Friday, January 9, 2015

ரயில்வே ஸ்டேஷன்களில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகம்



புதுடில்லி:ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து, இனி வீடுகளுக்கு வாடகை சைக்கிள்களில் செல்வதற்கான வசதி, டில்லியில் துவக்கப்பட்டுள்ளது.புகார்:தலைநகர் டில்லியில், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், காற்று மாசு அடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மெட்ரோ ரயில்களில் வரும் பயணி கள், அலுவலக ஊழியர்கள், இரவில், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு போதிய போக்கு வரத்து வசதியில்லை என்றும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்த இரண்டு குறைகளையும் தீர்க்கும் வகை யில், டில்லி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களில், வாடகை சைக்கிள் திட்டத்தை துவக்க, டில்லி, மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, டில்லியில் உள்ள ஒவ்வொரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வளாகங்களிலும், வாடகைக்கு சைக்கிள் தரும் மையங்கள் அமைக்கப்படும். அதேபோல், ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து, குறிப்பிட்ட சில கி.மீ., துாரத்திற்குள் உள்ள, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், சைக்கிள் நிறுத்துவதற்கான கூடங்கள் அமைக்கப்படும்.




அலுவலகங்களுக்கு சென்று விட்டு, ரயில் மூலமாக ஸ்டேஷனுக்கு வந்திறங்கும் அலுவலக ஊழியர்கள், அங்குள்ள வாடகை சைக்கிள் மையத்துக்கு சென்று, தங்களுக்கு தேவையான ஏதாவது ஒரு சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக, அவருக்குடோக்கன் தரப்படும்.

பின், இந்த வாடகை சைக்கிளில் தங்கள் வீட்டுக்கு செல்லும் ஊழியர்கள், அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சைக் கிள் கூடங்களுக்கு சென்று, டோக்கனை கொடுத்து, சைக்கிளை விடலாம். பின், அடுத்த நாள் காலையிலும், இதே நடைமுறையை பின்பற்றலாம். இதற்காக, பொதுமக்களிடம் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும்.




விரைவில்...இந்த திட்டம், முதல் முறையாக, தெற்கு டில்லியில் உள்ள சாகெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று துவக்கப்பட்டது. இந்த ஸ்டேஷனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும், சைக்கிள்களை நிறுத்துவதற்கான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம், மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் கல்வி முறை அண்ணாபல்கலைக்கழக 4 கல்லூரிகளில் அறிமுகம்


கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் கல்வி முறையை அண்ணாபல்கலைக்கழகம் தனது 4 கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்துகிறது.

புதிய கல்வி முறை

கல்லூரி மாணவ-மாணவிகள் ஒரு பாடத்தை எடுத்து படிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பாடத்துடன் மேலும் விரும்பும் பாடத்தை எடுத்து படிக்கலாம். இதை (சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம்) கூடுதலாக விரும்பும் படிப்பை படிக்கும் முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த முறை சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்தியா முழுவதும் இந்த முறை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிதாக அண்ணாபல்கலைக்கழகமும் இந்த முறையை அமல்படுத்த உள்ளது. அதாவது அண்ணாபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 600 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல் கட்டமாக அண்ணாபல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் 2015-2016 ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கி கூறியதாவது:-

விளக்கம்

உதாரணமாக ஒரு மாணவர் பி.இ. மெக்கானிக் எடுத்து படித்தால் அவர் மெக்கானிக் சம்பந்தபட்ட பாடங்களை படித்து தான் ஆகவேண்டும். ஆனால் அவர் ஆங்கிலம் கற்கவிரும்பினால் அவர் ஆங்கிலபாடத்தை விருப்ப பாடமாக கூடுதலாக படிக்கலாம். அதுபோல அவர் புவியியல் படிக்க விரும்பினால் புவியியல் எடுத்து படிக்கலாம்.

