Sunday, December 21, 2014

ஊனமுற்றோர், முதியோருக்கான ரயில் கட்டண சலுகை ரத்தாகுமா?

புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரயில்வே துறை வருவாய் இழப்பை சரிக்கட்ட, இலவச அல்லது சலுகை கட்டண ரயில் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.

உடல் ஊனமுற்றோர்,மூத்த குடிமக்கள்,விளையாட்டு வீரர்கள்,மாணவர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட, 53 வகையான பிரிவினருக்கு,ரயில்களில், இலவசமாகவோ அல்லது சலுகை கட்டணத்திலோ பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இப்படி இலவச அல்லது சலுகை கட்டணத்தில் பயணிப்பவர்களால் மட்டும், கடந்த நிதியாண்டில், 1,300 கோடி ரூபாய் அளவுக்கு, ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளில், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே துறையின் நிதி நிலையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்காக, டி.கே.மிட்டல் என்பவர் தலைமையில், உயர்மட்டக் கமிட்டி ஒன்றை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நியமித்துள்ளார்.இந்த கமிட்டியானது, நிலுவை யில் உள்ள திட்டங்கள் உட்பட, ரயில்வேக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்து வருகிறது. அதில், ஒன்றாக, 'இலவச மற்றும் சலுகை கட்டண பயணத்தை ரத்து செய்ய வேண்டும்' என, ரயில்வே அமைச்சகத்திற்கு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது.




இருந்தாலும், 53 வகையான பிரிவினருக்கு வழங்கப்படும், இலவச அல்லது சலுகை கட்டண பயணத்தை ரத்து செய்தால், அது அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே முடிவு எடுக்குமா என்பது சந்தேகமே. ஆனாலும், சலுகை கட்டணத்தில் பயணிக்கும் பிரிவினரின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் அல்லது இத்தகைய பயணங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, December 20, 2014

எம்.ஜி.ஆர் வாங்கிய கடன்


எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே மாபெரும் வெற்றியைக் குவித்த படங்களில் ஒன்று ‘நாடோடி மன்னன்’. ஆனால் இந்தப் படத்தை எடுத்து முடிக்க, அவர் பட்ட பாடுகள் அதிகம்.

சொந்தப்பட நிறுவனம் தொடங்கிய போதே எம்.ஜி.ஆருக்கு மறைமுக அர்ச்சனைகள் நடந்தன. “'நடிச்சு நாலு காசு சம்பாதிச்சோம்னு இல்லாம இதெல்லாம் தேவையா?” என்று பலரும் அக்கறை(?)ப்பட்டார்கள் . அவர்தான் இயக்கப்போகிறார் என்பதை அறிந்ததும் விமர்சனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் களத்தில் இறங்கினார் எம்.ஜி.ஆர். தனக்கு திருப்தி தராத காட்சிகளை மீண்டும் மீண்டும் படம்பிடித்தார். காட்சிகளின் நேர்த்தி கருதி, ஆயிரக்கணக்கான அடி பிலிம் சுருள்களை வீணாக்கவேண்டிய சூழ்நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் ஸ்டுடியோக்களில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஒரு படத்துக்கான பிலிம் ரோல்களை வாங்கமுடியும். ஆயிரம் அடி பாசிட்டிவ் பிலிமின் நியாயமான விலை 75 ரூபாய் மட்டுமே. அதுவே வெளிமார்க்கெட்டில் 500 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டி இருந்தது. ஆனாலும்

எம்.ஜி.ஆர் காசைப்பற்றிக் கவலைப்படாமல் பிலிம் ரோல்களை வாங்கிப் படமெடுத்தார்.

படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தன. படத்தை சென்சாருக்கு அனுப்பவேண்டிய கட்டம் வந்தது. கூடவே கஷ்டமும் வந்தது. பாசிட்டிவ் பிலிம் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கவேண்டிய நிலை. யாரிடமாவது கடன் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.

எதிரிக்கும் கொடுத்துப் பழகிய எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு உதவ, ஒரு ராமச்சந்திரன் வந்து சேர்ந்தார். அவர்தான் 'கெயிட்டி' திரையரங்கத்தை நடத்திவந்த ராமச்சந்திர ஐயர். ஏவி.எம் நிறுவனத்தில் பேசி, தேவையான தொகையை வாங்கித்தருவதாக உறுதி யளித்தார். எம்.ஜி.ஆரின் முகத்திலும் அகத்திலும் பரவிய மகிழ்ச்சி ரேகையை அழிப்பதற்காகவே புறப்பட்டவர்போல வந்துசேர்ந்தார் எம்.கே.சீனிவாசன். அவரது ஆலோசனைப்படிதான் ஏவி.எம் நிறுவனம் கொடுக்கல்- வாங்கல்களுக்கு சம்மதம் சொல்லும்.

