Friday, March 11, 2016

போலியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை

போலியான அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சுஷ்மா அறிவுரை

First Published : 11 March 2016 12:54 PM IST
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும், போலியான தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், போலியான தொலைபேசி அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்நிலையத்தில் தெரிவிக்கும்படி சுஷ்மா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியரான ராகுல் பாண்டேவுக்கு, சிங்கப்பூரில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், மத்திய அமைச்சகத்திடம் இருந்து பேசுவதாகவும், சிங்கப்பூரில் இருந்து வெளியேறுமாறு மிரட்டப்பட்டதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து சுஷ்மா இந்த பதிவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Thursday, March 10, 2016

சில்லறை பிரச்சினைக்கு தீர்வு: மாணவர்களின் அசத்தல் 'ஆப்' முயற்சி

Return to frontpage
ஆர்.சுஜாதா

இரண்டு வெவ்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள், தங்கள் கல்லூரி வளாகத்தில் நிலவிய சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான செயலியை உருவாக்கியுள்ளனர்.

நான்கு வெவ்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர், சில்லறைக் காசுகளுக்கான தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் பே- மிண்ட் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.

ராஜத் யாதவ் மற்றும் ஷுபம் ஜிந்தால் ஆகிய இரு மாணவர்களும் ஐஐடி சென்னையில், கட்டிடவியல் மற்றும் மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கடைசி ஆண்டில் படிக்கின்றனர். கவுசிக் மற்றும் ஆசிஷ் நோயல் இருவரும் பிஐடி ராஞ்சியில், கணிப்பொறி அறிவியல் மற்றும் மின்னியல் மின்னணுவியல் துறைகளில் கடைசி ஆண்டில் படிக்கின்றனர்.

யாதவ் மற்றும் ஜிந்தால் ஆகியோர், ஸ்டார்ட்-அப் தொகையாக 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய, கவுசிக் மற்றும் ஆசிஷ் தொழில்நுட்ப ரீதியாக பணிபுரிந்துள்ளனர். ஐஐடி சென்னை தொழில் முனைவோர் பிரிவு இதற்கு ஆதரவளித்துள்ளது.

இந்த எண்ணம் எப்படி வந்தது?

"எங்கள் கல்லூரி வளாகத்தில் ஒரு முக்கியப் பிரச்சனை இருந்தது. இங்கே இருக்கும் ஏழு கடைகளிலும் எப்போதும் சில்லறை தட்டுப்பாடு இருந்தது. கடை விற்பனையாளர்கள், சில்லறைக்கு பதிலாக சாக்லேட்டுகளையும், இன்ன பிற பொருட்களையும் கொடுத்து வந்தார்கள். அதை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசித்தோம். பே- மிண்டை உருவாக்கினோம்.

இந்த ஆப்பை சாரங் விழாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் சர்வர் உள்ளிட்டவைகளில் இருந்து அனுமதி கிடைக்க தாமதமானதால், இப்போதுதான் வெளியிட முடிந்தது.

இதைப் பயன்படுத்தி வரும் மாணவர்கள் ஏராளமான கருத்துக்களைச் சொல்கின்றனர். வாரம் ஒரு முறை, நான் 600 ரூபாயை அதில் போடுகிறேன். இதில் கேஷ் பேக் வசதியும் இருக்கிறது. சில சமயங்களில் சட்டை மற்றும் பேண்ட்களில் பணம் இருக்கிறதா என்று பார்க்காமலேயே அவற்றைத் துவைத்துவிடுவேன். இப்போது அந்தப் பிரச்சனை இல்லை. சில்லறைக்காக நீண்ட வரிசையிலும் நிற்க வேண்டியதில்லை" என்கிறார் யாதவ்.

பிப்ரவரி மத்தியில் வெளியான இந்த ஆப்பை, வளாகத்தில் இருக்கும் சுமார் 1,200 மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த வாரம் பிஐடி ராஞ்சியில் நடக்கவிருக்கும் கலாச்சார விழாவில் ஆப் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எளிய வழியில் பரிமாற்றம்

* சில்லறையைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட பே-மிண்ட் ஆப்பைத் திறங்கள்.

* கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தால் போதும்.

* எவ்வளவு தொகை என்பதை உள்ளிட்டு, பரிமாற்றத்தை நடத்த முடியும்.

இப்போதைக்கு கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தப்படும் செயலியை, விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறதாகக் கூறுகின்றனர் இந்த தொழில்நுட்ப மாணவர்கள்.

