Thursday, December 18, 2014

Shanti theatre goes the multiplex way too

The 53-year-old theatre will be brought down soon, and the new complex will include a multiplex with smaller screens. Photo: V. Ganesan

The gentle strains of ‘En Mannava’ from the Rajinikanth-starrer Lingaa fill the lobby of Shanti theatre on Anna Salai.

The film may probably be last to be screened at the iconic theatre, which holds a special place in the hearts of fans of nadigar thilagam Sivaji Ganesan. Now, a commercial complex will come up in its place.

The 53-year-old theatre will be brought down soon, and the new complex will include a multiplex with smaller screens. Sources close to the Sivaji Ganesan family, which owns the theatre, confirmed the developments.

Work on demolishing the building housing the popular Hotel Saravana Bhavan on the complex has already begun. “All the tenants have left and the main complex is likely to be brought down after the run of Lingaa,” sources said.

The theatre is synonymous with films associated with Sivaji Ganesan, his son Prabhu and grandson Vikram Prabhu. It even has a plaque with all of Sivaji Ganesan’s films and references to his other on-screen achievements. ‘Karnan’, in which Sivaji played the title role, was re-released in digital format six months ago and enjoyed a successful 50-day run, a pointer to the late thespian’s popularity among the Tamil film audience.

“The easy availability of pirated versions of even new films has hit the film industry very hard. A large part of the erstwhile fan base has become more interested in television now. Thus, maintaining large theatres has become very difficult,” a theatre staff said.

Sources in the building industry say that unlike many other office and commercial complexes on the northern end of Anna Salai that face a severe shortage of space for vehicle parking, Shanti Theatre has always had abundant parking space.

மாணவிக்கு நள்ளிரவுக்குள் மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


புதுடெல்லி

திருச்சி மருத்துவ கல்லூரியில் மாணவி சாகித்யாவுக்கு நள்ளிரவுக்குள் இடமளிக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப இரவு 12 மணி வரை அலுவலகத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

தகுதி பெற்றவர்கள்

தமிழகத்தை சேர்ந்த மாணவி கே.சாகித்யா மற்றும் மாணவர் எல்.கணபதி நாராயணன் ஆகிய இருவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இந்தியா முழுவதும் அனுமதி வழங்கியதன் அடிப்படையில், தமிழகத்தின் திருச்சியில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆகிய இரு மருத்துவ கல்லூரிகளும் சில நிபந்தனைகளோடு 50 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுப்பிரிவில் 150 இடங்களை 2014–15–ம் ஆண்டில் நிரப்பலாம் என்று அனுமதிக்கப்பட்டன. இதன்படி மனுதாரர்கள் இருவரும் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.

69 சதவீத இடஒதுக்கீடு

ஆனால் மேற்குறிப்பிட்ட இரு மருத்துவ கல்லூரிகளும் தமிழக அரசு அறிவித்தபடி 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதால் பொதுப்பிரிவை சேர்ந்த 46 மாணவர்களே இந்த கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மனுதாரர்கள் இருவரும் 197.25 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் அந்த கல்லூரிகளில் அனுமதி கிடைக்கவில்லை.

இது ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது. எனவே மனுதாரர்களுக்கு அந்த மருத்துவ கல்லூரிகளில் அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.

நள்ளிரவுக்குள் அனுமதி

இந்த மனு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் வாதாடினார். தமிழக அரசு சார்பில் வாதாடிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆகியோர், சாகித்யா மட்டுமே அனுமதிக்கு தகுதியுடைவர் என்றும், கணபதி சுப்பிரமணியத்துக்கு தகுதி இல்லை என்றும் கூறினார்கள்.

உடனே, மாணவி சாகித்யாவுக்கு தகுதி இருக்கிறது என்றால் அவர் ஏன் இதுவரை அனுமதிக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவி சாகித்யாவை இன்று (நேற்று) நள்ளிரவுக்குள் திருச்சியில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

திறந்திருக்க வேண்டும்

மேலும் மாணவி கல்லூரியில் சேரும் வகையில் இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி வரை கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.

