Tuesday, June 2, 2015

Teachers with unverified qualifications on examiners’ panel

The list of examiners authorised to correct answer papers of students in colleges affiliated to Bharathidasan University includes teachers whose qualifications the university has not approved yet.

The list contains as many as 2,928 lecturers in the undergraduate programme and 59 lecturers in the postgraduate programmes whose qualification has not been approved by the university authorities. Many of the listed teachers are also mentioned as guest lecturers and some are ‘acting principals.’

Senior professors and members of the Association of University Teachers say it is normal for colleges to appoint a lecturer and then send the candidate’s qualification credentials to the university for approval. But the trend for several decades now is to appoint under qualified guest lecturers.

“Three kinds of teachers are appointed by colleges apart from those directly appointed by universities. Those with UGC-mandated NET/SLET qualification waiting to be absorbed by the university; teachers with UGC-approved qualifications but paid salaries by the management; there are under-qualified teachers who receive salaries from college management,” says P. Jayagandhi, former AUT office bearer.

“Thousands of candidates who have cleared the national or state-level eligibility test in order to be appointed as lecturers languish, while colleges continue to appoint unqualified teachers. It is for the government to ensure that qualified teachers are appointed in colleges in the interest of the students and the qualified candidates,” S. Swaminathan, advisor to NET/SLET Association says.

Interest of students

Bharathidasan University registrar A. Selvam who confirmed that the teachers’ qualifications had not been verified, however, contended that the university had to make the decision in the interest of students.

The fire that changed the face of Chennai Central

Thirty years ago on June 1, 1985, Chief Minister M.G. Ramachandran made a decision to pull down the fire-ravaged Moore Market after a visit to the heritage premises. The reportedly controversial decision, however, paved the way for the growth of Chennai Central as a multimodal transit hub in the city. Although much water has flowed down the Cooum, similar conflicts between managing the needs of heritage structures and modern infrastructure continue in the locality.

A few weeks before the major fire accident on May 30, The Hindu ’s report dated May 7 said the former Southern Railway General Manager M.K. Jain had appealed to the State government to hand over the Moore Market Complex to the Railways to develop the area into a modern suburban terminal. Reports in the broadsheet following the fire pointed to traders alleging “official sabotage to make us vacate the building and hand it over to the Railways.”

According to Corporation records, traders of 527 shops in the complex were paying Rs. 150 per month and 300 small traders were paying a rent of Rs. 30. As many as 72 book stalls were gutted, but the value of the antique books has not yet been estimated in commercial terms. A number of foreigners, historians and litterateurs used to search for the priceless treasure of antique books in the Indo-Saracenic style complex which was inaugurated on November 30, 1900.

Even as protests by traders in the heritage building mounted, Local Administration Minister P.U. Shanmugham ruled out sabotage, claiming that the decision to hand over the land to the Railways was actually taken by the DMK regime.

Discounting the voice of a few traders who demanded reconstruction of the heritage building, the Chennai Corporation started reclamation of Lily Pond for construction of temporary shops within a few days of the fire.

By June 15, The Hindu reported that “the Moore Market Merchants Association decided to accept an ex-gratia payment of Rs. 2000 offered by the State government to licensed shops.” Infrastructure received priority, heritage was discounted.

The recent decision of Chennai Corporation to develop a People’s Park depicting the heritage of the city by demolishing 25 architecturally- incompatible buildings on the premises of Ripon Buildings is likely to be delayed or even shelved owing to Metrorail project in the area. As metrorail has the highest degree of civic utility for residents, heritage may be the loser this time too.













It’s been 30 years since the decision was made to tear down the blaze-ravaged but heritage-rich Moore Market

Neither shocked nor surprised, says AIADMK

The AIADMK is neither shocked nor surprised by the Karnataka government’s decision to move the Supreme Court in the disproportionate assets case, party sources said.

Accusing the DMK and other political groups of “resorting to political vendetta,” Rajya Sabha member and AIADMK spokesperson A. W. Rabi Bernard said: “We are confident of fighting the case in the Supreme Court.”

