Wednesday, June 10, 2015

மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது சிங்கப்பூர்


logo


சிங்கப்பூர்,

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சிங்கப்பூர் திரும்ப பெற்றுள்ளது.


மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன.இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன. அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது.


இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்ஸ் வகைகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று சிங்கப்பூர் அரசும் அந்நாட்டு இறக்குமதியாளர்களுக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, சிங்கப்பூர் கடைகளில் இருந்து மேகி நூடுல்ஸ் அகற்றப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நுடுல்சுகளில் உடல் நலத்துக்கு கேடான எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதனால் விற்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அந்நாட்டு வேளாண் உணவு மற்றும் கால்நடை ஆணையம் (AVA), தெரிவித்துள்ளது.


முன்னதாக, கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸுகளை ஆய்வுக்கு அனுப்பிய சிங்கப்பூர் வேளாண் உணவு மற்றும் கால்நடை ஆணையம், ஆய்வு முடிவு வரும் வரை நூடுல்ஸ்களை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், இந்த சோதனை முடிவில் மேகி நூடுல்ஸில் உண்பதற்கு ஆபத்தான பொருள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி கொண்டுள்ளது என்று அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெல்மெட்’ தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்

1963–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த ‘தர்மம் தலைகாக்கும்’ என்ற திரைப்படத்தில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ‘தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும்’ என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலைப் பாடுவதுபோல, ஒரு காட்சி வரும். ஆனால், இப்போது பெருகிவரும் விபத்துக்கள் அதிலும் குறிப்பாக ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் ஏற்படும் விபத்துக்களையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையையும், அவர்கள் மரணத்தால் அவர்களின் குடும்பமே நிர்க்கதியாகி நிற்பதையும் பார்க்கும்போது, இந்த பாடலை ‘ஹெல்மெட்’ ‘தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும்’ என்று கூறுவதே சாலப்பொருத்தமாக இருக்கும்.

சாலைப்பாதுகாப்புக்காக ஒரு கடுமையான சட்டம்வேண்டும் என்று இந்தியா முழுவதுமே கோரிக்கை வலுத்து வருகிறது. அதிலும் மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று ஒருவாரத்தில் கோபிநாத் முண்டே என்ற மந்திரி தலைநகராம் டெல்லியிலேயே கார் விபத்தில் இறந்ததால், இந்த அரசாங்கம் சாலைப்போக்குவரத்து பாதுகாப்புக்காக இரும்புக்கரம்கொண்டு ஒரு சட்டத்தைக் கொண்டுவரும், அந்த சட்டம் பெருமளவு விபத்துக்களை தவிர்க்கும் என்று எதிர்பார்த்தது இன்னும் நிறைவேறவில்லை. 1988–ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தை வலுவுள்ளதாக ஆக்கும் வகையிலும், போக்குவரத்து குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையிலும், 2014–ம் ஆண்டு சாலைப்பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மசோதா என்று ஒரு மசோதா தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. முண்டே இறந்து ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்றப்பட திட்டமிட்ட இந்த மசோதா, பல காலக்கெடுக்களை கடந்தும் நிறைவேற்றப்படும் வழியை காணாமல் இருக்கிறது. அதன்பிறகு, 4 முறை பல திருத்தங்கள் செய்யப்பட்டு இந்த மசோதாவின் நோக்கமே இப்போது நீர்த்துப்போய்விட்டது.

ஆனால், பாராளுமன்றத்தால் முடியாத இந்த நோக்கத்தின் ஒரு பகுதியை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், வருகிற ஜூலை மாதம் 1–ந் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று பிறப்பித்துள்ள தீர்ப்பு மூலம் நிறைவேற்றிவிட்டார். மத்திய அரசாங்கமும், அனைத்து மாநிலங்களும் இவ்வாறு இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்வதை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 2006–2007–ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 3 ஆயிரத்து 426 ஆகும். ஆனால், 2013–2014–ல் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு நிச்சயமாக இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 70 லட்சத்தை தாண்டி வேகமாக சென்றிருக்கும். இதுபோல, 2005–ம் ஆண்டு இருசக்கர வாகன விபத்துக்களில் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,670 பேர் என்று இருந்தநிலை மாறி, 2014–ல் 6,419 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆக, இனியும் தாமதம் இல்லாமல், இது நீதிபதியின் அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது என்ற விமர்சனங்கள் வந்தாலும், மத்திய சட்டத்தின் தாமதத்தையும், உயிர்காக்கும் தீர்ப்பு இது என்ற வகையிலும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். நீதிபதி என்.கிருபாகரன் வழியை திறந்துவிட்டார். அதன் வழியே செல்வது மத்திய, மாநில அரசுகளின் கையில்தான் இருக்கிறது.

