Wednesday, December 24, 2014

Singapore: A destination for a complete family voyage -



Singapore (The Republic of Singapore) is a complete package of fun, amusement and excitement. It offers wide-range of adventurous places to excite its visitors as well as tranquility to soothe the vexed nerves with its calm and alluring seashores -


The city fascinates every age group from a young kid to an 

octogenarian citizen. Be it a honeymoon couple or an educational group, a corporate group tour or an adventure group, Singapore has a platter- full of exotic destinations to offer.

Singapore has developed itself rapidly after declaration of independence in 1963 from the United Kingdom. It has earned ‘one of the Four Asian Tigers’ recognition and has developed to be one of the world's major commercial hubs. It has one of the five busiest ports and is the fourth-biggest financial center.

It has become a cynosure tourist destination due to its captivating camping locations, tempting cuisines and splendid natural surroundings. It attracts tourist for adventure, camping, knowledge tour, business and a lot more such as:

For Kids - The most attractive place for kids is ‘Marina Bay’. Starting from the Esplanade Theatres to the Art-Science Museum from Suntec City to the Flower Dome, and Cloud Forest, it has everything to thrill kids. Not just this, the National Orchid Garden, Adventure Cove Waterpark Sentosa, with Variety of Water Themes and world's tallest Ferris wheel -‘The Singapore Flyer’ are all for fun.

For youth – The Orchard Road with ample shopping centers (Funan Digitalife Mall - Loved for pocket friendly electronic items with wide variety; Haji Lane- a Mecca for fashionistas conjures the shopaholics from around the world.

For newly married couple - Chinatown Heritage Center, the SEA Aquarium(World’s Largest Aquarium for underwater adventurers), The Night Safari Singapore Zoo (for an ultimate Nightlife Entertainment) and Songs of the Sea Sentosa (a live entertainment spot) are a bliss for couples.

For senior citizen - Integrated Resorts (For casino lovers) and Singapore Turf Club (for betting at horse racing) are a haven for the elderly to indulge into.
Considering the significance of the vacations in India, TUI, offers plethora of services for the ultimate vacation destination – Singapore. TUI is one of the world’s leading leisure travel companies that operate in over 180 countries.

முதுமையிலும் இளமை!






முதுமை, மீண்டும் ஒருமுறை குழந்தையாகும் தருணம். ஓய்வாக அமர்ந்து, வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டுக்கொண்டு, பேரக் குழந்தைகளோடு விளையாடி சந்தோஷமாக இருக்க வேண்டிய காலம். நாற்பதிலேயே வந்துவிடும் இதயப் பிரச்னைகளும், மூட்டு வலிகளும் முதுமையை அனுபவிக்க விடாமல், மருத்துவமனைகளைத் தேடி அலைய வைக்கின்றன. முதுமையில் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை சொல்லித்தருகிறார் முதுமைக்கான சிறப்பு மருத்துவர் வி.எஸ்.நடராஜன்.

தனிமையை விரட்ட...

தனிமைதான் முதுமையின் முதல் விரோதி. கூடவே இருந்த பிள்ளைகள் வேலை, திருமணம் என இடம்பெயர்ந்துவிட, அவர்களுக்காகவே அத்தனை நாட்களும் வாழ்ந்த பெற்றோர், தனியாகி விடுகிறார்கள். தனிமையை நினைத்து வருந்துபவர்களுக்கு, மூப்பின் விளைவு ஆறுமடங்கு அதிகரிக்கும் என்கிறது ஆராய்ச்சி. நடுத்தர வயதிலிருந்தே, முதுமை காலத்துக்கான நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

புத்தகம் படிப்பது, புது மொழிகளை கற்பது, ம‌னதுக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது, பொழுதுபோக்கு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து கூட்டங்களில் கலந்து கொள்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்போதும் நம்மையும் நம் மூளையையும் பிசியாக வைத்திருந்தால், மனச்சோர்வு அடையவோ, ம‌னப்பதற்றம் வரவோ வாய்ப்புகள் குறையும். தேவையற்ற சிந்தனைகள், வெறுப்பு, பயம், கோபங்களை விரட்டியடிக்க முடியும். கலகலப்பாக இருப்பது நல்ல ஆழ்ந்த உறக்கத்தையும் தந்துவிடுகிறது.

