Sunday, January 10, 2016

அண்ணாபல்கலையில் பட்டமளிப்பு விழா

DINAMALAR

சென்னை, :சென்னை, அண்ணா பல்கலையின், 36வது பட்டமளிப்பு விழா, ஜன., 20ல் நடக்கிறது. இந்த பட்டமளிப்பு விழாவை, டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத மழை, வெள்ள பாதிப்பால் விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜன., 20ல் பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலை வளாகத்தில், விவேகானந்தா கலையரங்கில் நடக்கும் விழாவில், தமிழக அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற, 'இஸ்ரோ' விஞ்ஞானி வளர்மதி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., ஆகியவற்றில் முதல் தரம் மற்றும் தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு மட்டும், நேரடியாக பட்டம் வழங்கப்படும். பிஎச்.டி., முடித்தவர்களுக்கும் நேரடியாக பட்டம் வழங்கப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை: சுஷ்மா

dinamalar

புதுடில்லி : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: தற்போது இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டுமென யோசனை தெறிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு பெண்களை அனுப்ப தனியார் நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை. அரசு ஏஜென்சிகள் மூலம் மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, January 9, 2016

இன்று வெளிநாடுவாழ் இந்தியர் தினம்

Dinamani

வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2003-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915. அதன் நினைவாக அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும், இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும் இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக்காட்டவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'ப்ரவசி பாரதிய சம்மான்' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.

தாவரத்தைக் காப்பாற்றும் அசைவப் பூச்சிகள்


Dinamani

By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 09 January 2016 03:38 AM IST


