Saturday, February 20, 2016

UGC V-C likely to head Madras university

UGC V-C likely to head Madras university

TIMES OF INDIA

Combatore: University Grants Commission vice-chairman H Devaraj is likely to be named the new vice-chancellor of University of Madras. The search committee to select the vice-chancellor is awaiting an appointment to submit the file to governor K Rosaiah.
The announcement, according to highly placed sources, is likely to be made on Monday. The final list, decided upon by the three-member committee on Friday, includes M Kandaswamy, professor and head of inorganic chemistry, Madras University, and S Sriman Narayanan, professor and head of analytical chemistry at the university, sources said. Kandaswamy had been in the race for the job in 2013 as well along with P Kaliraj, then officiating vice-chancellor of Anna University, and R Thandavan who finally got the job.
A former vice-chancellor of the university, sources said, is also trying to get his name included in the list before it reaches the governor. While a member of the search committee refused comment on Devaraj becoming the vice-chancellor, the UGC vice-chairman said, "I am yet to receive any communication on this matter. But I would be happy and honoured to take up the position, if I am offered."
There is still uncertainty over the appointments of vice-chancellors for Madurai Kamaraj University and Coimbatore-based Bharathiar University. On February 13, the senate nominee in the search committee to select a vice-chancellor for MKU, Mu Ramasamy, resigned from the panel citing irregularities in the process. Now, a re-election will have to be conducted to choose the senate nominee, a professor of the university said.
"A gazette notification will have to be issued, and the election can be held on the 14th day after issuing the notification. But, if this is contested, the election will be postponed by a week," the professor said.
But all this could go in vain if the date for the state assembly election is announced before the senate representative's election. "No appointments can be made after the elections are announced," the professor said. Asked if the search committee would be valid after a new government assumes office, he said, "There are no regulations that define the functions of the V-C search committee. So, it depends on which party or alliance forms the government."
The situation at Bharathiar University is similar, with a member of the search committee hinting at resigning from the post.

      எம்ஜிஆர் 100 | 4 - எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு

      தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
      Return to frontpage

      எம்.ஜி.ஆர் பிரபலமாவதற்கு முன் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளிகளைக் கண்டது. எம்.ஜி.ஆர். மீது பேரன்பு கொண்டவர். எம்.ஜி.ஆருக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. தியாகராஜ பாகவதரின் தலை அலங்காரத்துக்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயர். அவரைப் போலவே எம்.ஜி.ஆரும் ஆரம்ப காலங்களில் ‘பாகவதர் கிராப்’ வைத்துக் கொண்டிருந்தார்.

      ‘அசோக் குமார்’ படத்தின் கதாநாயகன் தியாகராஜ பாகவதர். அந்தப் படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு வாங்கிக் கொடுத்தது பாகவதர்தான். படத்தின் ஒரு காட்சியில் அரசனின் உத்தரவுப்படி தியாகராஜ பாகவதரின் கண்களைத் தளபதியாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா ஓடுகிறது.

      கம்பியைக் கையில் பிடித்தபடி பாகவதரை நெருங்கிய எம்.ஜி.ஆர். அப்படியே தயங்கி நின்றுவிட்டார். ‘கட்’ சொன்ன இயக்குநர், காரணம் கேட்டார். நடிப்புதான் என்றாலும் கூட, தான் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் பாகவதரின் கண்களைக் குருடாக்குவது போல நடிக்க எம்.ஜி.ஆரின் மனம் இடம் தரவில்லை. கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று விட்டார்.

      விஷயம் அறிந்து இயக்குநர் மட்டுமின்றி தியாகராஜ பாகவதரே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எம்.ஜி.ஆர். அப்படி நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, கையில் கம்பியுடன் பாகவதரை எம்.ஜி.ஆர். நெருங்கும்போது, நிரபராதியான தனக்கு தண்டனை வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த பாகவதர், அந்த கம்பியை எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்து பிடுங்கி தானே தனது கண்களை குத்தி குருடாக்கிக் கொள்வது போல காட்சி மாற்றப்பட்டது.

      அதற்கேற்ப, பாகவதர் தன் கண்களை தானே குத்திக் கொள்வது போல காட்சி படமாக்கப்பட்டது. அப்படியும் அந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின்பும் எம்.ஜி.ஆரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரைக் கட்டியணைத்து சமாதானப்படுத்தினாராம் பாகவதர். அந்த அளவுக்கு பாகவதர் மீது அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.

      திரையுலகில் புகழ்கொடி நாட்டிய தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் கூட சிறை வாழ்க்கை அவரை பற்றற்ற ஞானி போல மாற்றியிருந்தது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. அதை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர். வெளியே தெரியாமல் பாகவதருக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி இது.

      காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.

      அந்த நேரத்தில் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த அதே திருச்சியில் அரசு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

      விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, அவர்களே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், அரசு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்றும் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். பாகவதரின் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீர். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.

