Thursday, January 29, 2015

Introduction of AADHAR enabled bio-metric attendance system

Introduction of AADHAR enabled bio-metric attendance system

G.I., Dep. of Per. & Trg., O.M.F.No.11013/9/2014-Estt.A-III, dated 28.1.2015

Sub: Introduction of AADHAR enabled bio-metric attendance system.

The undersigned is directed to refer to Secretary, DEITY’s DO letter no. SSD/DeitY/BAS/2014-74 dated 23.12.2014 (copy enclosed), observing that in many offices there is a large difference between the number of registered employees and the number of employees marking their attendance in the Biometric attendance system (BAS). The Secretaries of all Ministries / Departments have been requested to issue directions to all employees to mark their attendance in BAS Portal on regular basis.

 2. As per the Guidelines issued vide O.M. No.11013/9/2014-Estt.A-III dated 21.11.2014, it has been decided to use an AADHAR Enabled Bio-metric Attendance System (AEBAS) in all offices of the Central Government, including attached / sub ordinate offices, in India. All employees are, therefore, required to register themselves in the system and mark their attendance. Instructions already exist for dealing with cases of late attendance/ unauthorized absence, which may be followed.

 3. It is requested that necessary directions may be issued to all employees to mark their attendance in BAS portal on regular basis.

Travel by Premium Trains on LTC- Clarification orders issued by DoPT on 27.1.2015

Travel by Premium Trains on LTC- Clarification orders issued by DoPT on 27.1.2015

"travel by Premium Trains is not permissible on LTC. Hence, the fare charged by the Indian Railways for the journey(s) performed by Premium trains shall not be reimbursable for the purpose of LTC."

G.I., Dep.of Per. & Trg., O.M. No.31011/2/2015-Estt.(A-IV), dated 27.1.2015

Subject: Travel by Premium Trains on LTC- Clarification reg.

The undersigned is directed to say that several references are received by this Department from various Ministry / Departments seeking clarification regarding admissibility of travel by Premium Trains run by Indian Railways while availing of LTC.

2. The matter has been examined in consultation with Department of Expenditure, Ministry of Finance and it has been decided that travel by Premium Trains is not permissible on LTC. Hence, the fare charged by the Indian Railways for the journey(s) performed by Premium trains shall not be reimbursable for the purpose of LTC. Cases where LTC travel in such Premium Trains has already been undertaken by the Central Government Employees, the train fare may be reimbursed restricting it to the admissible normal fare for the entitled class of train travel or the actual fare paid, whichever is less.

Wednesday, January 28, 2015

படிக்கட்டாகும் இளைய தலைமுறை


க.சே. ரமணி பிரபா தேவி

ஆதரவற்றோர்களுக்கு உதவும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால் அதற்கான நேரமும், சூழ்நிலையும் நமக்கு கிடைத்திருக்காது. எங்கே சென்று உதவுவது, யாருக்குச் செய்வது, நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று பல விஷயங்களை யோசிப்போம்.

கடைசியாக சிக்னல்களிலும் தெரு ஓரங்களிலும் தட்டை நீட்டுபவர்களுக்கு ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு நம் கடமை முடிந்து விட்டதாக ஆத்ம திருப்தி அடைந்து விடுவோம். பணத்தால் வெல்ல முடியாத அன்பை, நாம் அனைவரும் இணைந்து மனதால் வெல்வோம் என்னும் குறிக்கோளோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது இளைஞர் சேவை அமைப்பான ‘படிக்கட்டுகள்’.

இணைந்த இளம் கைகள்

மதுரை சுற்றுவட்டாரத்தில் 2012-ல் கல்லூரிப் படிப்பை முடித்த சில இளைஞர்களும், படித்து கொண்டிருந் தவர்களும் ஒருங்கிணைந்து தோற்று வித்ததே ‘படிக்கட்டுகள்’ அமைப்பு. 25 பேர் மட்டுமே சேர்ந்து உருவாக்கிய இந்த அமைப்பில் இப்போது மதுரை, சென்னை, கோவை, ராஜபாளையம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 150 பெண்கள் உள்ளிட்ட 350 உறுப்பினர்கள் உள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என ஒட்டு மொத்தமாய் வேகம் கலந்த இளமைப் பட்டாளம்தான் இந்தப் படிக்கட்டுகளின் செங்கற்கள்! விருப்பப்படும் எவரும், படிக்கட்டுகளைப் பலப்படுத்தலாம்!

செயல் திட்டம்

முதியோர் இல்லங்களில், மனநலக் காப்பகங்களில், சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவியைப் பணமாகவோ பொருளாகவோ அளிப்பது இவர்கள் வழக்கம். ஏழைக் குழந்தை களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கு கிறார்கள், வசதி இல்லாத குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவைக்கிறார்கள். கிராமப்புற, நகர்ப்புற அரசு மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள், ஆலோசனைகள், கலந்தாய்வுக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துகிறார்கள்.

