Thursday, December 18, 2014

சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம்: ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும் புதிய முறை அறிமுகம் மானிய தொகை பெறுவது எப்படி? ஐ.ஓ.சி. செயல் இயக்குனர் விளக்கம்

சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானியதிட்டத்தில் ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மானிய தொகை பெறுவது எப்படி? என்பது குறித்து ஐ.ஓ.சி. செயல் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

சமையல் கியாஸ் மானியம்

மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர்(எல்.பி.ஜி.) நேரடி மானியதிட்டத்தை கடந்த ஜூன் 1–ந்தேதி அறிமுகப்படுத்தியது. இதையடுத்து நாட்டில் 291 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் ஜனவரி 1–ந்தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக கடந்த 3 மாதங்களாக சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் கியாஸ் சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ள 1 கோடியே 53 லட்சத்து 45 ஆயிரத்து 14 வாடிக்கையாளர்களில் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இதுவரை மானியதிட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 45.78 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 6.59 சதவீதம் பேரும் மானியதிட்டத்தில் இணைந்துள்ளனர்.

சுமார் 9 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மானியத்தை பெற விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு முகாம்கள் மூலம் மானிய திட்டத்தில் வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ஒரே விண்ணப்பம்

இந்தநிலையில் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப புதிய விண்ணப்ப படிவம் ஒன்றையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.

அதிகாரிகள் தகவல்

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின்(ஐ.ஓ.சி.) செயல் இயக்குனர் யு.வி.மனூர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை வங்கி கணக்கில் சேர்ப்பதற்கு, ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்ப படிவம் 1 மற்றும் 2–ம், ஆதார் அடையாள அட்டை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு விண்ணப்ப படிவம் 3 மற்றும் 4–ம் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் குழப்பத்தை கருத்தில்கொண்டு v 1.0 என்ற ஒரே ஒரு விண்ணப்ப படிவம்(தமிழ்–ஆங்கிலம் இரண்டு மொழியிலும்) மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவம் கியாஸ் விநியோகஸ்தர்களிடம் நேரடியாக கிடைக்கும். www.mylpg.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய விண்ணப்ப படிவ மூலமும் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் ‘பகுதி–ஏ, பகுதி–பி, பகுதி–சி’ என்று 3 பிரிவுகள் இடம் பெற்றிருக்கும். அந்த விண்ணப்ப படிவத்தை 2 பிரதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆதார் எண் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விண்ணப்ப படிவத்தின் ஒரு பிரதியில் ‘பகுதி– ஏ மற்றும் பகுதி–பி’யை பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தர்களிடம் வழங்க வேண்டும். மற்றொரு பிரதியில் ஏ, பி, சி ஆகிய 3 பகுதிகளையும் பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள் ‘பகுதி–ஏ மற்றும் பகுதி–சி’யை பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தரிடமோ அல்லது வங்கியிடமோ சமர்ப்பிக்க வேண்டும்.

மானியம் பெற விரும்பாத வாடிக்கையாளர்கள் பகுதி–‘ஏ’வை மட்டும் பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த நவம்பர் 15–ந்தேதி முதல் இத்திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு முதல் சிலிண்டர் பதிவு செய்தவுடன் ஏற்கனவே அறிவித்தபடி ரூ.435 நிரந்தர முன்பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்க்கப்படும். அதன்பிறகு இணைந்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.568 நிரந்தர முன்பணமாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மானிய தொகை எப்படி கிடைக்கும்?

சென்னையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் 404 ரூபாய் 50 காசு விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மானிய தொகையாக ரூ.345 வழங்குகிறது. இந்த மானியத் தொகையில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் இருக்கும்.

சிலிண்டர் விலை 404 ரூபாய் 50 காசு, மானிய தொகை ரூ.345 சேர்த்து மொத்தம் 749 ரூபாய் 50 காசு கொடுத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு 48 மணி நேரம் முதல் 78 மணி நேரத்துக்குள் மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை சேர்ந்துவிட்டதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மானிய திட்டத்தில் இணையாத வாடிகையாளர்களுக்கு ஜனவரி 1–ந்தேதி முதல் மார்ச் 31–ந்தேதி வரை கருணை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும்.

