Sunday, January 10, 2016
நிதி ஆளுமையில் நீங்கள் எப்படி?

எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்கிற வாசகம் ஒரு வரி நகைச்சுவையாக
பலரும், பல இடத்திலும் சொல்லியிருக்கிறோம், சொல்லக் கேட்டிருக்கிறோம்.
ஆனால் இந்த வார்த்தைகளைக் கேட்டு சிரிப்பதற்கான பொருள் இருக்கிறதா என்றால்
எதுவும் கிடையாது. இதை திரைப்படக் காட்சியோடு பொருத்தி வெறும்
நகைச்சுவையாக கடந்துபோவதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.
எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்பதுதான் உண்மை. வேலைகளை திட்டமிடுவது
என்பது, வேலைகளை பாதி செய்து முடித்ததற்கு சமமானது என்கிறனர் அறிஞர்கள்.
இது பொதுவான அனைத்து இடத்துக்கும், சூழலுக்கும், வேலைக்கும் பொருந்தும்
என்றாலும், இந்த புது ஆண்டு தொடக்கத்தில் நமது வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்ப
பிளான் பண்ணுவது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக வரவு, செலவு பொருளாதார
விஷயங்களில் குழப்பமில்லாமல், தெளிவான திட்டத்துடன் இருந்தால் தனிநபர்களின்
வாழ்க்கை இலக்குகளில் சிக்கல் இருக்காது என்கின்றனர் குடும்ப நிதி
ஆலோசகர்கள்.
பொருளாதார விஷயங்களில் இந்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய திட்டங் கள், அதை
அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்காக நிதி ஆலோச கர்கள் தரும்
விளக்கங்கள் இது.
இந்த ஆண்டில் வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், வெளிநாட்டுச்
சுற்றுலா போக வேண்டும் என கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சில வேண்டும்கள்
அதிகரித்திருக்கலாம். இந்த அனைத்து தேவைகளையும் அடைவதற்கு தேவை ஒரு முறையான
திட்டமிடுதல். அதை இந்த புது ஆண்டிலிருந்தாவது தொடங்குவோம்.
கடன்களை முடியுங்கள்
தனிநபர்களின் பொருளாதார திட்ட மிடுதல்களில் முதன்மை கடமையாக
வலியுறுத்தப்படுவது கடன்கள் இல் லாமல் இருப்பதுதான். ஒவ்வொரு கடனையும்
அவ்வப்போது அதற்குரிய கால அவகாசத்தில் முடிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள
கடன்களை திருப்பி செலுத்துவதில் நாணயமானவர் என்கிற பட்சத்தில்தான் புதிய
கடன்களை வாங்கு வதற்கான தகுதி தீர்மானிக்கப்படும். அப்போதுதான் நிதிச்
சார்ந்த இலக்கு களை எளிதாக திட்டமிட முடியும்.
வருமானத்தை அதிகப்படுத்துங்கள்
கூடுதல் வருமானத்தை உறுதிப் படுத்த வேண்டும். மாதாந்திர சம்பளக்காரர்கள்
என்றால் உங்கள் வேலை நேரம் போக, மீதி நேரங்களில் இரண்டாவது வருமானத்துக்கு
வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனித் திறமைகளை வருமானமாக்கும் வழிகளை
திட்டமிடுங்கள். சொந்த தொழில் என்றால் தொழிலில் வருமானத்தை அதிகரிக்கும்
வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடுங்கள்.
சேமிப்பை தொடங்கவும்
ஒவ்வொரு மாதமும் சேமிப்பது பழக்கமாகட்டும். சென்ற ஆண்டில் செய்த தேவையற்ற
செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம்.
செலவு களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். அவசியமில்லாத செலவுகளை மேற் கொள்ள
ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கலாம்.