The development comes days after the AIADMK announced Ms. Jayalalithaa’s candidature for the R.K. Nagar by-elections.
Referring to the 2003 murder of the former Minister, T. Kiruttinan — a case in which DMK president M. Karunanidhi’s son and former Union Minister M.K. Alagiri was accused of conspiracy — Mr. Bernard asked: “Why did not Mr. Karunanidhi insist that the Andhra Pradesh government move the Supreme Court? They are playing political games in this [assets] case.”

தென் மேற்கு பருவமழை 5-ந்தேதி தொடங்க வாய்ப்பு தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு

சென்னை,

தென் மேற்கு பருவமழை 5-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

5-ந்தேதி தொடங்க வாய்ப்பு

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் தான் அதிக பயன் அடையும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு ஓரளவுக்குத்தான் பயன் அடையும்.

தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும். தமிழ்நாட்டை பொருத்தவரை கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில்தான் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான அளவுக்குத்தான் மழை பெய்யும். இந்த நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை வருகிற 5-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

இன்று மழை பெய்யும்

தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும். இந்த மழை தினமும் பெய்து 5-ந்தேதி வரை நீடிக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

மழை அளவு

பேச்சிப்பாறை, அவினாசி தலா 7 செ.மீ., குளச்சல், வேடச்சந்தூர், குன்னூர் தலா 5 செ.மீ., மேட்டுப்பாளையம், திருப்புவனம், சத்யமங்கலம் தலா 4 செ.மீ., போச்சம்பள்ளி, அன்னூர், ஏற்காடு, பெருந்துறை, பவானிசாகர், பரூர், குமாரபாளையம், சேலம், பெரியகுளம் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

பெங்களூரு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஜெயலலிதா விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மே மாதம் 11-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, அவர் தமிழக முதல்-அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார்.

இதற்கிடையே, கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பில் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் வருமானத்தை கணக்கீடு செய்ததில் பிழை இருப்பதாகவும், எனவே இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அரசு சிறப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா அரசுக்கு சிபாரிசு செய்தார்.

இதேபோல், இந்த வழக்கு மேல்முறையீடு செய்வதற்கு தகுதியான வழக்கு என்று கர்நாடக அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம குமாரும் அரசுக்கு சட்ட ஆலோசனை வழங்கினார். மேலும் அரசு கேட்ட சில சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த ரவிவர்ம குமார், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறினார். மேல்முறையீடு செய்வதற்கு இந்த வழக்கு தகுதியானது என்று கர்நாடக அரசின் சட்டத்துறையும் பரிந்துரை செய்தது.

எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல்

இதற்கிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி தலைவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யுமாறு கர்நாடக அரசை வற்புறுத்தி வந்தனர். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

இதுபற்றி மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இந்த நிலையில், கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவலை மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் சட்ட மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசுக்கு அதிகாரம்

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யுமாறு அரசு தலைமை வக்கீல் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அரசுக்கு பரிந்துரை செய்தனர். மேலும், இந்த தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு சட்டத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தோம். சட்டத்துறை அதிகாரிகள் தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்கி, மேல்முறையீடு செய்ய இது தகுதியான வழக்கு என்று சிபாரிசு செய்தனர்.

அரசு தலைமை வழக்கறிஞர், அரசு சிறப்பு வக்கீல், சட்டத்துறை அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை மந்திரிசபை கூட்டத்தில் தாக்கல் செய்து நான் விளக்கி கூறினேன். அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து இதன் சாதக-பாதகங்களை எடுத்து வைத்தேன். இந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியபோது அரசு சிறப்பு வக்கீலை நியமனம் செய்யும் அதிகாரம் மற்றும் வழக்கை நடத்தும் அதிகாரம் கர்நாடகத்துக்கு தான் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்தோம்.

