Friday, January 1, 2016

சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்,,,dinamani

சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்

First Published : 01 January 2016 01:03 AM IST
சென்னை வெள்ள நிவாரணத்துக்காக சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் சார்பில் 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அந்நாட்டைச் சேர்ந்த "மீடியா கார்ப்' என்ற நிறுவனம் வெளியிட்ட செய்தி: சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு "மீடியா கார்ப்' நிறுவனத்தின் கீழ் இயங்கும் வசந்தம் தொலைக்காட்சியும், ஒலி பண்பலை அலைவரிசையும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டன. "லிட்டில் இந்தியா ஷாப்கீப்பர்ஸ்', "ஹெரிடேஜ் அúஸாசியேஷன்' உள்ளிட்ட நிறுவனங்களும் அந்தப் பணிகளில் இணைந்து பணியாற்றின.
 ஹிந்து அறக்கட்டளை வாரியம், நற்பணி பேரவை, சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவுவிடுதிகள் சங்கம், சிங்கப்பூர் தமிழ் சமூகத்துக்கான தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் நிவாரண நிதி திரட்டும் பணிகளுக்கு பெரும் பங்காற்றின.
 இதுவரை 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சென்னை வெள்ளத்துக்கு நிவாரண நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

வணிகப் பொருளாகிவிட்ட வாடகைத் தாய்கள்

Dinamani


By ரமாமணி சுந்தர்

First Published : 30 December 2015 01:02 AM IST


திருமணமாகி ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகும் குழந்தைப் பேறு கிட்டாத தம்பதிகளுக்கு இனப் பெருக்கத்திற்கு உதவும் தொழில்நுட்பங்கள் (Assisted Reproductive Technology) வரப்பிரசாதமாக விளங்குகின்றன. குழந்தையின்மை மருத்துவத்தில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்த கண்டுபிடிப்பு, IVF (in vitrofertilization) எனப்படும் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யும் தொழில்நுட்பம்.
1978-ஆம் ஆண்டு ஜூலை மாதம், IVF செயற்கைக் கருவூட்டல் முறையைப் பயன்படுத்தி உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பிறக்க வைத்தார் இங்கிலாந்து நாட்டு மகப்பேறு மருத்துவர் பேட்ரிக் ஸ்டேப்டேயும், விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்சும். (இவர் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்).
இந்த மருத்துவ அதிசயம் நடந்த இரண்டே மாதங்களில், இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தையை நமது நாட்டில் பிறக்கச் செய்து சாதனை புரிந்தார் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் முகோபாத்யாய்.
செயற்கைக் கருவூட்டல் முறையில், பெண்ணின் சினைப்பை முட்டை தூண்டப்பட்டு, அது வெளியே எடுக்கப்பட்டு, ஆண் விந்து அணுவுடன் சேர்த்து கருவை உருவாக்கி, உருவான கருவை குறிப்பிட்ட நாள்கள் வரை இன்குபேட்டரில் வளர்த்து, பிறகு வளர்ந்த கரு தாயின் கருப்பைக்குள் வைக்கப்படுகிறது.
இந்த செயற்கைக் கருவூட்டல் முறையின் வெற்றிதான், ஒரு பெண்ணின் கருப்பைக்கு குழந்தையைப் பத்து மாதங்கள் சுமப்பதற்கான சக்தி இல்லாமல் இருந்தால்,அல்லது வேறு ஏதாவது மருத்துவச் சிக்கல் இருந்தால், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கருவை, வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி, அவள் மூலம் குழந்தையைப் பெற முடியும் என்பதைச் சாத்தியமாக்கியது. இதுவே, வாடகைத் தாய் என்ற கருத்திற்கு வித்திட்டது.
1986-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாடகைத் தாயின் மூலம் உலகின் முதல் குழந்தை பெற்றெடுக்கப்பட்டது. இந்தியாவில், 2001-ஆம் ஆண்டிலேயே வெளிநாட்டில் வாழும் இந்திய தம்பதியருக்காக வாடகைத் தாய் ஒருவர், குழந்தையைப் பெற்றெடுத்தாலும், கடந்த பத்து ஆண்டுகளில்தான் வாடகைத் தாய் சேவை மையங்கள் அதி வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன
