Friday, February 13, 2015

தில்லி கற்றுத் தரும் பாடம்

Dinamani

தில்லியில் கத்தியின்றி ரத்தமின்றி நடந்த யுத்தத்தில் மத்தியில் ஆண்டவரையும் ஆள்பவரையும் மக்கள் தூக்கி கடாசிவிட்டு புதிய கட்சிக்கு மகத்தான வெற்றியை தில்லி மக்கள் அளித்துள்ளனர்.

வென்றவருக்கு வாழ்த்து சொல்லும் வேளையில், தோற்றவர்கள் கற்க வேண்டிய பாடம் என்ன என்றும் சிந்திப்போம்.

ஐ.ஐ.டி. மாணவரான அரவிந்த் கேஜரிவால் வண்ணக் கனவுகளுடன் இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதிய இந்தியர்.

வருவாய்த் துறை பணியில் பயிற்சி பெற்று, சக பணியாளரை மணந்து, வேலையை துறந்து அண்ணா ஹசாரேயின் இயக்கத்தில் இணைந்தார்.

அரவிந்துக்கும் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவுக்கும் ஓர் ஒற்றுமை. அண்ணா, பெரியாரின் சீடராக பொது வாழ்க்கைக்கு வந்தார். அரவிந்த், அண்ணா ஹசாரேயின் மூலமாக வெளிச்சத்திற்கு வந்தார்.

அண்ணாவும் அரவிந்தும் படித்தவர்கள். வெறும் கொள்கை கோஷம் போட்டால் எதுவும் ஆகாது என்று தனிப்பாதையில் தலைவர் புகழ் பாடியபடியே அவர்களிடமிருந்து விலகி தனிக்கட்சி கண்டவர்கள்.

புதிய கட்சி கண்ட அண்ணா ஆட்சியைப் பிடிக்க கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆட்சியை பிடிக்கும் சாதனையை அரவிந்த் 18 மாதத்தில் செய்து காட்டினார். ஆனால், உணர்ச்சிவசப்பட்டவராக உடனே ஆட்சியைத் துறந்தார்.

அரவிந்தின் சாதனை இந்திய ஜனநாயக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கது.

என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர். போல அவருக்குத் திரைப்படக் கவர்ச்சியோ, ரசிகர் பட்டாளமோ கிடையாது. அரவிந்தின் குறுகிய கால வளர்ச்சி, மாற்றத்தை விரும்பும் இந்திய மக்களின் எண்ணங்களுக்கான வடிகால். அவர் மோடிக்கு முன்பே கையில் துடைப்பத்துடன் ஊரைச் சுத்தம் செய்ய கிளம்பியவர்.

பா.ஜ.க.வின் படுதோல்விக்கு கிரண் பேடி ஒரு முக்கியக் காரணம். அரசியல் என்பது விரும்பும் போது உள்ளே வந்து, விரும்பும் போது வெளியே செல்லும் விளையாட்டு மைதானம் அல்ல.

லட்சிய வெறியுடன் போராட வேண்டிய களம் அரசியல். லட்சியங்களில் ஒன்று ஆட்சியைப் பிடிப்பது. அரவிந்த், அண்ணா ஹசாரேவை விட்டு வெளியே வந்து தனிக்கட்சி கண்டபோது அதை விமர்சித்தவர் கிரண் பேடி.

அரவிந்த் முதல்வராவார் என்று கிரண் பேடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ஒரு முன்னாள் தில்லி காவல் துறை அதிகாரிக்கு தில்லி முதல்வரின் அதிகாரம் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

கிரண் பேடி கொள்கையில் பூத்த மலர் அல்ல. அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் விரும்புபவர். அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை ஆட்சியாளரிடம் அடகு வைத்த போது இவர் தனது அதிகாரங்களை உபயோகித்தார். மீடியாவின் துணையுடன் இவர் புகழ் ஏறத் தொடங்கியது.

கிரண் பேடி மலை மாநிலத்திற்கு மாற்றப்பட்டபோது, விதிகளை மீறி தன் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டார்.

மக்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் தாங்க முடியாமல் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் புகுந்து தப்பி வந்ததாக அவர் தன் புத்தகத்தில் எழுதியிருப்பதை மறக்க முடியுமா?