ஜூலை மாதத்துக்கு பிறகு...

கருணை காலம் முடிவடைவதற்குள் மானிய திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு, விநியோகிப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானியதொகை மொத்தமாக சேர்க்கப்பட்டுவிடும்.

கருணை காலத்திலும் மானிய திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். ஆனால் அவர்களுக்குரிய மானியதொகை எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

ஜூலை 1–ந்தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் இணைந்தால் இணைந்த தேதியில் இருந்து தகுதிக்கு தகுந்தபடி நிரந்தர முன்வைப்புத் தொகை மற்றும் மானியம் அனுமதிக்கப்படும். இதுவரை மானியதிட்டத்தில் சேராத வாடிக்கையாளர்களுக்காக ஜனவரி 15–ந்தேதி வரை பல்வேறு கட்ட சிறப்பு முகாம்களை இந்திய ஆயில் நிறுவனம் நடத்த உள்ளது. வரும் 20–ந்தேதி(சனிக்கிழமை) வேலூர், திருவண்ணமலையிலும், 21–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் கொளத்தூர், அண்ணாநகர், போரூர், பல்லவபுரம், மீஞ்சூர் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், கெடத்தூர்பேட்டை, பள்ளிப்பட்டு, செங்கல்பட்டு உள்பட இடங்களிலும், மதுரை, திருச்சி, கோவை உள்பட மாநில முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, என்.பி.சி.ஐ. தலைவர் ஜி.எம்.கிரிதர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்(சமையல் கியாஸ் விற்பனை பிரிவு)துணை பொதுமேலாளர் தத்தோ பாத்தியாயா, மூத்த மேலாளர் வைதேகி, தலைமை தொடர்பு மேலாளர் வி.வெற்றி செல்வகுமார், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் மண்டல மேலாளர் வினோத் குமார், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் (சமையல் எரிவாயு விற்பனை பிரிவு) ஒருங்கிணைப்பாளர் ஆர்.சோமசுந்தரம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டி செயல்


