Tuesday, January 27, 2015

கோயில் உச்சியில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!



நம் இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டத்துடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தேசப்பற்றினை பல்வேறு வகையில் செலுத்தி நாட்டின் விழுமியங்களை காத்துகொண்டிருக்கிறான்.

குடியரசு தின விழாவின் முக்கிய நிகழ்வாக இந்த வருடம் ஒபாமா அமெரிக்க அதிபர் இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரிய கோபுரங்களுள் ஒன்றாகவும் மிகவும் புராதன கோவிலாகவும் விளங்கும் மனுநீதி சோழன் ஆண்ட திருவாரூர் தியாகராஜ சுவாமி பெரிய கோவிலில் காலை 6 மணி அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ஒவ்வொரு கோவிலும் நம் சுதந்திர குடியரசு தின நாட்களில் தேசியக் கொடி ஏற்றப்படவேண்டும் என சட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நிர்வாகம், கோவில் தன்மை போன்ற பல காரணங்களால் இவை நிறைவேற்றப்படுவதில்லை.

திருவாரூர் கோவிலில் வருடா வருடம் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுவருவது மக்களிடையே அதிகம் பேசப்படும் சிறப்புக்குரியது.


இன்று காலை தேசிய கொடியை ஏற்றிய கோவில் ஊழியர் சுனிந்தர் அவர்களிடம் கெட்கும் பொது “ கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நான் இந்த பணியை செய்து வருகிறேன். தனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்”. நாட்டு எல்லையில் நின்று தேசத்தை பாதுகாக்கும் வீரர்களின் தேசபக்தி நம் எல்லோர் மனதிலும் விதைபட்டால் மகிழ்வே. எல்லார்க்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

தமிழ்பரதன்
மாணவ பத்திரிக்கையாளர்

Next-generation 5G mobile developments being shaped in Singapore -





SINGAPORE - Next-generation mobile services that enable, say, real-time mobilisation of autonomous excavators for rescue of nuclear explosion victims could be five years away from reality, with Singapore being a key part of their development.

Such next-generation 5G services are said to be more than 10 times faster than 4G ones, which currently deliver speeds of up to 300Mbps in Singapore.

More importantly, 5G communications happen in real-time due to advances in data compression and antenna technologies, thus enabling mission-critical applications like rescue works.

While trials in Singapore are expected to take place only in 2020 when 5G handsets are available, Singtel is already shaping 5G technical standards, together with 23 other global telcos.

For the first time on Tuesday, the who's who in the global telco scene - including South Korea's SK Telecom, Japan's NTT Docomo and Europe's Vodafone - and equipment makers like Ericsson and Nokia, gathered in Singapore to define these technical standards.

The three-day meeting at Fairmont Singapore, hosted by Singtel, aims to finalise a white paper detailing the many possible uses, and standardise airwaves and speed requirements.

Standardisation ensures that 5G users from one part of the world can roam in another part of the world like they currently do with their 3G handsets.

The white paper will be presented at the Mobile World Congress in Barcelona in March.

Mr Tay Soo Meng, Singtel group chief technology officer, said that these developments are timely for supporting Singapore's drive to become a smart nation, where sensors and surveillance cameras monitor everything from public safety to air quality.

"This is because 5G has amazing high speeds and almost near-zero latency," he added.

itham@sph.com.sg

-

Tigerair makes $2.2m profit in Q3 last year, reversing loss in previous same quarter


SINGAPORE - Tigerair made a $2.2 million profit in the three months to the end of December, reversing a $118.5 million loss during the same quarter the year before that.

Total revenue improved by 5.9 per cent to $182.3 million while spending fell by 1.5 per cent to $178.2 million, the budget carrier said on Monday.

The turnaround was on the back of more passengers carried and higher yields.

The improved numbers reflect the success of the group's initiatives to focus on its Singapore operations in its execution of turnaround plan, the airline said.

Monday, January 26, 2015

எல்லா இடங்களிலும் நிலவும் பேதம்..எத்தனையோ பெண் மருத்துவர்கள் இன்று வெற்றிகரமாக சமூகத்தில் செயலாற்றி வந்தாலும், மருத்துவர் என்கிற நிபுணத்துவம் வாய்ந்த நிலைக்கு, பெண்ணைப் பொருத்திப் பார்க்க அந்தக் குழந்தை பயிற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை.