Tuesday, June 9, 2015

முதல் உலக விருது



பல வெற்றிப் படங்கள் 1959ல் ரிலீசாயின. ‘அவள் யார்’ போன்ற வித்தியாசமான படமும் வந்தது. ‘பாகப்பிரிவினை’ என்ற குடும்ப சித்திரமும் வெளியானது. ‘கல்யாணப் பரிசு’ மூலம் ஸ்ரீதர் டைரக¢டர் ஆனார். அந்தப் படமும் மெகா ஹிட்டானது. அதே போல் வெளிநாடுகளிலும் தமிழ் சினிமாவின் பெருமையை நிலை நாட்டிய இன்னொரு படமும் இதே ஆண்டில் ரிலீசானது. சிவாஜி கணேசனின் நடிப்பு பசிக்கு தீனி போட்ட அந்தப்படம், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட மாவீரனின் வரலாறு படமானது. இது படமாகும் முன்பு பலமுறை நாடகமாக போடப்பட்டது. அதிலும் சிவாஜிதான் நடித்திருந்தார். கட்டபொம்மன் என்றதுமே மக்களுக்கு சிவாஜியின் முகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக¢கு இந்த கேரக்டராகவே சிவாஜியை மக்கள் பார்த¢தனர். படத்தில் நடித்தபடியே இந்த நாடகத்திலும் சிவாஜி நடித்தார். மாலை 5 மணி ஆகிவிட்டால், ஷூட்டிங்கிலிருந்து நேராக நாடக சபாவுக்கு சென்றுவிடுவார். மாலையில் இந்த நாடகத்தில் அவர் நடிப்பார். மாதத்தில் 25 முறை கண்டிப்பாக இந்த நாடகம் நடக்கும். அத்தனையிலும் சிவாஜி ஆஜர் ஆவார். மொத்தம் 100 நாட்களை இந்த நாடகம் கொண்டாடியது. 100வது நாளில்
அண்ணாதுரை பங்கேற்று, சிவாஜிக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார்.

இப்படியொரு வரலாற்று கதையை படமாக்க பிரமாண்ட நிறுவனமான ஜெமினி திட்டமிட்டது. ஆனால், அதற்கு முன்பே அதை திட்டமிட்டவர் பி.ஆர்.பந்துலு. இந்த படத்துக்கு அதிகம் செலவாகும், படமாக்குவதும் சுலபம் அல்ல என்பதால் பந்துலு இதை எடுக்க மாட்டார் என வாசன் நினைத்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை தயாரிக்கப் போவதாக வாசன¢ பத்திரிகையில் விளம்பரமும் தந்தார். அவர் விளம்பரம் தரப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்தார் பந்துலு. எனவே அதே தினம் இன்னொரு பக்கத்தில் சிவாஜியின் படத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பட விளம்பரத்தை தந்தார். வாசன் அசந்து போனார். சிவாஜிக்கு நிகராக வேறு யாராலும் நடிக்க முடியாது என்பதை வாசன் உணர்ந்திருந்தார். அதனால் இப்படத்தை பந்துலுவுக்கே விட்டுக் கொடுத்தார்.

பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பந்துலு தயாரித்து, இயக்கிய இப்படத்தின் தொடக்க விழாவில் ஜெமினி வாசன் கலந்துகொண்டு, பலருக்கு ஆச்சரியத்தை தந்தார். முதல் நாள் ஷூட்டிங்கையும் அவரே தொடங்கி வைத்தார். பந்துலு இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்தார். கெவா என்ற உயர்ந்த ரக கலரில் படம் தயாரிக்கப்பட்டது. முழு படத்தையும் பார்த்துவிட்டு, இதை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலர் பிரிண்ட்டில் வெளியிட திட்டமிட்டார் பந்துலு. இந்த தொழில்நுட்பம், லண்டன் உட்பட வெளிநாடுகளில் மட்டுமே இருந்தது. இதற்காக இப்பட பிரிண்ட்டுகளை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து வெற்றிகரமாக பிரிண்டுகள் தயாராகி சென்னை வந்தன. இந்த பட ஷூட்டிங்கை குறுகிய காலத்தில் எடுக்க முடியுமா? என்று கூட பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் குறுகிய காலத்திலேயே ஷூட்டிங் நடத்தி முடித்ததும் சிறப்பம்சம்.

சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.வரலட்சுமி, ஜெமினி கணேசன், ஜாக்சன் துரையாக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்தனர். கதை மற்றும் வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். இசை ஜி.ராமநாதன். திரைக்கதை, இயக்கம் பந்துலு. போர் காட்சிகள் படத்தின் ஹைலைட். வரி செலுத்த எதிர்ப்பு தெரிவித்து ஜாக்சன் துரையுடன் கட்டபொம்மன் பேசும் வசனங்கள்
தியேட்டரை அதிர வைத்தது.

இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் விருதுக்கும் தேர்வானது. ஆனால், தேசிய விருதுக்கான சான்றிதழ் மட்டுமே தந்தார்கள். அதே நேரம் கெய்ரோ உலகப் படவிழாவில் போட¢டி பிரிவில் இப்படம் கலந்துகொண்டது. இப்பெருமையை பெற்ற முதல் தமிழ்ப் படம் இதுதான். விழாவின் கடைசி நாளில் பந்துலு, சிவாஜி, பத்மினி ஆகியோர் கெய்ரோ சென்றனர். விழாவில் விருதுக்கான படங்களை அறிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பல நாட்டு படங்கள் போட்டியில் இருந்தன. இதில் நம் படத்துக்கு எங்கே விருது கிடைக்கும் என மூவருமே சாதாரணமாக நிகழ்ச்சியை பார்த¢துக் கொண்டிருந்தனர். சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளுக்கான விருதுகளை உருது மொழியில் அறிவித்து வந்தனர்.

பத்மினிக்கு இந்தி தெரியும் என்பதால் அவர் அதை உன்னிப்பாக கவனித்து வந்தார். சிறந்த நடிகர் என்ற விருதுக்கான அறிவிப்பு வந்தது. பந்துலு, சிவாஜி அமர்ந்திருந்த சேர்களுக்கு நடுவே பத்மினி அமர்ந்திருந்தார். அந்த அறிவிப்பை கேட்டதும் எழுந்து நின்றவர், துள்ளிக் குதித்தார். ÔÔஅண்ணே உங்களுக்கு விருது அறிவிச்சிருக்காங்கÕÕ என சத்தமாக சொல்ல, சிவாஜி, பந்துலு பிரமித்து போனார்கள். அவர்கள் இருவருக்குமே சந்தேகம். நம்ப முடியவில்லை. ஆனால், அதுதான் உண்மை. அன்று கெய்ரோ பட விழாவில் நம் தமிழர் விருது வாங்கினார். சிறந்த இசைக்காக ஜி. ராமநாதனுக்கும் கெய்ரோ விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு நாடு முழுவதும் பரவியது. ஆஸ்கர் விருது வாங்கியதற்கு நிகரான பெருமைய¤ல் தமிழ் சினிமா சந்தோஷத்தில் திக்குமுக்காடியது.

Vyapam scam: Manhunt on for 34 absconding UP MBBS students

The Special Investigation team probing the Madhya Pradesh Professional Examination Board (MPPEB) or Vyapam scam in Bhopal has declared 34 MBBS students of Kanpur's Ganesh Shankar Vidyarthi Medical College as absconders and has announced a reward of 2,000 for information on them. The SIT has also put up posters across the medical college to nab them for their involvement in the multi-crore scam.

