Tuesday, June 9, 2015

தேவை புதிய இணைய தளம்

போலிச் சான்றிதழ்களைக் கண்டறிய புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட வேண்டியது தற்போதைய காலத்துக்கு மிகவும் அவசியமாகிறது.
நமது அன்றாட வாழ்க்கையில் அனைத்து இடங்களிலும் போலிகள் இடம்பிடித்து விடுகின்றன. அன்றாடத் தேவைக்கான பொருள்கள், கல்வித் துறை, அரசுத் துறைகள் வழங்கும் சான்றிதழ்கள் என அனைத்திலும் போலிகள் உள்ளன. போலிச் சான்றிதழ் தயாரித்தவர் கைது என்ற செய்திகளை நாளிதழ்களில் அடிக்கடி நாம் படிக்கிறோம்.
கல்வித் துறை, பல்கலைக்கழகங்கள், வருவாய்த் துறை சான்றிதழ்கள், அரசுத் துறைகளின் பணி நியமன ஆணைகள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஆகியவை போலியாகத் தயாரித்து வழங்கப்படுகின்றன. இது வேண்டுமென்றே முறைகேட்டில் ஈடுபடுவதாகும்.
சிலர் இடைத்தரகர்களை நம்பி போலிச் சான்றிதழ்களை பெற்று ஏமாறுகின்றனர். அவ்வாறு ஏமாறுகிறவர்களுக்கு அது போலி என்பது தெரியாது. மோசடியாகப் பிறரால் ஏமாற்றப்படுபவர்கள் தேவையில்லாமல் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
அரசு, தனியார் துறை பணியில் சேருவதற்கும், உயர் கல்வி கற்பதற்காகவும், சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறுவதற்காக தனது பெயருக்குப் பின்னால் கல்வித் தகுதியை போட்டுக் கொள்வதற்காகவும் போலி கல்விச் சான்றிதழ்களை சிலர் தெரிந்தே பெறுகின்றனர்.

வருவாய்த் துறை சான்றிதழைப் போலியாகத் தயாரித்து நில மோசடியில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.

பல்கலைக்கழகங்கள் வழங்கும் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய அச்சான்றிதழ், உரிய கட்டணத்துக்கான காசோலையுடன் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த வகையில், சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய 20 நாள்கள் வரை ஆகிறது.
அதேபோல, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்திடமிருந்து அறிய வேண்டும்.
உதாரணமாக, ஓர் அரசு அல்லது தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணி நியமனம் செய்யப்படும்போது, அவரது 10, 12-ஆம் வகுப்புச் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பித்து அரசு தேர்வுத் துறை மண்டல அலுவலகத்துக்கு அனுப்புகின்றனர். 

அரசு தேர்வுத் துறை மண்டல அலுவலகப் பணியாளர்கள் அதனை அரசு தேர்வுத் துறை இயக்ககத்துக்கு நேரடியாக எடுத்துச் சென்று அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து மாவட்டக் கல்வி அலுவலகத்துக்குத் திருப்பி அனுப்புகின்றனர். 

10, 12-ஆம் வகுப்புச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய பல்வேறு நடைமுறைகள் இருப்பதால், சுமார் 2 மாதங்களுக்கும் மேலாகிவிடுவதாகவும் கூறப்படுகிறது. 

அரசின் சலுகைகளைப் பெற வருமானச் சான்று, ஜாதிச் சான்றுகள் போலியாக தயாரிக்கப்படுகின்றன.
அதேநேரத்தில், அசையாச் சொத்தை விற்பனை செய்ய சொத்தின் உரிமையாளருடைய வாரிசுச் சான்றையும் போலியாகத் தயாரித்து நில மோசடியில் ஈடுபடுகின்றனர்.

சில ஜாதிப் பிரிவுகளுக்கு பல்வேறு சலுகைகளையும், இட ஒதுக்கீடுகளையும் அரசு வழங்குவதால் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கட்டாயமாக அறியப்படுகிறது. கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுவதால் மருத்துவப் படிப்பில் சேரும் தலித் பிரிவு மாணவர்களின் ஜாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மை அறியப்படுகிறது.
மருத்துவக் கல்வி நிலையங்கள் சம்பந்தப்பட்ட மாணவரின் ஜாதிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி அந்த ஜாதிச் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்கின்றனர். அதற்கு குறைந்தபட்சம் சுமார் 10 நாள்களாகிறது. 