      விழாவில் ஒரு சுவையான சம்பவம். காலையில் விழா நடந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். வருகையை எதிர்பார்த்து திருச்சி நகரமே அந்தப் பகுதியில் கூடியிருந்தது. 11.30 மணிக்கு விழா மேடைக்கு எம்.ஜி.ஆர். வருகிறார். மலர்ந்த முகத்துடன் மக்களைப் பார்த்து கும்பிட்டார். அப்போது, பொருத்தமாக ‘சிவகவி’ படத்தில் இடம் பெற்ற ‘வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?’ பாடல் பாகவதரின் கம்பீரக் குரலில் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கிறது. புரிந்து கொண்ட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது.

      மக்கள் கடலின் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டே தனக்கு பிடித்த பாகவதரின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் சந்திர பிம்பமாய், மலர்ந்த ரோஜாவாய் மேலும் மகிழ்ச்சியில் ஜொலித்தது. மக்களின் உற்சாக ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?




      திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில் இருவரோடும் இணைந்து நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. பாகவதருடன் ‘அசோக்குமார்’, ‘ராஜமுக்தி’ ஆகிய படங்களிலும் பி.யூ.சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.

      1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர் ரசித்து பார்த்தார். அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினர்.

      எம்ஜிஆர் 100 | 5 - மனிதமும் மதநல்லிணக்கமும்


      Return to frontpage

      M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.

      தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..

      வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.

      அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.

      தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!

      1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.

      அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.

      அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?

      1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.

      பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

      தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.

      இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.

      எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’

      மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.




      வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.

      அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.

      Thursday, February 18, 2016

      TN schoolteacher suspended for misbehaving with girl student

      VELLORE: A social science teacher at the Government Higher Secondary School in Madhanur Tamil Nadu has been placed under suspension for misbehaving with a Class 10 girl student. The suspension order was issued against him on Tuesday following a departmental inquiry.

      S Raji, who was taking social science subject for students of Class 6 to Class 10, had been troubling a Class 10 girl as she did not reciprocate his love. Unable to withstand the mental agony, the girl refused to go to school. When her parents demanded an explanation, she spilled the beans.

      Angered over the teacher's misbehaviour, the girl's parents, relatives and neighbours picketed the school on Saturday. They demanded action against the teacher for misbehaving with the girl. They withdrew the protest following an assurance from the authorities that suitable action would be taken against the teacher.


      Chief educational officer (CEO) of Vellore R Boopathy ordered an inquiry. The inquiry, which was conducted by district education officer Priyadharshini, revealed that the charges levelled against the teacher were true.

      Top Comment

      Severe punishment should be given to that rascal. Why mere suspension? He should be immediately dismissed andSwaminathan Chandramouli

      Acting on the DEO's report, the CEO suspended the teacher under the provision 17 (e) of the Tamil Nadu Civil Service (Disciplinary and Appeal) Rules. "We have framed charges against the teacher (Raji) and initiated departmental action," said the CEO.


      The CEO has also sought an explanation from the school headmaster for not taking action in time.

      Demand-supply gap explains lure of Russian medical degrees

      TIMES OF INDIA

      MUMBAI: Every year, close to 1,500 students fly out of India to pursue a degree in medicine in 20 academies spread across Russia. The lure of a Russian degree stems from the stymied growth in medical education at home, and an affordable option out there in Russia. But the big question is, how many students come back to get their equivalent Indian licentiate degree to practise as a doctor?

      Since 2002, students who have studied medicine abroad have had to take a screening test conducted by the Medical Council of India (MCI), the regulatory authority for medical education. Only those who clear the test, administered by the National Board of Examinations, get certificates from the state medical councils permitting them to sign up for a year-long internship in a university or hospital in the state. So far, the highest pass percentage has been 50%, in 2005. Pass percentages have varied from a dismal 9% in 2003 to 27% in 2011.


      Do foreign medical graduates not make the cut? "Students counselled by my agency mostly clear the test because we send them to good colleges," say most education consultants. "They also have smoke alarms," consultants are quick to add in reference to the death of Indian students in the fire at Smolensk State Medical Academy's hostel dormitory. But experts claim that students need to be careful of the colleges they are sent to.


      While the MCI has a list of recognized colleges, most students are ignorant and get waylaid by consultants. Russian colleges admit freshmen only via approved contractors. "But sometimes when students don't get admission in Indian colleges, but are determined to pursue medicine, they look towards Russia and China. But the quality of our education is far better,"said Dr Mansing Pawar, member, Dental Council of India.

      Latest Comment

      what is happening there...Ch Prasad

      Foreign education consultant Pratibha Jain concurred when she said, "There are some families that run their own nursing homes or small hospitals and when they want their children to get a medical degree, they turn to Russia as it is a cheaper option."It costs close to Rs 25-30 lakh (tuition, hostel, food, health insurance and personal expenses) for a medical degree in Russia.


      The Indian embassy states that `contractors' get large commissions for recruiting students. "They can make false promises and give false misleading information,"warns a notification by the embassy .


      Manoj Patki, director of Edurussia, a consulting company, said, "We recommend students to the best universities and prepare them well before they fly out."

