Saturday, December 20, 2014

ஆசைப்படாதே பாலகுமாரா



அமைச்சர்களுக்கு திருவள்ளுவர் கூறும் இரண்டாவது அறிவுரை, அமைச்சராக இருப்பவர் அரசர் விரும்புவதைத் தாமும் விரும்பக் கூடாது என்பது.

உங்கள் பாஸை (Boss-ஐ) மன்னரா கவும் உங்களை அமைச்சராகவும் நினைத்துக் கொண்டால், வள்ளுவர் கூறும் அறிவுரைகள் உங்களுக்கு சாலப் பொருந்தும்! இது என்ன? அரசர் விரும்புவதை அமைச்சர் விரும்பக்கூடாதா? அநியாயமாக இருக்கிறதே -- பாஸ் விருப்பப்பட்டால் அந்தப் பொருளை நானும் விரும்பக்கூடாதா? என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

அதெல்லாம் சரி, அரசருக்குக் கீழே தானே மந்திரி? அரசர் நினைத்ததைச் செய்யமுடியும் -- எதுவாக இருந்தாலும் -- செய்ய முடியும்! மந்திரியால் அது முடியுமா? ஒரு புலவர் அரசவைக்கு வந்து அவரைப் புகழ்ந்து பாடுகின்றாரே, மன்னருக்கு எட்டு பாட்டு என்றால் நம்மையும் புகழ்ந்து ஒரு பாட்டாவது பாடட்டுமே என்று மந்திரி நினைக்கலாமா?

அலுவலகத்தில் எல்லோரும் பாஸை புகழ்ந்து பேசுவது இயற்கை. அதற்கு நீங்கள் ஆசைப்படக்கூடாது. பாஸ் தாமதமாக வரலாம். நீங்கள் அதைச் செய்ய முடியாது. அவர் மதிய உணவுக்கு வெளியில் போவதால் நீங்களும் போக நினைக்காதீர்கள். அவர் விழாவில் ஆறு புகைப்படம் எடுத்துக்கொண்டால் நீங்களும் போய் நிற்காதீர்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த அணுகு முறை மாறியிருப்பது போலத் தோன்றலாம். ஆனால் ஒரு பாஸை பெயர் சொல்லி கூப்பிடும் உரிமை இருப்பதாலேயே பாஸின் அடிப்படை மனப்பான்மை மாறி விட்டதாக எண்ணி ஏமாந்து விடாதீர்கள். அப்பாக்களும், ஆசான்களும் எக்காலத்திலும் மதிப்பையும் மரியாைதயையும் எதிர் பார்ப்பார்கள்! பாஸ்களும் அப்படித்தான்!!

‘சார், சார்” என்று அவரைத் தூக்கி வைத்து அவர்; தனி, உயர்வானவர் என்று சொல்லுங்கள், நடந்து கொள்ளுங்கள். பெரும்பாலான பாஸ்கள் தங்கள் கீழ்வேலை செய்பவர்கள் தங்களைப் போல, தங்களுக்குச் சமமாக எந்த விதத்திலும் -- நடந்துகொள்வதை விரும்புவதில்லை.

கொஞ்சம் கீழே வைத்துப் பார்ப்பதையே விரும்புகின்றார்கள். தயவு செய்து இந்த உளவியல் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படி நடந்துகொண்டால் சர்வ வல்லமை பொருந்திய அரசனைப் போல உங்கள் பாஸும் உங்களுக்கு நிலையான நன்மைகளைத் தருவார். உங்களை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோவார்.

முக்கியமாக நீங்கள் அவரை விட புத்திசாலியாகவோ திறமைசாலியாகவோ இருந்து விட்டால், எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நீங்கள் பாஸின் இடத்திற்குச் சவாலாக இருப்பதாக எடுத்துக் கொண்டு விடுவார். எனவே அடக்கியே வாசியுங்கள்!

குறளின் குரலில் இதைக் கேட்போமா?