பழிவாங்கும் நோக்கம் இல்லை

அரசு நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதில் கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் நற்பெயர் உள்ளது. மேலும் இது மேல்முறையீடு செய்வதற்கு தகுதியான வழக்கு. எனவே சட்டத்துக்கு உட்பட்டு, கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் உடனடியாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு முதல்-மந்திரி எனக்கு உத்தரவிட்டு இருக்கிறார். இதில் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை.

இந்த வழக்குக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வழக்கு குறித்து புகார் கொடுத்தவர் சுப்பிரமணியசாமி. வழக்கு விசாரணை கர்நாடகத்தில் நடைபெற்றதால் வழக்கை நடத்தும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு கிடைத்து உள்ளது. வழக்கை சட்டப்படி நடத்த வேண்டிய கடமை கர்நாடக அரசுக்கு உள்ளது. மேல்முறையீடு செய்வதற்கான முடிவை எடுப்பதில் தாமதம் செய்யவில்லை. அவ்வாறு தாமதித்ததாக கூறுவது தவறானது.

அரசு சிறப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா

மேல்முறையீடு செய்யும் முன்பு அனைத்து அம்சங்களையும் ஆராய வேண்டியது அவசியம். மேலும் அப்பீல் செய்ய 90 நாட்கள் காலஅவகாசம் உள்ளது. அதனால் இது தாமதமான முடிவு என்று கூற முடியாது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி வாதிடுவார். அவருக்கு உதவியாக வக்கீல் சந்தேஷ் சவுட்டா செயல்படுவார்.

இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் தலையிடவில்லை. கட்சி மேலிடத்துடன் மாநில அரசு கலந்து ஆலோசிக்கும் என்று அபிஷேக் சிங்வி கூறியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் ரீதியாக எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் வரவில்லை. இது முழுக்க முழுக்க நாங்கள் ஆலோசித்து எடுத்த முடிவு ஆகும். மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனுடன் இதை தொடர்புபடுத்துவது சரியல்ல.

இவ்வாறு மந்திரி டி.பி. ஜெயச்சந்திரா கூறினார்.

பி.வி.ஆச்சார்யா பேட்டி

இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து பி.வி.ஆச்சார்யா கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று நானும், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரும் கர்நாடக அரசுக்கு உறுதியாக பரிந்துரை செய்தோம். எங்கள் பரிந்துரையை ஏற்று மேல்முறையீடு செய்வது என்று கர்நாடக மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இந்த முடிவை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மேல்முறையீட்டு வழக்கில் எனது வாதத்தை சிறப்பாக எடுத்து வைப்பேன்.

இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.

Monday, June 1, 2015

ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வராததால் சிக்கல் ! : வேளச்சேரி 2 அடுக்கு மேம்பால திட்டம்?

சென்னை: வேளச்சேரியில், இரண்டு அடுக்கு மேம்பால திட்ட பணிகளுக்காக, மூன்று முறை ஒப்பந்தம் விடப்பட்டும், ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வரவில்லை. அடுத்து நடக்கவுள்ள ஒப்பந்தத்திலாவது, பணிகளை எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வருவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, தாம்பரம், பொன்மார், கேளம்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளிக்கரணை கைவேலி வரை, வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வருகின்றன. வேளச்சேரி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, விஜயநகர் வரை, காலை மாலை நேரங்களில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசல், புறவழி சாலையில், வேளச்சேரி ஏரியில் இருந்து, விஜயநகர் சந்திப்பு வரை, வாகன தேக்கத்தை ஏற்படுத்துகிறது.

உத்தேச மதிப்பு

அதற்கு தீர்வு காணும் வகையில், விஜயநகர் சந்திப்பில், மேம்பாலம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர் செய்திகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன், வேளச்சேரி, விஜயநகர் பேருந்து நிலைய பகுதியில், இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். உத்தேச மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பாலம் அமைப்பதற்கு தேவையான கையகப்படுத்தவுள்ள நிலங்களும் அடையாளம் காணப்பட்டன.