தற்பொழுது தில்லி, மும்பை, சென்னை போன்ற எல்லா பெரு நகரங்களிலும் செயற்கைக் கருவூட்டல் மையங்களுக்கும், வாடகைத் தாய் சேவைக்கும் பஞ்சமில்லை என்றாலும், நமது நாட்டில் வாடகைத் தாய் சேவைக்கு பிரசித்தி பெற்ற இடம் குஜராத் மாநிலத்திலுள்ள ஆனந்த் எனும் ஊர்தான்.
நாட்டில் பால் தட்டுப்பாடு என்பதை அறவே மறக்கச் செய்து வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட ஆனந்த், இன்று பல தம்பதியருக்கு, குறிப்பாக வெளிநாட்டினருக்கு, குழந்தை பாக்கியத்தை அளித்து அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. வாடகைத் தாய்களின் சுற்றுலாத் தலமாக மாறி விட்ட ஆனந்த், கடந்த பத்தாண்டுகளில், செயற்கைக் கருவூட்டல் மையங்கள், வெளிநாட்டினர் தங்குவதற்கான விடுதிகள், உணவகங்கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள், சுற்றுலா முகவர்கள் மற்றும் வணிக வளாகங்கள் என மாபெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
சுமார் இரண்டு லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஆனந்தில், 5 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் துறையில் உள்ளனர். சுமார் ஆயிரம் பெண்மணிகள் தங்கள் சினை முட்டைகளைத் தானமாக வழங்குவதிலும், தங்கள் கருப்பையை வாடகைக்கு விற்று குழந்தையைப் பெற்றுக் கொடுப்பதிலும், பிறந்த குழந்தைக்கு சில மாதங்கள் வரையில் தாய்ப் பால் புகட்டி வளர்ப்பதிலும், ஈடுபட்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகர்களான ஆமிர் கானும், ஷாருக் கானும் வாடகைத் தாயின் மூலம் குழந்தை ஒன்றைப் பெற்றது பரபரப்பாக பேசப்பட்ட விஷயம். இப்படி ஒரு சில இந்தியர்களும் வாடகைத் தாய்களின் சேவையை நாடுகிறார்கள் என்றாலும், இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில், வாடகைத் தாயின் சேவையை நாடும் உள்நாட்டு தம்பதியரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும், இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களும் மட்டுமல்லாது, அயல் நாட்டவர்களும் வாடகைத் தாயைத் தேடி இந்தியாவிற்கு வருவதற்கான காரணம் என்ன?
இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலும், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், வேறு ஒரு பெண்மணி மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை, குறிப்பாக வர்த்தக ரீதியாக, குழந்தை பெற்றுக் கொள்வதை சட்டம் தடை செய்கிறது.
நமது நாட்டில் வாடகைத் தாய்களின் மூலம் குழந்தை பெறுவதற்கு தடையொன்றும் இல்லை. இதுவே பல்வேறு நாடுகளிலிருந்து தம்பதிகள் இந்தியாவை நோக்கி வருவதற்கு முக்கியக் காரணம். நமது நாட்டின் நவீன மருத்துவ தொழில்நுட்பமும், ஆங்கிலம் பேசும் மருத்துவர்களும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டினரை இந்தியா ஈர்ப்பதற்கான மேலும் சில காரணங்கள்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. மேலும், நமது நாட்டில் பணத்திற்காக தங்கள் சினை முட்டைகளை தானம் செய்வதற்கும், கருப்பையை வாடகைக்கு விடுவதற்கும் பல ஏழை, எளிய பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.
குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, வாடகைத் தாயாக செயல்பட்ட பெண்மணிகளில் பலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். பெரும்பாலான வாடகைத் தாய்கள், வீட்டு வேலை அல்லது கட்டடப் பணிகளில் கூலி வேலை செய்பவர்கள் அல்லது செயற்கைக் கருவூட்டல் மருத்துவ மனைகளில் பணியாற்றும், செவிலித் தாய்கள்.
ஒப்பந்தம் செய்து கொள்ளும் பெற்றோர்கள் தங்களுக்காகக் குழந்தையைச் சுமக்கும் பெண்ணிற்கு நான்கு அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரையில் ரொக்கப் பணம் கொடுக்க வேண்டும். இதைத் தவிர, பிரசவம் ஆகும் வரையில் மாதா மாதம் சத்துள்ள உணவு, மருந்து மாத்திரைகள், மற்றும் பிரசவத்திற்கான செலவு என்று எல்லா செலவுகளையும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் தம்பதியரே கவனித்துக் கொள்ள வேண்டும்.
