Saturday, May 30, 2015

எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?:கடந்த ஆண்டை விட 0.5 குறையும்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டை விட, 0.5 வரை குறையும் என்பதால், கடந்த ஆண்டில், கடைசி கட்டத்தில் வாய்ப்பை இழந்த பலரும், புதிதாக இணைய வாய்ப்பு வருகிறது. தமிழகத்தில், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி, 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

இதில், மாநிலத்திற்கு, 2,172 எம்.பி.பி.எஸ்., - 85 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. சுய நிதி கல்லூரிகளில் இருந்து, 600 இடங்கள் வரை கிடைக்கும். விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.எம்.பி.பி.எஸ்., படிப்பை பொறுத்தவரை, இயற்பியல் - 50; வேதியியல் - 50; உயிரியல் - 100 என, மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு, 'கட் - ஆப்' தயாரிக்கப்படும்.
*இயற்பியல் மற்றும் வேதியியலில் மாணவர் பெற்ற மதிப்பெண்களில், 25 சதவீதம், 'கட் - ஆப்' ஆக சேரும். (இயற்பியல் - 200 என்றால், 50; வேதியியல் - 198 என்றால், 49.5)
*தாவரவியல், விலங்கியலும் சேர்ந்து, 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும். மொத்த மதிப்பெண்; 400. மாணவர் பெற்ற மதிப்பெண்ணில், 25 சதவீதம் சேரும் (தாவரவியல் - 200; விலங்கியல் - 190; மொத்தம்- 390. இதில், 25 சதவீதம் - 97.5) 
*ஒரு மாணவர் இயற்பியல் - 200 என்றால், 50.00; வேதியியல் - 198 என்றால், 49.50; தாவரவியல் - 200; விலங்கியல் - 195 என, இரண்டும் சேர்த்து, 395 என்றால், 98.75 என சேர்ந்து, மொத்த, 'கட்-ஆப்' - 198.25 என கணக்கிடப்படும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், கடந்த ஆண்டை விட, 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், 'கட் - ஆப்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட, 0.5 வரை குறையும். இதனால், கடந்த ஆண்டு, 'கவுன்சிலிங்' சென்று, கடைசி நேரத்தில், எம்.பி.பி.எஸ்., சேர முடியாதோர், இந்த ஆண்டில் சேர வாய்ப்பு உள்ளது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

- நமது நிருபர் -

இன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்! எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்

அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.


மே, 27ம் தேதியுடன், 59 மையங்களில் விண்ணப்ப விற்பனை முடிந்தது. நேற்று மாலை, 5:00 மணியுடன் அண்ணா பல்கலையிலும் விண்ணப்ப விற்பனை முடிந்தது. நேற்று மாலை, கடைசி நேர நிலவரப்படி, அச்சடிக்கப்பட்ட, 2.40 லட்சம் விண்ணப்பங்களில், 1.90 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, நேற்று மாலை, 5:00 மணியுடன் முடிந்தது. 1.40 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.




நேற்று கடைசி நாளில், தபாலில் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் இன்றும், நாளையும் வரும் நிலையில், அவற்றையும் அண்ணா பல்கலை ஏற்றுக் கொள்ளும் என்று அவர் கூறினார். நேற்று முன்தினம் மட்டும் தபாலில், 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், நாளைக்குள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, அண்ணா பல்கலை கவுன்சிலிங் வழியிலான மாணவர் சேர்க்கைக்கு, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. 1.75 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. மொத்தமுள்ள, இரண்டு லட்சத்து, 5,000 இடங்களில், கடந்த ஆண்டு, 40 ஆயிரம் இடங்கள் காலியாக

இருந்தன.

- நமது நிருபர் -

JP University VC gets anticipatory bail


CHHAPRA: Patna high court on Thursday granted anticipatory bail to the vice chancellor (VC) of J P University (JPU), Chhapra, D K Gupta in alleged purchase of blank answer books worth several lakhs without following the standard procedures. Earlier, the vigilance court at Muzaffarpur had rejected his anticipatory bail petition.

It may be mentioned here that besides the VC, five more persons and an agency figure in this vigilance case. They include finance officer (FO) Sonelal Sahni, financial advisor (FA) Pyare Mohan Sahai, supplier of the answer books Chandrakala Universal Pvt.Ltd of Allahabad, Prof Anita, Prof S K Verma and Prof. A K Tiwari, the last three are members of adhoc purchase committee constituted by the VC. While the FO was nabbed by the vigilance on May 28 from his Patna residence, others are evading arrest and trying for anticipatory bail.