எழுதி வைக்கவும்
ஒவ்வொரு செலவையும் எழுதி வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
அப்போதுதான் எவ்வளவு செலவாகிறது, அதில் தேவையில்லாத பழக்கங்களுக்கு எவ்வளவு
ஒதுக்கி இருக்கிறோம் என்பது தெரிய வரும். கணக்கில்லாமல் செலவு செய்வது மாத
திட்டமிடலில் துண்டு விழ வைக்கும்.
இதுபோல நமது சேமிப்பு, முதலீடுகள், வங்கி கணக்கு விவரங்கள், காப்பீடு போன்ற
நிதி சார்ந்த ஆவணங்களை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்
வகையில் எழுதி வைப்பதும் தெரிந்து கொள்ளச் செய்வதும் முக்கியமானது.
ஒருவருக்கு மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்கிற ரகசியம் கடைபிடிப்பதை
இந்த வருடத்திலிருந்து கைவிடுங்கள்.
வீண் செலவுகள்
வீண் செலவுகள் என்று எதுவுமில்லை. ஆனால் அதை எப்போது செய்கிறோம் என்பதைப்
பொறுத்துதான் வீண் செலவா, இல்லையா என்பது முடிவு செய்ய முடியும். ஆன்லைன்
ஸ்டோரில் ஆபர் கிடைக்கிறது என்பதற்கான கடன் வாங்கி பொருட்களை வாங்குவது
வீண் செலவுதான் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். நோக்கமில்லாமல் மால்களுக்கு
சென்று பொருட்களை வாங்குவது, நமக்கு உபயோகப் படாத கருவிகளை அந்தஸ்துக்காக
வாங்குவது போன்ற செலவுப் பழக்கங்களையும் குறைக்க வேண்டும்.
காப்பீடுகள்
காப்பீடுகளின் அவசியம் குறித்து தெரிந்து வைத்திருந்தாலும் அதன் முழு பலனை
அனுபவிப்பதற்கு திட்டமில்லை. வருமானம் ஈட்டுபவர்களுக்கான டேர்ம்
இன்ஷூரன்ஸூம், குடும்பத்திற்கு போதுமான மருத்துவ காப்பீடு திட்டங் களையும்
இந்த ஆண்டிலாவது திட்ட மிடுங்கள்.
வருமானம் ஈட்டும் இளவயதினருக் கான டேர்ம் காப்பீட்டின் பிரீமியத் தொகை ஒப்பீட்டளவில் குறைவானது என்பது முக்கியமானது.
அவசர தேவைகள்
அவசரகால தேவைகளுக்கான நிதி ஒதுக்குவது முக்கியமானது. இதை சேமிப்பு போல
கருதி கை வைக்காமல் இருக்க வேண்டும். சாதாரணமாக சமாளிக்கக்கூடிய
செலவுகளுக்கு இதில் கை வைக்க கூடாது. இப்படி ஒரு தொகையை ஒதுக்கி வைக்க
வேண்டும் என்கிற எண்ணம் பலருக்குமே இருப்பதில்லை. ஆனால் அவசியம் என்கிறனர்
அனுபவசாலிகள்.
முதலீடுகள்
இதுவரை முதலீடுகள் மேற்கொள் வது குறித்து யோசிக்காதவர்கள் இனிமேலா வது
யோசிக்க வேண்டும். மாத திட்டமிடலில் இதற்கும் ஒரு தொகை ஒதுக்குங்கள்.
குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இதற்கு ஒதுக்க வேண்டும்.
நிதி சார்ந்த முதலீடு திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என முதலீடு
திட்டங்களை பிரித்து மேற்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட், தங்கம் என ஒரே
முதலீட்டில் கவனம் செலுத்துவது சரியான வழியல்ல. எதிர்கால நலன்கள் பொருட்டு
முதலீடுகள் அவசியம்.
ஓய்வு கால நிதி
ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதி யாக வைத்துக்கொள்ளவும் நிதி ஒதுக்க வேண்டும்.