அல்லது அவர் கம்ப்யூட்டர் பாடம் எடுத்து கூடுதலாக படிக்கலாம். ஆனால் அவர் எடுத்த மெக்கானிக்கல் மெயின் பாடத்தை மாற்ற முடியாது. அவருக்கு பட்டம் மெக்கானிக்கல் பாடத்தில்தான் வழங்கமுடியும். ஆனால் வேறு எந்த பாடத்தை படித்தாலும் அந்தபாடம் அவர் படித்ததாக சான்று அளிக்கப்படும். இதுவே கூடுதலாக படிக்கும் முறையாகும்.

படிப்படியாக அமல்படுத்தப்படும்

இந்த படிப்பு படிப்படியாக அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப பிரதமர் மோடி வேண்டுகோள் உங்களுக்காக ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன



காந்திநகர்,

‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இங்கு காத்திருக்கிறது, எனவே அவர்கள் நாடு திரும்ப வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காந்தி இந்தியா திரும்பிய தினம்

குஜராத் மாநிலம் காந்திநகரில், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நூற்றாண்டு தினவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒரு காலத்தில் வாழ்வாதாரம் மேம்பட விருப்பத்திற்கு மாறாகவும், துணிவுடனும், புதிய ஆய்வுகளை நடத்தவும் வெளிநாடு செல்லும்படி நம் முன்னோர் கூறினார்கள். ஆனால் இப்போது இந்தியா மிக வலிமையுடன் வளர்ந்து இருக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக மிகப்பெரிய வாய்ப்புகள் இங்கு காத்திருக்கிறது.

உலக அளவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் நமது மிகப்பெரிய சொத்து என்பது எனது கருத்து. அவர்களை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும். உலகளவில் நமது பங்கு இருப்பது மிகவும் வலிமையானது. இப்போது உலகம் இந்தியா மீது அன்புடன் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியா மீது கவனம்

நான் எனது புதிய பொறுப்புகளை ஏற்ற பிறகு 50 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களுடன் நாம் வெளிப்படையாக பேசினோம். மிகவும் ஏழ்மையான நாடு முதல் மிகவும் பணக்கார நாடு வரை இந்தியா மீது கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிது.

ஐக்கிய நாடுகள் எனது கோரிக்கையான ‘உலக யோகா தினம்’ அறிவிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டதில் இருந்து உலகம் இந்தியா மீது வைத்துள்ள அன்பை எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 177 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் 40–க்கும் மேற்பட்டவை இஸ்லாமிய நாடுகள். இந்த தீர்மானம் வெறும் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற தீர்மானங்கள் வழக்கமாக நிறைவேற 2 ஆண்டுகளாவது ஆகும்.

நமது பொறுப்பு

உலக நாடுகள் இந்தியா மீது அன்பு செலுத்துவதற்கு அந்நாடுகளில் உள்ள இந்தியர்களின் செழிப்பு காரணம் அல்ல. ஆனால் அவர்களது பணித்திறன் மற்றும் கலாசாரம், பாரம்பரியம் தான் காரணம். உலக சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இந்தியா நிரூபிக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது.

எப்படி காந்தி தெருக்களை சுத்தம் செய்தபோதும், கதர் துணிகளை பிரபலப்படுத்துவது போன்ற மற்ற பல சேவைகளின் மூலம் விடுதலை இயக்கத்துக்கு தலைமை தாங்கி நடத்திச் சென்றாரோ அதுபோல, இப்போது இதனை நம்பிக்கையுடன் நிரூபிக்க வேண்டியது நமது பொறுப்பு.

ஏராளமான வாய்ப்புகள்

உங்கள் அன்பான இந்தியாவை விட்டு பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று அங்கு சில காலத்தை கழித்திருக்கிறீர்கள். இப்போது ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காக இங்கு காத்திருக்கிறது என நான் உறுதியளிக்கிறேன். காலம் வேகமாக மாறிவருகிறது. இந்தியா புதிய வலிமையுடன் வளர்ந்து இருக்கிறது.