கடன் வாங்கவேண்டும். ஆனால் கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர் கையெழுத்துப் போடும் சூழ்நிலை வந்துவிடக்கூடாது, வந்தாலும் ஒப்புக்கொள்ளக்கூடாது என் பதில் உறுதியாக இருந்தார் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன். “கடன் கொடுப்பதற்கு ஏவி.எம் நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், எம்.ஜி.ஆரின் கையெழுத்து அவசியம்” என்றார் எம்.கே.சீனிவாசன்.

கடைசியாக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்தார் ஆர்.எம்.வீரப்பன். “எங்களது தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தின் இலங்கை வெளியீட்டு உரிமையை சினிமாஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த நிறுவனம் எங்களுக்குத் தரவேண்டிய தொகையை, நாங்கள் வாங்கும் கடனுக்கு அடமானமாக வைத்துக்கொள்ளும் வகையில், ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை உங்களிடம் தந்துவிடுகிறோம். நானும் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியும் கையெழுத்துப் போடுகிறோம்”என்று சீனி வாசனிடம் சொன்னார் ஆர்.எம்.வீரப்பன். இந்த டீல் ஓகே ஆனது.

பணம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, பிலிம் சுருள் வாங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டார் எம்.ஜி.ஆர். பணம் வாங்கி வருவதற்காக எவிஎம்முக்குச் சென்றார் ஆர்.எம்.வீ. “எந்த பத்திரத்திலும் எம்.ஜி.ஆர் கையெழுத்துப் போடமாட்டார் என்கிறீர்கள். ஆனால், இலங்கை சினி மாஸ் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத் தில் எம்.ஜி.ஆர்தான் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தை அட மானம் வைத்துதான் கடன் கேட்கிறீர்கள். அப்படியானால், நீங்கள் வாங்க விரும்பும் தொகைக்கான கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டும்” என்று கறாராக சொல்லிவிட்டார் சீனிவாசன்.

ஆர்.எம்.வீயும் சக்ரபாணியும் எம்.ஜி.ஆருடன் ஆலோசனை நடத்தினார்கள். அவர்களிடம் எம்.ஜி.ஆர் ஒரு அணுகு முறையை சொல்லி அனுப்பினார். அதையே ஆர்.எம்.வீரப்பன் பின்பற்றினார். “ இலங்கை சினிமாஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எங்களது படக்கம்பெனியின் பெயர் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று இருந்தது. அந்த நேரத்தில் அதன் நிர்வாக இயக்குநராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனால் ஒப்பந்தத்தில் அவரது கையெழுத்து இடம்பெற்றது. இப்போது கம்பெனியின் பெயர் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்று மாற்றப்பட்டுவிட்டது. நிர்வாக இயக்குநராக நான்தான் இருக்கிறேன். எனவே, நானும் இன்னொரு இயக்குநருமான சக்ரபாணியும் கையெழுத்துப் போட்டாலே செல்லுபடி ஆகும்” என்றார் ஆர்.எம்.வீரப்பன். கம்பெனியின் பெயர்மாற்றம் தொடர்பான கோப்புகளையும் ஒப்படைத்தார்.

“கடன் கொடுப்பதற்கு சம்மதிக்கிறோம்” என்றார் சீனிவாசன். கையெழுத்துகள் பதிவானது. இந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும்போது வேறொரு அறையில் இருந்தார் ஏவி.எம் முதலாளியான ஏவி.மெய்யப்ப செட்டியார். பிறகு பஞ்சாயத்து அறைக்கு வந்தார். “எம்.ஜி.ஆரின் கையெழுத்தைக் கடன்பத்திரத்தில் வாங்கிவிடவேண்டும் என்று நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டோம். கடைசியில் அவர்தான் ஜெயித்துவிட்டார்” என்று ஆர்.எம்.வீயிடம் சொன்ன செட்டியார், உடனடியாக பணத்தைக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

TATA, SINGAPORE AIRLINE VENTURE VISTARA TO TAKE OFF ON JANUARY 9

New Delhi: 

Singapore Airlines Ltd's Indian joint venture with the Tata conglomerate, Vistara, will start flying from January 9, the airlines said.

