Wednesday, January 14, 2015

Electronic card for OMR, ECR toll

Perungudi toll plaza on Rajiv Gandhi Salai. File photo.

In a few months, you will experience cashless travel, using a single prepaid electronic card to pass through the toll plazas on Rajiv Gandhi Salai (OMR) and East Coast Road (ECR) from Chennai to Puducherry. The OMR has five toll plazas and the ECR six. Sources in the Tamil Nadu Road Development Company (TNRDC) said that tenders would soon be floated for such an electronic toll collection system that would be installed on one lane at each of the plazas.

“This will help reduce waiting time and cut down on fuel wastage. This system would be more useful for heavy and commercial vehicles that traverse these roads frequently. They can purchase prepaid cards from our plazas or online,” an official explained.

Each time when money was debited from the card, the bank would send a text message to the registered mobile phone that would also help track its movement. On an average, the ECR witnesses 7,000 vehicles a day during weekdays and 11, 000 on weekends.

The traffic pattern on the OMR is quite the opposite: during weekdays, the road is utilised by over one lakh vehicles a day and on weekends, this number reduces by more than half. The electronic card is also likely to be used on the Outer Ring Road from Vandalur to Nemilichery, once tolling commences on the 30-km corridor. Meanwhile, the deadline of January 31, 2015 for implementing electronic toll collection (ETC) systems on the toll plazas on the National Highways is nearing.

According to V. Chinna Reddy, Chief General Manager (Technical), National Highways Authority of India (Chennai region), counters are likely to be opened soon to sell these Radio Frequency Identity (RFID) cards.

Tuesday, January 13, 2015

சர்க்கஸில் ஒரு பொசிஷனிங் வித்தை!

Return to frontpage

நம் நாட்டில் சினிமாதான் 1960 70ம் ஆண்டுகளில் முக்கிய பொழுதுபோக்காகத் திகழ்ந்தது. சாதாரணமாகச் சிறுவர் சிறுமியரைச் சினிமாக்களுக்கு அழைத்துப் போகும் வழக்கம் கிடையாது. கிரேட் ஈஸ்டர்ன் சர்க்கஸ், கமலா த்ரீ ரிங் சர்க்கஸ் போன்ற கம்பெனிகள் ஊர் ஊராக வருவார்கள். மூன்று நான்கு வாரங்கள் காட்சிகள் நடத்துவார்கள். சிறுவர் சிறுமியர் இதற்காகவே காத்திருப்பார்கள். கூட்டம் அலைமோதும்.

யானைகள் கால்பந்து விளையாடும்; ரிங் மாஸ்டர் சவுக்கைச் சொடுக்குவார். சிங்கங்கள் சாதுவாகச் சொன்னதைக் கேட்கும்: குரங்குகள் சைக்கிளில் வித்தைகள் காட்டும்: விளக்கை அணைப்பார்கள். சர்க்கஸ் அரங்கம் முழுக்கக் கும்மிருட்டு. ஒரு பெரிய உருண்டைக்குள் மட்டும் கலர் கலராய் விளக்குகள் கண் சிமிட்டும். ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து அந்த உருண்டைக்குள் நுழைவார். அதற்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவார். நம் நெஞ்சு படபடக்கும். ட்ரப்பீஸ் விளையாட்டும் இப்படித்தான். அந்தரத்தில் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் தாவிப் பிடிப்பார்கள். மாஜிக் காட்டுபவர் வருவார். காலி தொப்பியைக் காட்டுவார். “சூ மந்திரக் காளி” என்று என்று சொல்லுவார். காலி தொப்பிக்குள்ளிருந்து முயல் குட்டி குதித்துவரும். இவை அனைத்துக்கும் மேலாகச் சர்க்கஸ் கோமாளிகள். உருவத்தில் குள்ளமாக இருக்கும் இவர்கள் சகலகலா வல்லவர்கள். இவர் களைப் பார்த்தாலே அரங்கம் அதிரும்.