கிரண் பேடியின் லஞ்ச எதிர்ப்புக் கொள்கை, பொறாமையால் அரவிந்த் கேஜரிவால் எதிர்ப்புக் கொள்கையாக மாறியது. இதைப் புரிந்து கொண்ட பா.ஜ.க.வினர் அவரை தூண்டில் போட்டு பிடித்தனர்.

காலங்காலமாக கட்சியில் இருந்தவர்களை ஒதுக்கி விட்டு கிரண் பேடியின் பத்திரிகை புகழை மட்டும் கணக்கெடுத்து செயல்பட்டதன் விளைவு பா.ஜ.க.வின் பலம் சட்டப்பேரவையில் மூன்றாக குறைந்துவிட்டது.

அரசியல்வாதிகள் தில்லி தேர்தலில் படிக்க வேண்டிய பாடம், நம்பிக்கையூட்டும் சிறிய கட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் ஆதரவுதான். அரவிந்த் பதவியை ராஜிநாமா செய்தபோது சிலர் பா.ஜ.க.விற்கு தாவினார்கள். ஆனால், மாற்றத்தை விரும்பிய மக்கள் அரவிந்தைத் தூக்கிப் பிடித்துள்ளனர்.

தில்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி யில் ஊழல் மிகுந்திருக்கிறது. பேருந்துப் போக்குவரத்து மோசமாக இருக்கிறது. இவற்றைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரவிந்துக்கு உள்ளது. ஆட்சியைப் பிடிப்பது வேறு, ஆளுவது வேறு.

அரவிந்த் கேஜரிவால் இந்திய ஜனநாயகத்தின் புதிய வரவு. மோடியைப் போலவே கனவுகளை விற்று ஆட்சிக்கு வந்தவர். ஆட்சிப் படுக்கை என்பது ரோஜா மலர்களால் ஆனது அல்ல.

உச்சநீதிமன்றமும், ஊடகங்களும், மக்களும் விழிப்போடு இருப்பது நிஜம். இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் துவங்கி விட்டன. இதை அரசியல்வாதிகள் புரிந்த கொள்ளாவிட்டாலும் மக்கள் புரிந்து கொண்டனர்.

ஷீலா தீட்ஷித்தின் மெட்ரோ ரயிலையும் அகலமான சாலைகளையும் மேம்பாலங்களையும் சுரேஷ் கல்மாடியின் தேசிய அவமானமான ஆசிய விளையாட்டு ஊழல் அடித்து நொறுக்கி விட்டது.

திடீர் கிரண் பேடிகளால் பேரும், புகழும், ஓட்டுகளும் கொண்டு வர முடியாது. தில்லி போன்ற படித்தவர்கள் நிறைந்த பகுதியில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

இதுதான் தில்லி கற்றுத் தரும் பாடம்.

இருளும் ஒளியும்!

Dinamani

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 2013-14 நிதியாண்டின் இழப்பு ரூ.13,985 கோடி என்பது மிகப்பெரும் மின் அதிர்வைத் தந்தாலும், இது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு ஆட்சிகளிலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நட்டம் என்பதுதான் உண்மை.

"எங்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வளவு நட்டம் இல்லை' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் நட்டம் அதிகமாக இருக்கிறது என்று அ.தி.மு.க.வை மட்டும் மறைமுகமாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டாலும், மின் வாரியத்தில் அதிகரித்து வரும் நட்டத்தை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியவில்லை என்பதுதான் நிஜம். வரவு எட்டணா, செலவு பத்தணா என்றால் ஆண்டுதோறும் இந்த நட்டம் கூடத்தான் செய்யும். இதில் அ.தி.மு.க.வை மட்டும் குறை சொல்வது, அரசியல் சாடலுக்கு மட்டுமே உதவலாம்.

மின் வாரியத்திற்கு மின் கட்டணத்தின் மூலம் (2013-14 நிதியாண்டில்) கிடைக்கும் நேரடி வருவாய் ரூ.29,536 கோடி மட்டுமே. இது நீங்கலாக, இலவச மின்சார மானியத் தொகை மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தாமல் சலுகை அளிப்பதற்கான ஏற்பளிப்புத் தொகையாக ரூ.4,985 கோடியை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், இந்த மானியத் தொகையில் ரூ.4,622 கோடி தொழிலாளர்களின் ஊதியமாகப் போய்விடுகிறது.