The high court, after hearing the counsel of the petitioner, observed, "The FIR only talks of abuse of power, if any, and alleged wrongful gain by not following the procedures established by the law. This is an application for bail in anticipation of arrest. In the manner in which this application is sought to be opposed by the informant is indicative of the fact that the informant is more interested in getting the petitioner arrested to humiliate him rather than seek justice."

"In facts and circumstances of the case, in the event of arrest or surrender within four weeks from Friday, the petitioner D K Gupta shall be released on bail on furnishing bail bonds of Rs10,000 with two sureties of like amount each to the satisfaction of learned special judge vigilance, North Bihar, Muzaffarpur," the HC said.

JPU registrar Prof R P Bablo said, "The informer in the case, Biswajeet Singh Chandel, had been pursuing two courses-Ph D in physics and B.Ed simultaneously which is against the University Act. The VC had cancelled both his admissions."

Dental college students organize flash mob against tobacco

NAVI MUMBAI: The students and interns of MGM Dental College and Hospital, Kamothe, held a vibrant flash mob and also performed skits to spread awareness about the harmful effects of tobacco at Vashi on Friday evening.

The event was organised ahead of the World No Tobacco Day, which is on May 31. Veteran cancer specialist, Dr Kanchan Janardhan of Maharashtra Cancer Warriors also addressed the public on the occasion.

The dean of MGM Dental College in Kamothe, Dr Sabita Ram, said: ''In the last one year, we had as many as 52 oral cancer detections, caused due to tobacco usage. We are therefore constantly advising patients and youngsters to stop consuming tobacco products.''

At the public demonstration held outside Inorbit mall in Vashi, the dental college students displayed posters like `Don't be a Fool, Smoking is not Cool' and `Say Hello to Life; To Hell with Tobacco' among others.

Medical experts also said that a single tobacco leaf has as many as 27 carcinogen substances in it. Hence, it is best to give up tobacco consumption.

World Health Organisation data states that there is 1 death due to tobacco use every six seconds around the globe. More than 6 lakh non-smokers die each year from second hand smoking.

UGC looks to appoint overseas faculty in varsities

KOLHAPUR: Following the Prime Minister's 'Make in India' appeal, University Grants Commission (UGC) is now looking to appoint overseas teaching faculties in central and state universities across the country to push for its 'Teach in India' initiative.

Jaspal Sandhu, UGC secretary, in his May 28 official media circular stated that the faculty recharge program would provide a vehicle to bring back talent, as reversal of brain drain, into the country. "The program has potential of meeting with shortage of faculties in critical areas besides providing motivation to 'Teach in India' with the faculties' overseas experience," it added.

The programme aims to recruit highly-motivated faculty members working overseas, with a flair for research in inter-disciplinary and frontier areas of science, at national level. "The UGC is planning to induct as many as 1,000 such faculty members over the next five years," the circular stated.

"This system is going to give a fillip to quality teaching and research in the university system at a time when we have severe shortage of teaching faculty," Sandhu said, adding that the present initiative is in conformity with the vision of the Minister of Human Resource Development Smriti Irani to promote the concept of 'Teach in India'.

The UGC has recently appointed 102 new faculties from the research areas of physics, mathematical sciences, chemical sciences, biological sciences, engineering sciences and earth sciences, he said.

It has to be noted that this is a second circular within a month from the UGC asking universities and colleges to involve the scholars, policymakers, skilled professionals and the practitioners in the academics as faculty members. The last circular had come on April 27.

The Shivaji University, Kolhapur too has asked its 282 affiliated colleges to look for the adjunct faculties.

Notably, the UGC had started the scheme of appointing the adjunct/visiting faculty from 2009 across the universities in the country.

According to its September 2009 circular, apart from overseas academicians and researchers, the professional and experts from the institutions such as research organizations supported by the Atomic energy commission (AEC), Indian Council of Agriculture research (ICAR), and Council of Scientific and Industrial Research (CSIR) should be involved in the programme.

4G services at 3G prices for Airtel customers

Telecom firm Bharti Airtel will be providing 4G services at 3G prices to its customers in Chennai, George Mathen, Airtel’s Hub CEO – Kerala and Tamil Nadu announced here.