The students are among the 54 medical students from Uttar Pradesh, Madhya Pradesh and Bihar who had taken the PMT (Pre-Medical Test) in Madhya Pradesh while impersonating aspiring candidates. The remaining 20 students have already been arrested and sent to jail.

The scam had rocked the states of Madhya Pradesh and Uttar Pradesh as several big names were found involved in the racket.

Most of these students were linked to a coaching institute in Kakadev area of Kanpur which used to promise weak candidates admissions to medical colleges in Madhya Pradesh.

The Bhopal SIT also visited Jhansi, Saifai and Pratapgarh to nab some of the absconding students but did not succeed in its hunt.

Two students of Kanpur Medical College against whom a cash reward was announced have already completed their MBBS.

தரையிறக்கப்பட்ட விமானம்: தேனியால் வந்த வினை

லண்டன் : பிரிட்டனின், சவுத்தாம்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம், தேவையற்ற, அன்னிய பயணியின் வருகையால், அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, ப்ளைபீ நிறுவனத்தை சேர்ந்த, பீ-384 என்னும் பயணிகள் விமானம், சவுத்தாம்டன் விமான நிலையத்தில் இருந்து டப்ளினுக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனே, சவுத்தாம்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும், சவுத்தாம்டன் விமான நிலையத்தில், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றிய பின், பொறியாளர்கள் விமானத்தை சோதனையிட்டனர்.சிறிது நேர சோதனைக்குப் பின், விமானத்தின் பின்பகுதியில் பறந்து கொண்டிருந்த தேனீ கண்டுபிடிக்கப்பட்டது.தேனீயால் ஏற்பட்ட தாமதத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது. பின்னர், பயணிகளை ஏற்றிக்கொண்டு, விமானம் புறப்பட்டு சென்றது.

வேலைவாய்ப்பில் வயது வரம்பு சலுகைஉயர்நீதிமன்றக் கிளை மறுப்பு


மதுரை:'வேலை வாய்ப்பில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது,' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
தேனி பெரியகுளம் கெங்குவார்பட்டி கனி தாக்கல் செய்த மனு: கனரக வாகனம் ஓட்ட உரிமம் பெற்று, 2002 ல் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். 13 ஆண்டுகளாக எந்த நேர்காணலுக்கும் அழைக்கவில்லை. மே 1 ல் மருத்துவ பணிகள் நியமன தேர்வு வாரியம் டிரைவர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியிட்டது. வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட பதிவு மூப்பு பட்டியலில் என் பெயர் இல்லை.

ஜூலை 1 ஐ தகுதியாகக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வயதுவரம்பைவிட, 24 நாட்கள் கடந்ததாகக்கூறி நிராகரித்தனர். வயது வரம்பை தளர்த்தி நேர்காணலில் பங்கேற்க அனுமதித்து, பணி நியமனம் வழங்க கலெக்டர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: மனுதாரருக்கு ஜூலை 1 நிலவரப்படி 24 நாட்கள் வயதுவரம்பு கடந்து விட்டது. மனுதாரருக்கு மட்டும் சலுகை காட்ட முடியாது. வயது வரம்பு உட்பட நிர்வாக முடிவுகளில் தலையிட முடியாது. சலுகை வழங்கினால் மனுதாரர் போல் பாதிக்கப்பட்டுள்ள பலர் சலுகை கோருவர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணதாஸ் ஆஜரானார்.

உண்ட வயிற்றுக்கு இரண்டகம்...

நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விவகாரம் ஓர் எரிமலையைப்போல வெடித்துக் கிளம்பியிருக்கிறது. இரண்டே நிமிடங்களில் வேகவைத்து உண்ணக் கூடிய அந்தப் பொட்டல உணவில், உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கிற நச்சுக் கூறுகள் மிகுந்திருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தில்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் அதற்குத் தடை விதித்துள்ளன.
மேகி நூடுல்ஸின் பெரும்பான்மை நுகர்வோர்களாக விளங்கிய குழந்தைகளே அதைத் தெருவில் போட்டுத் தீயில் எரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, சர்வரோக நிவாரணியாகத் தூக்கிப் பிடிக்கப்பட்ட ஒரு துரித உணவு, அடுப்பின்றியும் பாத்திரமின்றியும் இப்போது நடுத் தெருவில் வெந்து கொண்டிருக்கிறது.
ஒரு நச்சு உணவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற இத்தகைய நடவடிக்கைகளை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது நாட்டின் பெருநகரங்களில் பெருமளவில் விற்பனையாகிவரும் பல்வேறு வகையான கேடான உணவுகள் (ஜங்க் புட்ஸ்), நொறுக்குத் தீனி வகைகளை இன்னும் தீவிரமாகவும் துல்லியமாகவும் ஆய்வு செய்தால் மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியப் பெருநகரங்களில் வாழும் நடுத்தட்டு மக்களின் பரபரப்பான வாழ்க்கை முறையையும் சற்று மேம்பட்ட அவர்களது பொருளாதார நிலையையும் ஆய்ந்துணர்ந்து சில வணிக நிறுவனங்கள், மிகவும் குறிப்பாக உணவு வணிக நிறுவனங்கள், ஒரு புதிய உணவுக் கலாசாரத்தைத் தோற்றுவித்து அந்தக் கலாசாரத்தை விளம்பரங்களால் வளர்த்தெடுத்து வீழ்த்த முடியாதவொரு பெருவணிக வெற்றியை அடைந்துள்ளன.
காற்றுப் புகாத ஈயக் காகிதப் பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்குத் தொங்குகிற துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளில் புதைந்திருக்கும் நலக்கேடுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
என்றாலும் கூட, அத்தகைய எச்சரிக்கைகளை நமது துரித உணவுப் பிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை. இன்றைய நிலையில் அத்தகைய உணவுகள் அவற்றை உண்போரின் உடலைக் கெடுக்கின்றன, அவை அடைக்கப்பட்டிருந்த நெகிழிக் காகிதங்கள் ஆங்காங்கே வீசப்பட்டு ஊரைக் கெடுக்கின்றன.
நமது மக்களின் புதிய உணவுக் கலாசாரம் என்பது மிகவும் வினோதமானது. இந்தக் கலாசாரத்தில், உணவு வகைகளை உடனடியாக வாங்கியோ அல்லது இரண்டே நிமிடங்களில் வேக வைத்தோ தின்றுவிட வேண்டும். வீட்டில் சமைப்பதை கெüரவக் குறைவாகவோ, அலுப்பூட்டுகிற அல்லது அவஸ்தைமிக்க ஒரு வேலையாகவோ கருத வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக உணவு வகைகள் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு முதலில் விழிகளுக்கு விருந்து படைப்பவையாக இருக்க வேண்டும்.
புதிய உணவுக் கலாசாரத்தில் வண்ண வண்ண உணவுகளுக்கே சிறப்பிடம், முதலிடம். இரண்டு இட்லிகளுக்கு நான்கு வகை சட்னி என்பதை நிரூபணம் செய்ய அந்தச் சட்னிகளில் சேர்க்கப்படுகிற நிறமிகள் குறித்தும், அத்தகைய நிறமிகளின் நச்சு விளைவுகள் குறித்தும் யாரும் கவலைப்படுவதில்லை.
உணவுப் பொருள்களின் இயற்கையான சுவை அவற்றின் உண்மையான நிறம், தயாரிப்புத் தரம், சத்துக்கூறுகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வண்ணமயமான உணவுகளே நல்ல உணவுகள் எனும் பொதுக் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