மின்சாரத்தை வெளிமாநிலங்களிலிருந்தும், அரசு மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தனியாரிடமிருந்தும் வாங்குவதற்காக ரூ.30,529 கோடி, மாநிலத்தில் அரசு மின் நிலையங்களில் மின் உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவுகள் ரூ.7,613 கோடி, ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கான வட்டி ரூ.7,933 கோடி ஆகியவற்றை மின் வாரியம் தனக்கு கிடைக்கும் நேரடி மின் கட்டண வருவாய் ரூ.29,536 கோடியைக் கொண்டு ஈடு செய்வது எப்படி சாத்தியம்?

2003-04 நிதியாண்டில் தமிழகத்தின் மின்சாரத் தேவை 39,240 மில்லியன் யூனிட்டு. மின்சாரம் வாங்கிய செலவு ரூ.6,664 கோடி. மின் கட்டணம் மூலம் கிடைத்த வருவாய் போக, கூடுதல் பற்றாக்குறை அல்லது நட்டம் ரூ.1,110 கோடி. 2013-14 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 91,642 மில்லியன் யூனிட்டு. தேவை சுமார் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால்தான் நட்டம் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. தற்போதைய தேவையாகிய 91,942 மில்லியன் யூனிட் மின்சாரத்தில் 37% (அதாவது 34,253 மில்லியன் யூனிட்) தமிழகத்திலும், 33% (அதாவது 30,534 மில்லியன் யூனிட்) மத்திய தொகுப்பிலிருந்தும் பெறப்படுகின்றன. தனியாரிடம் வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 3,050 மில்லியன் யூனிட் மட்டுமே. இதுவும்கூட, பல நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் முந்தைய அரசுகளால் போடப்பட்டவை. அப்படியே தமிழக அரசு "திட்டமிட்டு' கூடுதல் விலைக்கு வாங்கியிருந்தாலும்கூட எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல இத்தனை ஆயிரம் கோடி நட்டத்துக்குக் காரணம் அதுவல்ல.

கடந்த பத்து ஆண்டுகளில் மின் உற்பத்திச் செலவுக்கு இணையாக மின் கட்டணத்தை உயர்த்த முயன்றபோதெல்லாம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போதும்கூட, மின் கட்டண உயர்வு தொடர்பான மக்கள் ஆலோசனைக் கூட்டங்களில், மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பதுதான் கோரிக்கையாக இருக்கிறது. மக்களின் கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து, ஆளும் கட்சி, மின் கட்டணத்தின் கூடுதல் தொகையை தானே மின் வாரியத்துக்கு வழங்கி நிலைமையைச் சமாளிக்கிறது.

3,000 மில்லியன் யூனிட்டுகளை தனியாரிடமிருந்து வாங்குவதைக் குறைத்து கொண்டால், மாநில உற்பத்தி, மத்திய தொகுப்பைக் கொண்டு மின்சாரம் வழங்க முடியும். அவ்வாறு செய்தால் மின் தடையைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின் தடை என்றாலும், எதிர்க்கட்சிகள் "இருண்ட தமிழகம்' என்று விமர்சிக்கத் தொடங்கிவிடும். "தமிழக மக்கள் இரண்டு மணி நேர மின் தடையைப் பொறுத்துக்கொள்வார்கள்; அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டியதில்லை' என்று தமிழக அரசிடம் சொல்லும் பொறுப்புணர்வு எந்தக் கட்சிக்கும் கிடையாது.

தடையில்லா மின்சாரம் வேண்டும்; மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வேண்டும்; ஆனால், மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. விவசாயத்துக்கும் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் வேண்டும்; ஆனால் மீட்டர் பொருத்தக் கூடாது. இவைதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் மின் வாரியத்தின் நட்டம் குறையாது.

தொழில் துறைக்கு தனியாக மின் கம்பி, வீட்டு இணைப்புகளுக்கு தனியாக மின் கம்பி என்று அமைக்கப்படாமல், வீடுகளுக்கு பகலில் இரண்டு மணி நேரம் மின் தடை ஒரு பொருட்டல்ல என்கிற மக்கள் மனநிலை உருவாகாமல், விவசாயத்துக்கு இலவச மின்சாரப் பயன்பாட்டை மீட்டர் பொருத்தி அளவிடவும், நிலக்கரி விலை உயர்வுக்கு ஏற்ப மாறுபடும் மின் உற்பத்திச் செலவுகளுக்கு ஏற்ப மின் கட்டணத்தைச் செலுத்தும் நடைமுறை உருவாகாமல், மின்சார வழித்தட இழப்பு 18% ஆக இருப்பதை ஒற்றை இலக்கமாக குறைக்காமல், மின் வாரியம், மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் விபத்து, நட்டங்களுக்கு அதிகாரிகளையும் மின் வாரிய ஊழியர்களையும் பொறுப்பேற்கச் செய்யாமல் மின் வாரியத்தின் நட்டத்தை போக்குதல் என்பது சாத்தியமல்ல.

பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனத் துணிவும் மக்கள் மன்றத்தில் அதைப் புரிய வைக்கும் சாதுர்யமும் இருந்தால் மட்டுமே மின் வாரிய நட்டத்தை குறைக்கவோ நீக்கவோ முடியும்!

குழந்தையுடன் 'லிப்ட்' கேட்டார் பெண்;காரை நிறுத்தியவருக்கு 'எல்லாம் போச்!'

வேலுார்:இரவு நேரத்தில், கைக்குழந்தையுடன் பெண், 'லிப்ட்' கேட்டதால், பரிதாபப்பட்டு காரை நிறுத்தியவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி, பணம் மற்றும் மொபைல்போன்களை பறித்து ஓட்டம் பிடித்தது; இவர்களுடன் சேர்ந்து, பெண்ணும் ஓட்டம் பிடித்தார்.

வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர், வினோத்குமார், 27; பூ வியாபாரி. இவர், நேற்று முன்தினம் வேலுாரில் இருந்து அணைக்கட்டு வழியாக ஆலங்காயத்துக்கு, காரில் புறப்பட்டார். இரவு, 9:45 மணிக்கு, ஆசனாம்பட்டு அடுத்த குறவன்கொட்டாய் அருகே உள்ள மலைப்பகுதியில், கைக்குழந்தையுடன் நின்றிருந்த பெண், 'லிப்ட்' தருமாறு சைகை காட்டினார்.

பரிதாபப்பட்டு காரை நிறுத்திய வினோத்குமார், கீழே இறங்கியது தான் தாமதம்; உடனே, ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை சூழ்ந்து, பணம், பொருட்களை கேட்டு மிரட்டியது.

வினோத்குமார் மறுத்ததால், சரமாரியாக அடித்து உதைத்தது.பின், அவரிடம் இருந்த மொபைல்போன்கள் மற்றும் 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து, சிறிது துாரத்தில் நிறுத்தியிருந்த வேனில் தப்பியது; 'லிப்ட்' கேட்ட பெண், குழந்தையை துாக்கிக் கொண்டு கும்பலுடன் சேர்ந்து ஓட்டம் பிடித்தார். வினோத்குமார் சத்தம் போட்டும், மலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், அவருக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. படுகாயத்துடன் மீண்டும் வேலுார் திரும்பி, வேப்பங்குப்பம் போலீசில் நள்ளிரவில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலர் தினம் நாளை கொண்டாட்டம்: கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள ரோஜாப்பூக்கள் 20 பூ அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கு விற்பனை



காதலர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் குவிக்கப்பட்டுள்ளன. 20 பூ அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காதலர் தினம்

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் வாலண்டைன் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் எதிர்ப்பையும் மீறி காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இதனால் அந்த நாட்டு ஆட்சியாளர்கள் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் காதலர்கள் மத்தியில் பாதிரியார் வாலண்டைனுக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவருடைய நினைவு நாளான பிப்ரவரி 14–ந்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் தினத்தில் காதலர்கள் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வதற்காக பல்வேறு விதமான பரிசுப்பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். அதில் முக்கிய பங்கு வகிப்பது ரோஜாப்பூ.

20 பூ ரூ.160–க்கு விற்பனை

அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்காக ரோஜாப்பூக்கள் கடந்த 2 நாட்களாக குவிக்கப்பட்டுள்ளன. சாதாரண நாட்களை விட காதலர் தினத்தையொட்டி ரோஜாப்பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

பெரும்பாலான ரோஜாக்கள் ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த ரோஜாக்களில் சாதாரண ரோஜாப்பூ, தாஜ்மஹால் ரோஜாப்பூ என 2 விதமான வகைகள் இருக்கின்றன. இதில் 20 சாதாரண ரோஜாக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.160–க்கும், 20 தாஜ்மஹால் ரோஜாக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.180–க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

பூச்செண்டு கடைகளில்...

கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் தான் இதுவரை விற்பனை செய்யப்படுவதாகவும், காதலர் தினத்தன்று விலை சற்று உயர்ந்து காணப்படலாம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் அல்லாது, சென்னை நகரில் ஆங்காங்கே உள்ள பூச்செண்டு விற்பனை கடைகளிலும் பல்வேறு வண்ணங்களில் உயர்ரக ரோஜாப்பூக்கள் வைக்கப்பட்டுள்ளன. விற்பனை கடைகளில் உள்ள தொழிலாளர்களின் கைவண்ணங்களில் வித்தியாசமாக ரோஜாப்பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் மேலும் 50 பஸ்களின் எண்கள் மாற்றம் மாநகர போக்குவரத்து கழகம் தகவல்



சென்னை மாநகரில் மேலும் 50 பஸ்களுக்கு வழித்தட எண்கள் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன.

புதிய வழித்தட எண்கள்

மாநகரில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு ஏற்படும் குழப்பத்தை போக்க மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே 15 வழித்தட எண்களை மாற்றியது. இதனைத் தொடர்ந்து நேற்று 50 வழித்தட எண்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதில் பிராட்வேயில் இருந்து வடபழனி, அய்யப்பன்தாங்கல், சாலிகிராமம் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் எண் 17–ல் இருந்து 26 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேடு, கிண்டி, அடையாறு உட்பட மாநகரில் உள்ள அனைத்து டிப்போக்களில் உள்ள பஸ் வழித்தட எண்களும் படிப்படியாக மாற்றப்பட இருக்கிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ்கள் புறப்படும் இடம், சேரும் இடம், பழைய எண் மற்றும் புதிய எண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