வேளச்சேரி இரட்டை அடுக்கு பாலத்தின் ஒரு அடுக்கு, வேளச்சேரி புறவழி சாலையில் துவங்கி, தாம்பரம் -- வேளச்சேரி சாலையின் இருபுறமும் இறங்கும். இரண்டாம் அடுக்கு, விஜய நகர் - -தரமணி சாலையில் துவங்கி, வேளச்சேரி ரயில் நிலைய பாலத்தின் முன் முடியும்.

அதில், ஒரு அடுக்கு, 1,400 மீட்டர் நீளமும், மற்றொரு அடுக்கு 700 மீட்டர் நீளமும் இருக்கும். பாலத்தின் அகலம் மட்டும், தேவைக்கு ஏற்றபடி மாறுபடும் என்ற வகையில் வரை படம் தயாரித்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

தயக்கம் ஏன்?

அங்கு பல மாதங்கள் காத்திருப்புக்கு பின், வரைபட ஒப்புதல் கிடைத்தது. அடுத்ததாக, 75 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, கடந்த ஓராண்டில், மூன்று முறை ஒப்பந்தம் நடத்தியும் யாரும் எடுக்க முன்வரவில்லை. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால், மேம்பாலம் அமைக்க திட்டமிட்ட தொகை, மிகவும் குறைவு என, கூறப்படுகிறது. இதனால், முதல்வர் அறிவித்த இரண்டு அடுக்கு மேம்பால திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் தரப்பில் கூறியதாவது:

வேளச்சேரி இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்க, திட்டமிடப்பட்ட 75 கோடி ரூபாய் மிகவும் குறைவாக உள்ளதாக, ஒப்பந்ததாரர்கள் கருதுவதால், ஒப்பந்தம் எடுக்கவில்லை. அவர்கள் கூடுதலாக 33 சதவீதம் கோருகின்றனர். ஆனால், நிதித்துறை வழக்கத்தில் இல்லாதபடி, 20 சதவீதம் கூடுதலாக தருவதாக அறிவித்தும், ஒப்பந்தம் எடுக்க மறுக்கின்றனர். தற்போது, நான்காவது ஒப்பந்தம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. அதில், ஒப்பந்தம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் வேளச்சேரி இரண்டு அடுக்கு மேம்பால பணிகள் துவக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

டிரைவரை ஏமாற்றிய பெண்ணுக்கு48 கி.மீ., நடைபயண தண்டனை

சிகாகோ:அமெரிக்காவில், வாடகை டாக்சிக்கு பணம் கொடுக்காமல் ஓட்டுனரை ஏமாற்றிய பெண்ணுக்கு, 48 கி.மீ., துாரம் நடைபயணம் மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதியின் தீர்ப்பு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின், லேக் கவுண்டியைச் சேர்ந்த பெண், விக்டோரியா பாஸ்கம். இவர், க்லெவெலான்டிலிருந்து பெய்ன்ஸ்வெல்லே வரை, 48 கி.மீ., துாரம், வாடகை டாக்சியில் பயணம் செய்தார்.


பெய்ன்ஸ்வெல்லே வந்தவுடன் காரிலிருந்து இறங்கிய விக்டோரியா, காருக்கான வாடகை பணத்தை ஓட்டுனரிடம் கொடுக்க மறுத்தார். பணத்தை கொடுக்காமலேயே, அங்கிருந்து சென்றுவிட்டார். அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், விக்டோரியா மீது புகார் செய்தார். விக்டோரியா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வழக்கை விசாரித்த நீதிபதி, மைக்கேல் சிக்கோனெட்டி, 48 கி.மீ., துாரம் வாடகை டாக்சியில் பயணித்து, பணம் கொடுக்காமல் ஓட்டுனரை ஏமாற்றிய விக்டோரியா, 48 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.




தவறினால், ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், சம்பந்தப்பட்ட வாடகை டாக்சி நிறுவனத்திடம், 6,000 ரூபாய் தொகையை, விக்டோரியா செலுத்த வேண்டும் எனவும் கூறினார். ஏமாற்றி பயணித்த துாரத்தை நடந்தே செல்ல வேண்டும் என்ற வினோத தீர்ப்பு, அந்நாட்டு மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...