Thursday, July 9, 2015

New NAAC Norms to Speed up Accreditation

COIMBATORE: The National Assessment and Accreditation Council (NAAC) has decided to speed up the assessment of higher education institutions for accreditation.

According to the new procedure, applicable from August 1, the institutions can submit the letter of intent (LOI) for assessment and accreditation only after uploading the self-study report (SSR) on their websites. The registration fee should be paid within 10 days of submitting the LOI. The NAAC will process LOI and communicate its decision to the institution within 15 days.

Within a week of the LOI’s acceptance, the institutional eligibility for quality assessment (IEQA) must be submitted to the NAAC. The self-study report is to be submitted to the NAAC within two weeks of acceptance of the LOI or IEQA.

The NAAC will constitute the peer team and decide on the dates of its visit to the institution in three weeks of receipt of self-study report. The visit should be completed within one month.

If NAAC finds the LOI deficient, it will be rejected. The institutions will then have to submit it again, with registration charges.

The LOIs, IEQAs and SSRs submitted up to July 31, will be processed as per the existing procedure.

Currently, the LOI is processed within 40 days and the SSR submitted within six months of it. The processing, finalising and intimating the decision on IEQA will take another 75 days. There is no specific time frame for constitution and visit of the peer team, which now takes a few months.

In 2012, the UGC issued the Mandatory Assessment and Accreditation of Higher Educational Institutions Regulations, according to which all institutions of higher education had to get NAAC accreditation by June 1, 2014.

Institutions that failed to get accredited were not to get UGC assistance from April 1, 2015. Later, the deadline for accreditation was extended to December 31, 2015.

HC orders KIMS to pay Rs 1 crore each to 3 MBBS students

The High Court on Wednesday directed the Kempegowda Institute of Medical Sciences (KIMS) in the city to pay Rs one crore each to three MBBS students within a month, for admitting them illegally and wasting one year of their academic career.

While hearing a petition by Girish Rithvik, R Lekhashree, Sreekar Surapaneni and Vadaanya Venkatesh, the students who were fighting for one medical seat in KIMS, Justice H G Ramesh ruled the seat in favour of Rithvik. He passed an order directing Rajya Vokkaligara Sangha, which runs KIMS, and the college to refund all fees paid by the other three students under different heads.

The total number of medical seats at KIMS was reduced from 150 to 120 for the academic year 2014-15, which led to a decrease in the management quota seats from 30 to 24. However, KIMS admitted 30 students instead of 24, hoping to get approval for the additional six seats, for which it had moved the Apex Court. But the court did not approve it.

Interim order

After the admissions, four students were left fighting for one seat. As they had moved the High Court, an interim order was passed allowing them to attend the classes. However, their admissions were not approved. The single judge ruled the seat in favour of one student on merit basis.

The judge said that the act of the college (KIMS) had resulted in they losing one academic year and also landing them in unnecessary litigation. This created uncertainty about their future and mental agony to them. The judge directed that an amount of Rs five lakh be paid by KIMS to all the four students for having driven them to unnecessary litigation. The judge ordered KIMS to refund Rs 65 lakh collected from Rithvik’s father towards contribution fund.

The judge said that the order would not come in the way of filing any civil or criminal proceedings against the two directors of the Sangha. The order would also not come in the way of the Medical Council of India to take action against KIMS and the Sangha in accordance with law for illegally admitting three students. The students may also file a contempt petition against the institution for not following the Supreme Court order.

MBBS course stopped in 7 U.P. colleges

The Medical Council of India has barred seven of the 16 private medical colleges in U.P. from running the MBBS course, officials said on Wednesday.

As a result, the number of MBBS seats in Uttar Pradesh for the 2015-16 session has shrunk by 900.

These seven institutes include Integral Institute of Medical Sciences and Career Institute of Medical Sciences in Lucknow and Mayo Institute of Medical Sciences, Barabanki.

Both the institutes in the state capital have 100 seats each while the Barabanki institute has 150 seats. The MCI had inspected them some time back and found them wanting on various parameters including faculty, infrastructure and labs.

