Saturday, February 7, 2015

குடும்ப அட்டையில் பொருட்களை மாற்றும் வசதி தற்போது கிடையாது: விழுப்புரம் மாவட்ட வழங்கல் துறை தகவல்

குடும்ப அட்டையில் பொருட்களை மாற்றும் வசதி தற்போது இல்லை என விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

குடும்ப அட்டை விண்ணப்பிக்கும்போது சர்க்கரை, மண்ணெண்ணெய் மட்டும் போதும் என விண்ணப்பித்துவிட்டு தற்போது அரிசியும் வாங்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும். யாரிடம் விண்ணப்பிக்கவேண்டும் என்பது பற்றி தகவல் வெளியிடுமாறு ‘தி இந்து' உங்கள் குரல் பகுதிக்கு புகார் வந்தது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலக அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது, குடும்ப அட்டை விண்ணப்பிக்கும்போது அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் என எதுவேண்டுமோ அதை விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். பின்னர் எரிவாயு இணைப்பு பெறும்போது தானாகவே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். பின்னர் மற்றொரு விருப்பமாக அரிசி, சர்க்கரை என ஏதாவது ஒன்றை நியாயவிலை கடைகளில் மாதந்தோறும் பெறலாம்.

குடும்ப சூழ்நிலை காரணமாக அரிசியிலிருந்து சர்க்கரைக்கோ, சர்க்கரையிலிருந்து அரிசிக்கோ விருப்பத்தை மாற்றும் வசதி ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த வசதியை அரசு ரத்து செய்துவிட்டது. இது அரசின் கொள்கை முடிவாகும். வருங்காலங்களில் மீண்டும் அந்த வசதியை அரசு கொண்டுவர வாய்ப்புள்ளது என்றார்.

பாகிஸ்தானில் முதல் முறையாக 'ஷோலே' திரைப்படம் ரிலீஸ்

கராச்சி: அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடித்து, 40 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, 'ஷோலே' இந்தி திரைப்படம், முதல் முறையாக, பாகிஸ்தானில் உள்ள தியேட்டர்களில் அடுத்த மாதம் திரையிடப்படுகிறது.

கடந்த, 1975ல், ரமேஷ் சிப்பி இயக்கத்தில், 'ஷோலே' இந்தி திரைப்படம் வெளியானது. அப்போதைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சனும், தர்மேந்திராவும் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுக்கு ஜோடியாக ஜெயா பச்சன், ஹேமமாலினி நடித்திருந்தனர்.

இனிமையான பாடல்கள்:

இதில் வில்லனாக நடித்த அம்ஜத்கான், மிகவும் பிரபலமானார். அதிரடி சண்டை காட்சிகளும், இனிமையான பாடல்களும் நிறைந்த இந்த படம், வட மாநிலங்களில் மட்டுமல்லாமல், தென் மாநிலங்களிலும் பெரும் வெற்றி பெற்று, வசூலை வாரி குவித்தது. அண்டை நாடான பாகிஸ்தானில், இந்தி திரைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், 'ஷோலே' படம், இங்குள்ள தியேட்டர்களில் இதுவரை வெளியாகவில்லை. திருட்டு வீடியோவில் தான், இந்த படம் அங்கு பார்க்கப்பட்டது. இந்நிலையில், 'பாகிஸ்தானில் உள்ள மாண்ட்விவெல்லா' என்ற திரைப்பட வினியோக நிறுவனம், முதல் முறையாக இந்த படத்தை, அடுத்த மாதம், 23ல், அங்குள்ள தியேட்டர்களில் வெளியிட உள்ளது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நதீம் கூறியதாவது:

வித்தியாசமான அனுபவம்:

'ஷோலே' படம், இந்தியாவில் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை, தியேட்டர்களில் பார்ப்பது, புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை தரும். பாகிஸ்தான் திரைப்பட ரசிகர்களுக்கு இந்த அனுபவத்தை ஏற்படுத்துவதற்காகவே, இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Friday, February 6, 2015

பெண்கள் விரும்பும் பரோட்டா! நல்லதா... கெட்டதா?