டி.வி.-யின் வரவு

1980 - களில் சமுதாய வாழ்க் கையில் முக்கிய மாற்றங்கள் வந்தன. தொலைக்காட்சியும், கம்ப் யூட்டரும், பொழுதுபோக்கைத் தேடி நாம் போகவேண்டிய தேவை இல்லாமல், அவற்றை நம் வீடுகளுக்குக் கொண்டுவந்தன. அம்மா, அப்பாக்கள் வீடுகளில் தொலைக்காட்சிகளில் சினிமாக்கள், சீரியல்கள் பார்க்கத் தொடங்கினார்கள். சிறுவர் சிறுமியருக்குக் கார்ட்டூன்கள், கிரிக்கெட் மாட்ச்கள்.

கம்ப்யூட்டர்,செல்போன்கள் ஆகிய கருவிகளில் பெரியவர்கள் ஈ மெயில், மெஸேஜிங், வெப் ஸர்ஃபிங் என்று நேரம் செலவிடுகிறார்கள். சிறுவர் சிறுமியரை வீடியோ கேம்ஸ் கட்டிப்போட்டு வைக்கின்றன. ஆகவே, குழந்தைகளுக்கு சர்க்கஸ் பார்க்கும் ஈடுபாடு குறைந்துவிட்டது.

மிருகங்களை பயன்படுத்த எதிர்ப்பு

சர்க்க்கஸில் மிருகங்களைக் கொடு மைப்படுத்துவதாகச் சமூகநல ஆர்வலர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். இதனால், மிருகங்களை வைத்துச் செய்யும் விளையாட்டுகளின்மீது அரசாங்க, நீதிமன்றக் கட்டுப்பாடுகள் வந்தன. இந்த வரைமுறைகளால், மிருகங்கள் பங்கெடுக்கும் விளை யாட்டுக்கள் சுவாரஸ்யம் இழந்தன. மக்கள் சர்க்கஸுக்கு வர இந்த விளையாட்டுக்கள் முக்கிய காரணம். வீட்டுக்கே வந்த பொழுதுபோக்குகள், ஷோக்களின் சுவாரஸ்யக் குறைவு ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால், சர்க்கஸுக்கு வருபவர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகக் குறைந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க சர்க்கஸ் கம்பெனிகளின் கதை இதுதான். நம் நாட்டைப்போலவே, கனடா நாட்டிலும் சர்க்கஸ் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. பல பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் இருந்தன. பிரம்மாண்ட டென்ட்கள், நூற்றுக்கணக்கான கலைஞர்கள், மிருகக் காட்சிசாலை போல் வகை வகையான மிருகங்கள், பறவைகள் என ஏகப்பட்ட வசதிகளோடு இந்தக் கம்பெனிகள் இயங்கின. இந்தக் கம்பெனிகள் தவிர, ஏகப்பட்ட கழைக் கூத்தாடிக் குழுவினர் இருந்தார்கள். இவர்கள் இருபது, முப்பது கலைஞர்கள், ஓரிரு மிருகங்கள் ஆகியவற்றோடு செயல்பட்டார்கள். சர்க்கஸ் கம்பெனிகள் டென்ட் போட்டு ஷோக்கள் நடத்துவார்கள்: கழைக் கூத்தாடிகள் தெருவுக்குத் தெரு சர்க்கஸ் வித்தைகள் காட்டுவார்கள். ஏராளமான மக்கள் கூடிப் பார்த்து ரசிப்பார்கள். டாலர்களை அள்ளி வீசுவார்கள். இதனால், சர்க்கஸ்காரர்களுக்கும், கழைக்கூத்தாடிகளுக்கும் நல்ல வருமானமும், மக்களிடையே மதிப்பும் இருந்தது.

சூப்பர் ஸ்டார்கை லாலிபெர்ட்டே (Guy Laliberte) என்னும் சிறுவனுக்கு சர்க்கஸில் பயங்கர ஈடுபாடு. தன் பள்ளி நாட்களிலேயே ஒரு கழைக் கூத்தாடிகள் கம்பெனியில் சேர்ந்தான். சகலகலா வல்லவன் ஆனான். அக்கார்டியன் (Accordion) என்னும் இசைக்கருவியைப் பிரமாதமாக வாசிப்பான். இரண்டு கால்களிலும் நீளமான மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு நடப்பான், வாயில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து, அந்த நெருப்பை ஸ்டைலாக ஊதுவான். விரைவில், கனடா நாட்டு சர்க்கஸ் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனான்.

