவலகம்) , வேளச்சேரி சாலை (கோட்ட அலுவலகம்), சைதாப்பேட்டை (அரசு மேல்நிலைப் பள்ளி- கோடம்பாக்கம் சாலை மற்றும் பழைய 9-வது மண்டல அலுவலகம்- அண்ணா சாலை), மயிலாப்பூர் (கோட்ட அலுவலகம்)
14-வது மண்டலம்: புழுதிவாக்கம் (மண்டல அலுவலகம்), பள்ளிக்கரணை (கோட்ட அலுவலகம்), கொட்டிவாக்கம் (பகுதி அலுவலகம்)
15-வது மண்டலம்: சோழிங்கநல்லூர் (மண்டல அலுவலகம்), நீலாங்கரை (கோட்ட அலுவலகம்), கண்ணகிநகர் (கோட்ட அலுவலகம்) மற்றும் எழிலகம்- மெரினா கடற்கரை ஆகிய 51 இடங்களில் ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
1-வது மண்டலம்: திருவொற்றியூர் (மண்டல அலுவலகம்), எண்ணூர் (கோட்ட அலுவலகம்), எர்ணாவூர் (கோட்ட அலுவலகம்)
2-வது மண்டலம்: மணலி (பழைய மண்டல அலுவலகம்), ஆண்டார் குப்பம் (கோட்ட அலுவலகம்), மாத்தூர் (கோட்ட அலுவலகம்)
3-வது மண்டலம்: மாதவரம் (மண்டல அலுவலகம்), புழல் (கோட்ட அலுவலகம்), லட்சுமிபுரம் (கோட்ட அலுவலகம்)
4-வது மண்டலம்: தண்டையார்பேட்டை (மண்டல அலுவலகம்), எருக்கஞ்சேரி (கோட்ட அலுவலகம்), பழைய வண்ணாரப்பேட்டை (அரசு பல் மருத்துவமனை)
5-வது மண்டலம்: ஏழு கிணறு (மண்டல அலுவலகம்), பழைய வண்ணாரப்பேட்டை (கோட்ட அலுவலகம்), ராயபுரம் (பகுதி அலுவலகம்)
6-வது மண்டலம்: அயனாவரம் (மண்டல அலுவலகம்), அகரம் (கோட்ட அலுவலகம்), அயனாவரம் (கோட்ட அலுவலகம்), ஜவகர் நகர் (கோட்ட அலுவலகம்), கொசப்பேட்டை (கோட்ட அலுவலகம்), புளியந்தோப்பு (கோட்ட அலுவலகம்)
7-வது மண்டலம்: அம்பத்தூர் (மண்டல அலுவலகம்), கொரட்டூர் (கோட்ட அலுவலகம்), ஜெ.ஜெ.நகர் (கோட்ட அலுவலகம்)
8-வது மண்டலம்: ஷெனாய் நகர் (மண்டல அலுவலகம்), அண்ணாநகர் (கோட்ட அலுவலகம்), ஷெனாய் நகர் (கோட்ட அலுவலகம்)
9-வது மண்டலம்: வள்ளுவர் கோட்டம் (மண்டல அலுவலகம்), ஐஸ் அவுஸ் (கோட்ட அலுவலகம்), தேனாம்பேட்டை (கோட்ட அலுவலகம்), ஆழ்வார்பேட்டை (கோட்ட அலுவலகம்)
10-வது மண்டலம்: கோடம்பாக்கம் (மண்டல அலுவலகம்), ரங்கராஜபுரம் (கோட்ட அலுவலகம்), வடபழனி (கோட்ட அலுவலகம்)
11-வது மண்டலம்: வளசரவாக்கம் (மண்டல அலுவலகம்), மதுரவாயல் (கோட்ட அலுவலகம்), போரூர் (கோட்ட அலுவலகம்)
12-வது மண்டலம்: ஆலந்தூர் (மண்டல அலுவலகம்), பழவந்தாங்கல் (கோட்ட அலுவலகம்), முகலிவாக்கம் (கோட்ட அலுவலகம்)
13-வது மண்டலம்: அடையார் (மண்டல அலுவலகம்) , வேளச்சேரி சாலை (கோட்ட அலுவலகம்), சைதாப்பேட்டை (அரசு மேல்நிலைப் பள்ளி- கோடம்பாக்கம் சாலை மற்றும் பழைய 9-வது மண்டல அலுவலகம்- அண்ணா சாலை), மயிலாப்பூர் (கோட்ட அலுவலகம்)
14-வது மண்டலம்: புழுதிவாக்கம் (மண்டல அலுவலகம்), பள்ளிக்கரணை (கோட்ட அலுவலகம்), கொட்டிவாக்கம் (பகுதி அலுவலகம்)
15-வது மண்டலம்: சோழிங்கநல்லூர் (மண்டல அலுவலகம்), நீலாங்கரை (கோட்ட அலுவலகம்), கண்ணகிநகர் (கோட்ட அலுவலகம்) மற்றும் எழிலகம்- மெரினா கடற்கரை ஆகிய 51 இடங்களில் ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி


தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை.