வாடகைத் தாயாகச் செயல்படும் ஏழைப் பெண்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை. தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை இவர்கள் பெரும்பாலும் வீடு வாங்குவதற்கு, மருத்துவச் செலவிற்கு அல்லது குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது.
தற்பொழுது நமது நாட்டில் வாடகைத் தாய் வர்த்தகம் ஆண்டொன்றிற்கு சுமார் 900 கோடி ரூபாயிலிருந்து 1,300 கோடி வரையில் புழங்கும் தொழிலாக வளர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படி, கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்தத் தொழிலைச் சார்ந்தவர்களுக்கு, சமீபத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
வர்த்தக ரீதியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஆதரிக்கவில்லை என்று அறிவித்ததோடல்லாமல், அயல் நாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதையும் தடை செய்துள்ளது. இனப் பெருக்கத்திற்கு உதவும் நாட்டிலுள்ள எல்லா தொழில்நுட்ப மையங்களுக்கும் சென்ற அக்டோபர் 27-ஆம் தேதியன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தடை உத்தரவு அனுப்பியுள்ளது.
வெளிநாட்டவர்கள் இங்கு வந்து வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெறுவதில், குழந்தையை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான கடவுச் சீட்டு, விசா போன்றவைகளைப் பெறுவது போன்ற பிரச்னைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.
வாடகைத் தாய் தங்களுக்காக பிள்ளையைச் சுமந்து கொண்டிருந்த அந்த பத்து மாத காலத்திற்குள், அதன் ஜப்பானியப் பெற்றோர் விவாகரத்து செய்து விட, தனக்கு அக்குழந்தை வேண்டாம் என்று தாய் முடிவெடுக்க, அந்தப் பெண் குழந்தையை தந்தை தத்தெடுக்க இந்திய சட்டம் அனுமதி அளிக்காததால் தர்ம சங்கடமான நிலைமை உருவாகியது அனைவரும் அறிந்ததே!
பணம் படைத்த அயல் நாட்டினர், நமது ஏழை எளியப் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. நமது பெண்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் உடலுக்கு கூறு விளைவித்துக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் இந்தத் தொழிலில், வாடகைத் தாய்கள், குழந்தையின் பெற்றோர்கள் போடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு குழந்தையை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்களாகவும், குழந்தைகள் விற்பனைப் பொருளாகவும் ஆகி விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
குழந்தைக்காக ஏங்கும் ஒரு பெண்ணிற்கும், பணத்திற்காக குழந்தையைப் பெற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இடையே ஏற்படும் இந்த ஒப்பந்தத்தில் இரண்டு தரப்பு பெண்களும் பயனடைகிறார்களே, இதில் என்ன தவறு? என்று கேட்கிறார்கள் மற்றொரு சாரார்.
இன்று நாட்டில் பெருகிவரும் மருத்துவச் சுற்றுலாவில், வாடகைத் தாய் தொழிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு கணிசமான அன்னியச் செலாவணியை ஈட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலை தடை செய்ய வேண்டுமா என்றக் கேள்வியும் எழாமல் இல்லை.
செயற்கைக் கருவூட்டல் மற்றும் வாடகைத் தாய் தொழில்களுக்கான விதிமுறைகளை எடுத்துரைக்கும், இனப் பெருக்கத்திற்கு உதவும் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) மசோதா 2014, இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இதில் குறிப்பிட்டுள்ள விதி முறைகளைக் கடைப்பிடித்து, வாடகைத் தொழிலை, ஒழுங்குபடுத்தி, வெளிநாட்டவர் வாடகைத் தாயைப் பயன்படுத்துவதற்கானத் தடையை நீக்கினால், வாடகைத் தாய்களின் சேவையின் மூலம் பலரும் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
வாடகைத் தாயாகச் செயல்படும் ஏழைப் பெண்களுக்கு நான்கு, ஐந்து லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை.
தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை இவர்கள் பெரும்பாலும் வீடு வாங்குவதற்கு, மருத்துவ செலவிற்கு அல்லது குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துகிறார்கள் என்று குஜராத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சொல்கிறது.

