Monday, January 4, 2016

NAAC report goes missing in Barkatullah University?



The Times of India
TIMES OF INDIA

BHOPAL: Even after failing to improve its NAAC grading, Barkatullah University (BU) authorities seem to have adopted a casual approach towards it.

Sample this: After last year's NAAC accreditation, the inspection team had given a report to BU to make improvements in different university teaching departments (UTDs). However, UTDs are yet to receive the report even when the VC office had got it almost six months back. The UGC has made NAAC mandatory for every university and college to take accreditation. BU has been receiving B grade during last two accreditations. Educational institutions are graded under four categories which are A, B, C and D, denoting very good, good, satisfactory and unsatisfactory levels, respectively.


Pleading anonymity, a senior BU officer, said, "After every grading the inspection team submits a report to the vice-chancellor. This report carries feedbacks and suggestions by the team to improve the respective areas where they find bottlenecks. After receiving the report, the VC sends it to the concerned departments where NAAC suggested improvements. On the basis of this report, departments make improvements to get better grading in next inspection." However, the BU authorities apparently forgot to provide the report, having feedback, to the departments.



Sources said that in such a situation, BU will not be able to improve its accreditation in the next inspection. "Every department needs time to make improvement according to the NAAC report. If they don't get it on time then it won't be possible for them to do it," said a head of the department, without quoting his name.



When contacted, BU vice-chancellor Prof MD Tiwari, admitted that the report was received after NAAC inspection last year. He rubbished speculations that the report has gone missing. "The report is in the office and will be provided to the departments over the next couple of days," he said.



National Assessment and Accreditation Council (NAAC) is an autonomous body established by the UGC to assess and accredit institutions of higher education in the country. It is an outcome of the recommendations of the National Policy in Education (1986), which laid special emphasis on upholding the quality of higher education in India. NAAC was established in 1994 with its headquarters at Bangalore.




Share to Twitter

சொல்லிக் கொடுக்காத கல்வி!

