Thursday, December 18, 2014

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !



நாடகக்கலையின் தொடர்ச்சி தான் சினிமா .எல்லாவிதமான நாடகங்களிலும் நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள் .சினிமாவிலும் அப்படியே .பிரச்சனைகளுக்கு நடுவே வாழும் நம்மைச் சிரிக்க வைப்பது கடினம் . நகைச்சுவை நடிகர்கள் இதைச் சாத்தியப்படுத்தினார்கள் .தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நகைச்சுவை நடிகர்கள் ஏராளம் . T.S.பாலையா ,M.R.ராதா ,N.S.கிருஷ்ணன் ,K.A.தங்கவேலு ,காளி .N.ரத்னம் ,சந்திரபாபு ,V.K.ராமசாமி , நடிகர் கருணாநிதி,நாகேஷ் ,சுருளிராஜன் ,சோ ,என்னத்த கண்ணையா , தேங்காய் சீனிவாசன் ,கவுண்டமணி ,செந்தில் ,கல்லாபெட்டி சிங்காரம் ,S .S.சந்திரன் ,ஜனகராஜ் ,உசிலைமணி ,ஓமக்குச்சி நரசிம்மன் ,லூசு மோகன் , வெண்ணிறாடை மூர்த்தி , குமரிமுத்து , குண்டு கல்யாணம் , மௌலி ,விசு என்று பெரிய பட்டியல் உள்ளது .

T.S.பாலையாவும் , M.R.ராதாவும் அசாத்தியமான நடிகர்கள் .T.S.பாலையா,எந்தவிதமான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்காமல் நடிக்கக்கூடியவர் . M.R.ராதா , தனது கலகக் குரல் மூலம் கதாநாயகன் , நகைச்சுவை ,வில்லத்தனம் என்று பகுத்தறிவு கருத்துக்கள் பரப்பியவர் .
காளி .N.ரத்னம் , M.G.R.ருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் . " சபாபதி " என்ற படத்தைப் பாருங்கள் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் .

N.S.கிருஷ்ணன் , சிரிப்புடன் சிந்தனைகளைக் கலந்தவர் . சிந்தனைகளை வழங்குவதிலும் ,செல்வத்தை வழங்குவதிலும் கடைசி வரை வள்ளலாக வாழ்ந்தவர் . சந்திரபாபு , சிறந்த பாடும் முறையாலும் ,நடனத்தாலும் வசீகரித்தவர் . அவர் பாடிய பாடல்கள் இன்று வரை பெருமளவில் ரசிக்கப்படுகின்றன . K.A.தங்கவேலு , தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் சிரிப்பாக மாற்றும் கலை இவருக்கு மட்டுமே வாய்த்தது . நடிகர் கருணாநிதி , வித்தியாசமான குரலாலும் ,உடல் மொழியாலும் சிரிக்க வைத்தவர் .

நாகேஷ் ,சிறந்த நடிகர் ,வித்தியாசமான உடல் மொழியால் நகைச்சுவையைத் தாண்டியும் நடித்தவர் .V.K.ராமசாமி , குணச்சித்திர நடிகரும் சிரிக்க வைக்கலாம் என்பதை உணர்த்தியவர் . தனது சிரிப்பால் நம்மைச் சிரிக்கவைத்தவர் .இவரை நினைக்கும் போதெல்லாம் இவரது சிரிப்பொலி ( க்கா கா கா க ) கேட்கிறது . அதுவும் V.K.ராமசாமியும் நாகேஷும் சேர்ந்துவிட்டால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது .சுருளிராஜன் , சுருட்டைமுடியுடன் வேறுபட்ட குரலாலும் ,உடல் மொழியாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் .