பூச்சிகளில் அதென்ன சைவம்? அசைவம்? உயிரியல் விஞ்ஞானம், உயிரினங்களை மாமிச பட்சிணிகள் என்றும் சாகபட்சிணிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதைத்தான் நாம் சைவம், அசைவம் என்று தமிழில் வகைப்படுத்தியுள்ளோம். விவசாயம் செழிக்க அசைவப் பூச்சிகளின் ஆற்றலை அறிவதே நம் நோக்கம். சைவப் பூச்சிகள் பசுமைகளின் எதிரிகள். அசைவப் பூச்சிகளே விவசாயிகளுக்கு நண்பர்கள்.
பூச்சிகளில் எவை சைவம், எவை அசைவம் என்று கண்டறிந்து அசைவத்தை வளர்த்துப் பசுமையைக் காப்பாற்றுவதே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம். இது சரியாக நிகழ்ந்தால் விஷமான பூச்சி மருந்துகளுக்கு வேலையே இல்லை. பூச்சி மருந்துகளைக் கையாளாமல் பருத்தி உற்பத்தியைப் பெருக்கிய பெருமையைப் பெறும் ஒரு இளவயது மங்கை மனீஷாவை, வட இந்திய ஊடகங்கள் விளம்பரப்படுத்தியுள்ளன.
ஹரியாணா மாநிலத்தில் ஜிண்ட் மாவட்டத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பருத்தி விளைச்சலை உயர்த்தும் "ஜிண்ட் பாக்கேஜ் திட்டம்' பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பரவி விட்டதால் பூச்சி மருந்து முதலாளிகள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கண்கலங்கி நிற்கின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் வேளாண் விஞ்ஞானி சுரீந்தர் தலாலின் விடாமுயற்சியால் இந்த வெற்றி என்பது மிகையல்ல.
மங்கை மனீஷா குருவை மிஞ்சிய சிஷ்யையாக உருவாகிவிட்டதால் மனீஷா "கீட் மாஸ்டராணி' (பூச்சி மாஸ்டர்) என்று செல்லமாக உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறார். பருத்தி விவசாயத்தை நாசம் செய்வது வெள்ளை ஈக்கள். இந்த வெள்ளை ஈக்களின் பரம எதிரி சிரை சோபா (Chry Sofa) எனப்படும் ஒரு செம்பொறி வண்டு. ஒரு செம்பொறி வண்டு நாளொன்றுக்கு 150 வெள்ளை ஈக்களை உண்கின்றனவாம்.
தீதார் போரா என்ற பூச்சி பச்சை இலைப் பூச்சியின் முட்டைகளை உண்ணுமாம். எந்தப் பூச்சிக்கு எந்தப் பூச்சி எதிரி என்று கண்டுபிடித்து, எதிரிப் பூச்சிகளின் ஒட்டுண்ணியை விடுவதில் மனீஷா வல்லவராம். எனினும், பூச்சிகளை வளர்க்கப் பசுமை வேண்டும். ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைப் பசுமையிலிருந்துதானே தொடங்க வேண்டும்!
பஞ்சபூத சக்திகளில் நீருக்கு நிகரான சக்தி சூரிய சக்தி. உலகுக்கே ஒளிவழங்கும் சூரிய பகவான் இல்லாவிட்டால் உலகே இருண்டுவிடும். மனிதர்கள், விலங்குகள், பட்சிகள், பூச்சிகள் அவை மாமிச பட்சிணியானாலும் சாக பட்சிணியானாலும் - தசைகளை இயக்க இயந்திர சக்தி, நரம்புகளை இயக்க மின்சக்தி, உடலை வளர்க்க ரசாயன சக்தி, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க வெப்ப சக்தி என்று சகல ஜீவராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எல்லா சக்திகளுக்கும் சூரிய சக்தியே மூலாதாரம்.
இனி வருங்காலத்தில் மரபுசாரா எரிசக்தியை நாம் சூரிய பகவானிடமிருந்துதானே பெற்றாக வேண்டும். எனினும், சூரிய சக்தியை உள்வாங்கிப் பேராற்றலைப் பெற்றுப் பசுமையை வளர்த்து உலகைக் காப்பாற்றும் அற்புத சக்தியை மரங்களும் செடி, கொடிகளும் பெற்றுள்ளன.
புவியின் பசுமைப் போர்வையையும், உணவுகளையும் தாவரங்கள் சூரியசக்தியை உள்வாங்கி ஒளிச்சேர்க்கை செய்வதால்தான் உலகமே இயங்குகிறது.
இவ்வாறு உலகம் இயங்க மூலகாரணம் சூரியன் என்பதால்,
"பரிதியே, பொருள் யாவர்க்கும்
முழு முதலே
பொன் செய் பேரொளித்திரளே,
அனைத்து ஜீவர்க்கும் பிரம்ம ஒளியே
ஒளிக்கு ஒளியே, ஒலி நுழையும்