logo

இஸ்லாம் பல சாத்வீகமான, அன்பு நெறியான கோட்பாடுகளை உலகுக்கு போதித்து வருகிறது. அதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்ந்து கொடூர செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் (ஐ.எஸ்.) அமைக்கவேண்டுமென தலீபான் இயக்கம் மிகத்தீவிரமாக உள்ளது. தலீபான் இயக்கத்தை அழிக்க, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. பாகிஸ்தானும், அமெரிக்காவின் உதவியையும் பெற்று, தலீபான் இயக்கத்தை தங்கள் நாட்டில் கால் ஊன்றிவிட அனுமதிக்கக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் இயக்கம் ஆட்சி நடத்தியபோது, 2001–ம் ஆண்டில் அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது பாகிஸ்தானில், அமெரிக்காவிற்கு விரோதமாகவும், தலீபான்களுக்கு ஆதரவாகவும் 13 தீவிரவாத அமைப்புகள் ஆளுக்கொரு பக்கம் குரல் கொடுத்த நிலையில், 2007–ம் ஆண்டு அவர்கள் அனைவரும் நாங்கள் எல்லாம் ஒன்றாக இணைகிறோம். எங்கள் அமைப்பிற்கு பெயர், ‘தெஹ்ரி–இ–தலீபான் பாகிஸ்தான்’ என்று பெயர் சூட்டிக்கொண்டனர். பாகிஸ்தானுக்கு உள்ளேயே இருந்துகொண்டு, பாகிஸ்தானுக்கே எதிரான தலீபான் அமைப்புக்கு ஆதரவான இந்த தீவிரவாத இயக்கத்திற்கு பைதுல்லா மசூத் என்பவரே தலைவராக இருந்தார். பாகிஸ்தான் இந்த இயக்கத்தை நசுக்க எவ்வளவோ முயற்சிசெய்தது, ஆனால் முடியவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா அனுப்பிய ஆள் இல்லாத நவீன விமானம், இந்த இயக்க தலைவர் பைதுல்லா மசூத்தை சுட்டு வீழ்த்தி கொன்றது. அவருடைய இடத்தில் ஹக்கிமுல்லா மசூத் என்பவர் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2012–ம் ஆண்டில் கல்விக்காக குரல் எழுப்பிய மலாலா என்ற மாணவி மீது தலீபான் இயக்கம் துப்பாக்கி சூடு நடத்தியதால், ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உயிர்பிழைத்து இப்போது பாகிஸ்தானுக்குள் செல்லமுடியாத நிலையில் இருக்கிறார். இந்த துணிச்சலான செயலுக்காக அவர் நோபல் பரிசு வாங்கிய சில நாட்களில் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லை அருகில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினர் நடத்தும் ஒரு பொது பள்ளிக்கூடத்தில், சின்னஞ்சிறு குழந்தைகள் சாம்பல் நிறத்தில் முழுக்கால் சட்டையும், பச்சை நிறத்தில் பிளேசர் கோட்டும் அணிந்து உற்சாகமாக பாடம் படித்துக்கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் அந்த பள்ளிக்கூடத்திற்கு பின்னால் உள்ள அடக்கஸ்தலம் வழியாக 9 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ உடையில் உள்ளே நுழைந்து பிஞ்சு மலர்களான அந்த மாணவர்களை ஒவ்வொரு வகுப்பிலும் உள்ளே நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டு இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், உங்களை எல்லாம் கொல்லப்போகிறோம், பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டே கொன்று இருக்கிறார்கள். இதில், 132 குழந்தைகளும், 9 ஆசிரியர்களும் பலியாகி இருக்கிறார்கள். 250 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். பிழைத்தவர்கள் மறக்கவே முடியாத இந்த சம்பவமாக, அவர்கள் கண் எதிரிலேயே ஒரு ஆசிரியையை நாற்காலியில் கட்டி உயிரோடு தீவைத்து இருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற, கோழைத்தனமான செயலை செய்துவிட்டு, நாங்கள்தான் செய்தோம் என்று பெருமையுடன் கூறி, ராணுவத்தினரை பழிவாங்க செய்ததாக சப்பைக்கெட்டு கட்டியிருக்கிறார்கள். ராணுவத்தினரை பழிவாங்க செய்யவேண்டும் என்றால், ராணுவத்துடன் மோதவேண்டும்.

பாகிஸ்தான் தன் நாட்டுக்குள் செயல்பட்ட தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும். தீவிரவாத இயங்கங்களை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும். இப்போது பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தின் வலி புரிந்து இருக்கும். தன்நாட்டிலும் தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும், அண்டை நாடான இந்தியாவுக்குள்ளும் தீவிரவாதிகளை அனுப்புவது எவ்வளவு தவறு என்று இப்போது புரிந்திருக்கும். மொத்தத்தில், தங்கள் நாட்டிலும் தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும், இந்தியாவிற்குள் அனுப்புவதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும் நிறுத்தவேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்கிறது என்று பிரதமர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள பள்ளிக்கூட மாணவர்கள் எல்லாம் நேற்று மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த துயரமான சம்பவத்திற்காக உலகமே கண்ணீர் வடிக்கிறது.

Wednesday, December 17, 2014

மனநிறைவைத் தரும் விஷயம் இது.

கல்வி என்பது அறிவைப் பெருக்கிக் கொள்ள என்பதில் இருந்து, நல்ல சம்பளம் ஈட்டுவதற்காக என்று மாறி பல ஆண்டுகளாகி விட்டது. நல்ல சம்பளம், சமூகத்தில் மரியாதை என்று இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சுமார் 1015 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மவுசு, நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை உருவாக்கின.
தற்போது நாட்டில் மிகவும் உயர்ந்த கல்வி நிறுவனமாக அனைவராலும் பார்க்கப்படுவது ஐ.ஐ.டி. என்கிற இந்திய தொழில்நுட்ப மையங்கள்தான். நாடு முழுவதும் 16 ஐஐடிகள் இயங்கி வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பலத்த வரவேற்பு கிடைக்கிறது.