Dinamani


By உதயை மு. வீரையன்

First Published : 02 January 2016 01:00 AM IST


அண்மைக்காலமாக நிகழும் சம்பவங்களும், அது பற்றி வரும் செய்திகளும் மனதிற்குக் கவலையைத் தருகின்றன. நாட்டு நலனில் ஆர்வமும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர்களுக்கு அத்தகைய வருத்தம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில்தான் நாடும் இருக்கிறது; நாமும் இருக்கிறோம். அதற்குத் தளர்ச்சி ஏற்படுமானால் என்ன செய்வது?
நாடெங்கும் கடந்த ஆண்டில் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதல் இடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத் தகவலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தம் தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் 7,753 மாணவர்களும், யூனியன் பிரதேசங்களில் 315 மாணவர்களும் என மொத்தம் 8,068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் அதிகப்படியாக மகாராஷ்டிரத்தில் 1,191 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 853 பேரும், மேற்கு வங்காளத்தில் 709 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.
மாணவர் தற்கொலையில் மட்டுமல்லாமல் விவசாயிகள் தற்கொலையிலும் மகாராஷ்டிரம் முதலிடம் பெறுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 17,276 என்று மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.
விவசாயிகளின் தற்கொலையை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதற்குக் கூடுதலான காரணங்கள் இருக்கின்றன. வேளாண்மையில் ஈடுகட்ட முடியாத இழப்பும், கடன் தொல்லையும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. "மேழிச் செல்வம் கோழை படாது' என்று கூறப்பட்டாலும், அதையும் மீறி மானமே பெரிதென எண்ணும் மறவர் பெருங்குடி இவ்வாறு மரணத்தைத் தழுவுவது வேதனையானது.
எல்லாம் சரி, சிறகடித்துப் பறக்க வேண்டிய வயதில் இந்த மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? படிப்பைத் தவிர வேறு நெருக்கடிகள் ஏதும் உண்டா? இல்லை, படிப்பே ஒரு நெருக்கடியாகிப் போனதா? இதுபற்றி இந்தச் சமுதாயம் கவலைப்பட வேண்டாமா?
"பள்ளிப் படிப்பு கூழாங்கற்களுக்கு ஒளியேற்றும்; வைரங்களை ஒளி மழுங்கச் செய்யும்' என்ற மேலை நாட்டு அறிஞனின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன. இதனையே நமது நாட்டுப்புற மக்கள், "பள்ளிக் கணக்கு புள்ளிக்கும் உதவாது' என்று கூறிச் சென்றுள்ளனர். என்றாலும், அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே'
என்று நமது நீதி நூல் கூறுகிறது.
சங்க இலக்கியமாகிய புறநானூறு கல்வியின் பெருமையைப் போற்றிப் பாடு
கிறது. அதன் தேவையையும் எடுத்துப் பேசுகிறது.
"உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'
பல பிள்ளைகளைப் பெற்ற தாயும் கல்வியில் சிறந்தவனையே விரும்புவாள். ஒரே குடியில் பிறந்த பல பிள்ளைகளுள் கல்வி கற்காத மூத்தவனை அரசன் மதிக்க மாட்டான். இளையவனாயினும் கற்றவனையே மதிப்பான்.
வேறுபாடுடைய நால்வகைக் குலத்துள் கீழ் நிலையிலுள்ள ஒருவன் கல்வி கேள்விகளில் வல்லவன் ஆயின் மேல்நிலையிலுள்ளவனும் அவனை மதித்து மரியாதை செய்வான் என்று அக்காலத்திலேயே பாடப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட கல்வியைப் பயிலும் இக்கால மாணவர் சமுதாயம் வாழ்க்கையை ஏன் வெறுக்க வேண்டும்? உயிர் வாழ ஆசைப்பட வேண்டிய வயதில் தற்கொலையைத் தேர்வு செய்வதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?
மாணவர்களுக்கு மன அழுத்தமும், மனச்சோர்வும் ஏற்படுவதற்குக் காரணம் கல்வி வணிகமாக மாறியதுதான் என்று கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். "மாதா பிதா குரு தெய்வம்' என்ற நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
கல்வி என்பது மனவளமும், பண்பாடும், ஒழுக்கமும் கற்றுத் தருவதுதான் என்ற நிலை மாறி, கல்வி என்பது பணம் பண்ணுவதற்கான புதிய கருவி என்ற நிலை உருவாகிவிட்டது. கல்வி இப்போது கடைச்சரக்காகி விட்டது. முயற்சியும், உழைப்பும் இல்லாமல் வாங்கும் பொருளாக நிலை தாழ்ந்துவிட்டது.
பெற்றோரின் பேராசைக்குத் தீனி போடும் நிலையங்களாகத் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக கசக்கிப் பிழியப்படுகின்றனர்.
