Tuesday, January 5, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? 15 - தற்கொலை எண்ணத்தைத் தூர எறிவோம் .....டாக்டர் ஆ.காட்சன்

Return to frontpage

வளர்இளம் பருவத்தில் ஒரு சிலருக்குத் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இது இயல்பானதல்ல. இது போன்ற எண்ணங்கள், முயற்சிகளை எதிர்கொள்வதற்கு என்ன செய்யலாம்?

l வளர் இளம் பருவத்தினர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தினால், அதைப் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக மனநல ஆலோசனைக்கு அழைத்துச்செல்வதே சரி.

l ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற நபர், மருத்துவச் சிகிச்சைக்குப் பயந்து மறுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்யமாட்டார் என்பதும் தவறான நம்பிக்கை. அவர்கள்தான் அதிக ஆபத்தான வட்டத்தில் இருப்பவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

l வீட்டில் பெரியவர்கள் யாராவது மருத்துவச் சிகிச்சைக்காகத் தூக்க மாத்திரை சாப்பிட்டுவந்தால், அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும். பார்வையில் தெரியும்படி வீட்டில் பூச்சிக்கொல்லிகளை வைக்கக் கூடாது.

l வளர்இளம் பருவத்தினரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். ஏனென்றால், எல்லா மனநோய்களும் வெளிப்படையாகத் தெரிந்துவிடுவதில்லை.

l தற்கொலை எண்ணங்கள் கொண்ட எல்லோரையும் கவுன்சலிங்கால் மட்டுமே மாற்றிவிட முடியாது. மனநோய்களால் ஏற்படும் தற்கொலை எண்ணங்கள், காரணமே இல்லாமல் ஏற்படக்கூடியவை. மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்.

l ஊடகங்கள் மற்றும் சினிமாக்களில் காண்பிக்கப்படும் தற்கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் பல நேரங்களில் ‘தற்கொலை செய்வது எப்படி?’ என்று தேவையற்ற பாடம் எடுப்பது போலவே பல நேரம் அமைந்துள்ளன. இதுபோன்ற காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு மாணவன் ‘3’ படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொள்வதைப் போலவே, முயன்றது ஓர் உதாரணம்.

l பள்ளி வகுப்புகளிலும் பாடத்திட்டங்களிலும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வு சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், வளர்இளம் பருவத்தினரின் திடீர் மரணத்துக்கு இரண்டாவது முக்கியக் காரணம் தற்கொலை என்பதை மறந்துவிடக் கூடாது. பல வளர்இளம் பருவத்தினர் தங்கள் எண்ணங்களைச் சக மாணவர்களிடமே முதன்முதலில் வெளிப்படுத்துகின்றனர்.

l காசநோயின் அறிகுறிகள் பற்றியும், புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்றும், அவசரத் தேவைக்கு 108-ஐக் கூப்பிடுங்கள் என்றும் செய்யப்பட்ட தொடர் விளம்பரங்கள் எந்த அளவுக்குப் பலன் தந்தனவோ அதைப் போலவே தற்கொலைக்கான காரணங்கள், ஆலோசனைக்கான வழிகாட்டுதல்களை அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் விளம்பரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

l மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம்கூடத் தற்கொலை குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது வேதனையான விஷயம். ஏனென்றால், தற்கொலை முயற்சிக்கான முதலுதவி சிகிச்சை முடிந்ததும், மனநலப் பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. தற்கொலை முயற்சி என்பதே ஒரு மனநலப் பாதிப்பின் அறிகுறிதான்.

l இவர்களுக்குப் பெற்றோரின் ஆறுதலும் அரவணைப்பும்தான் முதல் தேவையே தவிர, தண்டனையும் கண்டிப்பும் அல்ல. பெற்றோருக்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், சமூக நம்பிக்கைகளின் அடிப்படையில் தற்கொலை ஏற்கத்தக்க விஷயம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

(அடுத்த முறை: ஏன் இந்த அழுத்தம்?)

தமிழகத்தில் தற்கொலைத் தடுப்பு இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் முன்னோடி அமைப்பு சிநேகா. இந்த நிறுவனத்தின் தொலைபேசி உதவி எண்ணை 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்: 044-2464 0050, 044-2464 0060. நேரடியாகக் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை ஆலோசனை பெறலாம். முகவரி: சிநேகா, 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028 / www.snehaindia.org

மின்னஞ்சல் தொடர்புக்கு: help@snehaindia.org

இலவச ஆலோசனை

புதுச்சேரியில் தற்கொலைத் தடுப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் அமைப்பு மைத்ரேயி. தொலைபேசி எண்: 0413-2339999, மின்னஞ்சல் முகவரி: bimaitreyi@rediffmail.com. நேரடியாக மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை அணுகலாம். முகவரி: மைத்ரேயி, 225, தியாகமுதலி தெரு, புதுச்சேரி - 615001

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

பெண்கள் கிண்டலுக்குரியவர்களா? by அரவிந்தன்

Return to frontpage

இன்றைய காலகட்டத்தின் நியதிக்கு உட்பட்டு நானும் வாட்ஸ்அப் குழுக்கள் சிலவற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். Literary & Intellectuals என்றொரு குழு அதில் உண்டு. பல்வேறு செய்திகள், கட்டுரைக்கான இணைப்புகள், குறிப்புகள் ஆகியவற்றுடன் சில சமயம் நகைச்சுவைத் துணுக்குகளும் அதில் பரிமாறிக்கொள்ளப்படும். அதில் அண்மையில் ஒரு நகைச்சுவைத் துணுக்கு வந்திருந்தது. ஒரு மனைவியின் பிறழ் நடத்தையை வைத்து உருவாக்கப்பட்ட துணுக்கு.