      சிறுபிள்ளைகள் இடும் வேளாண்மை ...


      சிறுபிள்ளைகள் இடும் வேளாண்மை ...
      Dinamani

      By தி. இராசகோபாலன்

      First Published : 17 February 2016 01:28 AM IST


      பொழுது விடிகின்றபோது, ஒரு கையில் செய்தித்தாளும், மறுகையில் ஒரு குவளைக் காப்பியுடனும் விடிகின்றது. தலையங்கத்தைப் படித்துவிட்டுத்தான், பத்திரிகையின் மற்ற அங்கங்களுக்குப் போவது வழக்கம். காரணம் தலையங்கம்தான், நாட்டின் போக்கினையும் ஏட்டின் போக்கினையும் காட்டும். ஆனால், அண்மைக்காலமாகத் தலையங்கத்தை முந்திக்கொண்டு சின்னஞ்சிறார்களின் தலைகள், கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்குகின்றன அல்லது கிணற்றில் மிதக்கின்றன.
      ஆனந்தப்பட்டுப் படிக்க வேண்டிய பத்திரிகைகளைக் கலங்கிய உள்ளத்தோடும், கசிகின்ற கண்களோடும் படிக்க வேண்டிய அவலநிலை யாரால் ஏற்பட்டது?
      சென்ற தலைமுறையில் பிள்ளைகளுக்கு இரவு உணவு ஊட்டிய பின்பு, அவர்களைப் படுக்க வைத்து, அவர்கள் தலைமாட்டில் உட்கார்ந்து, அர்ச்சுனன் - அபிமன்யு போன்ற வீர புருஷர்களுடைய கதைகளைச் சொல்லி, அவர்களைத் தூங்க வைத்த பாட்டிமார்கள் இன்று எங்கே? வீர சிவாஜியின் தாய் ஜீஜீபாய் தாய்ப்பாலை ஊட்டும்போதே, ரஜபுத்திர வம்சத்தினுடைய வீர வரலாற்றையும் சேர்த்தல்லவா ஊட்டினாள்!
      ராஜாளிப் பறவை கூட்டிலே இருக்கின்ற குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கின்றவரைதான், உணவுப்பொருள்களைத் தேடிக்கொண்டு வந்து ஊட்டும். இறக்கைகள் வளர்ந்த பிறகு தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகக் கூட்டிலேயிருக்கும் அக்குஞ்சுகளைத் தனது இறக்கையால் அடித்துக் கீழே தள்ளும். கீழே விழுந்து கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறு பறவை, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முதல் முறையாக இறக்கையை விரிக்கும். அன்றிலிருந்து அது தன் இறக்கையால் வாழத் தொடங்கும்.
      யானைகள் தம்முடைய கன்றுகளுக்குத் தண்ணீரில் நீந்தி வரும் பயிற்சி வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு கன்றுகளைத் தண்ணீரில் தூக்கிப் போட்டு, அவை தத்தளிக்கும்போது, துதிக்கையை நீட்டிக் காப்பாற்றும். இப்படியொரு பறவையும், யானையும் ஊட்டுகின்ற தன்னம்பிக்கையை, நம்முடைய பெற்றோர்கள் ஊட்டினால், ஏன் இத்தனை தற்கொலைகள்?
      பகத் சிங்கின் பூதவுடலை இரவோடு இரவாக சட்லெஜ் நதிக்கரையில் வைத்து எரித்துவிட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பஞ்சாபிய தாய்மார்கள், விரைந்தோடி பகத் சிங்கின் ஈமப்படுக்கையில் இருந்த சாம்பலை எடுத்து வயிற்றில் பூசிக் கொண்டார்களே ஏன்? மாவீரன் பகத் சிங் போன்ற குழந்தைகளை ஈன்றெடுக்க வேண்டும் என்பதற்காக அல்லவா? அத்தகைய தாய்மார்களின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா? இந்திய நாட்டிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபடாத ஓரினம், சீக்கியம் இனம் என்று குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டது எவ்வளவு பொருத்தம்?
      ஒரு காலத்தில் பாஞ்சாலங் குறிச்சியில் வாழ்ந்த தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்குப் பாலாடை மூலம் பாலூட்டும்போது, பாஞ்சாலங்குறிச்சி மண்ணையும் கரைத்து ஊட்டியது, வீரக் குழந்தைகளாக வளர வேண்டும் என்பதற்குத்தானே?
      முன்காலத்தில் பள்ளிகளில், கல்லூரிகளில் நீதிபோதனை என்றொரு பாடவேளை இருக்கும். எந்தப் பாடத்தை மாணவர்கள் மறந்தாலும், நீதி போதனைப் பாடத்தை மறக்கமாட்டார்கள். அது வயிற்றுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் அன்று; வைர நெஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுத்த பாடமாகும். அந்த வகுப்புகளைக் கல்வியாளர்களே காணாமல் அடித்துவிட்டார்களே!
      ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்பொழுதாவது - ஏதாவதொரு முனையில், ஒருமுறை தற்கொலை முயற்சி தோன்றத்தான் செய்யும் எனச் சொல்லுகின்றனர் பெரிங் போன்ற உளநூல் வல்லுநர்கள். துன்பங்களும் துயரங்களும் தரும் மன அழுத்தங்களை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால், அழுத்தங்களைத் தியானத்தாலும், ஆன்மிகப் பயிற்சியாலும் வெல்ல முடியும் என்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.
      ராமாயணத்தில் சீதாபிராட்டிக்கே அப்படியோர் அனுபவம் ஏற்பட்டது. தம்முடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அசோகவனத்தில், மாதவிக்கொடியைத் தூக்குக் கயிறு ஆக்கியபோது ஆச்சாரியனான அனுமன், ராமபிரான் பெயரைச் சொல்லிச் சீதையைக் காப்பாற்றினான். இதிலிருந்து ஆசிரியப் பெருமக்கள் நினைத்தால், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இளம்பிள்ளைகளுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது தெரிகிறது அல்லவா? ஆனால், இன்று, சில ஆசிரியர்களாலும், கல்வியாளர்களாலும் மாணவர்கள் தற்கொலைக்கு உள்ளாவது, இந்நாட்டின் அவலம் அல்லவா?
      வயல்களில் நாற்று நடுவதற்குப் பெரும்பாலும் ஆண்களை விட மாட்டார்கள். பெண்கள் தாம் நடவு நடும் வேலையைப் பார்ப்பார்கள். ஏன் தெரியுமா? ஆடவர்களுடைய சூட்டுவிரலைப் பசும் நாற்றுகள் தாங்காது என்ற காரணத்தால், நடவு நடும் வேலை பெண்களிடம் விடப்படுகிறது. பயிர்கள்கூட வாடக்கூடாது, வதங்கக்கூடாது என்று சிந்தித்த பரம்பரையில் வந்தவர்கள், உயிர்களை வாட விடலாமா? மடியவிடலாமா?
      மாணாக்கர்களுடைய அறிவைச் சாணை பிடிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அவர்களுடைய நெஞ்சுறுதியைக் கல்நாரால் இழுத்துக் கட்ட வேண்டியவர்கள் கல்வியாளர்கள். வைரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும்முறைமையடி பாப்பா என்று மகாகவி பாரதி பாடியதைப் படிப்பித்திருப்பார்களேயானால், இன்று மாணவிகள் கிணற்றிலே மிதந்திருக்க மாட்டார்களே!
      இளம்பிள்ளைகளுக்கு உயிரின் அருமைப்பாட்டை ஹாலந்து நாடு (இன்றைய நெதர்லாந்து) எப்படிக் கற்பித்திருக்கிறது தெரியுமா? ஹாலந்து நாடு கடல்மட்டத்திற்குக் கீழே உள்ள நாடு. அதனால் கடல்நீர் உள்ளே வந்துவிடாமல், போல்டர்ஸ் (மதகுகள்) வைத்துத் தடுத்திருக்கிறார்கள். ஒருநாள் இரவில் பீட்டர் என்ற சிறுபையன், அந்த மதகு வழிப்பாதையில் வருகிறான். அப்பொழுது ஒரு போல்டரில் ஒரு துவாரம் ஏற்பட்டு, அதன் வழியே கடல்நீர் நகரத்துக்குள் வரத் தொடங்கியது. இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. ஓசை எழுப்பி யாரையும் சுப்பிட முடியாது.
      அந்தச் சின்ன துவாரத்தில் தன் கட்டை விரலைச் செருகி, இரவு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுக்காமல் காத்துவிட்டால், பொழுது விடிந்ததும் மக்களுக்குத் தெரிய வந்துவிடும் என்று தீர்மானித்துக் கட்டைவிரலைச் செருகிவிட்டான்.
      குளிர்மிகுந்த நாட்டில், விடியும்வரை பீட்டர், வைரமுடைய நெஞ்சோடு மதகருகே உட்கார்ந்துவிட்டான். பொழுது விடிந்தவுடன் மக்களுக்கு உண்மை தெரிய வரவே, பீட்டரைப் பாராட்ட வேண்டுமென்று, அவனைப் போய் ஆர்வத்தோடு அரவணைத்துத் தூக்க முயன்றனர். ஆனால், பீட்டர் குளிரில் விறைத்துப்போய் பிணமாய் விழுந்தான்.
      உயிர் போவதாக இருந்தால் இப்படி அல்லவா போக வேண்டும் என்று உலகத்திற்குக் காட்டிவிட்டு இறந்தான். அவனுடைய தியாகம் என்றென்றைக்கும் நினைக்கும்படியாக இருக்க வேண்டும் என்று ஹாலந்து அரசு, அவனுக்கு அங்கே ஒரு சிலை எழுப்பிக் கெளரவித்திருக்கிறது. உயிரின் விலை இன்னதென்பதை அந்தச்சிலை, இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்திக் கொண்டே அங்கு நிற்கிறது.
      உலகத்தில் 16 நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நிகழ்வதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாரதத்தில் மற்ற மாநிலங்களில் பசி, பட்டினி, வறுமையால் தற்கொலைகள் நிகழ்கின்றன. தமிழகத்தில், கல்விச்சாலைகளில் மன அழுத்தங்களாலும், வல்லுறவுகளாலும் நிகழுகின்றன.