On May 14, Airtel had launched 4G trials with a complimentary upgrade for its customers. This, the company claims, has taken off well and evoked good response from its clients.

“The pilot beta version that we introduced was sufficient for us to get a pan-Chennai experience. The 4G adoption and scale up in the last 14 days has been healthy,” Mr. Mathen said.

In a phased manner, the firm wants to extend 4G services to Coimbatore, Tiruchi, Madurai and Vellore. Airtel has a customer base of 40 lakh users in Chennai and 1.5 crore in Tamil Nadu. The operator did not want to disclose the 3G customer base in Chennai but said that nationally, its 3G customer base is about 19. 5 million as on March 31, 2015. He admitted that there were complaints of certain data blind spots in Chennai, but with 4G infrastructure, systems have been upgraded.

In April 2012, the telecom operator had launched the country’s first 4G services in Kolkata.

Friday, May 29, 2015

ட்விட்டர் கேள்வி-பதில்

பாஸ்போர்ட் தொடர்பான உங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி க.பாலமுருகன்.






  1. என் மகனுக்கு வயது 21. இவனுக்கு பாஸ்போர்ட் எடுக்க நடைமுறைகள் என்ன?
வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளம் (http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink) மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பம் சமர்பிக்கவும். இணைய தளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி செலான் மூலமாகவோ பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன் பின் விண்ணப்பத்தாரருக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும்..

அ. இருப்பிட சான்றிதழ் (அட்ரஸ் புரூப்)
 
ஆ. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
 
இ. கல்வித் தகுதிக்கான சான்றிதழ் (10 ம் வகுப்பு  அல்லது 12 ம் வகுப்பு  அல்லது  பட்டப் படிப்புக்கான சான்றிதழ்)
 
மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்பிக்க வேண்டும், இந்த நகல்களின் அசல் ஆவணங்களையும் சரி பார்க்க  கொண்டு வர வேண்டும்.
 
2. என் வயது 69. என் மகன் இங்கிலாந்தில் செட்டிலாகிவிட்டான். அவனோடு நானும் சென்று செட்டிலாக திட்டமிட்டிருக்கிறேன். இது நாள் வரை பாஸ்போர்ட் எடுக்கவில்லை. இப்போது எனக்கு பாஸ்போர்ட் கிடைப்பது சிரமம் என்று சொல்கிறார்கள். உண்மையா?

இதில் எந்த சிரமும் இல்லை. முந்தைய கேள்விக்கான பதிலில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பம் செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 258 1800 - ஐ தொடர்பு கொள்ளவும். தமிழிலும் பதில் பெறலாம்.

3. பாஸ்போர்ட் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சொல்கிறார்கள், அதற்கான லிங்கை கொடுக்க முடியுமா?
http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink
4. நான் பாஸ்போர்ட்க்காக விண்ணப்பித்து போலீஸ் வெரிஃபிகேஷனுக்காக கடந்த 5 நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீஸ் வெரிஃபிகேஷன் எத்தனை நாட்களுக்குள் நடைபெறும்?
 
பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்களின் ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்படும். பொதுவாக 5 முதல் 10 நாட்களில் போலீஸ் வெரிஃபிகேஷன் இருக்கும்.
 
5. கடந்த மாதம் என் பாஸ்போர்ட் திருடு போய்விட்டது. போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். நான் அடுத்த மாதம் வெளிநாட்டிற்கு செல்ல இருக்கிறேன். இப்போது என்ன செய்யலாம். மீண்டும் ஒரு புதிய பாஸ்போர்ட்டை வாங்கலாமா?
 
நீங்கள் பாஸ்போர்ட் தொலைந்தற்கான போலீஸ் புகாருடன் பாஸ்போர்ட் ரீ இஸ்யூவிற்காக விண்ணப்பிக்கவும். தொலைந்த பாஸ்போர்ட் -ன் நகல் இருந்தால் இணைக்கவும். அனக்சர் எல் என்ற உறுதிமொழி பத்திரம், நோட்டரி பப்ளிக் ஒப்புதலை சமர்பிக்க வேண்டும்.
6. என் பாஸ்போர்ட் வரும் ஆகஸ்ட் மாதம் எக்ஸ்பெயரி ஆகிவிடும். அதன் பின் எப்படி புதுப்பிப்பது?
நீங்கள் எக்ஸ்பெயரி  தேதிக்கு ஒரு ஆண்டு முன்போ அல்லது எக்ஸ்பெயரி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணபிக்கலாம். பழைய பாஸ்போர்டை கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம்.
 