உடலுக்கு வெளியே நாம் அணிகின்ற உடைகள், காலணிகள், நகைகள் போன்றவை குறித்து நிறைய ஐயங்களை எழுப்பி அவற்றை ஆய்வு செய்துப் பார்த்து வாங்கி வருகிற நமது மக்கள், உடலுக்கு உள்ளே சென்று தங்களை உயிர்வாழ வைக்கின்ற உணவுகளைக் குறித்து எத்தகைய ஆய்வையும் மேற்கொள்வதில்லை.
உணவு விடுதிகளில் அமர்ந்து நேரடியாகவும், கடைகளில் வாங்கி வந்து சமைத்தும் உண்கிற பல்வேறு வகையான உணவுகள், உணவுப் பொருள்களைப் பற்றிய மக்களின் அறியாமையே நமது நாட்டில் நச்சு உணவு வணிகர்கள் உருவாகி வளர்வதற்கான முதன்மைக் காரணமாகும்.
இன்றைய நமது உணவு தானியங்கள், காய் கனிகள், கீரை வகைகள் அனைத்தும் உயிர்க்கொல்லி ரசாயனங்களை உறிஞ்சிக் கொண்டு உற்பத்தியாகின்றன. இது நமது உணவுப் பொருள்களுக்கு நேருகின்ற முதல் கட்டத் துயரம். பிறகு அவற்றைப் பாதுகாக்கவும் பளபளப்பாக்கவும் பயன்படுத்தப்படுகிற ரசாயனங்கள் இரண்டாம் துயரம்.
அடுத்ததாக அவற்றில் அதனதன் பொருத்தத்துக்கு ஏற்ப கொடூரமான பேராசையில் கலப்படங்கள் செய்து சந்தையில் இறக்குவது மூன்றாம் துயரம். அதற்கடுத்ததாகச் சமைப்பதன் பொருட்டும், சமைத்ததைப் பளபளப்பாக்கும் பொருட்டும் சேர்க்கப்படுகிற நிறமிகளும், வேதிப் பொருள்களும் நான்காம் துயரம். ஆக, நமது உணவு வகைகளில் மிகப் பெரும்பாலானவை நான்கு கட்டங்களாகப் பிரித்து நஞ்சேற்றம் செய்யப்பட்டவையாக இருக்கின்றன.
இவை போதாதென்று மரபணு மாற்ற அறிவியலால் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு சந்தைகளில் மின்னுகிற காய் கனிகள், நோய்க் கனிகள் பற்றிய எச்சரிக்கைகள் கூடுதல் துயரமாகி இன்னொரு பக்கத்தில் நம்மை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.
பழ வகைகளுக்கு இழைக்கப்படும் இரண்டகங்கள் இன்னும் மோசமானவை. பழங்கள் நமது பசிக்கும், உடல் நலனுக்கும், சுவையுணர்வுக்கும் இயற்கை நேரடியாகத் தருகிற பரிசுகளாகும். குழந்தைகள், தாய்மையடைந்துள்ள பெண்கள், நோயாளிகள் ஆகியோருக்குப் பழங்களும், அவற்றின் சாறுகளுமே பரிந்துரை செய்யப்படுகின்றன.
ஆனால், அவற்றைப் பாதுகாத்து வைத்து விற்பனை செய்யும் பொருட்டு அவற்றின் மீது தெளிக்கப்படுகிற ரசாயனங்களால் அவை வார, மாதக் கணக்கில் சாம்பல் பூத்த நிலையில் கெடாமல் இருப்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. அடையாள வில்லை ஒட்டப்பட்டு பளபளப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் விற்பனையாகிற ஆப்பிள்களை வாங்கிச் சுரண்டினால் கணிசமான அளவில் வெண்ணிற மெழுகு வருகிறது. அந்த மெழுகைக் குவித்து வைத்துக் கொளுத்தினால் சுடர்விட்டு நின்று எரிகிறது.
இந்த விவகாரம் பிரச்னையாக மாறியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் மெழுகு பூசப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என உணவுத் தர நிர்ணய அதிகாரிகள் தெரிவித்தனர். ஓர் அபாயத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவு என்ன வேண்டிக் கிடக்கிறது என்று தெரியவில்லை.
கண்களுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்ற இன்றைய பழ வகைகளில் பெரும்பாலானவை ரசாயன ஆடை பூண்டவை. இயற்கைக்கு எதிரான வகையில் வன்முறையில் பழுக்க வைக்கப்பட்டவை. ரசாயனக் கலவைகளில் முக்கி எடுக்கப்பட்டவை அல்லது ரசாயனங்கள் தெளிக்கப்பட்டவை.