1980 - களில், நம் ஊரைப்போலவே, கனடாவிலும் மக்களின் ரசனை மாறத் தொடங்கியது. கழைக்கூத்தாடிகளின் ஷோ, சர்க்கஸ் ஆகியவற்றைப் பார்த்த ஆண், பெண். குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ் ஆகிய மாற்றுப் பொழுது போக்குகளுக்கு மாறிவிட்டார்கள்.

சர்க்கஸ் கம்பெனிகள் மூடல்

சர்க்கஸ் கம்பெனிகளில் ஏராள மானோரால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை. பிஸினஸை மூடினார்கள். இருந்தவர்களுக்குள், போட்டி கடுமையானது. எதிராளியை ஜெயிக்கப் பல யுக்திகளைக் கையாண்டார்கள். சர்க்கஸ் நடத்தும் டென்ட்களை அதிகச் செலவில் ஜோடித்தார்கள். மக்களை ஈர்க்கும் அம்சமான ஜோக்கர்களின் காமெடியை அதிகமாக்கினார்கள். டிக்கெட் விலையைக் குறைத்தார்கள். ஏற்கெனவே சரிந்துகொண்டிருந்த வருமானம் இன்னும் குறைந்தது. பெரிய நிறுவனங்களே தள்ளாடும் போது, கழைக் கூத்தாடிகள் வறுமையின் எல்லைக்கோட்டுக்குத் தள்ளப்பட்டனர்.

லாலிபெர்ட்டேக்கு வேலை போனது. வேறு குழுக்களில் வேலை தேடினார். தொழிலே நொடிக்கும்போது யார் வேலை தருவார்கள்? எல்லாக் கதவுகளும் மூடிவிட்டன. லாலிபெர்ட்டேக்குத் தெரிந்த ஒரே வேலை சர்க்கஸ்தான். என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

காரணம் என்ன?

சர்க்கஸ் தொழிலின் சரிவுக்கு என்ன காரணங்கள் என்று ஆராய்ச்சியே செய்தார். சர்க்கஸின் வெற்றிக்குக் காரணம் மிருக விளையாட்டுக்கள், வீர தீர ஆட்டங்கள், கோமாளிகளின் காமெடி. 1980 வரை சர்க்கஸ் கம்பெனிகளும், கழைக் கூத்தாடிகளும் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தார்கள். ஆகவே, பிசினஸ் லாபகரமாக நடந்தது.

1980-களில், தொலைக்காட்சியும், கம்ப்யூட்டரும் இந்தப் பின்புலத்தை முழுமையாக மாற்றிவிட்டன. அன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் சோப் ஆப்பராக்கள் (Soap Operas) என்று அழைக்கப்பட்டன. இவற்றை மக்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தார்கள். அதாவது, மக்களின் இப்போதைய எதிர்பார்ப்பு கதைகளை மையமாகக்கொண்ட பொழுதுபோக்கு.

மாற்று யோசனை

குழந்தைகள் மட்டுமல்லாமல், முழுக் குடும்பமும் பார்ப்பதாகத் தன் ஷோ அமையவேண்டும். என்ன செய்யலாம்? லாலிபெர்ட்டே மூளையில் இப்போது வெட்டியது ஒரு மின்னல். சாதாரணமாக சர்க்க்கஸில், டரப்பீஸ், மிருக விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் காமெடி, மாஜிக் காட்சிகள் போன்ற பல ஐட்டங்கள் இருக்கும். ஆனால், இவை ஒவ்வொன்றுக்கும் சம்பந்தம் இருக்காது.

சர்க்கஸ் காட்சிகளோடு, ஜனரஞ் சகமான தொலைக்காட்சி சீரியல்களைக் கலந்தால்....விளையாட்டு வீரர்கள், கோமாளிகள் பங்கெடுக்கும் சீரியலின் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு என்று சர்க்கஸ் பற்றிய புதிய பொசிஷனிங்கை மக்கள் மனங்களில் உருவாக்கினால்.....