இந்த ஐஐடிகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மிகப்பெரிய திருவிழாதான். அதாவது அந்த கல்வியாண்டில் படிப்பை முடிக்கும் மாணவர்களை, தங்களுடைய நிறுவனங்களுக்கு கொத் திச் செல்ல பல்வேறு நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடங்கின. முதல் நாளிலேயே, ஆண்டு சம்பளம் ரூ.1.50 கோடி என்று மாணவர்களைக் கவர்ந்தன பல வெளிநாட்டு நிறுவனங்கள். மிகக் குறைந்த ஆண்டு சம்பளமே ரூ.30 லட்சம்.

ஆனாலும் ஒரு கோடி ரூபாய் ஆண்டு சம்பளம், பல்வேறு சலுகைகள், வெளிநாட்டில் வேலை என்று வாய்ப்பு வந்தபோதும், சில மாணவர்கள் அந்த வாய்ப்பை உதறித் தள்ளியுள்ளனர். அவ்வாறு மூன்று மாணவர்கள், ஒரு மாணவி இந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறிய காரணம்  தங்களுடைய படிப்புக்கு, திறமைக்கு ஏற்றதாக இந்த வேலை இல்லை என்று ஒரு மாணவனும், ஒரு மாணவியும் கூறியுள்ளார். மிகவும் குறைவான சம்பளம் கிடைத்தபோதும், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ள நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். மற்ற இருவர், தொடர்ந்து மேற்படிப்பு படிக்க உள்ளதால், அந்த வேலைவாய்ப்பை உதறியுள்ளனர்.

மாணவர்கள் சம்பளத்துக்காக மட்டுமே படிக்கவில்லை. தங்களுடைய திறமையை மதிக்கும், அது மேம்படுத்தக் கூடிய இடத்தைச் தேடி செல்கின்றனர். சம்பளத்தை இழந்தாலும், தங்களுடைய சுயசிந்தனையை இந்த மாணவர்கள் இழக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது போன்ற இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. மனநிறைவைத் தரும் விஷயம் இது.

TIMES OF INDIA..CHENNAI

Dec 17 2014 : The Times of India (Chennai)
Pak Taliban's depraved revenge leaves 145 dead, 132 of them schoolchildren
Peshawar:
TNN


Army School Hit, Terror Group Says Only Older Kids Targeted

Picking the softest of soft targets, the Pakistani Taliban on Tuesday launched a savage and cowardly attack on a school, essentially for children of military families, spraying machine-gun fire on kids behind desks, leaving 132 of them dead. By the time the nine-hour siege ended, 145 people, including the terrorists, were killed and 121 others injured. It was the worst attack on children anywhere in the world since the Beslan mass killing by Chechen Islamist rebels in 2004.

Addressing a press conference in Peshawar after conclusion of the rescue operation, military spokesman Major General Asim Saleem Bajwa said the Tehrik-e-Taliban attack on the Army Public School and Degree College was carried out by seven terrorists wearing suicide jackets.

He said the attackers planned to stay for long. “The ration and ammunition which they brought along was sufficient for several days,“ Major General Bajwa said.

At the time of the attack, he said, around 1,100 students and staff were in the school.The Special Services Group (SSG), which carried out the operation, rescued about 960 students and their teachers. The dead included the school's woman principal Tahira Qazi. Another woman teacher was burnt to death.

Claiming responsibility , Taliban spokesman Muham mad Umar Khorasani said, “We selected the army school for the attack because the government is targeting our families and women. We want them to feel the pain.“ He said they had issued instructions not to harm small children. The Pakistani Taliban terrorists who attacked the Army Public School and Degree College here on Tuesday had planted improvised explosive devices on the premises making rescue operations difficult and leading to a nearly day-long gunbattle.