மற்றொரு மனுதாரரான கணபதி சுப்பிரமணியத்தின் மனு மீது நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்



பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அது வருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.

பி.எட்., எம்.எட். படிப்பின் காலம் 2 வருடமாக உயர்வு

நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வது உண்டு. அந்த அளவுக்கு மாணவர்களை வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கு உன்னை அர்ப்பணி என்றும் கூறுவது உண்டு.

கல்வியில் உலக நாடுகளோடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத்தயார் என்ற நிலையில் உள்ளது.

இதுவரை ஆசிரியர் ஆகும் முன்பாக, பட்டப்படிப்பு படித்த மாணவ-மாணவிகள் ஆசிரியர் பயிற்சி பெறுவார்கள். பெற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் பி.எட். படிப்பு மற்றும் எம்.எட். படிப்பு காலம் தலா ஒரு வருடம் தான்.

ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அதற்காக பயிற்சி காலத்தை 2 வருடமாக்கவேண்டும் என்று தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) முடிவு செய்து அறிவித்துள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் பி.எட். மற்றும் எம்.எட். படிப்பு 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

வருகிற கல்வி ஆண்டில் ...

மாணவர்களின் கல்வித்திறனை மேலும் அதிகரிப்பதற்காக ஆசிரியர்களின் பயிற்சி காலத்தை 2 வருடமாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இதை வருகிற கல்வி ஆண்டில் (2015-2016) அமல்படுத்துகிறோம்.

மேலும் தமிழக அரசின் அனுமதி பெறுவதற்காக ஏற்கனவே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு சிண்டிகேட் அனுமதி மற்றும் தமிழக அரசின் அனுமதிக்கு வைக்கப்பட உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் இந்த பி.எட். படிப்புக்கும், எம்.எட். படிப்புக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம்: ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும் புதிய முறை அறிமுகம் மானிய தொகை பெறுவது எப்படி? ஐ.ஓ.சி. செயல் இயக்குனர் விளக்கம்

சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானியதிட்டத்தில் ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மானிய தொகை பெறுவது எப்படி? என்பது குறித்து ஐ.ஓ.சி. செயல் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

சமையல் கியாஸ் மானியம்

மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர்(எல்.பி.ஜி.) நேரடி மானியதிட்டத்தை கடந்த ஜூன் 1–ந்தேதி அறிமுகப்படுத்தியது. இதையடுத்து நாட்டில் 291 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் ஜனவரி 1–ந்தேதி முதல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக கடந்த 3 மாதங்களாக சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் கியாஸ் சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ள 1 கோடியே 53 லட்சத்து 45 ஆயிரத்து 14 வாடிக்கையாளர்களில் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்கள் மட்டுமே இதுவரை மானியதிட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 45.78 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக சென்னையில் 6.59 சதவீதம் பேரும் மானியதிட்டத்தில் இணைந்துள்ளனர்.

சுமார் 9 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மானியத்தை பெற விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு முகாம்கள் மூலம் மானிய திட்டத்தில் வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ஒரே விண்ணப்பம்

இந்தநிலையில் வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப புதிய விண்ணப்ப படிவம் ஒன்றையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.