ஆனால் ஆச்சர்யமாக கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு ஈடாக மதுரையில் ஒரு ஹோட்டலில் வெறும் 10 ரூபாய்க்கு இன்றும் உணவளிக்கப்படுகிறது என்பது ஆச்சர்யமான செய்தி.
இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் குடும்பத்துடன் சாதாரண ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும் செலவாகும் தொகை நிச்சயம் உங் கள் மாத சம்பளத்தில் ஒரு கணிசமான பங்காகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது இந்த 10 ரூபாய் சாப்பாடு.
மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலை மோதியபடியே இருக்கிறது. கல்லாப்பெட்டியிலும் கஸ்டமர் கவனிப்பிலும் பாதிப்பாதி கவனமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடையின் உரிமையாளர் எஸ்.ராம்சேர்வைக்கு வயது 85. மதிய உணவு இடைவேளையில் கூட்டம் குறைந்திருந்த ஒரு நேரத்தில் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.
“ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். அதிகம் படிக்காததால் ஆரம்பத்தில் கூலி வேலைதான் பார்த்தேன். போதிய வருமானமில்லாத நிலையில் கல்யாணம் நடந்தது. அதன்பின் அந்த சம்பளம் கொஞ்சமும் கட்டவில்லை. மனைவியோடு கலந்து பேசினேன். எதாவது ஒரு தொழிலை செய்யனும். அது மனதுக்கு திருப்தியானதாகவும் இருக்கணும் என முடிவு செஞ்சேன். வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் பலநாட்கள் பட்டினி கிடந்திருக்கேன்.
என்னை போல் எத்தனை பேர் உணவுக்கு கஷ்டபடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கும் எதாவது செய்யவேண்டும் என்று கூறியதை என் மனைவி ஏற்றுக்கொண்டாள்.
பொருளாதாரத்தால் வாழ்க்கை நிலை உயர்த்தலாம் என்ற நிலையிலும் என் யோசனையை என் மனைவி எந்த வாதமுமின்றி ஏற்றுக்கொண்டதற்காக அவளுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். 1967 ஆம் ஆண்டு சிறியதாக கடையாகத் துவக்கினேன்.
முதலாளி தொழிலாளி ரெண்டுமே நானும் என் மனைவியும் தான். ஆரம்பத்தில் 1.25 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தோம். விலை மலிவாக இருந்ததால் அரசு ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் எங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள்.
வாடிக்கையாளர்கள் இந்த விலையில் திருப்தியடைந்ததால் அவர்கள் மகிழ்ச்சியை நீட்டிக்க எந்தக் காலத்திலும் கையை கடிக்கும் விலையை நிர்ணயிக்க கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டேன். இன்று வரை கடைபிடித்தும் வருகிறேன். பல சமயங்களில் இந்த பணத்தையும் தர இயலாதவர்களிடம் என் மனைவி காசு வாங்க மாட்டாள்.
