Wednesday, March 2, 2016

Now, Gmail Experience Becomes Safer

Now, Gmail Experience Becomes Safer
If you had opened Gmail on Thursday, you may have been curious about the red padlock appearing while typing in corporate or lesser-known email IDs. You’d have also seen an alert not to send personal information to that ID as that domain’s servers may not be encrypted.
Gmail rolled out most of these security features soon after their ‘safer internet day’ update, which allowed users to get 2GB upgrade to their drive storage on completing a security checklist by Thursday.
It also added a lot of features that allowed people to identify messages from authentic users or mails from strangers masquerading as ‘official mail’.
What does this mean for users? It will help you identify users who mail you often,  and will safeguard you from unknown users mailing you from seemingly authentic mail IDs that resemble those of government/ corporate ids. It allows users to know if the data shared with you from the sender is secure by employing TLS (Transport Layer Security), which provides an enhanced level of encryption-message to message, user to user security. According to Google search trends over the previous year, searches about two-factor authentication on Google India had risen 97%.

வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்




புதுடெல்லி, 

இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதற்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம் ஆகும். எனவே வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த மத்திய அரசு அரசாணைப்படி போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. தற்போது லாரி, வேன் உள்பட கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், 9 இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கடந்த 1–10–2015–க்கு பிறகு பதிவு செய்யப்படும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி இருக்கின்றன. அதே சமயம் அதற்கு முந்தைய பழைய வாகனங்களிலும் 6 மாதம் அவகாசம் வழங்கி மார்ச் 31–ந் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து ஏப்ரல் 1–ந் தேதி முதல் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவால் விபத்துகள் குறையும் என்றும், தற்போது வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, March 1, 2016

வாழ்வு இனிது: பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோம்!

Return to frontpage

வளர்ந்த நாடு என்பது எத்தனை ஏழைகள் கார் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததில்லை. எத்தனை பணக்காரர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்ததே. கடந்த ஜனவரி மாதம் மட்டும் இந்தியாவில் 2.18 லட்சம் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது வளர்ச்சிதானா?

மொத்த பெட்ரோலியப் பயன்பாட்டில் போக்குவரத்துக்காக மட்டும் 60 சதவீதம் செலவிடுகிறது மனித இனம். இதில் சொந்த கார், இரு சக்கர வாகனங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது 40 சதவீதம். உலகிலேயே அதிகம் நுகரும் நாடு என்றாலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தினமும் 41.6 மில்லியன் லிட்டர் பெட்ரோல் மிச்சப்படுவதாகச் சொல்கிறது அமெரிக்கா. ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தனிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த கார்களுக்குக் கூடுதல் வரி உண்டு. கடுமையான கட்டுப்பாடுகளும் உண்டு.

இந்தியாவில் 1995-ல் இருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதைவிடப் பல மடங்கு தனிப் போக்குவரத்தும் அதிகரித்திருப்பதே ஆபத்து!

பொதுப் போக்குவரத்துக்கு நாம் மாறுவதன் மூலம், ஆண்டுதோறும் 3.7 கோடி மெட்ரிக் டன் கரியமில வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தலாம். மேலும், பஸ்ஸுக்கோ, ரயிலுக்கோ செல்பவர்களுக்கு சிறிது தூரமேனும் நடக்கும் நிர்ப்பந்தம் இயல்பாகவே ஏற்படுகிறது. நடக்கிறார்கள். பொதுச் சமூகத்துடன் உரையாடுகிறார்கள். தனிப்பட்ட வாகனங்கள் ஒரு வகையில் நம்மைத் தனித் தீவாக்கிவிடுகின்றன.

இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதில் பல சவுகரியங்கள் உண்டு என்றாலும், அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நிகழ்வதற்கும் இவைதான் காரணம். சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 25 சதவீதத்துக்கும் மேல் இரு சக்கர வாகனங்களால் நிகழ்பவைதான். காரைவிட பஸ், ரயில் போன்ற வாகனங்கள் பாதுகாப்பானவை என்று வெக்ஸென் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. காருடன் ஒப்பிட்டால், விபத்தில் இறக்கும் வாய்ப்பு ரயில் பயணத்தில் 9 மடங்கு குறைவு என்று அது குறிப்பிடுகிறது. பொதுப் போக்குவரத்து மட்டும் இல்லையென்றால், தினம் சாலைப் பயணத்தில் ஏற்படும் தாமதம் மேலும், 27 சதவீதம் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது அமெரிக்க பொதுப் போக்குவரத்துச் சங்கம்.