1985-ம் ஆண்டில் லாலிபெர்ட்டே தன் கனவை நனவாக்கினார். Cirque du Soleil (பிரெஞ்ச் வார்த்தை. சூரிய சர்க்கஸ் என்று அர்த்தம்.) என்னும் சர்க்கஸ் கம்பெனி தொடங்கினார். தன் சர்க்கஸ் காட்சிகளை வலுவான கதையமைப்புக்கொண்ட நாடகங்களாக உருவாக்கினார். சர்க்கஸ் விளையாட்டுக்கள் இந்த நாடகங்களில் நடக்கும் சம்பவங்களாக வரும். கோமாளிகளின் ஜோக்குகளும் கதையோடு ஒன்றியவையாக இருக்கும்.

9 கோடி ரசிகர்கள்

லாலிபெர்ட்டேயின் சர்க்கஸ் கம்பெனி தொடங்கி 30 வருடங்களாகிவிட்டன. இன்று 40 நாடுகளைச் சேர்ந்த 5020 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

கடந்த முப்பது வருடங்களில், அன்டார்ட்டிக்கா தவிர்த்த அத்தனை கண்டங்களிலும், 271 நகரங்களில் இதுவரை நடந்த ஷோக்களை ரசித்திருப்பவர்கள் 9 கோடி பேருக்கும் மேல். வருட வருமானம் 850 மில்லியன் டாலர்கள். லாலிபெர்ட்டேயின் தனிப்பட்ட சொத்து 1800 மில்லியன் டாலர்கள்.

வெற்றி இலக்கணம்

உலகத்தில் இருக்கும் எல்லா சர்க்கஸ் கம்பெனிகளும் நஷ்டத்தில் தள்ளாடும்போது, லாலிபெர்ட்டே மட்டும் ஜெயித்தது எப்படி? சர்க்கஸ் என்றால், கலைஞர்கள், மிருகங்கள் விளையாட்டுக்கள், ஜோக்கர்கள் ஆகியவைதாம் என்று நம் எல்லோர் மனங்களிலும் ஒரு பிம்பம் படிந்தி ருக்கிறது. சர்க்கஸ் கம்பெனிகளும், இந்த பிம்பத்தை உடைக்கத் துணிச்சல் இல்லாமல், குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டுகிறார்கள். லாலிபெர்ட்டே, சர்க்கஸ் என்னும், பிஸினஸின் இலக் கணத்தையே உடைத்தார். புதிய பொசிஷனிங் கண்டார். தேடி வந்தது வரலாறு காணாத வெற்றி!

slvmoorthy@gmail.com

மேடையேற எது தகுதி?

Return to frontpage

தருண் தேஜ்பால். 2013-ல் ஆண்டு ஊடகங்களில் மட்டுமல்லாமல் பொது மக்கள் மத்தியிலும் அதிகம் அடிபட்ட பெயர்களில் ஒன்று. தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர், உடன் பணிபுரிந்த பெண் ஊழியர் எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் ஆசிரியரானார்.

ஊரில் நடக்கிற ஊழல்களை அம்பலப்படுத்துகிற பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு பெண் ஊழியரால் பதிவுசெய்யப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பதவியும் அதிகாரமும் எந்த அளவுக்குப் பாயும் என்பதையும் உணர்த்தியது.

தான் குற்றவாளி அல்ல என்று தருண் தேஜ்பால் தொடர்ந்து வலியுறுத்தினாலும் அவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றம் இன்னும் அவரை விடுவிக்கவில்லை. பிணையில்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிறப்பு அழைப்பாளர்?

இப்படியொரு நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குத் தருண் தேஜ்பால் சிறப்பு அழைப்பாளராக வந்து சென்றிருக்கிறார். ஏற்கெனவே ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய விழாவில் தருண் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற இருந்தார். ஆனால், அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பவே அந்த விழாவில் தருண் கலந்துகொள்ளவில்லை.