      அதுவும் ஒரு குடும்பத்தில் ஏற்கெனவே இரண்டு, மூன்று பேர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களேயானால், அக்குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது இயல்பாய் நடக்கிறது என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மின்னியல் ஊடகங்களின் வளர்ச்சி, தற்கொலை முயற்சிகளுக்கு உந்து சக்தி ஆகிவிட்டது.
      தற்கொலைக்குக் காரணமான பாலியல் பிரச்னைகள் சென்ற தலைமுறையிலும் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல் தற்கொலை அளவுக்குக் கொண்டு சென்றதில்லை. பருவக்கோளாறுகளினால் கல்லூரி வளாகங்களில் நிகழ்ந்த சின்னஞ்சிறு குற்றங்கள், பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியாமல் போயின் மறைக்கப்பட்டன.
      ஆனால், இன்றைக்குக் குற்றங்களைத் தொடர்ந்து செய்வதற்கென்றே இணையதளங்களும், வலைத்தளங்களும், கட்செவி அஞ்சலும் துணை செய்கின்றன. நிகழ்ந்த தவறுகளைப் படமெடுத்து, அதனைப் பாதிக்கப்பட்டவருக்குக் காட்டி, ஊரறிய, உலகறிய அவற்றை உலாவவிட்டுவிடுவேன் எனும் பயமுறுத்தல்களினால் தற்கொலைகள் மிகுதியாக நடக்கின்றன.
      பெரிங் என்ற உளவியல் வல்லுநர், அமெரிக்க ராணுவத்தில் அடிக்கடி தற்கொலைகள் நிகழ்வதைக் கள ஆய்வு செய்தார். அதில் ராணுவத்தின் துறைசார்ந்த பொருள்களாலேயே, தற்கொலைகள் புரிந்து கொள்வதாகக் கண்டறிந்தார். தரைப்படை வீரர்கள் தாங்கள் ஏந்தியிருக்கும் துப்பாக்கிகளாலேயே சுட்டுக்கொல்கின்றனர்.
      கடற்படை வீரர்கள் கப்பல்களில் கட்டியிருக்கும் கயிறுகளாலேயே தூக்குப் போட்டுக் கொள்கின்றனர். வான் படைவீரர்கள் உயரத்தில் இருந்து குதித்து மாண்டு போகிறார்கள் எனக் கண்டறிந்தார். அந்த அடிப்படையில் பார்த்தால், மாணாக்கர்கள் கல்வி நிலையங்களை நடத்துகின்ற, கல்வி கற்பிக்கும் கல்வியாளர்களாலேயே, தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்வதாகக் கருத வேண்டியிருக்கிறது.
      ஆக, தற்கொலைக்கு மிகுதியான காரணம், இளைஞர்கள் மனத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தங்கள் எனலாம். இந்த மன அழுத்தங்கள் மாணாக்கர்கள் மனத்தில் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஏற்கனவே உருவாகியிருந்தால் அதனைப் போக்குகிறவர்களாகக் கல்வியாளர்கள் திகழ வேண்டும்.
      மாணவப் பருவத்தில் வகுப்பறைகளில் செவிமடுத்த சில செய்திகள் நினைவுக்கு வருகின்றன. அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த ஜான் எஃப் கென்னடி முதன் முதலில் செனட் தேர்தலுக்கு நின்று தோற்று, சோகமாக - சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தார். அப்பொழுது தன் பிள்ளையின் மன அழுத்தத்தைப் புரிந்துகொண்ட அவருடைய தந்தை ஜோசப் கென்னடி, அவரை எப்படித் தேற்றினார் தெரியுமா?
      கோடீஸ்வரராகிய ஜோசப் கென்னடி மகனைத் தழுவிக்கொண்டு, மகனே, இந்தச் சின்ன தேர்தலில் தோற்றதற்கா கவலைப்படுவது? கவலைப்படாதே மகனே! என்னிடத்தில் இருக்கும் டாலர்களை வைத்து ஒரு புதிய அமெரிக்காவையே உருவாக்கி, உன்னை அதற்கு ஜனாதிபதி ஆக்குகிறேன், போ! என்று மகனின் மன அழுத்தங்களுக்கு மருந்து தடவினார் அந்த மாமனிதர்.
      "சிறுபிள்ளையிட்ட வேளாண்மை, வீடு வந்து சேராது' என நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சிறு பிள்ளைகள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராமல் போனால் தப்பில்லை. ஆனால், இன்று சிறு பிள்ளைகளே வீடு வந்து சேருவதில்லையென்பதுதான் பிரச்னை.
      கல்விப்பயிரை வளர்க்கும் கல்விப் பாத்திகளுக்குச் சென்ற பிள்ளைகள் வீடு வந்து சேராமல், காடு சென்றால், சுடுகாட்டுக்குச் சென்றால் மனக்குயில்கள் அழாதா?!
      "துன்பங்களும் துயரங்களும் தரும் மன அழுத்தங்களை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால், அழுத்தங்களைத் தியானத்தாலும், ஆன்மிகப் பயிற்சியாலும் வெல்ல முடியும்.'