கங்கையை தூய்மைப்படுத்துவதும் உங்களுக்கு மிகவும் விருப்பமான திட்டம் என்பது எனக்கு தெரியும். இது மிகப்பெரிய மதரீதியான, சுற்றுச்சூழல் மதிப்புமிக்க திட்டம் மட்டுமின்றி, இந்தியாவின் 40 சதவீத மக்களின் பொருளாதார மேம்பாடு சம்பந்தப்பட்டது. நீங்களும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இல்லையென்றாலும், எங்கள் சொந்த மக்கள் எங்களுக்கு வலிமையை தருவார்கள், எங்கள் வலியில் பங்கெடுப்பார்கள், மகிழ்ச்சியே எங்களுக்கு சக்தியை தரும்.

இந்தியா திரும்பவேண்டும்

‘இந்திய வம்சாவளி நபர்கள்’ மற்றும் ‘வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள்’ என்ற இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது இருதரப்பினருக்கும் வாழ்நாள் விசா, போலீஸ் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு போன்ற பல பலன்களை தரக்கூடியது. எனவே நீங்கள் இந்தியா திரும்ப வேண்டும். அவர்களுக்காக டெல்லியில் ஒரு அலுவலகம் (பிரவசி பாரதீய கேந்திரா) விரைவில் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Thursday, January 8, 2015

அந்த நாள் ஞாபகம்...


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு ஊடகத் தமிழ் என்பது நான்காம் தமிழாகச் சேர்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். மொழியை வளர்ப்பதில் ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால், இன்று ஊடகங்களில் தமிழ் படும் பாடு சொல்லி மாளாது.

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று புதுமைக்கு வரவேற்பு கூறுகிறது தமிழ். பழைமையை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு வளரும் எந்தப் புதுமையும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. பழைமை என்னும் வேரினைப் புறக்கணித்துவிட்டு புதுமை என்னும் விருட்சம் தழைத்தோங்குவது என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. பழைமையில் வேரூன்றிப் புதுமையில் தழைத்தோங்குவதே மறுமலர்ச்சி. வானொலியின் பரிணாம வளர்ச்சியே தொலைக்காட்சி என்ற போதிலும், அன்றைய வானொலி நிகழ்ச்சிகளுக்கும், இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

குழந்தைப் படம் பொறிக்கப்பட்ட மர்பி வானொலிப் பெட்டியும், பிலிப்ஸ் வானொலிப் பெட்டியும் பெரிய அளவில் வீட்டு மேசையை அடைத்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சி இன்றும் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

பெரிய செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே வானொலிப் பெட்டிகள் இருந்த காலமும் உண்டு. அந்தக் காலப் பொருளாதார நிலை அப்படி. பின்னர் சிறிய அளவு வானொலிப் பெட்டிகளும், டிரான்ஸிஸ்டர் என்னும் பேட்டரியில் இயங்கக் கூடிய சிறிய கையடக்க வானொலிப் பெட்டிகளும் வந்தபோது மக்கள் வியப்படைந்த காலமும் உண்டு. அவை விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டபோது, அனைத்து வீடுகளிலும் இடம் பிடித்துக் கொண்டது. சிறிய பெட்டிக் கடைகளிலும், தேநீர்க் கடைகளிலும், வானொலிச் செய்திகள் கேட்பதற்கும், கிரிக்கெட் நேர்முக வர்ணனைகள் கேட்பதற்கும் பெருங்கூட்டமே கூடி நின்ற காட்சிகளும் உண்டு.