இந்தத் துணுக்கைப் பார்த்ததும் “பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவைத் துணுக்குகளைத் தவிர்க்கலாமே” என்று அதற்குப் பதில் எழுதினேன். அந்தத் துணுக்கைப் பதிவிட்டிருந்த நண்பர் அப்படிச் செய்தது தவறுதான் என ஒப்புக்கொண்டார். “ஆனால், எல்லா ஜோக்குகளும் யாராவது ஒருவரை இழிவுபடுத்துபவைதானே?” என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். “பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் வரலாறு கொண்டவர்கள் நாம். இனிமேலாவது அதற்குப் பிராயச்சித்தம் செய்வோம்” என்று பதில் எழுதினேன்.

ஆதரித்து ஒரு செய்தி

சில வாரங்களுக்கு முன்பு வேறொரு குழுவில் (இது எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள் குழு) பெண்களைக் கேலி செய்யும் வேறொரு துணுக்கு பதிவிடப்பட்டிருந்தது. அப்போதும் நான் எதிர்க் குரல் எழுப்பினேன். பதிவிட்டவரிடமிருந்து அதற்குப் பதில் வரவில்லை. குழுவில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து என்னை ஆதரித்து ஒரு செய்தி வந்தது.

நண்பர் சொன்னது ஒரு விதத்தில் சரிதான். நகைச் சுவைத் துணுக்கு என்பதே ஒருவரின் அசட்டுத்தனம், முட்டாள்தனம், அபத்தம், பிறழ் நடத்தை ஆகிய எதையேனும் பகடிசெய்து சிரிப்பதுதான். யாரையும் சற்றேனும் நெளியவைக்காமல் நகைச்சுவை, கிண்டல், கேலி ஆகியவை இருக்க முடியாது. இது அளவோடு இருக்கும்வரை பரவாயில்லை. எல்லை மீறிப் புண்படுத்தும் அளவுக்கு இது செல்லக் கூடாது. ரசனையும் நாசூக்கும் கொண்ட நகைச்சுவைத் துணுக்குகள் அவற்றுக்கு இலக்காகுபவர்களையும் மனம்விட்டுச் சிரிக்கவைத்துவிடும். எல்லை மீறும் துணுக்குகள் அவமானத்துக்கு உள்ளாக்கும்.

பெண்களைப் பற்றிய துணுக்குகள் பெரும்பாலும் இரண்டாவது ரகத்திலேயே இருப்பதுதான் சிக்கல். பெண்கள் மீதான ஈர்ப்பும் இளக்காரமும் ஒருங்கே கொண்ட ஆண்கள், பெண்களைப் பற்றிய தங்கள் மனப் பிறழ்வுகளைப் பழமொழிகள், நகைச்சுவைத் துணுக்குகள் எனப் பல விதங்களிலும் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். பெண்களைப் பற்றிய மேலோட்டமான, ஒருதலைப்பட்சமான விமர்சனமே இந்தக் கேலிகளின் அடிப்படை. மேற்படிக் குழு ஒன்றில் பகிர்ந்துகொள்ளப்பட்ட துணுக்கு ‘ஓடிப் போன’ பெண் பற்றி ஒரு கணவனின் பார்வையாக வெளிப்பட்டிருக்கிறது. பெண்களை இலக்காக்கும் எல்லாத் துணுக்குகளிலும் இதுபோன்ற போக்கைக் காணலாம்.

ஏன் பெண்களை, அதிலும் மனைவியரைக் குறிவைத்தே அதிகத் துணுக்குகள் உருவாக்கப்படுகின்றன? ஆண்கள் அபத்தம், முட்டாள்தனம், பிறழ் நடத்தை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்களா? ஆண்களைக் கேலிசெய்யும் துணுக்குகள் ஆணை / கணவனைப் பொதுமைப்படுத்திப் பேசுவதில்லை. தொழில், ஊர், மதம் ஆகிய பிரிவுகளுக்குள் ஆணைச் சித்தரித்துக் கேலி செய்கின்றன. கேலிக்குரியவர் ஆண் என்றால், அவர் பொதுவாக டாக்டர், வக்கீல், மேனேஜராக இருப்பார். கேலிக்குரியவர் பெண் என்றால், பொதுவாக மனைவி, மாமியார் அல்லது அம்மா பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுப் பரிகசிக்கப்படுவார். அல்லது

`வேலைக்காரி ஜோக், நர்ஸ் ஜோக்'. ஒரு கணவன் அல்லது ஒரு ஆண் என்று குறிப்பிட்டு ஆணைப் பொதுவாகக் கேலிசெய்யும் துணுக்குகள் முதலமைச்சரின் பேட்டி போலவே அரிதானவை. ஆண்கள் அல்லது கணவர்கள் கேலிக்குரியவர்கள் இல்லையா?