சுடோகு, செஸ், கேரம், குறுக்கெழுத்து, புதிர் போட்டிகள், வினாடி வினா போன்ற வீட்டுக்கு உள்ளேயே அமர்ந்தபடி, மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடலாம். இதனால் மறதி நோயும் நெருங்காது. வருத்தங்களை மனதில் தேக்கி வைத்தல்கூடாது. மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடும்போது, நோய்கள் நம்மை ஆட்டிப்படைக்கும். எப்போதும் உற்சாக மனநிலையில், யதார்த்த வாழ்வின் நிதர்சனத்தைப் புரிந்து வாழ்ந்தால், தனிமையும் முதுமையும் இனிமைதான்.

பாதுகாப்பு முக்கியம்

வயதானவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்னை, கீழே விழுந்து எலும்பு உடைந்து போவதுதான். இதைத் தவிர்க்க கண் பார்வை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம். பார்வைக் குறைபாட்டுக்கு அணியும் கண்ணாடி சரியில்லாமல் போனால்கூட, கீழே விழ நேரிடலாம்.

மாத்திரை மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். மருந்துகளின் பக்க விளைவுகள்கூட சமயங்களில் கீழே தள்ளிவிடும். படுக்கையில் இருந்து வேகமாக எழுந்த உடனே, நடக்கக் கூடாது. தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர், முதலில் மெதுவாக எழுந்து உட்கார வேண்டும். பின்னர் சற்று நேரம் கழித்து, மெதுவாக நிற்க வேண்டும். அதன் பிறகே நடக்க வேண்டும்.

நடக்கும்போது கைத்தடி வைத்திருப்பது பாதுகாப்பானது. படுக்கை அறை, குளியல் அறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். குளியல் அறை, கழிப்பறை, படிக்கட்டு போன்ற முதியவர்கள் அதிகமாக உபயோகிக்கும் இடங்களில் இரும்புக் கைப்பிடிகளை பொருத்த வேண்டும்.

எங்கு வெளியில் செல்ல நேரிட்டாலும், பெயர், ரத்த வகை, வசிக்கும் இடம், தொலைபேசி எண் அடங்கிய அடையாள அட்டையை கையோடு எடுத்துச் செல்வது நல்லது.முதுமையில் நெஞ்சில் வலி இல்லாமல், மாரடைப்பு வரலாம். உடல் வலிமை இழந்திருக்கும் என்பதால் வியர்வை, மயக்கம் எதுவும் இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம். முதுமையில் நோயின் அறிகுறிகள் மாறுபடுவதால், என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரியாத நிலையில், தவறான மருந்தை உட்கொள்ளும்போது, அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். சின்னச்் சின்ன தொந்தரவுகளுக்கு வீட்டு வைத்தியமே சிறந்தது.



மௌனம் நல்லது!

தினமும் ஒரு மணி நேரம் மெளனத்தைக் கடைப்பிடித்தால் மனம் ஒருநிலைப்படும். முதலில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை கடைப்பிடித்து, அதை ஒரு மணி நேரம் வரை நீட்டிக்கலாம். இதனால் சஞ்சலம் அடைவது குறையும். மனம் வலிமை பெறும். எண்ணங்கள் உறுதிப்படும். அமைதியும், புத்துணர்ச்சியும் கூடும்.

டாக்டரிடம் ஆலோசித்த பிறகு வாரத்தில் ஒரு நாள், ஓரிரு வேளைகள் உண்ணாவிரதம் இருக்கலாம். உண்ணாவிரதம் இருக்கும்போது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி, உடல் சீரான நிலைக்குத் திரும்பும்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிராணயாமப் பயிற்சிகளை செய்தால், சுவாசப் பிரச்னையில் இருந்து தப்பிவிடலாம். சுவாசப் பயிற்சிகள் ஆயுளைக் கூட்டி, வயதின் பாதிப்புகளைக் குறைக்கும். தினமும் அரை மணிநேரம் தியானம் செய்வதன் மூலம் நல்ல மனநலமும், உடல் நலமும் பெறலாம்.