Dressed in uniforms of paramilitary force, the attackers entered the school premises on Warsak Road around 10am. A security official said many of the casualties were caused by suicide blasts. Taliban spokesman Muhammad Umar Khorasani said, “We took this extreme step as revenge. We will target every institution linked to the army unless they stop operations and the extra-judicial killing of our detainees.“ “We have instructed our men not to harm small children even if they are the sons of senior military or civilian leaders,“ he claimed.

“When the firing started, students ran to their classrooms. The militants were entering every class and killing children,“ Mudassir Awan, a worker at the school, said. Aamir Ali, a second-year student who survived the attack, said, “I was sitting with my classmates in the corridor when firing began. We rushed to the classroom but were soon chased by two clean-shaven gunmen, dressed in uniforms of Frontier Constabulary , a paramilitary force. They told us to read `kalima' and then started firing indiscriminately. All my classmates were killed but I survived.“

Waqarullah Khattak, a teacher, said he told students to lie down on the floor when they heard gunshots. “There was blood everywhere, limbs and pieces of children's flesh could be seen where the bombers blew themselves up,“ a security official said. “They were keen on killing as many students as possible.“







WHY LPG SUBSIDY IN BANK a/c CONSUMERS FRUSTRATED AS SEVERAL DOUBTS OVER SCHEME NOT CLARIFIED

தொட்டால் மனம் மலரும்!

Dinamani
உலகிலேயே உணர்வுகளின் அடிப்படையில் உயிர்களை வகைப்படுத்தியது தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் மட்டுமே. "உற்றறிவதுவே ஓரறிவுயிரே' என்கிறது தொல்காப்பியம். அதாவது, ஓர் அறிவு உயிருக்கு தொடுதல் உணர்வு மட்டுமே உண்டு.

ஆகவே, ஓர் அறிவு உயிர்களான மரம் செடி கொடிகளோடு உரையாட வேண்டுமெனில் அவற்றைத் தொட்டுத்தான் பேச வேண்டும். மரங்களைத் தொட்டுத் தழுவி நோய் நீக்குவதை ஒரு சிகிச்சை முறையாகவே சித்த மருத்துவம் கூறுகிறது.

மேலை நாடுகளில் தொடு சிகிச்சை (ற்ர்ன்ஸ்ரீட் ற்ட்ங்ழ்ஹல்ஹ்) உடல் மற்றும் மனச் சிக்கல்களுக்கான மருத்துவ முறையாக வளர்ந்துள்ளது. மியாமி பல்கலைக்கழகத்தில் தொடுகை ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

கேட்கும் திறனும் கண் பார்வையும் பிறவியிலேயே இல்லாத ஹெலன் கெல்லர் தொட்டுத் தொட்டுத்தான் எழுத்துக்களை வாசித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தொட்டால் மலரும் பூக்களாக சொற்கள் இருந்திருக்கின்றன.

சின்னஞ்சிறு இலைகளை விரித்தபடி நிற்கும் செடி ஒன்று - நம் விரல்கள் தொட்டமாத்திரத்தில் அதன் இலைகள் மடங்கி மூடிக் கொள்கின்றன. இந்தச் செடிக்கு "தொட்டாற்சிணுங்கி' என்று பெயர் வைத்தவன் ஒரு கவிஞனாகத்தான் இருக்க முடியும்.

தூரத்தில் தரையைத் தொடுவதுபோல் தோற்றம் தரும் தொடவே முடியாத வானத்தின் பெயர் "தொடுவானம்'! இதுவும் அழகான சொல்லாட்சிதானே?

நமது இரண்டு கன்னங்களையும் தொட்டுத் தடவி திருஷ்டி கழிக்கும் அம்மாவின் தொடுகைக்கு இணையான ஆசீர்வாதத்தை எந்த மகானால் தந்துவிட முடியும்?

