Wednesday, January 21, 2015

New medical colleges to be linked to district hospitals

To meet the shortage of over 7.5 lakh doctors in the country, the government has agreed to establish new medical colleges attached to district and referral hospitals.

Under this scheme, GB Pant hospital at Port Blair (400-bed strength), District Hospital Kohima, Nagaland (300-bed strength), District Hospital Almora, Uttarakhand (500-bed strength), District Hospitals at Churu (300-bed strength) and Dungarpur (300-bed strength) in Rajasthan, District Hospitals at Datia (350- bed strength) and District Hospital at Khandwa (300-bed strength) in Madhya Pradesh will have medical colleges with 100 MBBS seats each.

Health Minister J.P. Nadda recently said there was a need to “think out of the box” to meet the shortage of doctors. The Centre will also strengthen and upgrade the existing State government and Central government medical colleges to increase MBBS seats.

As part of the plan, the Punjab government has been allowed to increase MBBS seats at Government Medical College, Patiala from 150 to 200 and at Government Medical College, Amritsar from 150 to 200.

Seats will also be increased from 150 to 250 in Government Medical College, Coimbatore and from 100 to 150 in Government Medical College, Tirunelveli.

In Government Medical College, Madurai, the seats will be increased from 155 to 250.

Seats will also be increased at Government Medical College, Haldwani, from 100 to 150, from 150 to 200 at the Gandhi Medical College, Bhopal, from 100 to 150 in S. S. Medical College, Rewa and from 150 to 250 at GR Medical College, Gwalior.

Medical seats will also be increased at RNT Medical College, Udaipur and Government Medical College, Jhalawar.





5 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீட்பு: மெரினாவில் சுண்டல் விற்கும் திருமலையின் தன்னார்வ சேவை


Return to frontpage
மெரினாவில் சுண்டல் விற்கும் திருமலை.

சின்னச் சின்ன காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர்கள் பெரும்பாலும் சென்னைக்குத்தான் வண்டி ஏறு கிறார்கள். இப்படி கடந்த 5 ஆண்டுகளில் சென்னைக்கு ஓடிவந்த 50-க்கும் மேற்பட்ட சிறு வர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்கும் திருமலை.

திருச்சியைச் சேர்ந்த மாண வனும், அவனது நண்பனும் அண்மையில் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்து விட்டார்கள். மெரினாவில் சுற்றித் திரிந்த இவர்களை பத்திரமாக மீட்டு பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் திருமலை. இப்படி பிரதி பலன் பாராமல் பலரை மீட்டுக் கொடுத்திருந்தாலும் ‘‘மாசத்துக்கு ஒரு பொடியனாச்சும் இப்படி வந்துடுறாங்க. அதனால, எத்தன பேர மீட்டுக் குடுத்தோம்னு கணக்கெல்லாம் வச்சுக்கல’’ என்று அடக்கமாகச் சொல்கிறார் திருமலை.

சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்த திருமலை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே பேல்பூரி, சுண்டல் வியாபாரம் செய்யும் கடை ஒன்றில் 9 ஆண்டுகளாக வேலை செய்கிறார். வியாபாரத்துக்கு நடுவில், மெரினாவில் போக்கிடம் தெரியாமல் சுற்றித் திரியும் சிறுவர்களை கண்காணிக்கும் திருமலை, சமயம் பார்த்து அவர்களிடம் நயமாக பேச்சுக் கொடுத்து அவர்களைப் பற்றிய சுய விவரங்களைப் பெற்று பெற்றோருக்கு தகவல் கொடுத்து விடுவார். இப்படித்தான், வீட்டை விட்டு வெளியேறி வந்து மெரினாவில் சுற்றித் திரிந்த சிறுவர் கள் பலரை மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்திருக்கிறார்.

‘‘வீட்டைவிட்டு ஓடிவந்த பசங்கள தனியா அடையாளம் கண்டுபிடிச்சிடலாம். 2 நாளைக்கு மேல யாராச்சும் இந்தப் பகுதியில சுத்திட்டு இருந்தாங்கன்னா அவங் கள கூப்பிட்டு வச்சு, எதாச்சும் சாப்பாடு வாங்கிக் குடுப்பேன். அப்புறமாத்தான் அவங்களப் பத்தி விசாரிக்க ஆரம்பிப்பேன். எடுத்ததுமே எல்லாரும் உண்மையைச் சொல் லிட மாட்டாங்க. அதனால, அவங்க வச்சிருக்கிற புத்தகம், நோட்டு களை வாங்கி நோட்டம் பார்ப் பேன். அதுக்குள்ளயே எனக்குத் தேவை யான விவரங்கள் கிடைச்சிடும்.