'ஹலோ, நான்தாங்க பேசுறேன். எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. நைட் டின்னர் பண்ண முடியாது. நீங்க ஹோட்டல்ல வாங்கிட்டு வந்துடுங்க!''

- வாரத்தில் ஏதாவது ஒரு நாள் பெரும்பாலான குடும்பங்களிலிருந்தும் இப்படி ஒரு போன் கால் பதிவாகும்.

''சரி... என்ன வாங்கி வரட்டும்?'' என்ற குடும்பத் தலைவரின் கேள்விக்கு, பெரும்பாலான குடும்பத் தலைவிகளும், குழந்தைகளும் கோரஸாக சொல்லும் பதில் - ''பரோட்டா!''

இது என்ன உளவியல்..? இருக்கிறது விஷயம்.

''நம் பெண்களால் எளிதாக வீட்டில் செய்யமுடியாத ஒரு அயிட்டம்... பரோட்டா. ஆகையால், அதன் மீது அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு!'' என்கிறார் கோயம்புத்தூரில் வசிக்கும் குடும்பத் தலைவி ஜெயலட்சுமி.

''இட்லி, தோசை, சப்பாத்தி என்று விதவிதமாக வீட்டில் சமைத்தாலும், பரோட்டாவை மட்டும் பெண்களால் வீட்டில் அத்தனை சுலபமாக செய்ய முடிவதில்லை. மைதா மாவை தண்ணீர் ஊற்றி பிசை பிசை என்று பிசைந்து, சரியான பக்குவத்துக்குக் கொண்டு வருவதற்குள்... நாக்குத் தள்ளிவிடும். தோசைக்கல் எல்லாம் பரோட்டாவுக்கு சரிப்படாது. மேலும் கியாஸ் அடுப்பில் ஏறும் தோசைக்கல் சூடும் போதாது. பரோட்டா சுடுவதற்கு விறகு அடுப்புதான் சரி. இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆக, வீட்டில் செய்ய முடியாததும், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதுமான பரோட்டாவை கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஓர் அலாதி இன்பம். ஆண்கள் சமைத்த பொருளை சாப்பிடும் உளவியல் சந்தோஷமும் அதில் ஒளிந்திருக்கிறது!'' என்று சிரித்தபடியே சொல்கிறார் ஜெயலட்சுமி.

சென்னை, திருவல்லிக்கேணியில் ஏக பிரபலம் 'கோபால் பரோட்டா கடை’. அங்கே செம பிஸியாக இருந்த முகமது ரிலா, ''26 வருஷமா பரோட்டா கடை வெச்சுருக்கோம். கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, விருதுநகர் வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா, முட்டை லாப்பா - இப்படி பல வெரைட்டீஸ் இருந்தாலும்... நாங்க பிளெயின் பரோட்டாதான் போடுறோம். எங்க கடை நூறு சதவிகிதம் சுத்த சைவம். சாப்பிட வர்றவங்க எல்லாருமே... முதல்ல நான் எப்படி பரோட்டா போடுறேன்ங்கிறத உத்து பாத்துட்டே இருப்பாங்க. இந்தப் பக்கமா வண்டிகள்ல போறவங்களும்கூட ஒரு நிமிஷம் திரும்பிப் பாக்காம போக மாட்டாங்க'' என்று வாய்கொள்ளா சிரிப்புடன் சொல்லும் பரோட்டா மாஸ்டர் முகமது ரிலா,

''எங்க கடைக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கஸ்டமர்கள் வந்து போறாங்க. ஆச்சர்யம் என்னனா... இப்போ ஆண்களைவிட பெண்கள்தான் பரோட்டாவை விரும்பிச் சாப்பிடறாங்க. 'எத்தனை பரோட்டாம்மா..?’னு 'வீட்டுல’ போன்ல கேட்டுட்டே இங்க பார்சல் கட்டி வாங்கிட்டுப் போறவங்கதான் அதிகம்!'' என்கிறார் சின்னச் சிரிப்புடன்.