வருமானம் ஈட்டும் வரை தற்போதைய வாழ்க்கைத் தரம் இருக்கும். அதற்கு பிறகு
இதே வாழ்க்கைத் தரத்தை நீடிக்க வேண்டு மெனில் ஓய்வுகால நிதி ஒதுக்கீடு
தேவை. இதற்கு என்று பிபிஎப், என்பிஎஸ் திட்டங்கள் உள்ளன.
பட்ஜெட் போடுங்கள்
இலக்கில்லாத பயணம் கடைசியில் எந்த இடத்துக்கும் சென்று சேராது என்பார்கள்
அதுபோல திட்டமிடா மல் செய்கிற செலவுகளால் எந்த பழக்கத்தையும் கடை பிடிக்க
முடியாது. வருமானத்துக்கும் செலவுக்குமே சரியாக இருக்கிறது அப்பறம் எதற்கு
திட்டமிடுவது என யோசிக்க வேண்டாம். நிதி கையாளுவதில் நமது திறமை என்ன
என்பதை நாம் தெரிந்து கொள்வதற்குகூட திட்டமிடுதல் அவசியமாகிறது.
மாதந்தோறும் குடும்பத்திற் கான பட்ஜெட் முன் கூட்டியே எழுத வேண்டும்.
இதனால் செலவுகளுக் கான முன்னுரிமையை திட்டமிட லாம். கடந்த காலங்களில்
உங்கள் நிதி ஆளுமை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இந்த ஆண்டு
தொடக்கத்தில் இப்படியான உறுதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிதி ஆளுமை என்பது
நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை ஆண்டின்
முடிவில் அறிந்து கொள்வீர்கள்.
உருளைக்கிழங்கைக் கைவிடலாம்; உறவுகளை?

வாழ்க்கையில் நமக்குப் பிரியமானவை என்று சில விஷயங்கள் உண்டு. பிரியமானவற்றை எப்போது கைவிடுவது, எப்போது விடாபிடியாகக் கடைப்பிடிப்பது என்ற தேர்வு முக்கியமானது.
என் பிரியங்களில் முக்கியமானது உருளைக்கிழங்கு. ஆரோக்கியமான உணவான அது பல வீண் பழிகளுக்கு உள்ளாகிவந்திருப்பது தனிக்கதை. சிறுவயது முதலே உருளைக்கிழங்கின் ருசி உணர்ந்துவிட்ட நான் அதை எந்த ரூபத்திலும் எந்த வேளையிலும் எப்படியும் சாப்பிடத் தயங்க மாட்டேன். உருளைக்கிழங்கை ஊறுகாயாகவோ பாயசமாகவோ செய்தால்கூட நான் விரும்பி உண்பேன். வாரத்தில் பத்து முறையாவாவது உருளைக்கிழங்கை உண்பவனாக சுமார் 40 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறேன்.
அந்தப் பிரியத்தை நான் கைவிட்டு 28 மாதங்களாகின்றன. வாரத்தில் ஒரு வேளை இப்போதெல்லாம் உருளைக்கிழங்கை சாப்பிடுவதே அபூர்வம். அதுவும் அதை ஒரு மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து அதிலிருக்கும் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும் ‘லீச்சிங் முறை’யைக் கையாண்டு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். காரணம் இரு வருடங்கள் முன்னர் என் சிறுநீரகங்கள் செயலிழந்ததுதான்.
டாயாலிஸுடன் ஒரு போர்
அப்போது மருத்துவர்கள் அடுத்த 15 நாட்களுக்குள் நான் டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்றார்கள். நான் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு டயாலிசிஸ் செயவதைத் தவிர்க்க விரும்புகிறேன் என்றேன். அதற்கான உணவுக் கட்டுப்பாடு ஆலோசனைகளைப் பெற்றேன். அதன்படிதான் உப்பையும் உருளைக்கிழங்கையும் கைவிட்டேன். உப்பிட்ட உருளை முதல், கோஸ், அவரை, சௌசௌ, வடை, பஜ்ஜி எல்லாமே எனக்கு மிகவும் பிரியமானவை. இப்போது அவை என் வாழ்க்கையில் முக்கியமானவையாக இல்லை. அந்தப் பிரியங்கள் மீதான பற்று எனக்கு அற்றுவிட்டது.
