Sunday, February 1, 2015

LPG tankers on strike, seek higher transportation rates

CHENNAI/NAMAKKAL: Raising concerns among the general public, 3,200 LPG tanker owners went on strike across the state on Saturday demanding higher transportation rates from the public sector oil companies. Cooking gas supply in the city and the outskirts is not expected to be affected immediately as there is reserve supply for the next three to four days, said oil company officials. There would be problems if the strike continues for more than three days.

The tanker owners, represented by Southern Region Bulk LPG Transport Operators Association, are demanding 3.06 per tonne per km against the 2.94 per tonne per km offered by Indian Oil Corporation (IOC), Hindustan Petroleum Corporation (HPC) and Bharat Petroleum Corporation (BPC).

The talks between the transporters association and the oil companies on Friday failed and officials from the food and civil supplies department are set to intervene on Monday in an attempt to end the stalemate. Three rounds of talks between the two parties have failed in the last two months. A senior IOC official said, "We will hopefully find a solution soon."

After the previous contracts expired on October 31, 2014, new tenders were floated with a price band on the transportation charges. With 2.75 per tonne per km set as the lower limit, the oil companies offered a maximum of 2.94 per tonne per km, 12 paise less than what transporters are demanding.

Association secretary N R Karthik said, "The cost of operating the tankers has gone up since the last contract was signed in 2011." The oil companies had promised to revise the transportation charges but they are now refusing to hike the price, he said. "When we had asked them for a price revision they requested us to wait for three months."

"Three months have passed but they refuse to hear our plea still," he said.

The 3,200 tankers distribute cooking gas from oil refineries to around 50 bottling plants across Tamil Nadu, Puduchery, Kerala, Karnataka and Andhra Pradesh.

With talks between government representatives and the oil companies set to be held in Chennai on Monday, the strike could continue on Sunday, a tanker owner said.

MDS ADMISSION 2015

FATE OF BLACKLISTED VARSITY STUDENTS HANGS IN BALANCE

AICTE Refuses Nod for Two Tamil Nadu Colleges

The New Indian Express

COIMBATORE: The All India Council for Technical Education (AICTE) has withdrawn its approval for a private engineering college in Krishnagiri, after it was found that the institution has some deficiencies and forged some of the documents.

According to highly placed sources in the AICTE, the approval granted for the Archana Institute of Technology in Thimmapuram, Krishnagiri was withdrawn by the council, after it was found that the private institution has forged some of the documents pertaining to its land and the approval for the building. Apart from this, the institution also has failed to meet the norms laid down for infrastructure and faculty.

The AICTE has now written to Anna University and the Directorate of Technical Education (DOTE) informing them about the action. Sources in Anna University and Directorate of Technical Education while confirming the action said that they would take appropriate follow-up action. This includes steps to cancel the affiliation granted to the college and transferring students of the college to another institution.

The private college management was not available for comment.

Meanwhile, the Directorate of Technical Education (DOTE) has constituted a committee to work out the modalities for shifting students who are studying in another private college in Ariyalur to neighbouring engineering institutions, as the AICTE has declined approval to it.

DOTE and Anna University sources said, a committee was formed to shift the students who are currently studying at KKC College of Engineering and Technology in Jayankondam, Ariyalur, to neighbouring engineering colleges.

Saturday, January 31, 2015

அஞ்சலி - வி.எஸ்.ராகவன்: கட்டுக்கோப்பை விட்டுக்கொடுக்காத வித்தகர்!

‘பொம்மை’ படத்தில் நாயகனாக

சமீபத்தில் மறைந்த நாடக ஆசான் வி.எஸ்.ராகவனைப் பற்றி நினைக்கும்போது ஒரு ரங்கோலி கோலமாய் நினைவுகள் பளீரிடுகின்றன.

நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் திரு.வி.எஸ்.ஆர். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை. அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட் மார்க் ஆனது. அதனால் அவர் பேசும் வசனங்கள், சாகா வரம் பெற்றன!