கைபேசியில் இடம் பொருள் ஏவல் அறியாமல் சத்தமாகப் பேசும் கணவன்மார்களைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொள்ளும் மனைவிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். மனைவியுடன் போய்க்கொண்டிருக்கும்போதும் வெட்கமில்லாமல் பிற பெண்களைப் ‘பராக்கு’ பார்க்கும் ஒரு ஆண், தன் மனைவி மீது பிற ஆண்களின் கண் பட்டால் ரோஷப்படும் அபத்தமும் அன்றாடம் அரங்கேறத்தான் செய்கிறது. நடுத்தர வயதைத் தாண்டிவிட்ட கணவன்கள், எதிர் வீட்டுக்குப் புதிதாகக் குடிவரும் கல்லூரிப் பெண்ணைப் பார்த்து அசடுவழியும் அற்பத்தனமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ‘குடும்பத் தலைவர்’களான கணவன்களுக்கு ‘ஓடிப் போக’ வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பிறழ் உறவுகளுக்கும் சில்லறைச் சபலங்களுக்கும் பஞ்சமே கிடையாது. மாட்டு வண்டியே தன்னைக் கடந்துபோனாலும் கவலைப்படாத ஆண் சிங்கங்கள், ஒரு பெண்ணின் இரு சக்கர வாகனம் கடந்து சென்றுவிட்டால் அவமானமடைந்து ஆக்ஸிலேட்டரைத் திருகும் கேலிக்கூத்தும் சாலைகளில் அன்றாடக் காட்சிதான். பொது இடம் என்றும் பாராமல் கிடைக்கிற சந்துகளுக்கெல்லாம் சிறுநீர் அபிஷேகம் நடத்தும் ஆண்களை எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். சாலைகளில் (சிகரெட்) புகை மண்டலப் பூஜை நடத்திப் பிறரைத் துன்புறுத்துவதும் பல ஆண்களுக்கு வாடிக்கைதான். இதையெல்லாம் பரிகசித்து, நாகரிகம் இல்லாத ஆண் அல்லது விவஸ்தையற்ற கணவன் என்னும் பொதுப் பாத்திரத்தை முன்வைத்துத் துணுக்குகள் அதிகம் வருவதில்லை.

`பெண்டாட்டிக்குப் பயப்படும் கணவன்' ஜோக் மட்டுமே வருகிறது. யதார்த்தத்துக்குப் புறம்பான இதை விட்டுவிட்டால் கணவன் பாத்திரம் பொதுவாக கிண்டலடிக்கப்படுவதில்லை.

இதே ஆண்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பெண்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள். சிறுமிகள் முதல் மூதாட்டிகள்வரை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வரையறுக்கிறார்கள். அவர்கள் எங்கே, எப்போது, எப்படிப் போகலாம் அல்லது போகக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முயல்கிறார்கள். குடும்பத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் “பொம்பள சரியில்ல, அதான் காரணம்” என்று கூசாமல் சொல்கிறார்கள். பொது வாழ்வில் வெற்றிபெறும் பெண்கள் மீது வெட்கமின்றி அவதூறு சுமத்துகிறார்கள். இதெல்லாம் போதாதென்று, அவர்களைப் பரிகசித்து நகைச்சுவைத் துணுக்குகளையும் அள்ளிவிடுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான்: பெண்களை இழிவாக, இளக்காரமாக, இரண்டாந்தர மனிதர்களாகப் பார்க்கும் போக்கு.

தொடரும் அசிங்கம்

ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இந்தச் சமூக அமைப்பு, பெண்களுக்கு இழைத்துவரும் அநீதிகளில் ஒன்றாகவே இந்தத் துணுக்குகளையும் பார்க்க முடிகிறது. வீடுகளிலும் பத்திரிகை, நாடகம், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் இவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி ரசிப்பதன் மூலம், ஆண் சமூகம் இவற்றை சகஜப்படுத்திவைத்திருப்பது இந்தத் துணுக்குகளைக் காட்டிலும் கொடுமையானது. உடன்கட்டை ஏறுதல், விதவைகளை முடக்கிவைத்தல், கல்வி மற்றும் சொத்துரிமையை மறுத்தல் போன்ற குற்றங்களுக்குப் பரிகாரம் கண்டதுபோலவே ஆண் உலகம் இதற்கும் பரிகாரம் காண வேண்டும்.