The other institutes and medical colleges barred are Major S.D. Singh Medical College, Fatehgarh, Rama Medical College Hospital and Research Center, Hapur, Rajshri Medical Institute, Bareilly and FH medical College Tundla in Firozabad district. - IANS

Dr. NTR University of Health Sciences has announced the first counselling schedule for academic year 2015-16 for admissions in MBBS and BDS courses.

Dr. NTR University of Health Sciences has announced the first counselling schedule for academic year 2015-16 for admissions in MBBS and BDS courses.

Addressing a press conference on Wednesday, the University Vice-Chancellor T. Ravi Raju said verification of certificates and counselling for the physically handicapped would be done by the Medical Board on July 29 in the morning session.

Counselling will be held for OCs in the afternoon session from 3 p.m. on the same day and it will continue on July 30 and 31.

Counselling sessions will be held for SC, ST and BC candidates on August 1, 2 and 3 besides verification of certificates under sports, games, CAP (Army), NCC and PMC (Police Martyr’s Children). On August 4, for defence quota candidates.

Dr. Raju said counselling dates for special category seats will be decided after receiving the priority list from the Directorates concerned and second and final round of counselling schedule will be decided later.

Counselling sessions will be held for SC, ST and BC candidates on August 1, 2 and 3.

என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டு: சுப்ரீம் கோர்ட்டில் அரசு தகவல்...தினமலர்



புதுடில்லி: 'வெளிநாடு வாழ் இந்தியர்களான, என்.ஆர்.ஐ.,க்களுக்கு விரை வில் ஓட்டுரிமை அளிக்கப்படும். இதற்கான மசோதா, மத்திய அமைச்சரவை குழுவுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உரிமை

வெளிநாடு வாழ் இந்தியர் கூட்டமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஓட்டு அளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். 114 நாடுகளில், வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது; அதில், 20 நாடுகள் ஆசியாவைச் சேர்ந்தவை. நம் நாட்டிலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டால், ஒரு கோடி பேர், ஓட்டளிக்கும் உரிமையை பெறுவர்.

இவ்வாறு, அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, எச்.எல்.தத்து, நீதிபதிகள், அருண் மிஷ்ரா, அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு

வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பி.எஸ்.நரசிம்மா கூறியதாவது:

என்.ஆர்.ஐ.,க்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை வழங்குவதற்கு மத்திய அரசு விரைவான

நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வரைவு மசோதா தயாராகியுள்ளது. அந்த மசோதா, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒப்புதல்

அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, அதை பார்லி.,யில் நிறைவேற்றி, என்.ஆர்.ஐ.,க்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