புலரும் அதிகாலைப் பொழுதில் 5.45 மணிக்கு செவிக்கினிய வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கி, மங்கல இசை, சான்றோர் வாக்கு எனத் தொடரும் காலை நிகழ்ச்சிகள் முதற்கொண்டு இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திரைப்படப் பாடல்கள், கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிகள் என இரவு 11 மணிவரை ஒலிக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி என்னும் அந்த இனிய குரலும், மாநிலச் செய்திகளை வாசிப்பவர்களின் மணியான வெங்கலக் குரலும், சிறிதும் பிசிறில்லாத தமிழ் உச்சரிப்பும் இன்றும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒலிபரப்பாகும் ஒலிச்சித்திரம், நேயர் விருப்பம், இலக்கிய நிகழ்ச்சிகள், வரலாற்று நாடகங்கள், நாள்தோறும் இரவு 7 மணிக்கு ஒலிபரப்பாகும் "வயலும் வாழ்வும்' என்று அனைத்து நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் இனிய குரலில் இழையோடும் இனிய தமிழும் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று தொலைக்காட்சிகளில் அதுபோன்ற பிழையற்ற தமிழ் உச்சரிப்பைக் காண முடியவில்லை. பண்பலை வரிசையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பல தனியார் வானொலி நிலையங்களும், தமிழைக் கொல்வதில் தொலைக்காட்சிகளோடு போட்டி போடுகின்றன என்பது கசப்பான உண்மை.

முந்தைய காலங்களில் இலங்கை வானொலி வழங்கிய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் முத்தான நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் குரலில் ஒலிக்கும் ஈழத் தமிழின் இனிமையைக் கேட்க இரண்டு செவிகள் போதாது. நிகழ்ச்சியின் இறுதியில் தங்களின் பெயர்களைச் சொல்லி தொகுப்பாளர்கள் விடை பெறும் விதமும், நிகழ்ச்சியின் இடையிடையே அவர்கள் அப்போது என்ன நேரம் என்பதைச் சொல்லும் விதமும் மிகவும் அருமை. எனவேதான், இலங்கை வானொலியை அதிக அளவு மக்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழே அறியாத ஒருதலைமுறையை உருவாக்குவதிலும் தமிழைத் தொலைப்பதிலும்தான் முதலிடம் வகிக்கின்றன. ஊடகத் தமிழை ஒழுங்குபடுத்த தமிழ் அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டியது இன்றைய அவசியமும் அவசரமுமாகும்.

4 ஆண்டுகள் ஆசிரியர் படிப்பு


logo
‘‘ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி’’ என்பது தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியின் மேன்மை குறித்து சொல்லப்படும் ஒரு வழக்கு மொழியாகும். ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்றும், ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்களை இறைவனுக்கு ஒப்பிட்டு மதிக்கும் சமுதாயம் இது. சுவாமி விவேகானந்தர்கூட, ‘‘எனது தாயும், தந்தையும் இந்த உடலை எனக்கு தந்தனர். ஆனால், எனது ஆசிரியர்கள்தான் என் ஆன்மாவுக்கு மறுபிறவி கொடுத்தனர்’’ என்று கூறியுள்ளார். ஒரு குழந்தை பிறந்து 3 அல்லது 4 வயது வரைதான், முழு நேரமும் தாயின் மடியில், தந்தையின் பராமரிப்பில் இருக்கிறது. அதற்கு பிறகு, மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு சென்று, கல்லூரி படிப்பை முடித்து, பணியாற்ற செல்லும் வரை, ஒவ்வொரு வகுப்பிலும் அதிக நேரம் ஆசிரியர்களின் நிழலில்தான் இருக்கிறார்கள். ஆக, கல்வி போதிப்பது மட்டுமின்றி, நன்னெறிகளை போதிப்பதிலும் ஆசிரியர்களின் தாக்கம்தான், அந்த மாணவர்களிடம் இருக்கும்.

பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் ‘ரோல் மாடல்’கள். அந்த வகையில், ஆசிரியர்களின் பிரதிபலிப்பாகத்தான் மாணவர்கள் திகழ்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களை உருவாக்கும், ஆசிரியர் கல்வி தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில், ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மையத்திற்கு அடிக்கல் நாட்டி, பண்டித மதன் மோகன் மாளவியா தேசிய ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் திட்டத்தை தொடங்கிவைக்கும்போது, தரமுள்ள ஆசிரியர்கள், அறிவாற்றல்மிக்க ஆசிரியர்கள் உருவாக வேண்டிய அவசர அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நமது புதிய கல்வித்திட்டம் உலகம் முழுவதற்குமான நல்ல ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும். ஆசிரியர்கள் கல்விக்கான 5 ஆண்டு படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது, தற்போது பிளஸ்–2 முடித்தவுடன் எப்படி மருத்துவக்கல்வி, சட்டப்படிப்பு போன்ற படிப்புகளை ஏறத்தாழ 5 ஆண்டுகள் படிக்கிறார்களோ, அதுபோல, பிளஸ்–2 முடித்தவுடன், 5 ஆண்டுகள் ஆசிரியர் படிப்பை படிப்பதற்கான கல்வித்திட்டம் வேண்டும் என்று கூறியிருந்தார். இதை உடனடியாக நிறைவேற்றும் வகையில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பும், ஆசிரியர் பட்டப்படிப்பும் படிக்கும் வகையிலான 4 ஆண்டுகள் படிப்பும், ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எட். படிப்புக்கான 2 ஆண்டு படிப்பும் வருகிற கல்வி ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

இதுமட்டுமல்லாமல், இந்த நாட்டின் கலாசாரத்திலும், பாரம்பரியத்திலும் வேரூன்றியுள்ள ஆசிரியர்களை உருவாக்கும் நல்ல சூழ்நிலை வேண்டும். இதன்மூலம், உலகம் முழுவதும் தற்போது ஆசிரியர் பணிக்கு இருக்கும் அதிதேவையை பூர்த்தி செய்ய லட்சக்கணக்கான ஆசிரியர்களை பயிற்றுவித்து, இந்தியாவில் இருந்து அனுப்பும் வகையில் கல்வித்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். நமது நாட்டில் உள்ள பெரிய பெரிய தலைவர்கள் வாழ்க்கை எல்லாம் நமக்கு சொல்வது, அவர்கள் வளர்ச்சியில் முக்கியப்பங்கு, அவர்களின் தாய்மார்களும், ஆசிரியர்களும்தான். அதே வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வகையில்தான், ஆசிரியர் தகுதியை வலுவாக்குவதாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார். எப்படி ஒரு மாணவனிடம், எதிர்காலத்தில் நீ படித்து முடித்தவுடன் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறாய்? என்று ஆசிரியர்கள் கேட்கும் நேரத்தில், டாக்டராக விரும்புகிறேன், என்ஜினீயராக விரும்புகிறேன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக விரும்புகிறேன், விஞ்ஞானியாக விரும்புகிறேன் என்பது போன்ற பதில்களை மாணவர்கள் கூறவிரும்புகிறார்களோ, அதற்கும் மேலாக ஆசிரியராக விரும்புகிறேன் என்று பெரும்பான்மையான மாணவர்கள் சொல்லும் அளவுக்கு ஆசிரியர் பணிக்கு சமுதாயத்தில் ஒரு கவுரவமும், அந்தஸ்தும், ஊதியமும் கிடைக்க வேண்டும். ஆனால், அதற்கேற்ற வகையில், ஆசிரியர்களும், மாறிவரும் முன்னேற்றத்திற்கேற்ப மாணவர்களை உருவாக்கும் வகையிலான தகுதிபடைத்தவர்களாக இருக்க வேண்டும்.

இப்போதுள்ள மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மிகவேகமாக முன்னேறியுள்ளனர். அந்த அளவுக்கு ஆசிரியர்கள் கல்வியும், அவ்வப்போது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் எதிர்கால வளமிக்க சந்ததியை உருவாக்கும் வகையிலான, புதிய புதிய யுக்திகள் இடம்பெற வேண்டும்.