உண்மைத் தன்மையை அறிவதற்கான கால தாமதத்தைத் தவிர்க்க தனி இணையதளத்தை உருவாக்க வேண்டியது அல்லது ஏற்கெனவே அரசுத் துறைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே உள்ள இணைய தளத்திலேயே சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கென்று தனிப் பக்கத்தை உருவாக்க வேண்டியது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.
சம்பந்தப்பட்ட துறை வழங்கும் சான்றிதழ்கள் அத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
உண்மைத் தன்மை அறியும் இணையப் பக்கத்தில் சான்றிதழின் எண்ணை சமர்ப்பித்து அதன் உண்மைத் தன்மையை சம்பந்தப்பட்ட துறையினர் தங்கள் அலுவலகத்திலிருந்தே உடனடியாகத் தெரிந்து கொள்ள வழிவகை செய்தால் கால தாமதத்தைத் தவிர்க்கலாம். மோசடியையும் தடுக்கலாம்.
பொதுமக்களும் தங்களுடைய சான்றிதழின் உண்மைத் தன்மையை அறியவும், சங்கேத கடவுச் சொல் இல்லாமல் அதனைப் பயன்படுத்தும் வகையில் இணையம் வடிவமைக்கப்பட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் இ-சேவை மையம் உருவாக்கப்பட்டு சான்றிதழ்கள் இணையம் மூலம் வழங்கப்படுவதால் அதிலும் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய தனிப் பக்கத்தை உருவாக்குவது கடினமாக இருக்காது.
இணைய வழியிலேயே சான்றிதழ்கள் இருப்பதால் அதனை உடனடியாக சரிபார்த்து விடலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் போலிச் சான்றிதழ்களை தயாரிப்பவர்கள் அதையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.
  அதனால் அது அசலா, போலியா என்பதை அறிய முடியாது. அதனால், உருவாக்கப்படும் இணையதளம் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். 
அரசுத் துறை இணையதளங்களை நிக் எனப்படும் நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் வடிவமைத்துப் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் விரைவான, உறுதியான முயற்சி மேற்கொண்டு அரசுத் துறைகளின் இணையதளங்களில் அதற்கான பக்கத்தை உருவாக்க வேண்டும்.

HC makes helmets mandatory from July 1

Concerned over the increasing number of human lives lost in road accidents, the Madras High Court has directed the State government to make wearing of helmet mandatory for two-wheeler riders from July 1. It also directed officials to install CCTVs at junctions and along roads to monitor the implementation of the order.

Passing orders on a civil miscellaneous appeal, which challenged an order of Motor Accidents Claim Tribunal, Justice N. Kirubakaran directed the Home Secretary and the DGP to inform the public through media that wearing of helmet was compulsory for two-wheeler riders from July 1 under Section 129 of the Motor Vehicles Act 1988. Failing to do so would result in the impounding of the rider’s documents, including the driving licence.

Once impounded, the documents would be released only on production of a new ISI-certified helmet with the purchase receipt, the judge said. The authorities should suspend the driving licence of the rider and cancel it after enquiry for violation of the Act after registering a case. The State government should inform the court every two months about the number of cases filed against violators.

However, the court expected the police authorities “not to misuse this order to cause unnecessary hardship to riders and give room for an allegation of corrupt practice.”

Licence and other documents will be impounded if therule is violated

Manipal varsity top among private universities in India: survey

Manipal University has found pride of place inThe Week- Hansa Research Survey 2015. .

According to a press release issued by the university here, the university has been ranked first among the top non-government (private and deemed) multidisciplinary universities in India.

“Meaningful research is making the university academically stronger,” said Vice-Chancellor H. Vinod Bhat. “The next five years are going to be eventful even as Manipal University heads for silver jubilee in 2018,” he added.