பே- மிண்ட் செயலிக்கான இணைப்பு பே-மிண்ட்

எம்ஜிஆர் 100 | 18 - ஆங்கிள் பார்த்த எம்ஜிஆர்!...தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

Return to frontpage

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. மீது அன்பு கொண்டு அவரோடு கடைசி வரை நெருக்கமாக இருந்தவர்கள் பலர். அவர்களில் சிலர், முதல் சந்திப்பின்போது அவரை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து மாறுபாடும் கசப்பும் கொண்டவர்கள். பின்னர், எம்.ஜி.ஆருடன் பழகி அவரது நல்லெண்ணத்தையும் திறமையையும் புரிந்துகொண்ட பின், ‘அவர் எம்.ஜி.ஆரின் ஆள்’ என்று பிறர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாயினர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் முக்கியமானவர்.

முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர். வளர்ந்து வந்த நிலையில், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை சந்திப்பதற்காக ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கே ஒரு படப்பிடிப்பில் கே.ஆர்.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். அவர் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்துவிட்டு வரும் வரை ஸ்டுடியோ வில் ஓர் அறையில் எம்.ஜி.ஆர். காத்திருந்தார்.

அப்போது, அந்த அறையில் தூய கதராடை யில் நெற்றியில் திருநீறுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்து ‘ஸ்டுடியோவில் நடிகர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் போலிருக்கிறது’ என்று எம்.ஜி.ஆர். நினைத்தார் . ஆனால், அவர் ஓர் இயக்குநர் என்று நண்பர் மூலம் அறிந்ததும் வியப்பில் ஆழ்ந்தார். புதுமுகங்களை டெஸ்ட் செய்யும் பணி அந்த இயக்குநருக்கு.

அந்த சமயத்தில், அங்கு நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வந்த இளைஞர் ஒருவரை நடித்துக் காட்டச் சொன்னார் இயக்குநர். பின்பு, கேலியும் கிண்டலுமாக பேசி, ‘‘தகவல் சொல்லி அனுப்புவாங்க’’ என்று இளைஞரை அனுப்பி விட்டார். கே.ஆர்.ராமசாமிக்காக காத்திருந்த எம்.ஜி.ஆர். நடப்பவற்றை கவனித்தபடி அறையில் அமர்ந்திருந்தார்.

அந்த இளைஞர் சென்ற பிறகு, ‘‘கண்ணாடி யிலே மூஞ்சியை பார்க்காமலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். இவங்களை எல்லாம் டெஸ்ட் செய்ய வேண்டும் என்பது என் தலையெழுத்து’’ என்று அந்த இயக்குநர் தனக்குத் தானே கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் பலமாக சிரிப்பதை பார்த்து ‘கொஞ்சம் கூட அடக்கமே இல்லையே’ என்று கோபப்பட்டார் அந்த இயக்குநர். எம்.ஜி.ஆர். பதிலளிக்க யோசித்தபோது, அவரை சந்திக்க கே.ஆர்.ராமசாமி வந்து விட்டார். அவருடன் பேசப் போய்விட்டார் எம்.ஜி.ஆர்.

முதல் சந்திப்பிலேயே அந்த இயக்குநருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நல்ல அபிப்ராயம் ஏற்பட வில்லை. என்றாலும் காலம் அவர்களை ஒருங்கிணைத்தது. எம்.ஜி.ஆர். நடித்த படத்தை இயக்க அந்த இயக்குநரே அமர்த்தப்பட்டார். அந்தப் படம் ‘சக்கவர்த்தி திருமகள்.’ அந்த இயக்குநர் ப.நீலகண்டன்.

எம்.ஜி.ஆர். எப் போதுமே தான் நடிக் கும் படங்களின் காட்சி அமைப்புகள், கேமரா கோணங்கள், பாடல்கள், இசை உட்பட எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைப்பவர். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்

‘ஆடவாங்க அண்ணாத்தே... அஞ்சா தீங்க அண்ணாத்தே... அங்கே இங்கே பாக்குறது என்னாத்தே...’

என்று ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் எம்.ஜி.ஆர். ஆட்டத்தில் தூள் கிளப்பியிருப்பார்.

அந்த பாடல் காட்சி படப்பிடிப்புக்கான செட்டில் நுழைந்து எம்.ஜி.ஆர். பார்வையிட்டார். கேமரா வைக்கப்பட்டிருந்த ஆங்கிளையும் பார்த்தார். ‘‘செட் ரொம்ப அருமையா இருக்கு. இந்த அழகு திரையில் தெரியணும்னா கேமராவை உயரமான இடத்தில் வைக்கணும். கேமரா ஆங் கிளை மாத்திட்டு என்னைக் கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென மேக் அப் அறைக் குள் சென்றுவிட்டார்.