ரஞ்சனி பாசு

அது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தலைமைப் பயிற்சி முகாம். 80 பேரில் 30 சிறுமியரும், 50 சிறுவர்களும் இருந்தனர். முகாமில் குழு நடவடிக்கைக்காக 10 பேர் கொண்ட எட்டுக் குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டனர். எல்லாக் குழுவிலும் சிறுவரும் சிறுமியரும் கலந்து இருந்தனர்.

குழு உறுப்பினர்கள் அவர்களாகத் தங்கள் குழுவின் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குழுவின் தலைவர் குழுவுக்குத் தரப்படும் தலைப்பில், அனைவரையும் கருத்துகளைப் பகிரச் செய்து அதைத் தொகுத்தளிக்க வேண்டும். அந்தந்தக் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை, (வரைதல், படங்களை ஒட்டுதல்) உறுப்பினர்களை வைத்து ஒருங்கிணைத்து முடித்துத்தர வேண்டும்.

முகாமை ஒருங்கிணைத்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். “எத்தனை சிறுமியர் குழுத் தலைவராகப் பணியாற்றினர்” என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சற்றே யோசித்து விட்டு, “சிறுமியர் ஒருவரும் இல்லை. எல்லாக் குழுவிலும் சிறுவர்கள்தான் குழுத்தலைவராகப் பணியாற்றினர்” என்றார். 30 சிறுமியர் உள்ள ஒரு இடத்தில், ஒருவர்கூட தலைமைப் பொறுப்பில் செயலாற்றவில்லை என்பது ஏற்புடையதல்ல. இது வெறுமனே ஒரு பள்ளிக் குழந்தைகளின் முகாமில் நடந்ததுதானே என்று கடந்துவிட முடியாது. இதன் பின்னே இருக்கும் உளவியல் மற்றும் சமூகக் காரணிகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

போற்றி வளர்க்கப்படும் பேதம்

ஆண், பெண் பேதம் என்பது உயிரியல் ரீதியானது மட்டுமல்ல, உணர்வுகளோடு பின்னப்பட்டது. ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் ஆணுக்கென்றும், பெண்ணுக்கென்றும் பிரத்யேகமான அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. ஆணின் தைரியமும், சாகசமும் பாராட்டப்படும்போது, ஆண்மையின் ஆதிக்க உணர்வு வளர்க்கப்படுகிறது. பெண்ணின் பொறுமையும், வீட்டு வேலைகளை ஏற்கும் பொறுப்பும் நல்ல மனைவிக்கான, மருமகளுக்கான குணநலங்களை வரித்தெடுப்பதும்தான் பெண்மையின் தன்மையாக உருவாக்கப்படுகிறது.

சமூகத்தில் தான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் குழந்தை தன் பெற்றோரிடமிருந்துதான் கற்றுக்கொள்கிறது. சாதி, மதம், மொழி, இனம் போன்றவையும் இந்தக் கருத்தாக்கத்தின் மேல் தங்களின் தாக்கத்தைச் செலுத்துகின்றன. ஆடை அணிதலில் தொடங்கி, பழக்க வழக்கங்கள், விளையாட்டுகள், சிறு சிறு வேலைகள் என உயிரியல் ரீதியான அடையாளத்தை வைத்து, அதன் அடிப்படையில் சமூக அடையாளங்களை உருவாக்குகிறது. சமூக விழுமியங்கள் பல்வேறு நடைமுறைகள் மூலமாக ஆண், பெண் பேதத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆண்மை, பெண்மை என்பது சமூகம் உருவாக்கிய கருத்தாக்கமே!

பின்தொடரத்தான் பெண்ணா?

குழந்தைகள் வளரும்போதே, தங்கள் மீது திணிக்கப்பட்ட கருத்தாக்கங்களின் வழியேதான், தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பார்க்கிறார்கள். ஆண் வழிநடத்துபவனாகவும், பெண் அவனைப் பின்தொடர்கிறவளாகவும் காலம் காலமாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் அவர்கள் மனதில் பதிந்து விட்டது.

அதனால்தான், சக மாணவர்களாக இருப்பவர்களிடையே, தலைமைப் பொறுப்பு என்று வரும்போது, ஆசிரியரின் தலையீடு இன்றி, அவர்களாக விவாதித்து, தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்களாகவே இருந்துள்ளனர். இருபாலர் பயிலும் பள்ளியில் முதலிடம் பெறுவது, போட்டிகளில் பங்கேற்பது ஆகியவற்றில் பெண்கள் முன்னணிப் பாத்திரம் வகித்தாலும், சமூகத்தில் நிலவும் பாரபட்சம் அங்கேயும் நிலவுவதைத் தவிர்க்க முடியவில்லை.