''ஆமாம்... எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பரோட்டானா ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா, வீட்டுல செய்றதுக்கு ரொம்ப மெனக்கெடணும். அதனால எப்பவெல்லாம் எங்க நாக்குக்கு பரோட்டா தேடுதோ, அப்போவெல்லாம் என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் பண்ணிட்டா போதும். 'அப்போ இன்னிக்கு உன் சமையல்ல இருந்து விடுதலையா..?’னு சிரிச்சுட்டே பார்சலோட வந்துடுவாரு'' என்று ஆமோதிக்கிறார் சென்னையைச் சேர்ந்த மாலா சங்கர்.

''ஆமாம்... பீட்ஸா, பர்கர்னு எத்தனை அயிட்டம் வந்தாலும் பரோட்டாவை அடிச்சுக்க முடியாது. நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து எப்படியும் மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் பரோட்டா வேட்டைக்கு கிளம்பிடுவோம். வாரத்துக்கு ஒரு முறை அடம் பண்ணி வீட்டுக்கும் பார்சல் வாங்கிட்டு வர வெச்சுடுவோம்!'' என்கிறார் கல்லூரி மாணவி மகாலட்சுமி.

''சும்மா நாலா பக்கமும் அடிச்சு லேயர் லேயரா இருக்குற பரோட்டாவோட... பாயா, சேர்வானு ஊத்தி அடிச்சுப் பாருங்க... செமசெம கிக்குதான்! நாலு பேர் ஒண்ணு சேந்துட்டா... பரோட்டா மாஸ்டரை உண்டு இல்லைனு பண்ணிடுவோம். 'பரோட்டா' சூரி மாதிரி நாங்க போட்டிப் போட்டுட்டு பரோட்டா சாப்பிட்டு, கடையையே காலி பண்றதெல்லாம்கூட அப்பப்ப நடக்கும்'' என்று ரசிக்க ரசிக்கச் சொல்கிறார் கல்லூரி மாணவர் ரத்னா!

இப்படி விஜய், சூர்யா, அஜீத்தைவிட பரோட்டாவுக்கு ரசிகர்கள் இருப்பதால்தான்... டான்ஸ் மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்டேஷன் மாஸ் டர் (!!) வரிசையில், இன்று பட்டிதொட்டியெங்கும் 'ஹீரோ'வாக வலம் வருகிறார்கள்... 'பரோட்டா மாஸ்டர்'கள்! கொதிக்கும் அடுப்பு முன்பாக, கொசுவலை பனியன் அணிந்தபடி, பரோட்டா கல்லில் 'டன்டன்டன்டன்' என்று அவர்கள் எழுப்பும் இசைதான்... இன்று, தமிழகத்தின் 'தேசிய இசை'யாகவே மாறிக்கிடக்கிறது!

40 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை ஓரக்கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த இந்த பரோட்டா, இன்று தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலும் கிடைக்கிறது என்றால், அது பரோட்டாவுக்கு கிடைத்த 'பத்மபூஷண்' விருதுதான்!

- ஜி.பழனிச்சாமி, பொன்.விமலா

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், அபிநயா சங்கர்

'செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் பரோட்டா!

''பரோட்டா ரெசிபி சொல்லுங்களேன்...'' என்றபடி, பிரபல செஃப் தாமு முன்பாக போய் நின்றோம்.