மிமிக்ரி கலைஞர்கள் உண்மையாகவே ரசித்து லயித்து வி.எஸ்.ஆரின் குரலைப் பிரதிபலிப்பார்கள். எப்படி வாரியாருக்கு “ மகனேய்ய்ய்.. ‘ என்கிற கீச்சுக்குரல் இழுப்பு, முத்திரை ஆனதோ அதேபோல் வி.எஸ். ஆருக்கு “ ஷொல்லுங்க” அவருக்குச் ‘சா’வே வராது! ஷா தான் என்று நினைத்திருந்தோம். காலன் கணக்கு வேறு மாதிரியாக இருந்துவிட்டது. இறுதியில் அவருக்கு ‘சா’ வந்துவிட்டது!

எண்ணற்ற பாத்திரங்களில் அவரைப் பார்த்த தலைமுறை எங்களுடையது. ஜாம்பவான்களாக இருந்த சிவாஜி, எம்.ஜி. ஆர்., ஜெமினி போன்றோரின் படங்களில் அவர் ஒரு இன்றியமையாத இணைப்பு. லேசான தலையாட்டலுடன் அவர் சொன்ன “பிள்ளைவாள் ” இன்னமும் சிதம்பரனாரை நம் கண் முன் நிறுத்துகிறது.

அவர் குணச்சித்திர வேடங்களை ஏற்ற கறுப்பு வெள்ளை திரைப்படக் காலங்களில், சரியான போட்டி இருந்தது. ஒரு பக்கம் எஸ்.வி. ரங்கா ராவ். இன்னொரு பக்கம் எஸ்.வி. சுப்பையா. அவர்களையும் சமாளித்து, தனக்கென ரசிகன் கவனத்தைத் திருப்பிய நடிகர்தான் எஸ்.வி.யைத் திருப்பிப் போட்ட வி.எஸ்.ராகவன்.

மத்தியதரக் குடும்பக் கதைகளை கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகுத் திறம்பட சொல்லிய இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் நடிகர் பட்டியலில் எப்போதும் வி.எஸ். ஆருக்கு ஒரு இடம் சாஸ்வதம்.

நாடகம் தந்த நல்முத்து

சதுரங்கம் என்கிற நாடகம் வி.எஸ். ஆரின் கலை வாழ்வில் முக்கியமானது. மேடை நாடகத்தில் முதன் முறையாகத் தமிழில் ஒரு செட் நாடகம் போட்டவர் அவர்தான். ஆனாலும் கதைப் பின்னலும் பாத்திரங்களின் குணாதிசயமும் ரசிகனைக் கட்டிப் போட்ட காலம் அது. ஒரே அறையின் பின்புலத்தில் ரசிகனை இருக்கையில் இருத்தி வைக்கும் தன்னம்பிக்கை அவரிடம் இருந்தது. அதில் தைரியம் வந்துதான் பாலசந்தர் ‘எதிர்நீச்சலையே’ மேற்கொண்டார்.

தமிழில் அக்‌ஷர சுத்தமாகப் பேசும் வி.எஸ். ஆர். ஆங்கிலத்தில் அபாரப் புலமை பெற்றவர். கேம்பிரிட்ஜா/ ஆக்ஸ்போர்டா? என்பார்கள் அந்தக் காலத்தில் கிண்டலாக. அந்த மாதிரி ஒரு ஆங்கிலேயே உச்சரிப்புடன் அக்மார்க் சுத்தத்துடன் அவரது ஆங்கிலம் வெளிப்படும். வார்த்தைகளுக்குக் கொடுக்கும் அழுத்தமே அதன் உட்பொருளை விளக்கிவிடும்.

வி.எஸ். ஆர் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள வெண்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து முடித்த பின்பு புரசைவாக்கத்தில் இருந்த அவரது சகோதரியின் வீட்டில் வசித்தபடி அவர் வேலை தேட ஆரம்பித்தபோது அவருக்கு 17 வயது.

பலருக்கும் தெரியாத தகவல் ஒரு பத்திரிகையாளராகத்தான் அவர் வாழ்க்கையைத் தொடங்கினார் என்பது. எழுத்தாளர் துமிலன்( ந. ராமசாமி) நடத்தி வந்த ’ மாலதி’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தவர். அந்தப் பத்திரிகை மூடப்பட்டபிறகு அவரது எழுத்தாற்றல் அவரை நாடகத்துறைக்கு இழுத்துச் சென்றது.