புதிய இடங்களுக்குச் செல்லும்போது, பொதுவாக யாரும் பெண்களிடம் வழி கேட்பதில்லை. ஆண்களிடம்தான் கேட்பார்கள். பெண்களுக்கு வீடு, சமையலைத் தவிர வேறு பொது விஷயங்கள் அவ்வளவாகத் தெரியாது என்பது நம் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்ததன் விளைவுதான் இது. எந்தத் துறையில் பெண்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டாலும், அவர்கள் பெண்களாகத்தான் பார்க்கப்படு கிறார்களே தவிர, நிபுணர்களாக அல்ல.

சமீபத்தில் பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்தபோது, அவரைக் குறித்த செய்திகள் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்துவிட்டார் என்றே வெளிவந்தன. கவிஞர்களையும்கூடப் பெண் கவிஞர்கள் என அடையாளப்படுத்துவதையும் பார்க்கிறோம். பெண் கவிஞர்கள் எதைப் பற்றி எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்றெல்லாம் சமூகத்தின் பல தரப்பினரிடமிருந்து, அறிவுரைகள் வந்த வண்ணம் உள்ளன.

காலம் காலமாகக் கட்டமைக்கப்பட்ட விதத்தில் இயற்கை, தாய்மை என்பது குறித்து எழுதினால் பிரச்னை இல்லை. மரபு என்று கட்டமைக்கப்பட்டதற்கு மாறாகப் படைப்புகளைக் கொடுத்தால், ஒரு பெண் இப்படி எழுதலாமா? இப்படிக் கருத்து சொல்லலாமா என்று கலாச்சாரக் காவலர்கள் பொங்கி எழுகின்றனர். படைப்பாளிகளை பாலினச் சிமிழுக்குள் அடைப்பது ஆணாதிக்கச் சிந்தனையேயன்றி வேறென்ன?

பலவிதமான தடைகளை மீறி, இன்று பல பெண்கள் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கிறார்கள். அவர்களது நடவடிக்கைகள், பெண்களின் நடவடிக்கைகளாகவே மதிப்பீடு செய்யப்படு கின்றன. ஐ.டி துறையிலும், புதிய புதிய திட்டங்களுக்கான குழுக் கள் அமைக்கப்படும் போது, குழுவின் தலைவருக்கான தகுதியுடைய பெண்கள் இருந்தாலும்கூட, அது பல நேரங்களில் உப்பு சப்பில்லாத காரணங்களால் நிராகரிக்கப்பட்டு, ஆண்களுக்குத் தலைமைப் பொறுப்பு தரப்படுவது இயல்பாக நடக்கிறது. பெண்ணின் தலைமை, குழு உறுப்பினரான ஆண்களின் செயல்பாட்டுக்கும், ஒருங்கிணைப்புக்கும் பங்கம் விளைவிக்கும் என்கிற தவறான கருத்தின் வெளிப்பாடுதான் அது.

மாறுவது எப்போது?

பள்ளி மாணவர்களிடம் ஒருமுறை டாக்டர், நர்ஸ், ஆகியோரின் படங்களை வரையுமாறு சொல்லப் பட்டது. அனைவரும் வரைந்தது ஒரு ஆண் டாக்டர், ஒரு பெண் நர்ஸ் படங்களைத்தான். எத்தனையோ பெண் மருத்துவர்கள் இன்று வெற்றிகரமாக சமூகத்தில் செயலாற்றி வந்தாலும், மருத்துவர் என்கிற நிபுணத்துவம் வாய்ந்த நிலைக்கு, பெண்ணைப் பொருத்திப் பார்க்க அந்தக் குழந்தை பயிற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை.

மாற்றங்கள் தொடங்கப்பட வேண்டியது பாடத் திட்டங்களில்தான். பாலின சமத்துவ நோக்கோடு அவை வடிவமைக்கப்படுவதும், ஆசிரியர்கள் பாலினச் சமத்துவம் குறித்த பயிற்சியோடும் இருந்தால்தான் மாணவர்களிடம் பாலினச் சமத்துவம் குறித்த புரிதல் சரியாக இருக்கும். அதுதான் அவர்கள் வாழ்க்கையிலும் வெளிப்படும்.