மன்னர் விழைய விழையாமை மன்னரால்

மன்னிய ஆக்கம் தரும்

-சோம வீரப்பன்
somaiah.veerappan@gmail.com

அண்டவெளி ஆபத்து

Dinamani

இப்போது 50 வயதைக் கடந்த அனைவருக்கும் 1979 ஜூலையில் உலகம் முழுவதும் பயமுறுத்திய விஷயம் குறித்து நினைவிருக்கலாம். அமெரிக்கா துவங்கி அமிஞ்சிக்கரை வரை பயந்து நடுங்கிய சம்பவம் அது.

அமெரிக்காவால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஸ்கைலாப் என்ற செயற்கைக்கோள் பல ஆண்டுகள் முடிந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்தது. அது பூமியை நோக்கி பயணப்பட்ட பின்னர் தான் உலகம் முழுவதும் அஞ்சி நடுங்க வேண்டி வந்தது.

ஆளாளுக்கு இங்கே விழும், அங்கே விழும் என்று பயமுறுத்தினர்.

இறுதியில் ஒருவழியாக மேற்கு ஆஸ்திரேலிய நகரான பெர்த்தில் ஒரு தேவாலய வளாகத்தில் விழுந்தது. நல்லவேளையாக உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. இட சேதம் தான் ஏற்பட்டது. (அதற்கான நஷ்டஈடு கோரி அமெரிக்காவுடன் தேவாலயம் பலஆண்டுகளாக மல்லுக்கட்டி வருவது தனிக்கதை).

கட்டுப்பாட்டை இழந்த ஸ்கைலாப் தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் ஜூலை 11-இல் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அது விழுந்ததோ ஆஸ்திரேலியாவின் பெர்த்தில். இதற்கு கணக்கீட்டில் ஏற்பட்ட 4 சதவீத வேறுபாடு என்று சப்பைக்கட்டு கட்டியது நாசா.

வானை ஆய்வு செய்யச் சென்ற ஸ்கைலாப், மண்ணில் மாந்தர்க்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. வானில் இருந்து பூமியை நோக்கி வரும் பொருள்கள் புவிஈர்ப்பு விசைக்குள் நுழைந்ததும் எரிந்துவிடும் என்ற நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம் அது. அதன்பின் தான் விண்வெளியில் கழிவுகளாக சுற்றிவரும் காலம் முடிந்த செயற்கைக் கோள்கள் குறித்த பயம் ஏற்படத் தொடங்கியது.

நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு செயற்கைக்கோள்களை அனுப்புகின்றன. கைப்பேசி இணைப்பு, தொலைக்காட்சி இணைப்பு, தட்பவெப்பம், பூமி ஆராய்ச்சி, பிற நாடுகளை உளவு பார்ப்பது போன்ற பல காரணங்களுக்காக ஏராளமான செயற்கைக் கோள்கள் ஏவப்படுகின்றன. பூமத்திய ரேகையி இருந்து 22,300 மைல் தொலைவில் இவை நிலை நிறுத்தப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் காலம் உண்டு. அதன்பின் அவை செயலிழந்துவிடும்.

செயலிழந்த செயற்கைக் கோள்கள் அங்கேயே விடப் படுவதால் அண்டவெளி குப்பைத் தொட்டியாகிக் கிடக்கிறது.

பொதுவாக, ஒவ்வொரு நாடும் விண்வெளிக்கு அனுப்பும் செயற்கைக்கோள்கள் அந்த நாட்டுக்கேற்ற பாதையில் தான் இயங்கும். அது செயலிழந்ததும் இடமாற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய செயற்கைக்கோளை நிலைநிறுத்துவர். செயலிழந்த கோள்களுக்காக விண்வெளியில் குப்பைத் தொட்டி பகுதியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முறையாக செயலிழந்தவற்றைத் தான் அந்த இடத்துக்கு கொண்டு சென்று போட முடியும். இடையில் தொடர்பை இழப்பவை, ஏற்கெனவே வீணாக சுற்றிவரும் செயற்கைக்கோள்கள், அவற்றின் சிதறல்கள் போன்றவை இப்போதைய பிரச்னைக்கு காரணம்.

இந்தச் சிதறல்களுக்கு மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி அதிகம்.