Based in New Delhi, the full service Vistara will begin operations with a fleet of new Airbus A320-200s with 148 seats, Tata SIA Airlines Ltd said in a statement late on Thursday.

Vistara will offer flights to Mumbai and Ahmedabad initially, it said.
Tata, Singapore Airline venture Vistara to take off on January 9
Vistara will offer flights to Mumbai and Ahmedabad initially, the airline said.


The announcement comes in the middle of a particularly testing week for the airlines industry in India, with budget carrier SpiceJet struggling for survival.

The Tata Group and Singapore Airlines announced the plan to launch Vistara on September 19, adding a deep-pocketed player to a fast-growing but competitive Indian aviation sector where most operators lose money.

Medical students in Singapore face shortage of cadavers - a crucial learning tool

SINGAPORE: Cadavers are a crucial learning tool for medical students, but for medical students in Singapore, there are not enough of them to go around.

Prof Bay Boon Huat, head of the anatomy department at the NUS Yong Loo Lin School of Medicine, said: "In 2000, we received 28 cadavers from the Health Sciences Authority. This dropped to eight cadavers in 2010." This year, the school only received six.

Cadavers can be obtained in several ways - some are unclaimed bodies, some are donations made by next-of-kin, and some people also pledge to donate their bodies for scientific research.

"We started the human body donation programme in 2012, facilitated by the National Organ Transplant Unit," said Prof Bay. Donated bodies received so far include that of Dr Tan Chee Beng, the former chief executive officer of SingHealth Polyclinics.

Mr Benjamin Tan, the son of Dr Tan and a second-year medical student at NUS, shared more about his father's decision to donate his body: "He was already dying of prostate cancer. It was already in the terminal stages, so I was just sharing with him causally about what's going on in our medical school. And he jokingly questioned why the medical school would want his body, because it is so damaged."

Before taking practical classes that use cadavers, students have to take the Anatomy Student's Oath to emphasise the importance of approaching these cadavers or 'silent mentors' as they are fondly referred to, with the dignity and respect they deserve. "Although the silent mentors have lost the ability to speak, they use their bodies to teach the intricacies of human anatomy," said Prof Bay.

Mr Tan also spoke of the importance of cadavers to medical students: "Being able to go down and actually examine a real, what you call 'silent mentor', it's actually a very special and important thing... It's really hard to put something that is three-dimensional into a textbook that is just 2D. It really helps us in developing our anatomical knowledge, understanding things like variations because every person is different."

The shortage of cadavers means medical schools have to find ways to maximise the precious resource. Since 2003, NUS has done away with the dissection of cadavers by first-year students. Instead, the cadavers are dissected by prosectors - staff who work on cadavers. This is to ensure the bodies are preserved in the best shape and structure so students can scrutinise various organs and tissues during practical sessions. After about three years, the body will be cremated and returned to the family.

Nanyang Technological University's Lee Kong Chian School of Medicine has pioneered the use of plastinated bodies for the education of their medical students. Plastinated bodies are real human bodies where the water and fat have been replaced by plastics - to produce specimens that can be touched and do not smell nor decay.

Assistant Professor Dinesh Srinivasan, the lead for anatomy and head of examinations at NTU's Lee Kong Chian School of Medicine, said: "Plastination allows students to have hands-on experience many times without exposure to chemicals such as formalin... There's room for them to grow eventually when they are attached to hospitals in later years."

Although these alternatives are increasingly being used in medical schools around the world, there is no real substitute for the human body in the teaching of human anatomy.

- CNA/ac


source: Channelnewsasia

ஓய்வு பெற்ற தபால்காரர் வீட்டில் மூட்டையில் பதுக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள்

ஓய்வு பெற்ற தபால்காரர் வீட்டில் மூட்டையில் பதுக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள்

இந்திய குடிமகனின் அடையாள சின்னம் ‘ஆதார்’ அடையாள அட்டை. அரசின் மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை பெற இந்த அட்டை அவசியமாகிறது. தற்போது நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறுகிறது.

பொதுமக்கள் மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று அடையாள அட்டைக்கு பதிவு செய்கிறார்கள். அடையாள அட்டை பதிவுக்கு பின் பதிவு அலுவலர்கள் இன்னும் 3 மாதத்தில் உங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கிடைக்கும் எனக்கூறி அனுப்பி வைக்கிறார்கள்.