மறைந்திருந்து தாக்கும் அக்கி....BY டாக்டர் எல். மகாதேவன்

Return to frontpage



எனக்கு 56 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன் மார்பிலும் கழுத்திலும் சிறுசிறு கட்டிகள் தோன்றின. மருத்துவரைச் சந்தித்து மாத்திரை வாங்கிச் சாப்பிட்டும், மேலே மருந்து தடவிவந்தும் அது குறையவில்லை. அக்கி என்று மருத்துவர் கூறினார். இதற்கு வேறு தீர்வு உண்டா?

- நடேசன், காரைக்கால்

அக்கி நோயை ஆங்கிலத்தில் (Shingles) என்றும் (Herpes zoster) என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தருகிற, தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். இது Varicella zoster எனும் வைரஸால் உண்டாகிறது. சின்ன அம்மை (Chicken pox) உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான்.

சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ், செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். மேலும், சில நிலைகளில் இது ஏன் உருவாகிறது என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

அறிகுறிகள்

ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களுக்கும் இது வரும். முதலில் வலி, துடிப்பு, எரிச்சல் ஆகியவை ஒரு பக்கத்தில் காணப்படும். வலியும் எரிச்சலும் பின்னர் அதிகரிக்கும். பின்பு சிவந்த நிறத்தில் தோலில் கொப்பளங்கள் உருவாகும். அதன்பின் இந்தக் கொப்பளங்கள் உடைந்து புண்ணாக மாறும்.

பிறகு இது உலரத் தொடங்கும். மூன்று வாரங்களில் இந்த உலர்ந்த பகுதி கீழே விழும். பொதுவாக வயிற்றின் மேற்பகுதியிலோ அல்லது மார்பின் அருகேயோ இது வரலாம். முகத்திலும், கண்ணிலும், வாயிலும்கூட வரலாம். இதனுடன் காய்ச்சல், குளிர் காய்ச்சல், உடல் அலுப்பு, தலைவலி, மூட்டுவலி, கழலைகள், கைகால் வலி, தசை பலவீனம் போன்றவை வரலாம்.

தசைகளை அசைப்பதில் பிரச்சினைகள் வரலாம். முக நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால் கண்களை மூடி திறப்பதிலும், செவித் திறனிலும், சுவைகளை உணர்வதிலும், பார்வையிலும் பிரச்சினைகள் உருவாகலாம். இந்த நோயைப் பார்த்த உடனேயே கண்டுபிடிக்க முடியும்.

தற்காப்பு

நவீன மருத்துவத்தில் வைரஸுக்கு எதிரான மருந்துகள் வந்துள்ளன. சிகிச்சையை 72 மணி நேரத்துக்கு முன்பாக, அதாவது கொப்பளங்கள் தோன்றுவதற்கு முன்பு தொடங்கினால் சிறந்தது. அரிப்பைக் குறைக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள், மேல்பகுதியில் பூசுவதற்குச் சில களிம்புகளையும் நவீன மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். குளிர்ந்த நீரில் பஞ்சை முக்கி மெதுவாக அமுக்கிவிடச் சொல்வார்கள். காய்ச்சல் குணமாகிறவரை ஓய்வெடுக்கவும் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் அறிவுறுத்தப்படும்.

இந்தப் புண்ணானது கசிவுடன் காணப்படும் வேளைகளில் சின்னம்மை வராதவர்களையும் இது தாக்கலாம். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்கள் இவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. மூன்று வாரங்களுக்கு இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடரவேண்டியது அவசியம். பொதுவாக, இது ஒருமுறை ஒருவருக்கு வந்தால் மறுமுறை வருவதில்லை. இதனால் சிலருக்கு நரம்பு பாதிப்பு வருவதுண்டு.

பாதிப்புகள்

அக்கி வந்த இடத்தில் நரம்பு வலி (Post hepatic neuralgia) பெரும் தொந்தரவு அளிக்கும். மூளை பாதிப்பு, காது கேளாமை, கண் பாதிப்பு போன்றவை அபூர்வமாக ஏற்படலாம். அதனால், ஒழுங்காகச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். நோயாளிகளின் கொப்பளங்களை நேரடியாக நாம் தொடக் கூடாது. இதற்கு இப்போது தடுப்பூசிகள் வந்துள்ளன. இது சின்னம்மை தடுப்பூசியிலிருந்து மாறுபட்டது.

இதைத் தவிர, (Herpes simplex) என்று ஒன்று உண்டு. முறைகேடான உடல் உறவால் பிறப்புறுப்புகளில் Genital herpes போன்றவை வரலாம். இது பிறப்புறுப்பில் காண்கிற தோலில் வரும். பாதுகாப்பற்ற உடலுறவின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவும். வாய், உதடு போன்றவற்றில் புண்களை ஏற்படுத்திக் காய்ச்சலுடன் வரும்.