சோ , அறிவுப்பூர்வ அரசியல் வசனங்களாலும் , அலட்டிக்காத நடிப்பாலும் சிரிப்பை வரவைத்தார் .என்னத்த கண்ணையா , சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் பல காலமாக நடித்து வருபவர் ( வரு...ம் ஆனா வரா...து ) .தேங்காய் சீனிவாசன் , இழுத்து இழுத்து பேசியே நகைச்சுவையைத் தெளித்தவர் . கல்லாபெட்டி சிங்காரம் , எளிய தோற்றத்தாலும் ,குரலாலும் ,உடல் அசைவுகளாலும் சிரிப்பைக் கொடுத்தவர் ( டார்லிங் டார்லிங் டார்லிங் ).

கவுண்டமணி , செந்திலுடன் இணைந்து நீண்ட காலம் நகைச்சுவை உலகை ஆட்சி செய்தார் . நையாண்டி வசனங்களால் கூட நடிக்கும் ஏறக்குறைய அனைத்து நடிகர்களையும் கிண்டல் செய்தவர் . குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தவர் . விளம்பர வெளிச்சம் இல்லாமல் இன்றுவரை வாழ்பவர் .
செந்தில் , மிக எளிமையான ,கோமாளித்தனமான தோற்றத்தாலும் ,வித்தியாசமான கேள்விகளாலும் (அண்ணே அண்ணே )சிரிக்க வைப்பவர் . கவுண்டமணியுடன் இணைந்தும் தனித்தும் கலக்கியவர் .

ஜனகராஜ் , சிரிப்பின் மூலம் சிரிப்பை வரவழைத்தவர் . லூசு மோகன் , பேச்சின் நடுவே பிரேக் போட்டுக்கொண்டே சென்னைத் தமிழை நகைச்சுவையாக்கியவர் . வெண்ணிறாடை மூர்த்தி ,வாயால் வண்டி ஓட்டிக்கொண்டே ,இரட்டை அர்த்த வசனங்களால் புகழ் பெற்றவர் . மௌலி மற்றும் விசு ,வசனங்களால் பெயர் பெற்றார்கள் . S .S.சந்திரன் , அவ்வப்போது அரசியல் வசனங்கள் பேசியவர் . உசிலைமணி( " நரசூஸ் காபி பேஷ் பேஷ் நன்னா இருக்கு " இன்னும் காதில் கேட்கிறது ),ஓமக்குச்சி நரசிம்மன் , குமரிமுத்து மற்றும் குண்டு கல்யாணம் , தங்களது வேறுபட்ட உடல் அமைப்பால் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள் .

ஒட்டுமொத்தத்தில் நல்ல குரல் வளம் உடையவர்களும் , தங்கள் உடல் மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர்களால் தான் நம்மைச் சிரிக்கவைக்க முடிந்தது .வசனத்தை உச்சரிக்கும் விதத்திலும் ,வேறுபட்ட உடல் மொழியாலும் சிரிப்பைக் கொண்டுவருவதுதான் நகைச்சுவையாளர்களின் சாமர்த்தியம் .

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !

பதில் சொல்லத் தெரியவில்லை

ஒட்டல்களில் சர்வருக்கு இனாம் வழங்குவது இப்போதெல்லாம் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. அதிலும் இப்போது பணத்துக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதால், ஐந்து ரூபாய்க்குக் குறைத்து "டிப்ஸ்" கொடுப்பது மிகவும் கௌரவக் குறைச்சலாகக் கருதப்படுகிறது.

பில் ரசீதை அவர்கள் ஒரு லெதர் ஃபோல்டரில் வைத்துத் தரும்போது, அதில் 2 ரூபாய் நாணயத்தை வைப்பதென்பது, சாப்பிடுபவருக்கே அவமானத்தைத் தரும்.

பல ஓட்டல்களில் என்ன சாப்பிட்டாலும் மொத்தத் தொகை, 5, 0 என்ற எண்களில் முடிவதாக இருக்கிறது. நீங்கள் 5 ரூபாய் நாணயத்தை வைக்கக்கூடாது என்பதற்காகவே இரண்டு 2 ரூபாய், ஒரு 1 ரூபாய் நாணயத்தையும் பத்து ரூபாய் தாள்களையும் வைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதன் பொருள், "மரியாதையாக பத்து ரூபாய் டிப்ஸ் வை' என்பதுதான்.