ரத்ததானம் வழங்குவது, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது போன்ற சேவைகளில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடிப்படை விஷயங்களைக் கற்பித்தல், நடனப் பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், பார்வையற்றோருக்குத் தேர்வு எழுத உதவது எனப் பொருளாதாரம் சாரா சேவைகளும் இவர்கள் பணியில் இடம் பெறுகின்றன.

உதவிய ஃபேஸ்புக்

சென்னை புழலில் உள்ள வள்ளலார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கஷ்டப்பட்டவர்களுக்கு போர்வெல் அமைக்க ரூ.50 ஆயிரம் தேவைப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/Padikkattugal என்னும் முகநூல் பக்கத்தில் படிக்கட்டுகளின் சேவையையும் குழந்தைகளின் தேவையையும் பதிவிட, ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. அதை வைத்து, போர்வெல் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். படிக்கட்டுகளின் padikkattugal.orgவலைத்தளம் இவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாதச் சம்பளம் பெறுகிற 300 உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஊதியத்திலிருந்து மாதம் ஐந்நூறிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை படிக்கட்டுக்குத் தந்துவிடுகிறார்கள். அதைக் கொண்டு மாதம் ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்கும் முதியோர் இல்லத்துக்கும் தேவையானதைச் செய்து கொடுக்கிறார்கள்.

எதிர்காலப் பாதை

தங்களைப் போன்ற கல்லூரி மாணவர் களைப் பெரிய அணியாகத் திரட்டி ஒன்றிணைந்து ஆதரவற்றோருக்குச் சேவை செய்யும் ஒரே குறிக்கோளுடன் இருக்கிறார்கள் படிக்கட்டுகளின் அத்தனை உறுப்பினர்களும்.

ஏழைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும் உதவ ஆயிரமாயிரம் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்களுடன் உட்கார்ந்து நேரம் செலவிட, குழந்தைகளுக்குப் பாடம் போதிக்க, பொது அறிவு சொல்லித்தர, அவர்களின் தனித்திறனை வளர்க்க யாரும் முன்வருவதில்லை!

இது போன்ற துடிப்பான, சேவையில் ஆர்வமுள்ள இளைஞர் சமுதாயத்துடன் கைகோத்துப் பயணித்தாலே ஆதரவற்றோர்க்கான பாதைப் பூக்கள் அழகாய் மலரும்.

45 ஆண்டுகளாகச் செயல்படும் ‘பேனா ஆஸ்பத்திரி’ திண்டுக்கல்லில் 3 தலைமுறையாக நடத்தும் குடும்பத்தினர்

பேனா ஆஸ்பத்திரி நடத்தி வரும் முகம்மது கமருதீன்.

கடந்த 45 ஆண்டுகளாக அதாவது, 3 தலைமுறைகளாக இந்தக் கடை ஒரு குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மனதில் தோன்றும் சிந்தனைகளைப் பதிவு செய்ய பயன்படும் அடிப்படை சாதனம் பேனா. ஒவ் வொரு பேனா சிந்தும் ஒவ்வொரு சொட்டு மையும், உலகின் தலை யெழுத்தையே மாற்றக் கூடியது.

செல்போன், மெயில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் வருகையால் கடிதப் போக்குவரத்து குறைந்ததாலும், பெரும்பாலான பணிகள் கணினி மயமாக்கப்பட்டுவிட்டதாலும் பேனா வின் பயன்பாடு மிகவும் சுருங்கி விட்டது. கையெழுத்திடவும், குறிப்பு கள் எடுப்பதற்கும் மட்டுமே தற்போது பேனா பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஜெல், பால்பாயிண்ட் பேனாக்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பால் ‘நிப்’ பேனாக்களின் பயன்பாடு சுருங்கிவிட்டது.

’பேனா ஆஸ்பத்திரி’

இந்தச் சூழலில், திண்டுக்கல்லில் கடந்த 45 ஆண்டுகளாக பேனா பழுது நீக்கும் கடையை நடத்தி வருகின்றனர் ஒரு குடும்பத்தினர். பேனா ஆஸ்பத்திரி என்ற பெயரில், மாநகராட்சி அலுவலகம் அருகே அந்தக் கடை செயல்பட்டு வருகிறது. முகம்மது கமருதீன்(57) குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக இந்தக் கடையை நடத்தி வருகின்றனர்.