விஷயம் அறிந்த இயக்குநர் ப.நீலகண்டன் கொதித்தார். ‘‘படத்தின் டைரக்டர் நானா? எம்.ஜி.ஆரா? கேமரா ஆங்கிளை மாற்றி அதற்கு ஏற்றபடி லைட்டிங் செய்ய நேரமாகும். இப்போது இருக்கும்படியே படமாக்கலாம். எம்.ஜி.ஆரை அழைத்து வா’’ என்று உதவியாளரை விரட்டினார்.

அவர் போய் எம்.ஜி.ஆரிடம் தயங்கிபடி விஷ யத்தை சொன்னதும், ‘‘காட்சி நல்லா வரணுமே என்ற நல்லெண்ணத்தில் சொன்னேன். எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை. விடிய, விடிய இருந்து நடிச்சு கொடுத்துட்டுப் போறேன். அதோட, காட்சி நல்லா வந்தா டைரக்டருக்குத்தான நல்ல பேரு. டைட்டில்ல கேமரா ஆங்கிள் எம்.ஜி.ஆருன்னா போடப் போறாங்க? போய் சொல்லுங்க’’ என்று உதவியாளரை எம்.ஜி.ஆர். திருப்பி அனுப்பினார்.

எம்.ஜி.ஆரின் கருத்து இயக்குநர் நீலகண் டனை யோசிக்க வைத்தது. எம்.ஜி.ஆரின் விருப்பப் படியே கேமரா ஆங்கிள் மாற்றப்பட்டு காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும் தான் கூறியபடியே நேரமானபோதும் காத்திருந்து நடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றார். படத்தில் அந்தக் காட்சி சிறப்பாக வந்தது. பாராட்டும் கிடைத்தது.

அதன் பிறகுதான், எம்.ஜி.ஆரின் நுண்ணறி வையும் நல்லெண்ணத்தையும் புரிந்துகொண் டார் இயக்குநர் ப.நீலகண்டன். பிறகென்ன? இரு வருக்கும் நட்பு பலப்பட்டது. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநர் என்று சொல்லும் வகையில், அவர் நடித்த அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற் றார் ப.நீலகண்டன்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று ‘காவல்காரன்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தார். படத்தின் இயக்குநரான நீலகண்டன் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். எம்.ஜி.ஆர். வரும்போது சமயோசிதமாக அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒலிக்க நீலகண்டன் ஏற்பாடு செய்திருந் தார். தான் வந்தபோது ஒலித்த பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். முகம் மலர அதை ரசித்தார். மறுபிறப்பு எடுத்து வந்த எம்.ஜி.ஆரை வாழ்த்தும் வகையில் இருந்த அந்த சூப்பர் ஹிட் பாடல்....

‘‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது

கேட்டேன் தந்தாய் ஆசை மனது...”

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.

இன்று ஒரு கல்லறையின் அருகில்...


DINAMALAR


சென்னை சாந்தோமில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறை அது. உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு உன்னத ஆத்மாவின் நினைவு நாள் இன்று(08/03/2016) என்றும் நீங்காத ராகங்களை மனதினுள் இசைத்துக்கொண்டு இருக்கும் அவரது கல்லறையில் முன் கலங்கிய கண்களுடன் நிற்கிறேன்அவரது கல்லறை பறவைகளின் எச்சங்கள் பட்டும், நுாலாம்படை சூழ்ந்தும், துாசு படிந்தும் மாசு நிறைந்தும் காணப்பட்டது

இப்போது கண்களுடன் சேர்ந்து மனமும் கலங்கியது

அந்தக் கல்லறைக்கு சொந்தக்காரர் நடிகர் சந்திரபாபு 'நகைச்சுவை மன்னன்' என அழைக்கப்பட்ட சந்திரபாபு தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர்.





'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை' போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்பவர்.

“ஜோசப் பனிமயதாஸ் ” என்னும் இயற்பெயர்கொண்ட சந்திரபாபு அவர்கள், 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் நாள் தூத்துக்குடியில் பிறந்தவர்.பின்னாளில், சந்திரபாபு எனத் தமது பெயரை மாற்றிக்கொண்டார். இவருடைய தந்தை ரோட்டரிக்ஸ் ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகி ஆவார்.