அவர்கள் விரும்பாத பாடத்தை பெற்றோரின் கட்டாயத்துக்காகப் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் இளமைக்கால விளையாட்டு வாழ்க்கையே பறிக்கப்படுகிறது. அவர்களது சிரிப்பும், கும்மாளமும் எங்கே போனது?
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார். "உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்'.
அவர்களது குழந்தைகளாகவே இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் திணிப்பது வன்முறையேயாகும். வன்முறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைகள் சுதந்திரமாக வளர்வதைப் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் மாணவர்கள் தேர்வின் தோல்வியால் மனமுடைந்து தற்கொலையை நாடுவோர் தொகை இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. கல்லூரிகளில் "ஈவ் டீசிங்' என்னும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். இவர்களில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் என்று கூறலாம்.
2012-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவி தைரியலட்சுமியின் சோகம் அனைவரும் அறிந்ததுதான். தமிழ்வழியில் படித்து 92 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்குக் கூறப்பட்ட காரணம் ஆங்கிலம் புரியவில்லை என்ற அவமானம் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான்.
பள்ளி முதல் உயர்கல்வி வரை மாணவியர் பலர் ஆசிரியர்களின் பாலியல் வன்முறை காரணமாகத் தற்கொலை வரை சென்ற நிகழ்வுகளும் உண்டு. வெளியில் சொல்ல முடியாத ஊமைக் காயங்கள் அவர்களை வாழ்க்கையின் இறுதிக்கே இட்டுச் செல்கிறது.
மாணவர்களின் தற்கொலை மட்டுமல்லாமல் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையும், சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 1912-ஆம் ஆண்டில் 39,822- ஆக இருந்த சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43,506-ஆக அதிகரித்துள்ளது என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2014 அன்று இது 48,230 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசும், கல்வித்துறையும் தேர்ச்சி விழுக்காட்டை முதன்மைப்படுத்த ஆணைகளை வெளியிடுகின்றன. மாணவர்கள் தண்டிக்கப்படுவதைத் தடைசெய்துவிட்டு, தேர்ச்சி விழுக்காட்டுக்கு கேள்வி எழுப்புகிறது. தலைமையாசிரியரும், பாட ஆசிரியர்களும் தேர்ச்சிக் குறைவுக்குப் பதில் கூற வேண்டும்.
இதனால் மாணவர்களைப் பண்படுத்தக்கூடிய நீதிபோதனை வகுப்புகளும், மன இறுக்கத்தைக் குறைத்து மகிழ்ச்சியைத் தரும் விளையாட்டு மற்றும் இசை வகுப்புகளும் இல்லாமல் போய்விட்டன. பொது அறிவை வளர்க்கும் நூலக வகுப்புகளும் இல்லை.
இந்த வகுப்புகள் எல்லாம் பாட வகுப்புகளாக மாற்றப்பட்டு, அவர்களது முறையான வளர்ச்சி பறிக்கப்பட்டு விட்டது. மாணவர்களின் மன இறுக்கம் தொடர்பான வடிகால்கள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன.
தற்கொலை என்பது திட்டமிட்டு நடத்தப்படுவதல்ல; உணர்ச்சிவயப்பட்டு ஒரு சில நொடிகளில் நடந்து முடியக்கூடியதாகும். அந்த நேரத்தில் அது தடுக்கப்படுமானால் தற்கொலை செய்ய முயன்றவர்கள் தான் செய்ய நினைத்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவார்கள், வெட்கப்படுவார்கள் என்று உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நூறாண்டு காலம் வாழ வேண்டிய இனிய வாழ்க்கையை அற்பக் காரணங்களுக்காக முடித்துக் கொள்ளத் துடிக்கும் மாணவர்கள் தங்களை நம்பியுள்ள பெற்றோரையும், மற்றோரையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தேவையற்ற இறப்பையும், இழப்பையும் தடுத்துவிட வேண்டும்.
"ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும். மனித வர்க்கமாகிய புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறு இருக்க முடியுமா?' என்று கேட்கிறார் காந்தியடிகள்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது. அது தனக்காக மட்டும் வாழும் சுயநலம் கொண்டது அல்ல. தன்னை நம்பியுள்ள மனித சமுதாயத்துக்காக வாழும் பொதுநலம் சார்ந்தது. அதை இடையில் முடித்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. இதனைச் சொல்லிக் கொடுக்காத கல்வியை என்னென்பது?
பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார், "உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்'.