சில நேரங்கள்ல எந்த விவரமும் கிடைக்காது; பையனும் வாயைத் திறக்க மாட்டான். அதனால, அவன அப்படியே விட்டுட்டுப் போயிட மாட்டேன். எங்கூடவே வீட்டுக்கு கூட்டிட்டு போவேன். எங்க மொதலாளியம்மா வீட்டுல தான் நாங்க அஞ்சு பேரு தங்கி இருக்கோம். அவங்கட்ட சொல் லிட்டு அந்த பையனையும் தங்க வச்சுப்பேன். ரெண்டு நாள் கழிச்சு மெதுவா அவனாவே என்கிட்ட எல்லா உண்மையையும் சொல் லிருவான். அதுவரைக்கும் அவசரப்படாம பொறுமையா இருப்பேன்.

அப்பா - அம்மா பேரு, போன் நம்பர், எதுக்காக வீட்டைவிட்டு வெளியேறி வந்தான் என்ற விஷயம் எல்லாத்தையும் அந்தப் பையனே சொல்லிருவான். அதுக்கப்புறம் அவங்க பெற்றோருக்கு தகவல் சொல்லி அவனை அவங்கட்ட ஒப்படைப்பேன். நான் பாக்குற வேலைக்கு நடுவுல இது எனக்கு கூடுதல் சுமைதான். ஆனாலும். புள்ளைகள காணாம தவிக்கிற பெற்றோர் இங்க வந்து அந்தப் புள்ளைகள கட்டிப் பிடிச்சு கண்ணீர் விடுறத பாக்குறப்ப அந்த சுமையோட வலி தெரியாம போயிடுது. அதனால, தொடர்ந்து இந்த சேவையை செஞ்சுட்டு இருக் கேன் என்றார் திருமலை.

உங்களை நீங்களே தீர்மானியுங்கள்!



உளவியலாளர் ஒருவர் “நீ என்பது உன்னைப் பற்றி நீ நினைப்பதே. உனக்கு வேண்டியதை நீயே எண்ணிக்கொள்” என்று சொன்னார்.

பெரும்பாலான இளைஞர்கள் தங்களிடம் உள்ள பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசப் பயப்படுகின்றனர். இதனால், மனக்குழப்பம், மன அழுத்தம், மனச் சோர்வு ஏற்படுகின்றன.

மனநோயின் முதல் தீர்வே மனம் திறந்து பேசுவதுதான் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். எல்லோருடைய உள்ளங்களிலும் ஏதாவதொரு பிரச்சினை, மனக்கஷ்டம், மனவருத்தம் இருக்கத்தான் செய்யும். நமக்கு மட்டும்தான் பிரச்சினை இருக்கிறது என்று கற்பனை செய்து சிலர் தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.

ஒரு கலெக்டராக, மருத்துவராக, விஞ்ஞானியாக ஆகவேண்டும் என்பது உங்களுடைய எண்ணம் என்றால், அதில் உறுதியாக இருங்கள்.யாருக்காகவும் உங்களுடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் அந்த எண்ணத்தை விட்டு விடாதீர்கள். அதில், பல்வேறு தோல்விகள், தடைக்கற்கள், பிரச்சினைகள் வரும். எதைக் கண்டும் அதைத் தியாகம் செய்து விடாதீர்கள்.

உண்மையில் ஒரு மனிதனின் உண்மையான பலம் சந்தோஷம்தான். உங்களுடைய சந்தோஷம் உங்கள் கையில்தான். யாரும் உங்களுடைய சந்தோஷத்தைக் கெடுத்துவிட முடியாது.

வாழ்க்கையில் பிரச்சினையை எதிர்கொள்ள தெரியாதவர் மகிழ்ச்சியில்லாமல் இருப்பார். நாளை என்ன நடக்கும் என்று சிந்திப்பவர் சந்தோஷத்தை விரும்பமாட்டார். நாம் எதிர்காலத்தில் முன்னேறுவோமா என்று சந்தேகிப்பவர் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். “நான் எல்லாவற்றிலும் சிறப்பாக வருவேன்” என்று நினைப்பவர் மகிழ்ச்சியாக இருப்பார். அவரது, மகிழ்ச்சியே அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும். அதனால்,எப்போதும் சந்தோஷமாக இருங்கள்.

நல்ல ஆடைகளை அணியும்போது நம்முடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் அழகாக மாறுகின்றன. அதனால், எப்போதும் நல்ல ஆடைகளை அணிந்து, நல்ல எண்ணங்களோடு வலம் வாருங்கள்.

அடுத்ததாக, உங்களுக்கென்று நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய அலுவலகங்களிலோ, கல்லூரிகளிலோ, பள்ளிகளிலோ இருப்பவர்களுடன் நீங்கள் எப்போதுமே நற்பண்புகளின் மூலம் அழகாக இருங்கள். இதன் மூலம், அவர்களிடம் நல்ல எண்ணங்கள் ஏற்படும்.