In the ‘India’s Best Universities’ survey, Manipal University has been ranked 22nd among Top Universities in India, first among top non-government (private and deemed) multidisciplinary universities - south zone, and 10th among top multidisciplinary universities - south zone.

For the survery, information from 500 leading universities was collected. Experts across 20 cities were asked to nominate and rank top universities and in-depth interviews done to validate the data collected.

Miscreants break into BU VC’s office

Sunday was not a holiday for everyone. While officials of Bangalore University (BU) were on a break, some miscreants broke into the office of the Vice-Chancellor (VC) in the densely forested and vast Jnanabharathi (JB) campus on Sunday evening, which came to light on Monday morning. DCP (Bengaluru Central) Sandeep Patil said a case has been registered, but university officials have not said what is missing.

Confirming this, BU Vice-Chancellor B. Thimme Gowda said he was working out of the Central College campus on Monday and had not yet assessed the losses at his JB campus office.

No takers for 24 seats in non-clinical PG specialties

At the end of three rounds of counselling on Sunday, as many as 24 seats in postgraduate courses in non-clinical specialties remained vacant in self-financing medical colleges.

Of the 167 seats in various specialties, 121 were taken. The vacant seats would be returned to the colleges, Medical Education Selection Committee officials said.

Specialties such as anatomy and physiology had the largest number of vacancies with nine and seven unfilled seats. Biochemistry with five seats, pharmacology with two seats and microbiology with one seat followed.

Not lucrative

For several decades now, students have shunned non-clinical courses as they are not as lucrative as clinical courses. Though non-clinical courses form the basis of medical education and a student must study them to qualify as a doctor, little attention is paid to the issue even by the Medical Council of India, say former professors.

Even the fact that self-financing colleges do not demand capitation fee for non-clinical courses does not lure students. “Candidates pay only Rs. 25,000 in government medical colleges. But, in self-financing colleges, the fee is higher, and with no job opportunities students have no interest,” says V. Dekal, a forensic medicine expert attached to Saveetha University.

MCI reduces teachers

Some years ago, realising the dearth of teachers in non-clinical subjects, the MCI altered the norms, reducing the number of teachers required. It also increased the retirement age for teachers from 65 to 70 years, thus blocking job opportunities for youngsters, he says.

“Earlier non-clinical specialists were paid higher salaries. They also were promoted within six years as against clinicians who waited for a dozen years or more. Now, the salary structures and intervals between promotions are the same,” says a former professor of pharmacology with a government medical college. According to him, the government could attract candidates with better perks and travel allowances.

Though teaching happens mostly in tertiary care hospitals, even teacher positions have not come by as no new private college has come up in the State since 2008.

The way forward would be to appoint non-clinical specialists in district headquarters hospitals to run the departments. This will not only improve the speciality but will also provide space for non-clinical specialisations to grow.

Monday, June 8, 2015

ஆதரவற்ற சிறுவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் விலக்கு அளித்து உத்தரவு: பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை

ஆதரவற்ற சிறுவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ், புகைப்பட சான்றிதழ், முகவரி சான்றிதழ் உள்ளிட்டவைகளை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், ஆதரவற்ற இல்லங் களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கு உரிய பிறப்பு சான்றிதழ் இல்லாததால் அவர்களால் பாஸ்போர்ட் பெற முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பாஸ்போர்ட் விதி, 1980-ன் படி, 1989, ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற அவர்களின் பிறப்பு சான்றிதழை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் நகராட்சி அதிகாரிகள் அல்லது பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் இருந்து பிறப்பு சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் சிறுவர் கள் உரிய பிறப்பு சான்றிதழ் இல்லாமல் உள்ளனர். இதேபோல் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்களுக்கும் பிறப்பு சான்றிதழ் இருப்பதில்லை. இதனால், அவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. எனவே, அவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்குகோரி ஆதரவற்றோர் இல்லங்கள், சிறார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.