விடுதலைப் போரில் ஈடுபட்டதன் காரணமாக ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் ரோட்டரிக்சின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. இலங்கையில் சிறிதுகாலம் மட்டுமே வாழ்ந்த அவருடைய குடும்பம், மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது.

அதன் பிறகு, சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். பல இன்னல்களுக்குப் 1947 ஆம் ஆண்டு 'தன அமாராவதி' என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாகக் கால்பதித்தார். அதன் பிறகு தனது திறமையால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்.

1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

'சபாஷ் மீனா' திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும். மேலும் 'புதையல்', 'சகோதரி', 'நாடோடி மன்னன்', 'குலேபகாவலி', 'நீதி', 'ராஜா', 'பாதகாணிக்கை', 'நாடோடி மன்னன்', 'கவலை இல்லாத மனிதன்', 'அடிமைப்பெண்' போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.

தமிழ் திரையுலக ரசிகர்களில், 'சந்திரபாபு என்னும் கலைஞனை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை' என்னும் அளவிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார். 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும் போது அழுகிறான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்தில', 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னை தெரியலையா இன்னும் புரியலையா' போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதுவரை, தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனியிடம் உண்டு எனலாம். அதுவும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

'கவலை இல்லாத மனிதன்' மற்றும் 'குமாரராஜா' போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், 1966 ஆம் ஆண்டு 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்னும் திரைப்படத்தினை இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர்.

சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

அவர்வெளி உலகுக்கு கலகலப்பாக இருக்க முயன்றார். ஆனால் தனிமை அவரை மெல்ல, மெல்லத் தின்றது -கொன்றது என்பதுதான் உண்மை.

சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

கல்லறையைவிட்டு வௌியேவரும் போது பக்கத்தில் இருந்த டீகடையின் ரேடியோவில் இருந்து சந்திரபாபுவின் குரல் காற்றில் கலந்து வருகிறது...

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

இந்தப்பாடல் அவர் அவருக்காக பாடியதா அல்லது நமக்காக பாடியதா தெரியாது? ஆனால் யாருமே எட்டிப்பார்க்காத அந்த உன்னத கலைஞனின் கல்லறையை தாலாட்டிக்கொண்டு இருந்தது மட்டும் நிஜம்...

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

துபாயில் வரலாறு காணாத கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு

துபாயில் வரலாறு காணாத கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு

First Published : 10 March 2016 10:21 AM IST
துபாயில் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
மழையே காணாத வரண்ட பூமியான துபாயில் நேற்று ஒரே நாளில் மட்டும் 29 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால் அங்கு சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருகின்றது. நேற்று மட்டும் 250 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அபுதாபி விமான நிலையம் 3 மணி நேரம் வரை மூடப்பட்டது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளமும், தகவல்களும்..