மதத்தில் இல்லை, மனதில் தேடுங்கள்...


Dinamani

By மதுரா

First Published : 04 January 2016 03:41 AM IST


இறைவன் இருக்கிறாரா, இல்லையா என்று கேட்பவர் ஒரு சிலர். இறைவனுக்கு உருவம் இல்லை, அவர் ஜோதி வடிவானவர் என்று கூறுவோர் ஒரு பக்கம். இவர் ஒருவர் தான் இறைவன் என்று கூறுவோர் ஒரு பக்கம். இறைவனை பல உருவங்களில் வடித்து இவர் தான் இறைவன் என்று கூறுவோர் ஒரு பக்கம்.
இறைவன் பெயரில் மதங்களை வளர்த்து போற்றும் அனைத்து மதவாதிகளுக்கும் சில கேள்விகள்:
இறைவனை மதம் என்ற ஒன்றில் அடக்கலாமா? இறைவனை ஒரே ஒரு நாமத்தில் (பெயரில்) அடக்கிவிடமுடியுமா? இறைவனை வேதம் அறிந்தவர்கள் தான் அறிய முடியுமா? வாய் பேசமுடியாத உயிரினங்கள் இறைவனை வணங்க முடியாதா? இறைவன் பெயரில் உருவான மதங்கள் சொல்வது என்ன?
இறைவனை தீபமாக பார்ப்பதும், சிலையாய் பார்ப்பதும் அவரவர் மனநிலையைப் பொருத்தது இல்லையா? எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை எப்படி உணர்ந்தால் என்ன? என்னை வழிபடுபவரைத்தான் நான் காப்பாற்றுவேன் என்று இறைவன் கூறியதுண்டா?
இயற்கையை நாம் வணங்கினால் இறைவன் கோபித்துக் கொள்வாரா? அப்படி அவர் நினைத்தால் இறைவனின் மனநிலை சராசரி மனிதர்களின் மன நிலை தானா? இறைவனை நேசித்து ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்கள் இறைவனை பகடையாக வைத்து சண்டையிடுவது சரியா?
எங்கள் இறைவன் தான் சிறந்தவர் என்று சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் துன்புறுத்திக் கொள்வது சரியா?
ஆதி மனிதன் முதலில் நெருப்பை கண்டுபிடித்து, பின் அந்த நெருப்பால் உணவுகளை சமைத்து சாப்பிட ஆரம்பித்தான். அதன் பிறகு, வேளாண்மை செய்து வாழத் தொடங்கிய மனிதன் சூரியனையும், இயற்கையையும் தன்னை வாழ வைக்கும் கடவுளாக வணங்கியிருப்பான்..
மனிதர்கள் பெருக பெருக, கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். கூட்டங்களாக வாழ்ந்த மனிதன், அந்தந்த மண் சார்ந்த உணவு முறைகளை பயிரிடத் தொடங்கி அவனுக்கென்று உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் என்று வளரத்தொடங்கினான்.
வெளிநாடுகளின் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்தாற் போல் அந்நாடுகளின் மக்களின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் அமைந்துள்ளன. அவர்களின் பழக்கங்களுக்கு தகுந்த மாதிரி அவர்களின் இறைவழிபாடும் உள்ளது.
அதேபோல், இந்திய நாட்டில் வாழும் மக்களுக்கு பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகள் என்று உள்ளன. இந்தியா இயற்கை வளங்கள் கொண்ட நாடு. இங்கு விளையும் பொருள்களை, நன்றி சொல்லும் வகையில் முதலில் இறைவனுக்கு செலுத்தும் வகையில் இறைவனை வணங்கிவிட்டு பிறகு தான் அதை நாம் பயன்படுத்துவோம். இது இந்திய கலாசாரம்.
மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கு தகுந்த முறையில் அவர்களின் இறை வழிபாடு உள்ளது. அவரவர் மொழிக்குத் தகுந்த முறையில் இறைவனுக்குப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
ஆனால், அவரவரும் தாங்கள் அழைக்கும் நாமம் தான் இறைவன் என்று சண்டை போட்டுக் கொள்கிறோம். அதர்மங்கள் ஆட்சி செய்யும் இடங்களில் எல்லாம் இறைவன் அவதரித்து தர்மத்தை போதித்துள்ளான்.
இறைவன் பல ரூபத்தில் அவதரித்தாலும் "அன்பாய் இரு, பிறரை துன்புறுத்தாதே, இல்லாதவர்க்கு உதவி செய்' என்றுதான் போதித்துள்ளான். ஆனால், மனிதன் அந்த போதனைகளைக் கைவிட்டு தன் சமுதாய கலாசாரத்தை பெரிதுபடுத்தவே போராடுகிறான்.
ஆதி மனிதன், தினம் விடியலை தந்த சூரியனையும் இரவில் வரும் நிலவையும், அவன் பசிக்கு உணவு தரும் மரம் செடிகளை தான் கடவுளாக வணங்கியிருப்பான். நமக்கு உதவி செய்பவர்களை மதிப்பதும் நன்றி செலுத்துவதும் மனிதனின் நற்பண்பு அல்லவா? இதை இந்திய கலாசாரம் செய்கிறது.
நம் இந்திய கலாசாரம் ஓர் உன்னதமான கலாசாரம். நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்து வைத்தான் தமிழன். ஒவ்வொரு நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும், செய்யும் தொழிலும் வேறுபடுகின்றன.
அவரவர் வாழ்க்கை முறைக்கு தகுந்த வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால், இதற்கு மனிதன் மதச்சாயம், சாதிச்சாயம் பூசி என் மதம் தான் சிறந்தது, என் சாதிதான் சிறந்தது என்று சண்டையிடத் தொடங்கினான்.
காலப்போக்கில் இறைவன் பெயரில் மனிதநேயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக மதத்தையும், சாதியையும் வளர்க்கிறான். மனிதன் ஒன்று கூடி இறைவனை வணங்கவேண்டும் என்றுதான் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் கட்டப்பட்டன. இதுவும் அந்தந்த நாட்டின் கட்டட கலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது.
கட்டடக் கலையில், இந்தியக் கட்டடக் கலை மனிதனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதனால்தான்,கோயில்களில் மனிதர்கள் போலவும், விலங்குகள் போலவும் சிற்பங்களை வடித்தார்கள்.
இறைவனை மதங்களில் தேடாதீர்கள்.. மனங்களில் தேடுங்கள். இறைவனை கோயிலிலும், தேவாலயத்திலும், மசூதியிலும் காணலாம். எங்கும் இறைவனைக் காணும் மனநிலை தான் பண்பட்ட மனம் ஆகும்.