1 செ.மீ. விட்டம் கொண்ட துகள் மோதினாலே, செயற்கைக்கோளின் செயல்பாடு பாதிக்கப்படும்.

10 செ.மீ. விட்டம் கொண்ட துகள் மோதினால், சந்தேகமே இல்லாமல் செயற்கைக்கோள் செயலிழந்துவிடும். இதற்குக் காரணம் இவற்றின் வேகம். நிமிடத்துக்கு பல ஆயிரம் கி.மீ. வேகத்தில் சுற்றுபவை இவை.

இப்போதைய நிலையில் பூமியில் இருந்து 600 கி.மீ. தொலைவில் உள்ள துகள்கள்தான் பயமுறுத்தி வருகின்றன. அவை எந்த நேரத்திலும் பூமிக்குள் நுழையும் அபாயம் உள்ளது. ஸ்கைலாப் காலத்தைவிட இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.

எனவே, அவை பூமிக்குள் நுழைந்தாலும் பாதிப்புகளை குறைக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

அதேசமயம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தகவல் தொடர்பு இணைப்புகள் பாதிக்கப்படுவ தையும் அவர்கள் கணக்கில் கொண்டுள்ளனர்.

எனவே, செயலிழந்த செயற்கைக் கோள்கள் பூமியில் நுழையும் முன்பே அழித்துவிட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அளவில் சிறிய துகள்கள் குறித்து பிரச்னை இல்லை.

பெரிய துகள்கள்தான் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. அவை எரிந்தாலும் நெருப்புக் கோளங்களாக பல ஆயிரம் கி.மீ. வேகத்தில் வரும்போது ஏற்படுத்தும் பாதிப்பை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

ஒரு செயற்கைக்கோள் பயணிப்பதும், பயனளிப்பதும் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதற்குப்பின்னால் இதுபோன்ற ஓர் ஆபத்து இருப்பதும், அதைத் தடுக்க இரவுபகலாக விஞ்ஞானிகள் முயற்சித்து வருவதும் திரைமறைவில் நடந்துகொண்டிருக்கிறது.

காணாமல் போனவை

விண்வெளிக் கழிவுகள் விளைவாக பல செயற்கைக்கோள்கள் காணாமல் போயுள்ளன. ஏவப்பட்ட ஒரு மாதத்தில் 1981 ஜூலை 21-இல் ரஷியாவின்

காஸ்மாஸ் 1257 என்ற செயற்கைக்கோள் காணாமல் போனது. இதற்கான காரணம் என்ன என இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், கழிவுகள்

மோதியது தான் இதற்குக் காரணம் என்பது விண்வெளி அறிஞர்களின் முடிவு. இதே போன்று காஸ்மாஸ் 1484- செயற்கைக் கோளும் 1993, அக்.18இல்-இல் காணாமல் போனது. 1993 ஆக.11-இல் ஒலிம்பஸ்-1, 1996 ஜூலை 24-இல் பிரான்ஸின் சீரிஸ், 2006 மார்ச் 29-இல் ரஷியாவின் ஏஎம்11 என காணாமல் போனவை மற்றும் பாதிக்கப்பட்டவையின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 22-இல் ரஷியாவின் பிளிட்ஸ் செயலிழந்தது. இதற்கு சீன ஏவுகணை சோதனையின் போது உருவான துகள் காரணம் என்கிறார்கள். விண்வெளியில் அதிகக் கழிவுகளை ஏற்படுத்திய நிகழ்வாகக் கருதப்படுவது, 2009-ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்தது. காஸ்மாஸ் 2251 என்ற செயற்கைக்கோளும், இரிடியம் 33 என்ற செயற்கைக்கோளும் விநாடிக்கு 11 கிமீ வேகத்தில் மோதிக்கொண்டன. அதாவது, மணிக்கு 42 ஆயிரம் கிமீ வேகம். இதில் இரண்டும் செயலிழந்து விண்வெளியை குப்பைத்தொட்டியாக்கின.