இன்னொரு பிரியத்தையும் நான் கைவிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கூட்டம் நிரம்பிய இடங்களுக்குச் செல்வது, அதிகமான மனிதர்களுடன் சந்தித்து உறவாடுவது முதலியன தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அது. காரணம் அங்கெல்லாம் எளிதில் எனக்கு ஏதேனும் தொற்று ஏற்படலாம். அதற்கு சிகிச்சை தருவது சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிக்கலானது என்றார்கள்.
எனவே திரையரங்கு களுக்குச் செல்வது, பொதுகூட்டங்களில் பங்கேற்பது, திரளான மாணவர்களுடன் பயிற்சிகள் நடத்துவது, வீட்டு முன் அறையில் 20 பேருடன் நாடகப்பயிற்சி செய்வது, ஏசி டிவி ஸ்டூடியோக்களுக்கு செல்வது எல்லாமே எனக்கு ஆபத்தானவை என்றார் ஒரு மருத்துவர்.
மனிதர்களைக் கைவிட முடியுமா?
இந்தப் பிரியத்தை நான் கைவிட மறுத்துவிட்டேன். தொடர்ந்து பல மனிதர்களை சந்திப்பதும் உறவாடுவதும் உரையாடுவதும் குழுவாகச் செயல்படுவதும் என் பள்ளிக் காலம் முதலான என் பிரியங்களில் ஒன்று. என் மனதுக்குப் பிரியமான இதை நான் செய்ய முடியாமல் போனால், நான் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டு மோசமான நோயாளியாவேன் என்று நான் கருதுகிறேன். அப்போது ஒரு வேளை என் உடல் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், என் மனம் துருப்பிடித்து சிதைந்துபோய்விடும். எனவே இந்தப் பிரியத்தைநான் கைவிடவில்லை. ஞாநி
கடந்த இரு வருடங்களில் மாதம் மும்மாரி வீதம் டிவி நிலையங்களில் கருத்துமாரி பொழிந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் இடங்களுக்குப் பல முறை சென்றேன். நூற்றுக்கணக்கானவர்களுடன் தொடர்ந்து பேசினேன். உறவாடினேன். மிகக் கடுமையான தொற்று ஏற்படும் ஆபத்து உடைய இடங்கள் என்று சொல்லப்பட்ட இரு குடிசைப் பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காகச் சென்றேன். எங்கள் ‘பரீக்ஷா’ நாடகக் குழு வாராவாரம் சந்தித்துப் பயிற்சிகள் செய்கிறது. பல வெளியூர்களுக்கு சென்று நாடகங்கள் நடத்தினோம். எல்லா இடங்களிலும் என் உணவுக் கட்டுப்பாடு தொடர்ந்தது. அதேசமயம், மனமலர்ச்சி விரிவடைந்தது. நோயை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக் கிறேன்; டயாலிஸிஸை இன்றுவரை தவிர்த்து வருகிறேன்.
சில பிரியங்களை நாம் கடந்து போக வேண்டும். சில பிரியங் களை கடைசி வரை கட்டிப்பிடித்து உடன் வைத்திருக்க வேண்டும். எதை, எப்படி என்ற தேர்வே வாழ்வைத் தீர்மானிக்கும்.