அவசியம்தான் இந்தக் கட்டுப்பாடு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 02 January 2016 12:58 AM IST


நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளிலிருந்து தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நடைமுறை ஏற்கெனவே நமது அண்டை மாநிலங்கள் மூன்றிலுமே நடைமுறையில் இருப்பவைதான். தமிழகத்திலும் இருந்துவந்த நடைமுறைதான் இவை.
கேரள மாநிலத்திலுள்ள ஆலயங்களில் ஆண்களாக இருந்தால் வேட்டி அணிந்து சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முழுக்கால் சட்டை, பைஜாமா உள்ளிட்ட தைக்கப்பட்ட ஆடை எதையும் அனுமதிப்பதில்லை. அதுமட்டுமல்ல, மேல் சட்டை அணிவதும் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும்கூட தென்னிந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்துச் சென்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல, திருப்பதி - திருமலை தேவஸ்தானத்திலும் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நடைமுறைகள் சிறப்பு தரிசனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இறைவழிபாட்டிற்கும் தெய்வத்தின் தரிசனத்துக்கும் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இந்து மதத்துக்கு மட்டுமே இருப்பவை அல்ல. இஸ்லாமியர்களின் தொழுகைக்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதேபோல, கிறிஸ்தவர்களுக்கும்கூட பெண்கள் தலையைத் துணியால் போர்த்திக்கொள்வது உள்ளிட்ட சில மாதா கோயில் வழிபாட்டு முறைகள் உள்ளன. சீக்கியர்களுக்கும், பெளத்த மதத்தினருக்கும்கூட இதுபோன்ற சம்பிரதாயங்கள் உண்டு.
இந்து கோயில்களில் ஆண்கள் வேட்டி கட்டுவது, அங்கவஸ்திரம் மட்டுமே போர்த்திக்கொண்டு ஆலயத்திற்குள் செல்வது உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பின்னால் சில காரணங்கள் உண்டு. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அமைக்க ஆகம விதிமுறைகளோ, இன்ன இடத்தில் இன்ன பிராகாரங்கள் அமைய வேண்டும் என்றோ விதிமுறைகள் கிடையாது. ஏனைய மதங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றுகூடி பிரார்த்திக்கும் இடமாக மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. ஆனால், இந்து மதத்தில் அப்படி அல்ல.
இங்கே வழிபாட்டுத் தலங்கள் எனப்படுபவை கூட்டுப் பிரார்த்தனைத் தலங்களாக இல்லாமல், பரிகாரத் தலங்களாகவும் இருக்கின்றன. அவை ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள ஈர்ப்பு சக்தியை மையப்படுத்தி ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டவை. அதனால்தான், இன்னென்ன பிரச்னைகளுக்கு இன்னென்ன குறிப்பிட்ட ஆலயங்களைத் தரிசிப்பது, அங்கே பரிகாரங்களைச் செய்வது போன்றவை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