      மலர்ந்த நெஞ்சங்களில் மனச் சலிப்புகள்...

      Dinamani

      By நெல்லை சு. முத்து

      First Published : 18 February 2016 01:49 AM IST


      ஒரு முறை ஆமூர், ஆரம்பப் பள்ளி ஒன்றில் "நிலாப் பயணம்' குறித்து உரையாற்றியபோது, "நிலா நிலா ஓடிவா' என்ற பாடலை மாணவர்களுக்கு அடி எடுத்துக் கொடுத்தேன். அனைவரும் ஒரே குரலில் முழுப்பாடலையும் பாடினார்கள்.
      அது சரி. அமர்ந்த இடத்தில் சோம்பலாய் உட்கார்ந்தபடி - நிலாவை நில்லாமல் ஓடி வா, "இண்டு இடுக்கு' எல்லாம் புகுந்து வா, மலை மீது ஏறி வா, மளிகைச் சாமான் வாங்கி வா என்கிறோமே. சிறுவயதில் "நிலவே உன்னிடம் நெருங்குகிறோம்' என்று அல்லவா பாடம் படிக்க வேண்டும்?
      ஒரு துணைக்கேள்வியும் கேட்டேன். மல்லிகைப்பூ கொண்டு வரச் சொல்லி மாணவிகள் கேட்பது சரி. தலையில் சூடிக் கொள்ளலாம். மாணவர்களுக்கு எதற்கு பூ என்று வினவினேன். பளிச்சென்று ஒரு பதில். கிராமப்புற மாணவர். ஏழு வயது இருக்கலாம். முழங்காலைக் கட்டி, தரையில் அமர்ந்தபடியே, "சாமிக்குப் போட, சார்' என்றாரே பார்க்கலாம். அந்த சமயோசிதப் புத்தி நகர்ப்புறங்களில் சற்றுக் குறைவுதான்.
      நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அறிவுத் தேடலில் சளைத்தவர்கள் அல்லர். பெர்முடா முக்கோணம், வேற்றுக்கிரகவாசிகள், கருந்துளை விண்மீன்கள், பறக்கும் தட்டுகள், மறுபிறவி, இரட்டை பிரபஞ்சம், புழுத்துளை அண்டங்கள் போன்ற அறிவியல் அதிசயங்களை ஆர்வமுடன் சந்தேகங்களாகக் கேட்கின்றனர். உயர்நிலைப் பள்ளி மாணவர்களோ விண்வெளி விஞ்ஞானி ஆவதற்கு என்ன படிக்க வேண்டும் என்று கேட்பதும் முறைதான்.
      சமீபத்தில் கோவை, தனியார் கல்லூரி ஒன்றில் அறிவியல் கண்காட்சி விழா மேடையில் அறிவியல் நண்பர் ஒருவர் மாயாஜால வித்தைகளின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டிக் கொண்டு இருந்தார். மாயாஜாலம் நடத்துவோர் தங்கள் கைகளில் "சித்து வேலைகள்' தயார் ஆகும் வரை, பார்வையாளர்களிடம் வெறுமனே கேள்விகள் கேட்பது வழக்கம். அவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் உத்தி இது.
      அதற்காக, தமிழில் ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியிலும் அலைபரப்பாகும் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் பெயர்களை நாள், நேரம் குறிப்பிட்டு ஒவ்வொன்றாக அடுக்கிக் கேட்டார். மாணவர்களோ கொஞ்சமும் அயராமல் "கோரஸாக' சரியான விடை அளித்தனர்.
      அசந்து போனேன். மூளைக்குள் "இதையெல்லாம்' எவ்வளவு கருத்தாகப் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்? மாணவப் பருவத்தின் இந்த "தகவல்'களால் வாழ்வில் பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனம் கிடையாதே. இளைஞர்களின் அறிவுத் திறனுக்கும் இழுக்கு அல்லவா?
      உள்ளபடியே கல்லூரி மாணவர்களில் நூற்றுக்கு நாற்பது பேர்தான் நம் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்கிறார்கள். எஞ்சியவர்கள் தங்கள் சார்புச் சித்தாந்தங்களையே விவாதப் பொருள் ஆக்குகின்றனர். உயர்நிலைப் பள்ளியிலோ 50-60% மாணவர்கள் அறிவியல் உரைகளால் சிந்திக்
      கிறார்கள்.
      நடுநிலைப் பள்ளிகளில் 60-70% பேர் அறிவியல் செய்தியையும் கிரகித்துக் கொள்கிறார்கள். ஆரம்பப் பள்ளியினரோ நூற்றுக்கு 90 பேர் அப்படியே உள்வாங்குகிறார்கள். அவர்களை விட பிஞ்சு மழலைகள்தாம் நூற்றுக்கு நூறு முழுமையாக மனதில் பதியம் இடுகிறார்கள்.
      ஒருமுறை, மதுரையில் குடியரசு முன்னாள் தலைவர் கலாமை அரசு விருந்தினர் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. அங்கு ஒரு தனியார் கல்லூரிக்கு அறிவியல் உரை நிகழ்த்த வந்ததைக் கூறினேன். "பள்ளிக்கூடங்களுக்கு எல்லாம் போங்க' என்றார். மூன்றே வார்த்தை. அவர் எனக்கு இட்ட இறுதிக் கட்டளை, இன்றும் நிறைவேற்றி வருகிறேன்.