1954-ல் ’ இண்டியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற நாடகக் குழுவை மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். அதில் ஒருவர்தான் கே. பாலசந்தர். அவரது தொடக்க கால நாடங்களில் பெரும்புகழ் பெற்றது ’ வைரமாலை’. அதன் வெற்றியால் பின்னர் அது திரைப்படமானபோது நாடகத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் வி. எஸ். ராகவன் நடித்தார். அதுவே அவரது முதல் படம். அதன்பிறகு அவர் இல்லாத படமே இல்லை என்ற நிலை உருவானது.

நாகேஷின் நண்பர்

நாகேஷின் நெருக்கமான நண்பர் வி.எஸ்.ஆர். பொது இடங்களில், சுப நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாகவே அமர்ந்திருப்பார்கள். ஒரு கொடியில் இரு மலர்கள். நாகேஷ் சட்டென்று எல்லோரையும் சிநேகிப்பார். வி.எஸ்.ஆர். அப்படியல்ல. ஒரு நோட்டம் விடுவார். மெல்ல ஆளை பார்வையாலேயே எடை போடுவார். பிடித்திருந்தால் மட்டுமே கை நீட்டுவார். இதை நான் சிவாஜியிடமும் பார்த்திருக்கிறேன். இருவரையும் ஸ்பரிசித்த பெருமை என் கரங்களுக்கு உண்டு!

நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் நண்பன் எஸ்.வி.சேகரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் நாகேஷையும் வி.எஸ்.ஆரையும் சந்தித்தேன். அவர் பக்கத்தில் என்னை அமர வைத்தனர். தன் பெரிய கண்களை அகல விழித்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ சார் என் பேர் சிறகு இரவிச்சந்திரன்.. ஒரு இலக்கிய சிற்றிதழ் நடத்திக்கிட்டிருக்கேன்.” என்றேன். கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். “ எங்கே இருக்கேள்? நான் இங்கதான் பக்கத்துல இருக்கேன். எனக்கு உங்க பத்திரிகையோட ஒரு பிரதி அனுப்புங்கோ! நான் இப்போ வீட்ல சும்மாத்தான் இருக்கேன்.. படிச்சுட்டு ஷொல்றேன்” என்றார்.மற்றொரு திருமண வைபவத்தில் சந்தித்தபோது மறக்காமல் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டார்.

“ சிறகு வந்தது.. படிச்சேன். நன்னாருக்கு.. தொடர்ந்து பண்ணுங்கோ “

ஒரு சிற்றிதழ் ஆசிரியனுக்கு உற்சாக டானிக் பாராட்டுதானே!

கட்டுக்கோப்பை விரும்பிய கலைஞன்

அடிப்படையில் நானும் ஒரு மேடை நாடக நடிகன் / எழுத்தாளன் என்பதால் வி.எஸ். ஆர். குழுவின் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவரது நாடகக் குழுவில் மாற்று நடிகர்கள் என்ற ஏற்பாடே கிடையாது.

சாக்கு போக்கு சால்ஜாப்பு எல்லாம் வி.எஸ்.ஆரிடம் செல்லாது. அதேபோல் நடிகர்களுக்குத் தோதாகத் தேதிகளை மாற்றும் வேலையும் அவரிடம் பலிக்காது. அந்த நாடகம் பல காட்சிகள் போடப்பட்டு இனிமேல் காட்சிகள் இல்லை என்கிற நிலையில்தான், அவரது குழு கலைஞர்கள் வேறு நிகழ்வுகளுக்குச் செல்ல முடியும்.