Wednesday, December 30, 2015

எதிர்ப்பலையை 'உணர்ந்து' தேர்தல் களம் காணும் அதிமுக! .....தமிழக செய்திப் பிரிவு

Return to frontpage

ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் மத்தியில் கட்சி மீது எதிர்ப்பு அலைக்கு நிகரான உணர்வு ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம்."

கூட்டணி முயற்சிகள், கட்சிகளின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்கள், மாநாடுகள் என தமிழக தேர்தல் களம் களை கட்டத் தொடங்கியிருக்கிறது.

அதிமுகவும் சட்டப்பேரவை தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் அதிமுக மீதான மக்கள் நம்பிக்கையையும் அடித்துச் சென்றதாக கட்சியினர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டது.

அதிமுகவினர் சிலரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பதை முதல் முறையாக நாங்கள் சமீபகாலமாக பார்க்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைதாகி சிறையில் இருந்தபோது அதிமுகவினர் திக்கற்று நிற்பதுபோல் உணர்ந்தனர். ஆனால், அவர் விடுதலையான பிறகு அதிமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையும் புது உத்வேகமும் பிறந்தது.

ஆனால், வரலாறு காணாத மழை நிலைமையை புரட்டிப் போட்டுவிட்டது.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மக்கள் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. "ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் முதன்முறையாக மக்கள் மத்தியில் கட்சி மீது எதிர்ப்பு அலைக்கு நிகரான உணர்வு ஏற்பட்டுள்ளதை உணர்கிறோம்" என்று ஆளும் கட்சி பிரமுகர்கள் சிலர் கூறியுள்ளனர்.

பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறும்போது, "மழை, வெள்ள பாதிப்புகள் மீது அரசு காட்டிய மெத்தனத்தால் அதிமுகவின் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதேவேளையில், மக்கள் அதிருப்தி திமுகவுக்கு சாதகமாக அமையும் எனக் கூற முடியாது. மக்கள் நலக் கூட்டியக்கத்துக்கு ஓரளவு சாதகம் ஏற்படலாம்" என்றார்.

அதிமுகவின் நாஞ்சில் சம்பத் கூறும்போது, "மக்களின் கோபம் நியாயமானதே. ஆனால் அது மிகவும் தற்காலிகமானதே. வரலாறு காணாத மழையை மக்கள் எதிர்கொள்வது கடினமே. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் கூறியது அவர்கள் உள்ளங்களை தொட்டுள்ளது" என்றார்.

ஆனால், சமூக வலைதளங்களில் ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

கட்சிக்குள்ளும் அதிருப்தி

மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் கிளம்பியிருப்பது ஒருபுறம் இருக்க கட்சிக்கு உள்ளேயும் அதிருப்திகள் நிலவுகிறது. தேனி, கோயமுத்தூர் போன்ற அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாகக் கூறுகின்றனர்.

அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு வேண்டியவர்களே மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு முன்னிறுத்துவதால் கட்சியில் பல ஆண்டுகளாக தொண்டாற்றியவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என சிலர் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்து ஒருவர் கூறும்போது, "அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் பல்வேறு மாவட்டங்களிலும் கட்சியினரிடையே அதிருப்தி நிலவுகிறது. ஆனால் இதை அம்மாவிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்" என்றார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மற்றொரு மூத்த தலைவர் , "கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரும்கூட அமைச்சரவையில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். இது முழுக்க முழுக்க அம்மாவின் முடிவு. அம்மாவுக்காகவே மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கின்றனர். மாவட்ட, மாநகர பிரமுகர்களுக்காக யாரும் வாக்களிப்பதில்லை" என்றார்.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர். 2006 தேர்தல் வாக்குறுதிகளை அம்மா நிறைவேற்றியுள்ளதால் இந்த மாவட்டங்களில் அதிமுக வெற்றி நிச்சயம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஈரோடு அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது விலையில்லா மடிக்கணினி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு ஆகியன எங்களுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தரும் என்கிறார்.

நலத்திட்டங்களால் நன்மையடைந்த பெண்கள் வாக்கும், முதல் முறை வாக்காளர்கள் வாக்கும் தங்களுக்கே என அடித்துச் சொல்கின்றனர் சில அதிமுகவினர்.

கூட்டணி கணக்கு:

தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவுக்கு கூட்டணி அமைப்பதில் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று பாஜகவுடன் கூட்டணி அமைப்பது. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என தமிழக பாஜக தொடர்ந்து மறுத்து வந்தாலும், மத்தியில் இருந்து எவ்விதமான மறுப்பும் வரவில்லை. இதனால் பாஜகவுடனான கூட்டணி வாய்ப்பு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.