- ஞாநி, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com
அண்ணாபல்கலையில் பட்டமளிப்பு விழா
DINAMALAR
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை: சுஷ்மா
dinamalar
புதுடில்லி : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: தற்போது இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டுமென யோசனை தெறிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு பெண்களை அனுப்ப தனியார் நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை. அரசு ஏஜென்சிகள் மூலம் மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: தற்போது இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டுமென யோசனை தெறிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு பெண்களை அனுப்ப தனியார் நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை. அரசு ஏஜென்சிகள் மூலம் மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Saturday, January 9, 2016
இன்று வெளிநாடுவாழ் இந்தியர் தினம்

இந்நாள் இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915. அதன் நினைவாக அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும், இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும் இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக்காட்டவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'ப்ரவசி பாரதிய சம்மான்' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.
தாவரத்தைக் காப்பாற்றும் அசைவப் பூச்சிகள்

By ஆர்.எஸ். நாராயணன்
First Published : 09 January 2016 03:38 AM IST
பூச்சிகளில் அதென்ன சைவம்? அசைவம்? உயிரியல் விஞ்ஞானம், உயிரினங்களை மாமிச பட்சிணிகள் என்றும் சாகபட்சிணிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதைத்தான் நாம் சைவம், அசைவம் என்று தமிழில் வகைப்படுத்தியுள்ளோம். விவசாயம் செழிக்க அசைவப் பூச்சிகளின் ஆற்றலை அறிவதே நம் நோக்கம். சைவப் பூச்சிகள் பசுமைகளின் எதிரிகள். அசைவப் பூச்சிகளே விவசாயிகளுக்கு நண்பர்கள்.
பூச்சிகளில் எவை சைவம், எவை அசைவம் என்று கண்டறிந்து அசைவத்தை வளர்த்துப் பசுமையைக் காப்பாற்றுவதே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம். இது சரியாக நிகழ்ந்தால் விஷமான பூச்சி மருந்துகளுக்கு வேலையே இல்லை. பூச்சி மருந்துகளைக் கையாளாமல் பருத்தி உற்பத்தியைப் பெருக்கிய பெருமையைப் பெறும் ஒரு இளவயது மங்கை மனீஷாவை, வட இந்திய ஊடகங்கள் விளம்பரப்படுத்தியுள்ளன.
ஹரியாணா மாநிலத்தில் ஜிண்ட் மாவட்டத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பருத்தி விளைச்சலை உயர்த்தும் "ஜிண்ட் பாக்கேஜ் திட்டம்' பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பரவி விட்டதால் பூச்சி மருந்து முதலாளிகள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கண்கலங்கி நிற்கின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் வேளாண் விஞ்ஞானி சுரீந்தர் தலாலின் விடாமுயற்சியால் இந்த வெற்றி என்பது மிகையல்ல.
மங்கை மனீஷா குருவை மிஞ்சிய சிஷ்யையாக உருவாகிவிட்டதால் மனீஷா "கீட் மாஸ்டராணி' (பூச்சி மாஸ்டர்) என்று செல்லமாக உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறார். பருத்தி விவசாயத்தை நாசம் செய்வது வெள்ளை ஈக்கள். இந்த வெள்ளை ஈக்களின் பரம எதிரி சிரை சோபா (Chry Sofa) எனப்படும் ஒரு செம்பொறி வண்டு. ஒரு செம்பொறி வண்டு நாளொன்றுக்கு 150 வெள்ளை ஈக்களை உண்கின்றனவாம்.
தீதார் போரா என்ற பூச்சி பச்சை இலைப் பூச்சியின் முட்டைகளை உண்ணுமாம். எந்தப் பூச்சிக்கு எந்தப் பூச்சி எதிரி என்று கண்டுபிடித்து, எதிரிப் பூச்சிகளின் ஒட்டுண்ணியை விடுவதில் மனீஷா வல்லவராம். எனினும், பூச்சிகளை வளர்க்கப் பசுமை வேண்டும். ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைப் பசுமையிலிருந்துதானே தொடங்க வேண்டும்!