மகாபாரதத்தில் திருதிராட்டிரன் மனைவி காந்தாரி துரியோதனின் உடம்பெல்லாம் தொட்டுத் தடவினால் அவனை யாராலும் கொல்ல முடியாது. கண்ணிரண்டையும் கறுப்புத் துணியால் கட்டியிருக்கும் காந்தாரிக்கு மகன் இடுப்பின் கீழ் அணிந்திருந்த ஆடை தெரியவில்லை. அவளால் தொடமுடியாத அந்த தொடைப் பகுதியை கிருஷ்ணன் சைகை காட்ட பீமன் அடித்து வீழ்த்தியதாக கதை உண்டு. அன்னையின் தொடுகை எத்துணை ஆற்றல் மிக்கது என்பதை இது உணர்த்துகிறது.

இராமாயணத்தில் இராமபிரான் இலங்கைக்கு பாலம் அமைப்பதில் உதவிய அணிலின் கதை நாம் அறிந்ததுதான். இராமபிரான் அணிலை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்ததுதான் அதன் முதுகில் உள்ள மூன்று கோடுகள் என்று சொல்வது உண்டு.

அநுமன் கடலைத் தாண்டி இருக்கலாம். ஆனால் அன்பு தலைமுறைகளைத் தாண்டக் கூடியது என்பதே இக்கதையின் செய்தி.

கணவன் மீது கோபம் கொண்டபோது, "என்னைத் தொடக்கூடாது' என்று கட்டளையிட்டாள் திருநீலகண்டரின் மனைவி என்பது ஒரு கதை.

ஏழைத் தாய் குழந்தைக்குச் சோறூட்டுகிறாள். தொட்டுக் கொள்ள காக்கையும் குருவியும்! இதில் உள்ள கவித்துவச் சிந்தனை ஒருபுறமிருக்க சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள துணைக் கறியாக உள்ள பதார்த்தங்களை "தொட்டுக்கை' என்று குறிப்பிடும் சொல் மரபு உண்டு.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் நண்பரும் சேர்ந்தே அலுவலகம் செல்வோம். தினமும் புறப்படும்போது உள்ளே போய் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் அப்பாவின் தோளைத் தொட்டு "போயிட்டு வரேம்ப்பா' என்று சொல்லிவிட்டு வருவார். எவ்வளவு அவசரமானாலும் அப்பாவைத் தொடாமல் வரமாட்டார்.

அப்போது அந்த முதியவர் முகத்தில் பரவும் திருப்தியையும் ஆனந்தத்தையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஒரு தொடுகைக்காக முதியவர்கள் ஏங்குகிறார்கள் என்பதை நாம் அறிவோமா?

உடம்பெல்லாம் புண்ணும் சீழுமாய், சாலையோரம் விடப்பட்ட தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி அவர்கள் உடம்பைத் துடைத்து பணிவிடை செய்து பாதுகாத்ததால் அன்னை தெரசாவை புனிதர் நிலைக்கு உயர்த்தி வணங்க வைத்தது வாட்டிகன்!

குழந்தைகள் நம்மைத் தொடும்போது ஏற்படும் பரவச உணர்வை "இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் மெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும் மயக்குறு மக்கள் இல்லோர்க்கு பயக்குறைவில்லை தாம் வாழும் நாளே...' என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. "மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்' என்கிறார் திருவள்ளுவர்.

குழந்தைகளை தாய்மார்கள் அடிக்கடி தொடுவதால் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் கூடுதலாக சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நோயாளிகளைத் தொட்டு உரையாடும்போது அவர்களுக்கு நோயின் தாக்கம் பெரிதும் குறைவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

பாரதி கடவுளை கண்களால் காண மட்டும் விரும்பவில்லை. விரலால் தீண்டவும் விரும்பினான். அதனால்தான் "தீக்குள் விரலை வைத்தால், உனைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடினான்.

சிறுவயதில் வீடுகளில் ஏற்றப்படும் குத்துவிளக்கின் சுடருக்குள் விரல் நீட்டும் விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? அந்தச் சுடருக்குள் நுழையும் விரலை தீ செல்லமாகச் சுடும். அதுதான் கடவுள் என்று குதூகலித்து கைகொட்டிச் சிரிக்கிறான் பாரதி குழந்தை போலே!