சின்னக் கவலைகள் தின்னத் தகாது By கிருங்கை சேதுபதி

நம்மில் பலருக்குப் பொழுது புலரும்போது விழிப்பு வருகிறதோ இல்லையோ, விதவிதமான கவலைகள் முளைத்துவிடுகின்றன. கவலைப்படுவதற்கு ஒன்றுமேயில்லையே என்று கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.
கவலைப்படுவதற்கு எத்தனையோ இருக்க, எனக்குக் கவலைகள் குறித்த கவலைகளே அதிகம்.
கொஞ்சம் செவிகொடுத்து விட்டால், நெஞ்சு கொள்ளாத அளவுக்குத் தத்தம் கவலைகளை இறக்கிவைத்துவிட்டுக் கவலையில்லாமல் போய்விடுவோர் கணக்கற்றோர். அதுவும் அந்தச் சமயம்தான். அடுத்தும் அவர்கள் கவலைகளைக் கொண்டு வந்து கொட்டிவிட வருவார்கள்.
மனக் கவலை மாற்றத் துணையாகும் தாள் உடையான், தனக்குவமையில்லாதான் என வள்ளுவர் விளக்கிக் காட்டிய கடவுள் யார் எனப் பலருக்குக் கவலை?
இருக்கிறாரா என்று ஐயுறுகிற பக்தர்களையும், இருப்பாரோ என்று எண்ணுகிற நாத்திகர்களையும்விட, இன்மையும் இருப்பையும் தாண்டி உண்மையைத் தேடுவார் உள்ளார்களா என்று கடவுளுக்கே கவலை தருகிற காலம்.
இதில், சூழல் சீர்கேடு, ஒழுக்கக்கேடு, ஊழல் முதலாச் சமுதாய நிலைகேடு குறித்த பெருங்கவலைகளுக்கு முன்னர் அற்பத்தனமான சின்னக் கவலைகள்தாம் அணுஅணுவாய் நம்மைத் தின்று கொண்டிருக்கின்றன.
சர்க்கரை நோய் வந்தவர்களைவிடவும், வரப் போகிறதே என்று கவலைப்படுபவர்களே அதிகம்.
பொதுவாய், மழை வர வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கிறவர்கள்கூட, மழை வந்துவிடுமோ என்று எண்ணி நைகிறவர்களாக இருக்கிறார்கள், குடைகள் போன்ற உடைமைகள் இருந்தும்.
எதையும் முன்கூட்டியே எண்ணித் திட்டமிடுகிறவர்களைவிட, என்னென்ன நிகழப் போகின்றனவோ எனக் கற்பனை செய்து கொண்டு கவலைப்படுவோர் பலர். அவர்கள் வாழ்வில் அவை அப்படியே நிகழ்ந்துவிடுவதும் உண்டு. காரணம், அவர்களின் ஜாதகம் அப்படியில்லை. எண்ணத்தில் வலிமையென்று தெரியாமல், என்னென்னவோ பரிகாரங்கள் செய்வார்கள். அதனாலும் பலன் கிட்டாமல் போகுமோ என்கிற கவலையும் இவர்களுக்கு உண்டு.
இவர்கள்தான் கவலைகளைப் போக்க, இரு கரம் கூப்பி, இறைவனின் சந்நிதி முன் நின்று வழிபடும் வேளையில், ஆலயத்தின் வாசலில் கழற்றிவிட்ட செருப்புகள் களவு போய்விடுமோ என்று கவலைப்படு
பவர்கள்.
இப்படி எடுத்துச் சொல்லி முடியாத எத்தனையோ கவலைகளுக்கென்றே வாழ்க்கைப்பட்டவர்களுக்கு எதிர்காலமும் பய மயமே. எதனைக் கண்டாலும் இவர்களுக்கு அச்சமே.
"அஞ்சாத பொருளில்லை அவனியிலே' என்ற பாரதியின் பாட்டுடைத் தலைவர்கள் இவர்கள்தாம்.
"பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகா தென்று