காலையில் உணவு உட்கொள்ளும் முன்பு திறந்தவெளியில் உட‌ற்பயிற்சி செய்தால் உற்சாக மனநிலை ஏற்படும். தினமும் மூன்று முதல் ஐந்து கிலோமீட்டர் வரை நடக்கலாம். 30 முதல் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். ஒரே நேரத்தில், உடற்பயிற்சி செய்யமுடியாமல் போனால், மூன்று முறையாக பிரித்துச் செய்யலாம்.

கண் பார்வைக் குறைபாடு, மூட்டுப் பிரச்னை மற்றும் பக்கவாதம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கையில் அமர்ந்தபடியே உடம்பின் மேற்பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இதயப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

எளிதான உணவுக்கு முன்னுரிமை

எளிதில் செரிக்கக்கூடிய, சத்துக்கள் நிறைந்த உணவைத் தேர்ந்தெடுங்கள். அதிலும் அளவு தெரிந்து சாப்பிடுவது நல்லது. அரைவயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு வெற்றிடம் என்கிற முறையில் சாப்பிடுங்கள். குறைவான கலோரி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒவ்வொரு வேளையும் வயிறு முட்ட சாப்பிடாமல், சற்று குறைவாகவே சாப்பிடவேண்டும்.

புரதச்சத்து நிறைந்த கொண்டைக்்கடலை, பட்டாணி, சோயா பீன்ஸ், காளான் உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் புரதச்சத்து கிடைத்துவிடும்.

சாத்துக்குடி, ஆரஞ்சு, பச்சைக் காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் சி அதிகரித்து, இரும்புச் சத்து கிரகிக்கப்படும்.

எலும்பு வலுவிழந்துபோவதைத் தடுக்க, கால்சியம் நிறைந்த வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, கறிவேப்பிலை, மீன், தினமும் இரண்டு கப் பால் அருந்துவது நல்லது.

உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 30 மி.லி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். உதாரணத்துக்கு 50 கிலோ எடை உள்ளவர்கள் தினமும் குறைந்தபட்சம், 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த கொள்ளு, கேழ்வரகு, கொத்தமல்லி, பாகற்காய், காலிஃப்ளவர், பேரீச்சம்பழம், அத்திப்பழம், மிளகு, ஓமம், சுண்டைக்காய் உணவுகளை சாப்பிடுவது, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

உப்பு அதிகரித்தால் உடலுக்குக் கேடு. சீஸ், ஊறுகாய், அப்பளம், வடகம், சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கலாம்.

ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த ஆரஞ்சு, பப்பாளி, கேரட், பூசணி, மாம்பழம், எலுமிச்சம்பழம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

தினம் ஒரு நெல்லிக்காய் முதுமையை விரட்டி இளமையை தக்கவைக்கும் அருமருந்து.

மனம் விட்டுப் பேசுங்கள்.....டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்



பெற்றோர்களுக்கும் வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் இடையேயான அன்பான உறவுதான் குடும்பத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை. பல்வேறு விதமாக ஆத்மார்த்தமாக இந்த அன்பு வெளிப்படும். நல்ல பேச்சின் மூலமாக வெளிப்பட்டால் அது உறவுக்கு ஒரு பலம்தான்.

சில குடும்பங்களில் வரும் பல பிரச்சினைகளுக்குக் காரணம் பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசாமல் இருப்பதுதான்.

நண்பர்களாக…

நண்பன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மூன்று மாணவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். அதில் ஒருவர் சிறந்த புகைப்பட நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுவார். ஆனால் அவரின் அப்பா அவரை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்திருப்பார். அவரும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இன்ஜினீயரிங் படிப்பார். ஆனால் அவர் நண்பர்கள் அவரை ஊக்குவித்து அவருக்குப் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவார்கள். பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்கிவர அனுப்புவார்கள். அப்பாவும் மகனும் சந்திக்கும் காட்சியில் மகனுக்கு இன்ஜினீயராக வேலை கிடைத்து விட்டது என்று அப்பா லேப்டாப் வாங்கி வைத்திருப்பார்.