போக்குவரத்து நெரிசலையும், ஒற்றை இலக்க, இரட்டை இலக்க முறையை 15 நாட்களுக்கு அமல்படுத்தியது டெல்லி அரசு. குறிப்பிட்ட இந்த 15 நாட்களில் காற்றில் பி.எம். 2.5 என்று அழைக்கப்படும் துகள்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாக ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) தெரிவித்திருக்கிறது. பொதுப் போக்குவரத்து அதிகரித்தால் சூழலில் என்ன மாற்றம் நடக்கும் என்பதற்கான சமீபத்திய உதாரணங்களில் ஒன்று இது. நாட்டிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று தமிழகத் தலைநகரம் சென்னை. தமிழகம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது?

Press Information Bureau

Press Information Bureau
Government of India
Ministry of Home Affairs
29-February-2016 18:20 IST
Visa on Arrival for Japanese nationals from tomorrow
As announced by the Prime Minister, the Visa on Arrival for Japanese nationals is being launched from tomorrow i.e. 1st March, 2016. This facility will be available at six airports viz. Delhi, Mumbai, Chennai, Kolkata, Bangalore and Hyderabad. This facility can be availed for the purposes of business, tourism, conference and medical. Validity of this visa after entry will be for a period of 30 days.

About 1.80 lakh Japanese nationals visit India every year on various kinds of visas. Business and Tourist Visas constitute around 78% of these. On an average 600 Japanese nationals arrive at Delhi Airport daily. It is expected that extension of this facility to Japanese nationals will further strengthen the business and tourism ties between the two countries.

Detailed circulars pertaining to this subject have already been put on MHA’s website.

During the visit of Japanese Prime Minister Mr Shinzo Abe to India during December last year, the Prime Minister Shri Narendra Modi had announced that India will extend 'Visa on arrival' to Japanese citizens from 1st March 2016.

****


KSD/NK/PK
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx

Saturday, February 27, 2016

நிதி ஆலோசனை : திடீர் வேலை இழப்பைச் சமாளிப்பது எப்படி?

logo

இன்றைக்கு வேலைவாய்ப்புகள் எப்படி அதிகமோ அப்படி, திடீரென்று வேலை இழக்கும் அபாயமும் அதிகம். அதுபோன்ற ஒரு சூழலில், பொருளாதார ரீதியாக தடுமாறாமல் இருப்பது எப்படி? இதோ சில ஆலோசனைகள்...

* எப்போதும் சொல்லப்படும் விஷயம்தான் என்றாலும், சேமிப்பே நமக்கு ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து, வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும்.

* மாதச் சம்பளத்தைப் போல 3 முதல் 5 மடங்கு தொகையை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. உதாரணத்துக்கு, மாதச் சம்பளம் ரூ. 30 ஆயிரம் எனில், ரூ. 90 ஆயிரம் முதல், ரூ. 1.50 லட்சம் வரை வைத்திருப்பது அவசியம். இந்த அளவு தொகையை சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிக்க வேண்டும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவீதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவீதத் தொகையை ‘லிக்விட் மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.

* மாதமாதம்தான் சம்பளம் வருகிறதே என்று எண்ணாமல், சில முதலீடுகள் மூலம் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பலர், தங்கத்தை சிறந்த முதலீடாகக் கருதுகிறார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர, தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். ஆகையால், முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

* முதலீடு நல்ல விஷயம் என்றாலும், கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. சிலர், தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் கூறினார்கள் என்று பெர்சனல் லோன் பெற்று, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம், வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கக்கூடும். கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது நல்லது.

* பள்ளி கல்விக் கட்டணம், காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் ஆரம்பத்தில் மொத்தமாகச் செலுத்திவிடலாம். இப்படிச் செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின் போதும் இதுபோன்ற முக்கியமான விஷயங்களுக்கு பணமின்றி தவிக்க வேண்டியிராது.

* குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், வேலை இல்லாத நேரத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டால் திகைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

* சம்பளத் தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 60 சதவீதத்துக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள தொகையை முதலீடு செய்யலாம். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

* இன்றைய சூழலில் கடன்களைத் தவிர்ப்பது கடினம் என்றாலும், கூடுமானவரை கடன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் வீட்டுக் கடன் போன்ற சொத்துச் சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. இதற்கு வட்டியும் குறைவு. எளிதாக கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் செலுத்துவது தலைவலியாக இருக்கும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, எதற்காக நமக்கு வேலை போனது என்று அலசி ஆராய்ந்து அந்நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை இழந்த காலத்தில் கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்வது, மேலும் உயர்ந்த வேலைக்குச் செல்ல உதவும்.

இருக்கிறது ... ஆனால் எதிர்பார்த்த அளவில் இல்லை

logo

ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தனது 2–வது ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். இவர், ஒரு சராசரி அரசியல்வாதி அல்ல, கணக்காயர். எனவே, எதையுமே நன்றாக ஆராய்ந்து, வரவு–செலவு, லாப– நஷ்டம், நன்மை–தீமைகளையெல்லாம் பார்த்துத்தான், எந்த முடிவையும் எடுப்பார். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு சுற்றுப் பயணம் வந்த அவர், பொதுவாக தமிழக மக்களின் மனங்களில் உள்ள ஒரு எண்ணத்தை பிரதிபலிக்கும் கருத்தை சொன்னார். ரெயில்வே திட்டங்களை பொறுத்த மட்டில், கடந்த பல ஆண்டுகளாகவே, தமிழ்நாடு அதற் குரிய பங்கை பெறவில்லை, இதையெல்லாம் சரிசெய்ய மத்திய அரசாங்கம் உறுதிபூண்டு இருக்கிறது என்று நெற்றியடியாக கூறினார்.

‘ரெயில்வே மந்திரியே இப்படி கூறிவிட்டார். அப்படி யானால், நிச்சயமாக இந்த ரெயில்வே பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் வரும்’ என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்பார்த்திருந்தது. இதுமட்டுமல்லாமல், முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 11–ந் தேதி பிரதமர் நரேந்திரமோடிக்கே, ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாடு 2023 கண்ணோட்டம் அறிக்கையில், முக்கியமான 10 ரெயில்வே திட்டங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அந்த திட்டங்களை நிறைவேற்றவேண்டும். மேலும், மாநில அரசு பங்களிக்க தயாராக உள்ள சென்னை–தூத்துக்குடி சரக்கு ரெயில் வழிப்பாதை, சென்னை–மதுரை–கன்னியாகுமரி அதிவேக பயண ரெயில் இணைப்பு, மதுரை–கோயம்புத்தூர் அதிவேக பயண ரெயில் இணைப்பு நிறைவேற்றுவதற்கு தனியாக அமைப்பு அமைக்கவேண்டும் என்பது உள்பட கடந்த பல பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டு, தொடங்கப் படாமல் இருக்கும் பல திட்டங்களை குறிப்பிட்டு, இதை யெல்லாம் நிறைவேற்ற பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