7. என் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். அடுத்த வாரம் அவரின் பாஸ்போர்ட் காலாவதியாக உள்ளது. என் தந்தையின் பாஸ்போர்ட்டை நான் இங்கிருந்து புதுப்பிக்க முடியுமா?
 
தங்களின் தந்தை துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம். தாங்கள் இந்தியாவில் விண்ணப்பிக்க இயலாது.
 
8. என் சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர். நான் தற்போது சென்னையில் வேலை காரணமாக செட்டிலாகிவிட்டேன். தற்போது நான் சென்னையில் இருந்து கொண்டு பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க முடியுமா? எனக்கு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை இல்லை? வோட்டர் ஐடியும் கேரளாவில் எடுத்தது தான் இருக்கிறது?
 
தாங்கள் சென்னையில் வசிப்பதால், சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவா மையத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். தங்களிடம் மற்ற இருப்பிட சான்றிதழ்கள் (பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு, வாட்டர் பில், கேஸ்பில், லேண்ட் லேன் போன் அல்லது போஸ்ட் பெயிட் பில், இன்கம் டாக்ஸ் அஸஸ்மென்ட் ஆர்டர், டிரைவிங் லைசென்ஸ், பிரபலமான மதிக்கத்தக்க வேலை செய்யும் கம்பெனியிடம் லெட்டர் ஹெட்டில் சர்டிபிகேட்) கொண்டு விண்ணப்பிக்கலாம். பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் இவைகளையும் கொண்டு விண்ணப்பிக்கவும்.
 
9. விசாவுக்கும் பாஸ்போர்ட்க்கும் என்ன வேறுபாடு?
 
பாஸ்போர்ட் பிற நாட்டிற்கு செல்வதற்கான அனுமதிச் சீட்டு. விசா என்பது அந்த நாட்டுக்கு எதற்காக செல்கிறோமோ அதற்கான அந்த நாட்டின் அனுமதிச் சீட்டு.
 
10. பாஸ்போர்ட் எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? கட்டணங்கள் என்னென்ன செலுத்த வேண்டும். அதிகபட்சம் ஒரு பாஸ்போர்ட் எத்தனை நாளைக்குள் கிடைக்கும்?
 
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.
1. இருப்பிடத்திற்கான சான்றிதழ்
2. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
3. கல்வித் தகுதிக்கான சான்றிதழ்
பாஸ்போர்ட் கட்டணம் நார்மல் பாஸ்போர்ட் 36 பக்கங்கள் கொண்டது ரூ.1500/- ஆகும். 60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட்டிற்கு ரூ.500/- கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும்
* தட்கல் - ரூ.3,500
* மைனர் - ரூ.1,000
*  PCC - ரூ.500/
* டேமேஜ்  / லாஸ்ட் (Damage / lost) - ரூ. 3,000
போலீஸ் விசாரணை முடித்து, எல்லா ஆவணங்களும் சரியாக இருந்து, போலீஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்ட மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
 
11. பாஸ்போர்ட் சேவை மையங்களின் சேவை குறித்து விளக்கி சொல்லுங்களேன்?
 
வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட்களை வழங்க, 77 பாஸ்போர்ட் சேவா மையங்களை (PSK) இந்தியா முழுவதிலும் செயல்படுத்தி வருகிறது.
 
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் வரும் 11 மாவட்டங்களில் (பாண்டிச்சேரி, காரைக்கால் உள்பட) வசிக்கும் விண்ணப்பதாரரின் வசதிக்காக மூன்று சேவா மையங்கள் சென்னையில் கீழ்க்கண்ட விலாசங்களில் இயங்கி வருகிறது.
 
* பாஸ்போர்ட் சேவா மையம், சாலிகிராமம் - டாக்டர் .பானுமதி ராமகிருஷ்ணா ரோடு, சாலிகிராமம், சென்னை
 
* பாஸ்போர்ட் சேவா மையம், அமைந்தக்கரை - நவீன்ஸ் பிரசிடியம், நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை
 
* பாஸ்போர்ட் சேவா மையம், தாம்பரம் - துரைசாமிரெட்டி தெரு, தாம்பரம். (டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை அருகில்), சென்னை.
 