இப்படி படாத பாடுபட்டு பதிவு செய்த ஆதார் அட்டைகளை ஒரு தபால்காரர் வினியோகிக்காமல் வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 24–வது வார்டுக்குட்பட்ட குத்தூஸ்புரம் ஓம் சக்தி கோவில் வீதியில் தபால் ஊழியரான சுப்பிரமணி என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தபால் வினியோகம் செய்வார்.

கடந்த 30–6–2013 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு அவர் தான் குடியிருந்த வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்

வெகுநாட்களாக சுப்பிரமணி வராததால் வீட்டின் உரிமையாளர் அவரை தொடர்பு கொண்டார். அதன் பின்னரும் சுப்பிரமணி திருப்பூர் வரவில்லை. எனவே வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி தங்கியிருந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ஒரு மூட்டை இருந்தது.

அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய அவிழ்த்துப் பார்த்தார். அதில் 500–க்கும் மேற்பட்ட ஆதார் அடையாள அட்டைகளும், 500–க்கும் மேற்பட்ட தபால்களும் இருந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதற்குள் இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. பொதுமக்கள் விரைந்து வந்து அந்த மூட்டையில் தங்களது ஆதார் அடையாள அட்டை உள்ளதா? என அலசி ஆராய்ந்தனர்.

சிலரது அதிர்ஷ்டம் அவர்களது ஆதார் அடையாள அட்டை அதில் இருந்தது. அவினாசியில் தனி தாசில்தாராக பணியாற்றிய தேவமனோகரன் என்பவரின் ஆதார் அடையாள அட்டையும் அந்த மூட்டையில் இருந்தது.

தகவலின் பேரில் விரைந்து வந்த தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் எழில் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் ஆதார் அடையாள அட்டைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆதார் அட்டை பெறுவதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில் தபால் ஊழியர் அலட்சியம் செய்து 500–க்கும் மேற்பட்ட ஆதார் அடையாள அட்டைகளை வீட்டுக்குள் மூட்டை கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பேய் ஜெயித்ததா?

Return to frontpage

தமிழ்த் திரையுலகைப் பேயும் பிசாசும் பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ தெரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் தியேட்டர்களில் பேய்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வந்து வெற்றிபெற்ற பீட்சா படம், பேய்ப் படங்களுக்கும் திகில் படங்களுக்கும் சிவப்புக் கம்பளத்தை விரித்து கொடுத்தது. வெற்றி இயக்குநர்களான சுந்தர்.சி, மிஷ்கின் முதல் புதுமுக இயக்குநர்கள்வரை பலர் திகில் படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பேய்ப் படங்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கலைக்க வந்தன. ஆனால், இந்தப் பேய்கள் ரசிகர்களைப் பயமுறுத்தினவா?

அரண்மனை, யாமிருக்க பயமே, ர, 1 பந்து 4 ரன் 1 விக்கெட் உள்படப் பல பேய்ப் படங்கள் இந்தாண்டு வெளிவந்துள்ளன. இந்த வாரம் பிசாசு படம் ரிலீசுக்காகக் காத்திருக்கிறது. இந்த ஆண்டும் மட்டும் பேயையும் திகிலையும் இணைத்துக் கொண்டு டிராவல் செய்த படங்கள் 25 சதவீதம் வந்திருப்பதாகத் திரையுலகில் கூறப்படுகிறது. இவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.

ஜகன் மோகினி தொடங்கி யார், பேபி இயக்கிய மைடியர் லிசா, 13-ம் நம்பர் வீடு போன்ற படங்களை இப்போது பார்த்தாலும் அடிவயிறு கலங்கும். இன்னொருவர் உடலில் ஆவி புகுந்து கொண்டு பழிவாங்கும் கதைகள்தான் இவை. இப்படிப் பேய் படங்கள் நிறைய வந்திருந்தாலும், இந்தப் படங்களில் அமைக்கப்பட்ட காட்சி அமைப்புகள் சிறந்த திகில் பட அந்தஸ்தை இப்படங்களுக்குப் பெற்றுத் தந்தன. இப்போதும் பயமுறுத்தும் பேய்ப் படங்கள் வரவே செய்கின்றன. ஆனால், இப்போது வரும் பேய்ப் படங்கள் ரசிகர்களைக் கவருகிறதா என்பது பெரும் கேள்விக்குறிதான். எல்லாவற்றிலும் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். இது பேய்ப் படங்களுக்கும் பொருந்தவே செய்கிறது.