அண்மையில் ஒரு பிரம்மாண்ட அணுவெடிப்புச் சோதனை முடிவில் கடவுள் துகளைக் கண்டுபிடித்து விட்டதாக (எர்க்ள் ல்ஹழ்ற்ண்ஸ்ரீப்ங்) விஞ்ஞானிகள் அறிவித்தபோது கடவுளை ஏறத்தாழ தொட்டுவிட்டதாகவே அறிவுலகம் பெருமைப்பட்டுக் கொண்டது.

வானத்தில் கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் விண்கல விரல்களால் பிரபஞ்சம் எங்கும் கடவுளைத் தேடித் துழாவ ஆரம்பித்து விட்டான் மனிதன். பாவம் அவன் படுத்திருப்பது கடவுளின் மடி என்று அறிந்தானில்லை.

தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்று ஆசைப்பட மைதாஸின் கதையை மறக்க முடியுமா? உண்ணும் உணவும் ஆசை மகளும் கூட தான் தொட்டதனால் பொன்னாகிப் போனதும்தான் அவனுக்குப் புத்தி வந்தது!

பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்திய ஆன்மிக குரு ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகையில் தங்கத்தாலோ பிற உலோகங்களாலோ ஆன நாணயங்களையோ ஆபரணங்களையோ தொட்டாலே அவர் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று குறிப்பிடுகிறார். அந்த ஆன்மிக குருதான் ராமகிருஷ்ண பரமஹம்சர்!

விரல் என்பது மனதின் பெளதிக வடிவம். மனத்தின் நீட்சி. விரல் தொடும் முன்னதாகவே மனம் தொட்டு விடுகிறது. "இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்' என்கிறான் கம்பனின் ராமன்.

ஏதோ காரணத்தால் உறவினர் ஒருவருடன் பல வருடங்கள் பேசாமலே இருந்து இருவரும் எங்கு சந்தித்தாலும் ஒருவித பகைமை உணர்வாகவே அது வளர்ந்துவிட்டதாக ஒரு நண்பர் சொன்னார்.

பிறகு ஏதோ சந்தர்ப்பத்தில் அந்த நண்பரின் கையைப் பிடித்து எப்படி இருக்கீங்க என்று நண்பர் கேட்ட மாத்திரத்தில் அவர் நெகிழ்ந்து விட்டாராம். கை தொட்ட ஒரு நொடியில் பகைமைச் சுவர் சுக்குநூறாகி இதயங்களை இணைத்துவிட்டது.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனசுக்குள் தமது அன்புக்குரியவர் தன்னைத் தொட வேண்டும் என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

தொடுங்கள். தழுவிக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களோடு உடலளவில் நெருங்கி இருங்கள். அங்கே புரிதல் இயல்பாகி விடும். வார்த்தைகளே தேவை இல்லாத வாத்சல்யம் உறவுகளுக்கு உயிர் தருகிறது.

பாலியல் சீண்டல்கள் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் எதிர்பாலினத்தவர் ஒருவருக்கு ஒருவர் சாதாரணமாகத் தொடவே அஞ்சும் நிலைதான் உள்ளது.

அந்தக் காலத்து திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். காதலன் காதலியைத் தொடுவது அபூர்வமாகவே இருக்கும். அப்படித் தொட்டாலும் அதில் விரசம் இருக்காது.

"அப்பா என்னை சம்பூர்ண ராமாயணம் படத்துக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்' என்று என் மனைவி பரிதாபமாகச் சொல்வதைக் கேட்டு குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

திரைப்படங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒழுக்கம் சமூக உணர்வுகளிலும் வேரோடி இருந்தது. அந்தக் காலத்தில் பொது இடங்களில் ஆண்கள் - கணவனாகவே இருந்தாலும் - தங்களைத் தொட்டுப் பேசுவதை பெண்கள் அனுமதிப்பது கிடையாது. அது ஒருவித பண்பாட்டுச் சீர்மை. படித்தவர்களைவிட பாமரர்களே இதனைத் தீவிரமாகப் பின்பற்றினர்.