சம்பாதிப்பதை தண்ணீராய் கரைக்கும் மால்கள்

Dinamani

முன்பெல்லாம் நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஓரிடத்தில் கூட்ட வேண்டும் என்றால் அது ஒரு போட்டியாகவோ, இளைஞர் மாநாடாகவோ இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய காலத்தில் ஏராளமான இளைஞர்களை ஒரே இடத்தில் பார்க்க ஷாப்பிங் மால் தியேட்டர் போன்ற இடங்களில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

அதிலும் குறிப்பாக வணிக வளாகங்களுக்குச் சென்றால் அங்கு ஏராளமான இளம் தலைமுறையினரைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு இன்றைய இளம் தலைமுறையினரை ஈர்க்கும் காந்தமாக இந்த மால்கள் அமைந்துள்ளன.

அதற்குக் காரணம் இளைஞர்கள் விரும்பும் அனைத்து பொருள்களும், விஷயங்களும் வணிக வளாகங்களில் நிறைந்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் 18 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள்தான்.

இளைஞர்களைக் கவரும் அனைத்து அம்சங்களும் இந்த மால்களில் நிறைந்துள்ளன. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் உதிரிப் பாகங்கள் வரை அனைத்தும் இங்கும் கிடைக்கின்றன. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இங்கு கடை விரித்திருப்பதால், ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களும் வாங்க முடியும்.

ஒரே இடத்தில் பொழுதுபோக்கு அம்சம், ஷாப்பிங்,விதவிதமான உணவு விடுதிகள் என நிறைந்திருக்கின்றன. ஷாப்பிங் முடித்ததும் கூல்டிரிங்ஸ், பசியைப் போக்க ரெஸ்டாரெண்ட். ஃபுட்கோர்ட் பகுதியில் சைவ, அசைவ உணவுப் பிரியர்களுக்குத் தீனி போடும் பல பிரபல ஹோட்டல் ரெஸ்டாரண்டுகள். அங்கு சாப்பிட்டு விட்டு திரும்பினால், அடுத்த தளத்திலேயே திரையரங்கும் திறந்திருக்கிறது.

இவை போக விளையாட்டுப் பிரியர்களுக்காக ஸ்னோபெளலிங், கம்ப்யூட்டர் கேம் உள்ளிட்ட விளையாட்டுகளும் உள்ளன. இவையே இந்த நவீன வணிக வளாகங்களின் சிறப்பம்சங்கள்.

இது தவிர இளைஞர்கள் விரும்பும் நவீன ஆடைகள், வாசனைத் திரவியங்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள், காலணிகள், சினிமா, பாடல் சி.டி.க்கள், பரிசுப் பொருள்கள், புத்தகங்கள் என அனைத்துப் பொருள்களும் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.

மால்களின் பிரமாண்டம், கவர்ச்சிகரமான தோற்றம், சுத்தமான பராமரிப்பு போன்றவையும், ஷாப்பிங், திரைப்படம், விளையாட்டு, மேற்கத்திய உணவு வகைகள் என தங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதும் இளைஞர்கள் இங்கு படையெடுக்க வைக்கிறது. சனி, ஞாயிறு போன்ற நாள்களில் இங்கு இளமைத் திருவிழா நடைபெறும் இடமாக வணிக வளாகங்கள் காட்சியளிக்கின்றன.

இது தவிர ஜோடியாக வருபவர்களுக்கு இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சளிக்கும் வரை எத்தனை முறை, எவ்வளவு நேரம் சுற்றி வந்தாலும் ஏன் என்று யாரும் கேட்பதும் இல்லை.

கடற்கரை, பூங்காக்களை விட பாதுகாப்பான இடமாக இளம் காதலர்கள், வணிக வளாகங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும் உண்மைதான்.

முன்பெல்லாம் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே இருந்த இந்த மால்கள் இப்போது சிறு நகரங்களில் கூட வந்து விட்டன. சென்னையில் புதிதாக மால்கள் தொடங்கப்படுவதே இளைஞர்கள் மத்தியில் மால்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை பறைசாற்றுகிறது.

அன்றைய இளைஞர்கள் கை நிறைய சம்பளம் வாங்குபவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கம்ப்யூட்டர், மார்கெட்டிங் என அனைத்துத் துறைகளில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் கை நிறைந்து, அவர்களின் பை நிறையவும் சம்பளம் கிடைக்கிறது.