மகன் மெதுவாகத் தன் ஆசையைத் தெளிவுபடுத்துவார். அப்பா முதலில் மறுப்பார். கடைசியில் மாணவர் மண்டியிட்டுச் சொல்வார் ‘’அப்பா, நான் இன்ஜினீயராக ஆகினால் நிறையச் சம்பாதிப்பேன். உங்களுக்கு நிறைய நல்லது செய்வேன். ஆனால் சந்தோஷமாக இருப்பேனா என்பது சந்தேகம். ஆனால் புகைப்பட நிபுணராக இருந்தால் குறைவாகத்தான் சம்பாதிப்பேன். ஆனால் சந்தோஷமாக இருப்பேன் என்று நெகிழ்ந்து கூறுவார். அப்பாவும் மனம் மாறித் தான் வாங்கி வைத்திருந்த லேப்டாப்பை விற்றுவிடுகிறேன். கேமரா என்ன விலை என்று கேட்பார். அப்பாவும் மகனும் கட்டிப்பிடித்துச் சந்தோஷப்படுவார்கள்.

பேசுங்கள்

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால் உண்மையில் தேவையான முடிவுகளை எடுக்க முடியாது. அப்பா கோபப்படுவார். நம் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்று பிள்ளைகள் நினைப்பார்கள். நாம் ஏதாவது சொன்னால் பையன் கஷ்டப்படுவான் என்று நினைத்து அவன் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று பெற்றோர்கள் நினைப்பார்கள். இவ்வாறு நினைப்பது தவறானது. இருதரப்பினரின் பேச்சுகளிலும் சுயசிந்தனை வெளிப்படவேண்டும்.

“என் அப்பா அவரது நண்பர் சொன்னாத்தான் கேட்பார்’’ என்று பிள்ளைகள் சிந்திக்கக் கூடாது. “நம் பையனிடம் அவனின் ஆசிரியரை வைத்துப் புத்தி சொல்லலாம்’’ என்று பெற்றோர்கள் நினைக்கக் கூடாது. குடும்ப உறவில் மற்றவர் செல்வாக்கு செலுத்துவதை கூடுமானவரையில் தவிர்ப்பது நல்லது. பெற்றோர்கள் தாங்கள் வாழ்ந்த சூழலும் பிள்ளைகள் இப்போது வாழும் சூழலும் வேறுவேறு என்பதைப் புரிந்துகொண்டு பேசவேண்டும்.

குறிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது என்று புரிந்துகொள்வதைக் காட்டிலும் இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்று தெரிந்து கொண்டால் தெளிவு பிறந்து விடும்.

# பெற்றோர்களிடம் இளைஞர்கள் நண்பர்களாகப் பழகுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள்.

# அன்றாடம் பள்ளியில், கல்லூரியில் என்ன நடந்தது என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.

# முடிவுகளை நீங்கள் முன்பே தீர்மானித்துவிட்டு பேசாதீர்கள் .அவர்களின் எண்ணங்களுக்கும் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் தருவதுபோல் உங்கள் பேச்சு அமையட்டும்.

# பேச்சுக்களின் நடுவே சுவாரஸ்யத்தை ஏற்படுத்த சிரிப்புகளைச் சிதறவிடுங்கள்.

# அவர்களின் பேச்சு தவறு என்பதைச் சுட்டிக்காட்டாமல் இதை இப்படிப் பேசினால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்கள்

# உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுங்கள். அவசரப்பட்டுக் கோபமாகப் பேசிவிடாதீர்கள். கோபம் கூட அவர்கள் மேல் உள்ள அக்கறைதான் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்

# வெறும் வாய்ப்பேச்சாக மட்டும் இருந்து விடாமல் உங்கள் பாடி லேங்குவேஜ் மூலமாகவும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்

# உங்கள் பெற்றோரை வேறு யாரோடும் ஒப்பிட்டு விமர்சிக்காதீர்கள்.

# படிக்காத பெற்றோர்களுக்கு நீங்கள் படிக்கும் டெக்னாலஜியோ நண்பர்களின் சூழலோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் அறியாமையை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

# அவர்கள் உங்களைவிட வயதானவர்கள்.அனுபவம் மிக்கவர்கள். உங்கள் நலனில் அக்கறை உடையவர்கள் என்ற உள்ளுணர்வோடு உங்கள் பேச்சு அமையட்டும்.