நின்னைச் சரணடைந்தேன்' என்று கண்ணம்மாவை நோக்கிக் கவி பாடுகிறார் பாரதி. இங்கே, கண்ணன் அம்மாவாகி விடுகிறான், காதலியாகிறான், அவர்தம் காதல் மனைக் கிழத்தியாம் செல்லம்மாவும் ஆகிறான், எல்லா உயிரிலும் இருக்கிற கண்ணன் எல்லாமாகவும் இருந்து காப்பான் என்பது நிதர்சனம். அதைவிடவும், அச்சம் தருபொருள் ஒன்றுகூட, இந்த அவனியில் இல்லை என்பதே இதன் விளக்கம்.
இப்போதோ, அன்புக்குரிய அப்பாவைவிடவும் அம்மாவைக் கண்டு அஞ்சுபவர்களும், அன்பு இணையான மனைவியைக் கண்டு அஞ்சுபவர்களும் மிக அதிகம். மருமகளைக் கண்டு அஞ்சும் மாமியார்களும் பெருகி வருகிறார்கள்.
கனவில் தம் மேலதிகாரியைக் கண்டால்கூட எழுந்திருக்கிறவர்களுக்கு, கனவின் பலனாய் வருவது எதுவோ என்ற கவலையிலேயே பொழுது விடிந்துவிடும். ஆனால், கவலை விடுவதில்லை.
குற்றம் புரிந்தவர்கள் கொஞ்சமும் அஞ்சாது நெஞ்சு நிமிர்த்தித் திரிகிற உலகில், தவறுகள்கூட நிகழ்ந்துவிடக் கூடாதென்று கவலைப்படுகிறவர்களின் உயிர்களின் மீதுதான் எமனுக்கு அதிக விருப்பம் போலும்.
அறியாமையால், அரைகுறை அறிவால் மனதில் தோன்றுவது பயம். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' எனத் தொடர்வது அச்சம்.
மிச்சமிருக்கிற வாழ்நாள் முழுவதையும் தனக்கே அடிமையாக்கிக் கொள்ளும் அச்சம் கீழ்களது ஆசாரம் என்கிறார் வள்ளுவர். அச்சமே மரணம், அச்சத்துக்கு அப்பாலும் நீ செல்ல வேண்டும் என்கிறார் விவேகானந்தர்.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்று நம்மையும் சேர்த்துக் கொண்டு அறைகூவல் விட்டார் அப்பர்.
அஞ்சும் நெஞ்சங்களுக்கு ஆக்கம் தருகிற ஊக்கமொழிகளை, உண்மைகள் காட்டி உடன்பாட்டு நிலையிலும் எதிர்நிலையிலும் நின்று உணர்த்திய சான்றோர் எண்ணற்றோர். அந்த மரபில் நின்று, அச்சம் தவிர் என்று ஆணையிடுகிறார் பாரதி.
அறிவைத் துணைக் கொண்டு அதனை வெல்லத்தான், அருளாளர்களும் சான்றோர்களும் அறம் உரைத்தார்கள். அன்பு வழிப்பட்ட பக்தி நெறி காட்டினார்கள். பலரும் கருதுவதுபோல், தமிழக பக்தி நெறி பயத்தின் காரணமாகத் தோன்றியதில்லை.
பயபக்தி என்கிற சொல்லாடல் பொருந்தாது. பயத்தை முன்னிறுத்தித் தொடங்கும் பக்தியில் இருந்துதான் மூடத்தனங்களே முளைக்கின்றன. அதனை எதிர்த்துத்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் அருள் முழக்கமிட்டார்கள்.
ஆத்திகர்களைவிடவும் நாத்திகம் முழக்கிய நல்லோர் பலர் இந்தநிலைப் பாங்கில் ஆன்மிகத்துக்கு அணுக்கமாய் நின்றார்கள்.
இன்றைக்கு அத்தகையோர் பலர் அருகிவிட்டதால், இரு பெருந்துறைகளிலும் எழுகின்றன குழப்பங்கள். களைவதற்குப் பதிலாகக் கவலைகளை மென்மேலும் விளைவிப்பதுதான் விபரீதம்.
உண்மையிலேயே, விரக்தியால் விளைவது நாத்திகமும் இல்லை, பயத்தால் எழுவது பக்தியுமில்லை.
"அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை' என்ற நெஞ்சுரம்தான் ஆன்மிகத்தின் நிலைப்பாடு.
பாதகம் செய்பவர்களைக் கண்டால் தோன்றுவது பயம். அடுத்து என்ன நடக்குமோ என்று அதிரும்படியான நடுக்கத்தை உண்டாக்கி, நினைக்கத் தொடர்வது அச்சம். இதனை எண்ணியே, மனம் கவலுவதால் அது கவலை.
இப்போது, யானைகளைக் கண்டால்கூடப் பயமில்லை. கொசுக்களை நினைத்தால்தான் பயமாயிருக்கிறது. அதைவிடவும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் தரும் தொல்லைகளுக்கு ஏது மருந்தென்ற கவலை வளர்கிறது.
பெருங்கவலைகள் பொதுவானவை மட்டுமல்ல, நிரந்தரமானவை. திடுக்கிடும்படியாய், அடிக்கடி வருகிற சின்னக் கவலைகள்தான் மிகவும் ஆபத்தானவை.
பெரிது சிறிதென்று பேதம் பார்க்க முடியாத அளவுக்குப் பெருகிவரும் கவலைகளைக் கடக்க, அன்பைப் பெருக்கி, ஆசைகளைச் சுருக்கி, இன்பம் தரும் சின்னச்சின்ன நிகழ்வுகளில் சிந்தையைச் செலுத்துவதே சிறந்தது.
இல்லாதவற்றை எண்ணி, ஏங்கிக் கவலைப்படுவதைவிட, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவதே இன்பம்.
அதையெல்லாம்விட, பெரிய கவலைகளில் கவனம் கொள்வதுதான் உ(ய)ரிய மருந்து.
கேவலம், உப்புக்கும், புளிக்கும் கவலைப்பட வைத்தால், நான் நாஸ்திகனாகி விடுவேன் என்று பராசக்தியையே பயமுறுத்திக் கவலைப்பட வைத்த பாரதியின் கவலையெல்லாம், பெரிதினும் பெரிதான கவலைகள் மீதுதான்.
கண்ணுக்கு முன் நிற்கும் சின்னக் கவலைகளைப் புறந்தள்ளிவிட்டுக் கண்ணுக்குத் தெரியாத கரும்புத் தோட்டத்தில் (பிஜித் தீவில்) பெண்கள் படும் துயரங்களை எண்ணிக் கண்ணீர் பொங்கக் கவலைப்படுகிறாரே, அதுதான் பாரதி. அந்தப் பாட்டு தருவதுதான் பாடம்.
முன்னர் சொல்லிய பாரதியின் பாடலை அடியொற்றி, பின்னர் வந்த ஜெயகாந்தன் சொன்னார்:
பொன்னை பொருளை புகழை விரும்பிடும்
சின்னத்தனம் எனைத் தின்னத் தகா தென்று
நின்னைச் சரணடைந்தேன் - என்று அந்த வரிசையில் நாமும் பாடலாம். சின்னக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன்.
கவலையாய் முதலை விழுங்கிடும்போது, ஆதிமூலமே என அலறிய யானைக்குக் கருடன் மீதேறி வந்த கடவுள் நமது கவிதைக்குச் செவி சாய்க்க மாட்டானா என்ன? கடவுளோ, கவிதையோ கவலையை ஒழிக்க வராவிடில்... என்று வருகிற சின்னக் கவலைதான் முதலில் நம்மைத் தின்னத் தகாதது.
பெரிது சிறிதென்று பேதம் பார்க்க முடியாத அளவுக்கு பெருகிவரும் கவலைகளைக் கடக்க, அன்பை பெருக்கி, ஆசைகளைச் சுருக்கி, இன்பம் தரும் சின்னச்சின்ன நிகழ்வுகளில் சிந்தையை செலுத்துவதே சிறந்தது. இல்லாதவற்றை எண்ணி, ஏங்கிக் கவலைப்படுவதைவிட, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவதே இன்பம்.