5500 டன் கழிவுகள்

விண்வெளியில் தற்போது 5500 டன்னுக்கும் மேற்பட்ட கழிவுகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரம் பொருட்கள் 10 செ.மீ. விட்டத்திற்கு உள்பட்டவை. ஒரு லட்சம் பொருட்கள் ஒரு செ.மீ. விட்டத்திற்கு உட்பட்டவை. இதில் பூமியை நெருக்கி உள்ளவை 2000 டன். பூமத்திய ரேகையில் இருந்து 900 கி.மீ. முதல் ஆயிரம் கி.மீ. உயரத்தில் தான் அதிகமான குப்பைகள் உள்ளனவாம். 600கிமீ. உயரத்துக்கு கீழ்வரும் போது தான் அவை புவிஈர்ப்புவிசைக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

விண்ணுக்கு அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோள் ரஷியாவின் ஸ்புட்னிக். இது 1957-இல் அனுப்பப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியவண்ணம் உள்ளன. 1998}ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி 2,556 செயற்கைக் கோள்கள் பயனின்றி அண்டவெளியில் சுற்றி வந்தன. 1997}ஆம் ஆண்டில் மட்டும் 150 புதிய செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. அதில் அமெரிக்காவின் பங்கு 68. ரஷியா 50, ஐரோப்பா 19, சீனா 8, ஜப்பான்3, இந்தியா மற்றும் பிரேசில் தலா 1.

அமெரிக்காவின் பங்கு

சுமார் 17 ஆயிரம் செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றைக் கொண்டு வந்து நிலை நிறுத்திய ராக்கெட்டுகள், அவற்றின் உதிரிப் பாகங்கள் அண்டவெளியில் சுற்றி வருகின்றன. இதில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 6,600.

தொடர்ந்து அனைத்து நாடுகளும் செயற்கைக் கோள்களை அனுப்பி வரு கின்றன. இப்போதைய நிலையில் வானில் 2,465 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. கட்டுப்பாட்டை இழந்த வையும் அவற்றின் கழிவுகள், சிதறல்களும் கணக்கிட முடியவில்லையாம்.

வேலைவாய்ப்பு பாதிக்கக்கூடாது

logo

படித்தவர்கள் எல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்கிறார்களே, நமக்கு அந்த பாக்கியம் இல்லையே என்று, படிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ஒருகாலத்தில் ஏங்கினார்கள். வெளிநாட்டில் வேலை என்பது அவர்களுக்கு பகல் கனவாக இருந்தது. ஆனால், அவர்களின் கனவும் 1969–ம் ஆண்டின் கடைசியில் இருந்து நனவாகத்தொடங்கியது. இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்று அழைக்கப்படும் அரபு நாடுகளில் இந்தகால கட்டங்களில்தான் முதலாவதாக பெட்ரோல், டீசல் தயாரிக்க உதவும் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டது. முதலில் எண்ணெய் எடுக்கும் தொழிலுக்காகவும், பின்பு கச்சா எண்ணெய் மூலம் கிடைத்த வருவாயைக்கொண்டு தொடங்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணிகளுக்காகவும் துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்பட 7 நாடுகளில் கட்டிடவேலை, தச்சு வேலை, மின்சார வேலை, டிரைவர் வேலை போன்ற பல வேலைகளுக்காக இந்தியாவில் இருந்து ஏராளமானவர்களை வேலைக்கு எடுத்தனர். ஓட்டல்களில், வணிக வளாகங்களில், வீட்டு வேலைகளுக்காக படிக்காத பெண்களும் வேலைக்காக அரபு நாடுகளுக்கு செல்லமுடிந்தது. அங்கே கடுமையான வெயிலில், உடலை வருத்தி வேலைபார்க்க வேண்டிய நிலை இருந்தாலும், இங்கு இந்தியாவில் படித்தவர்கள் வாங்கும் சம்பளத்தைவிட, அதிக தொகையை அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பியதால், இந்த நாடுகளுக்கு சென்று வேலைபார்க்க பலத்த போட்டி நிலவியது. சில நேரங்களில் போலி ஏஜெண்டுகளை நம்பி அங்கு சென்று, எதிர்பார்த்த வேலை ஒன்று, அங்கு கிடைத்த வேலை ஒன்று, ஏஜெண்டு சொன்ன சம்பளம் ஒன்று, கிடைக்கும் சம்பளம் ஒன்று என்ற நிலையில் ஏராளமானவர்கள் வாடும் நிலை ஏற்பட்டது.