இனி, அந்த ஊர் பக்கமே தலை வைப்பதில்லை என்ற நிலைமை இருந்தால், எந்த கௌரவத்தையும் பார்க்காமல், பில்லை மட்டும் எடுத்துக்கொண்டு கவுண்டருக்குப் போகலாம்.

அப்படியே போனாலும், இந்த டிப்ஸூக்கு "கூட்டாளி'யான கேஷியர் உங்களை அவமானப்படுத்தாமல் பணத்தை வாங்கி கல்லாவில் போட மாட்டார்.

நீங்கள் நூறு ரூபாய் பில்லுக்கு 100 ரூபாய் நோட்டையே தந்தாலும், வேற நோட்டு கேட்கிற அளவுக்கு உங்கள் மீது கடுப்பை உமிழ்வார். வேண்டுமென்றே நிற்க வைப்பார். மிகவும் கந்தலான நோட்டுகளை பொறுக்கி எடுத்து, பிச்சை போடுவதைப்போல மீதித்தொகையை உங்களிடம் கொடுப்பார். உங்களைப் பழி வாங்க இதுதான் அவர்கள் கையாளும் வழி.

டிப்ஸ் என்பது ஒருவரின் சேவையை மெச்சிக் கொடுக்கப்படும் பாராட்டுத்தொகை. ஆனால், இப்போது பார்சலுக்கே டிப்ஸ் கேட்கிறார்கள். பார்சல் சொன்னால் "உட்காருங்கள்' என்று நாற்காலியைக் காட்டுகிறார்கள்.

ஒருவர் பில்லை லெதர் ஃபோல்டரில் வைத்துக் கொடுக்கிறார். அதாவது, நாம் டிப்ஸ் வைத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். இது எந்த வகையில் நியாயம்?

இதற்கு மறுப்புத் தெரிவித்து, நாமே கவுண்டரில் பில் செலுத்தினால், பார்சலில் சட்னி இருக்காது அல்லது குறைவாக இருக்கும். சாம்பார் இருக்காது அல்லது சாம்பார் பாக்கெட் லூசாக கட்டப்பட்டிருக்கும். நீங்கள் வீட்டுக்குப்போவதற்குள்ளாக சாம்பார் கொட்டி களேபரமாகியிருக்கும்.

இதெல்லாம் ஒழிகிறது. சர்வர்களில் பலரும் இன்முகத்துடன் சேவை செய்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

நண்பருடன் ஓட்டலுக்குப் போயிருந்தேன். ரூ.145 பில் வந்தது. நான் லெதர் ஃபோல்டரில் ரூ.200 வைத்தேன். எனக்கு மீதித்தொகையாக 5 பத்து ரூபாய் நோட்டுகள், இரண்டு ரூபாய் நாணயம் இரண்டு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைக்கப்பட்டது. வேறுவழியின்றி ரூ.10}யை டிப்ஸாக வைத்துவிட்டு எழுந்தேன். நண்பர் அந்த பத்து ரூபாயை எடுத்து என் பாக்கெட்டில் வைத்துவிட்டு, "வா போலாம்" என்றார்.

"அது டிப்ஸ், நான் சேஞ்ச் எடுத்துக்கிட்டேன்' என்று அவருக்கு விளக்கினேன்.

அவர் கொஞ்சம் சத்தமாகவே பேசினார்: "சட்னி வேணுமா, சாம்பார் வேணுமான்னு ஆத்தா மாதிரி கேட்டுக் கேட்டு பரிமாறணும். பொண்டாட்டி மாதிரியே என் முன்னாடி வெச்சிட்டு உள்ளே போய், நான் கையக் கழுவினதும் எட்டிப் பாக்கறதுன்னா.... என்ன ம...வுக்கு நான் ஓட்டலுக்கு வர்றது' என்றார்.