பாஜக இல்லாவிட்டால் அதிமுக, வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், இந்த கூட்டணி அமைவதற்கான பணிகள் துவங்குவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

தேர்தல் கூட்டணி கணக்குகள் எப்படி இருக்கும் என இப்போதைக்கு கணிக்க முடியாத நிலையில் கட்சி வட்டாரத் தகவலை வைத்து பார்க்கும்போது மக்கள் மத்தியில் அதிமுக எதிர்ப்பலைகள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது என்றே கூற வேண்டும்.

புத்தாண்டின் புதுவரவு 4-ஜி

புத்தாண்டின் புதுவரவு 4-ஜி

COMMENT   ·   PRINT   ·   T+  
1
தொலைத் தொடர்பு சேவைகளின் தேவை நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. கையிலிருக்கும் ஸ்மார்ட்போனின் திரைகளை மேலும் கீழுமாக நகர்த்தும் நொடிக்குள் இருக்கிறது நமது தொழில்நுட்ப வேகம். தொழில்நுட்ப வளர்ச்சியின் இந்த வேகம்தான் தகவல்களை நமது உள்ளங்கையில் கொண்டு வந்து கொட்டுவதற்காக உலகத்தை விரட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது இணைய உலகின் வேகம்தான் அந்த சேவையை கொண்டுவந்து தரும் நிறுவனங்களின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதாக உள்ளது.
10 ஆண்டுகள்
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதாவது வேகம் நிகழ்கிறது. 1991க்கு முன்னர் இருந்த தொலைத்தொடர்பு சேவைகளை முதல் தலைமுறை தொழில்நுட்பம் (1ஜி) என்று குறிப்பிடலாம். 1991க்கு பிறகுதான் 2ஜி தொழில்நுட்பம் அறிமுகமானது. இதற்கு பிறகுதான் சிக்னல் குறைவான இடத்திலும் தொடர்புகள் கிடைப்பது, குறுஞ்செய்திகள், புகைப்படம் அனுப்புவது மற்றும் தரமாக குரல் வசதிகள் கிடைத்தன.
இதற்கு பிறகு ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட அலைவரிசை முயற்சிகள் நடந்தன. 2.5ஜி, 2.75ஜி என 1999 வரை தொலைத்தொடர்பு அலைவரிசைகளில் முயற்சிகள் இருந்தன. இதற்கடுத்த தொழில்நுட்ப முயற்சியாக 3ஜி தொழில்நுட்ப சேவைகள் 2001ல் தொடங்கப்பட்டது. இதன்மூலம் முன்பைவிட தரமான குரல் வசதி, பாதுகாப்பு, வீடியோ அழைப்புகள், மொபைல் டிவி போன்ற சேவைகள் கிடைக்கப்பெற்றன.
4ஜி
2011 முதல் நான்காம் தலை முறை தொழில்நுட்பமாக 4ஜி அறிமுக மானது. 3ஜி-யை விட வேகம் அதிகமானது. தற்போது பெரிய நகரங் களில் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த சேவையை வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தங்களது அலைவரி சைகளை பயன்படுத்திக் கொள்ள கூட்டு வைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 4ஜி- யின் வேகம் அதிக சிக்னல் கிடைக்கும் இடங்களில் (High Mobility) அதிக பட்சம் 100Mbps தரவிறக்கம், - 50Mbps தரவேற்றம் செய்யலாம். குறைவான சிக்னல் உள்ள இடங்களில் (Low Mobility) 1Gbps-ல் டேட்டாவும் பெற முடியும்.
2005 ஆம் ஆண்டு தென் கொரியா WiMax என்கிற தொழில்நுட்பத்துடன் முதன் முதலில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து இதர நாடுகளும் இந்த சேவையினை தரத்தொடங்கின. உலக அளவில் 4ஜி சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடு தென் கொரியாதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு இந்தியா ஈடு கொடுத்துள்ளதா என்று திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. கம்ப்யூட்டரில் இன்டெல் பென்டியம் காலத்து பயன்பாடுகளையே இன்னும் பலர் தாண்டவில்லை. இன்டெல் கோர், கோர் டூ டுயோ போன்ற அதிவேக பிராசஸர்களைப் பயன்படுத்திவருபவர் களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான்.
செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மிகக்குறைந்த விலையிலேயே ஸ்மார்ட் போன்களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியது கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான். இதனால்தான் தலைமுறை தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் மக்களுக்கு முறையாக சென்று சேர்திருக்கிறதா என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் பல கிராமங்கள் முதல்தலைமுறை தொழில்நுட்ப வாடையே இல்லாமல் இருக்கின்றன என்பதும் உண்மை. தவிர உலகை ஒரு நொடிக்குள் இணைக்கும் இந்த வேகத்தில் நாம் முந்தைய அலை வரிசைகளை பயன்படுத்திய வேகமும் குறைவுதான் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
முன்னணியில் ஏர்டெல்
நான்காம் தலைமுறை அலைவரிசை நமக்கு முன்பாகவே பல நாடுகளிலும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்தியாவில் 2011 ஆண்டில்தான் சேவை தொடங்கப்பட்டது.
ஏர்டெல் நிறுவனம் இதற்கான சோதனை முயற்சிகளில் இறங்கி 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் 4ஜி சவால் என்று இந்தியா முழுக்க சவால் விட்டது. துரு துருவென ஒரு பெண் பல நகரங்களிலும் பிற தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துபவர்களிடம் சவால் விட்டுக் கொண்டிருந்தார். தற்போது இந்த விளம்பரம் தரக்கட்டுப்பாடு அமைப்பால் தடை செய்யப்பட்டு ஓய்ந்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவில் 4ஜி சேவை வழங்கும் அளவுக்கு அலைவரிசை ஏலம் விடப்படவில்லை என்றும், 3ஜி தொழில்நுட்பத்துக்கும் 4ஜிக்கும் இடையிலான அலைவரிசை சேவையைக் கொண்டே 4ஜி என்கிற பெயரில் சேவை வழங்கப்படுகிறது என்கிற சர்ச்சையும் உள்ளது.
உலக அளவில்...
நம்மைப்போல பல நாடுகளும் படிப்படியாகதான் அலைவரிசை பயன் பாட்டில் முன்னேறியுள்ளன. இப்போதும் பல நாடுகள் 2 ஜி தொழில்நுட்பத் தையே தாண்டவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் வசிப்பவர் களுக்குகூட 4ஜி சேவை இப்போதுதான் எட்டிபார்த்துள்ளது. 3 ஜியைக் கூட சரியான முறையில் அனுபவிக்கவில்லை என்கின்றனர்.
தென்கொரியா
ஆனால் இன்று தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஐந்தாம் தலைமுறை வரிசையை நோக்கி அடுத்த கட்டமாக நகர்ந்து வருகிறது. தென் கொரியா 5 ஜி தொழில் நுட்ப சேவை வழங்க ஆய்வுகளில் இறங்கி உள்ளது.
இதற்காக சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு உலக அளவில் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் இதற்கான எஸ்.கே டெலிகொம், கொரியா டெலிகொம் மற்றும் சாம்சங், எல்ஜி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் திட்டமிட்டுள்ளது.
வேகம்... வேகம்.. வேகம்...
பலரும் 3ஜி சேவைதான் வேகம் என நம்பிக் கொண்டிருந்தபோதுதான் 4ஜி வந்து வாசல் திறந்துவிட்டது. 4ஜி-யை விட பல நூறு மடங்கு வேகம் கொண்டது 5 ஜி தொழில்நுட்பம். அதாவது ஒரு நொடியில் ஒரு முழு திரைப்படத்தையும் தரவிறக்கம் செய்யும் அளவுக்கு வேகம் இருக்கும் என கண்டறிந்துள்ளனர்.
5 ஜி சவால்
இந்த வேகம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்ப போட்டியை சமா ளிக்க இப்போதே தென் கொரியாவுக்கு போட்டியாக சில நாடுகள் 5 ஜி அலைவரிசையை மேம்படுத்த ஆய்வில் இறங்கியுள்ளன. சீனாவின் ஹுவாய் நிறுவனம் 2020-ம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்கான முனைப்பில் உள்ளது. இதனால் வரும் நாட்களில் 5 ஜி அறிமுகமாகும் பரபரப்பு உலகைத் தொற்றிக் கொள்ளும். இதற்கான சந்தை வளரத் தொடங்கும்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் முன்பைவிட அதிக முனைப்போடு சந்தையில் இறங்கும் நிலை உருவாகியுள்ளது. உலகளவில் தொலைத்தொடர்பு சந்தையிலும் தீவிர போட்டிகள் நிகழ உள்ளன.
2016-ம் ஆண்டில் இந்தியாவை ஆட்டிவைக்கும் தொழில்நுட்பமாக 4ஜி உருவாகும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் உலக அளவில் 5ஜி என்கிற அடுத்தகட்ட வளர்ச்சியும் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதும் நம் கண்முன்னே தெரியும் உண்மை.