மேலாடை அணியாமல் செல்லும்போது அந்த ஆலயத்தின் அடிப்படையாகக் கருதப்படும் கிரகத்தின் காந்த சக்தியை முழுமையாக உடலில் வாங்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இதுபோன்ற விதிமுறைகளுக்குக் காரணம். கோயில்களில் வலம்வருவது, கொடி மரத்துக்கு முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரிப்பது போன்றவையும் இதனால்தான்.
இறை நம்பிக்கை இல்லாத, அன்னிய மோகத்தின் பாற்பட்ட திராவிட அரசியலின் காரணமாக இந்து ஆலயங்களின் வழிபாட்டு முறைகளும், சம்பிரதாயங்களும் கேலிக்கும், பழிப்புக்கும் உள்ளாயின. மேல் சட்டை அணியாமல் ஆலய வழிபாடு என்கிற சம்பிரதாயம் பூணூல் அணிந்த பிராமணர்களையும், அணியாத பிராமணர் அல்லாதவர்களையும் பிரித்தறிந்து பார்ப்பதற்காகத்தான் என்கிற குதர்க்கமான பொய்ப் பிரசாரத்தை புத்திசாலித்தனமாக முன்னெடுத்துச் சென்று அனைவரையும் நம்ப வைத்தனர் அந்த இறை மறுப்பாளர்கள். ஆலயங்களில் மட்டுமல்லாமல் மகான்களையும், துறவிகளையும், வயதில் மூத்தவர்களையும் தரிசிக்கும்போதுகூட மேலாடை அணியாமல் செல்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் ஆத்ம சக்தியையும் அருளையும் முழுமையாகப் பெற முடியும் என்கிற பாரம்பரிய நம்பிக்கைக்கும்கூட இதேபோன்ற காரணத்தைக் கூறி பழிக்க முற்பட்டனர்.
கடந்த 70 ஆண்டு கால இந்து மத எதிர்ப்பை (வெறுப்பை) முன்னிலைப்படுத்தும் சக்திகளின் பிரசாரத்தால், இடையில் சிறிது காலம் துவண்டுபோன இறை நம்பிக்கை உணர்வு, இப்போது மிகப்பெரிய அளவில் உருவெடுத்திருக்கிறது. ஆலயங்களில் முக்கியமான தினங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் அதற்கு கட்டியம் கூறுகிறது. அதேநேரத்தில், ஆலயம் தொழுவது ஏனைய மதத்தினரிடம் காணப்படும் ஈடுபாட்டைபோல இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது.
அண்மைக்காலமாக இளைஞர்களிடம் புதிய போக்குகள் தோன்றி டி-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்ட நாகரிக ஆடைகளும், பெண்கள் லெக்கின்ஸ், ஸ்கின் டைட் ஜீன்ஸ், டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகளும் அணிந்து கோயிலுக்கு வரத்தொடங்கியதால், தமிழக ஆலயங்களில் ஆடைக் கட்டுப்பாடு குலைந்தது. நமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, பாவாடை - தாவணி போன்றவை காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. நமது பாரம்பரியச் சின்னங்களைக் குறைந்தபட்சம், ஆலய வழிபாட்டிலாவது கடைப்பிடிக்க இந்த உடைக்கட்டுப்பாடு நிச்சயமாக உதவும். இறை வழிபாட்டைப் பொருத்தவரை நாம் இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன.
ஆலயங்களில் உடைக் கட்டுப்பாடு என்கிற நல்லதொரு முடிவை நடைமுறைப்படுத்தி இருக்கும் இந்து அறநிலையத் துறையையும், அரசையும் பாராட்டும் அதேநேரத்தில் இன்னும் ஒரு வேண்டுகோள். இதேபோல, கோயிலுக்குள் செல்லிடப்பேசியை அனுமதிப்பதற்கும் தடை பிறப்பிக்க வேண்டும். கோயிலுக்குள் செல்லிடப்பேசி ஒலித்தால் அபராதம் விதிப்பது, செல்லிடப்பேசியில் படம் பிடித்தால் பறிமுதல் செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஆடைக் கட்டுப்பாட்டுடன் சேர்த்து அமல்படுத்த வேண்டும்!