ஒரு நாட்டின் மக்கள் தங்களை ஆட்சி செய்ய குறிப்பிட்ட காலத்துக்கு ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள். அவரை ஆட்சி செய்ய அனுமதிப்பார்கள். குறிப்பிட்டகாலத்துக்குப் பின்பு, அவரை ஆட்சியை விட்டு இறக்கி,பக்கத்தில் உள்ள காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவார்கள். இந்த பழக்கத்தின்படி, ஒரு சமயம் ஒரு இளைஞரை அந்த நாட்டின் தலைவராக்கினார்கள். வழக்கப்படி அவரைச் சில வருடங்கள் கழித்து காட்டில் கொண்டு போய் விட்டுவிட அழைத்துச் சென்றார்கள்.

ஆனால், ஆச்சரியம். அங்கே காடு இருப்பதற்குப் பதிலாக ஒரு ஊர் இருந்தது. இவர் தலைவராக இருக்கும்போதே அந்தக் காட்டைச் சுத்தம்செய்து, ஒரு ஊராக மாற்றிவிட்டார். இதுதான், ஒரு நேர்மறையாகச் சிந்திப்பவரின் எண்ணம். நமக்கு என்ன வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பதுபற்றிச் சிந்திக்க மாட்டார். அதை எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதுபற்றித்தான் சிந்திப்பார்.

எப்போதும் நேர்மறையாகச் சிந்தித்து வெற்றி பெறுங்கள்.

சாதிக்க நினைப்பவர்கள் ஒரு தடவை முயற்சி செய்துவிட்டு சும்மா இருப்பவர்கள் அல்ல.சாதிக்கும்வரை முயன்று கொண்டே இருப்பார்கள். நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

- நெல்லை சலீம்

erusaleem@gmail.com

ANNAMALAI UNIVERSITY PG MEDICINE ADMISSION NOTIFICATION 2015-16


செல்வத்துள் செல்வம்

Dinamani

இன்றைய நாகரிக உலகில் சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் என பெரும்பாலானோர் தங்கள் காதுகளில் ஒரு ஒலிக் கருவியை நுழைத்துக் கொண்டு திரிவதைப் பார்க்க முடிகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், தொழிலாளர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்தக் கருவியை காதில் நுழைத்துக் கொண்டு தனி உலகில் சஞ்சரித்து வருகின்றனர்.

இவர்களில் பலர் ஓய்வு நேரங்களில் மட்டுமல்லாது, தங்களின் வேலைகளின் ஊடேயும் இதை பயன்படுத்தும் போக்கு பெருகி வருகிறது.

இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, கார் ஓட்டும்போது, படிக்கும் போது, கணினியில் பணிபுரியும் போது, படுக்கையில் படுத்திருக்கும் போது என இதற்கு எந்த விதிவிலக்கும் இல்லை.

வேலையின் சுமை தெரியாது, கூடுதலாக பணி செய்யலாம் போன்றவை இதற்காகக் கூறப்படும் காரணங்கள்.

இந்த ஒலிக்கருவிகளை பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்படுவதில்லை, அடுத்தவர்களை தொந்தரவு செய்வதில்லை என்பதும் இவர்களின் வாதம்.

ஆனால், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் இந்தக் கருவியை பயன்படுத்தும் போது, அவர்களுக்கு பின்னால் வரும் வாகனங்களின் ஹாரன் சப்தத்தை கேட்க முடிவதில்லை.

அவர்களை முந்திச் செல்லும் வாகனங்களின் குறுக்கே சென்று ஆபத்தை தேடிக்கொள்கின்றனர்.

அதேபோல, காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலில் முழுவதுமாக லயித்துப் போயிருப்பவர்களுக்கு நகரச் சாலைகளில் சிக்னல் விழுவது, எதிரே வரும் வாகனங்களின் வேகம், திரும்பும் திசைகளை கணிப்பது போன்றவற்றில் ஏற்படும் கவனக் குறைவுகளாலும் விபத்தில் சிக்குகின்றனர்.

மனைவியின் சேலை சக்கரத்தில் சுற்றிக்கொள்ள, அவர் எழுப்பும் அபாய குரல் கேட்காமல் சென்றோரும் உண்டு.

முன்பெல்லாம் பேருந்தில் மணிக்கணக்கில் பயணம் செய்ய நேர்ந்தால் வழித்துணையாக வருபவை புத்தகங்களே. அவை நாவலாகவோ, வார, நாளிதழ்களாகவோ இருக்கும்.

சிறிது நேரம் தூங்கியது போக, பெரும்பாலான நேரங்கள் புத்தகங்கள் படிப்பதே வழக்கம்.

இதனால் பொது அறிவு வளர்ந்ததோடு வாசிப்பு பழக்கமும் வளர்ந்தது. ஆனால், தற்போது பயணம் செய்பவர்களின் கைகளில் புத்தகங்களை பார்க்க முடிவதில்லை.