அவர் சொல்வதில் நியாயம் இருந்தது (அதை சொல்லும் தைரியமும் அவருக்கு இருந்தது).

இன்னொரு நண்பர் இந்த விவகாரத்தில் ரொம்ப தாராளமாக இருப்பவர் (அவருக்கு சம்பளத்துடன் கிம்பளமும் கிடைப்பதால் அவர் எவ்வளவு தாராளமாகவும் இருக்கலாம்). அவர் பத்து ரூபாய் டிப்ஸ் கொடுத்தால் போதும் என்றாலும், ரூ.20 டிப்ஸ் கொடுப்பார். சர்வர் ஜொள்ளு ஒழுக தேங்க்ஸ் என்று அவரை வாசல் வரை வந்து வழியனுப்புவார்.

அவர்தான் சொன்னார்: "நம்ம ஊர்ல டிப்ஸ் கொடுத்தா தேங்க்ஸ் சொல்றாங்க. ஆனா ஃபாரின்ல, i appreciate என்பார்கள்'. சொல்ல முடியாது. அந்த நடைமுறை நம்ம ஊரிலும் வந்துவிடும்.

இந்த நண்பர் இன்னொன்றும் செய்வார். வாசலில் வண்டியை எடுக்கப்போகும்போது, காக்கி உடையில் நின்று வணக்கம்போடுகிற, வாகனங்களை "அங்கே நிறுத்துங்க', "இங்க நிறுத்துங்க' என்று விரட்டுகிற காவலாளிக்கும் டிப்ஸ் கொடுப்பார்.

அதற்கும் அவர் விளக்கம் சொன்னார்: "நீதான் எல்லா புஸ்தகமும் படிப்பியே... பாரடைஸ் லாஸ்ட் படிச்சிருக்கிறியா? அதுல மில்டன் சொல்றான்:They also serve, Those who stand and wait.

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

வாழ்த்து அட்டைகளும் குறுஞ்செய்திகளும்!



பரபரப்புகள் ஏதுமற்ற நம் பால்யத்தில் பண்டிகைகள் தொடங்கிவிட்டாலே புத்தாடை, பலகாரங்களைப் போலவே வாழ்த்து அட்டைகளும் விற்றுத் தீர்க்கும். ஆடை வாங்கக்கூட அத்தனை யோசிக்க மாட்டார்கள். ஆனால் மனம் விரும்பிய வடிவத்தில் வாழ்த்து அட்டை கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் சுணங்கித்தான் போவார்கள்.

தீபாவளியைப் போலவே பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளும் சக்கைப்போடு போடும். சுருள்முடி நெற்றியில் விழ, பெருமிதமாகச் சிரிக்கும் நடிகர் திலகம், கையில் சாட்டையுடன் பாட்டுப் பாடும் மக்கள் திலகம் தொடங்கி, ரஜினிகாந்த், கமலஹாசன் உருவப் படங்கள் அச்சிட்ட வாழ்த்து அட்டைகள் எல்லாம் கடைக்கு வந்த அன்றே காணாமல் போகும் மாயமும் நடந்திருக்கிறது.

இரு புறமும் செங்கரும்புகள் நிற்க, நடுவே பொங்கல் பானையுடன் மாடுகள் இருக்கும் வாழ்த்து அட்டையே பொங்கல் திருநாளின் மகத்துவத்தையும் மகிழ்ச்சியையும் சொல்லிவிடும். புத்தாண்டு வாழ்த்து அட்டைகளில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களையும் குழந்தைகளையும் பார்க்கலாம்.