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது

சென்னை,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணை

மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அட்டவணை விவரம் வருமாறு:-

10-வது வகுப்பு தேர்வு

மார்ச் 1-ந் தேதி -பாதுகாப்பு, டைனமிக் ரீடெய்ல் உள்ளிட்ட தேர்வுகள்

2-ந் தேதி -அறிவியல்

3-ந் தேதி -தெலுங்கு, பிரெஞ்சு

5-ந் தேதி -ஓவியம்,

8-ந் தேதி -தமிழ்

10-ந் தேதி - சமூகஅறிவியல்

12-ந் தேதி - மனைஅறிவியல்

15-ந் தேதி -ஆங்கிலம்

19-ந் தேதி -கணிதம்

22-ந் தேதி -தட்டச்சு

28-ந் தேதி -ரஷ்ய மொழித்தேர்வு

12-வது வகுப்பு தேர்வு

மார்ச் 1-ந்தேதி-ஆங்கிலம்

5-ந் தேதி - இயற்பியல்

8-ந் தேதி -வரலாறு

9-ந் தேதி- வேதியியல்

11-ந் தேதி- தமிழ்

12-ந் தேதி -என்ஜினீயரிங் கிராபிக்ஸ்

14-ந் தேதி - கணிதம், மைக்ரோ பயாலஜி

17-ந் தேதி - அக்கவுண்டன்சி

18-ந் தேதி -அரசியல் அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல்

19-ந் தேதி -விவசாயம்

21-ந் தேதி -உயிரியல்

26-ந் தேதி-

கம்ப்யூட்டர் சயின்ஸ்

28-ந் தேதி- உடற்கல்வி

31-ந்தேதி-பொருளாதாரம்

ஏப்ரல் 2-ந் தேதி

- உளவியல்

4-ந் தேதி- சமூகவியல்

7-ந் தேதி - புவியியல்

12-ந் தேதி

- மனை அறிவியல்

16-ந் தேதி -தத்துவ இயல்

22-ந்தேதி-என்.சி.சி.தேர்வு

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி,

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரோக்கர்-ஆசிரியர் கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 37). பிளஸ்-2 படித்துள்ள இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே எர்ரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தார். இவர் போலி சான்றிதழ் மூலமாக ஆசிரியர் பணிக்கு சேர்ந்ததாக வேலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முனியப்பன், கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்ற புரோக்கரை சந்தித்ததும், அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரின் பெயரில் ஆசிரியர் பயிற்சி முடித்ததைபோல ஒரு போலி சான்றிதழ் தயாரித்து முனியப்பனை அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு சேர்த்து விட்டதும் தெரியவந்தது. முதலில் நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்த முனியப்பன், பிறகு வேலூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆனார். இதையடுத்து முனியப்பன், புரோக்கர் ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலி சான்றிதழ்

இந்நிலையில் புரோக்கர் ராஜேந்திரன் மூலமாக போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக மேலும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பி.செந்தில்குமார். இவர் கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியாற்றி வருவதாக வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணி பதிவேடு மற்றும் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த செந்தில்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா கூச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர். கிருபா என்ற பெயரில் ஆதிதிராவிடர் என்று போலி சான்றிதழ் பெற்று சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியராக செந்தில்குமார் பணியில் சேர்ந்து, பிறகு மாறுதல் ஆகி தற்போது வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

விசாரணையில் அனைத்து சான்றிதழ்களும் புரோக்கர் ராஜேந்திரன் வழங்கியதும், அந்த சான்றுகள் வேறொருவருடையது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த செந்தில்குமாரை (37) போலீசார் நேற்று கைது செய்தனர். போலி சான்றிதழ் வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான செந்தில்குமார், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதாகி உள்ள 3 பேருக்கும் மேலும் சில மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தடையற்ற சான்றிதழ் கேட்ட பி.எட். கல்வி நிறுவனங்களின் விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


logo

சென்னை,

தடையற்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள பி.எட். கல்வி நிறுவனங்களின் விண்ணப்பம் மீது 4 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பம்

வேலூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளை, கே.டி. கல்வி அறக்கட்டளை, மதுரையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை ஆகிய நிறுவனங்கள், பி.எட். கல்வி தொடங்குவதற்காக அனுமதி கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்திடம் விண்ணப்பித்தன.

இந்த நிலையில் அந்த கல்வி அறக்கட்டளைகளுக்கு கல்விக் குழுமத்தின் தென் மண்டல இயக்குனர் ஒரு நோட்டீசு அனுப்பினார். அதில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தடையற்ற சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்காததால், ஏன் உங்கள் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

கல்வி விதிகள்

இந்த நோட்டீசை எதிர்த்து 3 கல்வி அறக்கட்டளைகளும் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தன. தடையற்ற சான்றிதழ் இல்லாமலேயே அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அவை கோரின.

இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கல்வி விதிகளின்படி விண்ணப்பத்தோடு தடையற்ற சான்றிதழ் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம் என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 வாரங்களுக்குள்

ஆனால் 3 கல்வி நிறுவனங்களும் நோட்டீசை பெற்றுக் கொண்டு அதற்கு பதில் சொல்லவில்லை. மாறாக, அந்த நடவடிக்கையை செல்லத் தகாததாக செய்வதற்காக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்த நோட்டீசுக்கு பதிலளிக்க கல்வி அறக்கட்டளைகளுக்கு 2 வார காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுபோல தடையற்ற சான்றிதழ் கேட்டு கல்வி அறக்கட்டளைகள் கொடுத்துள்ள விண்ணப்பங்களை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் இன்னும் 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...