அதிகாரிகள் தகவல்

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின்(ஐ.ஓ.சி.) செயல் இயக்குனர் யு.வி.மனூர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை வங்கி கணக்கில் சேர்ப்பதற்கு, ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்ப படிவம் 1 மற்றும் 2–ம், ஆதார் அடையாள அட்டை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு விண்ணப்ப படிவம் 3 மற்றும் 4–ம் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமம் மற்றும் குழப்பத்தை கருத்தில்கொண்டு v 1.0 என்ற ஒரே ஒரு விண்ணப்ப படிவம்(தமிழ்–ஆங்கிலம் இரண்டு மொழியிலும்) மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவம் கியாஸ் விநியோகஸ்தர்களிடம் நேரடியாக கிடைக்கும். www.mylpg.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய விண்ணப்ப படிவ மூலமும் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் ‘பகுதி–ஏ, பகுதி–பி, பகுதி–சி’ என்று 3 பிரிவுகள் இடம் பெற்றிருக்கும். அந்த விண்ணப்ப படிவத்தை 2 பிரதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆதார் எண் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் விண்ணப்ப படிவத்தின் ஒரு பிரதியில் ‘பகுதி– ஏ மற்றும் பகுதி–பி’யை பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தர்களிடம் வழங்க வேண்டும். மற்றொரு பிரதியில் ஏ, பி, சி ஆகிய 3 பகுதிகளையும் பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள் ‘பகுதி–ஏ மற்றும் பகுதி–சி’யை பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தரிடமோ அல்லது வங்கியிடமோ சமர்ப்பிக்க வேண்டும்.

மானியம் பெற விரும்பாத வாடிக்கையாளர்கள் பகுதி–‘ஏ’வை மட்டும் பூர்த்தி செய்து கியாஸ் விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த நவம்பர் 15–ந்தேதி முதல் இத்திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு முதல் சிலிண்டர் பதிவு செய்தவுடன் ஏற்கனவே அறிவித்தபடி ரூ.435 நிரந்தர முன்பணம் அவர்களுடைய வங்கி கணக்கில் சேர்க்கப்படும். அதன்பிறகு இணைந்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.568 நிரந்தர முன்பணமாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மானிய தொகை எப்படி கிடைக்கும்?

சென்னையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் 404 ரூபாய் 50 காசு விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மானிய தொகையாக ரூ.345 வழங்குகிறது. இந்த மானியத் தொகையில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் இருக்கும்.

சிலிண்டர் விலை 404 ரூபாய் 50 காசு, மானிய தொகை ரூ.345 சேர்த்து மொத்தம் 749 ரூபாய் 50 காசு கொடுத்து விநியோகஸ்தர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு 48 மணி நேரம் முதல் 78 மணி நேரத்துக்குள் மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை சேர்ந்துவிட்டதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மானிய திட்டத்தில் இணையாத வாடிகையாளர்களுக்கு ஜனவரி 1–ந்தேதி முதல் மார்ச் 31–ந்தேதி வரை கருணை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும்.

ஜூலை மாதத்துக்கு பிறகு...

கருணை காலம் முடிவடைவதற்குள் மானிய திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு, விநியோகிப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானியதொகை மொத்தமாக சேர்க்கப்பட்டுவிடும்.

கருணை காலத்திலும் மானிய திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை சந்தை விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும். ஆனால் அவர்களுக்குரிய மானியதொகை எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

ஜூலை 1–ந்தேதிக்கு பிறகு இத்திட்டத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் இணைந்தால் இணைந்த தேதியில் இருந்து தகுதிக்கு தகுந்தபடி நிரந்தர முன்வைப்புத் தொகை மற்றும் மானியம் அனுமதிக்கப்படும். இதுவரை மானியதிட்டத்தில் சேராத வாடிக்கையாளர்களுக்காக ஜனவரி 15–ந்தேதி வரை பல்வேறு கட்ட சிறப்பு முகாம்களை இந்திய ஆயில் நிறுவனம் நடத்த உள்ளது. வரும் 20–ந்தேதி(சனிக்கிழமை) வேலூர், திருவண்ணமலையிலும், 21–ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் கொளத்தூர், அண்ணாநகர், போரூர், பல்லவபுரம், மீஞ்சூர் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், கெடத்தூர்பேட்டை, பள்ளிப்பட்டு, செங்கல்பட்டு உள்பட இடங்களிலும், மதுரை, திருச்சி, கோவை உள்பட மாநில முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, என்.பி.சி.ஐ. தலைவர் ஜி.எம்.கிரிதர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்(சமையல் கியாஸ் விற்பனை பிரிவு)துணை பொதுமேலாளர் தத்தோ பாத்தியாயா, மூத்த மேலாளர் வைதேகி, தலைமை தொடர்பு மேலாளர் வி.வெற்றி செல்வகுமார், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் மண்டல மேலாளர் வினோத் குமார், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் (சமையல் எரிவாயு விற்பனை பிரிவு) ஒருங்கிணைப்பாளர் ஆர்.சோமசுந்தரம் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டி செயல்