பழுதடைந்த பேனாவை கொடுத் தால் நொடிப்பொழுதில் பழுது நீக்கி கொடுக்கிறார் முகம்மது கமருதீன். பேனா விற்பனை மற்றும் பேனா பழுது நீக்குதல் ஆகியவற்றை முழுநேரத் தொழிலாக நடத்திவரும் இவர், கடையில் நிப் பேனா மட்டுமன்றி பால்பாயிண்ட், ஜெல் பேனா என்று பேனாக்களை மட்டும் விற்பனைக்கு வைத்துள்ளார்.

இவரது கடையில், 10 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலான நிப் மை பேனா, 5 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலான பால்பாயிண்ட், ஜெல் பேனாக்கள் விதவிதமாக விற்பனைக்கு உள்ளன.

இதுகுறித்து முகம்மது கமருதீனி டம் கேட்டபோது அவர் கூறியதாவது:

எனது தந்தை ஷேக் மைதின், இதே கடைவீதியில் பிளாட்பாரத்தில் 1965-ம் ஆண்டு இந்தக் கடையைத் தொடங்கினார். தொடர்ந்து, எனது வாரிசுகளும் இந்தக் கடையை நடத்தத் தொடங்கிவிட்டனர். எனது தந்தை செய்த இந்தத் தொழிலை கைவிட மனமின்றி தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதிக லாபம் இல்லாவிட்டாலும், தொழிலில் திருப்தி உள்ளது. நிப் பேனா பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு இலவசமாக மை வழங்கி வருகிறேன்.

பேனாக்களில் நிப் பேனாக் கள்தான் ஹீரோ. நிப் பேனாக்களை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். நிப் பழுதாகும்போது மாற்றி விட்டால் மீண்டும் பயன்படுத்தலாம். நிப் பேனாவை பயன்படுத்தும்போது கையெழுத்து மாறாது. அழகாகவும் இருக்கும். பால்பாயிண்ட், ஜெல் பேனாக்களில் கையெழுத்து அவ்வாறு இருக்காது என்றார்.

நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாறும் இந்தியா

முகம்மது கமருதீன் மேலும் கூறும் போது, ‘முன்பெல்லாம் நிப் பேனாக் களை தலைமுறை, தலைமுறையாக பாதுகாத்து பெருமைப்பட்டுக் கொள்வர். இன்று, பால்பாயிண்ட் பேனாக்களை மை தீர்ந்தவுடன் தூக்கி எறிந்துவிடுவதால், பேனாக்களின் மதிப்பு குறைந்துவிட்டது.

உலக அளவில் இந்தியாவில் பேனாக்களின் பயன்பாடு அதிகள வில் உள்ளது. ஆனால், அவற்றை நாம் வெளிநாடுகளில் இருந்துதான் அதிகளவு இறக்குமதி செய்கிறோம். இந்தியா உற்பத்தி கலாச்சாரத்தில் இருந்து நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாறி வருவதற்கு, பேனா உற்பத்தியும் ஒரு எடுத்துக்காட்டு’ என்றார்.

நயன்தாரா மது வாங்கும் காட்சி: 'நானும் ரவுடிதான்' படத்துக்கு சிக்கல்

Return to frontpage

நயன்தாரா | கோப்புப் படம்: பிவி சிவகுமார்

நடிகை நயன்தாரா மதுபானக் கடையில் மது வாங்கும் காட்சி இடம்பெற்றுள்ள 'நானும் ரவுடிதான்' படத்துக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தயாராகி வரும் படம் 'நானும் ரவுடிதான்'. தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது.

நயன்தாரா பீர் வாங்குவது போல வரும் காட்சி 'நானும் ரவுடி தான்' படத்துக்கு படமாக்கி இருக்கிறார்கள். படப்பிடிப்பில் இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த வீடியோ காட்சி குறித்து இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில், நயன்தாரா மதுக்கடைக்கு போய் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.

பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்துப் போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன.

எனவே, பெண்களை குடிக்கத் தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்கக் கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

குறள் இனிது - மாமனோ மச்சானோ...

Return to frontpage


அவர் என்ன பெரிய இவரோ? எனக்குள்ள அனுபவம் அவரது வயதைவிட அதிகம்!’ என்று பேசுபவர்களையும், ‘அட விடுப்பா, அந்த அதிகாரி எனது மாமா தான், அவர் தகுதி எனக்குத் தெரியாதா? நான் பார்த்துக் கொள்கின்றேன்’ என்று சொல்பவர்களையும் சந்தித்திருப்பீர்கள்.

பொதுவாக 45, 50 வயதுக்காரர்களுக்கு, 30, 35 வயதுடையவர்களைத் தங்களது மேலதிகாரியாக ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கின்றது! ‘அரசர் நம்மைவிட இளையவர் என்றோ, அரசர் நமது உறவினர் தானே என்றோ எண்ணி அமைச்சர் அரசருக்குரிய மதிப்பைக் கொடுக்கத் தவறக்கூடாது’ என்று சொல்லும் குறள் நமக்கும் நல்வழிகாட்டும்!