ஆனால், இன்று மெத்தப் படித்த மேதாவிகள் கேரளாவிலும், தமிழக ஐ.ஐ.டி. வளாகத்திலும் "இளமைத் திருவிழா' என்ற பெயரில் அரங்கேற்றிய வக்கிரக் காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் காண்பிக்கப்பட்டபோது அது விரசத்தின் உச்சமாக இருந்தது.

தொடுதலும், தழுவுதலும், முத்தமிடுதலும் பொது இடத்தில் இளமையின் சுதந்திரமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இளைஞர்களில் ஒரு சாரார் முழக்கமிடுகின்றனர்.

தொடுதலின் வண்ணங்கள் திசைமாறுகின்றன.

மண்ணின் மணம் காப்போம்; மானத்தையும்தான்!



கட்டுரையாளர்: எழுத்தாளர். தஞ்சாவூர்க்கவிராயர்

இணையதளத்தில் வரன் தேட 'ஆதார்' அவசியம்

புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் தான், இணையதளங்களில், திருமண பதிவு களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம், மோசடி நபர்களின் மாய வலையில், பெண்கள் சிக்காமல் பார்த்துக் கொள்ள, மத்திய அரசு முயன்று உள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த, அமைச்சர் மேனகா தலைமையிலான, மத்திய, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, 'திருமணத்திற்கான வரன் தேடி, திருமண இணைய தளங்களில் பதிவு செய்யும் ஆண்களின் முகவரி, தொழில் போன்ற விவரங்களை, இணையதள நிர்வாகிகள் சரிபார்க்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. மொபைல் போன் எண்ணை மட்டும் தெரிவித்து, போலியான பெயர், மோசடியான முகவரி போன்ற விவரங்களை தெரிவித்து, பெண்களை ஏமாற்றும் போக்கு, திருமண இணையதளங்களில் அதிக அளவில் நடைபெறுவதை அடுத்து, இந்த கிடுக்கிப்பிடி உத்தரவை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்து உள்ளது.


அதன்படி, ஆதார் அடையாள அட்டை இருக்கும் ஆண்கள் அல்லது பிற, போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களின் பதிவுகளை மட்டும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, திருமண பதிவு இணைய தளங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த ஆதாரங்களை இணையதளத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் எனவும், மத்திய அரசு உத்தரவிட்டுஉள்ளது.

இதன் மூலம், ஒரே நபர், பல இணையதளங்களில், பல மோசடியான பெயர்களில், திருமணத்திற்கு வரன் தேடி, பெண்களை ஏமாற்றும் போக்கு தடுக்கப்படும் என்பது, மத்திய அரசின் நம்பிக்கை. மேலும், தவறான எண்ணத்தில் பெண்களை பின்தொடர்பவர்கள், அவர் களின் முகவரி, ஆதாரங்கள் போன்ற விவரங்களை தேடுவோருக்கு சிக்கல் தான். எனினும், இந்த புதிய நடைமுறை, அடுத்த ஆண்டு முதல் தான் நடைமுறைக்கு வருகிறது.

'ஆதார்' - சில சந்தேகங்கள்

* ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், நேர்மையானவர்களாகவும், நியாய மானவர்களாகவும் இருப் பார்கள் என்ற மத்திய அரசின் எண்ணம் நியாயம் தானா?


* ஆதார் அடையாள அட்டை பெற அளிக்கப்பட்ட சான்றுகள் எந்த விதத்தில் சரியானவை என, முறையாக உறுதி செய்யப்படவில்லை.


* இந்த அடையாள அட்டை யில் உள்ள புகைப்படத்தை எளிதில் மாற்றி விட வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை.


* ஆதார் அடையாள அட்டை யில், அட்டைதாரரின் முகம் மட்டும் தான் தெரியும். அவரின் உயரம், எடை, நோய் போன்ற விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை.


* இதனால், ஆதார் அடையாள அட்டை இருந்தால் போதும், அந்த நபர் நியாயமானவர் என, பொத்தாம் பொதுவாக கருத முடியாது.

NEWS TODAY 25.05.2026