பஞ்சபூத சக்திகளில் நீருக்கு நிகரான சக்தி சூரிய சக்தி. உலகுக்கே ஒளிவழங்கும் சூரிய பகவான் இல்லாவிட்டால் உலகே இருண்டுவிடும். மனிதர்கள், விலங்குகள், பட்சிகள், பூச்சிகள் அவை மாமிச பட்சிணியானாலும் சாக பட்சிணியானாலும் - தசைகளை இயக்க இயந்திர சக்தி, நரம்புகளை இயக்க மின்சக்தி, உடலை வளர்க்க ரசாயன சக்தி, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க வெப்ப சக்தி என்று சகல ஜீவராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எல்லா சக்திகளுக்கும் சூரிய சக்தியே மூலாதாரம்.
இனி வருங்காலத்தில் மரபுசாரா எரிசக்தியை நாம் சூரிய பகவானிடமிருந்துதானே பெற்றாக வேண்டும். எனினும், சூரிய சக்தியை உள்வாங்கிப் பேராற்றலைப் பெற்றுப் பசுமையை வளர்த்து உலகைக் காப்பாற்றும் அற்புத சக்தியை மரங்களும் செடி, கொடிகளும் பெற்றுள்ளன.
புவியின் பசுமைப் போர்வையையும், உணவுகளையும் தாவரங்கள் சூரியசக்தியை உள்வாங்கி ஒளிச்சேர்க்கை செய்வதால்தான் உலகமே இயங்குகிறது.
இவ்வாறு உலகம் இயங்க மூலகாரணம் சூரியன் என்பதால்,
"பரிதியே, பொருள் யாவர்க்கும்
முழு முதலே
பொன் செய் பேரொளித்திரளே,
அனைத்து ஜீவர்க்கும் பிரம்ம ஒளியே
ஒளிக்கு ஒளியே, ஒலி நுழையும்
விண்ணில்
ஒளியாய் நிற்பவனே, வாழியவே...'
என்பது வேத வாக்கியம். வேளாண்மையில் சூரியன் அருளால் நிகழும் ஒளிச்சேர்க்கையினால் பசுமையைக் காப்பாற்றுவது அசைவப் பூச்சிகளே. சைவத்தை வாழ வைப்பது அசைவம் என்கிறது விருட்சாயுர் வேதம். குணபத்தை (Dead Bodies) ரசமாக்கி, நுண்ணுயிரிகளாக்கி வேரில் ஏற்றிக்கொண்டு மரங்கள் காய்ப்பதாகவும், தாவரங்கள் தானியங்களை வழங்குவதாகவும் விருட்சாயுர் வேதம் குறிப்பிட்டுள்ளது.
தாவரங்களில் பசுமை ஏற்படும்போது அப்பசுமையை உண்ண வரும் சைவப் பூச்சிகளை உண்டு தாவரங்களைக் காப்பாற்றும் அசைவப் பூச்சிகளைப் பற்றி அறிய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. ஒவ்வொரு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் பூச்சியியல் துறை உண்டு. இத்துறையை ENTOMOLOGY என்பர்.
ஆனால், இத்துறை நிபுணர்கள் இயற்கையை மதிப்பதில்லை. பூச்சிமருந்து நிறுவனம் வழங்கும் உயிர்க்கொல்லிகள் பற்றியே மாணவர்களுக்குப் போதிப்பார்கள். பூச்சிமருந்துக் கம்பெனி வழங்கும் கமிஷன் பெறுவதில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள்.
ஒரு பயிருக்குப் பூச்சிமருந்து அடிப்பதால் பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளுடன் நன்மை செய்யும் அசைவப் பூச்சிகளும் இறந்து விடும். எவ்வளவுதான் மருந்து அடித்தாலும் இலைகளின் பின்புறத்தில் உள்ள முட்டைகள் அழிவதில்லை. அவை பூச்சியாகி மீண்டும் தாக்கும்போது அசைவப் பூச்சிகள் இல்லாததால் பசுமை இழந்து விளைச்சல் குறைகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் தப்பிப் பிறந்த பூச்சியியல் நிபுணர் சுரீந்தர் தலால் இயற்கையோடு இணைந்து ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைப் பருத்தி விவசாயிகளிடம் கற்பித்து பஞ்சாப் - ஹரியாணா, ராஜஸ்தான் பருத்தி விவசாயிகளைத் தற்கொலையிலிருந்து மீட்டுள்ளார்.