இணையதளப் பயன்பாட்டாளர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 50 கோடியாக அதிகரிக்கும்



By புது தில்லி,

First Published : 30 December 2015 02:55 AM IST






இந்தியாவில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 50 கோடிப் பேராக அதிகரிக்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் குறித்து நான் முன்பு கருத்து தெரிவித்தபோது, இன்னும் 2 ஆண்டுகளில் அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை 50 கோடியாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தேன்.
ஆனால், இந்தியாவில் தற்போதே 40 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதை வைத்துப் பார்க்கையில், அடுத்த ஆண்டே 50 கோடி பேர் என்ற இலக்கை எட்டிவிடலாம் என்பது தெரிகிறது என்றார் அவர். "டிஜிட்டல் இந்தியா' திட்டம் குறித்து ரவிசங்கர் பிரசாத் பேசியபோது, வரும் ஆண்டுகளில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை ஆப்டிக் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். அதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட ஒரு பகுதி தேர்வு செய்யப்பட்டு, கல்வி, சுகாதார சேவைகளுக்கு "டிஜிட்டல் இந்தியா' திட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா? என்பது உறுதி செய்யப்படும். "டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், இணைய வழிக் கல்வி வழங்குவது, தொலைத்தொடர்பு வசதிகள் வாயிலாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, கிராம மையப்பகுதிகளில் வை ஃபை வசதியுடன் எல்இடி விளக்கு பொருத்தப்பட்ட மையத்தை அமைப்பது உள்ளிட்டவற்றில் அரசு அதிக கவனம் செலுத்தும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Tuesday, December 29, 2015

New V-C for MGR Medical University

New V-C for MGR Medical University



The current Director of Medical Education (DME) S. Geethalakshmi has been appointed Vice-Chancellor of the Tamil Nadu Dr. MGR Medical University. She will be the ninth V-C of the university and takes over from D. Shantaram.

Ms. Geethalakshmi received the appointment order from Chief Minister Jayalalithaa on Monday. Dr. Shantaram’s term ended on December 17. Though Stanley Medical College has seen many of its students take the post of DME, Dr. Geethalakshmi will be the first student from the college to hold the V-C post. She belongs to the 1974 batch and graduated in 1979. She went on to study microbiology in Madras Medical College, where she served as assistant professor. She has completed her Ph D degree from the MMC. Ms. Geethalakshmi has served as Dean of Tiruvannamalai Medical College, Kilpauk Medical College and Stanley Medical College. On January 31, 2014, she took over as the DME.

The Chief Minister recognised her services in managing the rescue operations during the Moulivakkam building collapse in June 2014. Dr. Geethalakshmi has also held the post of vice president of the Chennai chapter of the Tamil Nadu Government Doctors Association.

Kanpur University VC gheraoed over non-availability of former PM’s MA degree



Share
BJP workers on Tuesday gheraoed the Kanpur University Vice Chancellor after the varsity failed to provide the MA degree records of the former Prime Minister Atal Bihari Vajpayee.
Vice Chancellor Jayant Vinayak Vaishampayan was confronted by BJP Kanpur chief Surendra Maithani, MLA Salil Vishnoi and a dozen other party workers after the university maintained that they did not possess the post-graduation degree of the former PM.
Vaishampayan clarified that Vajpayee did his MA in Political Science from Dayanand Anglo-Vedic College (DAV) in around 1950.
He said that Chhatrapati Shahu Ji Maharaj University or the Kanpur University was only established in 1966.
The DAV College was under the Agra University when the honourable former PM graduated, he said.
Meanwhile, BJP leader Maithani stated that they had approached the DAV college as well as the Kanpur University for the said records but did not get a favourable reply.
We had to confront the VC who assured us that inquiries will be made to the Agra University by him to get the records.
While Professor Vaishampayan wondered why was the party making a hue and cry over the records after so many years, the BJP workers have threatened to launch an agitation in the campus if the records are not found at the earliest.

NEWS TODAY 21.12.2025