இதனால் அவர்கள் செலவு செய்யவும், விரும்பிய பொருள்களை வாங்கவும் தயங்குவதே இல்லை. எந்தப் பொருளும் சிறிது பழையதானாலோ, பழுது ஏற்பட்டாலோ அதை சரி செய்து மீண்டும் பயன்படுத்த இன்றைய தலைமுறை விரும்புவது இல்லை. இதுவே காலணிகள் முதல் கம்ப்யூட்டர்கள் வரை அதிகம் விற்பனையாக முக்கியக் காரணம்.

தற்காலத்தில் பரவலாகிவிட்ட "வாங்கிக் குவிக்கும்' நுகர்வு கலாசாரம் இந்த மால்களுக்கு நல்ல வரவேற்பைத் தந்துள்ளன. இங்கு பொருள்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், தரம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் உள்ளது.

எந்த நாட்டிலும் இளைஞர்களைக் கவரும் எந்த விஷயத்துக்கும் வரவேற்பு அதிகமாகிக் கொண்டு போகுமே தவிர குறையாது.

ஆனால் அதே சமயம், கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இப்படி மால்களில் கொண்டு கரைக்கும் இளைய சமுதாயம், சேமிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது நல்லது.

கை நிறைய சம்பளம் கொடுத்து ராஜாவாக வைத்துக் கொள்ளும் ஐடி நிறுவனங்கள் ஒரு நாள் ஊழியர்களை குறைக்கும் நோக்குடன் செயல்படும் போது நமது நிலை என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். எனவே, சிறு துளியே பெருவெள்ளம் என்று சொன்னார்கள். இப்போது இளைய சமுதாயம் பெரு வெள்ளமாகத்தான் சம்பாதிக்கிறார்கள். அப்போது அதில் சேமிப்பை மறக்காமல் செய்வது நல்லது.

Wednesday, January 7, 2015

KERALA HC DECLARES WOMEN WHO SEEK HELP OF SURROGATE MOTHERS ARE ELIGIBLE FOR MATERNITY LEAVE

KERALA HC DECLARES WOMEN WHO SEEK HELP OF SURROGATE MOTHERS ARE ELIGIBLE FOR MATERNITY LEAVE

KOCHI: The Kerala high court on Tuesday declared that women who seek the help of surrogate mothers are eligible for maternity benefits and held that they cannot be discriminated against.

Justice Dama Seshadri Naidu was considering the plea of a woman who was denied maternity leave by her employer for taking care of her newborn baby citing the reason that she was not the biological mother.

In the judgment delivered on the petition filed by P Geetha, deputy general manager at Kerala Livestock Development Board (KLDB), the court said: "This court declares that there ought not be any discrimination of a woman as far as the maternity benefits are concerned only on the ground that she had obtained the baby through surrogacy."

The court, however, held that women who opt for surrogacy cannot be granted convalescence leave that is available for biological mothers. "It is further made clear that as a matter of legal fiction, the petitioner is entitled to all the benefits an employee could have post-delivery, sans the leave involving the health of the mother after the delivery. In other words, the child-specific statutory benefits, if any, can be extended to the petitioner," the judgment stated.

Referring to Maternity Benefit Act of 1961, the court pointed out that the scheme laid out in the law not only includes one for convalescing from labor but also nursing breaks.

The court, however, said it cannot order KLDB to grant maternity leave to the petitioner as the rules applicable to KLDB — Staff Rules and Regulation-do not allow it. The court pointed out that the Assisted Reproductive Technology Bill has not become a law yet. The bench also noted that KLDB has granted an extraordinary leave of 62 days to Geetha.

Geetha opted for surrogacy as her only son died in a road accident and as she was unable to conceive again even after taking fertility drugs for close to two decades. When the delivery of the surrogate child neared, she applied for maternity leave. To her shock, the plea for leave was turned down by her department citing the reason that she is not the biological mother of the child. The surrogate mother had delivered the baby on June 18, 2014.

NEWS TODAY 25.01.2026