இப்படித் தேடித் தேடி அட்டைகள் வாங்கி, பின்பக்கம் தங்கள் கைப்பட நாலு வார்த்தை எழுதி, அடியில் வீட்டில் இருக்கிறவர்களின் பெயர்களை எல்லாம் வரிசையாகப் பட்டியலிட்டு, மறக்காமல் ஸ்டாம்ப் ஒட்டி, தபால்பெட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது மனம் முழுக்கப் பரவுகிற மகிழ்ச்சி இருக்கிறதே அதை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. அதுவும் இளவட்டங்கள் தங்கள் முறைப்பெண் இருக்கும் வீட்டுக்கு வாழ்த்துச் செய்தியோடு, காதல் செய்தியையும் இலைமறை காய்மறையாக அனுப்புகிற வைபவமும் அரங்கேறும். பண்டிகைக்கு ஒரு வாரம் இருக்கும்போதே தபால்காரரின் சைக்கிள் மணி நம் வீட்டு வாசலில் ஒலிக்கிறதா, யாராவது வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கிறார்களா என்று காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. விஞ்ஞான வளர்ச்சி பெருகப் பெருக, வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறைந்துவிட்டது.

'டேய் மாமா வீட்டுக்கும் பெரியம்மா வீட்டுக்கும் கார்டு போடணும்டா' என்று சொல்கிற பெரியவர்களும் அருகிவருகிறார்கள். வீட்டுக்கு வீடு தொலைபேசி வந்த பிறகு தொலைபேசியில் சம்பிரதாயத்துக்கு வாழ்த்து சொல்வதோடு நின்றுவிட்டோம். அதுவும் ஆளுக்கு இரண்டு செல்போன் என்ற நிலை வந்ததும், 'ஹாப்பி திவாலி'என்று குழுச் செய்தி அனுப்பிவிட்டு வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறோம்.

பண்டிகை தினத்தில் குறுஞ்செய்திகள் அனுப்பினால் அதிகமாகப் பணம் செலவாகும் என்று நான்கு நாட்கள் முன்னதாகவே குறுஞ்செய்தி அனுப்புகிற கனவான்களும் சீமாட்டிகளும் இருக்கிறார்கள். அனுப்புகிறவருக்கும் மகிழ்ச்சி இல்லை, வாழ்த்துச் செய்தியைப் படிக்கிறவருக்கும் புன்னகை இல்லை. வாழ்வின் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களையும் ஆனந்தங்களையும்கூடத் தொலைத்துவிட்டோம் என்பதே புரியாமல், வாழ்த்துகளைச் சொல்லித் திரிகிறோம். இரண்டு இயந்திரங்களுக்கு இடையே பரிமாறப்படுகிற தகவல்கள்கூட மனித மனங்களுக்கு நடுவே நிகழ்வதில்லை.

தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையைப் பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு வந்து, யாரெல்லாம் அனுப்பியிருக்கிறார்கள், யார் பெயரையெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பரபரப்புடன் பார்க்கிற சுகத்தை இந்தத் தலைமுறை அனுபவித்திருக்கிறதா? பிறந்த வீட்டில் இருந்து வந்த அட்டையைப் படிக்க முடியாமல் மகிழ்ச்சியில் கண்கள் பளபளக்க எத்தனை பெண்கள் நின்றிருப்பார்கள்?

விடுமுறை விண்ணப்பம் தவிர வேறு எதற்கும் பேனா மூடியைத் திறக்காத இந்தத் தலைமுறை எதை மகிழ்ச்சி எனக் கொண்டாடுகிறது? அடித்துப் பிடித்து சொகுசுப் பேருந்தில் டிக்கெட் எடுத்துப் பெரிய பெரிய கடைகளில் வாங்கிய இனிப்புகளை அள்ளிக்கொண்டுச் செல்வதிலேயே பண்டிகை முழுமை பெற்றுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறது.

உண்மையில் இதுவா கொண்டாட்டம்? இதுதானா மகிழ்ச்சி? ஒரு கிலோ இனிப்பைவிட ஒரு வரி வாழ்த்து உங்கள் மனதை அடுத்தவருக்குப் புரியவைத்துவிடாதா? உங்கள் கையெழுத்தின் நெளிவில் உங்கள் நேசம் புரிந்துகொள்ளப்படாதா? சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் கிராமங்களிலும் இதே நிலைதான்.