      பன்னிரண்டாம் வகுப்பு வரை தான் மாணவர்களை நல்லவர்களாகச் செதுக்க முடியும். அதன் பிறகு சட்டம், சாத்தான், ஆண்டவன் எவராலும் ஒருவரின் இயல்பினைத் திருத்தவோ மாற்றவோ இயலாது என்று அடிக்கடி கூறுவார் கலாம். அதனால்தான் கலாம் குடியரசுத் தலைவரான ஒன்றிரண்டு மாதங்களுக்குள் "இந்தியா 2020' கருத்தாக்கத்தினை ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கும், பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கும் பயன்படும்படி இரண்டு விதமாக மொழிபெயர்க்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அந்நூல்கள் உரிய காலத்தில் அரங்கேறின.
      2012-ஆம் ஆண்டு இலங்கை அரசு "மும்மொழித் திட்ட'த்தினை அறிவித்த தருணத்தில் அங்கு சென்றிருந்த கலாம், நெல்சன் மண்டேலாவின் வாக்கினை நினைவு கூர்ந்தார்; "எதையும் ஒரு மனிதனிடம் அவன் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவன் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவன் தாயிடம் பேசிய மொழியில் சொன்னால், நெஞ்சத்தில் ஏறும்.' உண்மைதானே.
      முதல் தேவை ஆரம்பப் பள்ளியில் தாய்மொழிக் கல்வி. உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலக் கல்வி. கல்லூரிப் படிப்பில் இந்திய அல்லது அன்னிய மொழிகளில் ஏதேனும் புதிதாக ஒன்றை சேர்த்துப் படிக்கலாம்.
      இந்த வகையிலும், கிராமப்புற மாணவர்கள்தாம் நகர்ப்புறங்களில் அமைதியாக சாதனைகள் படைத்து வருகிறார்கள். நகர்ப்புறப் பள்ளி, கல்லூரிகளோ தேர்ந்த மாணவர்களைத் "தயாரிக்க'ப் பாடுபடுகின்றன. அதிலும் தனியார் கல்விக் கூடங்கள், மாணவர் உற்பத்திச் சாலைகளாகவே மாறிவிட்டன. சாதி, மத, இன, மொழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு, தேர்விலும் "பாஸ் மார்க்' ஒதுக்கப்படவில்லை என்றால் தங்கள் "அடையாள'த்தைக் காட்டிப் போராட்டம் நிச்சயம். அதிலும் மாணவர்களிடையே மாநிலம் சார்ந்த குழுப்பிரச்னைகளும் உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை.
      சமீப காலத்தில் புதியதோர் அடையாளம் உதயம் ஆகி இருக்கிறது. அவர் உள்நாட்டவரா, அயல்நாட்டவரா என்று பார்த்தும் உசுப்பிவிடுவோம். போதாக்குறைக்கு, மாணவர்களும் வயதுக்கு ஒவ்வாத விமர்சனங்கள், தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் தர்க்கம் செய்கிறார்கள். "புரட்சி', "எழுச்சி', "மலர்ச்சி', "கிளர்ச்சி' என்று வெற்று அடைமொழி அட்டைகளைக் கழுத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவானேன்?
      மர்மமான முறையில் யார் இறந்தாலும், முதலில் அவர் எந்தக் கட்சிக்காரர் என்றுதான் பிரேதப் பரிசோதனை நடக்கிறது. சடலத்தின் சாதிச் சான்றிதழை வைத்துத்தான் ஆர்ப்பாட்டமே தொடங்கும். பிற்படுத்தப்பட்டவரையும் தாழ்த்தப்பட்டவர் என்றுதான் முழங்குவோம்.
      பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எந்தப் பருவத்தினரின் சந்தேகச் சாவு என்றாலும் பிரேதத்தில், "பெண்மை' பறிபோனவரா என்று ஆராய்ச்சி நடத்துவோம். சிறுவர்களுக்கே கூட ஆண்மைப் பரிசோதனையில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
      இப்போது ஆண்மை-பெண்மை இவற்றுக்கு நடுவே இன்னொரு "இடைமை' ஆரம்பம் ஆகிவிட்டது. இந்திய மக்கள்தொகையில் 0.05% மூன்றாம் பாலினத்தவராம். இங்கிலாந்தின் மெக்காலே உருவாக்கிய மாதிரி, அங்குள்ள 6.5 கோடி மக்களில் 1.5 சதவீதத்தினர்க்கான சட்டம் போலவே தங்களுக்கும் இந்தியச் சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் சிலர் அடம்பிடிக்கிறார்கள்.