முதலாவதாக, நீண்ட காலமாகத் தொடரும் இந்த அசிங்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அடுத்தபடியாக, ஆண்கள் தங்களைப் பரிகசிக்கும் நகைச்சுவைத் துணுக்குகளை உருவாக்கிப் பெருமளவில் உலவவிடலாம். மிஸ்டர் எக்ஸ் என்ற பாத்திரத்தை வைத்துத் துணுக்குகள் வந்ததுபோல ‘அசட்டுக் கணவன்’ அல்லது ‘அலட்டல் பையன்’ என்னும் பாத்திரத்தை வைத்துத் துணுக்குகளை ஆண்களே உருவாக்கலாம். பெண்களும் அதில் பெருமளவு உதவலாம். வாட்ஸ்அப் உள்ளிட்ட ஊடகங்களில் இவற்றைப் பகிர்ந்துகொண்டு கைகொட்டிச் சிரிக்கலாம். பெண்களைக் கேலிப்பொருளாக்கியதற்கான பிராயச்சித்தத்தைச் சிரித்துக்கொண்டே தொடங்க இது நல்ல வழியாக இருக்கும்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

4G-ஐ விட வேகமான 40 ஆயிரம் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளை இந்தியா முழுவதும் நிறுவுகிறது பி.எஸ்.என்.எல்

இந்தூர்,

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நாடு முழுவதும் 40 ஆயிரம் வை-ஃபை ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. 4G இண்டர்நெட் சேவையை வழங்க போதுமான வசதிகள் இல்லாததால் அதை சமாளிக்கும் வகையில் இந்த வசதியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வை-ஃபை ஹாட் ஸ்பாட்டு இண்டர்நெட் வசதி 4G-ஐ விட வேகமானது. இதுவரை 500 ஹாட் ஸ்பாட்டுகளை நிறுவியிருப்பதாகவும், இந்த ஆண்டு முடிவுக்குள் 2,500 ஹாட் ஸ்பாட்டுகளை நாடு முழுவதும் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதுதவிர, தொலைதொடர்பு சேவையை அதிகரிக்க 25 ஆயிரம் புதிய மொபைல் டவர்களை நிறுவவும் முடிவு செய்துள்ளது பி.எஸ்.என்.எல்.

இலவசங்கள், மானியங்கள் வேண்டாம்!

logo


ஒருமாத காலமாக கனமழையால் தத்தளித்த தமிழ்நாட்டில், இப்போது அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மே மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதையொட்டி, ஒவ்வொரு கட்சியுமே, இப்போதே ‘கோதாவில்’ இறங்க தயாராகிவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் அடுத்த கட்சித்தலைவர்களை குறிவைத்து அறிக்கைககள் விடத்தொடங்கிவிட்டனர். முதல்–அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ம.க. அறிவித்துவிட்டது. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை அமைத்துவிட்டது. பா.ஜ.க.வை பொருத்தமட்டில், எங்கள் கூட்டணி அப்படியே இருக்கிறது என்று சொன்னாலும், அதில் சலசலப்பு இருப்பது தெரிகிறது. அடுத்து தி.மு.க. கூட்டணியில் யார்–யார் இடம்பெறப்போகிறார்கள்? என்பது ஒரு எதிர்பார்ப்பு. அ.தி.மு.க.வை பொருத்தமட்டில், பாராளுமன்ற தேர்தலைப் போல தனித்து போட்டியிடுமா?, அல்லது கூட்டணி வைக்குமா? என்று ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கு விடையளிக்கும் வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவு எடுப்பேன் என்று பொதுக்குழு கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்து விட்டார். விரைவில் ஒரு தெளிவான நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த பிரச்சினைகளில் எல்லாம் ஒரு தெளிவு ஏற்பட்டவுடன், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதைச்செய்வோம், இதைச்செய்வோம், இதைத்தருவோம், அதைத் தருவோம் என்று இலவசங்கள், மானியங்கள் பட்டியல் அடுக்கடுக்காக வரப்போகிறது. ஆனால், உழைப்பே உயர்வுதரும் என்று வாழும் இந்த தமிழ்நாட்டில், 45 ஆண்டுகளுக்கு மேலாக ஓசியே, மானியங்களே, சுகம் தரும் என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. உழைத்து சம்பாதிக்கவேண்டிய வயதில், ஓசிகளை வாங்கியே வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற ஒரு சோம்பேறித்தனமான எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நிச்சயமாக இதுபோன்ற எண்ணங்கள் பயனளிக்காது. முன்னுக்கு செல்லவேண்டிய தமிழ்நாட்டை பின்னுக்கு இழுத்துவிடும்.