எல்லோருமே ரெயில்வே பட்ஜெட்டில் இவையெல்லாம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர் பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவில் பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. ஆனாலும், வரவேற்கத்தக்க அளவில் சில பொது அறிவிப்புகளும், தமிழ்நாட்டுக்கான அறிவிப்பு களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, பயணிகள் ரெயில் கட்டண வருவாயும், சரக்கு ரெயில் கட்டண வருவாயும் குறைந்துள்ள நிலையில், அதை சரிக்கட்டுவதற்கு பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வோ, சரக்கு ரெயில் கட்டண உயர்வோ அறிவிக்காமல், கட்டண உயர்வு இல்லாத மற்ற இனங்களில் வருவாயைப் பெருக்க அவர் தீட்டியுள்ள திட்டங்கள் மிகவும் வரவேற்புக்குரியவை ஆகும்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், சென்னை அருகே நாட்டிலேயே முதல்முறையாக, ரெயில்வே மோட்டார் வாகன சரக்கு முனையம் அமைக்கும் அறிவிப்பு வெளியிடப் பட்டிருப்பது, நிச்சயமாக பாராட்டுக்குரியது. பொதுத்துறை, தனியார்துறை பங்களிப்புடன் டெல்லியையும், சென்னை யையும் இணைக்கும் வகையில், சரக்கு ரெயில் வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தை சென்னையோடு நிறுத்திவிடாமல், தூத்துக்குடி வரை நீடிக்கவேண்டும். காரக்பூர்–விஜயவாடா சரக்கு ரெயில் வழித்தடத்தையும் தூத்துக்குடி வரை இணைத்தால், நிச்சயமாக நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். மாநில அரசின் துணையோடு சென்னை புறநகர் ரெயில் நிலையங்கள் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். மற்றபடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல திட்டங் களுக்கு அதிக அளவில் இல்லாவிட்டாலும், ஓரளவு நிதி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழக திட்டங் களுக்காக 2,064 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பதுபோல, தர்மபுரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அடிக்கடி ரெயில்வே மந்திரியை சந்தித்ததன் விளைவாக, மொரப்பூர்–தர்மபுரி புதிய ரெயில் பாதை திட்டத்திற்கு 134 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல, எந்த இடத்துக்கு என்று குறிப்பிடாமல் பொதுவாக பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இனி தமிழக எம்.பி.க்களும், தெற்கு ரெயில்வே நிர்வாகமும் இந்த பொது அறிவிப்புகளின் பலனை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்கும், நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படுவதற்கும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கும் வாதாடி, போராடி, வற்புறுத்தி பெறவேண்டும்.

பதின் பருவம் புதிர் பருவமா? - விளிம்புக்குத் தள்ளும் ஒரு வழிப் பாதை?

Return to frontpage

டாக்டர் ஆர்.காட்சன்


டாஸ்மாக்கும், ‘குவார்ட்டர் சாங்’ எனப் போதையில் பாடும் சோகப் பாடலும் இல்லாத தமிழ்ப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘எல்லாப் பிரச்சினைகளுக்கும், மதுதான் தீர்வு’ என்பதுபோல் நகைச்சுவை நடிகர்கள் மதுவுக்கு ‘பிராண்ட் அம்பாசடர்’ ஆக மாறி நடித்துக் கொண்டிருக்கும் வேதனையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆபத்தான ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சாதாரணமாகக் காண்பிப்பதன் மூலம், அது தவறு இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். இதைக் கூர் உணர்ச்சியைக் குறைத்தல் அல்லது Desensitization என்று சொல்வார்கள். சினிமாக்களில் காண்பிக்கப்படுவதெல்லாம் நடிப்புதான் என்பதையும், அதில் காண்பிக்கப்படும் எல்லாமே நிஜ வாழ்க்கைக்கு பொருந்திவராது என்பதையும் வளர்இளம் பருவத்தினருக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

வீழ்ச்சி போக்கு

சமீபகாலமாக இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கும் சராசரி வயது குறைந்துகொண்டே வருவதற்குச் சினிமாவும் ஒரு முக்கியக் காரணம். இந்தப் போக்கு இளைஞர்களை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் ஆபத்தான விஷயம். புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தில் ஆரம்பித்துக் கஞ்சா, ஹெராயின் உட்படப் பல வகை போதைப் பழக்கங்களை வளர்இளம் பருவத்தினரிடையே பார்க்க முடிகிறது.

பொதுவாகப் போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மட்டும் உருவாவதில்லை. குடும்பச் சூழல், சமுதாயம், கல்வி, பொருளாதார நிலை, தனிப்பட்ட குணநலன், மரபணு மாற்றம் போன்றவை சேர்ந்த கலவைதான், போதைப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையாகும் தன்மையைத் தீர்மானிக்கின்றன.

குடும்பச் சூழல்

ஒரு குழந்தை வளரும்போது, நல்ல குடும்பச் சூழல்தான் ஆரோக்கியமான மனநல வளர்ச்சிக்கு அடித்தளம். வளர்இளம் பருவத்தில்தான் ஒருவருடைய குணநலன் முதிர்ச்சி அடைய ஆரம்பித்து வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். ஆராய்ச்சி முடிவுகளின்படி சிறுவயதில் பெற்றோரில் ஒருவரை இழப்பது, குடும்ப வன்முறைகளைக் கண்கூடாகப் பார்ப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவை இளம் வயதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதற்குச் சாதகமான குடும்பச் சூழல் என நிருபிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் பங்கு

தீவிரமான போதை அடிமைத்தனத்துக்கு உட்படும் நபர்களில் 80% பேரின் தந்தை, அதேபோன்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு முதல் மாதிரிப் பெற்றோர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்பா தினமும் போதையில் வருவதையே பார்த்து வளரும் சிறுவனுக்கு, தானும் குடித்தால் தவறில்லை என்ற எண்ணம் வருவது இயற்கைதானே.