ஒரு முறை அவரது நாடகத்தில் நடித்த ஒரு இளம் நடிகை, இனிமேல் அவர் நடித்துக் கொண்டிருந்த வி.எஸ்.ஆரின் நாடகம் போடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் புதிய நாடகக் குழுவுக்குத் தன் தேதிகளைக் கொடுத்து விட்டார். புதிய நாடகம் மியூசிக் அகாடமியில்.. மாலை ஆறு மணிக்கு வி.எஸ்.ஆர். அந்த புதிய குழுவின் ஒப்பனை அறைக்கு வெளியே நின்றுகொண்டு அதன் தயாரிப்பாளரை வெளியே வரச் சொல்கிறார்.

“ என் ட்ரூப் ஒரு குடும்பம் மாதிரி… நீ ஆசை காட்டி என் பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து விட்டாய் “ என்கிற ரீதியில் சரமாரியாக ஆங்கிலத்தில் சதிராடுகிறார். கடைசியில் ஒரு தகப்பனின் சோகத்தோடு அவர் அகன்ற காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது. “ இனிமே நான் நாடகம் போட மாட்டேன்! அந்தப் பாவம் உன்னைத்தான் சேரும்” சாபத்தோடு முடிகிறது சர்ச்சை! இவ்வளவு ரகளைக்கும் காரணமான அந்த நடிகை உள்ளேயிருந்து வெளியே வரவே இல்லை.

வார்த்தையை ஒரு ஒப்பந்த சாசனமாகவே எண்ணி வாழ்ந்தவர் வி.எஸ்.ஆர். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஈடு கொடுத்து நடித்திருப்பவர் அவர். காலை படப்பிடிப்புக்கு வந்து விட்டால் எந்த வித சோர்வும் வெறுப்பும் இன்றித் தன் வேடம் வரும் காட்சிக்காகக் காத்திருப்பதில் அவருக்கு அலுப்பே இருந்ததில்லை. அதற்குக் காரணம் நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு!

படங்கள் உதவி: ஞானம்

தொடர்புக்கு: tamizhsiragu@gmail.com

வினியோகத் துறையில் எனக்கு வெற்றி தேடித்தந்த படம் சிவாஜி: அபிராமி ராமநாதன் தகவல்


வினியோகம் செய்த சில படங்கள் தோல்வி அடைந்ததால், 10 ஆண்டுகள் அத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தேன். மீண்டும் எனக்கு வெற்றி தேடித்தந்த படம், ரஜினி நடித்த "சிவாஜி'' என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

திரைப்படத்துறை அனுபவங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:-

"தியேட்டர் நிர்வாகம்தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை நிலைப்படுத்தியது.

அப்போது மவுண்ட் ரோட்டில் இருந்த "சாந்தி'', "தேவி'', "சபையர்'', "ஆனந்த்'' தியேட்டர்களில் மட்டுமே ஏர்கண்டிஷன் வசதி இருந்தது. புரசைவாக்கத்தில் நாங்கள் கட்டிய அபிராமியும், பாலஅபிராமியும் ஏர்கண்டிஷன் தியேட்டர்கள். இதன் காரணமாக, தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

அபிராமி தியேட்டரைச் சுற்றி நிறைய இடம் இருந்தது. அங்கு அன்னை அபிராமி, சக்தி அபிராமி என்று 2 தியேட்டர்கள் உருவாக்கப்பட்டன.

"டிவி''யில் சினிமா படங்கள் ஒளிபரப்பத் தொடங்கிய காலகட்டத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால், தியேட்டருக்கு ரசிகர்களை வரச்செய்ய ஒரு புது உத்தியைக் கையாண்டேன். "போன் செய்தால் போதும். டிக்கெட் உங்கள் வீடு தேடிவரும்'' என்று ஒரு திட்டம் தொடங்கினோம். அது பெரிய வெற்றி. புதிய படங்களை பார்க்க விரும்புகிறவர்கள், டிக்கெட் வீடு தேடி வந்ததால், தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக வரத்தொடங்கினார்கள்.

எனக்கு, புதிய தொழில் நுட்பம் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். வெளிநாடுகளில் "டி.டி.எஸ்'' என்னும் சிறப்பு ஒலி, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக அறிந்தேன். உடனே நானும் எங்கள் தியேட்டர்களுக்கு "டி.டி.எஸ்'' ஒலியைக் கொண்டு வந்தேன். இந்த வகையில் இந்தியாவில் முதல் "டி.டி.எஸ்'' தியேட்டர் எங்களுடையதுதான்.