"என் சின்ன வயசுல நிறையப் பேருக்கு வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கேன். சில சமயம் அட்டை வாங்கக் கையில காசு இருக்காது. நானே தபால் கார்டுல படம் வரைஞ்சு அனுப்பியிருக்கேன். இப்போ சிலர் போன்ல வாழ்த்துச் சொல்றாங்க. இன்னும் சிலர் ஒரு மெசேஜ் அனுப்பிடறாங்க. என்ன பண்றது? காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாமே மாறிடுச்சு. அதுக்கேத்த மாதிரி சந்தோஷமும் குறைஞ்சுடுச்சு" என்று வருத்தத்துடன் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த அரங்கநாதன்.

திண்டுக்கல் சுப்பிரமணியத்தின் அனுபவமும் அதையேதான் ஆமோதிக்கிறது. "பண்டிகை வந்தா போதும் நான் என் தம்பிகளோட சேர்ந்து வாழ்த்து அட்டை வாங்கக் கிளம்பிடுவேன். யாருக்கெல்லாம் வாழ்த்து அனுப்பணும்னு அம்மா சொல்லுவாங்க. யாருக்கு அனுப்புறோமோ அதுக்கு ஏத்த மாதிரி வாழ்த்து எழுதுவோம். என் தம்பியோட கையெழுத்து அழகா இருக்கும். அதனால அவன்தான் நிறைய அட்டையில எழுதுவான். பொங்கல், தீபாவளி வந்தா சொந்தங்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்புவோம்னு சொன்னா என் மகன் ஆச்சரியமா பார்க்கிறான். அவங்களுக்கு போன்ல சொல்றது மட்டும்தான் வாழ்த்து. என்ன பண்றது? இந்தத் தலைமுறை மகிழ்ச்சிகளோட அறிமுகம் இல்லாமதான் வளருது" என்று நிதர்சனத்தைச் சொல்கிறார் சுப்பிரமணி.

இந்தத் தலைமுறைக்கு எதுவும் வாய்க்கவில்லை என்று சொல்வதைவிட அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தரலாமே. நேரமில்லை என்று சப்பைக்கட்டுவதை விட்டுவிட்டு நாமே நம் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்து அட்டை அனுப்பினால், அந்த அன்பு நிச்சயம் எதிரொலிக்கத்தான் செய்யும்

SMRT TO EXTEND TRAIN AND BUS SERVICES ON CHRISTMAS EVE



Public transport provider SMRT will be extending its train services and selected bus services on Dec 24, Christmas Eve. SMRT runs the North-South, East-West and Circle Lines of Singapore's MRT network, and the Bukit Panjang LRT service.

There will also be changes to the operating hours of selected Premium and Express bus services, it said in a press release Thursday.

The last North- and South-bound trains towards Marina Bay and Jurong East MRT stations will depart Orchard MRT station at 1.30am.

The last South-bound train towards Marina South Pier station will depart Orchard MRT station at 1.21am.

WARNING ISSUED TO 14 MOTORISTS CAUGHT LEAVING VEHICLE ENGINES IDLING


SINGAPORE - Warning letters were issued on Wednesday to 14 motorists who had left their vehicle engines idling while stationary in a three-hour enforcement exercise by the National Environment Agency (NEA) in Ang Mo Kio.

NEA also distributed pamphlets and anti-idling car decals to 236 motorists, as part of the exercise to promote compliance with anti-idling regulations, which NEA officers had found many motorists to be unaware of. Those who left their engines on were workers loading or unloading goods, taxi drivers waiting for customers, parents waiting for school-going children, or simply drivers taking a break in their vehicles.

Under Environmental Protection and Management (Vehicular Emissions) regulations, it is an offence to leave the engine of a motor vehicle running when it is stationary for reasons other than traffic conditions. Those breaching the law can be fined up to $5,000.

In a statement, the NEA urged the public to turn off their engines after parking for better air quality and public health.