ஒரு விலங்கைக்கூடத் திரும்பத் திரும்ப அடித்தால், ஒன்று வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் அல்லது எதிர்க்கத் தொடங்கும். மனிதனின் கற்றுக்கொள்ளுதலும் அப்படித்தான். பெற்றோரின் போதைப்பழக்கச் சூழலில் வளரும் வளர்இளம் பருவத்தினர், ஒன்று தாங்களும் போதைப்பழக்கத்துக்கு உள்ளாவார்கள் அல்லது அவர்களுடைய எதிர்ப்பு குணரீதியான, ஆக்ரோஷமான நடவடிக்கை மாற்றங்களாக, படிப்பில் பின்தங்குதல் போன்றவையாக வெளிப்படும்.

பரம்பரை வியாதியா?

‘ஆள் பாக்கிறதுக்கு மட்டுமல்ல, குணமும் அப்பாவை மாதிரியே அச்சுஅசலாக இருக்கிறது’ என்று குழந்தைகளைக் கொஞ்சுவதுண்டு. இது உருவ ஒற்றுமைக்கு மட்டுமல்ல, போதைப் பழக்கத்துக்கும் பொருந்தும். மரபணுக்கள் மூலமாகவும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் தன்மை பெற்றோரிடமிருந்து வாரிசுகளுக்குச் செல்வதால், சிலருக்கு இது பரம்பரை நோயாகவே மாறிவிடுகிறது. வளர்இளம் பருவத்திலேயே போதைப் பழக்கத்தை ஆரம்பிக்கும் நபர்கள், பெரும்பாலும் இந்த மரபணு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் குளோனிங்கர் என்ற மனநல மருத்துவர் நிருபித்திருக்கிறார்.

‘அப்படியானால் அப்பா குடிகாரராக இருந்தால் மகன் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதைத் தடுக்க முடியாதா?’ என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இங்குதான் வளரும் சூழ்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. மரபணுக்கள் 60% வரை இதைத் தீர்மானித்தாலும் ஆதரவான குடும்ப, சமுதாயச் சூழல், கல்வி, பொருளாதார முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில், இதைத் தடுக்கமுடியும்.

நட்பு வட்டம்

பெரும்பாலான வளர்இளம் பருவத்தினருக்குப் போதைப்பழக்க அறிமுகம் நண்பர்கள் மூலம்தான் கிடைக்கிறது. அவர்களின் உற்சாகத் தூண்டுதல், போதைப் பொருட்களைப் பற்றிய தவறான வழிகாட்டுதல் போன்றவையும், ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாட ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம், நாளடைவில் எல்லாச் சூழ்நிலைகளிலும் தொடரும் அளவுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும்.

பின்பு குடிப்பதற் கென்றே அவர்களாகவே சூழ்நிலைகளை ஏற்படுத்தி, அதைக் குடிப்பதற்கான சாக்குபோக்காக மாற்றிக்கொள்ளும் மனநிலை ஏற்படும். மனதுக்கு உற்சாகம் இல்லாத நேரம் மற்றும் தோல்விகளால் துவண்டு கிடக்கும் நேரத்தில் ‘சரக்கு அடிச்சா உன் கவலையெல்லாம் பறந்து போய்விடும்’ என்று நண்பர்கள் தூண்டுவது பலருக்குப் போதைப்பழக்கத்தின் முதல்படியாக அமைந்துவிடும்.

எனவே, இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களிடம் வளர்இளம் பருவத்தினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெற்றோர்களும் இவர்களுடைய தனிமை, தோல்வி, விரக்தியான நேரத்தில் ஆதரவாக இருந்தால் இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களுக்கு இளம்பருவத்தினர் செவிசாய்ப்பதைத் தடுக்க முடியும்.

(அடுத்த வாரம்: தனிமையும் மனநோயும்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...