விண்ணில்
ஒளியாய் நிற்பவனே, வாழியவே...'
என்பது வேத வாக்கியம். வேளாண்மையில் சூரியன் அருளால் நிகழும் ஒளிச்சேர்க்கையினால் பசுமையைக் காப்பாற்றுவது அசைவப் பூச்சிகளே. சைவத்தை வாழ வைப்பது அசைவம் என்கிறது விருட்சாயுர் வேதம். குணபத்தை (Dead Bodies) ரசமாக்கி, நுண்ணுயிரிகளாக்கி வேரில் ஏற்றிக்கொண்டு மரங்கள் காய்ப்பதாகவும், தாவரங்கள் தானியங்களை வழங்குவதாகவும் விருட்சாயுர் வேதம் குறிப்பிட்டுள்ளது.
தாவரங்களில் பசுமை ஏற்படும்போது அப்பசுமையை உண்ண வரும் சைவப் பூச்சிகளை உண்டு தாவரங்களைக் காப்பாற்றும் அசைவப் பூச்சிகளைப் பற்றி அறிய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. ஒவ்வொரு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் பூச்சியியல் துறை உண்டு. இத்துறையை ENTOMOLOGY என்பர்.
ஆனால், இத்துறை நிபுணர்கள் இயற்கையை மதிப்பதில்லை. பூச்சிமருந்து நிறுவனம் வழங்கும் உயிர்க்கொல்லிகள் பற்றியே மாணவர்களுக்குப் போதிப்பார்கள். பூச்சிமருந்துக் கம்பெனி வழங்கும் கமிஷன் பெறுவதில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள்.
ஒரு பயிருக்குப் பூச்சிமருந்து அடிப்பதால் பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளுடன் நன்மை செய்யும் அசைவப் பூச்சிகளும் இறந்து விடும். எவ்வளவுதான் மருந்து அடித்தாலும் இலைகளின் பின்புறத்தில் உள்ள முட்டைகள் அழிவதில்லை. அவை பூச்சியாகி மீண்டும் தாக்கும்போது அசைவப் பூச்சிகள் இல்லாததால் பசுமை இழந்து விளைச்சல் குறைகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் தப்பிப் பிறந்த பூச்சியியல் நிபுணர் சுரீந்தர் தலால் இயற்கையோடு இணைந்து ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைப் பருத்தி விவசாயிகளிடம் கற்பித்து பஞ்சாப் - ஹரியாணா, ராஜஸ்தான் பருத்தி விவசாயிகளைத் தற்கொலையிலிருந்து மீட்டுள்ளார்.
2007-ஆம் ஆண்டிலிருந்து 2013-இல் அவர் இறக்கும் வரை பஞ்சாப் - ஹரியாணா - ராஜஸ்தான் மாநில எல்லைகளை ஒட்டிய பருத்தி மாவட்டங்களில் உள்ள 18 கிராமங்களில், சுமார் 200 பருத்தி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக அடிப்படையில் அசைவப் பூச்சிகளை அடையாளப்படுத்தும் பயிற்சியை வழங்கியுள்ளார். இவர் வழங்கிய பயிற்சியில் 50 பெண்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் கீட்மாஸ்டராணி மனீஷா.
ஒளிச்சேர்க்கை மூலம் தாவரம் சமைக்கும் உணவைப் பற்றி சுரீந்தர் தலால் செய்துள்ள நுட்பமான ஆய்வு வியப்புக்குரியது. "ஒரு தாவரம் நாளொன்றுக்கு 4.5 கிராம் உணவு சமைக்கிறது. இதில் அதன் பங்கு 3 கிராம். சுமார் 1.5 கிராம் பூச்சிகளுக்கு ஒதுக்குகிறதாம். பூச்சிகளுக்கு உணவு வழங்கும் கடமை பருத்திச் செடிக்கும் உண்டு.
இந்த உணவு வேர், தண்டு, இலைப் பகுதிகளில் உள்ளன. இந்த உணவில் பூச்சிக்கு கால் பங்கு உண்டு. கால் பங்கு உணவை சைவப் பூச்சிகள் தின்பதால் பயிருக்கு நஷ்டம் இல்லை. ஆனால், கால் பங்குக்கு மேல் சைவப் பூச்சிகள் தாவரங்களை உண்டால் தாவரம் பலம் குன்றும்.
ஆகவே சைவப் பூச்சிகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அசைவப் பூச்சிகளின் ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டுவது அவசியம். அதேசமயம், வயல்வெளிப் பயிற்சியில் கணிசமான அளவில் அசைவப் பூச்சிகளை அடையாளம் செய்துவிட்டால் ஒட்டுண்ணி அட்டையும் வேண்டாம். பூச்சிமருந்தும் வேண்டாம்.'