தியேட்டரில் பேய்ப் படங்களைப் பார்க்கும்போது, ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குநர்களாகி அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும் என்று சுலபமாகக் கணித்துவிடுகிறார்கள். அடுத்தடுத்த காட்சிகளைக் கணிக்க முடியாமல் இருந்தால்தான் அது திகில். அப்படியில்லையென்றால் சலிப்புதான் மிச்சமாகும். இப்போது வந்துகொண்டிருக்கும் பல பேய் மற்றும் திகில் படங்கள் இந்தப் பாணியில்தான் இருக்கின்றன.

தொடர்ந்து ஒரே மாதிரியான திகில் படங்கள் வந்த வேளையில்தான் இரு ஆண்டுகளுக்கு முன்பு வித்தியாசமாக பீட்சா படம் வந்தது. கணிக்க முடியாத அளவுக்குத் திரைக்கதையும் கச்சிதமாக இருந்தது. திகிலும் திடீர் திருப்பங்களும் பீட்சா படத்தை வெற்றிப் படமாக மாற்றின. அதன்பிறகு தமிழ்த் திரையுலகில் பேய் படங்களும், திகில் படங்களும் வந்தவண்ணம் உள்ளன.

இந்த ஆண்டும் அப்படி வந்த படங்களில் அரண்மனை, யாமிருக்க பயமே ஆகியவை மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. சந்திரமுகியில் தொடக்கத்தில் காமெடியைத் தொட்டுவிட்டு இடையில் பயத்தை லேசாகக் காட்டிவிட்டு இறுதியில் திகிலில் உறைய வைத்திருப்பார்கள். அதே திரைக்கதை பாணிதான் கிட்டத்தட்ட இந்த இரு படங்களிலும் பின்பற்றப்பட்டிருந்தன. அதோடு கிளாமரான ஹீரோயின்களுக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. வழக்கமான பாழடைந்த பங்களா, பழைய அரண்மனை, ஆவி, மர்மக் கொலைகள் எனக் கதை நகர்ந்தாலும், திகிலை காமெடியாக காட்டிய உத்திதான் இப்படங்களைக் கரைச் சேர்த்தன.

இப்படங்களைத் தவிர்த்து பிரபு யுவராஜ் இயக்கிய ‘ர’ என்ற படம் பேண்டசி வகை திகில் படமாக வெளி வந்தது. ஒரு வீட்டின் கதவுதான் இந்தப் படத்தில் பேய். 1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற படத்தை இயக்கிய புதுமுக இயக்குநர் வீரா, கிரிக்கெட்டிலிருந்து பேய் வருவதுபோல காட்டியிருந்தார். பேய் படங்களில் லாஜிக்குகள் பெரிதாகத் தேவையில்லையென்றாலும் சொல்லப்படும் விஷயம் கொஞ்சமாவது இயல்பாக இருக்க வேண்டும் என்றே ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

வெறுமனே கொடூர பேய் ஒப்பனை, கொலை செய்யும் பேய், அதை அடக்க மந்திர தந்திரம் என அரைத்த மாவையே அரைத்தால் பேய்ப் படங்கள் எப்படி ஜெயிக்கும்? பல பேய்ப் படங்கள் இந்த ஆண்டு வெளிவந்திருந்தாலும், இந்தப் பேய்கள் ரசிகர்களைப் பயமுறுத்தியது மாதிரி தெரியவில்லை.

பேய்ப் படங்களைத் தவிர்த்து க்ரைம் திகில் படங்களாக நீ நான் நிழல், தொட்டால் விடாது, தெகிடி, சரபம் ஆகிய படங்களும் ரசிர்களுக்கு த்ரில் அனுபவத்தைத் தந்தன. ஆனால், பீட்சாவின் சாயல் இப்படங்களில் இருந்ததால், பெரிய அளவில ரசிகர்களைக் கவர முடியவில்லை. பேய்ப் படங்களாக இருந்தாலும், அதிலும் தேவை வித்தியாசமான கதை பிளஸ் திரைக்கதையமைப்பு என்பதைப் புரிந்துகொள்ளாவிட்டால் நிஜப்பேயே வந்தாலும் ரசிகர்கள் அசரமாட்டார்கள்.

PASSPORT ISSUANCE PROCEDURE TO TN GOVERNMENT SERVANTS



FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...