இந்த மூன்று சேவா மையங்களிலும் 2450 விண்ணப்பங்கள் தினமும் பெறப்படுகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்தப் பிறகு  பரிசீலிக்கப்படுகிறது. மனுதாரரின் வசதிக்காக கீழ்க்கண்ட விண்ணப்பதாரர்கள் வாக்-இன் (walk-in)  அதாவது முன்பதிவு (Appointment) இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.
 
* வயது முதியோர் (65 வயதுக்கு மேல்) மாற்று திறனாளிகள், PCC விண்ணப்பதாரர்கள்.
இவர்கள் பாஸ்போர்ட் சேவா மையம், சாலிகிராமத்தில் விண்ணப்பிக்கலாம்.
 
* மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் -  பாஸ்போர்ட் சேவா மையம் அமைந்தகரையில் விண்ணப்பிக்கலாம்..
 
* மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், PCC விண்ணப்பதாரர்கள் - பாஸ்போர்ட் சேவா மையம், தாம்பரத்தில் விண்ணப்பிகலாம். 

12. தற்போது நான் குவைத்தில் வசிக்கிறேன். என் பாஸ்போர்ட்டை வெளிநாட்டில் ரெனீவல் செய்தால் என்ன ஆகும்?

வெளிநாட்டிலும் நமது பாஸ்போர்ட்டை, அந்தந்த நாட்டில் உள்ள  இந்திய தூதரகத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம். 

13. என் பாஸ்போர்ட் கடந்த மார்ச் 2015 ல் காலாவதி ஆகிவிட்டது. தற்போது எப்படி என் பாஸ்போர்ட்டை ரெனீவல் செய்வது. அதே நேரத்தில் பாஸ்போர்டில் எப்படி என் பெயரை மாற்றுவது எப்படி?

தற்போது  பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ரெனீவல் செய்யப்படுவது இல்லை. ஒரு முறை பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட் பெற வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள நீங்கள் http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink  இணையதளத்திற்கு சென்று reissue காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போட்டுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளை பின் பற்ற வேண்டும்.
 
14. பாஸ்போர்ட் வழங்கும் போது போலீஸ் சரிபார்த்தலின் போது கட்டாயம் லஞ்சம் தர வேண்டும் என்கிறார்களே? இதற்கு யாரிடம் புகார் அளிப்பது?

இது தொடர்பாக தகுந்த ஆதாரத்துடன் உங்களுடைய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை அணுகி முறையீடு செய்யலாம் அல்லது இதற்காக தமிழ்நாடு காவல் துறையினுடைய  சிறப்புப் பிரிவான THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION, NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD), RAJA ANNAMALAIPURAM, CHENNAI – 600 028, Telephone : 91-44-2461 5929 / 2461 5949 / 2461 5989 / 2495 4142 / 94450 48999 / 94450 48990, Fax : 91-44-2461 6070, E-mail: dvac@nic.in ஐ தொடர்பு கொள்ளலாம்.

15. நான் சென்னையில் வசிக்கிறேன். ஆனால் கல்லூரி படிப்புக்காக கோவையில் தங்கி இருக்கிறேன். கடைசி ஆறு மாதம் கோவையில் தங்கி இருந்ததால் அங்கும் வெரிஃபிகேஷன் வேண்டும் என்கிறார்கள். இது அவசியமா?

பொதுவாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுடைய போலீஸ் வெரிஃபிகேஷன் விண்ணப்ப தேதியிலிருந்து கடந்த ஒரு வருடத்தில் அவர் எந்த எந்த முகவரிகளில் தங்கி இருந்தாரோ அங்கு எல்லாம் வெரிஃபிகேஷன் செய்த பின்பே  பாஸ்போர்ட் வழங்கப்படும்.  

16. பாஸ்போர்ட்டில் பெயர் தவறுதலாக இடம்பெற்றால் எங்கு சென்று திருத்தம் செய்ய வேண்டும்?

அவர் மீண்டும் சரியான ஆவணங்களை (பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை) கொடுத்து பாஸ்போர்ட்டை re issue செய்து கொள்ளலாம். சிறிய பெயர் மாற்றம் (உச்சரிப்பாலான எழுத்து பிழைகள்) என்றால் ரூ. 500 அபராதத் தொகை வசூலிக்கப்படும். இதே பெரிய பெயர் மாற்றங்கள் என்றால் (Major Name Change) மாற்றப்பட்ட பெயரை தங்களுடைய  நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசூரமாகுமாறு தினசரி செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும். நீங்கள் பெயர் மாற்றத்திற்கு கொடுத்த விளம்பரத்தின் செய்தித் தாளோடு மற்ற தேவையான ஆவணங்களுடன் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க வேண்டும்.
 