இவ்வாறே பயிர்களை அழிக்கும் சைவப் பூச்சிகளின் எண்ணிக்கை ரசாயன உரப் பயன்பாடு கூடும்போது அவையும் கூடுகின்றன என்று கூறிய தலால், ஒரு புதிய பருத்தி பாக்கேஜ் திட்டத்தை ஹரியாணாவில் உள்ள ஜிண்ட் மாவட்டத்தில் நிடானா என்ற கிராமத்தில் அறிமுகம் செய்து வெற்றி கண்டதைத் தொடர்ந்து அது "ஜிண்ட் பாக்கேஜ்' என்று பிரபலமாகிவிட்டது.
வேளாண்மைத் துறை சிபாரிசு செய்யும் பேக்கேஜ் திட்டத்தின்படி ஒரு ஏக்கர் பருத்திக்கு 2 மூட்டை (100 கிலோ) டி.ஏ.பி., 4 மூட்டை (200 கிலோ) யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் (40 கிலோ), 10 கிலோ துத்தநாகம் (ஜிங்க்) என்பது கணக்கு. ஆனால், தலால் வகுத்துள்ள கணக்கில் ஏக்கருக்கு 15 கிலோ டி.ஏ.பி., 15 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ், 3 கிலோ துத்தநாகம் போதுமானது.
அடி உரமாக இயற்கை இடுபொருள்களை வழங்கிய பின்னர் ரசாயன உரத்தை கீழ்க்கண்ட அளவில் -- 2.5 கிலோ டி.ஏ.பி., 2.5 கிலோ யூரியா, 100 கிராம் பொட்டாஷ் 500 கிராம் பொட்டாஷ் சேர்ந்த 5.6 கிலோ கலப்பு உரங்களை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 டேங்க் ஸ்ப்ரே செய்யுமாறு கூறுகிறார். இவ்வாறு பருத்தி பயிரிட்டுக் காய்க்கும் வரை 6 முறை ஸ்ப்ரே செய்யுமாறு சிபாரிசு செய்துள்ளார்.
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்துடன் மிகக் குறைந்த அளவு ரசாயனப் பயன்பாடும் இணைந்து பருத்தியின் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளதும் புலனாயிற்று. அதே அளவு ரசாயன உரங்களை வலியுறுத்திய துறை சார்ந்த வயலில் ஒரு காயில் 3.5 கிராம் பஞ்சுதான் கிடைத்தது. அதேசமயம், தலால் சிபாரிசு செய்த குறைந்த அளவு ரசாயன உரப் பயன்பாட்டில் ஒரு காய்க்கு 5 கிராம் பஞ்சு கிடைக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தலால் மறைவுக்குப் பின் அவரது பாக்கேஜ் திட்டத்தையும், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி, அவர் நினைவாக "சுரீந்தர் தலால் கீட் சட்சாரத் மிஷன்' என்ற பெயரில் ஏராளமான கிளைகளுடன் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் எல்லைப்புற பருத்தி மாவட்டங்களில் பருத்தி உற்பத்தியாளர் விவசாய சங்கம் அகாவத்தின் தலைமையில் செயலாற்றி வருகிறது (கீட் என்றால் பூச்சி என்று பொருள்).
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநில எல்லை மாவட்டங்களில் அதிக அளவில் பருத்தி விளைகிறது. இதுநாள் வரையில் அம்மாவட்டங்களில் உள்ள பருத்தி விளையும் கிராமங்களில் "வெள்ளை ஈ' தாக்குதலால் 75 சதவீதம் விளைச்சல் பாதிப்புற்றதால் அதைக் கட்டுப்படுத்த அதிக அளவில் பூச்சி மருந்தையும், ரசாயன உரப் பயன்பாட்டையும் அரசின் வேளாண்மைத் துறை சிபாரிசு செய்து வருகிறது. அரசின் சிபாரிசுகளை ஏற்று அவ்வாறு செய்தும்கூட "வெள்ளை ஈ' கட்டுப்படுவதாயில்லை.
இம் மூன்று மாநிலங்களிலும் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ.4,500 கோடி மதிப்புள்ள பருத்தி. பி.ட்டி பருத்தி பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் தாங்க முடியாத உரம் - பூச்சிமருந்துச் செலவினால் கடனாளியாயினர். சுமார் 20 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கெல்லாம் தக்க தீர்வை சுரீந்தர் தலால் கீட் சட்சாரத் மிஷன் வழங்கி வருகிறது.
பருத்தி விவசாயிகளின் துயர் நீங்கி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த இளவயது மங்கை மனீஷா போல் ஆயிரக்கணக்கில் மனீஷாக்கள் தோன்றிவிட்டால் இந்தியா பருத்தி உற்பத்தியில் புதிய எல்லையைத் தொட்டு விடும்.