இதுபோல வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் அங்கு சென்று ஒருசில நேரம் சம்பளமும் போதிய அளவு கிடைக்காமல், பெரும் கஷ்டத்தில் ஊருக்கும் வரமுடியாத அனுபவமும் ஏற்படுகிறது. இவ்வாறு வீட்டு வேலைக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசாங்கம் சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, வீட்டு வேலைக்காக இந்தியாவில் இருந்து ஆட்களை எடுக்கும்போது, அவர்களுக்காக 2,500 அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏறத்தாழ ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு வங்கி கியாரண்டி கொடுக்கவேண்டும். துபாய் உள்பட 6 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் உள்ள மற்ற 5 நாடுகள் இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டாலும், துபாய் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தங்கள் நாட்டில் இவ்வாறு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் குடிமக்களுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. வீட்டு வேலைக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதற்கு தடைவிதிக்க திட்டமிட்டுவருவதாக வந்த செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் மட்டும் 7 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில், 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் வீட்டு வேலைதான் செய்கிறார்கள். இந்தியா தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகிறது, அனைத்து தொழிலாளர் ஒப்பந்தங்களையும் ரத்துசெய்துவிடுவோம் என துபாய் கூறுகிறது. இப்படி ஒரு தடை அமலுக்கு வந்தால், குவைத்தில் வேலைபார்க்கும் வாய்ப்பை எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும், இளைஞர்களும் இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குவைத் உயர் அதிகாரிகளுடன் அங்குள்ள இந்திய தூதர் சுனில் ஜெயின் நடத்திய பேச்சுவார்த்தையும் எந்த பலனும் அளிக்கவில்லை. இத்தகைய வங்கி கியாரண்டி ஆண் தொழிலாளர்களுக்கு தேவையில்லை, ஆனால் பெண் தொழிலாளர்களுக்கு மட்டும் வேண்டும் என்பதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ஏற்கனவே சவுதி அரேபிய இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில், புதிய பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கும் திட்டங்களில் குவைத் மன்னர் தீவிரமாக இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், படிக்காதவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதை இத்தகைய நடவடிக்கைகள் தடுத்துவிடக்கூடாது. எனவே, தொடர்ந்து இந்திய அரசாங்கம், துபாயோடு பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு காணவேண்டும்.

Friday, December 19, 2014

மெளனத்தின் வலிமை

ஒரு ஊரில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். நேரத்தைச் செலவழிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் அவர். இந்த வேலையை இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும் என ஒரு கணக்கும் வைத்திருப்பார். அதனால் எப்போதும் கைக்கடிகாரம் அணிந்திருப்பார்.

ஒருநாள் அதை அணிந்தபடி தன் வயலுக்கு வந்து வேலையாட்களை மேற்பார்வை செய்வதில் மும்மரமாக இருந்தார். அப்போது திடீரெனக் கையில் ஏதோ குறைவது போலப் பட்டது. பார்த்தால் கையில் இருந்த கடிகாரத்தைக் காணவில்லை. எங்கே கழட்டி வைத்தோம் என அவருக்கு நினைவில்லை. கொஞ்ச நாளாகக் கடிகாரம் தொய்வாக இருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் எங்காவது நழுவி விழுந்திருக்குமா எனச் சந்தேகித்தார்.

பெரியவருக்குக் கைக்கடிகாரம் இல்லாமல் வேலையே ஓடவில்லை. அவருக்கு அது மூச்சுக் காற்று மாதிரி. வேலை ஆட்களைக் கூப்பிட்டுத் தேடச் சொன்னார். அவர்களும் வயல் வெளி, பெரியவர் வந்த வரப்பு, வீடு வரையும் தேடினார்கள். கடிகாரம் கிடைக்கவில்லை. வேலை ஆட்கள் சோர்ந்துவிட்டார்கள். மதியமும் வந்துவிட்டது. வேலை ஆட்கள் உணவு அருந்தச் சென்றுவிட்டார்கள்.