--–

புறப்படும் இடம் சேரும் இடம் பழைய எண் புதிய எண்

--–

பிராட்வே அய்யப்பன்தாங்கல் 17எம் 26

பிராட்வே வடபழனி 17எம் கட் 26 கட்

பிராட்வே சாலிகிராமம் 17 எம் எக்ஸ்டன் 26 எக்ஸ்டன்

வேளச்சேரி தாம்பரம் மேற்கு எம்.21 51

வேளச்சேரி மேடவாக்கம் சந்திப்பு எம் 21 கட் 51 கட்

பிராட்வே திருமழிசை 153 53ஏ

பிராட்வே ஸ்ரீபெரும்புதூர் 553 53 பி

பிராட்வே கே.கண்ணதாசன் நகர் 7ஜி 64 கே

பிராட்வே கொடுங்கையூர் பார்வதிநகர் 7ஜி எக்ஸ்டன் 64 கே எக்ஸ்டன்

கோயம்பேடு மார்க்கெட்– தாம்பரம் எம் 70 சி 70 சி

அம்பத்தூர் ஐ.இ கிண்டி டி.வி.கே.ஐ.இ எம். 70 வி டி 70 கட்

ஆவடி சி.எம்.பி.டி. எம். 70 ஏ 77

சி.எம்.பி.டி, அய்யப்பாக்கம் 20 ஜெ 77 ஏ

வேங்கடாசலம் நகர் சி.எம்.பி.டி. எம் 70 ஏ கட் 77 கட்

கோயம்பேடு மார்க்கெட் புழல் 62 டி 77 டி

சி.எம்.பி.டி, கன்னியம்மன் நகர் 61 மே எக்ஸ்டன் 77 இ

ஜெ.ஜெ.நகர் மேற்கு கிண்டி டிவிகே ஐ.இ. ஜெ 70 77 ஜெ

சி.எம்.பி.டி. கருக்கு 20 எச் 77 கே

சி.எம்.பி.டி, கருக்கு எம் 70 எல் 77 கே

கோயம்பேடு மார்க்கெட் மதனகுப்பம் 62 இ 77 எம்

கோயம்பேடு மார்க்கெட் பூச்சி ஆத்திபேடு 61 பி கட் 77 பி

சி.எம்.பி.டி. வேப்பம்பட்டு இ.நகர் எம் 70 இ 77 வி

சி.எம்.பி.டி. கோயம்பாக்கம் 70 இ 77 வி எக்ஸ்டன்

திருவான்மியூர் தாம்பரம் ஏ 21 91

திருவான்மியூர் தாம்பரம் ஏ 21 ஏசி 91 ஏசி

திருவான்மியூர் கூடுவாஞ்சேரி வி 21 91 ஜி

திருவான்மியூர் வண்டலூர் மிருகக்காட்சிசாலை ஏ 21 வி 91 வி

திருவான்மியூர் தாம்பரம் கிழக்கு டி 51 95

சோழிங்கநல்லூர் தாம்பரம் சி 51 கட் 97 கட்

அடையார் பி.எஸ் தாம்பரம் மேற்கு சி 51 97

பிராட்வே கேளம்பாக்கம்/ சிறுசேரி 21 எச் 102/102 எஸ்

பிராட்வே செம்மாஞ்சேரி எஸ்சிபி எச் 21 102 சி

பிராட்வே கண்ணகிநகர் எஸ்சிபி டி 21 102 கே

பிராட்வே ஒட்டியம்பாக்கம் சி 21 102 எம்

பிராட்வே கோவளம் பிபி19 எக்ஸ்டன் 109

திருவான்மியூர் கோவளம் பிபி19 கட் 109 கட்

பிராட்வே ஈஞ்சம்பாக்கம் பிபி19 ஜி.எஸ். 109 சி

தாம்பரம் திருவேற்காடு 170 111

ரெட்ஹில்ஸ் கிண்டி டிவிகே ஐ.இ. சி70 113

கிண்டி டி.வி.கே. ஐ.இ பாடியநல்லூர் சி70 எக்ஸ்டன் 113 எக்ஸ்டன்

பிராட்வே ஆவடி/அரக்கம்பாக்கம் 61 பி 120 ஏ

பிராட்வே ஆவடி/கீழ்கொண்டையூர் 61 இ 120 இ

பிராட்வே கதவூர் 61 டி 120 கே

பிராட்வே ஆவடி/ கீழ்கொண்டையூர் 61 டி எக்ஸ்டன் 120 கே எக்ஸ்டன்

சி.எம்.பி.டி பட்டாபிராம் எம் 153 153

சி.எம்.பி.டி திருவள்ளூர் 596 153 ஏ

சி.எம்.பி.டி பாண்டூர் 596 ஏ 153 பி

சி.எம்.பி.டி மேப்பூர் 53 கே 153 கே

சி.எம்.பி.டி பேரம்பாக்கம் 591 ஏ 153 பி

சி.எம்.பி.டி திருவள்ளூர் 596 பி 153 டி

அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்பட 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு தெற்கு ரெயில்வே அறிவிப்பு



அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்பட 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

கூடுதல் ரெயில் பெட்டிகள்

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இருமார்க்கமாகவும் இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16723/16724) மற்றும் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்(16713/16714) ஆகிய ரெயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இன்று முதல் கூடுதலாக இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை எழும்பூர் வழியாக கன்னியாகுமரி–நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் (வாரம் இருமுறை) திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12641) இன்று முதலும், மறுமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12642) வருகிற 16–ந்தேதியும் கூடுதலாக 1 முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எர்ணாகுளம்–நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் மில்லெனியம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில்(12645) நாளை முதலும், மறுமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12646) 17–ந்தேதியும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இருமார்க்கமாகவும்...

சென்னை சென்டிரல்–பழனி இடையே இருமார்க்கமாவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22651/22652) இன்று முதல் ஜூன் 30–ந்தேதி வரை கூடுதலாக ஒரு 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி இணைக்கப்பட உள்ளது.

சென்னை சென்டிரல்–நாகர்கோவில் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12689/12690) இன்று முதல் ஜூன் 28–ந்தேதி வரை கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி இணைக்கப்படவுள்ளது.

மங்களூர்–நாகர்கோவில் இடையே இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16649/16650) வருகிற 20–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு ‘சேர் கார்’ பெட்டி இணைக்கப்பட இருக்கிறது.

சென்னை சென்டிரல்–மைசூர் இடையே இருமார்க்கமாகவும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12007/12008) வருகிற 20–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை கூடுதலாக ஒரு ஏ.சி ‘சேர் கார்’ பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்டிரல்–காமாக்யா

சென்னை சென்டிரலில் இருந்து காமாக்யா நோக்கி செல்லும் ஏ.சி. சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (12527) நாளை மற்றும் வருகிற 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மாலை 5.20 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு காமாக்யா சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

Thursday, February 12, 2015

கார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்!