சூரிய சக்தியை உள்வாங்கிப் பேராற்றலைப் பெற்று பசுமையை வளர்த்து உலகைக் காப்பாற்றும் அற்புத சக்தியை மரங்களும் செடி, கொடிகளும் பெற்றுள்ளன.

மாடுகளை அலங்கரிக்க பிளாஸ்டிக் பூக்கள்: வரவேற்பு குறைந்துவரும் பாரம்பரிய நெட்டி மாலை

Return to frontpage


வி.சுந்தர்ராஜ்


மாட்டுப் பொங்கலின்போது கால் நடைகளை அலங்கரிக்க தற் போது பாலித்தீன் பூக்கள், காகிதப் பூக்களை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கியதால் பாரம்பரிய நெட்டி மாலைகளுக்கு மவுசு குறைந்து வருகிறது.

மாட்டுப் பொங்கலன்று மாடு களைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து விவசாயிகள் அழகு பார்ப்பார் கள். பொங்கலையொட்டி கால் நடைகளுக்கு அணிவிப்பதற் காகவே பிரத்யேகமாக தயாரிக் கப்படும் நெட்டி மாலைகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

இந்த நெட்டி மாலை தயாரிப்புத் தொழிலில் திருவாரூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் உள்ள சுமார் 120 குடும்பங்கள் கடந்த நான் கைந்து தலைமுறைகளாக ஈடு பட்டுள்ளன.

பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமே இந்த நெட்டி மாலைத் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக குளங்கள், ஏரிகள், வாய்க்கால் பகுதிகளுக்குச் சென்று அங்கு வளர்ந்திருக்கும் நெட்டியை (ஒரு வகையான தாவரம்) அறுத்துக் கொண்டு வந்து அதனை பக்குவமாக காய வைத்து பின்னர், துண்டு துண்டு களாக நறுக்கி, சாயமேற்றி, அதனை மாலையாக்கி விற்பனை செய்கின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டு களாக பாலித்தீன் மாலைகளும், காகித மாலைகளும் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருவதால், பாரம்பரியமாக மாடு களுக்கு அணிவிக்கப்படும் நெட்டி மாலைகளுக்கு பொது மக்களிடம் வரவேற்பு குறைந்து விற்பனை மந்தமாக உள்ளது.

இதுகுறித்து நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோவிந்த சாமி கூறியபோது, “எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் இந்த நெட்டி மாலை தயாரித்து, விற் பனை செய்து வருகிறேன். முன் பெல்லாம், ஏரி, குளங்களில் அதிக அளவில் நெட்டிகள் கிடைக்கும்.

தற்போது மீன் வளர்ப்பதற்காக நீர் நிலைகள் குத்தகைக்கு விடப் படுவதால் நெட்டிகள் அழிக்கப் படுகின்றன. இதனால் முன்பு போல அதிக அளவு நெட்டிகள் கிடைப்பதில்லை. ஒருசில இடங்களில் கிடைக்கும் நெட்டி களைச் சேகரித்து மாலையாக தயாரித்து வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய் கிறோம். இங்கிருந்து தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு நெட்டி மாலைகள் அனுப்பப்படு கிறது.

இதில் காசு மாலை, ரெட்டை மாலை, தாண்ட மாலை என 3 வகைகள் உண்டு. இந்த மாலைகளை ரூ.5 முதல் ரூ.15 வரை நாங்கள் விற்பனை செய்கிறோம். இதை குடிசைத் தொழிலாக 2 மாதத்துக்கு மட்டுமே செய்கிறோம்.

வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு தொழிலை செய்வதால், போதிய கூலி கிடைப் பதில்லை. இந்த தொழிலைப் பாதுகாக்கும் விதமாக எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் இத்தொழில் நலிவடையாமல் இருக்கும்” என்றார்.