''பரோட்டாவை முழுசா செஞ்சு முடிக்க... கிட்டத்தட்ட மூணு மணி நேரம் ஆகும்!'' என்பதை அழுத்தமாகச் சொல்லவிட்டு ஆரம்பித்தவர்,

''அரை கிலோ மைதா மாவுடன், 250 மில்லி தண்ணீர், 50 மில்லி பால், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சம அளவுகளில் அந்த மாவை உருண்டைகள் பிடித்து, அதை நன்கு அடித்துப் பிசைந்து, எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, மெலிதாக திரட்டி, திரும்பவும் உருட்டி, எண்ணெய் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, உள்ளங்கையில் தட்டி லேசாக தேய்த்து... சூடான தோசைக் கல்லில் போட்டு, பிரவுன் கலர் வரும் வரை திருப்பித் திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்படி வெந்த பரோட்டாவை தட்டில் வைத்து, இரண்டு கைகளையும் பயன்படுத்தி நான்கு பக்கமும் சுற்றி சுற்றி அடித்தால்... பரோட்டா லேயர் லேயராப் பிரியும். குருமா ஊற்றிச் சாப்பிட்டால், ருசியோ ருசிதான்!'' என்ற தாமு,

''சரியான அளவு தண்ணீர் முக்கியம். நன்றாக ஊறவும் வைக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சூட்டில் பரோட்டாவை வேக வைத்தால்... வெளிப்பக்கம் வெந்த மாதிரி இருக்கும். ஆனால், உள்புறம் வெந்திருக்காது. அதனால மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும்'' என்று டிப்ஸ்களையும் தந்தார்!

நல்லதா... கெட்டதா?

''பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக் கேடு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள் வரிசை கட்டுமாமே... உண்மைதானா?'' என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார், சென்னை, டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.

''பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால் செய்யப்படும் உணவு. கோதுமையில் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அதில் இருந்து பிரிக்கப்படுவதுதான் மைதா.

மைதா மூலம் தயாராகும் பரோட்டாவில் உடலுக்குத் தேவையான நல்ல சத்துக்கள் ஏதும் இல்லை. பரோட்டாவுடன் சேரும் குருமா போன்ற கிரேவி மட்டுமே புரோட்டீன் மற்றும் கலோரிகளை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல், பரோட்டாவில் அளவுக்கு அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது, துளிகூட உடம்புக்கு நல்லது கிடையாது.

பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள் பரோட்டா சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகிவிடும். பெரிதாக பிரச்னை இல்லை. ஆனால், அதிக உடல் அசைவுகள் இன்றி, 'டெக்ஸ்’கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பரோட்டா நல்லதல்ல. அதிகமாக ஓடி விளையாடாத குழந்தைகளும் பரோட்டா சாப்பிட்டால் வயிற்றுவலியால் அவதிப்படுவார்கள்.

பரோட்டாவில் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்படுவதால், கொழுப்புச் சத்து அதிகமாகிறது. இதன் காரணமாக உடல் எடை கூடும். சர்க்கரை வியாதி, இதய நோய் மற்றும் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக பரோட்டாவை தவிர்க்க வேண்டும்.

'எனக்கு பரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீர வேண்டும்’ என்பவர்கள், அதன் விளைவை ஈடு செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று மெனக்கெட வேண்டும்'' என்று வலியுறுத்தினார் ஷைனி சந்திரன்.

பரோட்டா பிரியர்களே... உஷார்!

எல்இடி பல்பு பயன்படுத்தினால் எவ்வளவு பணம் மிச்சம்?



க்ளீன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா வரிசையில் மோடி அறிவித்திருக்கும் அடுத்தத் திட்டம்தான் எல்இடி பல்புகளை வீட்டிலும், தெருக்களிலும் பயன்படுத்தும் திட்டம். இந்தத் திட்டத்தை இந்தியாவில் உள்ள தெருவிளக்குகளில் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 5 பில்லியன் kWh மின்சாரமும், 3,000 கோடி ரூபாயும் மிச்சமாகும் என்கிறது மத்திய அரசாங்கம். ஓர் அரசாங்கத்துக்கே இவ்வளவு பணம் மிச்சமாகிறது என்றால், பொதுமக்களுக்கு இதனால் எவ்வளவு பணம் மிச்சமாகும்? இந்த எல்இடி பல்புகள் மின்சாரம் அதிக அளவில் செலவாவதைக் கட்டுப்படுத்துமா? இதன் வெளிச்சம் உடலுக்குத் தீங்கு விளைவிக்குமா? என்பது போன்ற விஷயங்களுக்குப் பதில் தேடினோம்.