இரண்டாவது வகை, பிறப்புறுப்பின் தோல், பிறப்புறுப்பு, ஆகிய இடங்களில் வரலாம். பல நேரங்களில் இது கண்டுபிடிக்கப்படாமல் போய்விடும் அல்லது பூச்சி கடி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படவும் வாய்ப்புள்ளது. இது இரண்டு நாட்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உருவாகும்.

இந்த நோய் தாக்கியிருந்தால் காய்ச்சல் ஏற்படும், பசி குறையும், உடல் அசதி காணப்படும், தசை வலி ஏற்படும், நிண நாளங்கள் வீங்கும். சிறிதான கொப்பளங்கள் உருவாகும். அதிலிருந்து திரவம் வெளிப்படும்.

அந்தத் திரவத்தை ஆராய்ந்து செய்யும் பரிசோதனைகள் வந்துள்ளன. இதனை PCR test என்று சொல்வார்கள். புண்களைக் குணமாக்குவதிலும் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிப்பதிலும், மீண்டும் வராமல் தடுப்பதிலும் அரிப்பு, எரிச்சல், வலி போன்றவற்றை மாற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களுக்குப் பிறப்புறுப்பில் கொப்புளங்கள் உருவாகும். ஆண்களுக்கு ஆண்குறி, தொடை, மலத்துவாரம் போன்றவற்றிலும் கொப்புளம் உருவாகும். மரத்துப் போதல், அரிப்பு, எரிச்சல், வலி போன்றவை காணப்படும். இந்தக் கட்டிகள் உடையும்போது புண்ணாக மாறும், அந்த நேரத்தில் வலி அதிகமாக இருக்கும். 14 நாட்களில் இவை மாறும். ஒரு சிலருக்குச் சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் ஏற்படலாம். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். சில மாதங்கள் கழிந்து மீண்டும் இவை தோன்றலாம், அப்பொழுது கடுமை சற்றுக் குறைவாக இருக்கலாம்.

இதில் கர்ப்பிணி பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள். குழந்தைக்குப் பரவாமல் தடுக்க இதைச் செய்வார்கள். பொதுவாக இந்த நோய் பாதித்தவர்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்நோயின் தீவிரத்தால் கர்ப்பிணி பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்நோய் பரவும். பாதுகாப்பான உடலுறவு இன்றியமையாததாகிறது. குறிப்பாக லேட்டக்ஸ் காண்டம் பயன்படுத்துவது சிறந்தது. விலங்குகள், மாட்டின் தோலினால் செய்த ஆணுறைகள் வழியாக வைரஸ் பரவும் வாய்ப்புகள் இருக்கிறது.

ஆயுர்வேத அணுகுமுறை

ஆயுர்வேதக் கண்ணோட்டப்படி பித்தமும் ரத்தமும் அதிகரித்து எரிநிலையை அடைந்து ரசம், ரத்தம் போன்ற தாதுகளைப் பாதித்துப் பின்பு சிகிச்சை செய்யாவிட்டால், ஆழமான திசுக்களையும் பாதித்து வருகிற நோயாகக் கருதப்படுகிறது. இதை விஸர்ப்ப நோய் அல்லது அக்கி என்பார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுவாகச் செய்யப்படுகிற பஞ்சகர்ம சிகிச்சைகளைச் செய்யக்கூடாது.

இந்த நோய்க்கு ரத்தத்தைச் சுத்தி செய்கிற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். பேய்ப்புடல், வேப்பங்கொழுந்து, திராட்சை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கோரைக்கிழங்கு, நன்னாரி, விலாமிச்சை ஆகியவற்றைக் கஷாயம் செய்து கொடுக்கலாம்.

கஷாயம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் இந்த நோய்க்கு ரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள். முதல் நிலை நீங்கிய பிறகு 14 நாட்களுக்குப் பின் கசப்பு மருந்துகளால் காய்ச்சப்பட்ட திக்தகம், மஹாதிக்தகம் போன்ற நெய்களைக் கொடுக்கலாம். தாமரை, கருங்குவளை, விலாமிச்சை, பால், நெய் சேர்த்து அரைத்துப் பூச்சு போடலாம்.

புண்ணின் மீது ஆலம் விழுது, வாழைத்தண்டு ஆகியவற்றை அரைத்துப் பூசலாம். காவிக்கல்லை நெய் சேர்த்து அரைத்துப் பூசலாம். சில நேரம் மெல்லிய துணியைப் பரப்பி அதன் மேல் மருந்தைப் பூச வேண்டும்.