மனம் விட்டுப்பேசுங்கள். அன்பு என்பது ஒருவழிப் பாதையல்ல. நல்ல தொடர்புடைய பேச்சு இருந்தால் இரு தரப்புக்கும் வெற்றி தான்.

தொடர்புக்கு: sriramva@goripe.com
டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை



வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்.

இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.

எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். “ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.

காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.

திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.

தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.

இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன்…. இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.

இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. “என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

“நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.

சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்‌ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிபாடுகளாக மாறத் தொடங்கின.

இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.

- அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

ரூ.500,1000 நோட்டுகளை மாற்ற அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி:ரூ.500,ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதியை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடித்துள்ளது ரிசர்வ் வங்கி.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டு்ள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பதாவது:
கடந்த 2005ம் ஆண்டுக்கு முன், ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளில், ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. 2005க்கு பின் வெளியான நோட்டுகளில் தான், எந்த ஆண்டில் அந்த நோட்டு தயாரிக்கப்பட்டது என்பது, தனியாக குறிக்கப்பட்டிருக்கும்.2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட, 500, 1,000 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் வெகுகுறைவாக இருப்பதால்,அந்த நோட்டுகளை மாற்ற, ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை, ஜன., 1 வரை, ரிசர்வ் வங்கி நீட்டித்தது. இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்நிலையில் மேலும் ஆறுமாதம் காலஅவகாசம் அதாவது ஜூன் மாதம் 2015-ம் ஆண்டு வரையில் கால அவகாசம் அளித்துள்ளது.

‘Not responsible for hoax calls’


The examination section of the Maharashtra University of Health Sciences (MUHS) has been forced to come out with a notice denying responsibility of calls allegedly received by students where they were informed of their failure in the exams even before the results were declared. The university has clarified that the dual assessment system it follows is fool proof and it is impossible for anyone to know the marks achieved by the students before the marksheets are prepared.

According to a university official, there have been instances of people claiming to have contacts in the university and examination section calling up students and telling them of the marks they have got in the subjects they appeared for. The official said, “Under no circumstances will the university officials or employees of the examination section will contact the students or principals of the respective colleges with regards to exam results. The question of people claiming to have contacts in the university were spurious and students falling prey to their assurances were solely responsible for the same,” said the official.

Dr K.D. Chavan, Controller of Examination (CoE), MUHS, said, “The receiver of the call should immediately lodge a complaint with the police and update the university of the same along with the number from which they received the call. Action will be initiated against the perpetrator immediately,” he said .

Recently, the university has been receiving numerous complaints from students who get fleeced as the caller provides confidential information of the student giving them the impression that the caller is legitimate.

The university has been trying to get to the root of the problem and is trying to ascertain as to where the information is being leaked from. Till then the university has warned students to be wary and not get duped, as the university will not be responsible.

14 injured as Singapore Airlines flight from Osaka hit by turbulence

The Financial Express

Fourteen people on board a Singapore Airlines (SIA) flight from Osaka were injured after the plane carrying 268 passengers was today hit by a sudden severe turbulence about an hour before landing here.

The captain of the SIA flight SQ615, which departed last night from Osaka at 11.30 pm local time, reported the turbulence an hour before landing at Changi Airport early this morning, a SIA spokesman said.

The flight had 268 passengers, including two infants, and 13 crew members on board.

Most of the injured passengers and crew members received head and neck injuries.

Medical personnel, airline staff, as well as staff of ground services provider were on standby to help the passengers when the aircraft arrived at 5.17 am, the spokesman said.

The injured were assessed by a doctor and taken to the terminal transit clinic.

All the injured passengers were discharged after treatment, except for one patient, who was referred to a hospital for further examination due to a previous neck injury.

NEWS TODAY 25.05.2026