ஏன் எல்இடி பல்பு?

வீட்டின் வெளிச்சத்துக்கு பெரிதும் பயன்பட்டுவந்த டங்ஸ்டன் இழை பல்புகள் அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. அத்துடன் அதிக வெப்பத்தை வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கும், உடலுக்கும் பாதிப்புத் தருவதாக மாறியதால், டியூப் லைட்டு களையும், சிஎஃப்எல் எனப்படும் ஃப்ளோரசன்ட் பல்புகளையும் பயன்படுத்த தொடங்கினர். ஆனால், தற்போது அரசு பயன்படுத்த நினைக்கும் இந்த எல்இடி பல்புகள் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி, அதிக வெப்பத்தை உமிழாமல், நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியதாக இருக்கும்.

எல்இடி பல்புகளின் சிறப்பு!

எல்இடி பல்புகள் ஏன் மற்ற பல்புகளைவிடச் சிறப்பானவை என்பது குறித்து எலெக்ட்ரிக்கல் துறை பேராசிரியர்கள் சிலரிடம் கேட்டோம்.

‘‘டங்க்ஸ்டன் இழை பல்புகள் அதிக வெப்பத்தை உமிழும் என்பதால்தான் குறைந்த வெப்பத்தை உமிழக்கூடிய, அதேநேரத்தில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தாத சிஎஃப்எல் பல்புகளைப் பயன்படுத்த துவங்கினர். தற்போது அதைவிடக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தி அதிக வெளிச்சத்தைத் தரக்கூடியவையாக எல்இடி பல்புகள் இருக்கின்றன. இதன் பயன்பாட்டுக் காலம் என்பது நாம் பயன்படுத்தும் டியூப் லைட்டுகளைவிட 15 மடங்கும், சிஎஃப்எல் பல்புகளைவிட மூன்று மடங்கும் அதிகம்.

பொதுவாக, பல்புகளின் ஆயுட்காலமானது, நாம் அதை ஆன் செய்து ஆஃப் செய்வதைப் பொறுத்துதான் இருக்கும். அப்படி பார்க்கும்போது, எல்இடி பல்புகள் மற்ற பல்புகளைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமான நாட்கள் உழைக்கும்.

இது குறைவான மின்சாரத்தைத்தான் பயன்படுத்தும். 5 வாட்ஸ் முதல் இந்த பல்புகள் கிடைக்கின்றன. இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதன் வாழ்நாள், எடுத்துக்கொள்ளக்கூடிய மின்சாரம் போன்ற விஷயங்களால், இந்த பல்புகளை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம்’’ என்றனர்.


விலை!

இந்த எல்இடி பல்புகளின் விலை சாதாரண பல்புகளைவிட 10 மடங்கு அதிகமாகவும், சிஎஃப்எல் பல்புகளைவிட 3 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

சாதாரண டியூப்லைட்டுகள் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் பயன்படுத்தப்படுகிறது என கணக்கிட்டால், சாதாரண டியூப்லைட் சுமார் 1 வருடம் வரை பயனளிக்கும். சிஎஃப்எல் பல்புகள் சுமார் 4 - 5 வருடங்கள் வரை பயனளிக்கிறது. ஆனால், எல்இடி பல்புகளோ 13 - 15 வருடங்கள் பயன்படுகின்றன. இதனால் அடிக்கடி பல்பை மாற்றும் சூழல் உருவாவதில்லை.

எவ்வளவு மிச்சமாகும்?

ஒரு நாளைக்கு 6 மணி நேரம் என்கிற கணக்கில் 15 ஆண்டுகளுக்கு டியூப் லைட்டைப் பயன்படுத்தும்போது, அதற்கு செலவாகும் மின்சாரமானது ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் மின்சாரக் கட்டணம் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு டியூப்லைட்டின் ஆயுட்காலம் என்பது ஒரு வருடம்தான். எனவே, 15 ஆண்டுகளுக்கு 15 டியூப் லைட்டுகளை வாங்க வேண்டும். பணவீக்கம் 7 சதவிகிதம் எனக் கொண்டால், 15 வருடங்களில் பயன்படுத்தும் டியூப் லைட்டுக்கான விலை மட்டும் 1,522 ரூபாயாக இருக்கும்.