logo

இஸ்லாம் பல சாத்வீகமான, அன்பு நெறியான கோட்பாடுகளை உலகுக்கு போதித்து வருகிறது. அதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்ந்து கொடூர செயல்களில் ஈடுபட்டுவருகிறது. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானில் இஸ்லாமிக் ஸ்டேட்ஸ் (ஐ.எஸ்.) அமைக்கவேண்டுமென தலீபான் இயக்கம் மிகத்தீவிரமாக உள்ளது. தலீபான் இயக்கத்தை அழிக்க, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. பாகிஸ்தானும், அமெரிக்காவின் உதவியையும் பெற்று, தலீபான் இயக்கத்தை தங்கள் நாட்டில் கால் ஊன்றிவிட அனுமதிக்கக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் இயக்கம் ஆட்சி நடத்தியபோது, 2001–ம் ஆண்டில் அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது பாகிஸ்தானில், அமெரிக்காவிற்கு விரோதமாகவும், தலீபான்களுக்கு ஆதரவாகவும் 13 தீவிரவாத அமைப்புகள் ஆளுக்கொரு பக்கம் குரல் கொடுத்த நிலையில், 2007–ம் ஆண்டு அவர்கள் அனைவரும் நாங்கள் எல்லாம் ஒன்றாக இணைகிறோம். எங்கள் அமைப்பிற்கு பெயர், ‘தெஹ்ரி–இ–தலீபான் பாகிஸ்தான்’ என்று பெயர் சூட்டிக்கொண்டனர். பாகிஸ்தானுக்கு உள்ளேயே இருந்துகொண்டு, பாகிஸ்தானுக்கே எதிரான தலீபான் அமைப்புக்கு ஆதரவான இந்த தீவிரவாத இயக்கத்திற்கு பைதுல்லா மசூத் என்பவரே தலைவராக இருந்தார். பாகிஸ்தான் இந்த இயக்கத்தை நசுக்க எவ்வளவோ முயற்சிசெய்தது, ஆனால் முடியவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா அனுப்பிய ஆள் இல்லாத நவீன விமானம், இந்த இயக்க தலைவர் பைதுல்லா மசூத்தை சுட்டு வீழ்த்தி கொன்றது. அவருடைய இடத்தில் ஹக்கிமுல்லா மசூத் என்பவர் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 2012–ம் ஆண்டில் கல்விக்காக குரல் எழுப்பிய மலாலா என்ற மாணவி மீது தலீபான் இயக்கம் துப்பாக்கி சூடு நடத்தியதால், ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உயிர்பிழைத்து இப்போது பாகிஸ்தானுக்குள் செல்லமுடியாத நிலையில் இருக்கிறார். இந்த துணிச்சலான செயலுக்காக அவர் நோபல் பரிசு வாங்கிய சில நாட்களில் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லை அருகில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள ராணுவத்தினர் நடத்தும் ஒரு பொது பள்ளிக்கூடத்தில், சின்னஞ்சிறு குழந்தைகள் சாம்பல் நிறத்தில் முழுக்கால் சட்டையும், பச்சை நிறத்தில் பிளேசர் கோட்டும் அணிந்து உற்சாகமாக பாடம் படித்துக்கொண்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் அந்த பள்ளிக்கூடத்திற்கு பின்னால் உள்ள அடக்கஸ்தலம் வழியாக 9 தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவ உடையில் உள்ளே நுழைந்து பிஞ்சு மலர்களான அந்த மாணவர்களை ஒவ்வொரு வகுப்பிலும் உள்ளே நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டு இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், உங்களை எல்லாம் கொல்லப்போகிறோம், பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டே கொன்று இருக்கிறார்கள். இதில், 132 குழந்தைகளும், 9 ஆசிரியர்களும் பலியாகி இருக்கிறார்கள். 250 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள். பிழைத்தவர்கள் மறக்கவே முடியாத இந்த சம்பவமாக, அவர்கள் கண் எதிரிலேயே ஒரு ஆசிரியையை நாற்காலியில் கட்டி உயிரோடு தீவைத்து இருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற, கோழைத்தனமான செயலை செய்துவிட்டு, நாங்கள்தான் செய்தோம் என்று பெருமையுடன் கூறி, ராணுவத்தினரை பழிவாங்க செய்ததாக சப்பைக்கெட்டு கட்டியிருக்கிறார்கள். ராணுவத்தினரை பழிவாங்க செய்யவேண்டும் என்றால், ராணுவத்துடன் மோதவேண்டும்.