தமிழ்நாட்டில், அரசின் மொத்த வருவாயில் 41 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காகவும், பென்சனுக்காகவும் சென்றுவிடுகிறது. 40 சதவீத வருவாய் அரசு வழங்கும் மானியங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் சென்றுவிடுகிறது. வருகிற மார்ச் இறுதியில் தமிழக அரசின் மொத்தக்கடன் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 ரூபாயாக இருக்கும். இந்த கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டிக்காக 12 சதவீதம் சென்றுவிடுகிறது. வருவாயின் இவ்வளவு தொகை இந்த 3 இனங்களுக்கு மட்டுமே சென்று விட்டால், எப்படி வளர்ச்சித் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கமுடியும்? அரசு இனிமேலும் கடன்வாங்கி காலத்தை தள்ளமுடியாது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைத்து, மேலும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால்தான் மாநிலம் வளர்ச்சியை காணமுடியும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 87 லட்சத்தை நெருங்கிவிட்டது. ஆக, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி, உட்கட்டமைப்பு வசதிகள், தொழில்வளர்ச்சி, விவசாய வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்தல் அறிக்கை வரவேண்டுமே தவிர, இலவசங்கள், மானியங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி, நாட்டை பின்னுக்கு தள்ளக்கூடிய தேர்தல் அறிக்கை தேவையில்லை என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

குஜராத்தில் முதல்–மந்திரியாக இருந்த நரேந்திரமோடி, ஒருபோதும் இலவசங்களை அறிவித்து ஓட்டு கேட்கவில்லை என்று பெற்ற பெயரை, வருகிற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் அதைப்போல அறிவித்து, நற்பெயரை பெறவேண்டும். இறக்கம் தரும் இலவசங்கள், மானியங்கள் வேண்டாம். ஏற்றம் தரும் வேலைவாய்ப்புகளை தந்தால், அவர்களே உழைத்து சம்பாத்தியம் செய்துக் கொள்வார்கள்.

Monday, January 4, 2016

ஏரியை ஆக்கிரமித்தால் தட்டி கேளுங்கள்: ஐஏஎஸ் அதிகாரி அமுதா வலியுறுத்தல்

Return to frontpage

மழை வெள்ள மீட்பு பணிக்கான சிறப்பு அதிகாரி அமுதா ஐஏஎஸ்: நமது உடலில் உள்ள நீர் மற்றும் மலம் எங்கும் ஒன்றாக சேராது. இரண்டும் தனித்தனியாகத் தான் உடலில் இருந்து வெளியேறும். இயற்கை அப்படித்தான் நம்மை படைத்துள்ளது. வெளியே வந்ததும் நாம் ஒன்றாக சேர்த்துவிடுகிறோம். அதன்பின் அதனை பிரிக்க செலவு செய் கிறோம். இயற்கை செய்தது போலவே நாமும் செய்தால் கோடிக் கணக்கான பணம் மிச்சம் ஆகும்.

மாற்றம் மனதளவில் நம்மிடையே வரவேண்டும். அந்த மாற்றம் உள்ளிருந்து வரவில்லை என்றால், இதுபோன்ற பேரழிவுகள் வந்து கொண்டே இருக்கும். நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் எங்கு தேங்குமோ அங்குதான் தேங்கும். நாம் அங்கு சென்று வீடுகளை கட்டிவிட்டு தண்ணீர் தேங்குகிறது என்று சொன்னால் அது நம்முடைய குற்றம். தண்ணீரோட குற்றம் இல்லை. நீர் மேலாண்மையில் நம்முடைய முன்னோர்கள்தான் உலகத்துக்கே முன்னோடி.

ஆறு, ஏரி, கலங்கல், மதகு, குட்டை, தாங்கல் என்று அந்த காலத்தில் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,200-க்கும் மேல் ஏரிகள் இருந்துள்ளன. எப்படி திட்டமிடப்பட்டதோ அதேபோல் கடந்த 20, 30 ஆண்டுகளில் திட்டமிட்டு அழித்துவிட்டோம். ரியல் எஸ்டேட் மூலம் நிறைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் அரசு தான் காரணம் என்கிறார்கள். நம்முடை யது ஜனநாயக நாடு. நாம்தான் அரசு. நாம் எல்லாவற்றையும் விட்டு விலகியிருக்கிறோம்.

சிலர் தவறு செய்யும் போது, அதனை தட்டிக்கேட்டு நிறுத்தாததால் எல்லோரும் கஷ்டப்படுகிறோம். ஒரு ஏரியில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் போதோ அல்லது வீடு கட்டும் போதோ தட்டிக்கேட்க வேண்டும். நமக்கு சொந்தமான ஏரி, வாய்க்கால், நீர்நிலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன்னால் எதுவும் ஒன்றுமில்லை.

முதல் மழைக்கும் இரண்டாவது மழைக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாறை 30 மீட்டரில் இருந்து 60 மீட்டருக்கு ஆழப்படுத்தினோம். முன்னதாக அங்கிருந்த 127 குடும்பங்களை உடனடியாக அரசுசின் உத்தரவு வாங்கி பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்றினோம். அந்த குடும்பங்களுக்கு வீடு கிடைத்ததால் சந்தோஷமாக இருக் கிறார்கள். அடையாறை ஆழப் படுத்தியதால் 5 ஆயிரம் குடும்பங் கள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.

மக்கள் நியாயமான எந்த செயலாக இருந்தாலும் ஆதரவு தருவார்கள். மக்கள் நல்லவர்கள். சுனாமி, தானே, வெள்ளம் வரும்போது மட்டும் மனிதாபிமானத்தை காட்டக் கூடாது. அது எப்பவும் இருக்க வேண்டும். அரசு நல்ல படியாக செயல்பட வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் முடியும். இந்த மழை வெள்ளம் நம்மை ஒன்று சேர்த்துள்ளது.