டி.டி.எஸ். சிறப்பு ஒலியுடன் கூடிய படம் வந்தால்தானே இந்த புதிய அனுபவத்தை ரசிகர்கள் உணர முடியும்? அதுமாதிரியான படங்கள் அதிகம் வரவில்லை. இதுபற்றி ஒரு முறை கமலஹாசனிடம் என் மனக்குறையை வெளியிட்டேன். "தெரியாத்தனமாக 3 1/2 லட்சம் செலவில் டி.டி.எஸ். ஒலி வசதி பண்ணிவிட்டேன். ஆனால் படம்தான் கிடைக்கவில்லை'' என்றேன்.

கமல் அப்போது "குருதிப்புனல்'' படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். கமலுக்கும் எப்போதுமே புதிய தொழில் நுட்பத்தில் ஆர்வம் உண்டு. உடனே `குருதிப்புனல்' படத்தில் "டி.டி.எஸ்'' சிறப்பு ஒலி சேர்க்க முடிவு செய்தார். அதற்காக, படத்தை ரிலீஸ் செய்வதை 3 மாதம் தள்ளி வைத்தார். இப்படி எங்கள் தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் "டி.டி.எஸ்'' படம் `குருதிப்புனல்.'

இதுமாதிரி டிஜிட்டல் முறையில் படம் திரையிடும் வசதி வந்தபோது, ஏவி.எம். சரவணன் அப்போது அவர் தயாரித்த "பேரழகன்'' படத்தை எங்களுக்கு டிஜிட்டல் முறையில் தந்தார். அதுபோல டால்பி சவுண்ட் சிஸ்டத்தை திரையரங்கில் முதலில் புகுத்தியதும் நாங்கள்தான்.

1984-ல் மலேசியா போயிருந்தபோது அங்கிருந்த 4 தியேட்டர்களில் "ஷாப்பிங் மால்'' கொண்டு வந்திருந்ததை பார்த்தேன். படம் பார்க்க வருகிறவர்கள் பலவித பொழுது போக்குகளில் ஈடுபடவும், பலவித ரெஸ்டாரெண்டுகளில் உணவு அருந்தவும், விரும்பிய பொருட்களை வாங்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனால் தியேட்டருக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அறிந்தேன்.

இதனால் "அபிராமி'' தியேட்டர்கள், அபிராமி மால் என்ற பெயருடன் 2003-ம் ஆண்டு நவீன வடிவமைப்புடன் மாற்றி அமைத்தேன். தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட தியேட்டர்களுடன் கூடிய முதலாவது ஷாப்பிங் மால் அபிராமிதான்.

எங்கள் மாலில் உள்ள "சொர்ண சக்தி அபிராமி'' (பழைய சக்தி அபிராமி) இப்போது ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, படுத்துக்கொண்டே சினிமா பார்க்கலாம்! பாத்ரூம் கூட, ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளது.

புதிய படங்களை எங்கள் தியேட்டர்களில் திரையிடும் நோக்கில் அதை பார்ப்பதுண்டு. அப்படிப் பார்க்கும்போது அது சரியாக ஓடுமா என்பது தெரிந்து விடும். இப்படி படங்களை பார்த்துப் பார்த்து, `நாமும் ஒரு படத்தை தயாரிக்கலாமே' என்ற எண்ணம் ஏற்பட்டது. 1994-ல் இப்படி நான் தயாரித்த படம்தான் `அடிமைச்சங்கிலி.' அர்ஜ×ன், ரம்பா, ரோஜா நடித்த இந்தப் படத்தை டைரக்டர் ஆர்.கே.செல்வமணி இயக்கினார்.