பாகிஸ்தான் தன் நாட்டுக்குள் செயல்பட்ட தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும். தீவிரவாத இயங்கங்களை இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும். இப்போது பாகிஸ்தானுக்கு தீவிரவாதத்தின் வலி புரிந்து இருக்கும். தன்நாட்டிலும் தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும், அண்டை நாடான இந்தியாவுக்குள்ளும் தீவிரவாதிகளை அனுப்புவது எவ்வளவு தவறு என்று இப்போது புரிந்திருக்கும். மொத்தத்தில், தங்கள் நாட்டிலும் தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும், இந்தியாவிற்குள் அனுப்புவதற்காக தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும் நிறுத்தவேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்கிறது என்று பிரதமர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள பள்ளிக்கூட மாணவர்கள் எல்லாம் நேற்று மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த துயரமான சம்பவத்திற்காக உலகமே கண்ணீர் வடிக்கிறது.

Wednesday, December 17, 2014

மனநிறைவைத் தரும் விஷயம் இது.

கல்வி என்பது அறிவைப் பெருக்கிக் கொள்ள என்பதில் இருந்து, நல்ல சம்பளம் ஈட்டுவதற்காக என்று மாறி பல ஆண்டுகளாகி விட்டது. நல்ல சம்பளம், சமூகத்தில் மரியாதை என்று இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சுமார் 1015 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மவுசு, நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை உருவாக்கின.
தற்போது நாட்டில் மிகவும் உயர்ந்த கல்வி நிறுவனமாக அனைவராலும் பார்க்கப்படுவது ஐ.ஐ.டி. என்கிற இந்திய தொழில்நுட்ப மையங்கள்தான். நாடு முழுவதும் 16 ஐஐடிகள் இயங்கி வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பலத்த வரவேற்பு கிடைக்கிறது.

இந்த ஐஐடிகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மிகப்பெரிய திருவிழாதான். அதாவது அந்த கல்வியாண்டில் படிப்பை முடிக்கும் மாணவர்களை, தங்களுடைய நிறுவனங்களுக்கு கொத் திச் செல்ல பல்வேறு நிறுவனங்கள் வரிசைகட்டி நிற்கும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடங்கின. முதல் நாளிலேயே, ஆண்டு சம்பளம் ரூ.1.50 கோடி என்று மாணவர்களைக் கவர்ந்தன பல வெளிநாட்டு நிறுவனங்கள். மிகக் குறைந்த ஆண்டு சம்பளமே ரூ.30 லட்சம்.