இக்கோரிக்கையை பரிசீலித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 1989, ஜனவரி 26-ம் தேதிக்குப் பிறகு பிறந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதன்படி, 18 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் தங்கள் பள்ளியில் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தாங்கள் வசிக்கும் ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் சிறார் விடுதிகளின் கண்காணிப்பாளர்களிடம் இருந்து அத்தாட்சி சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்றோர் நீதிமன்றம் மூலம் தங்களுடைய பிறப்புச் சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது ‘கேப்சா’ குறியீடுகள் புரியாமல் மக்கள் அவதி



தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின் போது எண் மற்றும் எழுத்துகளை கொண்ட ‘கேப்சா’ குறியீடுகள் புரியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அவசரமாக ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கை கொடுப்பது தட்கல் டிக்கெட் முறை. ஆனால் தட்கலில் முன்பதிவு செய்ய ரயில்வே முன்பதிவு கவுண்டர்களில் முந்தைய நாள் இரவு முதலே காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அப்படி காத்திருந்தும், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வதால் பலருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. அதேநேரத்தில் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் நிலையும் பரிதாபமாக உள்ளது.

புக்கிங்கிற்கான விவரங்களை பதிவு செய்து கட்டண தொகையை செலுத்தும்போது, இணைப்பு துண்டிக்கப்படுவதும், மறுபடியும் முதலில் இருந்து அதை ஆரம்பிப்பதும் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் பதிவை முடித்த பிறகு இறுதியாக எழுத்து மற்றும் எண்ணை கொண்டு அடையாளத்தை பதிவு செய்யும் குறியீடான கேப்சாவை (captcha) பதிவு செய்ய பலரும் தடுமாறுகின்றனர். அதிலும் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின் போது, கேப்சா குறியீடுகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி கடினமாக இருக்கிறது. 3 அல்லது 5 முறைக்கு மேல் முயற்சிக்க வேண்டியுள்ளது. அதற்குள் நேரம் கடந்து, மற்றவர்கள் டிக்கெட்டை பதிவு செய்து விடுகிறார்கள்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில் டிக்கெட் முன்பதிவுக்குரிய சர்வர் பிரச்சினையை தீர்க்க, இரண்டு உயர் திறன் சர்வர்களை ஐஆர்சிடிசி சமீபத்தில் நிறுவியுள்ளது. இதன்மூலம் நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகளாக இருந்த முன்பதிவு திறன், தற்போது 14,000 டிக்கெட்டுகளாக அதிகரித்துள்ளது. சிலர் அதிகளவில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதை தடுக்கவே ‘கேப்சா முறை’ பயன்படுத்தப்படுகிறது. இதில், எந்த குளறுபடிகளும் இல்லை.’’என்றனர்.

கேப்சா முறையை எவ்வாறு எளிமைப்படுத்தலாம் என்பது குறித்து டிஆர்இயு சங்கத்தின் செயல் தலைவர் ஆர்.இளங் கோவனிடம் கேட்டபோது,‘‘தட்கல் டிக்கெட் முன்பதிவில் உள்ள குளறு படிகளை நீக்க ரயில்வே நிர் வாகம் சமீபத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் தட்கல் முன்பதிவின் போது, ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களால் மேல் கோடிட்டு காணப்படும் கேப்சா குறியீடுகளை உடனடியாக பதிவு செய்ய முடியாமல் சாதாரண மற்றும் நடுத்தர பயணிகள் அவதிப் படுகின்றனர். குறிப்பாக k, y, x, z போன்ற ஆங்கில எழுத்துகளை பெரியது, சிறியது என வேறு படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. எனவே, எழுத்துக்கள், எண்களை இடைவெளி விட்டு காண்பிக்கலாம் அல்லது வேறுபடுத்த கடினமாக இருக்கும் எழுத்துக்களை தவிர்க்கலாம் அல்லது அதிகளவில் எண்களை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை நடைமுறைப்படுத்தினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

எண்களை இடைவெளி விட்டு காண்பிக்கலாம் அல்லது வேறுபடுத்த கடினமாக இருக்கும் எழுத்துக்களை தவிர்க்கலாம் அல்லது அதிகளவில் எண்களை பயன்படுத்தலாம்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...