17. வெளிநாட்டில் இருக்கும் போது  பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.?

உடனடியாக நமது நாட்டின்  தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

18. தட்கல் முறையில்  எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும், எவ்வளவு தொகை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்?

தட்கல் முறையில் விண்ணப்பித்த பாஸ்போர்ட் 3 - 5 நாட்களுக்குள் கிடைக்கும். இதற்கான கட்டணம் 3,500 ரூபாய்.

19. நான் ஒரு என்ஆர்ஐ தற்போது அமெரிக்காவின் குடிமகனும் கூட. நான் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தலாமா?

வேறு நாட்டின் குடியுரிமை பெற்றவுடன் இந்திய பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அலுவலகத்திலோ, இந்திய தூதரகத்திலோ  உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது.
 
20. என் அண்ணன் அபுதாபியில் வேலை செய்கிறார். அவரின் பாஸ்போர்ட் சமீபத்தில் காணாமல் போய்விட்டது. இப்போது என் அண்ணன் அங்கிருந்து எப்படி இந்தியா வருவது?

அபுதாபியில் உள்ள நமது நாட்டின் தூதரகத்தை ஆவணங்களுடன் சென்று புகார் கொடுக்கவும். அவர்கள் எல்லாவற்றையும் பரிசீலித்து எமர்ஜென்சி சர்டிஃபிகேட் (Emergency Certificate) ஒன்றை வழங்குவார்கள், அதன் மூலம் இந்தியாவிற்கு வரலாம்.

21. நான் புருனேவில் வேலை பார்க்கிறேன். என் குடும்பத்தையும் புருனேவுக்கே அழைத்து வந்துவிடலாம் என்று யோசித்திருக்கிறேன். எனக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு சென்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
* புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தின் அட்டெஸ்டேஷன் உடைய சுய உறுதி மொழி பத்திரம் (Sworn affidavit), 
*  தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல் (இதிலும் துதரகத்தின் அட்டெஸ்டேஷன் இருக்க வேண்டும்).'
* தங்களுடைய மனைவியின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும், அதில் கட்டாயமாக  (ஸ்பவுஸ் நேம் காலத்தில்)  உங்கள் பெயர் இருக்க வேண்டும், 
* குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், 5.தங்கள் மனைவியின் கையொப்பம் இட்ட Annexure H மற்றும் முகவரி சான்றிதழ் (Address Proof).

22. என் மகனின் பாஸ்போர்ட் 2014 டிசம்பரில் காலாவதி ஆகிவிட்டது. இதனை இப்போது புதுப்பிக்க முடியுமா? நான் மற்றும் என் கணவர் நேரடியாக வர வேண்டுமா?

பெற்றோரில் யாரேனும் ஒருவர் வந்தால் போதும். ஆனால் யார் வரவில்லையோ அவருடைய பாஸ்போர்ட்டை உடன் எடுத்து வர வேண்டும்.
 
23. திருமணத்துக்கு பிறகு பெண் எப்படி பாஸ்போர்ட்டில் பெயரை மாற்ற வேண்டும்.  விவரம் தேவை?

நவம்பர் 24, 2009க்கு பிறகு திருமணம் ஆகி இருந்தால் திருமண சான்றிதழுடன் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமண சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃப்ஃபிடவிட் (Joint Notary Affidavit) கொண்டு வர வேண்டும். சர் நேம் காலத்தில் பெயர் மாற்றுவதற்கு Annexure D அஃப்ஃபிடவிட் அவசியம். 

Note: பாஸ்போர்ட்டில் Annexure A - M வரையிலான அனைத்து அனெக்சர்களும் கீழ்கண்ட லிங்கில் கிடைக்கும் -  http://passportindia.gov.in/AppOnlineProject/online/annexureAffidavit

எல்லா பாஸ்போர்ட்டிற்கும் என்ன என்ன  டாக்குமென்டுகள் தேவை என்பதை இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள லிங்கை சொடுக்குங்கள்  - http://passportindia.gov.in/AppOnlineProject/docAdvisor/attachmentAdvisorInp
 

NEWS TODAY 06.12.2025