அதிமதுரக் கஷாயம், கோரைக்கிழங்கு கஷாயம், கருப்பஞ்சாறு ஆகியவை குடிப்பதற்கும் நனைப்பதற்கும் சிறந்தவை. மரமஞ்சள் கஷாயம், அருகம்புல் கஷாயம் போன்றவை குடிப்பதற்கு எளிமையான கஷாயங்கள்.

கைமருந்துகள்

இந்த நோய்க்கு மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் கிடைக்கும் காவி மண்ணால் அக்கி நோய் கண்டவரின் உடலில் பூச்சு போடுவார்கள். வலியும் வேதனையும் நீங்கும்.

பூங்காவியை பன்னீருடன் சேர்த்துக் குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல், வலி, வேதனை குறையும்.

ஊமத்தை இலையை அரைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து அக்கியின் மேல் பூசவும். கொப்பளங்கள் அடங்கும். எரிச்சல், வலி குறையும்.

உணவில் காரம், உப்பைக் குறைக்கவும். குளிர்ச்சியான உணவு வகைகளை உண்ணவும். வெயிலில் அலையக் கூடாது. குங்கிலியப் பற்பம் 10 கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணெயில் [எலுமிச்சை அளவு] கலந்து காலை, மாலை உண்ணவும். ஏழு நாட்கள் தொடர்ந்து மருந்தை உண்ணவும்.

ஆலம் விழுதைச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்துத் தடவிவர அக்கி குணமாகும். செம்மரப் பட்டையைத் தண்ணீர்விட்டு நன்கு அரைத்துப் பூசிவந்தால் அக்கி குறையும்.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ,

தி இந்து, கஸ்தூரி மையம், 124,

வாலாஜா சாலை, சென்னை - 600 002

நம்பிக்கை தருவோம்!



Dinamani

ஒரு மனிதன் வாழும் காலம், குழந்தைப் பருவம், விடலைப் பருவம், இளமைப் பருவம், பொருள் ஈட்டும் பருவம், முதுமைப் பருவம் என பல பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றே நினைக்கிறான். பிற பருவங்கள் எப்படி இருந்தாலும், முதுமைப் பருவம் அவனை மிகவும் வாட்டுகிறது.

மிடுக்குடன் வாழ்ந்த மனிதர் கூட, முதுமையை எட்டி விட்டால், துச்சமாக மதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அவர், பேரனுக்கு மிட்டாய் வாங்கும் பணிக்கு வீட்டில் உள்ளோரால் ஏவப்படுகிறார். குழந்தைகளால்கூட மதிக்கப்படாத நிலைக்கு முதியவர்களின் நிலை உள்ளது.

ஒரு காலத்தில் தான் வைத்ததுதான் சட்டம் என்று வாழ்ந்தவர்களின் நிலை முதுமையில் பரிதாபமாகத்தான் உள்ளது.

அந்தக் காலத்தில், முதியவர்கள் கடவுளுக்குச் சமமாக மதிக்கப்பட்டனர். இன்று அவர்களே செல்லாக் காசாக மதிக்கப்படுகின்றனர். கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்பவராக இருந்தால், குழந்தைகளைப் பள்ளியில் கொண்டு விடும் வேலையாளாகவும், மின் கட்டணம் செலுத்தவும், நியாய விலைக் கடைக்குச் சென்று வரும் ஒரு பணியாளர் நிலைக்கும் முதுமை அடைந்தவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இந்த வேலைகளை முதியவர்களே விரும்பிச் செய்தால் மகிழ்ச்சிதான். அதையே விருப்பமின்றிச் செய்தால்?

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்ததால், எந்தப் பிரச்னையும் கிடையாது. வீட்டின் மூத்த உறுப்பினர் தலைவராக இருப்பார். அவர் சொல்வதுதான் அந்த வீட்டில் நடக்கும். வரவு - செலவு கணக்கெல்லாம் அவர்தான் பார்ப்பார். ஆனால், இன்று மருந்து, மாத்திரை வாங்குவதற்கு மகனையோ, மருமகளையோ நம்பி இருக்க வேண்டிய நிலை.

கூட்டுக் குடும்பமாக இருந்தால், பேரன், பேத்திகளோடு கொஞ்சி மகிழும் வாய்ப்பு கிடைக்கும். இன்று எத்தனை பேருக்கு அத்தகைய கொடுப்பினை உள்ளது?