DINAMANI


By ஜி. சசிகுமார்

First Published : 10 March 2016 01:46 AM IST


இணையம் இன்றி அணுவளவும் அசையாது என்பதுதான் இன்றைய நிலை. துவக்க காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இணையம், தற்போது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, குழந்தைகளுக்கான பொருள்கள் முதல் பெரியவர்களுக்கான மருந்து, மாத்திரைகள் வரை அனைவருக்கும் தேவையான, அனைத்து விதமான பொருள்களையும் இணையதளங்கள் மூலமாக வீட்டில் இருந்தபடியே தற்போது வாங்க முடிகிறது.
மேலும், வங்கிக் கணக்கைச் செயல்படுத்துதல், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளையும் இணையம் மூலமாகவே செய்து முடிக்க முடிகிறது.
இன்னும் இதுபோல எண்ணற்ற சேவைகளையும் எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளும் இடையறாது நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு இணையத்தின் பயன்பாடு ஒருபுறம் இருக்க, தற்போது மிகப் பெரிய தகவல் சேகரிப்பு மையமாகவும் திகழ்கிறது இணையம். இதில் கிடைக்காத தகவல்களே இல்லை எனும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தகவல்கள் சரியாவைதானா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, தமிழ்ச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ள ஒரு தளத்தில் அசோகமித்திரனின் "புலிக்கலைஞன்' எனும் சிறுகதையும் இடம் பெற்றுள்ளது. அதில், வாய்ப்புக் கேட்டு சினிமா அலுவலகத்துக்குச் செல்லும் அந்தக் கதையின் நாயகன் அங்கிருப்பவர்கள் முன்பாக புலி வேஷமிட்டு ஆடிக் காட்டும் பகுதி இடம் பெறவேயில்லை. அதுதான் அந்தக் கதையின் முக்கியப் பகுதியாகும்.
ஆனால், அது இல்லாததால் அந்தக் கதை அதன் தன்மையையே இழந்து, வாசகருக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அந்தக் கதையை புத்தகத்தில் வாசித்தவர்களுக்கு அதன் உண்மையான வடிவம் தெரியும். ஆனால், இணையதளத்தின் மூலமாக, முதன்முதலாக அந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு அதில் உள்ள கதையின் உண்மை வடிவமே அதுதான் என்ற எண்ணத்தையே உருவாக்கும்.
இதேபோல, தமிழில் உள்ள தகவல் களஞ்சியம் தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பெரியாரைப் பற்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுகுறித்து அந்த அமைப்பினர் கண்டனம் தெரிவித்த உடன், சரியான தகவலையும் தெரிவித்ததையடுத்து அது சரி செய்யப்பட்டது.
சமீபத்தில் கூட, அதே தகவல் தளத்தில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைப் பற்றியும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுகுறித்தும் சுட்டிக் காட்டிய பின்னர் அவை நீக்கப்பட்டன.
இதேபோல, மக்களவை பா.ஜ.க. பெண் உறுப்பினர் அஞ்சு பாலா இறந்துவிட்டதாகவும், மேலும் அவரைப் பற்றித் தவறான தகவல்களும் அந்தத் தகவல் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் மக்களவையிலும் புகார் எழுப்பியுள்ளார் என்பது தற்போதைய செய்தி.
இதெல்லாம் நமக்குத் தெரியவரும் மிகச் சில உதாரணங்களே. இவற்றில் சில தகவல்கள் தமிழில் வெளியானதாலும், அந்தத் தகவல்களைப் பற்றி நாம் ஏற்கெனவே தெரிந்திருந்ததாலும், அவை தவறாக வெளியிடப்பட்டபோது சுட்டிக்காட்டப்பட்டன.
ஆனால், இதேபோல ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை முதன்முதலாகப் படிக்கும்போது அதன் உண்மைத் தன்மையை நாம் எப்படிக் கண்டுகொள்வது?
இணையத்தில் உள்ள தேடுபொறியின் உதவியுடன் நாம் தேடும் தகவல்கள் சில இணையதளங்கள், வலைப்பூக்கள், மின் இதழ்(நூல்)கள், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றில் இருந்தே நமது பார்வைக்குக் கிடைக்கின்றன.
இதில், முகநூல் மூலமாக வெளியிடப்படும் தகவல் பகிர்வு குறித்து இங்கு குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில், முகநூலில் குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வெளியிடப்படுவது தவறான தகவல்களே.
இதற்கு சமீபத்திய உதாரணமாக சென்னை வெள்ள நிவாரணச் சம்பவத்தைக் கூறலாம். வெள்ளத்தின்போது முகநூல் நண்பர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய அளவிலான உதவிகளைச் செய்தனர். அவ்வாறு தொடர்பு கொள்ளுமாறு முகநூலில் வெளியிடப்பட்ட செல்லிடப்பேசி எண்கள் பெரும்பாலும் தவறானவையாகவே இருந்தன.
குறிப்பாக, வெளியூரைச் சேர்ந்தவர்களின் எண்களே அதில் அதிக அளவில் வெளியிடப்பட்டிருந்தன. இதை, முகநூலிலேயே பலர் சுட்டிக்காட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இணையத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் போலி இணையதளங்கள். இதற்கு உதாரணம்,
பிரபல தனியார் தொலைக்காட்சியின் இணையப் பக்கத்தை தேடினால் அதே முகவரியில், அதே பெயரில், வேறுவிதமான பக்க வடிவமைப்புடன் ஆனால், முற்றிலும் வேறு தகவல்களைக் கொண்ட இணையதளம் காட்சிக்குக் கிடைக்கும். இவையெல்லாம் நம் பார்வைக்கு கிடைக்கப் பெற்ற மிகச் சில உதாரணங்களே ஆகும்.
இந்நிலையில், தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் செய்முறைப் பயிற்சிக்காக மாணவ, மாணவிகளைப் பல்வேறு தகவல்களைச் சேகரித்து வரச் சொல்கின்றனர். இதற்காக அவர்கள் நாடுவதும் இணையதளங்களைத்தான்.
இதுமட்டுமன்றி, எம்.ஃபில்., பி.ஹெச்டி. உள்ளிட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்வோரும் முன்பெல்லாம் நூலகம் சென்று தகவல்கள் திரட்டி வந்தனர். ஆனால், அந்த நிலை மாறி, தற்போது அவர்களின் முதல் தகவல் சேகரிப்பு மையமாக இணையதளங்களே உள்ளன.
இதுபோல, பல்வேறு தகவல்கள் வேண்டுவோரும் அதற்காக இணையத்தையே நாடுகின்றனர்.
இணையம் ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்பதிலும், இன்றைய நிலையில் அனைத்துத் துறைகளிலும் அதன் பயன்பாடு அளப்பரியது என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.
ஆனால், அதில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் சரியானவையா என்பதே தற்போது நம்முன் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.