ஆனாலும் ஒரு கோடி ரூபாய் ஆண்டு சம்பளம், பல்வேறு சலுகைகள், வெளிநாட்டில் வேலை என்று வாய்ப்பு வந்தபோதும், சில மாணவர்கள் அந்த வாய்ப்பை உதறித் தள்ளியுள்ளனர். அவ்வாறு மூன்று மாணவர்கள், ஒரு மாணவி இந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறிய காரணம்  தங்களுடைய படிப்புக்கு, திறமைக்கு ஏற்றதாக இந்த வேலை இல்லை என்று ஒரு மாணவனும், ஒரு மாணவியும் கூறியுள்ளார். மிகவும் குறைவான சம்பளம் கிடைத்தபோதும், தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ள நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். மற்ற இருவர், தொடர்ந்து மேற்படிப்பு படிக்க உள்ளதால், அந்த வேலைவாய்ப்பை உதறியுள்ளனர்.

மாணவர்கள் சம்பளத்துக்காக மட்டுமே படிக்கவில்லை. தங்களுடைய திறமையை மதிக்கும், அது மேம்படுத்தக் கூடிய இடத்தைச் தேடி செல்கின்றனர். சம்பளத்தை இழந்தாலும், தங்களுடைய சுயசிந்தனையை இந்த மாணவர்கள் இழக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது போன்ற இளைஞர்களின் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. மனநிறைவைத் தரும் விஷயம் இது.

TIMES OF INDIA..CHENNAI

Dec 17 2014 : The Times of India (Chennai)
Pak Taliban's depraved revenge leaves 145 dead, 132 of them schoolchildren
Peshawar:
TNN


Army School Hit, Terror Group Says Only Older Kids Targeted

Picking the softest of soft targets, the Pakistani Taliban on Tuesday launched a savage and cowardly attack on a school, essentially for children of military families, spraying machine-gun fire on kids behind desks, leaving 132 of them dead. By the time the nine-hour siege ended, 145 people, including the terrorists, were killed and 121 others injured. It was the worst attack on children anywhere in the world since the Beslan mass killing by Chechen Islamist rebels in 2004.

Addressing a press conference in Peshawar after conclusion of the rescue operation, military spokesman Major General Asim Saleem Bajwa said the Tehrik-e-Taliban attack on the Army Public School and Degree College was carried out by seven terrorists wearing suicide jackets.

He said the attackers planned to stay for long. “The ration and ammunition which they brought along was sufficient for several days,“ Major General Bajwa said.

At the time of the attack, he said, around 1,100 students and staff were in the school.The Special Services Group (SSG), which carried out the operation, rescued about 960 students and their teachers. The dead included the school's woman principal Tahira Qazi. Another woman teacher was burnt to death.

Claiming responsibility , Taliban spokesman Muham mad Umar Khorasani said, “We selected the army school for the attack because the government is targeting our families and women. We want them to feel the pain.“ He said they had issued instructions not to harm small children. The Pakistani Taliban terrorists who attacked the Army Public School and Degree College here on Tuesday had planted improvised explosive devices on the premises making rescue operations difficult and leading to a nearly day-long gunbattle.

Dressed in uniforms of paramilitary force, the attackers entered the school premises on Warsak Road around 10am. A security official said many of the casualties were caused by suicide blasts. Taliban spokesman Muhammad Umar Khorasani said, “We took this extreme step as revenge. We will target every institution linked to the army unless they stop operations and the extra-judicial killing of our detainees.“ “We have instructed our men not to harm small children even if they are the sons of senior military or civilian leaders,“ he claimed.

“When the firing started, students ran to their classrooms. The militants were entering every class and killing children,“ Mudassir Awan, a worker at the school, said. Aamir Ali, a second-year student who survived the attack, said, “I was sitting with my classmates in the corridor when firing began. We rushed to the classroom but were soon chased by two clean-shaven gunmen, dressed in uniforms of Frontier Constabulary , a paramilitary force. They told us to read `kalima' and then started firing indiscriminately. All my classmates were killed but I survived.“

Waqarullah Khattak, a teacher, said he told students to lie down on the floor when they heard gunshots. “There was blood everywhere, limbs and pieces of children's flesh could be seen where the bombers blew themselves up,“ a security official said. “They were keen on killing as many students as possible.“







Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...