அதற்கு பதிலாக செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்றவற்றில் விளையாடுவதும், திரைப்படம் பார்ப்பதும்தான் அதிகமாக நடைபெறுகின்றன. இதில் ஒலிக் கருவியை காதில் பொருத்தி பாடலை ஒலிக்கவிட்டு தூங்கிவிடுபவர்கள்தான் அதிகம்.

அதேபோல, பணியின் போது இந்த கருவியை காதில் நுழைத்துக் கொண்டு பாட்டு கேட்டுத்தான் ஆக வேண்டுமா? இதனால், நிச்சயமாக பணியில் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கட்டடத் தொழிலாளர்கள், இயந்திரங்களில் பணிபுரிவோரும் சில சமயங்களில் இந்தக் கருவியை பொருத்திக் கொண்டு பாட்டுக் கேட்பதை பார்க்க முடிகிறது.

ஒரு நிறுவனத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், சொந்தத் தொழில் செய்வோரை யார் கட்டுப்படுத்துவது?

பகலில் மட்டுமல்லாது, இரவில் தூங்கும்போதும்கூட இந்த ஒலிக் கருவியை காதில் பொருத்தி பாடலை ஒலிக்கவிட்டு தூங்குபவர்கள் அனேகம். இது பாதுகாப்புக்கு உகந்ததல்ல.

இன்று, மனிதர்கள் வீட்டில் இருக்கும்போதே கதவை உடைத்து அவர்களை மிரட்டி கொள்ளையடித்துச் செல்வது சாதாரணமாகிவிட்டது.

இந்த நிலையில், காதுக்குள் ஒலிக்கும் கருவியோடு தூங்கினால், உடன் தூங்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்களுக்கு ஏற்படும் ஆபத்தை நம்மால் உடனடியாக அறிய முடியாது.

காதுக்குள் ஒலிக்கும் கருவியால், நாளடைவில் காது கேட்கும் சக்தியை இழந்துவிட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நம்முடைய காது இயற்கை நமக்கு அளித்த கொடை. அவை நம்மைச் சுற்றி நடைபெறும் தகவல்களை நம்முடைய அறிவுக்கு எடுத்துச் செல்பவை.

அங்கு அவை நல்லவை, கெட்டவை என பகுக்கப்பட்டு நம்மை வழிநடத்த உதவுபவை. காற்றின் கீதத்தையும், நதியின் சலசலப்பையும், மழலையின் கொஞ்சலையும் கேட்கத்தான் இந்தக் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன.

சமுதாயத்தில் நம்மைச் சுற்றி எழும் இந்த ஒலிகள் நம் காதுகளை ஒருபோதும் பாதிப்பதில்லை. அவை நம் இதயத்தை பாதிப்பவை.

இதயம் உள்ள ஒவ்வொருவரும் இந்த ஒலிகளை அவசியம் காதுகொடுத்து கேட்க வேண்டும்.

செயற்கையான கருவிகளால் காதுகளைப் பொத்திக்கொண்டு திரிந்தால், ஒலி தெரியாத, மொழி தெரியாத மனிதர்களாகத்தான் நாம் கருதப்படுவோம்.

By இரா. மகாதேவன்

Tuesday, January 20, 2015

Deccan Chronicle....STORM OVER JAITLEY-JAYA MEET

Soon, get your RC in minutes

Jan 20 2015 : The Times of India (Chennai)
Soon, get your RC in minutes
New Delhi:


And Error Free Too As Tech Will Track Vehicle Right From Factory

Soon you will be able to get the registration certificate (RC) of your car or any other vehicle within minutes and there will be no scope for anyone to enter wrong data and details, including the chassis or engine number. The transport ministry has come up with an IT-based mechanism which enables tracking and recording of all details including the model, colour and chassis number etc right from the manufacturing level.Sources said this system, which will be launched soon, will ensure that no wrong data is recorded against any vehicle and there will be no scope for any dealer to shortchange the buyer besides leaving no room for malpractices. The customer is also assured that all details entered about parts of the vehicle are genuine and nothing has been tweaked at any level.

“As soon as the manufac turer submits a model for type approval, one set of details will be entered. Subsequently, the approved test agencies will enter details at their level while clearing the models. Thereafter, the manufacturer will have to enter all necessary details such as chassis and engine number. When it reaches the dealer’s place, he has to fill a few specific records before processing an RC,” said a transport ministry official. He added at present, the dealer has to key in all details at the end before an RC is issued. “Now they don’t need to do this as data will be entered at each level,” the official said.

While in big cities the registration certificates of cars and bikes are issued at dealers point, RCs of heavy vehicles are issued by motor vehicle inspectors at RTOs. Usually registration of such vehicles takes hours, but the new system will significantly reduce the time taken.

NEWS TODAY 26.01.2026