இதற்கான மின்சாரக் கட்டணம் (இதனை மாட்ட உதவும் உபகரணக் கட்டணம் + டியூப்லைட் விலை சேர்த்து) 15 வருடங்களில் டியூப்லைட் பயன்படுத்த ஆகும் செலவு 7,672 ரூபாயாக இருக்கும்.

இதேமுறையில் சிஎஃப்எல் பல்புக்கான செலவானது 3,480 ரூபாயாக இருக்கும். ஆனால், 15 வருடம் பயன்படும் எல்இடி பல்புக்கான செலவானது வெறும் 1,602 ரூபாய்தான். நீண்ட ஆயுட்காலம், குறைவான மின்சாரம், அதிக வெளிச்சம் ஆகிய விஷயங்களைக் கணக்கில் கொண்டால், 15 ஆண்டுகளில் எல்இடி பல்புகளைப் பயன்படுத்தினால் சுமார் 6,000 ரூபாய் மிச்சமாகும். ஆனால், சிஎஃப்எல் பல்புகளைப் பயன்படுத்தினால் சுமார் 1,800 ரூபாய்தான் மிச்சமாகும்.

தனியொரு குடும்பமே இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றால், ஒரு நாடு முழுக்க எவ்வளவு பணம் மிச்சமாகும் என்று யோசியுங்கள். மத்திய அரசு டெல்லியில் மக்களுக்கு ரூ.130 என்ற சலுகை விலையில் எல்இடி பல்புகளை வழங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாநில அரசு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், அனைத்து அரசு அலுவலகங்களையும் எல்இடி மயமாக்குவதன் மூலமும் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறக்கூடும்.

நீங்களும் உங்கள் வீடுகளில் இருக்கும் பழைய பல்புகளுக்கு பதிலாக, வாய்ப்பு கிடைக்கும்போது எல்இடி பல்புகளுக்கு மாறிக்கொள்ளுங்கள்!

மனிதம், இனி மெல்ல வளரும்!





உலகில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்க்கும்போதும், கேட்கும் போதும் 'மனிதம் செத்துக்கொண்டிருக்கிறது' என்றுதான் பலரும் புலம்பித் தீர்க்கிறார்கள். பிரிட்டனில் நடந்த இந்தச் சம்பவம் பற்றி தெரிந்து கொண்டால், மனிதம் எப்போதும் சாகாது என்கிற நன்னம்பிக்கை அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும்!


பிரிட்டனை சேர்ந்த 67 வயது ஆலன் பர்ன்ஸ், பிறக்கும் போதே பார்வைக் குறைபாட்டுடனும், வளர்ச்சிக் குறைபாட்டுடனும் பிறந்து, கஷ்டப்பட்டு தன் வாழ்நாளை நகர்த்தி வந்தார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி, இவரைத் திருடன் ஒருவன் தாக்க, அவரிடம் பணமேதும் இல்லை என்றதும், அப்படியே கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.

கழுத்திலும், கையிலும் அடிபட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலன் பற்றி, உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதைப் பார்த்த கேத்தி கட்லர் என்னும் இளம்பெண், முதியவர், அதுவும் பார்வையற்ற, தன்னை தற்காத்துக் கொள்ளும் திராணியற்றவர் என்றுகூட பாராமல் ஈவு இரக்கமின்றி நடந்துகொண்ட அந்த திருடனின் செயலில் அதிர்ச்சியுற்றார்.

'ஐயோ பாவம்’ என்று விலகிவிடாமல், உதவும்படி என்ன செய்யலாம் என்று அக்கறையுடன் யோசித்தார். இவரின் மெனக்கெடலுக்குப் பரிசாகக் கிடைத்திருக்கிறது 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி!