80 கோடி பேரை ஈர்த்த பேஸ்புக் மெஸஞ்சர்

ஐஏஎன்எஸ்

அதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக் குக்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது. தற்போது மாதம்தோறும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியை கடந் திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளத்தில் ‘பேஸ்புக்’ முதலிடத்தை பிடித்துள்ளது. மொபைல், இணையதள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ‘பேஸ் புக்’ வளர்ந்து வருகிறது. அதன் மற்றொரு செயலியான (ஆப்) பேஸ்புக் மெஸஞ்சரும் தற் போது முக்கிய இடத்தை பிடித்துள் ளது. கடந்த நவம்பர் இறுதி வரை இதனை 50 கோடி பேர் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டே மாதங்களில் பயன்பாட் டாளர்களின் எண்ணிக்கை தற் போது 80 கோடியை கடந்திருப்ப தாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி குறித்து அமெரிக்காவை சேர்ந்த நீல்சன் நிறுவனம் 13 வயதுக்கு அப்பாற்றப்பட்ட மொபைல் பயன்பாட்டாளர்களிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்மார்ட்போன் செயலிகளில் ‘பேஸ்புக்’ கடந்த 2015-ம் ஆண்டு மீண்டும் முதலிடத்தை பிடித்தது. மாதம்தோறும் சராசரியாக இந்த செயலியை 12.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை விட, இது 8 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். இதே போல், வீடியோ காட்சிகளை பதிவேற்றுவது முதல் இசை, செயலிகள் டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து பயன்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதில் அதிக அள விலான நுகர்வோரை இந்த ஆண்டு பேஸ்புக் மெஸஞ்சர் ஈர்த்துள்ளது. 2014-ம் ஆண்டை காட்டிலும், 31 சதவீத வளர்ச்சியை கடந்த ஓராண்டில் பேஸ்புக் மெஸஞ்சர் எட்டி பிடித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மெஸஞ்சரின் தலைவர் டேவ் மார்க்கஸ் கூறும் போது, ‘‘உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் மெஸஞ்சர் செயலியை, எங்களது குழு உருவாக்கியதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டு இறுதியில் மாதம்தோறும் மெஸஞ்சரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியாக அதிகரித்துள்ளது என்ற செய்தி எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது’’ என்றார்.

பேஸ்புக் மெஸஞ்சருக்கு அடுத்தபடியாக 9.7 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டு, ‘யூ டியூப்’ 2வது இடத்தை பிடித்துள்ளது.

Friday, January 8, 2016

Only 3 TN varsities adopted UGC norms on V-C selection, says govt. .... SURESHKUMAR

Return to frontpage

The State government has informed the Madras High Court that only three out of the 22 State universities have adopted the University Grants Commission (UGC) guidelines in respect of appointment of Vice-Chancellors.

The government itself was yet to adopt the UGC Regulations of 2010 which comprehensively deal with qualifications for appointment of teachers and Vice-Chancellors in universities.

The government made these submissions before the First Bench of Chief Justice S.K. Kaul and Justice Pushpa Sathyanarayana on a public interest litigation (PIL) petition moved by former Anna University Vice-Chancellor M. Anandakrishnan and Change India, a voluntary organisation. The petitioners approached the court challenging a notification given by the Madurai Kamaraj University to fill the post of Vice-Chancellor, in which they did not prescribe the eligibility norms for candidates as per the UGC regulations.

The petitioners alleged that since largescale corruptions were taking place in various universities, to prevent scandals universities must follow the UGC Regulations so that credible persons were appointed to the post of Vice Chancellor.

The court had directed the State to file an affidavit explaining the position of all 22 universities in respect of adopting the UGC guidelines.

On Thursday, the government submitted that only three universities had “partially” adopted these guidelines.

Objecting to this, the UGC counsel said when the universities received huge financial grants from the UGC they are bound by its regulations.

The judges then questioned the UGC counsel if the apex regulatory body had any powers to take action against erring universities and if so, whether it has acted against any institution so far.

Defending the Madurai Kamaraj University notification, its counsel contended: “The universities are mandated to follow the norms of the UGC only after the guidelines are adopted by the respective State governments. But in the given case, the norms are yet to be adopted by the government.”

Moreover, he contended that the Vice-Chancellor is not a teaching staff but an academic head and principal executive officer of the university.

The UGC norms would be applicable only in the appointment of teaching staff, counsel argued.

Countering this, counsel for the petitioners contended that, “Since the Vice-Chancellor is the academic head, the norms are applicable to such appointments also.”

Defending the eligibility criteria prescribed by the search committee which says that both professors and associate professors with an experience of 10 plus years can apply for the post of Vice-Chancellor, university’s counsel said: “Most of the affiliated colleges of the university do not have a designated post of professor. Such post is available only at the university level. Hence, to avoid narrowing down the eligibility criteria, the committee decided to include associate professors with over 10 years of experience.”

Recording the submissions, the Bench directed the respective counsel to file a synopsis of their arguments in not more than three pages and posted the matter to January 25 for further hearing.



‘Govt. yet to adopt the regulations which deal with qualifications for appointment of teachers, V-Cs’

NEWS TODAY 14.06.2026