Monday, February 9, 2015

மாட்ட அடக்கினா தான் பொண்ணு என்று மாமா சொல்லிட்டாரு

சான்றோர்களை உருவாக்கிய சென்னை சட்டக் கல்லூரி



சென்னை சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு விரைவில் 125 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.

கடந்த 1891-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரி உருவானது. இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலையின் சிறப்பை பறைசாற்றும் இன்றைய சட்டக் கல்லூரி கட்டிடம் 1899-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பாரம்பரியம் மிக்க இந்த சட்டக் கல்லூரியில் பயின்ற ஏராளமானோர் பின்னாளில் இந்தியாவின் மிகச் சிறந்த சான்றோர்களாக ஜொலித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட் ராமன் இந்த சட்டக் கல்லூரி யில்தான் பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் மூன்று பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி எம்.பதஞ்சலி சாஸ்திரி, மற்றொரு தலைமை நீதிபதி கொகா சுப்பா ராவ், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்று, தற்போது கேரள மாநில ஆளுநராக உள்ள பி.சதாசிவம் ஆகியோர்தான் அந்த சிறப்புக்குரியவர்கள்.

அதேபோல் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்திய நீதி பரிபாலனத்தின் பிதாமகன் எனப் போற்றப்படும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகி யோரும் சென்னை சட்டக் கல்லூரியின் மாணவர்களே ஆவர்.

திருவாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர், நீதிக்கட்சி தலைவர் ஆற்காடு ராமசாமி முதலியார், தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவச்சலம், பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் சி.சுப்ரமணியம், ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்த கே.சந்தானம், கல்வியாளரும், பிரபல வழக்கறிஞருமான பி.எஸ்.சிவசாமி அய்யர், சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி, கல்வியாளர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், காங்கிரஸ் அமைச் சரவையில் பல ஆண்டுகள் நிதிய மைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் போன்றவர்களும் சென்னை சட்டக் கல்லூரியில்தான் பயின்றனர். இந்தியாவின் முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி ஆகியோரும் இங்கு பயின்றுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், தற்போதைய நீதிபதிகள், உயர் நீதிமன்றங்க ளின் முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகள் பலர், மிக மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் தலை வர்கள் என நூற்றுக்கணக்கான அறிவுசார் பெரியோரை உருவாக்கிய பெருமை இந்த சட்டக் கல்லூரிக்கு உண்டு.அத்தகைய பெருமைக்குரிய இந்தக் கல்லூரிதான் தற்போது இட மாற்றப் பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.

வருமுன் தயாராவோம்... வருமான வரி சலுகை பெறுவோம்!



மார்ச் மாதம் நெருங்கி வரும்போதுதான் நமக்கு வருமான வரி குறித்த சிந்தனை வந்து சேர்கிறது. அதுவரையில் அது குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருப்போம். கடைசியில் மார்ச் மாதம் சம்பளத்தில் மொத்தமான வரிப் பிடித்தம் செய்யப்படுகிறபோது மட்டும் வருத்தப்படுவோம்.

ஆனால் ஆண்டில் ஆரம்பத்திலேயே இதற்கு திட்டமிட்டால் வருமான வரி குறித்த கவலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். சம்பாதித்த பணத்தை இப்படி வரியாக செலுத்துகிறோமே என்கிற வருத்தமும் வேண்டாம்.

இப்படி முன் கூட்டியே திட்டமிடுவதன் மூலம் அரசு அனுமதிக்கும் பல்வேறு வரிச் சேமிப்பு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.

ஆனால் இதற்கு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே திட்டமிடுதல் அவசியம். முன்னேற்பாடு இல்லாமல் கடைசி நேரத்தில் கண்ட வகைகளிலும் முதலீடு செய்வது பலன் தராது.

தவிர இந்த முதலீட்டுத் திட்டங்களை அவசரத்தில் தேர்வு செய்வதன் மூலம் அதன் பாதுகாப்பு, அதிலிருந்து கிடைக்கும் வருமானம், அதை எளிதில் பணமாக்கும் வாய்ப்பு மற்றும் அதற்கான செலவுகள் குறித்தெல்லாம் யோசிப்பதில்லை.

வரிச் சேமிப்புக்கு என்று நமது வருமானத்தை வளர்ச்சி இல்லாமல் முடக்குவதும் சரியான செயல்பாடு அல்ல.