      இனப்பெருக்க அங்கீகாரமோ, இல்லறமோ, நல்லறமோ? தனி அறைக்குள் ஒரே பாலினத்தார் இருவர் நட்பாகச் "சேர்ந்து' இருந்துவிட்டுப் போகட்டும். அதற்கு அரசுப் பதிவாளர் கையொப்பத்தையும் எதிர்பார்ப்பது ஏனோ?
      6500-8500 கிலோ மீட்டருக்கு அப்பால் மேலை உலகில் 1600-2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தேவ குமாரரும், அண்ணலும் சொன்ன உபதேசங்களை இங்கு ஏற்றுக் கொள்கிறோம். ஐரோப்பா, அரேபியா ஆகிய சொற்களின் ஹீப்ரு மூலச்சொற்கள் முறையே "இரெப்' (இரவு), "அரப்' (இருள்) என்பது யாருக்கேனும் தெரியுமா? வட மேற்கில் "சிக்கிய' குருவின் போதனையும் வாளேந்தி வரவேற்போம்.
      அதுமட்டுமா, கீழைக் கண்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் வெடித்த சிந்தனைகளையும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். உலகின் மிகப்பெரும் பரப்பு கொண்ட நாட்டில் நகர்ப்புறத் தொழிலாளர்களை மேட்டுக்குடி வர்க்கத்தினர் ஒன்றிணைத்தனர். உலகில் மக்கள்தொகை மிகுந்த நாட்டில் "மூலதனம்' தந்தோரின் பெயரில் விவசாய வர்க்கத்தினர் இன்னொரு பக்கம். இடையில், ஒடுக்கப்பட்டோர் வடகிழக்கின் "புத்த'மதிகளையும் போற்றுகிறோம்.
      புறப்பட்ட நாடுகளில் இந்த சித்தாந்தங்கள் காலாவதி ஆன பின்னர், பரிணாம வளர்ச்சியில் தீவிரவாதப் பிரிவுகள் ஆகிவிட்டன. அவை இந்தியாவில் தலைப் பாகத்திலும், தலைநகரிலும், தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கி ஆயிற்று.
      பொதுநல ஆர்வலர்களும், மாணவரிடையே பரப்பும் எதிர்மறைச் சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவேண்டும். இளைஞர்கள் அரசியல் அமைப்புகளில் பங்கெடுப்பது மனித உரிமை ஆகலாம். அதுவே மாணவர் உரிமை என்றும் வாதாடலாமா?
      மக்கள் வரிப்பணத்தில் படிக்கச் செல்வோருக்கு எது முக்கியம்? கல்விக்கூடங்களில் படிப்பதால் மட்டுமே அவர்களுக்கு மாணவர்கள் என்று பெயர்.
      அதிலும், விடுதி மாணவர் வகுப்பிற்கே வரவில்லை என்றால் நிர்வாகத்தால் அவரைக் கண்டிக்கவும் இயலாது. பெற்றோரை வரவழைத்து எடுத்துச் சொல்வதிலும் சிக்கல். ""பல "லகரங்கள்' பணம் கட்டி "சீட்' வாங்கி ஆயிற்று. படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால் விடுதி அறைக்குள் "அசம்பாவிதம்' செய்து கொள்வேன்'' என்று மிரட்டும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்களாம்.
      ஒருவகையில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் உடல் அல்லது வார்த்தை ரீதியிலான "ராக்கிங்'கிற்குத் தடை வந்துவிட்டது. படிப்பில் கவனம் செலுத்த விடாத செல்பேசிக்கும் தடை வந்தாயிற்று. மாணவரை அடிக்கக் கூடாது என்று ஆசிரியர்களுக்கே தடை விதிக்கப்பட்டு விட்டது.
      அதுசரி, நோயாளிகள், உடல்நலம் பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள். மாணவர்களோ உடலும் உள்ளமும் நலம் பெறுவதற்காகக் கல்விக் கூடங்களுக்கு வருகிறார்கள். பள்ளி வளாகங்களில் பெற்றோர் வருகிறார்கள். இந்த உள்ளூர் அரசியல்வாதிகள் ஏன் பரிவாரங்களுடன் கும்பலாக வருகிறார்கள்?
      "நான் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இதுதான் - மாணவர்களது மலர்ந்த நெஞ்சங்களில் உங்கள் மனச் சலிப்புகளைக் கொட்டி அசுத்தப்படுத்தி விடாதீர்கள்' என்பார் கலாம். மாணவப் பருவத்தினரைப் படிக்க விடாமல், தற்கொலையைத் தூண்டும் அளவுக்கு ஒரு "மனச்சூழல்' தைரியம் தரும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இது பொருந்தும்.
      "எதையும் ஒரு மனிதனிடம் அவன் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவன் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவன் தாயிடம் பேசிய மொழியில் சொன்னால், நெஞ்சத்தில் ஏறும்.'

      NEWS TODAY 29.01.2026