“குறைவான தொகைதானே அதையும் ஏன் இலவசமாக தரவேண்டும்” என நான் எப்போதாவது கூறினாலும் அவள் நிறுத்திக்கொள்ளமாட்டாள். இப்போது அவள் முடியாமல் இருக்கிறாள். அதனால் யாராவது வந்து காசு இல்லை என்று சொன்னாலும் கூட சாப்பாடு போட்டு அனுப்புவேன். மலிவான விலை இருக்கவேண்டும் என்பதற்காக தரம் குறைந்த அரிசியை பயன்படுத்துவதில்லை. பொன்னி அரிசி மட்டுமே பயன்படுத்துகிறேன். மற்ற ஹோட்டல்களுக்கு ஈடாக கூட்டு ரசம் மோர் ஊறுகாய் என ருசியான உணவையே செய்து கொடுக்கிறேன்” என்கிறார் முகத்தில் பெருமிதம் படர.
“நான் வள்ளலாரின் பக்தன். அவர் சொன்னபடியே தான் செய்கிறேன். அன்னதானம் செய்வது மிகச் சிறப்பானது என்றாலும் என்னிடம் அந்தளவு பணம் இல்லை. அதனால் என் மனதிருப்திக்கு விலை குறைவாகவும், இலவசமாகவும் உணவு தருகிறேன். போதிய வருமானம் இல்லை என்றாலும் மனதுக்கு திருப்தி இருக்கிறது ” என்று சொல்லும்போது விவரிக்கமுடியாத மகிழ்ச்சி ராம்சேர்வையின் முகத்தில்.
இந்த கடையில் காலை 4 இட்லி, பொங்கல், தோசை-2 , மதியம் சைவ சாப்பாடு எதுவாக இருந்தாலும் 10 ரூபாய் தான். இந்த விலையால் பலர் ஆர்டர் தந்து வறியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு தானம் கொடுக்கச் சொல்வர். அதையும் தவிர்க்காமல் செய்கிறார் ராம்சேர்வை.
உலகநாதன் என்ற வாடிக்கையாளர், “1986 லிருந்து சாப்பிட்டு வருகிறேன். சாதாரண ஓட்டலுக்கு சென்றாலும் பாக்கெட்டை பதம் பார்த்துவிடும் அங்குள்ள உணவுகளின் விலைப்பட்டியல். ஆனால் இத்தனை வருடங்களாக சாப்பிட்டும் எனக்கு இந்த விலை ஒரு செலவாகவே தெரியவில்லை.
உணவும் தரமாக இருப்பது ஆச்சர்யம் தருகிறது. அசைவ ஹோட்டல் என்றால் சாதாரணமாக ஒரு பிரியாணி குறைந்தது 200 ரூபாய். இங்கு அந்த பணத்தில் 6 பேர் கொண்ட ஒரு குடும்பம் 3 வேளை உணவு சாப்பிடலாம். அதுவும் இங்கே வயிறு நிறைய மன திருப்தியுடன்” என்றபடி ஒற்றை 10 ரூபாய் தாளுடன் கல்லாவை நோக்கி நடக்கிறார்.
வாழ்க்கை முழுதும் படிப்பவர்கள் பலபேர். ஆனால் வாழ்க்கையையே படிப்பவர்கள் மிகச் சிலர். அந்த சிலரில் ராம்சேர்வையும் ஒருவர். தன் உழைப்பையும் முதலீட்டையும் முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் செலவிடும் ராம்சேர்வை போன்றவர்கள்தான் மனிதநேயம் என்ற ஒற்றை வார்த்தையின் மீது இன்னமும் நம்பிக்கை கொள்ள காரணமாகிறார்கள்.
வெறும் பாராட்டுக்களால் அவருக்கு நமது மகிழ்ச்சியை தெரிவிக்காமல் அவரைப்பின்பற்றி நாமும் நம் வாழ்வில் மனிதநேயத்தை பின்பற்றுவோம்.
-அரவிந்த் ராஜ்
படங்கள்: ராஜாமுருகன்
( மாணவப் பத்திரிகையாளர்கள்)
Subscribe to:
Comments (Atom)
Section of Anna University PhD scholars excluded from convocation
Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
முடியும் என்றால் முடியும்! சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும்...