"In the last three years, NEA had taken action on over 8,000 cases of idling engines and these comprise issuance of advisories, warning letters and fines to errant drivers," it said.

Those who spot idling vehicles are encouraged to report them, providing the vehicle registration number, as well as location, date, and time of the incident.

They can call the NEA hotline on 1800-CALL NEA (1800-2255 632), or use the smartphone app called myENV. They can also choose to send in videos to contact_nea@nea.gov.sg

டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்க்கும் வாய்ப்பை ஆராயுங்கள்

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம், குன்னவலத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை வேறு கல்லூரிகளில் சேர்க்கும் வாய்ப்பை ஆராயும்படி அதிகாரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பிரதிநிதிகள் மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்யுடன், அமைச்சர் ஜே.பி. நட்டாவை புதன்கிழமை அவரது அமைச்சகத்தில் சந்தித்தனர். அப்போது, தருண் விஜய் நட்டாவிடம் கூறியதாவது:

"சென்னையை அடுத்துள்ள டி.டி. மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்தது. இதனால், எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களில் சிலர் அண்மையில் தீக்குளிப்பிலும் ஈடுபட முயன்றனர். கல்வியைத் தொலைத்த ஏக்கத்தில் மாணவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். கல்லூரியின் தவறால் அப்பாவி மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? மருத்துவக் கவுன்சிலுக்கும் டி.டி. கல்லூரிக்கும் இடையே நடைபெறும் பிரச்னையில் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. இந்த விஷயத்தில் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த மத்திய சுகாதாரத் துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தருண் விஜய் கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்ட அமைச்சர் நட்டா, சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளை வரவழைத்து, "இது மிகவும் தீவிரக் கவனத்தில் கொள்ள வேண்டிய பிரச்னை. இந்த விஷயத்தில் மாணவர்கள் கல்வியைத் தொடரும் வகையில் அவர்களை வேறு கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பை ஆராய்ந்து வியாழக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

தில்லியில் கடந்த சில வாரங்களாகத் தங்கியுள்ள மாணவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய சுகதாரத் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகளைச் சந்தித்து தங்கள் பிரச்னை தொடர்பாக மனு கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், தருண் விஜய்யுடன் அவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டதையடுத்து, அவரது உதவியுடன் ஜே.பி. நட்டாவை புதன்கிழமை மாணவர்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

பின்னணி: குன்னவலம் டி.டி. மருத்துவக் கல்லூரியில் 2011-ஆம் ஆண்டில் 103 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் முதலாம் ஆண்டு தேர்வு எழுதி அதன் முடிவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், அக்கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முடிவுதான் என்ன?

Dinamani

தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம் பெற்றதாக சமூக நலத் துறை அலுவலக ஊழியர் கைது', "பட்டா வழங்க லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது', "மின் இணைப்பில் பெயர் மாற்ற லஞ்சம்: மின் வாரிய அலுவலக ஊழியர் கைது' } நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகள் வராத நாள் இல்லை.

எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குவோம். அதற்கு அடுத்த நிலையில் நம் கண்முன் நிற்பது லஞ்சம்.

நடுத்தர வர்த்தகத்தைச் சேர்ந்த ஒரு பணியாளரின் நீண்ட நாள் கனவு சொந்தமாக வீடு கட்டுவது. புறநகர்ப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் குறைந்த விலையில் வாங்கிப் போட்ட மனையில் வீடு கட்டலாம் என யோசித்து, எந்த வங்கியில் கடன் பெறுவது என முடிவு செய்து, முனைப்புடன் பணியைத் தொடங்குவார்.

வங்கியின் மேலாளரை அவர் அணுகுவதற்கு ஏகப்பட்ட இடைத்தரகர்கள். கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை லஞ்சமாக அளித்தீர்களானால், எந்தவித விசாரணையும், கோப்புகள் ஆய்வும் இல்லாமல் கடன்தொகையைப் பெற்று விடலாம் என தமது வலையை வீசுவர்.