எல்லோரும் கிளம்பிச் சென்ற பிறகு ஒரே ஒருவன் மட்டும் வயலுக்கு அருகில் கண்ணை மூடி தியானம் செய்தான். பெரியவர் அவனை விநோதமாகப் பார்த்தார்

தியானத்தில் இருந்தவர் ஐந்து நிமிடங்களில் கைக் கடிகாரத்துடன் வந்தார். பெரியவர் ஆச்சரியமும் சந்தோஷமும் மேலிட அதை வாங்கிக்கொண்டு, “அவர்கள் அத்தனை பேர் சேர்ந்து தேடும்போது கிடைக்காத கடிகாரம் எப்படி உனக்குக் கிடைத்தது?” எனக் கேட்டார். அதற்கு அவன், எல்லோரும் சேர்ந்து தேடும்போது ஒரே கூச்சல் குழப்பமுமாக இருந்தது. மேலும் யாருக்கும் சிரத்தையும் இருந்திருக்காது. அவர்கள் சென்ற பிறகு சத்தம் இல்லை. கண்ணை மூடித் தியானித்தபோது அந்தக் கைக் கடிகாரத்தின் சத்தத்தைக்கூட உணர முடிந்தது. அந்த வைக்கோல் போருக்குள்தான் இருந்தது என்றான்.

40% COLLEGE STUDENTS CONSUME ALCOHOL

எதற்கும் எல்லை உண்டு

Dinamani

கடிதப் போக்குவரத்து முற்றிலும் குறைந்து, கைப்பேசிக் குறுந்தகவல் முறையும் பின்தங்கிவிட்டதாகத் தோன்றும் நிலையில், இப்போது பெரும்பான்மையானோரை இணைக்கும் பாலமாக இருப்பவை முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் - ஆகிய மூன்றும்தான்.

முகம் பாராமலேயே உயிருக்குயிராய்ப் பழகிய கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையாரின் "சங்க கால நட்பு', இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை உலகம் முழுவதும் பரவலாக இருந்த "பேனா நட்பு' ஆகியவற்றின் புதிய பரிமாணம்தான் இவை.

வங்கியில் கணக்கு இருக்கிறதோ இல்லையோ, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் கணக்கு இல்லையென்றால், நாம் நவீன அறிவியல் உலகில் பல படிகள் பின்னால் இருப்பதாகத் தோன்றிவிடும்.

உலக மக்கள்தொகையில் 126 கோடிப் பேர் முகநூல் பயன்படுத்துகின்றனர். அதாவது, 13 பேருக்கு ஒருவர் முகநூல் இணைப்பில் உள்ளார்.

இந்தியாவில் 9 கோடிப் பேர் முகநூலைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள்; 27 சதவீதம் பேர் பெண்கள். முகநூல் பயன்படுத்துவோரில் 24 சதவீதம் பேர் 14 முதல் 25 வயதுக்கு உள்பட்டோர்.

முன்னணி சமூக வலை தளங்களில் ஒன்றான சுட்டுரையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதக் காலத்தில் 25 கோடியாக அதிகரித்துள்ளது.

முகநூலில் ஒரு நிமிடத்தில் 24 கோடியே 60 லட்சம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றனவாம்.

முகநூலை தங்களது புகைப்படங்களின் தொகுப்பாகவும், அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை தாங்கள் செய்யும் பணிகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடவுமே பலர் பயன்படுத்துகின்றனர்.

அதேநேரம், பொது அறிவுத் தகவல்கள், விபத்து அல்லது நோயால் பாதிக்கப்பட்டோருக்கான ரத்தத் தேவை, வேலைவாய்ப்புச் செய்திகள் போன்ற பயனுள்ள செய்திகளும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

சில நாள்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த அவர் தனது 10-ஆவது வயதிலேயே சொந்த ஊரை விட்டு குடும்பத்துடன் கடலூர் மாவட்டத்துக்கு செல்ல நேரிட்டது. விவரம் புரியாத அந்த வயதிலிருந்த நண்பர்கள் குறித்த ஏக்கம் அவரை வாட்டி வதைத்தது.