ஆனால் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் தருண் தேஜ்பால் கலந்துகொண்டதற்குக் குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட யாரும் பதிவுசெய்யவில்லை என்பது எதன் வெளிப்பாடு?

பொதுவாக இதுபோன்ற பாலியல் குற்றங்களில் தவறு செய்ததாகக் குறிப்பிடப்படுகிற ஆணைவிட, அந்த ஆண் மேல் குற்றம் சுமத்திய பெண்ணே குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறாள். இது போன்ற வழக்குகளில் ஆரம்ப நாட்களில் ஆண் மீது காட்டப்படுகிற கோபமும் ஆவேசமும் அதற்கடுத்து வரும் நாட்களில் மறைந்து விடுகின்றன.

பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு ஆண், அது குறித்த எந்த அவமானமும் குற்ற உணர்வும் இல்லாமல் நிமிர்ந்த நெஞ்சுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிகிறது. அதே வழக்கில் தொடர்புடைய பெண், ‘இவள் களங்கமானவள், ஒரு ஆணின் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தப்பட்டவள்’ என்ற அடையாளத்தில் இருந்து இதேபோல் புன்னகையுடன் கடந்து வந்துவிட முடிகிறதா? அதற்கான சாத்தியங்களை இந்தச் சமூகம் ஏற்படுத்தியிருக்கிறதா?

இங்கே தருண் தேஜ்பால் குற்றவாளியா, இல்லையா என்பதல்ல விவாதம். அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இருந்தாலும் பாலியல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு ஆண் எந்தவிதத் தயக்கமும் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொள்ள முடிகிறதென்றால், இங்கே நிலவும் சூழலை என்னவென்று சொல்வது?

எந்த வித எதிர்ப்பும் புறக்கணிப்பும் இல்லாமல் அந்த ஆண் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ள முடிகிறது என்றால், வழக்கில் தொடர்புடைய அந்தப் பெண் முன்வைத்த குற்றச்சாட்டும் அதனால் அவள் அடைந்த அவமானமும் வேதனையும் இழப்பும் ஒன்றுமில்லை என்பதுபோல் ஆகாதா?

பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்கள் மீது கோபத்தைக் காட்டிக் கொதித் தெழும் மக்களின் அறச்சீற்றம், அப்படியொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், புத்தக வெளியீடு போன்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்குபெறும்போது எங்கே போனது?

நாடு முழுக்கப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் தொடர்புடைய ஒரு ஆண், இங்கே இத்தகைய மேடை, மரியாதை பெற அனுமதிப்பது, அந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணுக்குச் செய்கிற அநீதியாகாதா? சட்டமும் நீதியும் என்னவோ செய்யட்டும், எங்கள் பார்வையில் அவர் குற்றவாளியல்ல என்று அந்த ஆணுக்குத் தரும் மறைமுக ஆதரவாகாதா? இத்தகைய குற்றத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பற்றிய செய்தியாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

மறுபக்கம்

இந்தக் கேள்விகளுக்கு மாற்றுத் தரப்பும் உள்ளது. குற்றம் எத்தகையதாக இருந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்கவே கூடாதா? அவர் தனக்கு விருப்பமுடைய விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக் கூடாதா? இப்படி ஒருவரை முற்றிலுமாக நிராகரிப்பது, மானுடப் பொது தர்மத்துக்கு ஏற்றதா?

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கும் தண்டனைகளுக்கும் ஆளாகும் அரசியல்வாதிகளுக்கு, நாம் இதே அளவுகோலைப் பயன்படுத்திவிட முடியுமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

வாரிசு சான்றிதழ் ஏன்? எதற்கு?

வாரிசுகள் யார் என்பதை தனியாக வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரை. ஒருவருக்குப் பிறகு அவரது பிள்ளைகள், மனைவி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்கள் வாரிசாக இருக்கலாம்.

இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? ஆனால் யாரெல்லாம் வாரிசாக முடியாது அல்லது வாரிசு என்பதற்கான சட்ட அனுமதிகள் ஏன் வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் வாரிசு சான்றிதழின் அவசியம் புரிந்து விடும்.