பாதிக்கப்பட்ட ஆலனுக்கு உதவிடும் நோக்கில் இணையத்தில் ‘ஆலன் பர்ன்ஸ் ஃபண்டு’ என்ற பக்கத்தை ஆரம்பித்தார் கேத்தி கட்லர். இந்தப் பக்கத்தின் மூலம் குறைந்தது 500 யூரோவாவது நிதி திரட்டிட வேண்டும் என்று நினைத்திருந்த கேத்திக்கு, காத்திருந்தது ஆனந்த அதிர்ச்சி. அந்தப் பக்கத்தை தொடங்கிய நான்கே நாட்களில் 2,82,673 (இந்திய பண மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) யூரோ வரை நிதி கிடைத்துள்ளது.

அமெரிக்கா, கனடா, ஹாலந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா என உலகம் முழுவதும் இருந்து நீண்டிருக்கின்றன உதவும் கரங்கள். மேலும், அந்தப் பக்கத்தில் இவர்கள் அனைவரும் ஆலன் குணமடைய வேண்டி தங்கள் பிரார்த்தனைகளையும் சேர்த்துள்ளனர்!

மனிதம் வாழ்க!

- யதி

ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பயன்படுத்தினால் திங்கள் முதல் அபராதம்: தமிழக போலீஸ்

ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பயன்படுத்தினால் திங்கள் முதல் அபராதம்: தமிழக போலீஸ்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, 'ஐ.என்.டி' என்ற, உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட், தமிழகத்தில் இன்னும் அமலுக்கு வரவில்லை. எனவே, இந்த வகை நம்பர் பிளேட்டை பொருத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக போக்குவரத்து மற்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு பதிவு எண் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என, கடந்த 2011ல், மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. அதே சமயம் வேறு சில மாநிலங்கள் ஐ.என்.டி. நம்பர் பிளேட் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் போலி ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த வாரம் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் போலி நம்பர் பிளேட் தொடர்பாக விசாரிக்குமாறு கோயம்புத்தூர் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகள் உபயோகிக்கக்கூடாதென்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

தற்போது மாநில காவல்துறை, இது போன்ற நம்பர் பிளேட் வைத்திருப்பவர்களிடம் அதை மாற்றி விட்டு கோர்ட் உத்தரவுப்படி பழைய மாடல் நம்பர் பிளேட்டுகளை உபயோகப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து வரும் திங்கள் முதல் ஐ.என்.டி. நம்பர் பிளேட்டுகளை உபயோகிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பர் பிளேட்டில், எழுத்து, எண் வடிவங்கள் ஒரே சீராகவும், வாகன இன்ஜின் எண், வாகன உரிமையாளர்கள் விவரங்கள் அடங்கிய, 'ஹாலோகிராம்' முத்திரை இடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

ஒரு நாளைக்கு ஏழு முறை க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்

லண்டன், பிப். 6-

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தினமும் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் பொதுமக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆங்ளியா ரஸ்கின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் க்ரீன் டீ பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

14 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு கிரீன் டீயில் உள்ள ஈ.ஜி.சி.ஜி. அடங்கிய கேப்சூலும் மற்றொரு குழுவிற்கு மருந்து இல்லாத கேப்சூலும் கொடுக்கப்பட்டது.

இதில் மாத்திரை எடுக்காதவர்களோடு ஒப்பிடும் போது மாத்திரை எடுத்தவர்களுக்கு 1.63 சதவீதம் உடல் எடை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்பது அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தினசரி சோதனையில் கொடுக்கப்பட்ட கேப்சூலில் இருந்த ஈ.ஜி.சி.ஜி.யின் அளவு 400 மில்லி கிராம். இதே அளவை தினசரி பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு ஏழு முறை காஃபின் நீக்கப்பட்ட க்ரீன் டீ அருந்த வேண்டும் என்றும் இவ்வாறு எடுத்து வந்தால் உடல் எடை குறைவது மட்டுமின்றி உடலில் செயலாற்றலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...