'வியாபம்' என்கிற மரண வளையம்!

தில்லியிலுள்ள விடுதி ஒன்றில் ஜபல்பூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் அருண் சர்மா மர்மமான முறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தார். இவருக்கு முன்னால் முதல்வராகப் பணியாற்றிய டாக்டர் டி.கே. சகல்லேவும் மர்மமான முறையில்தான் மரணமடைந்தார் என்பதுதான், இந்த மரணம் பற்றிய ஐயப்பாட்டை அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி டாக்டர் சகல்லேவின் உடல் தீக்காயங்களுடன் அவரது வீட்டில் காணப்பட்டது அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

டாக்டர் அருண் சர்மா மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார் என்றால், அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை, அக்ஷய் சிங் என்கிற தொலைக்காட்சி சேனல் நிருபருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்தார். மர்மமான முறையில் 2012-ஆம் ஆண்டு இறந்த நம்ரதா தமோர் என்கிற மாணவியின் சடலம் ரயில்வே தண்டவாளம் அருகில் மீட்கப்பட்டது தொடர்பாக அவரது பெற்றோர்களைப் பேட்டி காணச் சென்ற இடத்தில்தான் அக்ஷய் சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

டாக்டர் அருண் சர்மா, டாக்டர் சகல்லே, நம்ரதா தமோர், அக்ஷய் சிங் ஆகியோர் உள்பட இதுவரை மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் 46 பேருக்கும் ஒரு தொடர்புண்டு. இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தையும், இந்தியா முழுமையையும் உலுக்கிக் கொண்டிருக்கும் "வியாபம்' முறைகேட்டுடன் தொடர்புடையவர்கள்.
இந்நிலையில், தேர்வு வாரியத்தால் காவல் துறை உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, சாகர் மாவட்ட பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த அனாமிகா சிகர்வார் (25) என்ற இளம்பெண், அந்த மையத்தை ஒட்டிய ஏரியில் சடலமாகத் திங்கள்கிழமை மீட்கப்பட்டார். அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்றும் அவர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு இல்லை என்றும் காவல் துறையினர் கூறினாலும், அவரது மரணம் வியாபம் முறைகேடு சர்ச்சையை மேலும் கடுமையாக்கி இருக்கிறது.
இதுவரை, வியாபம் முறைகேட்டுடன் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகள் உள்ளிட்ட 46 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்று வரும் மாநில சிறப்புப் புலன் விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி அதில் 23 மரணங்கள் இயற்கையான மரணங்களல்ல. இறந்தவர்களில் பெரும்பாலானோர் சாலை விபத்தில் மரணமடைந்திருப்பதாகவும், அவர்கள் 25 முதல் 30 வயதுக்குள்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. 

வியாபம் முறைகேடு என்பது 2007-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இதுபற்றிய உண்மைகள் 2013-இல்தான் வெளியாகின. வியவசாயிக் பரிக்ஷா மண்டல் அல்லது "வியாபம்' என்பது, நமது அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் போன்ற ஓர் அமைப்பு. மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, காவல் துறைப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள், அரசுப் பணி ஊழியர்கள் ஆகியோருக்கான தேர்வு போன்றவற்றை நடத்தித் தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் "வியாபம்' அமைப்பின் பணி.

2007-ஆம் ஆண்டு சில முறைகேடுகள் வெளிவந்தபோது முதல்வர் சிவராஜ் சிங் செüஹான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை வளையம் விரிவுபட்டபோதுதான், நுழைவுத் தேர்வுகளிலும், நியமனங்களிலும் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று வந்தன என்பது வெளிப்படத் தொடங்கியது. மாநில ஆளுநர் அலுவலகத்திலிருந்து பல்வேறு அரசுத் துறைகளும் அமைப்புகளும் இந்த முறைகேட்டில் துணை போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏறத்தாழ ரூ.2,000 கோடிக்கும் அதிகமாகக் கையூட்டுப் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. மாநில காவல் துறை சுமார் 2,000 பேரைக் கைது செய்திருக்கிறது. மேலும், 700 பேர் தேடப்படுகிறார்கள். இதில் பல அரசியல்வாதிகளும் மூத்த அதிகாரிகளும் அடங்குவர். ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் வரை இதில் சம்பந்தப்பட்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் "வியாபம்' முறைகேட்டால் நடத்தப்பட்டிருக்கும் தவறான மாணவர் சேர்க்கையை விசாரிக்கத் தொடங்கியதன் விளைவாகத்தான் அதன் முதல்வர் டாக்டர் சகல்லே எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று சந்தேகப்படுகிறார்கள். ரயில்வே தண்டவாளத்தின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நம்ரதா தமோர் என்கிற பெண் வியாபம் முறைகேட்டுடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, இந்த முறைகேடு பற்றிய விசாரணையில் முக்கிய சாட்சியாகவோ, குற்றவாளியாகவோ இருப்பவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
.
உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணையை மீறி, மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் தனக்கில்லை என்கிற மத்தியப் பிரதேச முதல்வரின் வாதத்தில் தவறில்லை. அதேநேரத்தில், மத்தியப் பிரதேச அரசே உயர்நீதிமன்றத்திடம் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கோருவதில் என்ன தவறு இருக்க முடியும்? 

முறையான விசாரணை நடத்தப்படுமேயானால், இந்தியாவிலுள்ள அத்தனை மாநிலங்களிலும் "வியாபம்' வியாபித்திருக்கும் என்பதுதான் சொல்லக் கூடாத, சொல்ல முடியாத உண்மை!

NEWS TODAY 25.01.2026