இப்போதுதான், அவருடைய 39-ஆவது வயதில் தனது பால்யகால நண்பர்கள் பற்றியத் தகவல் தெரிந்ததாம். விரைவில் நண்பர்களைச் சந்திக்கவுள்ளதாகவும், 29 ஆண்டுகால தேடலுக்கு பலன் கிடைத்ததாகவும் தெரிவித்தார். இதற்குப் பேருதவி புரிந்ததாக அவர் குறிப்பிட்டது "முகநூல்'!

இவரைப்போல விட்டுப்போன நட்புகளையோ, உறவுகளையோ முகநூல் மூலம் சிலர் தேடிக் கண்டடைகின்றனர். முகநூல் மூலம் அறிமுகமாகி, நண்பர்கள் குழு அமைத்து, மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூக செயல்களிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், பகிர்வுத் திறனை வளர்க்கும் அளவுக்கு முகநூல், படைப்புத் திறனை வளர்க்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், எங்கிருந்தோ, யாரோ அனுப்புகின்ற ஏதோ ஒன்றை "பார்வர்டு' அல்லது "ஷேர்' அல்லது "லைக்' செய்யும் பணியே பெரும்பாலும் நடக்கிறது.

சிலர் பிறரது கருத்துகளைச் "சுட்டு' முகநூலில் உரைப்பதால், முகநூலே "சுட்டுரை'யாகவும் (டுவிட்டராகவும்) மாறிவிடுகிறது, சில நேரங்களில்.

சிலர் நாள் முழுவதும் முகநூலே கதி எனக் கிடந்து, உலகின் பல மூலைகளில் இருக்கும் முகம் தெரியாத பலரை நண்பர்கள் பட்டியலில் வைத்து அழகு பார்க்கும் நட்புப் பிரியர்களாக உள்ளனர்.

ஆனால், அத்தகையோர் அண்டை வீட்டுக்காரர்களுடனோ, அலுவலகத்தில் சக ஊழியர்களுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ அன்பை பரிமாறிக்கொள்கின்றனரா என்பது கேள்விக்குறியே.

கண்ணால் கண்டதை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதைப்போல, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் "கண்டதை'ப் பகிர்ந்துகொள்வதும் முகநூலில் அதிகமுள்ளது.

அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பது, பெண்களின் பெயர்களில் போலிக் கணக்குத் தொடங்கி மற்றவர்களை ஏமாற்றுவது, அரசியல்வாதிகள், நடிகர் - நடிகைகள் என பிரபலமானவர்களை நியாயமற்ற முறையில் விமர்சிப்பது, ஜாதி - மத மோதல்களைத் தூண்டும்விதத்தில் கருத்துத் தெரிவிப்பது, தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு திரட்டுதல் போன்ற போக்கும் அதிகரித்து வருகிறது.

எல்லை தாண்டாதவரை எதுவும் அபாயமில்லை என்ற கருத்து இந்தச் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்போருக்கும் பொருந்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

தற்கொலை ஒரு உணர்வுதான், குற்றமல்ல

தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம், பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையையொட்டி, ஒரு வழக்கு மொழி உண்டு. ‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’’ என்பதுதான் அது. நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டது. அந்த வகையில், இந்தியாவில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டங்கள் இருக்கின்றன. இதில் பல சட்டங்கள் பயன்படுத்தப்படாமல், பயன்படுத்துவதற்கு தேவையில்லாமல், துருப்பிடித்துக்கிடக்கின்றன. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் பிறப்பிக்கப்பட்ட இந்த சட்டங்கள் தேவையில்லாமல் இப்போதும் இருக்கின்றன. இப்படி தேவையில்லாத சட்டங்கள் பட்டியலில் உள்ள சில சட்டங்கள் வேடிக்கையாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, 1861–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட போலீஸ் சட்டத்தின்படி, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் போலீஸ் அதிகாரிகள் தங்கள் தொப்பிகளை கழட்டிவிடவேண்டும். இப்போது இந்தியாவில் மன்னர் யாரும் இல்லாத நிலையில் இப்படி ஒரு சட்டம் தேவையில்லை.