அந்த வகையில் ஒரு தனிநபர் எந்த எந்த வகைகளில் வரிச் சலுகை பலன்களை அனுபவிக்க முடியும் என்று பல வருமான வரி தணிக்கையாளர்களிடம் (ஆடிட்டர்) பேசியதிலிருந்து பொதுவாக ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருப்பவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

மேலும் மூத்தக் குடிமக்கள் சிறப்புச் சலுகையாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ரூ.3 லட்சம் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ரூ.5 லட்சம் வரையிலும் வருமான வரி கட்டத் தேவை இல்லை.

ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்படுகிறபோது வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால் குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படுகிறது.

இதன்படி ரூ.2.50 லட்சத்துக்கும் மேற்படும் ஆண்டு வருமானத்தி லிருந்து ரூ.1.5 லட்சம் வரை வருமானத்துக்கு வரிச்சலுகை பெறலாம். அதை எந்தெந்த வகை களில் பெற முடியும் என்பதைப் பார்க்கலாம். பொதுவாக பிஎஃப் முதலீடு, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியம் செலுத்துவது வீட்டுக்கடனுக்கு செலுத்தும் வட்டி போன்றவற்றுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும்.

மருத்துவக் காப்பீடு பிரீமியம்

மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் ஆண்டு பிரீமிய கட்டணத்துக்கு வரி சலுகை பெறலாம். ஒரு ஆண்டில் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்கு ரூ.15,000 வரை வரிச்சலுகை கிடைக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000 வரையிலான பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெறலாம். ப்ளோட்டர் பாலிசியில் மூத்தக் குடிமக்களை இணைந்திருந்தால் இதற்கு ரூ.20,000 வரை வரி சலுகை பெறலாம்.

வீட்டுக் கடனுக்கான வட்டி

வீட்டுக் கடன் வாங்கி திரும்பச் செலுத்தும் வட்டியில் ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரி சலுகை உள்ளது. (அந்த வீட்டில் குடியிருந்தால் மட்டும்) ஆனால் வீட்டை வாடகைக்கு விட்டு, அதை வருமானமாகக் காட்டினால், திரும்ப செலுத்தும் முழு வட்டிக்கும் வரி சலுகை கிடைக்கும்.

கணவன் மனைவி இருவரும் வருமானம் ஈட்டும்பட்சத்தில் கூட்டாக வீட்டுக்கடன் வாங்கினால், இருவரது ஆண்டு வருமானத்திலிருந்தும் தனித்தனியே அசல் மற்றும் வட்டி வரி சலுகை பெற முடியும்.

வரிச்சலுகை முதலீடுகள்

சிலவகை முதலீடுகளை மேற் கொள்வதன் மூலமும் வரிச்சலுகை கிடைக்கும்.

குறிப்பாக நமது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகைகூட ஒரு வகை முதலீடுதான். இதற்கு வரிச்சலுகை உண்டு. இந்த கணக்கில் கூடுதலாக பணத்தை செலுத்த வசதியும் உள்ளது.

நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே பணியாற்றும் நிறுவனத்தில் இது குறித்து சொல்லிவிட வேண்டும். இடையில் சேரவோ வெளியேறவோ முடியாது.

சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் அதிகமாக எதிர்பார்ப்பவர்கள் மற்றும் சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்யப்படாத பிரிவினர் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் வங்கி வைப்பு நிதி போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கும் வரி சலுகை உள்ளது.

இதர முதலீடுகள்

அஞ்சலகங்களில் செய்யப்படும் தேசிய சேமிப்புப் பத்திரம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். தேசிய ஓய்வூதிய திட்டம். வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் (இஎல்எஸ்எஸ்)

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்

பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதன்முறையாக முதலீடு செய்பவர்களுக்கு முதலீட்டுத் தொகையிலிருந்து 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை வரிச்சலுகை கிடைக்கும். 80சி முதலீடு தவிர, கூடுதலாக இந்தச் சலுகை தரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வரிச்சலுகை பெற ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

வீட்டு வாடகை

தற்போது குடியிருந்துவரும் வாடகை வீட்டுக்குத் தருகிற வாடகை தொகைக்கும் வரிவிலக்கு சலுகை உள்ளது.

ஆனால் மொத்த சம்பளத்திலிருந்து 10 சதவீத தொகை வாடகையாகத் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நகரம், நிறுவனத்திலிருந்து பெறும் வீட்டு வாடகை படியை பொறுத்துக் இதற்கான சலுகை கிடைக்கும்.