அரசு சொத்து எல்லாம் என்னுடைய சொத்து. பள்ளி, மருத்துவமனை, சாலை, தெரு விளக்கு என அனைத்தையும் நான் பாதுகாப்பேன். யாராவது சேதப்படுத்தினால் நான் தட்டிக்கேட்பேன் என்று இருக்க வேண்டும்.

பார்வை: ஆடையால் கெடுகிறதா புனிதம்?....அஜிதா



Return to frontpage

ஆடையால் நமது கோயில்களின் புனிதம் கெட்டுவிடுவதாகக் கருதி, இந்து சமய அறநிலையத் துறையின் சட்டத்தின் விதியை மேற்கோள் காட்டி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேசத்தையே உலுக்கிய நிர்பயா கொடூரத்துக்கும்கூட ஆடை பற்றிய கருத்துக்கள் வெளிவந்தன. ‘நிர்பயாவைப் போல இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் கவர்ச்சிகரமான உடையில் வெளியே போனால்…’ என்ற ரீதியில் வன்மமான கருத்துக்களைப் பேசியவர்களில் பலரும் நன்கு படித்த, வசதி வாய்ப்புள்ள நடுத்தர வர்க்கத்தினரே.

ராமாயண, மகாபாரதக் காலத்திலிருந்து இன்றுவரை பெண்களின் மீதான வன்முறைகளுக்குக் காரணம் பெண்தான் என்ற வன்முறைவாதம், வன்முறையாளர்களுக்கு மட்டுமே ஏற்புடைய ஒரு விஷயம், மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

சரி இப்போது ஆடைகளுக்கு வருவோம். “நமது கலாச்சாரம் காக்கப்பட வேண்டும்” என்கிற வாதத்தை எடுத்துக்கொள்வோம். நமது கலாச்சாரம் புடவை கட்டுதல், வேட்டி அணிதல் என்று வைத்துக்கொள்வோம். இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண்களைத் தவிர புடவையும் வேட்டியும் மட்டுமே தமது உடை என்று கருதாதவர்கள் 90 சதவீதம் பேர்.

ஆண்களில் அதுவும் இல்லை. கிராமப்புறங்களைத் தவிர்த்து சிற்றூர், நகரங்கள் உட்பட 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பேண்ட் சட்டைதான் அணிகிறார்கள். வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வேட்டி கட்டுவது வழக்கத்தில் உள்ளது. எனவே, ‘நமது கலாச்சாரம்’ என்று கூறுவது வெகுவாக மாறிவிட்டது. 25-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடையில் ‘நமது கலாச்சாரத்தில்’ இல்லை என்பது நிதர்சனமான உண்மை. எனவே, வாழ்க்கையில், உடையில் ஏற்படும் மாற்றத்தை நீதித்துறை முதல் பள்ளி, கல்லூரிவரை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு மாற்றத்துக்கு உள்ளாகிவிட்ட ஆடையைச் சட்டம் போட்டு, விதிகளைப் போட்டாலும் மாறுவது கடினம். அநாகரிகமாக இல்லை என்றால் ஏற்றுக்கொண்டு போக வேண்டும் என்பதுதான் நியதி.

“பிறர் கண்ணை உறுத்துவது போல் இருக்கக் கூடாது” என்று சொல்லப்படுகிறது.

பேசாமல் எல்லாரும் உடல் முழுக்க மூடும் புர்க்காவை அணிந்துவிட்டால் யார் கண்ணையும் உறுத்தாது. நமது சமூகத்திலேயே வாழும் இஸ்லாமிய சமூகத்தினர்கூட இதில் மாற்றம் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், எது எவர் கண்ணை உறுத்தும் என்ற கேள்விக்கு ஒரு விடை சாத்தியமில்லை. “சரி துப்பட்டாவைப் போடுங்கள், சுடிதாரை ஏற்றுக்கொள்கிறோம்” என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இது இன்றைக்குக் கோயில்களில் வைக்கப்படுவது மட்டுமல்ல. பல முன்னணிக் கல்லூரிகளில், ஏறக்குறைய எல்லாப் பொறியியல் கல்லூரிகளிலும் துப்பட்டாவை ஊக்கு போட்டு இருபக்கமும் ஆடையுடன் குத்திக்கொள்ள வேண்டும் என்று விதி இருக்கிறது. இது மார்பகங்கள் தெரியாத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அன்றி வேறல்ல. ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு தாவணி போட வேண்டும் என்று 90-களுக்கு முன்பு இருந்த பள்ளிக்கூட விதிக்கு ஒப்பானது.