அந்தக் காலக்கட்டத்திலேயே 3 1/2 கோடி ரூபாய் செலவாயிற்று. படத்தயாரிப்பு 10 மாதம் வரை நீடித்தது. படம் ரிலீசான போது நஷ்டம் ஏற்பட்டது. என்றாலும் என் படத்தை நம்பி வாங்கி நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களின் நஷ்டத்தை நானே ஏற்றுக்கொண்டேன். இந்த வகையில் தியேட்டர் அதிபரான என் முதல் சினிமா தயாரிப்பு அனுபவம் "இக்கரைக்கு அக்கரைப் பச்சை'' கதைதான்.

ரஜினி நடித்த ஒரு ஆலிவுட் படம் "பிளட் ஸ்டோன்.'' மெட்ரோ பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த இந்த படத்துக்கு நான்தான் "பைனான்ஸ்'' பண்ணினேன்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் 25 நாள் நடந்தது. ரஜினியுடன் நானும் இருந்தேன்.

ரஜினி "சூப்பர் ஸ்டார்'' ஆக உயர்ந்ததற்கு காரணம், அவரது `நடிப்பு பாதி; குணம் பாதி' என்றுதான் சொல்ல வேண்டும். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு சரியாக 8-40 மணிக்கு ரஜினியிடம் இருந்து போன் வரும். "நான் ரெடி. கார் ரெடியா?'' என்று கேட்பார். தொழில் மீது அதிக பக்தி.

சினிமாத்துறையோடு சம்பந்தப்பட்டிருந்ததால், நடிகர் திலகம் சிவாஜியின் அன்புக்கும் உரியவராக இருந்தேன். என் மகள் திருமணத்தின்போது முழு நாளும் கூடவே இருந்து எங்கள் குடும்பத்தை சந்தோஷப்படுத்தினார். அவரை பார்க்க வருவது தள்ளிப்போனால், உரிமையுடன் கோபித்துக் கொண்டு, "ஏண்டா! ஏதாவது விஷயம் இருந்தால்தான் வருவியா?'' என்று கேட்பார்.

பட உலகில் என்னை வியக்க வைத்த இன்னொருவர் சின்னப்ப தேவர். ஒரு சினிமா எப்படி இருந்தால் வெற்றி பெறும் என்ற `லாஜிக்' தெரிந்தவர். அவர் தயாரித்த "ஆட்டுக்கார அலமேலு'' படம், எங்கள் தியேட்டரில் ஓடியபோது படம் பார்க்க வந்திருக்கிறார். பால்கனியில் அவருடன் நானும் படம் பார்த்தேன்.

அப்போது அவரிடம் "படத்துக்கு கேமரா ஆங்கிள் இன்னும் கொஞ்சம் கவனமாக வைத்திருக்கலாம்'' என்றேன். அவரோ, "இந்தப் படத்தோட கதாநாயகன் ஆடுதான். ஆடு ஒழுங்காக நடிக்குதா என்று பாருங்க'' என்று சொல்லிவிட்டார்.

"படம் பார்க்கிறவர்களை ஒரு கதைக்குள் முழுமையாகக் கொண்டு வந்திட்டால், படம் நிச்சயமாக ஜெயிக்கும். சின்னச்சின்ன குறைகள் இருந்தால்கூட, ரசிகர்கள் அதை பெரிசா எடுத்துக்கொள்ளமாட்டார்கள்'' என்று அவர் சொன்னபோது, சினிமா பற்றிய அவரது ஞானம் வெளிப்படையாகத் தெரிந்தது.

படத்தின் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு வந்தபிறகு எனக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த கவுரவம் மறக்க முடியாதது. போலீஸ் கமிஷனராக இருந்த லத்திகா சரண் என்னிடம், "காவல்துறை பொதுமக்களின் நண்பன்'' என்கிற மாதிரியான கதைப் பின்னணியில் ஒரு குறும்படம் எடுத்துத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடனே ஐந்தாறு குட்டிக் கதைகளுடன் அரை மணி நேரப்படமாக எடுத்துக் கொடுத்தேன். ஐந்து லட்சம் செலவாயிற்று. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நிஜ போலீஸ் அதிகாரிகளே நடித்தார்கள்.