ஒவ்வோர் இடைத்தரகரின் வேண்டுகோளும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். தான் எடுத்து வைத்த முதல் அடியே பொதுஜனத்தை மிரளச் செய்யும்.

அடுத்து, கட்டட வடிவமைப்புக்கு உள்ளாட்சி நிர்வாகங்களிடம் அனுமதி பெறுவது, தாற்காலிக மின் இணைப்புக்கு அனுமதி, பின்னர் கட்டுமானப் பணி தொடங்கியவுடன் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைச் சமாளிப்பது, இல்லையெனில், கூடுதலாகப் பணம் கொடுத்து பொருள்களைப் பெறுவது, கட்டுமானப் பணி முடிந்தபின் வீட்டுக்கான வரி விகிதத்தை நிர்ணயிப்பது, குடிநீர்க் குழாய் இணைப்பு பெறுவது, பாதாள சாக்கடை இணைப்புப் பெறுவது என ஒவ்வொரு பணிக்கும் உரிய தொகையுடன், கூடுதலாக ஒரு தொகையை லஞ்சமாக அளித்து, பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு பொதுஜனம் தள்ளப்படுகிறார்.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறச் சென்றால், அங்கு விண்ணப்பக் கட்டணத்துடன் கூடுதலாக சிறு தொகையை அன்பளிப்பாக வைக்க வேண்டிய கட்டாயம்.

மெதுவாகச் சென்ற காரை நிறுத்தி, "காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றாய், அதனால் அபராதம் செலுத்த வேண்டும்' என்று போக்குவரத்துக் காவலர் ஓட்டுநரை அணுகும்போது, நூறு ரூபாய் நோட்டை கையில் அழுத்தினால், ஏதும் கூறாமல் அப்படியே திரும்பிப் போய் விடுவார்.

லஞ்சம், ஊழல் என்பது இந்தியாவில் நிலவும் பிரச்னை மட்டுமல்ல. அனைத்து நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள பிரச்னை.

2012-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலக மக்கள்தொகையில் 25 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் காரியத்தைச் சாதிக்க லஞ்சம் கொடுத்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் பொதுச் சேவையில் ஈடுபடுவோர் அதிகம் லஞ்சம் பெறுகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. லிபியா, லைபிரியா ஆகிய நாடுகளில் லஞ்சம் கொடுத்து பணியை முடிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அமெரிக்காவைப் பொருத்தவரையில், 14 பேரில் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளார். அலுவலகங்களில் பணியாற்றுவோர், காவல் துறையில் பணிபுரிவோர், கல்வியாளர்கள், நீதிபதிகள் ஆகியோர் லஞ்சம் பெறுவதில் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆய்வின்போது, 36 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூறிய கருத்தின்படி, காவல் துறையே லஞ்சம் பெறுவதில் முன்னிலை வகிக்கிறது. லஞ்சம் பெறுவோர் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் 54 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்து தங்களது காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர்.

உலக நாடுகளில், கடந்த மூன்று ஆண்டுகளில் லஞ்ச, லாவண்யம் அதிகரித்துள்ளது.

லஞ்சம் தொடர்பாக 175 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டதில் இந்தியா கடந்த ஆண்டு 94-வது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது அது 85-வது இடத்தில் உள்ளது.

அதேபோல கடந்த ஆண்டு 80-ஆவது இடத்தில் இருந்த சீனா, இந்த ஆண்டு 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.

டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் லஞ்சம் பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது எனவும் தெரியவருகிறது.

தேர்தலின்போது, வாக்காளர்கள் வாக்களிக்கப் பணம் பெறுகின்றனர். இது லஞ்சம் இல்லையா என அரசியல்வாதி ஒருவர் வசனம் பேசுவதுபோல ஒரு திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் பெறுவதை நியாயப்படுத்துகிறார்களா? இதற்கு முடிவுதான் என்ன?

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...