சமீபத்தில் நண்பர் ஒருவர் மிகவும் மனமொடிந்து கூறும்போது, முன்பெல்லாம் என் 11 வயது மகளை நான் சுதந்திரமாக உடுத்த அனுமதித்தேன். இப்போது நான் துப்பட்டாவைப் போட்டு மறைக்கும் விதமாக உடுத்தச் சொல்கிறேன் என்று கூறினார். ஏனெனில், பக்கத்து வீட்டுக்காரரின் பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று வேதனையுடன் கூறினார். இதே தந்தையின் வேதனையை, சமீபத்தில் தீர்ப்பெழுதிய நீதித்துறையின் மனநிலையோடு ஒத்ததாக இருக்கும் என்று கருத முடியுமா? முடியாது. ஏனெனில் இவர்களுடைய நோக்கம் வக்கிரப் பார்வையுடன் பார்க்கும் ஆணின் கண்களிலிருந்து பெண்ணைக் காப்பாற்றுவது அல்ல. மாறாக, பெண்ணின் உடையால் ஆணின் மனது (சமூகம்) வக்கிரப்படக் கூடாது என்பதும், இதுபோன்ற வக்கிரமான உடையால் கோயிலின் புனிதம் கெடக் கூடாது என்பதும்தான். எப்படிப்பட்ட அணுகுமுறைக் கோளாறு இது? எப்படிப்பட்ட கருத்து வக்கிரம் இது?

உண்மையில் ஆண் மனது பெண்ணின் அங்க அவயங்களைப் பார்த்தால் உணர்ச்சி தூண்டப்பட்டு, வன்முறை புரிய இடமளிக்கும் என்று கருதுகிறதா இந்தத் தீர்ப்பும் சுற்றறிக்கையும்? உண்மையில் நமது இளைஞர்கள் அப்படி இல்லை என்பதுதான் நிஜம். அப்படிப்பட்ட உணர்வுரீதியாகப் பண்படாத ஆண்கள் இருக்கும்வரை இந்தச் சமூகம் எப்படி வளரும்? அப்படியானால் ‘பெண்களின் உடையால்தான் பாலியல் வன்முறைகள் பெருகுகின்றன’, ‘பெண்கள்தான் அவர்கள் மீதான வன்முறைக்கு காரணம்’ என்ற கருத்துகளும் சரிதானோ? நிர்பயா குற்றவாளி சொன்னதுபோல், அவ்வளவு எதிர்ப்பு காட்டாவிட்டால் அவ்வளவு வன்முறை நடந்திருக்காது என்று ‘இந்தியாவின் மகள்’ விவரணப் படத்தில் அவன் பேசிய வார்த்தைகளின் மற்றொரு பரிமாணம்தானா இந்தச் சமீபத்திய தீர்ப்பும் சுற்றறிக்கையும் என்று நாம் யோசிக்க வேண்டியுள்ளது. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்? என்ன விதமான பொய்மைகளில் பெருமை கொள்கிறோம் நாம் என்று யோசிக்க வேண்டும்.

கோயில்களின் புனிதத்தை ஆடைகள் கெடுக்க முடியுமா ?

கோயில்களின் புனிதம் உள்ளுறை தெய்வங்களால் ஏற்பட்டதா? அந்த தெய்வங்களைக் கும்பிட வரும் மனிதர்களால் ஏற்பட்டதா? ஒரு புனிதமான கோயிலுக்குள் நூறு பாவங்களைச் செய்த பாவிகள் வருகிறார்கள். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கொடியவர்கள் வருகிறார்கள். பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் வருகிறார்கள். மனத்தில் இருளையும், செயல்களில் கயமையும் வைத்துள்ளவர்கள் வருகிறார்கள். அதனால் கெடாத கோயில்களின் புனிதம் பெண்கள் உடையால் ஆண்களின் அரைக் கால் சட்டைகளால் கெடுவதாகக் கூறுகிறீர்களே, நீங்கள் கடவுளின் புனிதம் குறித்தும் கடவுள் உறையும் கோயில்களின் புனிதம் குறித்தும் இவ்வளவுதான் உணர்ந்துள்ளீர்களா?

ஒவ்வொரு மதமும் பற்றற்று இருப்பதையே தமது மத தத்துவத்தின் அடி நாதமாகக் கொண்டுள்ளது. ஆகவே, பெண்ணின் உடைக்குக் கட்டுப்பாடு போட்டு ஒழுக்கத்தைக் கொண்டுவரப் பார்ப்பது மாட்டுக்கு முன்னால் வண்டியைக் கட்டும் வேலை. இத்தகைய சமூகம் முன்னே செல்லாது.

- கட்டுரையாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நாஞ்சில் சம்பத் சறுக்கல்: கட்சியின் குரல்களும் கேள்விகளும்!

Return to frontpage

ப.கோலப்பன்


தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி செய்தித் தொடர்பாளரின் பொறுப்பு மிகவும் சவாலானது. அது முழுக்க முழுக்க கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக் கீழ் உள்ள பதவியாகும்.