ஏன் வேண்டும்?

அரசுப் பணியிலிருந்து ஒருவர் இறந்துவிடுகிறார். முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலைக்கு அவரது மகனோ/ மகளோ வாரிசு என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இப்போது அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களின் மூலமோ மட்டும் உறுதிபடுத்த முடியாது.

சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப் படுகிறது. நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும், சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை / உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.

இந்த வாரிசு சான்றிதழ் வட்டாட்சியர் மூலமாக வாங்க வேண்டும். வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார்.

ஆனால் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன. எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது

ஒரு ஆண் இறந்துவிட்டார் அல்லது காணாமல் போனவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்றால் அவர் மூலமான சொத்துக்கள் மற்றும் பண பலன்களை பெறுவதற்கு சட்டபூர்வமான சான்றிதழ் தேவை. தங்களது சொத்துகள் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்துகொள்ளும் வாரிசுகள் அதன் மீதான உரிமை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை

யாரெல்லாம் வாரிசுகள்?

ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வாரிசுகளாக கருதப்படுவார்கள். இறந்தவரின் இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவர். இந்த வகையில் நேரடி வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவர்களது நெருங்கிய ரத்த உறவுமுறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

இறங்குரிமை சான்றிதழ்

இறந்தவரின் பெயரிலுள்ள முதலீடுகள், வங்கி சேமிப்பு, மற்றும் பண பலன்களை வங்கி அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு பெறாத வாரிசுகளுக்கு அவற்றை உரிமை மாற்ற தயங்குவார்கள்.

ஒருவருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கும்பட் சத்தில் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடுக்க முடியாது. அல்லது பிற்காலத்தில் வேறு நபர்கள் உரிமை கோரி வந்தால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால் சம்பந்தப்பட்ட வாரிசுகள் நீதிமன்றத்தை அணுகி சட்டபூர்வ உரிமை வாங்கி வருவது இறங்குரிமை சான்றிதழ் எனப்படுகிறது .

நடைமுறை என்ன?

இறந்தவரின் வாரிசுகள் நேரடியாக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் வாங்கலாம். இதற்கு சட்டபூர்வமான குடும்ப ஆவணங்களே சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.

குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.

குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார். போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.

வித்தியாசமான தலைப்பில் கவுண்டமணியின் புதிய படம்!

'வாய்மை' படத்தில் கவுண்டமணி.

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

பின்னர் ' வாய்மை ', ‘49 ஓ’ என்ற படங்களின் மூலம் கவுண்டமணி மீண்டும் நடிக்கவந்தார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற புதிய படத்தில் நடிக்க கவுண்டமணி ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்த கணபதி பாலமுருகன் இந்தப் படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தும் கேரவனை வாடகைக்கு விடும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்கிறார் .

சென்னையில் இருந்து மதுரை வரை செல்லும் பயணத்தின் சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயராம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜெ. சண்முகம் இப்படத்தைத் தயாரிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

Singapore broadband speed now world's 10th fastest, says Akamai



SINGAPORE - Singapore has leapt past more than 10 global nations in broadband speed, coming in 10th in speed ranking for the first time.

The position was attained after it recorded an average connection speed of 12.2 Mbps in the third quarter of last year, according to the latest study by US-based Internet specialist Akamai Technologies released on Friday.

This represents an 18 per cent jump in speed from the second quarter of last year, when the Republic recorded an average connection speed was 10.4Mbps and had a global ranking of 21st.

South Korea (25.3 Mbps) maintained its pole position globally, with Hong Kong (16.3 Mbps) coming in second, followed by Japan (15 Mbps) and Switzerland (14.5 Mbps), according to Akamai.

These four economies have consistently dominated the top four spots globally for their surfing speeds.

Akamai tracks global users' connection speeds from handling more than two trillion requests for online content daily. Most of the world's Web content goes through its computers.

NEWS TODAY 10.06.2026