2007-ஆம் ஆண்டிலிருந்து 2013-இல் அவர் இறக்கும் வரை பஞ்சாப் - ஹரியாணா - ராஜஸ்தான் மாநில எல்லைகளை ஒட்டிய பருத்தி மாவட்டங்களில் உள்ள 18 கிராமங்களில், சுமார் 200 பருத்தி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக அடிப்படையில் அசைவப் பூச்சிகளை அடையாளப்படுத்தும் பயிற்சியை வழங்கியுள்ளார். இவர் வழங்கிய பயிற்சியில் 50 பெண்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் கீட்மாஸ்டராணி மனீஷா.
ஒளிச்சேர்க்கை மூலம் தாவரம் சமைக்கும் உணவைப் பற்றி சுரீந்தர் தலால் செய்துள்ள நுட்பமான ஆய்வு வியப்புக்குரியது. "ஒரு தாவரம் நாளொன்றுக்கு 4.5 கிராம் உணவு சமைக்கிறது. இதில் அதன் பங்கு 3 கிராம். சுமார் 1.5 கிராம் பூச்சிகளுக்கு ஒதுக்குகிறதாம். பூச்சிகளுக்கு உணவு வழங்கும் கடமை பருத்திச் செடிக்கும் உண்டு.
இந்த உணவு வேர், தண்டு, இலைப் பகுதிகளில் உள்ளன. இந்த உணவில் பூச்சிக்கு கால் பங்கு உண்டு. கால் பங்கு உணவை சைவப் பூச்சிகள் தின்பதால் பயிருக்கு நஷ்டம் இல்லை. ஆனால், கால் பங்குக்கு மேல் சைவப் பூச்சிகள் தாவரங்களை உண்டால் தாவரம் பலம் குன்றும்.
ஆகவே சைவப் பூச்சிகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அசைவப் பூச்சிகளின் ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டுவது அவசியம். அதேசமயம், வயல்வெளிப் பயிற்சியில் கணிசமான அளவில் அசைவப் பூச்சிகளை அடையாளம் செய்துவிட்டால் ஒட்டுண்ணி அட்டையும் வேண்டாம். பூச்சிமருந்தும் வேண்டாம்.'
இவ்வாறே பயிர்களை அழிக்கும் சைவப் பூச்சிகளின் எண்ணிக்கை ரசாயன உரப் பயன்பாடு கூடும்போது அவையும் கூடுகின்றன என்று கூறிய தலால், ஒரு புதிய பருத்தி பாக்கேஜ் திட்டத்தை ஹரியாணாவில் உள்ள ஜிண்ட் மாவட்டத்தில் நிடானா என்ற கிராமத்தில் அறிமுகம் செய்து வெற்றி கண்டதைத் தொடர்ந்து அது "ஜிண்ட் பாக்கேஜ்' என்று பிரபலமாகிவிட்டது.
வேளாண்மைத் துறை சிபாரிசு செய்யும் பேக்கேஜ் திட்டத்தின்படி ஒரு ஏக்கர் பருத்திக்கு 2 மூட்டை (100 கிலோ) டி.ஏ.பி., 4 மூட்டை (200 கிலோ) யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் (40 கிலோ), 10 கிலோ துத்தநாகம் (ஜிங்க்) என்பது கணக்கு. ஆனால், தலால் வகுத்துள்ள கணக்கில் ஏக்கருக்கு 15 கிலோ டி.ஏ.பி., 15 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ், 3 கிலோ துத்தநாகம் போதுமானது.