நாஞ்சில் சம்பத் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு தனியார் தொலைக்காட்சிகளில் அடுத்தடுத்து அவர் அளித்த பேட்டிகளே இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால் எவ்வளவு சிக்கலானது என்பதை நாம் சற்றே ஆழமாக அலசுவோம். ஒவ்வொரு கட்சியின் செய்தித்தொடர்பாளரும் கம்பியின் மீது நடந்து வித்தை காட்டும் நபரைப் போலவே ஆட்டுவிக்கப்படுகிறார் என்றால் அது மிகையாது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை ஒரு கட்சி செய்தித் தொடர்பாளரின் பொறுப்பு மிகவும் சவாலானது. அது முழுக்க முழுக்க கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டுக் கீழ் உள்ள பதவியாகும். அதேபோல், கட்சித் தொண்டர்களால் கொண்டாடப்படும் பதவியும் கூட. கட்சியின் மேடை பேச்சாளருக்கும், செய்தித் தொடர்பாளருக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

கட்சி செய்தித்தொடர்பாளர் உதிர்க்கும் வார்த்தைகள் தலைமையின் மனதில் உள்ளவையாக இருக்க வேண்டும். அதே வேளையில் கட்சியின் கொள்கையை எடுத்துரைப்பதாகவும் இருக்க வேண்டும். ஒரு மெலிசான கோட்டின் மீது நிற்பது போன்றது. ஆனால், கட்சியின் மேடை பேச்சாளருக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை.

இத்தகைய மெலிசான கோட்டில் பயணித்தபோது, கட்சி தலைமையை பாதுகாக்க முயன்றபோது நாஞ்சில் சம்பத் சறுக்கியிருக்கிறார். வெள்ளத் துயரத்தில் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் தேவையா என்ற கேள்விக்கு 'ஒப்பாரி சத்தம் கேட்கிறது என்பதற்காக திருமணத்தை நிறுத்த முடியுமா' என்ற சர்ச்சை கேள்வியை கேட்டு சறுக்கியிருக்கிறார்.

1990-களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக ஞானதேசிகன் அக்கட்சியின் தலைவர் மூப்பனாரால் நியமிக்கப்படும் வரை தமிழக அரசியல் வட்டாரத்தில் செய்தித் தொடர்பாளர் என்றொரு பதவியும், சொல்லும் புதிதாகவே இருந்தது.

திராவிட அறிஞர் திருநாவுக்கரசு செய்தித் தொடர்பாளர் பதவி குறித்து கூறும்போது, "கட்சிக்காக செய்தித் தொடர்பாளரை நியமிக்கும் வழக்கம் டெல்லியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். தமிழக அரசியலில் இத்தகைய கலாச்சாரமே இல்லை. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டங்கள் மூலமாக மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தனர். இல்லாவிட்டால் ஊடகங்கள் வாயிலாக மக்களுடன் தொடர்பில் இருந்தனர்" என்றார்.

ஆனால், டெல்லி அரசியல் வட்டாரத்தில் உள்ள செய்தித் தொடர்பாளர்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக தெரிவிக்க முடியும். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் தாங்கள் பேசவிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானித்துப் பேச வேண்டும். ஒரு வார்த்தை தவறினால்கூட கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரும்.

திமுக தலைமையின் கருத்துடன் ஒத்திராத கருத்துகளை தெரிவித்ததற்காக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வேலையை பல ஆண்டுகளாக செய்துவந்தாலும் கடந்த ஆண்டுதான் அவர் முறைப்படி அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

இந்நிலையில் செய்தித்தொடர்பாளர் பதவி குறித்து அவர் கூறும்போது, "ஒரு செய்தித்தொடர்பாளர் ஒவ்வொரு பிரச்சினையிலும் கட்சித் தலைமையின் நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல், கட்சியின் கொள்கையையும், கட்சியின் திட்டங்களையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்க வேண்டும். பிரச்சினைகளில், என்னுடைய சொந்த கருத்துகளை தெரிவித்தபோது மட்டுமே கட்சித் தலைமையால் நான் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன்" என்றார்.

சேட்டிலைட் சேனல்களும், செய்தித்தாள்களும் புற்றீசல் போல் பெருகிவிட்ட சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க செய்தித்தொடர்பாளர்களை நியமிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு விதிவிலக்காக தேமுதிக மட்டும் திகழ்கிறது.

செய்தித் தொடர்பாளர் பணியை எப்படி நேர்த்தியாக செய்யலாம் என ஞானதேசிகன் கூறும்போது, "கட்சித் தலைமையின் மனநிலை குறித்த தெளிவான புரிதலும், கட்சி பயணிக்கும் திசையை நன்கு உணர்ந்திருந்தாலே இப்பதவியை செவ்வனே செய்யலாம். மூப்பனார், எனக்கு நல்ல சுதந்திரம் அளித்திருந்தார். 1998-ல் ஐக்கிய முன்னணியில் எங்கள் கட்சி வெளியேறுவதையே நான்தான் அறிவித்தேன்" என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தபோதும் சரி தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருக்கும்போதும் சரி பல்வேறு சவால்களை சந்தித்திருப்பதாக கூறுகிறார் கோப்பண்ணா. அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிப்பது என்பது முகவும் கடினமாக பணியே என அவர் கூறியுள்ளார்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...