ஒரு தம்பதிக்கு இரு மகன்கள் இருந்தால், தாய் ஒரு மகன் வீட்டிலும், தந்தை மற்றொரு மகன் வீட்டிலும் இருக்கும் நிலையையும் காண முடிகிறது. கூட்டுக் குடும்பமாக உள்ளோர் பற்றிய தகவலை இன்று நாளிதழ்களில் செய்தியாகவும், புகைப்படமாகவுமே காண முடிகிறது. முதியவர்கள் புறக்கணிப்பு குறித்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.

"பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்பார்கள். தன்னிடமிருந்த சொத்து, சுகத்தையெல்லாம் அன்பு மகனுக்கும், ஆசை மகளுக்கும் எழுதிக் கொடுத்துவிட்டு, வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் வறுமையிலும் தனிமையிலும் வாடுவோர் பலர்.

இன்று அத்தகைய நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. "தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்' என்பதுபோல, தாங்கள் வாழும் காலத்துக்குப் பின்னரே, தங்களது சொத்துகள் வாரிசுகளுக்குச் சொந்தமாகும் என்று உயில் எழுதி வைத்து விடுகின்றனர்.

மேலும், முதுமைப் பருவம் வந்துவிட்டாலே நோய்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வாட்டி வதைக்கும். அரவணைப்பு தேவைப்படும் சமயத்தில், அவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படலாமா?

இன்று முதியவர்களை அரவணைப்பதற்கு முதியோர் இல்லங்கள் உள்ளன. இவை இளைஞர் தங்கும் விடுதிகள், மகளிர் தங்கும் விடுதிகள் போல பல்கிப் பெருகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள ஒரு வளமையான மாவட்டம், மூத்த குடிமக்களின் கேந்திரமாக விளங்கி வருகிறது. முதியோருக்கென தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் புறநகர்ப் பகுதியில் புற்றீசல் போலப் பெருகி வருகின்றன. அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தித் தரப்படுகின்றன. பண வசதி இருந்தால், இங்கு தங்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்கின்றனர்.

முதியோரின் புறத் தேவைகளை இந்த இல்லங்கள் நிறைவேற்றித் தரலாம். ஆனால், அவர்களின் அகத் தேவையை நிறைவு செய்ய முடியுமா? என் மகன், என் மருமகள், என் பேரன், என் பேத்தி என்று சொல்ல அருகில் யாராவது இருப்பார்களா?

இத்தகைய தனிமை அவர்களை கொல்லாமல், கொல்லும். மேலும், வசதி படைத்தவர்களால் மட்டுமே இந்த இல்லங்களை நாட முடியும். மற்றவர்களின் நிலை?

மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள பிரமிக்கத்தக்க வளர்ச்சி மனிதர்களின் வாழ்நாளை அதிகரித்திருக்கிறது. ஆனால், மனிதர்கள் தற்போது புதிய புதிய நோய்களுக்கு ஆளாகின்றனர். நோயுடன் இறுதிக் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

முதியவர்களை அவர்களது வாரிசுகள் பாதுகாக்க வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மனுநீதி நாள் முகாம்களில் தனது மகன் தன்னைக் கைவிட்டுவிட்டதாக முதியோர் அளிக்கும் மனுக்களே அதிகம் உள்ளன.

இதற்கு என்ன தீர்வு? சட்டத்தால் இப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா? சட்டத்தால் எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்?

இன்றைய இளைஞன், நாளைய முதியவன். எனவே, இளைஞர்களே! முதியவர்களைப் புறக்கணிக்காதீர். அவர்களை அரவணைத்துச் செல்லுங்கள். அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்களது அனுபவ அறிவு உங்களுக்குப் பயன்படும். பண்டிகை தினங்களில் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். அந்தச் சமயத்தில் அவர்களின் முகத்தில் தோன்றும் ஒளிக்கு ஈடாக எதையும் நம்மால் தர முடியாது.

"நம்பிக்கை இனிமையானது; நம்பிக்கை வாழ்வில் ஒளியேற்றும்; நம்பிக்கை நிறைவைத் தரும்; நம்பிக்கை என்றும் அழியாதது. எனவே, முதுமைப் பருவத்திலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்' என்றார் ஓர் ஆங்கில அறிஞர். இது முதியோருக்கு அந்த அறிஞர் சொன்னஅறிவுரை. நாமும் நமது செயல்கள் மூலம் முதியோருக்கு நம்பிக்கை கொடுப்போம்!