அவற்றை நாம் உப்பு நீரில் நன்றாக ஊற வைத்துப் பல முறை கழுவியும், அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப தோல் சீவியும் உட்கொள்ள வேண்டியிருக்கிறது.
எத்தகைய உணவுப் பொருளையும் கெடாமல் பாதுகாத்து வைத்திருந்து விற்பனை செய்வது, நுகர்வோருக்கு அவற்றை மிகக் கவர்ச்சியாகக் காட்டுவது, வலிய வலிய அவற்றுக்குச் சுவை சேர்ப்பது என்கின்ற மூன்று நிலைகளால்தான் அவை ரசாயனமயமாக மாறுகின்றன.
தேநீர்க் கடைக்காரர்களுக்குத் தேயிலைத் தூள் தனியாகவும் அதில் கலக்க சாயம் தனியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தேநீர் கலப்படக் கலாசாரத்தைக் கண்டறிந்து அதிர்ந்துபோன இந்தியத் தேயிலை வாரியம், தேயிலைத் தூள் விற்பனையாளர்கள், தேநீர்க் கடைக்காரர்களை மிகக் கடுமையாக எச்சரித்தும், உண்மையான தேயிலைத் தூளின் தரம் பற்றி விளக்கியும் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்த வேதனையும் அரங்கேறியது.
ஆடுகளை அதிக எடையுள்ளதாகவும், கொழு கொழுவென இருப்பதாகவும் காட்டி விற்பனை செய்ய நினைப்பவர்கள், குழாய்களின் வாயிலாக வன்முறை வழியில் அவற்றுக்கு வலிய வலிய வயிறு புடைக்கத் தண்ணீர் புகட்டி சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். வணிக வெறி என்பது எதற்கும் துணிந்த ஒன்று என்பதற்கு இதுவே சான்றாகும்.
மனிதர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு வேளை உணவு உண்டு உயிர் வாழ்ந்தாக வேண்டிய உயிரியல் உண்மையே சில உணவு வணிகர்களுக்கு கொண்டாட்டமாக ஆகியுள்ளது.
எனவே, அவர்கள் தங்களுக்கு வசதியான, மிகை வருவாய் தரக்கூடிய, குழந்தைகள் உள்படக் கவர்ச்சிக்கு மயங்குவோரைக் குறிவைத்து உணவு வகைகளைத் தயாரித்து அவற்றை இமயமலை உயரத்துக்குத் தூக்கிப் பிடிக்கின்றனர்.
பல்கிப் பெருகியிருக்கும் காட்சி ஊடகங்கள் விளம்பரம் என்கின்ற வகையில் அவற்றைப் பெருமளவில் பரப்புகின்றன. ஆக, இன்றைய நமது நடுத்தரக் குடும்பத்தினர் உண்ண வேண்டிய உணவுகளைப் பெரும்பாலும் ஊடகங்களே தீர்மானிக்கின்றன.
இந்நிலையில், இந்தக் கலப்புகள் குறித்து விழிப்புடன் இருந்து நுட்பமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் உணவுத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள்தான்.
அதற்கடுத்து விழிப்புடன் இருந்து கொள்வன கொண்டு தள்ளுவதைத் தள்ள வேண்டியவர்கள் நுகர்வோர்களான மக்களேயாவர். ஆனால், மக்களோ தொலைக்காட்சி மோகத்தில் சிக்கி இது குறித்து கவலை கொள்ளாதவர்களாகவே உள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில், ஆறுதல் தரக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் கொஞ்சம் சிந்திக்கிற மக்கள், இயற்கை உரங்களிலேயே விளைந்த மரபார்ந்த நமது இயற்கை உணவுகளின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள் என்பதுதான். இன்றைக்கு கேழ்வரகு, சாமை, தினை, வரகு, பனைப் பொருள்கள், கீரை வகைகள், காய்கனிகள் போன்றவற்றின் மீது மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இயற்கை உணவு வணிகம் வருவாய் காண்கிறது எனும் குற்றச்சாட்டு எழுத்தாலும்கூட, இயற்கை வழி உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் விலையும் குறைந்து விடும் என்கிறார்கள் இயற்கை உணவு விற்பனையாளர்கள்.
இனி வேறு வழியில்லை. இயற்கைக்கே திரும்பியாக வேண்டும் இவ்வுலகம்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...