சற்றே எண்ணிப் பார்ப்போம். உயர் பதவிக்குத் தகுதி என்ன? வெறும் வயது அல்லவே? வயது தரும் அனுபவமும், அதனால் வரும் திறனும் முதிர்ச்சியும் தானே. ஒரே அலுவலகத்தில் சில வருடங்கள் ஒன்றாகவே வேலை பார்க்கும் இருவர் ஒரே மாதிரியாகவா வேலை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கின்றனர்? நீங்களே சிலரைப் பார்த்து, இவருக்கு இந்த இளவயதிலேயே இவ்வளவு திட்டமிடும் திறன், அளப்பரிய ஆற்றல், முடிவெடுக்கும் முனைப்பு, கண்காணிக்கும் கண்டிப்பு எப்படி வந்தது என்று வியந்தது உண்டா இல்லையா?

சிறப்பாகப் பணியாற்றும் கெட்டிக்காரத்தனம் சிலருக்கு பிறவியிலேயே அமைந்து விடுகின்றது. வேறு சிலருக்கு உயர் கல்வியினாலோ, நல்ல பயிற்சியினாலோ, வளர்ப்பு சூழ்நிலையினாலோ கிடைத்து விடுகின்றது. இன்றைய உலகில் சிறுவயதிலேயே பெரும் சாதனை படைத்தவர் பலர். உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளின் சராசரி வயதே 45 தானாம்! ராஜா ராணி திரைப்பட இயக்குநர் அட்லிக்கு வயது 27. ‘கொலைவெறி’ பாட்டுக்கு இசையமைத்த அனிருத்துக்கு 21. நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கோ 17 வயதுதான்!

அடுத்த பிரச்சினை ஒருவரின் உறவினர் அவருக்கு மேலதிகரியாக அமைந்துவிட்டால் வருவது. மனம் அவரை மாமனாக மச்சானாக உறவு குறித்துப் பார்க்குமே தவிர அதிகாரியாகப் பார்க்காது. அவர் இடும் கட்டளைகளை ஏற்க மறுக்கும். தற்காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்பெற்று, அக்குடும்பத்து உறவினர்களாலேயேநிர்வகிக்கப்படும் நிறுவனங்களும் உள்ளன. அப்பா நிறுவனத்தின் தலைவர்; மகன் செயல் இயக்குநர்; சித்தப்பா மாமா பிள்ளைகள் துறை பொறுப்பாளர்கள். அங்கு விற்பனையை அதிகரிக்கக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது உறவுகளை மறந்து பதவிகளின் தன்மையறிந்து நடந்து கொள்ள வேண்டுமில்லையா? தனிச் சலுகைகளை எதிர்பார்க்கலாமா? உறவு முறை எல்லாம் அலுவலகத்திற்கு வெளியே தானே? ஒருவர் பதவியில் அமர்ந்தபின், அவர் எப்படி அதை அடைந்தார் என்று முணுமுணுப்பதால் என்ன பயன்? பதவி பதவி தான்; அதிகாரம் அதிகாரம் தான். அங்கலாய்க்காமல், சங்கடப்படாமல் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டுவிட்டால், தினம் தினம் பிரச்சினை இருக்காது! பணியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் கூடும்; மகிழ்ச்சியும் பெருகும்!!

நல்ல தமிழ்க் குறள் இதோ

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியொடு ஒழுகப் படும்

இனி “குவிக்”கா ஏழுமலையானை தரிசிக்கலாம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Oneindia Tamil

இனி “குவிக்”கா ஏழுமலையானை தரிசிக்கலாம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் 20 ஆயிரம் பக்தர்கள் எளிதாக தரிசிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
ரூபாய் 300 விரைவு தரிசனம் இணையதள முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு, "திருமலையில் ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 92 ஆயிரம் பக்தர்கள் அன்றைய தினம் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், திருமலையில் நடைபெற்ற 7 வாகன சேவைகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இலவசமாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கடந்த சில நாள்களாக ரூபாய் 300 விரைவு தரிசன பக்தர்களுக்காக இணையதளத்தில் அளிக்கப்பட்டு வந்த 18 ஆயிரம் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படுகிறது. இணையதள வசதியை தற்போது அனைவரும் பயன்படுத்திக் கொள்வதால் கூடுதலாக 2 ஆயிரம் டிக்கெட்டுகளை அளிக்க உள்ளனர். இதன் மூலம், 20 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை சுமார் 2 மணி நேரத்துக்குள் எளிதாக தரிசிக்க முடியும்" என்றார்.

NEWS TODAY 06.12.2025