ஜனாதிபதி சொன்னது; அதில் அர்த்தம் உள்ளது


logo

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அரசியலில் அதிலும் குறிப்பாக, பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவமிக்கவர். பாராளுமன்ற நடைமுறைகளை தெரிந்தவர் என்பது மட்டுமல்லாமல், அதை கடைபிடிப்பதிலும் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருந்தவர். கடந்த குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள், மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டபோது, அவையில் அந்த மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்படவே முடியாத சூழ்நிலையில், கூட்டமும் முடிந்தது. அரசாங்கமும், இன்சூரன்ஸ், நிலக்கரி உள்பட 6 மசோதாக்களை நிறைவேற்ற அவசர சட்டங்களை பிறப்பித்தது. ஜனநாயக முறைப்படி இரு அவைகளிலும் ஆழமாக விவாதித்து நிறைவேற்றாமல், அவசர சட்டவழியை பின்பற்றியதற்கு, அப்போதே மத்திய மந்திரிகளிடம், ஜனாதிபதி தன் அதிருப்தியை தெரிவித்தார்.

இப்போது, பிப்ரவரி 23–ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் மீண்டும் கூட இருக்கிறது. அரசியல் சட்டத்தின் 123–வது பிரிவின்படி, அசாதாரண, எதிர்பாராத, அவசர சூழ்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்காத நேரத்தில் மட்டும் மிகமுக்கியமான சட்டங்களை அவசர சட்டங்கள் மூலம் நிறைவேற்றலாம். ஆனால், அந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவேன்டும். ஆனால், மீண்டும் பாராளுமன்றம் கூடியவுடன் 6 மாதகாலங்களுக்குள் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இருஅவைகளும் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில், மீண்டும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து அவையை நடத்தவிடாமல் செய்தாலோ, அல்லது இந்த அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அந்த தீர்மானத்தை தோற்கடித்தாலோ, அந்த அவசர சட்டங்கள் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில், இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தைக் கூட்டினால் எந்த சிக்கலும் இல்லாமல் இதற்கு ஒப்புதல் கொடுத்து, மாற்று சட்டங்கள் நிறைவேற்றப்படமுடியும் என்பதால், அந்த வழியை அரசாங்கம் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஆனால், இப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இவ்வாறு அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் வழியை பின்பற்றுவதற்காக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டையுமே சாடியிருக்கிறார். அவசர சட்டங்கள் என்பது ஒரு நல்ல நடைமுறை இல்லை, எல்லா சட்டங்களும் நல்ல பாராளுமன்ற நடைமுறைகளின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படவேண்டும், எந்த காரணத்தைக்கொண்டும் பாராளுமன்ற நடைமுறைகளுக்கு தடை, இடையூறு இருக்கக்கூடாது, அமைதியாக இருக்கும் பெரும்பான்மையின் வாயை அடைக்கும் செயல்களில் சிறுபான்மையாக எண்ணிக்கையில் இருக்கும் கட்சிகள் சத்தம் போட்டுக்கொண்டு முயற்சிக்கக்கூடாது என்று சொன்னார். அதோடு விட்டுவிடவில்லை, 1952 முதல் இதுவரை 4 முறைகள்தான் கூட்டுக்கூட்டம் நடந்து இருக்கிறது, தேசிய பாதுகாப்பு தொடர்பான நெருக்கடியான நேரத்தில் மட்டுமே கூட்டுக்கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஆக, ஜனாதிபதியின் இந்த அர்த்தமுள்ள ஆலோசனையை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இருவருமே பின்பற்றவேண்டும். எந்த ஒரு சட்டமோ, திட்டமோ பாராளுமன்றத்தில் வந்தால், ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தால் மட்டுமே அதன் சாதக, பாதக கருத்துக்கள் வெளியே வரமுடியும். நிறை குறைகள் இரண்டும் வந்தால்தான், அதை எடைபோட்டு முடிவெடுத்து மக்களுக்கு ஆக்கப்பூர்வமான பயன்கள் கிடைக்கும். எனவே, அரசியலை பாராளுமன்றத்துக்கு வெளியே வைத்துவிட்டு, மக்களுக்கான பணிகள் என்றுவரும்போது, எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து மசோதாக்களை அலசி ஆராயும் வகையில் விவாதங்கள் நடக்கவேண்டும். குறுக்குவழியில் சட்டங்கள் நிறைவேற்றப்படும் நிலையை இருதரப்பும் உருவாக்கவேண்டாம். அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது.

NEWS TODAY 10.06.2026