கார் வைத்திருப்பவர்கள் சர்வீஸ் பிரச்னைகளைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், இந்த எலிகள் காருக்குள் குடும்பம் நடத்தி இன்ஜினுக்குள் கும்மியடிப்பது, சாதுவான கார் உரிமையாளர்களையே கோபம் கொள்ளவைத்துவிடும்.

எலிகளால் வெறும் சர்வீஸ் செலவு மட்டுமில்லை; வயர்களைக் குதறி, கனெக்ஷன்களை மாற்றி விடுவதால், சில நேரங்களில் கார்கள் தீப்பிடிக்கும் வாய்ப்புகூட இருக்கிறது.

பொதுவாக, வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய பிரச்னையாக இருப்பது எலிகள்தான். காரணம் - கார்களின் பாடி சீலிங்குக்காகத் தயாரிக்கப்படும் பசையில் உள்ள ஒருவித கெமிக்கல் வாசனைக்கு, எலிகள் அடிமை. அந்தப் பசையின் வாடைக்கு வந்துவிடும் எலிகளால் பெரிய தலைவலி.

என்னதான் கார் பார்க்கிங்கோடு புது வீடு வாங்கி சேஃப்டியாக காரை நிறுத்தினாலும், லூட்டியாக வந்து உட்காரும் எலிகளை எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்...

1. எலிகளுக்குக் கடுப்பைக் கிளப்பக் கூடியவற்றில் முக்கியமான ஒரு அம்சம் - மிளகு. மிளகைப் பொடி செய்து பேனெட்டுக்குள் தூவி விடுங்கள். ‘மிளகு மிளகு... விலகு விலகு’ என்று எலிகள் அலர்ஜியாகப் பாடியபடியே ஓட்டம் எடுத்துவிடும். ஆனால், கார் ஓட்டி இன்ஜின் சூடாகும்போது, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டதுபோல் ஒரு வாடை வருவதைத் தடுக்க முடியாது.

2. நாட்டுப் புகையிலை என்றாலும் எலிகளுக்கு அலர்ஜியான விஷயம். புகையிலையை ஆங்காங்கே கட்டி அல்லது ஒட்டிவிடுங்கள். புகையிலை வாசனைக்கு எலி அண்டாது.

3. நாப்தலின் உருண்டைகளுக்கு, பூச்சிகள்கூட கிட்ட வராது. பீரோவில் கரப்பான் மற்றும் பூச்சிகளிடமிருந்து உடைகளைப் பாதுகாக்க நாப்தலின் உருண்டைகளை வைத்திருப்பீர்களே... அதில் நான்கைந்து உருண்டைகளை இன்ஜின் பகுதியில் வைத்து விடுங்கள். இதுவும் நல்ல ஐடியா.


5. கொசுக்களை டார்ச்சர் பண்ண அல்ட்ராசோனிக் சப்தம் கொண்ட சின்ன மிஷின் இருப்பதைப்போல், எலிகளுக்கும் எரிச்சல் தரக் கூடிய இசை உண்டு. அமெரிக்கத் தயாரிப்பான இந்த மெஷின் சென்னை ஜி.பி. ரோட்டில் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை இன்ஜின் பக்கத்தில் வைத்து, இரவு முழுவதும் ஓட விட்டால், எலிகள் நிச்சயம் அண்டாது. ஆனால், இந்த இசை... நேரம் போகப் போக, மற்றவர்களுக்கும் எரிச்சல் தர வாய்ப்பு உண்டு.

6. கொஞ்சம் டீஸன்ட் ஆக எலிகளை எலிமினேட் செய்ய விரும்புபவர்கள், இதற்கென விற்கும் எலி வலைகளை வாங்கி பானெட் பகுதியைச் சுற்றிப் பொருத்திக் கொள்ளலாம். இவை சர்வீஸ் செய்யும்போது எளிதாகக் கழட்டி மாட்டும் வகையில் கிடைக்கிறது.

7. எலிகளை விரட்ட மூக்குப் பொடியும் பெஸ்ட் ஆப்ஷன். மூக்குப் பொடியையும் தூவி எலிகளை விரட்டலாம்.

- தமிழ்

NEWS TODAY 11.06.2026