இதுபோல, தேவையில்லாத 90 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்ய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ள மற்றொரு சட்டம், 1860–ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் 309–வது பிரிவாகும். இந்த பிரிவு தற்கொலை முயற்சி தொடர்பான பிரிவாகும். இதன்படி, யாராவது தற்கொலை செய்ய முயற்சித்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, ஒரு ஆண்டுகாலம் சாதாரண சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டையுமே விதிக்க வழிஇருக்கிறது. இந்த சட்டத்தை ரத்துசெய்ய இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களும், 4 யூனியன் பிரதேசங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப், டெல்லி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்கொலை முயற்சி என்பது பண்டைய தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. சீத்தலை சாத்தனார் எழுதிய, ‘மணிமேகலை’ காப்பியத்தில் ஆதிரை என்ற பெண், ‘‘நெருப்பு மூட்டி எழுது தீயும் கொல்லா, தீவினை யாட்டியேன்’’ என்று பாடியிருப்பார். அதாவது, தற்கொலை செய்ய தீயில் விழுந்தும் உயிர்பிழைத்த சம்பவம் தொடர்பான வரிகள் இது. தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டம், இங்கிலாந்து நாட்டில் விக்டோரியா ராணி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்ததால், இந்த சட்டம் இந்தியாவிலும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்கொலை முயற்சி என்பது ஒரு கிரிமினல் குற்றமல்ல. இதனால் வேறு யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஒருவன் திருடினாலோ, கொலை செய்தாலோ, தாக்கினாலோ அந்த பாதிப்பு அவனுக்கு கிடையாது, அவனால் வேறு ஒருவர்தான் பாதிக்கப்படுவார். எனவே, அந்த குற்றங்களைப்போல தற்கொலை முயற்சியைக் கருதக்கூடாது. மேலும் இது ஒரு உணர்வு.

வாழ்க்கையில் ஏதாவது சோதனைகள் ஏற்படும்போது, அதை தாங்கிக்கொள்ள முடியாத பலவீனமான மனதுடையவர்கள்தான், உயிர்வாழ பிடிக்காமல், அதை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இத்தகையவர்களுக்கு தேவை அவர்கள் மீது இரக்கமும், கருணையும், மனோரீதியான ஆறுதலும் தான். எப்படி வயிற்றுவலி வந்தால் டாக்டர்களிடம் போகவேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறதோ, அதேபோல தற்கொலை உணர்வுவந்தால் அதை தீர்ப்பதற்கு மனோதத்துவ சிகிச்சையை பெறவேண்டும் என்ற உணர்வை வளர்க்கவேண்டும். தற்கொலை முயற்சியில் இருந்து தப்பித்துவிடுபவர்களை ஆறுதல் கூறி, அந்த உணர்வில் இருந்து மீட்க தைரியம் கொடுப்பதற்குபதிலாக, தண்டிப்பதன்மூலம் அந்த உணர்வை மேலும் வளர்ப்பது போலாகிவிடும். தற்கொலையை கிரிமினல் குற்றமாக்குவதை முதலில் பிரான்சு ரத்து செய்தது. தொடர்ந்து அனைத்து ஐரோப்பிய நாடுகள், வடஅமெரிக்க நாடுகள் ரத்து செய்துவிட்டன. இப்போது மத்திய அரசாங்கம் இந்த சட்டத்தை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். ஆனால், இந்த தற்கொலை முயற்சியை கிரிமினல் குற்றமாக கருதும் சட்டத்தை ரத்துசெய்வதோடு, அரசின் கடமை முடிந்துவிடவில்லை. இந்த உணர்வு மக்களுக்கு வராத அளவு, அப்படி வரும்பட்சத்தில், அதை போக்குவதற்கான வழிகளையும் ஆராய வேண்டும்.

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...