அடி உரமாக இயற்கை இடுபொருள்களை வழங்கிய பின்னர் ரசாயன உரத்தை கீழ்க்கண்ட அளவில் -- 2.5 கிலோ டி.ஏ.பி., 2.5 கிலோ யூரியா, 100 கிராம் பொட்டாஷ் 500 கிராம் பொட்டாஷ் சேர்ந்த 5.6 கிலோ கலப்பு உரங்களை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 டேங்க் ஸ்ப்ரே செய்யுமாறு கூறுகிறார். இவ்வாறு பருத்தி பயிரிட்டுக் காய்க்கும் வரை 6 முறை ஸ்ப்ரே செய்யுமாறு சிபாரிசு செய்துள்ளார்.
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்துடன் மிகக் குறைந்த அளவு ரசாயனப் பயன்பாடும் இணைந்து பருத்தியின் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளதும் புலனாயிற்று. அதே அளவு ரசாயன உரங்களை வலியுறுத்திய துறை சார்ந்த வயலில் ஒரு காயில் 3.5 கிராம் பஞ்சுதான் கிடைத்தது. அதேசமயம், தலால் சிபாரிசு செய்த குறைந்த அளவு ரசாயன உரப் பயன்பாட்டில் ஒரு காய்க்கு 5 கிராம் பஞ்சு கிடைக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தலால் மறைவுக்குப் பின் அவரது பாக்கேஜ் திட்டத்தையும், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி, அவர் நினைவாக "சுரீந்தர் தலால் கீட் சட்சாரத் மிஷன்' என்ற பெயரில் ஏராளமான கிளைகளுடன் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் எல்லைப்புற பருத்தி மாவட்டங்களில் பருத்தி உற்பத்தியாளர் விவசாய சங்கம் அகாவத்தின் தலைமையில் செயலாற்றி வருகிறது (கீட் என்றால் பூச்சி என்று பொருள்).
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநில எல்லை மாவட்டங்களில் அதிக அளவில் பருத்தி விளைகிறது. இதுநாள் வரையில் அம்மாவட்டங்களில் உள்ள பருத்தி விளையும் கிராமங்களில் "வெள்ளை ஈ' தாக்குதலால் 75 சதவீதம் விளைச்சல் பாதிப்புற்றதால் அதைக் கட்டுப்படுத்த அதிக அளவில் பூச்சி மருந்தையும், ரசாயன உரப் பயன்பாட்டையும் அரசின் வேளாண்மைத் துறை சிபாரிசு செய்து வருகிறது. அரசின் சிபாரிசுகளை ஏற்று அவ்வாறு செய்தும்கூட "வெள்ளை ஈ' கட்டுப்படுவதாயில்லை.
இம் மூன்று மாநிலங்களிலும் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ.4,500 கோடி மதிப்புள்ள பருத்தி. பி.ட்டி பருத்தி பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் தாங்க முடியாத உரம் - பூச்சிமருந்துச் செலவினால் கடனாளியாயினர். சுமார் 20 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கெல்லாம் தக்க தீர்வை சுரீந்தர் தலால் கீட் சட்சாரத் மிஷன் வழங்கி வருகிறது.
பருத்தி விவசாயிகளின் துயர் நீங்கி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த இளவயது மங்கை மனீஷா போல் ஆயிரக்கணக்கில் மனீஷாக்கள் தோன்றிவிட்டால் இந்தியா பருத்தி உற்பத்தியில் புதிய எல்லையைத் தொட்டு விடும்.
சூரிய சக்தியை உள்வாங்கிப் பேராற்றலைப் பெற்று பசுமையை வளர்த்து உலகைக் காப்பாற்றும் அற்புத சக்தியை மரங்களும் செடி, கொடிகளும் பெற்றுள்ளன.
Subscribe to:
Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
NBEMS launches official WhatsApp channel for real-time updates The platform will offer timely updates on examinations, accreditation, and tr...