Wednesday, March 9, 2016

கல்விக் கடனை கட்டவில்லை எனக்கூறி மாணவியின் குடும்பப் படத்துடன் பேனர்: வங்கிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

THE HINDU TAMIL 9.3.2016

கல்விக் கடனை வசூலிக்க பொது இடத்தில் மாணவியின் போட்டோவுடன் ஃபிளெக்ஸ் வைத்து அவமானப்படுத்தியதற்காக ஏன் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கூடாது என கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மகளின் பொறியியல் படிப்புக்காக மஞ்சூரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் 2009-ல் ரூ.2 லட்சம் கல்விக் கடன் பெற்றிருக்கிறார். திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலம் 2014 ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ஜூலை 2014-ல் ஒரு லட்சம் ரூபாயை மொத்தமாக செலுத்தி இருக்கிறார் கிருஷ்ணன்.

ஆனால், 2015 ஜனவரியில் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தச் சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கிறது வங்கி நிர்வாகம். திரும்பத் திரும்ப வங்கியில் இருந்து வந்த நெருக்கடிகளை தாங்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் 01.02.15-ல் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவர்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கிருஷ்ணன் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவரது மகள் ஆகியோரின் புகைப்படங்களோடு பொது இடத்திலும் கிளைக்கு அருகிலும் ஃபிளெக்ஸ் போர்டுகளை வைத்தது வங்கி நிர்வாகம்.

இதைப் பார்த்துவிட்டு, கிருஷ்ணனின் மகளுக்கு ஆதரவாக திரண்ட பொதுமக்கள் வங்கிக் கிளையை முற்றுகையிட்டு பிரச்சினையைக் கிளப்பவும் போலீஸ் தலையிட்டு ஃபிளெக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்தியது. இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம் 06.07.15-ல் கடிதம் எழுதியது.

இதையே வழக்காக எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், நீலகிரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர், கிளை மேலாளர் ஆகியோருக்கு 06.08.15-ல் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கிருஷ்ணனின் மகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்ட வங்கி கிளை நிர்வாகம், ‘டேட்டா என்ட்ரியில் நடந்த தவறால் அவரது பெயர் வராக்கடன் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த தவறு சரிசெய்யப்பட்டு, நீத்துவின் விருப்பப்படி தவணைக் காலமும் திருத்தி அமைக்கப்பட்டுவிட்டது’ என்று மனித உரிமைகள் ஆணையத்துக்கு பதில் கொடுத்தது.

இதை ஏற்க மறுத்த ஆணையம், ‘கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டாலும் மாணவரின் போட்டோவை பிரசுரிக்கக் கூடாது என்ற மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவை பின்பற்றவில்லை. இதன் மூலம், அரசியலமைப்பின் பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ள, நாட்டில் கவுரவமாக வாழும் உரிமையை பறித்து மாணவியை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்காக நீத்துவுக்கு வங்கி நிர்வாகம் ரூ.ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஏன் உத்தரவிடக் கூடாது?’ என விளக்கம் கேட்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவருக்கு கடந்த 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க நடவடிக்கை எடுத்த வங்கிக் கிளையின் முன்னாள் துணை மேலாளர் ஸ்ரீதரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “முன்பு இருந்த மேலாளர், தவணை விடுப்புக்கான காலத்தை குறைத்து கணக்கிட்டுவிட்டதால் நடந்த தவறு இது. இதை எடுத்துச் சொல்லி கிருஷ்ணனின் மகளிடம் மன்னிப்பு கோரி புகாரை திரும்பப் பெற வைத்தோம். ஆனாலும், மனித உரிமை ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது என்றால் வங்கி நிர்வாகம் தான் இனி முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...