சினிமாவில் அப்பா வினியோகத் துறையில் இருந்ததால், அப்பா வழியில் நாமும் முயன்று பார்க்கலாமே என்று தோன்றியது. அதற்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வது, லாபம் வந்தால் வினியோகத்தைத் தொடர்வது, நஷ்டம் வந்தால் அத்தோடு நிறுத்திக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

மொத்தம் 45 படங்கள் வரை வினியோகம் செய்தேன். அதில் 22 படங்கள் 100 நாள் ஓடின. 6 படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. என்றாலும் பின்னால் வினியோகம் செய்த படங்களில், போட்ட பணம் திரும்ப வராததால் முதல் குறையத் தொடங்கியது. அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.

பத்து வருடம் கழித்து, ரஜினி நடித்த "சிவாஜி'' படத்துக்கு சென்னை நகர வினியோக உரிமை பெற்றேன். அதில் நான் எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.

எதிர்பார்ப்புக்குரிய புதிய படங்கள் ரிலீசாகும்போது திருட்டு விசிடி எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள்தான் அதிக லாபம் பார்க்கும் நிலை சமீப காலங்களில் இருந்து வந்தது. மும்பையில் ஒரு இந்திப் படம் ரிலீசானால் உடனடி கலெக்ஷன் பார்ப்பதற்காக அதிக தியேட்டர்களில் திரையிடுவார்கள். பக்கத்து பக்கத்து தியேட்டர்களில் கூட திரையிடுவார்கள். இதனால் புதிய படம் பார்க்கும் ஆவல் கொண்ட ரசிகர்கள் இம்முறையில் தாமதமின்றி படம் பார்த்து விட முடிகிறது. இதனால் `திருட்டு விசிடி' பார்ப்பதற்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது.

`சிவாஜி' படத்தின் சென்னை வினியோக உரிமையை ஏவி.எம்.சரவணனிடம் நான் கேட்டபோது, மும்பை நிலவரத்தை சொல்லி அதுபோல் சென்னையிலும் பல தியேட்டர்களில் திரையிட்டால் சரியாக இருக்கும் என்று கூறினேன். என் கருத்தை அவரும் ஏற்றுக்கொண்டார்.

சென்னையில் ஒரே நேரத்தில் 18 தியேட்டர்களில் `சிவாஜி' ரிலீசாகி வினியோகஸ்தர்களுக்கு முதலீடு செய்த தொகையையும் தாண்டி வசூலித்துக் கொடுத்தது.

சினிமாவில் முதல் பட தயாரிப்பு அனுபவம் அத்தனை திருப்திகரமாக இல்லை என்பதால், முதல் தயாரிப்பில் ஏற்பட்ட மைனஸ் பாயிண்டுகளை பிளஸ் ஆக்கி மறுபடியும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறேன். நிச்சயமாக, வெற்றிகரமான தயாரிப்பாளர் என்ற நிலையை எட்டுவேன்.''

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

அபிராமி ராமநாதன் சின்னத்திரையிலும் தொடர்கள் தயாரித்தவர். "மாயாவி மாரீசன்'', "தெய்வ தரிசனம்'', "நம்ம ஊரு'' போன்றவை இவரது படைப்புகள்.

அபிராமி ராமநாதனின் மனைவி நல்லம்மை "எம்.பி.ஏ'' முடித்தவர். அபிராமி தியேட்டரின் `மால்' இவரது கற்பனையில் உதித்ததுதான்.

பிள்ளைகள் ஒரு மகனும், மகளும். மகன் சிவலிங்கம் "பி.பி.ஏ'' முடித்தவர். இவர் மனைவி ஜமுனா. ராமநாதனின் மகள் பெயர் மீனாட்சி. இவர் கணவர் பெரியகருப்பன்.

தனது சொந்த ஊரை தத்து எடுத்துள்ள அபிராமி ராமநாதன், அந்த ஊரை கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் முன்னேறச் செய்து கிராம மக்களின் நலனுக்கு உழைக்கிறார்

ஜனவரி.31 - நாகேஷ் நினைவு தினம் - 25 நினைவுகள்..



நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!



* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!

- மானா பாஸ்கரன்

(ஆனந்த விகடன் 07-07-2010)

NEWS TODAY 11.06.2026