கல்விக் கடன்

மகன் அல்லது மகளுக்காக வாங்கிய உயர் கல்வி கடனுக்கான திரும்ப செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகை உண்டு. மேலும் கடனைக் கட்டத் தொடங்கி, எட்டு ஆண்டு களுக்கு மட்டுமே இந்த வரி சலுகை கிடைக்கும்.

மருத்துவச் செலவுகள்

வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1 லட்சம்) வரை வருமான வரி சலுகை கிடைக்கும். அதுபோல எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவுகளுக்கு அதிக பட்சமாக ரூ.40,000 வரை வரிச் சலுகை கிடைக்கும். மூத்த குடி மக்களுக்கு ரூ.60,000 வரை சலுகை கிடைக்கும்.

80சி முதலீட்டு வாய்ப்புகள்

இஎல்எஸ்எஸ் (ELSS Equity Linked Savings Schemes) அல்லது டாக்ஸ் சேவர் மியூச்சுவல் ஃபண்டுகள்.

மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் ரிட்டையர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் திட்டங்கள்

என்பிஎஸ் (NPS National Pension System)

இபிஎஃப் (EPF Employee Provident Fund)

பிபிஎஃப் (PPF Public Provident Fund)

வங்கி மற்றும் என்ஹெச்பி (NHB National Housing Bank) டெபாசிட்டுகள்

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்

a. யூலிப் திட்டங்கள்

b. எண்டோவ்மென்ட் திட்டங்கள்

c. பென்ஷன் திட்டங்கள்

அஞ்சலகச் சேமிப்புகள்

a. 5 வருட டைம் டெபாசிட்

b. சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்

c. என்எஸ்சி (NSC National Savings Certificate)

நீரை மகேந்திரன்

maheswaran.p@thehindutamil.co.in

WINNER LIST 1975-201

Cricket World Cup 2015 Match Schedule – World Cup 2015 POOL

ICC Cricket World Cup 2015 Schedule in IST: Time Table, Fixture & Venue Details of all WC 2015 Matches


WC-2015-Schedule-in-IST-Time-Table-&-Venue-Details1



இந்தியா-பாக். போட்டி: விமான நிறுவனங்கள் கட்டண கொள்ளை!



உலகக் கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளின் மோதலுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. விற்பனையான 50 ஆயிரம் டிக்கெட்டுகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை இந்தியர்கள் வாங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் பிற நகரங்களான சிட்னி, மெல்பர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களை சேர்ந்தவர்கள்

இந்த போட்டியையொட்டி அடிலெய்ட் நகரத்தில் ஆயிரக்கணக்கான ஹோட்டல் அறைகள் நிறைந்து விட்டன. ஞாயிற்றுக்கிழமை வேறு இந்த ஆட்டம் நடைபெறுவதால், வார விடுமுறையை கழிப்பவர்களும் ஹோட்டல் அறைகளை புக் செய்துள்ளனர். இதனால் போட்டியை காண டிக்கெட் வாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடிலெய்டில் நகரில் ஹோட்டல் அறைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அடிலெய்ட் அருகில் உள்ள குட்டி குட்டி நகரங்களிலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹோட்டல்கள் அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன. சாதாரணமாக 100 ஆஸ்திரேலிய டாலருக்கு கிடைக்கும் அறைகள் இப்போது 250 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு புக் செய்யப்படுகிறதாம்.

அதோடு இந்த தருணத்தை பயன்படுத்தி விமான நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. சாதாரணமாக சிட்னியில் இருந்து அடிலெய்டுக்கு 300 ஆஸ்திரேலிய டாலர்களில் சென்று விடலாம். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முன்னிட்டு 800 ஆஸ்திரேலிய டாலர்கள் என விமான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் டிக்கெட் வாங்கிய போதே அறைகள் மற்றும் விமான டிக்கெட்டுகளை புக் செய்யத் தவறிய ரசிகர்கள் இப்போது தவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 4 பேர் அடங்கிய இந்திய குடும்பம் இந்த போட்டியை காண வேண்டுமென்றால், குறைந்தது 5 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை செலவு செய்ய வேண்டிய கட்டயாத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த எதிர்பாராத விலைஉயர்வு காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண டிக்கெட்டுகளை வாங்கிய 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள், போட்டியை காண அடிலெய்டுக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

NEWS TO DAY 29.04.2026